*  மறைந்த இலக்கிய ஆளுமை கலைமகள் ஹிதயா ரிஸ்விக்கு இரங்கற் பா -


- கலைமகள் ஹிதாயா ரிஸ்வி -கலையும் அழுகிறது இலக்கியமும் அழுகிறது
கலைமகளைக் காணாமல் ஏடெல்லாம் அழுகிறது
புலரும் பொழுதெல்லாம் புதுக்கவிதை தருவாயே
அழவிட்டுப் போனதெங்கே அழகுக் கலைமகளே   !

முப்பது ஆண்டுகளாய் நீவளர்த்தாய் தடாகத்தை
இப்போது நீர்வற்றி ஏங்கிறதே தடாகமது
எப்போது நீவருவாய் எனவெண்ணித் தடாகமது
இருப்புதனை தொலைத்துவிட்டு எண்ணியெண்ணி அழுகிறதே  !

இசுலாமியப் பெண்ணாக இருந்தாலும் சோதரிநீ
இன்பத்தமிழ் அணைத்து இங்கிதமாய் பணிபுரிந்தாய்
வீறுகொண்ட பெண்ணாக வெற்றிபல குவித்தாயே
மாறுபடா குணமுடையாய் மனமேங்கி அழுகிறதே  !

அரபுமொழி கற்றாலும் அன்னைத்தமிழ் அருந்தினாய்
அரவணைத்து அனைவரையும் அன்பினால் ஆட்கொண்டாய்
நினைவழியா படைப்புக்களை நீயளித்தாய் தமிழுக்கு
நீஇல்லா நிலைகண்டு படைப்பனைத்தும் அழுகிறதே  !

கிழக்கிலங்கை முத்தாக ஒளிவிட்டு நின்றாயே
உளத்துணிவால் தலைநிமிர்ந்து உயர்ந்தாயே தமிழுலகில்
தனித்துநின்று பெண்ணாக சாதித்த நாயகியாய்
தமிழ்போற்றும் கலைமகளே தவிக்கவிட்டுப் போனதேனோ  !

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>

 


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R