- ஞானகவி தேசபாரதி தீவகம் வே.இராசலிங்கம் -

1-செப்பும்; பூமி சிறந்ததுவே

(அறுசீர் விருத்தம்-4 விளம் சக 2 தேமா சக ஒருகாய்)

நீதியின் பாலொரு நித்தியத் துள்வரும்
நேர்மைத் தேர்தல் ஈதுஎன்றார்
ஆதியில் இருந்துமே ஆகிடும்; கலவரம்
அற்றம் ஆக்கும் சரித்திரமே
சாதியாய் வெந்;திடும் சருகென வானதோர்
சாக்கும் போக்கும் சாற்றிவிடப்
பாதியாய் ஆனது பதைக்கவெ ரிந்தது
பற்றும் வாழ்க்கை போனதுவே!

எத்தனை கலவரம் எத்தனை புகலிடம்
இன்னும் இன்னும் இருப்பழிந்தார்
கொத்தெனச் சிதறிய குருதியிற் செத்தவோர்
கூட்டம் என்கக் கொடுமைகண்டார்
புத்தனின் போதனை பொங்கிடும் நாட்டிலே
போயும் போயும் தீயிடவோ
கத்தவும் குளறவும் கண்டிடும் ஆட்சியாய்
காணும் கொற்றம் மாற்றிடுவீர்!

நாளைய நீர்நிலம் நாடெலாம் பூமியில்
நத்தும் பேயும் நலிந்தாடும்
வாளையும் சூளையும் வஞ்;சனை யோடுரு
வந்தால் எல்லாம் போகுமடா
பாளையும் தாழையும் பங்கிடும் தோரணம்
பட்டும் தொட்டும் அழைந்தாடத்
தாளிடும் ஆட்சியில் தூளியாய் நின்றிடில்
தாங்கும் போற்றும் தரணியம்மா !

சந்ததம் மருவிய சான்றொடுங் கீழடிச்
சங்கம் எங்கும் சார்ந்தகுடில்
வந்தனை செய்கவும் வான்தமிழ் வையகம்
வாரும் வேரும் வளர்ந்தபடி
முந்தையர் தந்தையும் மேவிய சொந்தமும்
முத்துக் கோர்த்து முகிழ்த்தபரல்
சிந்துயர் சந்தமும் சேரிசை வாணரும்
செப்பும் பூமி சிறந்ததுவே !


- ஞானகவி தேசபாரதி தீவகம் வே.இராசலிங்கம் -

2-உன்றனைக் கண்டேன் தமிழே

(வெண்டளை அறுசீர்-ஒருவரியில்; பதினாறு எழுத்து)

தண்ணார் தமிழே மண்ணின்
தங்க மகளே அழைத்தேன்
விண்ணுக் கிருக்கும் விழியே
வேரே இழுக்;கும் துளியே
கண்ணுக் கிருக்கும் மணியும்
கடவுள் தொகுத்த மொழியும்
எண்ணும் மகுடமென் பேனே
ஏரில் வருவாய் எழிலே !

கம்பன் கொடுத்;த கவியே
காவில் விரிந்த கலையே
இம்மண் துறவி இளங்கோ
எட்டய பாரதி இன்னும்;
கும்பிடும் வள்ளலார் கோவில்
குமரர் கழற்குத் தேனே
அம்புவி யாகினை அம்ம
அழகே மாநதி யாளே!

போரிற் பனித்துளி யாகிப்
பெயர்ந்தேன் நிலத்துட் பேதை
காரிற் கறுத்த மழையாய்க்
கற்று மடிசுமந் தேனே
நாரி யழகே நயனம்
நர்த்தம் பரதமும் நாடிப்
பாரில் வலம்வரு கின்றேன்
பளிங்;குச் சிலையே பகர்வாய்!

ஆயிர மாயிரம் பாட்டில்
அம்மநின்; பேரிகை ஆகிப்
பாயிரம் வேட்கைப் பயிரில்
பற்றிடச் செய்தேன் படையல்
நோயினும் மாறி நொடிந்தும்
நின்தமிழ்; கூறி நிமிர்ந்தேன்
தாயுனைத் தாங்கிய நாட்கள்
தந்தனை செந்தமிழ் மாதே!

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R