ரொறன்ரொ பல்கலைக் கழக தமிழ் இருக்கை நிதி சேகரிப்பு நிகழ்வாக இணையவழி சொற்பொழிவு

தமிழ் நாடு ஓய்வு பெற்ற கண்ணிய மிகு காவலர் திரு அ. கலியமூர்த்தி அவர்கள் உரையாற்ற உள்ளார். இவர் நாடறிந்த, உலகறிந்த மேடைப்பேச்சாளர். 100 நாட்களில் 80 மேடைப் பேச்சுக்களை நிகழ்த்தி உலக சாதனை படைத்தவர். கடமை கண்ணியம் கட்டுப்பாடு மிக்க உயர் காவல் துறை அதிகாரியாக சாதனை படைத்தவர். இவர் தனது பேச்சுத் திறமையால் உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் மனங்களில் நீங்காத இடத்தை பிடித்தவர்.

”ஒரு மொழி அழிந்தால் ஒரு இனம் அழிந்துவிடும்” என்னும் தலைப்பில் இவரது உணர்வு பூர்வமான சிறந்த தமிழ் சொற்பொழிவு நடைபெற உள்ளது, இந்த அரிய சந்தர்ப்பத்தை தவறவிடாது அனைவரும் கேட்டுப் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

காலம்: 2020. 11. 22 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை காலை (EST) 11 மணி
தொடக்கம் பிற்பகல் 12.30 மணி வரை.

இணைய வழிகள். (Live)
https://facebook.com/torontotamilchair

அன்புடன்
சிவன் இளங்கோ
416 707 9104

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை (Federation of Tamil Sangams of North America (FeTNA)


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R