Farewell you legend! Rest in Peace. You'll live on forever in our collective memories

ஏழு சுரங்களும் ஏக்கமுடன் தவிக்கிறது
பாலுவே நீயும் பாட  வருவாயா
தாளலயம் அத்தனையும் தவிக்கிறதே பாலு
நீயெழுந்து வாராயோ நெஞ்சலாம் அழுகிறதே  !

மூச்சுவிடா பாடியே சாதனையைக் காட்டினாய்
மூச்சுவிட்டு அஞ்சலியைப் பாடவைத்தாய் பாலுவே
காற்றுக்கூட  கலங்கியே அழுகிறதே பாலுவே
கட்டழகுச் சிரிப்புமுகம் காண்பதுதான் எப்போது    !

சுந்தரத் தெலுங்கு சொக்க வைக்கும் தமிழென்று
இந்திய மாநிலத்தில் இருக்கின்ற மொழியெல்லாம்
வந்தமைந்த உன்னிசையால் வாரியே வழங்கினையே
பாலுவே உன்னிசையை  நிறுத்திவிட்ட  தேனையா    !

பாலுநீ பாடவேண்டும் பலபேரும் கேட்கவேண்டும்
வாழவைக்கும் இசைவழங்க வரவேண்டும் எனநினைத்தோம்
ஆழநிறை காதலுடன் பார்த்திருந்தோம் பாலுவே
அழவிட்டு போனதேனோ அலமந்து நிற்கின்றோம்  !

உன்னிசையைக் கேட்பதற்கு உலகமே காத்திருக்க
உன்பிரிவைக் கேட்டவுடன் உணர்விழந்தே நிற்கின்றோம்
மண்ணகத்தில் இசைகொடுக்க வந்துநின்றாய் வரமாக
எண்ணமெலாம் உன்நினைப்பே நிறைந்திருக்கே பாலுவையா  !

பாடும் நிலவாகப் பவனிவந்தாய் பாலுவே
பாடல்தர விரைவாக வந்திடுவாய் எனநினைத்தோம்
ஆடிவரும் தென்றலிலும் ஐயாவுன் குரலிருக்கும்
ஆடலின்றி பாடலின்றி ஐயாநீ போனதேனோ  !

கற்பனையும் அழுகிறது கவிதைகளும் அழுகிறது
காந்தக் குரலோனோ காலனுனைக் கவர்ந்தானே
கலையுலகம் அழுகிறது கலைஞரெலாம் கதறுகிறார்
கண்ணீரை உந்தனுக்கு காணிக்கை ஆக்குகிறோம்  !

அரங்கமெலாம் வெறுமையாய் ஆகிருக்கு பாலுவே
அரங்கதிரும் உந்தனிசை அடங்கியதே பாலுவே
அழவைக்கப் பாடினாய் ஆடிவைக்கப் பாடினாய்
அனைவருமே ஆடிநிற்க அழவிட்டு போனதேனோ  !

- மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா (

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R