- பா வானதி வேதா. இலங்காதிலகம், டென்மார்க் -1. நலங்கிட்டு அழகூட்டுவேன்

கவிதை எழுதுதல் மகிழ்வு
கவினுறும் ஆய்வும் உயிர்ப்பு
கவிந்த பவளப்பாறையாம் படிமங்கள்
குவிந்த அறிவால் ஒளியாக்கமாகிறது.

கலைமொழியாம் தமிழ் வலைமொழியாகிறது
அலைபோற் பெரும் பயணமாகிறது.
விலையில்லாச் சாகர சம்பத்தாகிறது
கொலையிட எவராலும் முடியாதது

உணர்ச்சியெனும் உருவத்தை வார்த்தை
உளியால் செதுக்குதலே கவிதை
கவிதையுரு வடிக்கும் வரை
குவியும் அவத்தை ஒருவிதமானது.

தமிழாற் பொலி மனதார்
அமிழ்தாய்க் கழிபேருவகை கொள்வார்
சொற்களின் சிம்மாசனம் மகுடவாசகமாய்
இதயம் குளிர்த்தும் மழையாகும்

நாளும் எழுதும் சொற்களே
மீளும் அலங்கரிப்பில் புதுப்பெண்ணாக
ஆளுமையோடு கிறங்கும் மாயவுருவாகிறது
மூளுதலாகிப் பலரை ஈர்க்கிறது.

சொல் அதை வேற்றுருவாக்கி
பல்லாக்காக, லோலாக்காக சொர்க்கமாக
வில்லாக ஏழு வண்ணங்குளோடு
நல்லாக வளைத்தலே கவிதை
விலங்கிடாத பறவையே சொல்
நலங்கிட்டு அழகூட்டுவதென் பணி

10-1-2021


2.   மானுட வீதி

தன் மதிப்புத் தலையிலேற
தன் அங்கவியல்பு தானாயாட
தன் அங்கவுரு பரகசியமாக
தன் செயலே தடுமாறும்
தன் கட்டுப்பாடு கண்ணியமிழக்கும்.

எது மனநிறைவுக்கு ஏவுகிறதோ
அதுவால் மனநிறைவு அள்ளலாம்.
பொதுத் திருப்தியின்றித் தூக்கம்
ஒதுக்கப் படுதல் பெருந்தாக்கம்
புது முயற்சி தீர்வாகலாம்.

தோரணப் புகழ் தேடுதல்
ஆரணமாகும் (வேதம்) திருப்தியற்ற இதயத்தில்.
வாரணமான நிம்மதி வழுகிடும்
காரணமே தூக்கம் கழலுதல்
நாரணியருளட்டும் மாரணம்(மரணம்) தவிர்க்க.

பகலிரவாய்ப் பவித்திரப் படிகளில்
தகவுடன் அடியெடுத்தல் தாராளமானதே
முகம் மலரச் சுகசேமம் கேளாராகி
அகம் மூடி வாழ்த்தொலிகள் தூவாராகி
தகவிழக்கும் மானுட வீதி

10-1-2021
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

 


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R