கட்டுரைச் சுட்டு

எதிர்வினை 2: ஸைபர் வெளியும் மனித உடல்களும்! யமுனா ராஜேந்திரன்

யமுனா ராஜேந்திரன்ஜெயமோகன் இடங்களுக்குத் தக்கமாதிரி மாற்றிப் பேசகிறவர் என்பது பிரசித்தம். எனது கட்டுரைகளை ஆழமும்; தெளிவும் கொண்ட கட்டுரைகள் எனப் பிறிதொரு நண்பரிடம் அவர் சொன்னதற்கான ஆதாரம் என்னிடமுண்டு. அந்த நண்பரை நட்புடனும் அன்பு கனிந்தும் நேசிக்கிற காரணத்தினால் நான் அதனை அதனை வெளிப்படு;த்த இயலாது இருக்கிறேன். அப்படியான சங்கடங்களை நான் எனது நண்பருக்கு உருவாக்க விரும்பவில்லை. சூத்ரதாரி,நாஞ்சில்நாடன்,ஞானி போன்ற மூன்று பேரும் கலந்து கொண்ட பொதுக்கூட்டம்;

ஒன்றிலும் நான் பேசவில்லை. ஜெயமோகனை வன்சொற்களால் நான் ஏசியதாகச் சொல்வதை எவர் சொன்னாரோ அவர்தான் தெளிவுபடுத்த வேண்டும். கோவையில் நடந்த கூட்டத்தில் ஞானியைச் சந்தித்தேன். நாஞ்சில் நாடனை பிறிதொரு இடத்தில் சுப்ரபாரதிமணியன் அறிமுகம் செய்து வைத்தார். சூத்ரதாரியை யார் என்றே நேரடியாக எனக்குத் தெரியாது. அவர் ஈரோட்டைச் சேர்ந்தவரென்றும் அங்கு நடந்;த கூட்டமொன்றுக்கு வரலாம் எனவும் குறிஞ்சி தெரிவித்தார். சில வேளை அவர் அங்கு வந்திருக்கலாம். 

நான் பேசிய இரண்டு கூட்டங்களும் மாற்றுச்சினிமா நூல் தொடர்பான கூட்டங்கள். அதில் ஜெயமோகன் பற்றிப் பேச வேண்டிய அவசியமே எனக்கு இல்லை. கேள்விப்பட்டதை அரசியலாக்க வேண்டிய அவசியம் ஜெயமோகனுக்கு வந்திருப்பதை நினைக்கப் பரிதாபமாக இருக்கிறது.

ஜெயமோகன் ஒரு விசயத்தைத் தெளிவாகப் புரிந்து கொள்வது நல்லது எவரும் எவருக்கும் அவரவரது தத்துவச்சார்பு நேர்மை தொடர்பாகச் சான்றிதழ் தர வேண்டிய அவசியமில்லை. 

நடந்து கொண்டிருக்கும் விவாதம் சில சைபர் ஸபேஸ் நடைமுறைகள் தொடர்பானது. சிலரது கருத்துக்கள் தொடர்பான மெளன இடைவெளிகள் தொடர்பானது. பொதுமேடைக்கு வந்துவிட்டால் இதுவெல்லாம் விவாதத்துக்கு வந்துதான் தீரும். ஜெயமோகன் மனநிலை பிறழ்ந்தவன் மாதிரி திரும்பத் திரும்ப என்னைச் ஸ்டாலினிஸ்ட்டு என்று வசை பாடிவிட்டார். அது பற்றி பல சந்தர்ப்பங்களில் விரிவாக நான் எழுதிவிட்டேன். அது பற்றி அதிகம் நான் பேச விரும்பவில்லை.

சூரியா கோணிக்குள் இருந்து வெளியாகிவிட்டாகிற்று. ஜெயமோகனும் தனது புனைபெயர்களைப் பட்டியலிட்டாயிற்று. நேசகுமார் எப்போது தனது திரையைவிலக்கி விட்டு வெளியே வரப் போகிறார்? பல விடயங்கள் தெளிவுபட்டிருக்கிறது. ஜெயமோகனுக்கு நன்றி.

அவதூறு என்பதற்கு என்ன அர்த்தம் எனறே சமயங்களில் எனக்குப் புரிவதில்லை. அதியுணர்ச்சியிலோ அல்லது பாசாங்கிற்காகவோ ஸைபர் வெளி தொடர்பான எனது கட்டுரையை நான் எழுதவில்லை. நிதானமாக யோசித்து கடப்பாட்டு உணர்வுடன்தான் சான் கட்டுரையை  எழுதியிருக்கிறேன். கருத்துச் சுதந்திரத்தில் தலையிடுவதோ புனைபெயர் வைத்துக்கொள்வதை விமர்சிப்பதோ கட்டுரையின் நோக்கம் அல்ல. சிறுபத்திரி;க்கையில் எழுதுகிற பலர் புனைபெயரில் எழுதுகிறார்கள். பிரச்சினையென்று வருகிறபோது அவர்கள் தம்மை வெளிப்படுத்திக் கொள்ளத் தயங்குவதில்லை. எனது பெயரும் கூட புனை பெயர்தான். ஆகவே புனை பெயர் என்பது பெரிய பிரச்சினையே இல்லை. மாறாகப் பொதுத்தளத்தில் எழுதுவதற்கும் இரண்டு நபர்களுக்கிடையிலான தனிப்பட்ட உறவுகளைப் பொதத்தளத்தில் கடைவிரிப்பதற்கும் வித்தியாசமிருக்கிது. 

வித்தியாசம் சமயங்களில் மீறப்படுகிறபோது வாசகனுக்கு எரிச்சல் மட்டுமெ மிஞ்சுகிறது. எடுத்துக்காட்டாக ஜெயபாலன் தொடர்பான ஒரு சிக்கலான கடிதத்தை ஜெயமோகன் தனிப்பட்ட முறையில் சூர்யாவுக்கு எழுத அதை சூர்யா ஸைபர் ஸ்பேசில் முன்வைக்கிறார். இது போக்கிரித்தனம். கடிதத்தை ஒன்று ஜெயமோகன் தந்திரமாகப் பிரசுரித்திருக்க முயன்றிருக்க வேண்டும். அல்லது சூர்யாவின் உற்சாகத்தினால் பிரசுரமாகியிருக்க வேண்டும். அந்த விவகாரத்தில் திண்;ணைதான் வருத்தம் தெரிவித்ததே ஒழிய ஜெயமோகனோ அல்லது சூர்யாவோ தமது முகங்களைக் காண்பிக்கவேயில்லை.

ஆட்கள் நேரடியிலாகத் தெரிந்து மேற்கொள்கிற இன்றைய நேரடியிலான விவாதங்களில் கூட மெளன இடைவெளிகளை வாசிப்பதால் பல அர்த்தங்கள் துலக்கம் பெறுகிறது. காரணம் குறைந்த பட்சம் விவா¢க்கிற விடயங்களில் விவாதிக்கிற ஆளுமைகளின் குணச்சித்திரம் வெளிப்படையாக வெளிப்படுவதை அவதானிக்கக் கூடியதாக இருப்பதுதான். இன்றைய நிலையில் புதையுண்ட அர்த்தங்களிலான சொற்களோடு சாதி,மத, இன விவாதங்களை மறைந்து நின்று மேற்கொள்வது மிகுந்த சிக்கலான ன்மை கொண்டது. காரணம் விவாதிப்பவர் பாசாங்கு செய்கிறாரா அல்லது ஆழ்ந்த உணர்வுடன் விவாதிக்கிறாரா என்ற கூடத் தெரிவதில்லை. 

வன் அரசியலும் மனித உயிர்களும் சம்பந்தப்பட்ட இந்தப் பிரச்சினைகளில் நேரடியாகச் சொல்கிற கருத்துக்குப் பொறுப்பேற்று விமர்சிப்பதுதான் நேர்மையானது. மத பிரச்சினைகளில் என்னளவில் ஆச்சாரகீனன் (அவரது கருத்தாக்கங்கள் அனைத்தும் அரவிந்தன் நீலகண்டன் கட்டுரைகள் முன்வைக்கும் கருத்தாக்கங்கள் - அரவிந்தன் நீலகண்டனை நேரடியிலாக அடையாளம் காணமுடிவதால் ஆச்சாரகீனன் எனக்கு ஒரு பிரச்சினையாகவே படுவதில்லை)  அடிப்படைவாத இந்துத்துவவாதி என்றால், நாகூர்ரூமி அடிப்படைவாத இஸ்லாமியவாதிதான் என்று வெளிப்படையாகச் சொல்வேன். சூர்யா, நேசகுமார், ஜெயமோகன் போன்றவர்கள் குறித்தும் நான் இப்படித்தான் எதிர்பார்க்கிறேன். 

சொந்த முகத்தை மறைத்துக் கொண்டு சைபர் ஸ்பேஸ் தரும் சுதந்திரத்தில் கண்ணாமூச்சி ஆடுகிற விசயம் என்றுதான் இதனை நான் நினைக்கிறேன். 

வேற்று மொழி சைபர் ஸ்பேஸ்களில் இப்படியான விளையாட்டுக்கள் இருக்கும்; என நான் நினைக்கவில்லை. அரசுகளை எதிர்த்த கிளான்டஸ்டைன் பிரசுரங்கள் வேறு பிரச்சினை. ஆனால் இந்தியாவிலும் தமிழகத்திலும் நடக்கும் சாதிய, மத,இன விவாதங்கள் அப்படிப்பட்டதல்ல. இந்துத்துவத்தை ஆதரிக்கிற அறிவுஜீகள் வெளிப்படையாகவே இருக்கிறார்கள். பொதுநீரோட்ட விவாதத்தில் இப்பிரச்சினைகள் வெளிப்படையாகப் பேசப்படுகிறது. அப்படியிருக்க இந்தப் பிரச்சி¨னைகளைப் பேசுகிறவர்கள் ஏன் மறைந்து நின்று வாள் வீச வேண்டும்;? 

சூர்யா போன்றவர்கள் மட்டுமல்ல இன்னும் சில நிழல் மனிதர்களும் சைபர்  ஸ்பேசில் இருக்கிறார்கள். இவர்களது சுயதம்பட்டம் தாங்கமுடியாத அளவு அகந்தை கொண்டதாக இருக்கும். மிகக் கடுமையாக அபிப்;பிராயம் வைப்பார்கள். ஆனால் முகத்தை விளிம்பநிலைப் புனை பெயர்களுக்குள் ஒளித்துக்கொண்டு விளையாடுவார்கள். எமது அடையாளங்ளை வெளிப்படையாக முன்வைத்து இந்த நிழல் மனிதர்களோடு விவாதிப்பது கடினம். அந்த விவாத்தினைத் தூண்டவென முகாந்திரமாக இப்படி ஒரு கட்டுரை எழதினேன.

உங்கள் நிஜமுகத்;தையும் கருத்தையும் அறியத்தராத வகையில் உங்களோடு உறைபவருக்கு நீங்கள் துரோகம் செய்யமாட்டீர்கள் என்பதற்கு என்ன உத்திரவாதம் இருக்கிறது? ஆகவேதான் இத்தகைய விவாதங்களில் வெளிப்படையாக இருங்கள் என்கிறேன். 

மற்றபடி காதல் கவிதை எழுதுவதற்கோ அல்லது மணிரத்தினத்தின் படங்களின் மகிமை அல்லது கேவலம் பற்றி எழதுவதற்கோ நீங்கள் எத்தனை புனைபெயர்கள் வைத்துக்கொண்டாலும் எவருக்கும் பிரச்சினை வரப்போவதில்லை.

மரணத்திற்கு முன்பாக தெரிதாவிடம் ஒரு நிருபர், தத்துவத்திற்கும் தத்துவாதியின் வாழ்வுக்கும் தொடர்பு இருக்க வேண்டியதில்லை எனச்சொல்கிறார்களே, நீங்கள் இதபற்றி என்ன கருதுகிறீர்கள் எனக் கேட்கிறார். அப்படி இருப்பது சாத்தியம்தானா என்று நிருபரைத் திருப்பி தெரிதா கேட்கிறார். ஒரு செய்தியாகவே இதனை நான் இங்கே குறிப்பிட்டு வைக்கிறேன். 

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R