-ஞானக்கவி தேசபாரதி தீவகம் வே.இராசலிங்கம் -

நன்றி ஒருவர்க்கு நாமியற்றிப் போகுங்கால்
அன்பில் இறுகும் அதுவுமொரு பண்பாமே !

சென்ற நிலையைச் சிதறவைத்தல் போலாகி
ஒன்றை இழத்தல் உறவில்லைக் காணீரோ !

என்றும் இனிமை இதயமொடு நேசித்தல்
மன்றில் இதுவே மகத்துவமே தானாகும் !

தன்னை நிகர்த்த தரத்தினொடு ஒப்பிட்;டுக்
கன்னைக் கெனவே கணக்கிடுதல் வேண்டாமே !

இதயம் பரந்ததுகாண் ஏற்றம் மறந்துநெறிக்
கதையை வகையின்றிக் காணல் அறமில்லை !

அற்றம் வகுத்து அறநெறியை நீக்காதே
சுற்றம் தனையில்லாச் சீவியம் பொல்லாதே !

தமிழால் உயர்ந்தோனே தாரணியில் மிக்கோனே
கமழ்தல் அவர்க்குண்டு காட்டும் சிறப்புண்டு !

செய்யாத போதும் சிறப்பாம் திறம்பேசல்
மெய்ம்மை யதுவே விளங்கும் பொறையாகும் !

ஆபத்தில் சென்று அருகிப் பணியாற்றல்
தீபம் தனையேற்றும் தேவன் செயலாகும் !

பொறாமை தனைக்கொண்டு பேதம் எடுக்காதே
திறமை தனைப்பேசு தெய்வம் துணைநிற்கும் !

உலகப் பயிர்செப்பும் ஒத்தாசை வாழ்க்கையடா
கலகமிலாத் தேசம் கருத்தாளம் நன்றியம்மா!

நன்றியே செய்வாய் நலமே தனையேற்று
வென்றிட ஆகும் விதமே புவியாகும் !

மரங்களிடும் நன்றி வழங்கும் பழமாம்
உரமாக்கும் நன்றி உணவே கொடையாமே !

வென்றியும் நன்றியும் மீட்டும் சமுதாயம்
அன்றில் அழியுமே அற்பப் பெரும்வாழ்வு !

தென்றல் உலவும் சிலவும் கதிரோனின்
மன்றில் நிகழுமாம் மறுவாழ்வுக் கார்மழையே !

தெய்வத் திருக்கதவம் செப்பும் வினையாடல்
பொய்வினை போக்கிப் பெருவாழ்வு காட்டுமே !

நன்றாய்ப் படித்திடிலே நல்;கும் பணிவாழ்வு
ஒன்றே கல்வியின் ஓர்நன்றி என்பதே !

தேசப் பணியே சுவறுமொரு நன்றியே
வாசம் உடையநற் வாழ்க்கைக் கணியாகும் !

போரின்றி வாழ்தல் புரிதல் மனுக்குலத்தின்
தாரின்றி வாழ்தல் தகவம் திறக்காதே !

நன்றிப் பெருங்கடனே நாயகமே யாக்குமடா
அன்புப் பெருந்தேசம் ஆட்சிக் கணிகலனே!

 

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R