அண்மையில் எழுபதுகளில் , யாழ்ப்பாணத்தில் எழுத்தாளர் சி.மகேஸ்வரன் (இந்து மகேஷ்) ஆசிரியராகவிருந்து வெளியிட்ட 'இதயம்' சஞ்சிகை பற்றியொரு குறிப்பினைப்பதிவு செய்திருந்தேன். அது பற்றி இந்து மகேசுக்கும் அறியத்தந்திருந்தேன். அதற்கு அவர் பின்வருமாறு பதிலளித்திருந்தார். அத்துடன் தான் முகநூலில் 'இதயம்' பற்றி எழுதிய பதிவு பற்றியும் அறியத்தந்திருந்தார். அவற்றை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன். அத்துடன் அவர் ஜேர்மனியிலிருந்து 1998 -2008 காலகட்டத்தில் 'பூவரசு' என்னும் பெயரில் சஞ்சிகையொன்றினை வெளியிட்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது.
மூன்று இதயம் இதழ்கள் நூலகம் தளத்திலுள்ளன: http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
அவர் அனுப்பிய மின்னஞ்சல் கீழே:
"அன்பிற்கினிய கிரிதரன்! வணக்கம். அவ்வப்போது உங்கள் முகநூல்பக்கமும் வந்துபோகிறேன். இதயம் வெளியான காலகட்டம் (1971) நம்நாடு போர்ச்சூழலுக்குள் சிக்கியிருந்ததால் புத்தக வெளியீட்டிலும் அதன் விநியோகத்திலும் நிறைய சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஒரு வருடத்துக்குமேல் தாக்குப்பிடிக்க முடியாமல் இதயம் துடிப்படங்கிப் போயிற்று. ஆனாலும் வெளியான ஒரு சில இதழ்களிலேனும் பயனுள்ள சிலவற்றைப் பகிர்ந்திருக்கிறோம் என்ற நிறைவை உங்களது முகநூல்பதிவு தந்திருக்கிறது. திரு.மணியம் அவர்களையும் இரசிகமணி கனக் செந்திநாதன் அவர்களையும் இதயம் இதழுக்காகவும், ஆழிக்குமரன் ஆனந்தன் அவர்களை வரதர் அவர்களின் வெள்ளி இதழுக்காகவும் நேரடியாகச்சென்று பேட்டி எடுத்திருக்கிறேன். அதன் தொடர்ச்சியாகவே பூவரசு இதழிலும் நமது கலைஞர்கள் என்னும் பகுதியில் புலம்பெயர் கலைஞர்கள் பலரது பேட்டிகளும் பிரசுரமாகியிருக்கின்றன. அன்புடன் இந்துமகேஷ்"
இந்து மகேஷ் இதயம் பற்றி எழுதிய முகநூற் பதிவு கீழே:
என் எழுத்துப் பயணத்தில்..... இதயம் என்றொரு ஏடெடுத்தேன்…. - இந்துமகேஷ்
அது ஆண்டு 1971. இருபத்திரண்டே வயதான இந்த இளைஞனுக்கு இலக்கிய இதழ் ஒன்றினை வெளியிடும் எண்ணம் உதித்தது.
மாணவப் பருவத்தில் இவன் எழுதிய சில கவிதைகளும் கதைகளும் நாடகங்களும் இலங்கைவானொலியில் ஒலிபரப்பானதும் இவனது எழுத்தைப் பாராட்டி வாசகர்கள் வாசகிகள் சிலர் கடிதங்கள் வரைந்ததும் இவனது சிற்றிதழ் தாகத்துக்கு உற்சாகபானம் வழங்கி ஊக்குவித்திருந்தன. இதயம் என்னும்மகுடம் சூட்டிக்கொண்டு மாத சஞ்சிகையாக மலர்ந்த அந்தக் கலை இலக்கிய இதழின் முதல் இதழ் கொழும்பிலிருந்து தனது பயணத்தை ஆரம்பித்தது. கொழும்பிலிருந்து தயாரிக்கப்பட்ட போதும் அதன் முதல் இதழ் இவனது தாய்மடியான புங்குடுதீவிலிருந்து வெளியாகவேண்டும் என்று இவன் விரும்பினான். கொழும்பிலும் ஊரிலும் இருந்த இவனது நண்பர்களோடு கலந்தாலோசித்து ஊரில் பெரிய அளவில் வெளியீட்டு விழாவுக்கான ஏற்பாடுகளைச் செய்துகொண்டான்.
1971 சித்திரைத் திங்களில் இதயம் முதலாவது இதழ் வெளியிடுவதாக முடிவாயிற்று. கொழும்பிலிருந்த சில நண்பர்களுடன் விழாநிகழ்ச்சிகளையும் ஒழுங்குசெய்துகொண்டு முதல்வாரத்தில் இதயம் இதழ்களுடன் அவன் ஊருக்குப் பயணமானான்.
நண்பர்கள் அடுத்த வாரம் ஊர்வருவதாக முடிவாயிற்று. 1971 சித்திரைத் திங்கள் இரண்டாவது வாரத்தில் வெளியீட்டுவிழா நிகழவிருந்தபோது இவன் ஊர் வந்து சேர்ந்த முதல்வாரத்தின் இறுதிநாட்களில் சிங்கள அரசுக்கெதிரான சிங்கள இளைஞர்களின் ஆயுதப்புரட்சி வெடித்தது. நாடு அமைதியிழந்த சூழலில் இதயம் வெளியீட்டு விழாவும் எண்ணம்போல நிகழாது போயிற்று.
எனினும் இதயம் அமைதியாகத் தனது கலை இலக்கியப் பயணத்தைத் தொடங்கிற்று.
நாடு அமைதிநிலைக்குத் திரும்பும்வரை யாழ்ப்பாணத்திலிருந்துகொண்டு இதயத்தை வெளியிடும் எண்ணத்தோடு, இதயம் ஆசிரியர் என்று தன்னை அறிமுகம் செய்துகொண்டு புங்கையூர் சி.மகேஸ்வரன் என்ற இந்த இளைஞன் யாழ்ப்பாணம் ஆனந்தா அச்சகத்தில் கால் பதித்தான். ஈழத்து இலக்கிய உலகின் முன்னோடிகளில் ஒருவர் என்று இன்று புகழப்படும் தி.ச.வரதராஜன் என்ற இயற்பெயர் கொண்ட வரதர் அவர்களைச் சந்திக்கும் பொன்னான வாய்ப்பு இவனுக்கு அங்கே கிடைத்தது. அவருடைய தலைமுறை எழுத்தாளர்கள் பலரது அறிமுகமும் அவர் மூலமாக அவனுக்குக் கிடைத்தது. இதயம் தனது இலக்கியப் பயணத்தை உற்சாகமாகத் தொடரலாயிற்று.

அகஸ்தியர், மு.த. எஸ்.பொ. மு:நேமிநாதன் மு.பொ. என். கே.மகாலிங்கம் சு.வில்வரத்தினம், தம்பியையா தேவதாஸ், கோப்பாய் சிவம், நெல்லை க.பேரன். திக்குவல்ல கமால், மு.புஷ்பராஜன், ஐ.சாந்தன், டேவிட் ராஜேந்திரன், காசி ஆனந்தன், இராஜம் புஷ்பவனம், சௌதாமினி, நந்தினி சேவியர், இரசிகமணி கனக செந்திநாதன், செ.சிவநாதன், நாகேசு தர்மலிங்கம், பாலமுனை பாருக், எம்.எஸ்.எம்.ஜின்னா, இவர்களோடு இன்னும் பலர் என்று மிக நீண்ட எழுத்தாளர் பட்டியல் இதயத்திடம் உண்டு. அவர்களது எழுத்துக்களால் இதயம் ஒரு தரமான சஞ்சிகையாக மிளிர்ந்தது. இதயம் இரண்டாவது இதழிலிருந்து தொடர்ந்து ஆனந்தா அச்சகத்தில் பதிப்பிக்கப்பட்டது.
அந்தக் காலகட்டம் ஈழத்துச் சிற்றிதழ்களின் வசந்தகாலம் என்று எண்ணத்தக்க வகையில் ஏராளமான சிற்றிதழ்கள் வெளியாகத் தொடங்கியிருந்தன. ஓராண்டாகத் தொடர்ந்த இதயம் இதழின் வருகை 1972 சித்திரைத்திங்களில் புங்குடுதீவில் நடைபெற்ற அதன் ஓராண்டு நிறைவுவிழாவுடன் நிறைவுகண்டது. ஆனாலும் அதில் எழுதிய புதுமுக எழுத்தாளர்கள் பலர் பின்நாட்களில் புகழ் பெற்ற எழுத்தாளர்களாக உலாவந்தனர்.
புங்கையூர் மகேஸ்வரன், ரஜனிமணாளன், இளந்தீவகன் என்று பல பெயர்களுக்குள் எழுதிக்கொண்டிருந்த நானும் வீரகேசரி பிரசுரமாக வந்த எனது நவீனத்துக்காக இந்துமகேஷ் என்று பெயர்மாறினேன். மகேஸ்வரன் என்ற பெயர் மறைந்து இந்துமகேஷ் என்ற பெயரே எழுத்துலகில் நிலையாயிற்று. நியூவேவ் என்கின்ற புதியஅலையொன்று எழுத்துலகில் வீசத்தொடங்கிய பொழுதுகளில் என்னையும் நியூவேவ் எழுத்தாளன் என்று வீரகேசரி அறிமுகப் படுத்தியதாலோ என்னவோ நமது இலக்கிய எழுத்தாளர்கள் சிலர் என்னை ஜனரஞ்சக எழுத்தாளர் பட்டியலுக்குள் தள்ளிவிட்டார்கள். எனினும் வாசகர்கள் என் எழுத்தின்மீது கொண்டிருந்த அபிமானம் எனக்கு வியப்பளித்தது.
புலம்பெயர்ந்த பின்னால் நான் சந்தித்த எனது வாசகர்கள் பலரும் நல்ல படைப்பாளர்களாகவும் இலக்கியரசனை உள்ளவர்களாகவும் இருந்ததில் மனம் பூரித்தேன். அவர்களது படைப்பாற்றலுக்கு களம் அமைத்துக் கொடுக்கவேண்டும்
என்ற எனது பேரவாவின் வெளிப்பாடே பூவரசாக மலர்ந்தது.
"இதயமெல்லாம் அன்பு நதியினில் நனைப்போம்
இது எனதென்னுமோர் கொடுமையைத் தவிர்ப்போம்." -இது இதயத்தின் வாசகம்
"உலகமே நம் இல்லம் உள்ளமெல்லாம் நம் சொந்தம்" -இது பூவரசின் வாசகம்.
1971 -1972 இதயம்
1991- 2008 பூவரசு
முகநூல் எதிரொலிகள் சில:
Nagalingam Srisabesan உண்மைதான், இந்து மகேஸ் நியூவேவ் எழுத்தாளராகவே அறியப்பட்டார்.
Giritharan Navaratnam உண்மையில் இதயம், பூவரசு ஆகிய சிற்றிதழ்களின் பங்களிப்பு முக்கியமானது. சி.மகேஸ்வரன் அவர்தான் என்பதை அண்மையில்தான் அறிந்தேன்.
Nagalingam Srisabesan எனக்கும் இது புதுச் செய்தி
Giritharan Navaratnam 'புது அலை' எழுத்தாளரைப்பற்றிய புதுச்செய்தி , அவர் புதிய அலையெழுத்தாளரல்லர், பழையவர்தான், இலக்கியதின்பால் தணியாத தாகம் கொண்டவர்தான் என்பதை அறியத்தந்தது. உண்மையில் இதயம் (71-72), பூவரசு (1991 -2008) நடத்தியுள்ளார். அது சாதாரண விடயமல்ல. விடாமுயற்சியும், இலக்கியத்தின்பால் ஆர்வமும் மிக்க ஒருவரால்தான் சாத்தியம்.
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
'
பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.

பதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
பதிவுகளில் கூகுள் விளம்பரங்கள்
பதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.
வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக..

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.
மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW
கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition

நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8
நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition

'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T881SNF
நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition
நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z
நாவல்: அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' கிண்டில் மின்னூற் பதிப்பு விற்பனைக்கு!

ஏற்கனவே அமெரிக்க தடுப்புமுகாம் வாழ்வை மையமாக வைத்து 'அமெரிக்கா' என்னுமொரு சிறுநாவல் எழுதியுள்ளேன். ஒரு காலத்தில் கனடாவிலிருந்து வெளிவந்து நின்றுபோன 'தாயகம்' சஞ்சிகையில் 90களில் தொடராக வெளிவந்த நாவலது. பின்னர் மேலும் சில சிறுகதைகளை உள்ளடக்கித் தமிழகத்திலிருந்து 'அமெரிக்கா' என்னும் பெயரில் ஸ்நேகா பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்தது. உண்மையில் அந்நாவல் அமெரிக்கத் தடுப்பு முகாமொன்றின் வாழ்க்கையினை விபரித்தால் இந்தக் குடிவரவாளன் அந்நாவலின் தொடர்ச்சியாக தடுப்பு முகாமிற்கு வெளியில் நியூயார்க் மாநகரில் புலம்பெயர்ந்த தமிழனொருவனின் இருத்தலிற்கான போராட்ட நிகழ்வுகளை விபரிக்கும். இந்த நாவல் ஏற்கனவே பதிவுகள் மற்றும் திண்ணை இணைய இதழ்களில் தொடராக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
https://www.amazon.ca/dp/B08TGKY855/ref=sr_1_7?dchild=1&keywords=%E0%AE%B5.%E0%AE%A8.%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D&qid=1611118564&s=digital-text&sr=1-7&fbclid=IwAR0f0C7fWHhSzSmzOSq0cVZQz7XJroAWlVF9-rE72W7QPWVkecoji2_GnNA
நாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன் - கிண்டில் மின்னூற் பதிப்பு

என் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2
வ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு!

https://www.amazon.ca/dp/B08TBD7QH3
எனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு:
1. 'பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு!'
2. தமிழினி: இலக்கிய வானிலொரு மின்னல்!
3. தமிழினியின் சுய விமர்சனம் கூர்வாளா? அல்லது மொட்டை வாளா?
4. அறிஞர் அ.ந.கந்தசாமியின் பன்முக ஆளுமை!
5. அறிவுத் தாகமெடுத்தலையும் வெங்கட் சாமிநாதனும் அவரது கலை மற்றும் தத்துவவியற் பார்வைகளும்!
6. அ.ந.க.வின் 'மனக்கண்'
7. சிங்கை நகர் பற்றியதொரு நோக்கு
8. கலாநிதி நா.சுப்பிரமணியன் எழுதிய 'ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் பற்றி....
9. விஷ்ணுபுரம் சில குறிப்புகள்!
10. ஈழத்துத் தமிழ்க் கவிதை வரலாற்றில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் (கவீந்திரன்) பங்களிப்பு!
11. பாரதி ஒரு மார்க்ஸியவாதியா?
12. ஜெயமோகனின் ' கன்னியாகுமரி'
13. திருமாவளவன் கவிதைகளை முன்வைத்த நனவிடை தோய்தலிது!
14. எல்லாளனின் 'ஒரு தமிழீழப்போராளியின் நினைவுக்குறிப்புகள்' தொகுப்பு முக்கியமானதோர் ஆவணப்பதிவு!
நாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு!

1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T
வ.ந.கிரிதரனின் கவிதைத்தொகுப்பு 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' - கிண்டில் மின்னூற் பதிப்பு

https://www.amazon.ca/dp/B08TCF63XW
தற்போது அமேசன் - கிண்டில் தளத்தில் , கிண்டில் பதிப்பு மின்னூல்களாக வ.ந.கிரிதரனின 'டிவரவாளன்', 'அமெரிக்கா' ஆகிய நாவல்களும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' ஆய்வு நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'Nallur Rajadhani City Layout' என்னும் ஆய்வு நூலும் விற்பனைக்குள்ளன என்பதை அறியத்தருகின்றோம்.

Nallur Rajadhani City layout: https://www.amazon.ca/dp/B08T1L1VL7

America : https://www.amazon.ca/dp/B08T6186TJ

An Immigrant: https://www.amazon.ca/dp/B08T6QJ2DK
நாவலை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவர் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன். 'அமெரிக்கா' இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் அனுபவத்தை விபரிப்பது. ஏற்கனவே தமிழில் ஸ்நேகா/ மங்கை பதிப்பக வெளியீடாகவும் (1996), திருத்திய பதிப்பு இலங்கையில் மகுடம் பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. தொண்ணூறுகளில் கனடாவில் வெளியான 'தாயகம்' பத்திரிகையில் தொடராக வெளியான நாவல். இதுபோல் குடிவரவாளன் நாவலை AnImmigrant என்னும் தலைப்பிலும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' என்னும் ஆய்வு நூலை 'Nallur Rajadhani City Layoutட் என்னும் தலைப்பிலும் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவரும் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணனே.


© காப்புரிமை 2000-2020 'பதிவுகள்.காம்' - 'Pathivukal.COM - InfoWhiz Systems