பாடகி அனு ஆனந்த்

"தாமரை மலரில் மனதினை எடுத்து
தனியே வைத்திருந்தேன்.
ஒரு தூதுமில்லை. உன் தோற்றமில்லை.
கண்ணில் தூக்கம் பிடிக்கவில்லை.
நெஞ்சம் மறப்பதில்லை. அது தன்
நினைவை இழக்கவில்லை.
நான் காத்திருந்தேன்.
உன்னைப் பார்த்திருந்தேன்
கண்களும் மூடவில்லை. என்
கண்களும் மூடவில்லை."
- கவிஞர் கண்ணதாசன் -

'யதார்த்ததிலிருந்து தனிமைப்படுத்தல்' (Quarantine from Reality) 'யு டியூப் சான'லிலிருந்து நான் கேட்ட, இரசித்த இக்காலத்தால் அழியாத  கானத்தை நீங்களும் ஒரு முறை கேட்டுப்பாருங்களேன். பாடகி அனு ஆனந்த் சிறப்பாகப் பாடியுள்ளார். காணொளியின் இறுதியில் பி.பி.ஶ்ரீனிவாசின் குரலில் பாடகர் பத்மநாபன் பாடுவார். அதுவும் இக்காணொளியின் சிறப்பு.

பொதுவாக நான் பாடல்களைக் கேட்டு இரசிக்கையில் பாடகர்களின் குரலினிமை, கவிஞரின் மொழியினிமை, அபிமான நடிகர்களின் நடிப்பினிமை & இசையமைப்பாளரின் இசையினிமையில் என்னை மறந்து விடுவேன். அவ்விதம் மறந்து விடுகையில் பாடலில் பாவிக்கப்பட்டிருக்கும் பல்வகை வாத்தியக் கலைஞர்களின் வாத்திய இனிமையைத்  தவற விட்டுவிடுவேன். ஆனால் இந்தச் 'சான'லில் வாத்தியக்கலைஞர்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து அவர்களது முக்கியத்துவத்தையும் இசை இரசிகர்கள் உணர்ந்து இரசிக்கும் வகையில் செய்திருக்கின்றார்கள். அது இக்காணொளியின் முக்கியச் சிறப்பு. புல்லாங்குழல், தபேலா, 'கீ போர்ட்' என்று வாத்தியக் கலைஞர்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து  கேட்பவர் உள்ளங்களில் அவர்களும் பதியும் படி செய்திருக்கின்றார்கள். எம் இசையமைப்பாளர்கள் எவ்விதம் தாள வாத்தியக் கருவிகளைக் குறிப்பாகத் தபேலாவைக் கையாண்டிருக்கின்றார்கள் என்பதைத்  தெளிவாகவே  உணர வைத்தது இக்காணொளி.

சிறப்பாகக் காணொளியை ஒளிப்பதிவு செய்திருக்கின்றார்கள். 'சான'லின் தலைப்பும் கவித்துவம்  மிக்கது. யதார்த்தத்திலிருந்து தனிமைப்படுத்தல் தற்போது உலகமெங்கும் சூழலுக்கு நன்கு பொருந்துகின்றது. கூடவே இசையில் மயங்கி யதார்த்தத்திலிருந்து விலகி வேறொரு உலகில் எம்மையே தனிமைப்படுத்திக்கொள்வதற்கும் பொருந்துகின்றது.

இந்தச் 'சான'லின் தொகுப்பாளினி 'ராகமாலிகா' சுபஶ்ரீ தணிகாசலம் சிறப்பாகத் தொகுத்திருக்கின்றார். இதுதான் நான் பார்த்த இந்தச் 'சான'லின் முதலாவது காணொளி. ஏனைய காணொளிகளையும் கண்டு யதார்த்தத்திலிருந்து என்னை மீண்டும் மீண்டும் தனிமைப்படுத்த வேண்டுமென்ற ஆர்வத்தை ஊட்டுகின்றது.

https://www.youtube.com/watch?v=I3kkuAaS6GM&t=3s


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R