Saturday, 09 January 2021 01:28
- தகவல்: பேராசிரியர் நா.சுப்பிரமணியன் -
நிகழ்வுகள்
Last Updated on Saturday, 09 January 2021 01:34
Saturday, 09 January 2021 01:20
- தகவல்: 'ரொறன்ரோ' தமிழ்ச் சங்கம் & பேராசிரியர் நா.சுப்பிரமணியன் -
நிகழ்வுகள்
Last Updated on Saturday, 09 January 2021 01:34
Thursday, 07 January 2021 23:50
- தகவல்: குரு அரவிந்தன் -
நிகழ்வுகள்

வெல்லுங்கள் 110,000 ரூபாய்கள்! எழுத்தாளர் ‘குரு அரவிந்தன் வாசகர் வட்டம்’ நடத்தும் திறனாய்வுப் போட்டி.
இலக்கிய உலகில் புகழ் பெற்ற எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்களின் 50வது ஆண்டு நிறைவான தமிழ் இலக்கிய சேவையைப் பாராட்டும் முகமாகவும், வாசிப்பு, எழுத்துப் பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கமாகவும் நடக்கும் உலகளாவிய நாவல், சிறுகதை திறனாய்வுப் போட்டி.
Last Updated on Thursday, 07 January 2021 23:58
Read more...
Thursday, 07 January 2021 23:43
- தகவல்: சிவநேசன் சிவலீலன் -
நிகழ்வுகள்

Sivanesan Shivaleelan <
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
>
Last Updated on Thursday, 07 January 2021 23:49
Monday, 28 December 2020 22:19
- தகவல்: பேராசிரியர் நா.சுப்பிரமணியன் -
நிகழ்வுகள்

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
Last Updated on Monday, 28 December 2020 22:28
Monday, 28 December 2020 22:14
- தகவல்: முருகபூபதி -
நிகழ்வுகள்

ஜனவரி மாதம் முதல் இலங்கையில் முதல் முறையாக ஒரு உலக சினிமாவுக்கான சஞ்சிகை வெளிவரவுள்ளது. இது ஒரு காலாண்டிதழ். கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. இலங்கையில் தமிழ் சினிமாவுக்கு ஆரோக்கியமான முகத்தை உருவாக்கும் இந்த பணிக்கு கட்டுரை தந்து உதவுங்கள்.
Last Updated on Monday, 28 December 2020 22:29
Read more...
Wednesday, 23 December 2020 09:19
- ரிஷான் -
நிகழ்வுகள்

இந்தியாவின் வாசகசாலை இலக்கிய அமைப்பின் சார்பில் ஆண்டுதோறும் சிறந்த இலக்கியப் படைப்புகளுக்கு 'முப்பெரும் விழா' மேடையில் இலக்கிய விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. சிறந்த கவிதைத் தொகுப்பு, சிறந்த கட்டுரைத் தொகுப்பு, சிறந்த நாவல், சிறந்த சிறுகதைத் தொகுப்பு, சிறந்த அறிமுக எழுத்தாளர், சிறந்த சிறார் இலக்கியம், சிறந்த மொழிபெயர்ப்பு நாவல் மற்றும் சிறந்த மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பு ஆகிய எட்டு பிரிவுகளிலும் பல நூல்கள் திறனாய்வுக்கு உட்படுத்தப்பட்டு சிறந்தவையாகத் தேர்ந்தெடுக்கப்படும் நூல்களுக்கு உரிய எழுத்தாளர்களுக்கு இந்த விழாவில் விருதோடு பணமுடிப்பும் வழங்கப்பட்டு வருகின்றன.
Last Updated on Wednesday, 23 December 2020 09:35
Read more...
Tuesday, 22 December 2020 13:08
- தகவல்: முருகபூபதி -
நிகழ்வுகள்
Last Updated on Tuesday, 22 December 2020 13:13
Wednesday, 16 December 2020 23:34
- பேராசிரியர் நா.சுப்பிரமணியன் -
நிகழ்வுகள்
Last Updated on Wednesday, 16 December 2020 23:45
Tuesday, 15 December 2020 09:13
- குருவி -
நிகழ்வுகள்
அமரர் கல்கியின் 'பொன்னியின் செல்வன்' (5 பாகங்கள்), அலையோசை (4 பாகங்கள்), பார்த்திபன் கனவு & சிவகாமியின் சபதம் (4 பாகங்கள்) ஆகிய தொடர்நாவல்களின் வெளியான அத்தியாயங்கள் ஓவியங்களுடன் 'பைண்டு' செய்யப்பட்ட மின்னூல்களைக் கல்கி நிறுவனத்தின் தளத்தில் வாசிக்கலாம். https://www.kalkionline.com/publication/ebook1.php
Last Updated on Tuesday, 15 December 2020 09:23
Sunday, 13 December 2020 13:14
- தகவல்: ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் -
நிகழ்வுகள்
Last Updated on Sunday, 13 December 2020 13:17
Sunday, 06 December 2020 10:03
- மாரி மகேந்திரன் -
நிகழ்வுகள்
- எழுத்தாளரும், 'நமது சினிமா' நூலாசிரியருமான மாரி மகேந்திரன் எதிர்வரும் ஜனவரி மாதத்திலிருந்து 'திரைப்படம்' என்னும் உலக சினிமாவுக்கான சஞ்சிகையொன்றினை இலங்கையிலிருந்து வெளியிடவுள்ளதாகத் தகவல் அனுப்பியிருந்தார். அதனை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன். இத்துறை சார்ந்த எழுத்தாளர்கள் சஞ்சிகைக்குப் படைப்புகளை அனுப்பி வையுங்கள். சஞ்சிகை சிறப்புற, வெற்றியடைந்திட வாழ்த்துகள். - வ.ந.கிரிதரன், பதிவுகள் -

வணக்கம்! ஜனவரி மாதம் முதல் இலங்கையில் முதல் முறையாக ஒரு உலக சினிமாவுக்கான சஞ்சிகை வெளிவரவுள்ளது. இது ஒரு காலாண்டிதழ். உங்கள் கட்டுரைகள் வேண்டும்.
Last Updated on Sunday, 06 December 2020 10:56
Read more...
Sunday, 29 November 2020 10:59
- ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் -
நிகழ்வுகள்
Last Updated on Sunday, 29 November 2020 11:10
Sunday, 22 November 2020 14:52
- அடவி -
நிகழ்வுகள்
Last Updated on Sunday, 22 November 2020 14:56
Sunday, 22 November 2020 14:47
- தகவல்: இளங்கோவன் -
நிகழ்வுகள்
Last Updated on Sunday, 22 November 2020 14:51
Friday, 20 November 2020 00:30
- வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை (Federation of Tamil Sangams of North America (FeTNA) -
நிகழ்வுகள்
Last Updated on Friday, 20 November 2020 00:42
Read more...
Tuesday, 17 November 2020 22:49
- தகவல்: ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் & பேராசிரியர் நா.சுப்பிரமணியன் -
நிகழ்வுகள்
Last Updated on Wednesday, 16 December 2020 23:45
Sunday, 15 November 2020 01:06
- முருகபூபதி -
நிகழ்வுகள்

லண்டனில் வதியும் நூலகர் நடராஜா செல்வராஜாவின் - ஈழத்தின் தமிழ் நாவலியல் ஆய்வுக்கையேடு நூலின் இணையவழி காணொளி ஆய்வரங்கு . கடந்த 14 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது: https://youtu.be/6noK6iGzaMc
Last Updated on Sunday, 15 November 2020 01:17
Friday, 13 November 2020 03:05
- சுப்ரபாரதிமணியன் -
நிகழ்வுகள்

திருப்பூரில் பொதுவெளியில் திருவள்ளுவர் சிலை வைக்க பல ஆண்டுகள் முயற்சி செய்து திருப்பூர் மக்கள் மாமன்றம் வெற்றி கண்டது சமீபத்தில் . மக்கள் மாமன்றம் நூலக முகப்பில் அந்த சிலை அமைந்துள்ளது ( டைமண்ட் திரையரங்கு முகப்பில் உள்ளது நூலகம் )சமீபத்தில் மக்கள் மாமன்றம் 25 என்ற நூல் சமீபத்தில் வெளிவந்துள்ளது. அடுத்து தமிழன்னைக்குச் சிலை வைக்க முயற்சி நடக்கிறது . அதற்கு உதவலாம் .
தொடர்புக்கு சி.சுப்ரமணீயன் , அமைப்புத் தலைவர், மக்கள் மாமன்றம் 93457 20140
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
Last Updated on Friday, 13 November 2020 03:12
Monday, 02 November 2020 22:02
- தகவல்: பேராசிரியர் நா.சுப்பிரமணியன் -
நிகழ்வுகள்

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
Last Updated on Monday, 02 November 2020 22:17
Monday, 02 November 2020 12:33
- வி. ரி. இளங்கோவன் -
நிகழ்வுகள்

மூத்த எழுத்தாளர் - நண்பர் மா.பா.சி (மா.பாலசிங்கம்) கடந்த 31 - ம் திகதி (31 - 10 - 2020) சனிக்கிழமை இரவு கொழும்பில் காலமான செய்தி கவலையளிக்கிறது. அவருக்கு வயது 81. முற்போக்குச் சிந்தனையாளரான மா. பா. சி. என அறியப்படும் மா. பாலசிங்கம் யாழ்ப்பாண நகரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். கொழும்பில் நீண்ட காலமாக வசித்து வந்தார். எழுதுவினைஞராகக் கடமையாற்றி ஓய்வுபெற்றவர். சிறுகதை - குறுநாவல் - நாவல் - கட்டுரைகள் எனப் படைப்புகளை வரவாக்கியுள்ளார். இவரது முதலாவது சிறுகதைத் தொகுதியான 'இப்படியும் ஒருவன்' மல்லிகைப் பந்தல் வெளியீடாக 2002 -ல் வெளிவந்தது. அடுத்த சிறுகதைத் தொகுதியான 'எதிர்க்காற்று' 2008 -ல் வெளியாகியது.
Last Updated on Monday, 02 November 2020 12:58
Read more...
Saturday, 24 October 2020 13:22
- வ.ந.கி -
நிகழ்வுகள்
"அனைவருடனும் அறிவி னைப் பகிர்ந்து கொள்வோம்" என்னும் தாரக மந்திரத்துடன், எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு மார்ச் 2000 ஆம் ஆண்டிலிருந்து வெளியாகும் இணைய இதழ் 'பதிவுகள்' (பதிவுகள்.காம்). 'பதிவுகள்' இணைய இதழில் வெளியான கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் ஆய்வுக் கட்டுரைகள் மின்னூற் தொகுப்புகளாக வெளியாகும். 'பதிவுகள்' இணைய இதழில் ஆயிரக்கணக்கில் படைப்புகள் வெளியாகியுள்ளன. அவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகளை ஆவணப்படுத்த வேண்டியது அவசியம். அதனடிப்படையில் 'பதிவுகள்' இணைய இதழில் வெளியான ஆக்கங்கள் தொகுப்புகளாக வெளிவரவேண்டியது அவசியம். தற்போதுள்ள சூழலில் அவை மின்னூல்களாகவாவது ஆவணப்படுத்தப்பட வேண்டும். அவ்வடிப்படையில் இத்தொகுப்புகள் ஆவணப்படுத்தப்படுகின்றன.
'பதிவுகள்' இணைய இதழில் வெளியான ஆரம்பகாலப் படைப்புகள் இவை. 'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்ப கால இணைய இதழ்களிலொன்று. முரசு அஞ்சல், திஸ்கி எழுத்துரு, ஒருங்குறி எழுத்துரு என்று பல்வேறு எழுத்துருக்களில் படைப்புகள் வெளியாகியுள்ளன. பாமினி போன்ற எழுத்துருக்களில் அனுப்பப்பட்ட படைப்புகளை திஸ்கிக்கு, ஒருங்குறிக்கு உருமாற்றுகையில் ஏற்படும் தவறுகள், தட்டச்சுப் பிழைகள் என இவற்றில் இன்னும் பல எழுத்துப்பிழைகள் இருக்கலாம். இருக்கும். அவற்றை வாசிப்பவர்கள் அறியத்தாருங்கள். அடுத்தடுத்த பதிப்புகளில் அவை திருத்தப்படும். பதிவுகளில் வெளியான படைப்புகளின் ஏனைய தொகுப்புகளும் விரைவில் வெளியாகும், இவை அனைத்தும் 'இணையக் காப்பகம்' தளத்தில் ஆவணப்படுத்தப்படும். 'நூலகம்' தளத்துக்கும் அனுப்பி வைக்கப்படும்.
Last Updated on Saturday, 24 October 2020 19:05
Read more...
Friday, 23 October 2020 00:04
- வ.ந.கி -
நிகழ்வுகள்

உலகத் தமிழ்ச் சங்கத்தின் (மதுரை) ஏற்பாட்டில் நடைபெற்ற 'கனடாச் சிறுகதை இலக்கியம்' பற்றி இணையவழி இலக்கியக் கருத்தரங்கு ஒன்றினைப் பார்க்கும் & கேட்கும் சந்தர்ப்பமேற்பட்டது. அதில் கனடாத் தமிழ்ச் சிறுகதைகள் பற்றிய சிறப்பானதோர் ஆய்வுரையினை முனைவர் மைதிலி தயாநிதி அவர்கள் ஆற்றியிருந்தார். அதற்காக அவருக்கென் பாராட்டுகள்.
மிகவும் விரிவானதொரு தேடலை அவர் இவ்வாய்வுக் கட்டுரையினை எழுதுவதற்காகச் செய்துள்ளார் என்பதை அவரது உரை புலப்படுத்தியது. கனடாத் தமிழ் இலக்கியத்துக்குச் சிறுகதை மூலம் பங்களிப்புச் செய்த எழுத்தாளர்கள், அவர்களது முக்கியமான சிறுகதைகள் பற்றி உதாரணங்களுடன் குறிப்பிட்டார். அவரது ஆய்வுரை சிறப்புடனும், உணர்வு பூர்வமாகவுமிருந்தது.
Last Updated on Friday, 23 October 2020 00:50
Read more...
Tuesday, 20 October 2020 11:42
- தகவல்: பேராசிரியர் நா.சுப்பிரமணியன் -
நிகழ்வுகள்

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
Last Updated on Tuesday, 20 October 2020 11:50
Saturday, 17 October 2020 07:53
- பதிவுகள் -
நிகழ்வுகள்
"அனைவருடனும் அறிவினைப்பகிர்ந்து கொள்வோம்' என்பதைத் தாரக மந்திரமாகக் கொண்டு , மார்ச் 2000 இலிருந்து வெளியாகும் இணைய இதழ் 'பதிவுகள்'. 'பதிவுகள்' இணைய இதழை http://www.geotamil.com , http://www.pathivukal.com , http://www.pathivugal.com ஆகிய இணையத் தள முகவரிகளில் வாசிக்கலாம். 'பதிவுகள்' இணைய இதழில் வெளியான படைப்புகளை இயலுமானவரையில் ஆவணப்படுத்தப்பட வேண்டியதன் அவசியம் கருதி, அவை மின்னூல்களாக இணையக் காப்பகம், நூலகம் போன்ற எண்ணிம நூலகங்களில் ஆவணப்படுத்தப்படும். அவ்வகையில் 'பதிவுகள் 55 சிறுகதைகள்' & 'பதிவுகள் 27 சிறுகதைகள்' ஆகிய மின்னூல்கள் பதிவுகள்.காம் வெளியீடுகளாக வெளியாகியுள்ளன.
'பதிவுகள்' சிறுகதைகள் (தொகுதிகள் 1 & 2) : பதிவுகள் இணைய இதழில் ஆரம்பக் காலகட்டத்தில் வெளியான சிறுகதைகளின் இரு தொகுதிகள் மின்னூல்களாக வெளியாகியுள்ளன. இவை 2000 -2010 காலகட்டத்தில் வெளியான சிறுகதைகள். 'பதிவுகள்' இணைய இதழில் வெளியான ஏனைய சிறுகதைகளும் எதிர்காலத்தில் மின்னூற் தொகுதிகளாக வெளியிடப்பட்டு ஆவணப்படுத்தப்படும். இத்தொகுப்புகளை இணையக் காப்பகம் (https://archive.org) தளத்தில் வாசிக்கலாம். முதற் தொகுதியில் 55 சிறுகதைகளும், இரண்டாம் தொகுதியில் 27 சிறுகதைகளும் , மொத்தமாக 82 சிறுகதைகள் அடங்கியுள்ளன.
ஏற்கனவே 'பதிவுகள்' இணைய இதழில் வெளியான கட்டுரைகளின் முதற் தொகுப்பு மின்னூலாக வெளியாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. பதிவுகள் இணைய இதழில் வெளியான , வெளியாகும் கட்டுரைகள், கவிதைகள், கதைகள் & ஆய்வுக் கட்டுரைகள் ஆகியன தொகுப்புகளாக வெளியாகும். இத்தொகுப்புகள் தமிழ் இலக்கியத்துக்குப் பதிவுகள் ஆற்றிய பங்களிப்பினை வெளிப்படுத்தும் தொகுப்புகளாக விளங்குமென்பதில் சந்தேகமில்லை.
Last Updated on Monday, 19 October 2020 06:56
Read more...
Thursday, 15 October 2020 20:41
- முனைவர் துரை மணிகண்டன் -
நிகழ்வுகள்
ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் தமிழ் இணையக் கழகமும் இணைந்து 08 & 09-10-2020 ஆகிய இரண்டு நாள் நடத்திய “இணையவழியில் மொழிகளை மேம்பாடு அடையச்செய்தல்” எனும் பன்னாட்டு இணையவழிப் பயிலரங்கம் மிகச் சிறப்பாக நடந்தேறியது. இப்பயிலரங்கில் ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆங்கிலத்துறை, சமஸ்க்ருதத்துறை மற்றும் தமிழாய்வுத்துறையும் இணைந்து நடத்தின என்பதில் பெருமையே.
நிகழ்வின் தொடக்கமாக 08 -10 – 2020 வியாழன் அன்று காலை தொடக்க நாள் விழாவில் கல்லூரியின் கலைப்புல முதன்மையர் இரா.பூ.இராஜேஸ்வரி வரவேற்புரை வழங்கினார். நிகழ்வில் கல்லூரியின் செயலர் CA அம்மங்கி V. பாலாஜி அவர்கள் தலைமையுரையாற்றினார். கல்லூரி இயக்குநர் முனைவர் S. ஸ்ரீவித்யா அவர்களும் முனைவர் J.ராதிகா அவர்களும் வாழ்த்துரை நல்கினர். நிகழ்வின் முடிவில் ஆங்கிலத்துறை ஒருங்கிணைப்பாளர் திருமதி S.S.சரண்யா நன்றியுரை வழங்கினார்.
முதல் நாள் நிகழ்வில் இணைய தமிழ் ஆய்வாளரும், தமிழ் இணைய கழகத்தின் தலைவருமான முனைவர் துரை. மணிகண்டன் "தமிழ் மற்றும் தகவல் தொழில்நுட்பம் " என்ற தலைப்பில் உரை வழங்கினார். இவ்வுரையில் தமிழ் இணையத்தின் தோற்றம் வளர்ச்சி குறித்தும், தொழில்நுட்பங்களைத் தமிழ்மொழியில் அனைவரும் பயன்படுத்துமாறும், தமிழ் எழுத்துருக்கள் அது கடந்து வந்த பாதை பற்றியும் விரிவாக எடுத்துக் காட்டினார்.
Last Updated on Thursday, 15 October 2020 21:43
Read more...
Thursday, 15 October 2020 20:17
- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் -
நிகழ்வுகள்
Last Updated on Thursday, 15 October 2020 21:16
Saturday, 10 October 2020 22:25
- கலாநிதி செல்லத்துரை சுதர்சன் -
நிகழ்வுகள்
Last Updated on Saturday, 10 October 2020 22:39
Read more...
Friday, 02 October 2020 10:36
- தகவல்: பேராசிரியர் நா.சுப்பிரமணியன் -
நிகழ்வுகள்
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
Last Updated on Sunday, 29 November 2020 11:08
Tuesday, 29 September 2020 10:09
- அகில் -
நிகழ்வுகள்
Last Updated on Thursday, 15 October 2020 21:16
Read more...
Wednesday, 23 September 2020 01:45
- தகவல்: முருகபூபதி -
நிகழ்வுகள்
Last Updated on Thursday, 24 September 2020 08:23
Read more...
Wednesday, 23 September 2020 00:25
- ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் -
நிகழ்வுகள்

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
Last Updated on Wednesday, 23 September 2020 00:35
Tuesday, 22 September 2020 01:17
- சிவனேசன் சிவலீலன் -
நிகழ்வுகள்
Last Updated on Tuesday, 22 September 2020 01:25
Read more...
Tuesday, 08 September 2020 22:00
- தகவல்: ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் -
நிகழ்வுகள்
Last Updated on Tuesday, 08 September 2020 22:06
Read more...
Monday, 07 September 2020 22:39
administrator
நிகழ்வுகள்

'ரொறன்ரோ" தமிழ்ச் சங்கம் நடத்தும் மாத இலக்கிய அமர்வுகளிலொன்றில், எழுத்தாளர் செங்கை ஆழியான் பற்றிய எனது பார்வை என்னும் உரையினை ஆற்றும் காணொளி இது. பேராசிரியர் நா.சுப்பிரமணியன் தலைமையில் , நடந்த நிகழ்வு. அந்நிகழ்வில் 'செங்கை ஆழியான் ஒரு கல்வியாளர்' என்னும் தலைப்பில் கவிஞர் கந்தவனமும், 'ஈழத்தின் நவீனத் தமிழிலக்கியத்தில் செங்கை ஆழியானுக்குரிய இடம்' என்னும் தலைப்பில் பேராசியர் நா.சுப்பிரமணியன் அவர்களும் உரையாற்றினார்கள். நிகழ்வு நடந்த நாள்: ஆகஸ்ட்27, 2016
'ரொறன்ரோ" தமிழ்ச் சங்க நிகழ்வுகள் ஒழுங்காக நடைபெறுவதற்கு முக்கிய காரணங்களிலொன்று எழுத்தாளர் அகிலின் உழைப்பு. எழுத்தாளர் அகில், பேராசிரியர் நா.சுப்பிரமணியன், மருத்துவர் இலம்போதரன், கவிஞர் கந்தவனம் , எழுத்தாளர் த.சிவபாலு என்று பலர் இச்சங்கம் திறம்பட இயங்குவதற்குக் காரணமானவர்கள். காணொளிக்கான இணைப்பு: https://www.youtube.com/watch?v=Wwhq4bV-FCU
Last Updated on Tuesday, 08 September 2020 22:09
Read more...
Sunday, 06 September 2020 21:43
- அகில் -
நிகழ்வுகள்
Last Updated on Sunday, 06 September 2020 22:03
Read more...
Wednesday, 19 August 2020 21:19
- தகவல்" முருகபூபதி -
நிகழ்வுகள்

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
Last Updated on Wednesday, 19 August 2020 21:27
Saturday, 15 August 2020 22:39
- தகவல்: இளங்கோவன் -
நிகழ்வுகள்
Saturday, 15 August 2020 22:26
- தகவல்: இளங்கோவன் -
நிகழ்வுகள்
Last Updated on Saturday, 15 August 2020 22:37
Saturday, 15 August 2020 20:44
- நாளை விடியும் -
நிகழ்வுகள்
மொத்தம் 103 பரிசுகள் | பரிசுத்தொகை ரூ. 27,250
பெரியாரின் *பெண் ஏன் அடிமையானாள்?* என்ற நூல் பற்றிய உங்களின் கருத்துரைகளை A4 அளவில் இரண்டு பக்கங்களுக்கு மிகாமல் எழுதி, அஞ்சல் வழியாகவோ (by post) மின்னஞ்சல் (email) வழியாகவோ அனுப்ப வேண்டும்.
போட்டியில் பங்கேற்க வயது வரம்பு இல்லை.
முதல் பரிசு ரூ. 1000 இரண்டாம் பரிசு ரூ. 750 மூன்றாம் பரிசு ரூ.500 நான்காம் பரிசு: 100 பேருக்கு (100 * 250) ரூ. 25000
*சிறந்த கட்டுரைகளைத் தொகுத்து நூலாக வெளிக்கொண்டு வரும் திட்டமும் உள்ளது.* *பரிசுக்குரிய தொகைக்கு ஈடாக நூல்களாகத்தான் அனுப்பப்படும்.* உங்களின் பெயர், தெளிவான அஞ்சல் முகவரி (postal address), மின்னஞ்சல் (email) இருந்தால் மின்னஞ்சல் முகவரி, அலைப்பேசி (mobile) எண் விவரங்களோடு அனுப்ப வேண்டும். நூல் திறனாய்வினை அனுப்பக் கடைசி நாள்: 31.08.2020 போட்டி முடிவுகள் செப்டம்பர் 17 அன்று அறிவிக்கப்படும்.
நூல் திறனாய்வினை அனுப்ப வேண்டிய முகவரி:
நாளை விடியும் எறும்பீசுவரர் நகர் மலைக்கோயில் திருவெறும்பூர் திருச்சி - 620013.
Last Updated on Sunday, 16 August 2020 01:23
Read more...
Saturday, 15 August 2020 20:30
- குவிகம் இலக்கிய வாசல் -
நிகழ்வுகள்
Last Updated on Saturday, 15 August 2020 20:35
Read more...
Sunday, 02 August 2020 19:10
- srilankantamils -
நிகழ்வுகள்
காணொளி நேரலையில் இலங்கை தேர்தல் - தமிழரின் (தலை) அரசியல் விதி
இலங்கையில் எதிர்வரும் புதன்கிழமை (05.08.2020) நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் கள நிலவரம் தொடர்பாக Youtube மற்றும் Facebook வாயிலாக வீடியோ நேரலை ஒளிபரப்பாகவுள்ளது.
இலங்கையில் எதிர்வரும் புதன்கிழமை (05.08.2020) நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் கள நிலவரம் தொடர்பாக வீடியோஸ்பதி (Videospathy) ஊடக ஒருங்கிணைப்பில் Youtube மற்றும் Facebook வாயிலாக வீடியோ நேரலை ஒளிபரப்பாகவுள்ளது.
இலங்கை, இந்திய நேரம் மாலை 5:30 மணியளவில் ஒளிபரப்பாகவுள்ள இந்நிகழ்ச்சியினை புலம்பெயர் வானொலித்துறையில் மூத்த ஊடகவியலாளர் நவரட்ணம் ரகுராம் தொகுத்து வழங்கவுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இருந்து திருச்சிற்றம்பலம் பரந்தாமன் (ஆய்வாளர், பத்தி எழுத்தாளர்), திருகோணமலையில் இருந்து யதீந்திரா (அரசியல் ஆய்வாளர், திருகோணமலை மூலோபாய கற்கை நிலையத்தின் (Centre for Strategic Studies – Trincomalee (CSST) நிறைவேற்று இயக்குனர், கொழும்பில் இருந்து ஏ.பி.மதன் (தமிழ்மிரர் நாளேட்டின் பிரதம ஆசிரியர், வவுனியாவில் இருந்து ச.விமல் (அறிவிப்பாளர், வானொலி/ தொலைக்காட்சி நிகழ்சி தொகுப்பாளர்), மட்டக்களப்பில் இருந்து ஊடகவியலாளர் வடிவேல் சக்திவேல், மலையகத்தில் இருந்து ஆர். சனத் (leadnews7.com இன் ஆசிரியர் / சுதந்திர ஊடகவியலாளர்) ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.
Last Updated on Sunday, 02 August 2020 19:25
Read more...
Sunday, 02 August 2020 19:07
- நவீன விருட்சம் -
நிகழ்வுகள்

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
Last Updated on Sunday, 02 August 2020 19:22
Saturday, 11 July 2020 00:20
- குவிகம் இலக்கிய வாசல் -
நிகழ்வுகள்

குவிகம் இலக்கிய வாசல் <
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
>
புகலிடத்திலிருந்து பல்வேறு அமைப்புகள், சங்கங்கள் மற்றும் தனிப்பட்டவர்கள் நாட்டிலிருக்கும் போரினால் பாதிக்கப்பட்டுப் பல்வகைதேவைகளை எதிர்நோக்கியிருக்கும் மக்களுக்குப் பல்வகைத்திட்டங்கள் மூலம் உதவி வருகின்றார்கள். இவ்வகையில் யாழ் இந்துக் கல்லூரிக் கனடாச்சங்கத்தினரும் கல்வித்திட்டமொன்றினை நடத்தி வருகின்றார்கள். 'ஊருணித்திட்டம்' என்னும் அத்திட்டம் அங்குள்ள மாணவர்களுக்குக் கல்வியில் உதவி வரும் திட்டங்களிலொன்று. அது பற்றிய காணொளியிது. இக்காணொளி அத்திட்டம் பற்றிய புரிதலை உங்களுக்குத் தரும்.
Last Updated on Tuesday, 23 June 2020 00:06
Read more...
Monday, 22 June 2020 01:43
- தகவல்: முருகபூபதி -
நிகழ்வுகள்
Last Updated on Monday, 22 June 2020 08:26
Thursday, 21 May 2020 11:14
- முனைவர் K.சதீஷ் குமார்-
நிகழ்வுகள்
 
கேரளப்பல்கலைக்கழகத் தமிழ்த்துறை நடாத்தும் தொல்காப்பியம் பற்றிய இணையப்பட்டறை (மே 20, 2020 - மே 26,2020) பற்றிய தகவல்களை முனைவர் சதீஷ் குமார் அவர்கள் அறியத்தந்துள்ளார். ஆர்வமுள்ளவர்கள் இப்பயிலரங்கில் பங்கு பற்றலாம்; கேட்டுப் பயன் பெறலாம். அத்தகவல் வருமாறு:
Last Updated on Thursday, 21 May 2020 11:35
Read more...
Wednesday, 06 May 2020 09:43
- லதா ராமகிருஷ்ணன் -
நிகழ்வுகள்
கொரோனா காலகட்டத்தில் எழுதப்படும் கவிதைகள் ஏதோவொரு வகையில் அந்தக் காலகட்டத்தின் அக புற வெளிகளைப் படம்பிடித்துக்காட்டுகின்றன. அவ்வகையில் ஒரு காலகட்டத்தின் ஆவணமாகின்றன. சாட்சியமாகின்றன.
தமிழ் கவிதைகளை ஆங்கில மொழியாக்கம் செய்து இதுவரை நான்கைந்து தொகுப்புகள் வெளியிட்டுள்ள மொழிபெயர்ப்பாளர் கே.எஸ்.சுப்பிரமணியன் (பாரதியார் கவிதைகளின் பெரும்பகுதியை மொழி பெயர்த்துள்ளார், சங்கத்தமிழ்ப்பெண் கவிஞர்களின் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்) தனி கவிஞர்களுடைய ஆங்கில மொழியாக்கத் தொகுப்புகளெனவும் 10க்கு மேல் வெளியாகி யுள்ளன - அவற்றில் சில இளம்பிறை, உமா மகேஸ் வரி, தமிழச்சி தங்கபாண்டியன்(நூல் வெளியாக உள்ளது), அ.வெண்ணிலா(நூல் வெளியாக உள்ளது, ) அவர்கள் கொரோனா காலகட்டத்தில் எழுதப்பட்ட கவிதைகள் குறைந்தபட்சம் 100ஐ ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து ஒரு தொகுப்பாகக் கொண்டுவரும் முயற்சியை மேற்கொண்டுள்ளார்.
தொகுப்பிற்காக கவிதையை அனுப்ப விரும்பு கிறவர்கள் கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு ஆளுக்கொரு கவிதை அனுப்பித் தரும்படி (டெமி ஸைஸ் தாளில் ஒன்று அல்லது இரண்டு பக்கங் களுக்கு மிகாமல்) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
கவிதைகள் அனுப்புவோர் தம்மைப் பற்றிய சிறு விவரக் குறிப்பு, புகைப்படம், விலாசம் மற்றும் தங்கள் கவிதையை மொழிபெயர்க்க அனுமதி ஆகியவற்றையும் அனுப்பித்தந்து உதவவும்.
கவிதை அனுப்பவேண்டிய கடைசி தேதி: இவ்வருடம் மே 15.
அனுப்பப்படும் அத்தனை கவிதைகளும் மொழிபெயர்க்கப்பட்டு தொகுப்பில் இடம்பெறும் என்று உறுதியளிக்க இயலாது. பல்வேறு காரணங்களால் சில கவிதைகள் மொழிபெயர்ப்புக்கு ஏற்றவையாக அமையாதுபோகலாம்.
Last Updated on Wednesday, 06 May 2020 09:50
Read more...
Saturday, 21 March 2020 18:46
- குரு அரவிந்தன் -
நிகழ்வுகள்

கனடா தமிழ் எழுத்தாளர் இணையம்
வணக்கம், நாட்டு நிலைமை காரணமாக மக்களின் பாதுகாப்புக் கருதி ஏப்ரல் 11 ஆம் திகதி நடக்கவிருந்த எமது முத்தமிழ் விழா பிற்போடப்பட்டிருக்கிறது என்பதை அறியத்தருகின்றோம்.
கொறோனா வைரஸ்சால் ஆபத்து இல்லை என்று நிச்சயப்படுத்திய பின் விழா நடக்கவிருக்கும்புதிய திகதியை அறியத்தருகின்றோம். சூழ்நிலை கருதி பொதுமக்கள் பொது இடங்களில் ஒன்றுகூடுவதைத் தவிர்ப்பது எமக்கும், எமது சமூகத்திற்கும் நல்லதென்பதால் இந்த முடிவை எடுத்திருக்கின்றோம்.
இதில் ஈடுபாடு கொண்ட மற்றவர்களுக்கும் தயவு செய்து இதை அறியத்தரவும்.
குரு அரவிந்தன் ஆர் என். லோகேந்திரலிங்கம் தலைவர் செயலாளர்
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
Last Updated on Saturday, 21 March 2020 18:53
Monday, 16 March 2020 22:25
- பேராசிரியர் சி. மௌனகுரு -
நிகழ்வுகள்
பாடும் மீன் புத்தகக் கண்காட்சி காண சனிக் கிழமை( 08. 03. ,2020) இரவு தேவநாயகம் மண்டபம் சென்றிருந்தேன். சித்திரலேகாவும் தன் உடல் நிலையைப் பொருட்படுத்தாது என்னுடன் வந்திருந்தார். புதிய புத்தகங்கள் காண அவரும் அவாவினார், அவரும் ஓர் புத்தக ஆர்வலர். நாம் அங்கு போகும் போது மேடையில் நின்று ஜிப்றி ஹசன் உரையாற்றிக் கொண்டிருந்தார். ஒரு நூல் பற்றிய அறிமுகம் அது.
ஹசன் காத்திரமான மனிதர் ஏலவே எனக்கு அறிமுகமானவர் அவரது சிறுகதைத் தொகுதி ஒன்று வாசித்தமையினால் அவர் மீது எனக்கு மிகுந்த மதிப்பு இருந்தது. அவர் உரையைச் செவி மடுத்தவண்ணம் தேவநாயகம் மண்டபத்தினுள் நுழைந்தோம், அவரைப்பற்றி சித்திராவிடமும் கூறினேன்.
தேவநாயகம் அரங்கு இரண்டாகப் பிரிக்கப்பட்டிருந்தது. மேடையும் அதனை ஒட்டிய பகுதியும்முதலாவது பகுதி அதற்கு இப்பால் இரண்டாவது பகுதி கண்காட்சிப்பகுதி. மேடையில் யில் நின்று ஹசன் உரையாற்றினார் அதனோடு ஒட்டியிருந்த கதிரைகளில் ஒரு பத்து அல்லது பதினைந்து பேர் இருந்து அவர் உரையைச் செவி மடுத்துகொண்டிருந்தனர். மிக அதிகமானோர் அது பற்றி எதுவித கவலை யுமின்றி அதே ஹாலில் பரப்பி வைக்கப்பட்டி ருந்த நூல்களை பார்வையிட்டுக்கொண்டிருந்தனர்.
Last Updated on Monday, 16 March 2020 23:06
Read more...
Tuesday, 10 March 2020 13:02
- தொல்காப்பியம் கனடா -
நிகழ்வுகள்
Last Updated on Tuesday, 10 March 2020 13:09
Read more...
Tuesday, 10 March 2020 09:33
- கற்சுறா -
நிகழ்வுகள்
காலம்: 21 மார்ச்2020| நேரம்: மாலை 5.30 மணி| இடம்:Heroes Place, 2541 Pharmacy Avenue,Pharmacy & Finch, Scarborough, Ontario

Last Updated on Tuesday, 10 March 2020 09:49
Read more...
Monday, 09 March 2020 02:43
- முருகபூபதி -
நிகழ்வுகள்
“மலைகளைப் பேசவிடுங்கள்" வெளியீடும் - மூன்று நூல்களின் அறிமுகமும்! எழுத்தாளரும் அரசியலாளருமான மல்லியப்புசந்தி திலகர் எழுதிய “மலைகளைப் பேசவிடுங்கள்" நூல் வெளியீடும்!
‘வண்ணச் சிறகு' அரு.சிவானந்தனின் , “சென்று வருகிறேன் ஜென்ம பூமியே" கவிதை நூல், தெளிவத்தை ஜோசப் எழுதிய ‘இலங்கையின் சிறுகதை மூலவர்களில் ஒருவரான இலங்கையர் கோன்’ - அறிமுகம் ( குமரன் வெளியீடு) கனடாவில் இருந்து வெளிவரும் "காலம்" கலை இலக்கிய சிற்றிதழின் "தெளிவத்தை ஜோசப்" சிறப்பிதழ் ஆகியவற்றின் அறிமுகமும் இம்மாதம் 9 ஆம் திகதி பௌர்ணமி திங்களன்று மாலை 5 மணிக்கு கொழும்பு தமிழ்ச் சங்கம் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் சாஹித்யரத்னா தெளிவத்தை ஜோசப் தலைமையிலும் பிரபல தொழில் முனைவரும் சமூக செயற்பாட்டாளருமான சந்திரா ஷாப்டர் முன்னிலையிலும் இடம்பெறவுள்ளது.
முன்னாள் அமைச்சரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் பிரதம அதிதியாகக் கலந்துகொள்ளவுள்ள இந்நிகழ்வில், மூத்த எழுத்தாளர் அந்தனி ஜீவா, குமரன் பதிப்பக உரிமையாளர் க. குமரன் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக கலந்துகொள்ளவுள்ளனர்.
Last Updated on Monday, 09 March 2020 02:50
Read more...
நேற்று மாலை (மார்ச் 1, 2020) , ஸ்கார்பரோவில் அமைந்துள்ள 'ஹீரோஸ் பிளேஸி'ல் 'சம உரிமை' இயக்கத்தினரின் கனடாக் கிளையினரால் இலங்கையில் காணாமல் போனவர்களுக்கு மரணச்சான்றிதழ் தருவதாகக் கூறிய இலங்கை ஜனாதிபதியின் கூற்றினைக் கண்டிக்கும்பொருட்டு நடைபெற்ற கண்டனக் கூட்டத்துக்குச் சென்றிருந்தேன். கனடாவில் வசிக்கும் முன்னாட் போராளிகள் (பல்வேறு அமைப்புகளையும் சேர்ந்தவர்கள்) , எழுத்தாளர்கள், சமூக,அரசியற் செயற்பாட்டாளர்கள் எனப்பலர் வந்திருந்தனர் சமூக அரசியற் செயற்பாட்டாளரும் , முன்னாட் போராளியுமான எல்லாளனின் தலைமையில் நடைபெற்ற விழா எல்லாளனின் தலைமைத்துவப் பண்புகளை வெளிப்படுத்துமொரு நிகழ்வாகவும் அமைந்திருந்தது. மிகவும் கச்சிதம் என்பார்களே அவ்விதமாகக் கூட்டம் நடைபெற்றது. அதற்குக் காரணம் எல்லாளனின் தலைமைத்துவ ஆற்றலே. சம உரிமை இயக்கத்தினரின் கனடாக்கிளையினால் நடத்தப்பட்ட இந்நிகழ்வின் வெற்றிக்கு முக்கியமான ஏனையவர்களாக சமூக, அரசியற் செயற்பாட்டாளர் நேசன், சமூக, அரசியற் செயற்பாட்டாளர் சபேசன் ஆகியோரையும் குறிப்பிடலாம்.இவ்வமைப்பில் இணைந்து மேலும் சிலர் இயங்குகின்றனர். அனைவர்தம் பெயர்களும் எனக்குத்தெரியாத காரணத்தால் அவர்கள் பெயர்களை இங்கு குறிப்பிடவில்லை. அவர்களும் இந்நிகழ்வின் வெற்றிக்கு முக்கிய காரணகர்த்தாக்களே.
Last Updated on Monday, 09 March 2020 02:44
Read more...
Wednesday, 26 February 2020 21:56
- சந்திரசேகரன் -
நிகழ்வுகள்
கருத்தரங்கில் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கின்றோம். நல்ல பயனுள்ள அறிவுப்பரிமாற்றத்திற்கு வருகையும் கட்டுரையும் தருவீர்களாக/ தொடர்புக்கு அழைக்கவும்: 9283275782
Last Updated on Wednesday, 26 February 2020 22:09
Read more...
Saturday, 22 February 2020 11:38
- தகவல்: எல்லாளன் -
நிகழ்வுகள்
Last Updated on Monday, 20 April 2020 08:15
Sunday, 16 February 2020 03:20
- தகவல்: 'காலம் செல்வம்' -
நிகழ்வுகள்
Thursday, 13 February 2020 12:31
- தகவல்: அழகிய சங்கர் -
நிகழ்வுகள்

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
Last Updated on Thursday, 13 February 2020 12:36
Thursday, 06 February 2020 10:44
- பனிப்பூக்கள் -
நிகழ்வுகள்

பனிப்பூக்கள் சஞ்சிகை, சில வாரங்களில் எட்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. 2012 ஆம் ஆண்டு, உலகத் தாய்மொழித் தினத்தன்று. அமெரிக்க மாநிலமான மினசோட்டாவில் வாழும் தமிழர்களுக்கு, தனித்துவ முறையில் கலாச்சாரப் பாலமாகச் செயல்படும் நோக்கத்துடன் தொடங்கிய சஞ்சிகை இன்று அகிலமெங்கும் பரவி பல்லாயிரக்கணக்கான வாசகர்களைக் கொண்டுள்ளது. இந்தப் பயணத்தில் பல தமிழ் எழுத்தாளர்களை அறிமுகம் செய்த பெருமையும் பனிப்பூக்களுக்கு உண்டு.
மகிழ்ச்சிகரமான இத்தருணத்தைப் படைப்பாளிகளுடன் சேர்ந்து கொண்டாட விழைந்து, 2020 ஆம் ஆண்டுக்கான பனிப்பூக்கள் சிறுகதைப் போட்டியை அறிவிக்கிறோம். உங்கள் கற்பனை சிறகை விரித்து, சிறுகதை வடித்து போட்டியில் பங்கேற்க அழைக்கிறோம்.
போட்டிக்கான விதிமுறைகள்
சிறுகதைகள் தமிழில் மட்டுமே இருக்கவேண்டும். கதைகள் MS Word அல்லது எளிதில் திருத்தம் செய்யக் கூடிய செயலியில், யூனிகோட் எழுத்துருவில் வடிக்கப்பட்டதாய் இருத்தல் வேண்டும். கையெழுத்துப் பிரதிகள், நிழற்பட பிரதிகள், PDF வடிவிலான ஆவணங்கள் கண்டிப்பாகப் போட்டியில் ஏற்கப்படமாட்டாது. சிறுகதைகளை கீழ்க்கண்ட விலாசத்திற்கு மின்னஞ்சல் இணைப்பாக அனுப்பவேண்டும்.
Last Updated on Thursday, 13 February 2020 12:42
Read more...
Thursday, 06 February 2020 01:05
- நவஜோதி ஜோகரட்னம், லண்டன் -
நிகழ்வுகள்

தொழில்நுட்பம் பெருகி வரும் இன்றைய காலகட்டத்தில் புலம்பெயர் நாடுகளில் மட்டுமன்றி நாம் பிறந்து வளர்ந்த நாடுகளிலும் அசாதாரண செயல்கள் இடம்பெறுவது கவலை தருகின்ற விடயமாகும். தமது சூழலுக்கேற்ற நடத்தை நியமங்களினின்றும் தவறி ஒருவர் நடந்துகொள்வாரானால் அவரது நடத்தை அசாதாரணமானது என்று நினைக்கத் தோன்றுகின்றது. புலம்பெயர்ந்து வசதிபடைத்த, கல்வி வளங்கள் சூழ்ந்த நாடுகளில் வாழ்ந்துகொண்டிருக்கும் இளம் சமுதாயத்தினரிடமும், தமது வாழ்க்கையை வெற்றிகரமாக எடுத்துச் செல்லமுடியாது மனம் சோர்வதை அவதானிக்க முடிகின்றது. மனம் பதட்டமடைந்து மற்றவர்களுடன் தமது உள்ளார்ந்த உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ளத் தயங்கித் தங்களைத் தாங்களே மாய்த்துக்கொள்ளும் சம்பவங்களும் இடம்பெறுகின்றன. எமது சமூகத்திடையே இடம்பெறும் இவ்வகையான கவலையான செயல்களை ஆராய்ந்து ஒரு விழிப்புணர்ச்சியை எம்மக்களிடையே ஏற்படுத்தும் வகையில் லண்டனில் வாழும் கொழும்பு ராமநாதன் இந்து மகளிர் கல்லூரியின் பழைய மாணவிகளால் மன அழுத்தம் பற்றிய கருத்தரங்கு முன்னெடுக்கப்பட்டது. மன்றத்தின் தலைவி சிவா றூபி, செயலாளர் துர்கா சிவான்தன், பொருளாளர் அனன்னியா ஐங்கரன் ஆகியோரின் முயற்சியில் லண்டன் ஹரோ ஐயப்பன் கோயில் மண்டபத்தில் இந்நிகழ்வு வெற்றிகரமாக இடம்பெற்றது.
Last Updated on Thursday, 06 February 2020 10:43
Read more...
Tuesday, 28 January 2020 10:48
- தகவல்: மாலன் -
நிகழ்வுகள்
Last Updated on Friday, 14 February 2020 13:46
Read more...
Wednesday, 22 January 2020 12:19
- ராஜி பட்டர்சன் -
நிகழ்வுகள்
முத்துக்குமார். 1982-ம் ஆண்டு நவம்பர் 19 அன்று தூத்துக்குடியில் பிறந்த இவன் தன் இனத்தை உயிராய் நேசித்த தன்மான தமிழன். தமிழகத்தில் யாரும் இந்த தியாகியை மறந்திருக்க முடியாது. தமிழ் ஈழத்தில் நடந்த கொடூர யுத்தத்தில் குழந்தைகளும் பெண்களும் உட்பட பல்லாயிரக்கணக்கான அப்பாவிகள் ஈவு இரக்கமின்றி அநியாயமாக கொல்லப்பட்டதை எதிர்த்து எந்த அரசியல் வாதியும் குரல் கொடுக்க முன் வராத நிலையில் இந்த இளம் எழுத்தான் ஜனவரி மாதம் 29-ம் திகதி 2009 அன்று தன்மீது பெட்ரோலை ஊற்றி தன்னையே ஆகுதியாக்கி எல்லோர் கவனத்தையும் ஈர்த்தான். தான் எதற்காக தீக்குளிக்க முடிவு செய்தான் என்பதை கடிதம் ஒன்றில் பதிவு செய்து விட்டு தன் உடலை வைத்து போராடி இளைஞர்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தி, தனது உடலை ஆட்சியாளர்களோ காவல்துறையோ கைப்பற்றி அடக்கம் செய்ய விடாமல் தனது உடலை ஒரு துரும்புச் சீட்டாக வைத்துக் கொண்டு தமிழ்நாடு முழுவதும் கொண்டு திரிந்து மாணவர்கள் இளையோர்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தி ஈழத்தில் போர் நிறுத்தம் ஏற்படும் வரை போராடுமாறு கூறி, அப்போராட்டத்தை தொடருங்கள் என்று வேண்டுகோள் விடுத்திருந்தான் அந்த மாவீரன்.
ராஜீவ் காந்தியின் கொலையை காரணமாக காட்டி இந்தியாவே பழிவாங்கும் நோக்கில் ஈழத்தில் அப்பாவி மக்களை கொன்று குவிக்கிறது என்று தனது கடிதத்தில் சுட்டிக் காட்டியிருந்தான் இந்த உணர்வாளன். அன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சட்ட கல்லூரி மாணவர்களோடு அனைத்து மாணவர்களும் இணைந்து கொண்டு ஈழத்தமிழர்களுக்கு நீதி கேட்டு, அகிம்சை வழியில் போராட வேண்டும் என்ற வேண்டுகோளுடன் தீயில் கருகினான். தமிழ் நாட்டில் வாழும் பிற இனத்தவரின் ஆதரவையும் சர்வதேச சமுகத்தின் கவனத்தையும் இறைஞ்சி, பதினான்கு கோரிக்கைகளை முன்வைத்து தீயில் வெந்து தீய்ந்தான். அம்மாவீரனின் வேண்டுகோளை நிறைவேற்ற எடுத்த முயற்சிகள் தோல்வியுற்ற அதேவேளை, கொந்தளித்த மாணவர்களை ஒடுக்கும் முயற்சியை அன்றைய தமிழக அரசு வெற்றிகரமாக செய்ததை மறந்து விட்டிருக்க முடியாது. கொஞ்சம் கூட மனச்சாட்சியின்றி எல்லாமே மறைக்கப்பட்டது , மறுக்கப் பட்டது.
Last Updated on Wednesday, 22 January 2020 12:22
Read more...
Sunday, 19 January 2020 11:34
- தமிழகத்திலிருந்து சோழ. நாகராஜன் -
நிகழ்வுகள்

'ஈழத்தில் வாழ்ந்த உலகப் புகழ்பெற்ற சிறந்த ஆளுமைகள் பலர் குறித்த தகவல்களை இளங்கோவன் திரட்டித் தந்திருக்கிறார். 'ஈழத்து மண் மறவா மனிதர்கள்" நூலை வாசிக்கும்போது வியப்பாகவிருந்தது. சீனப் பெருந்தலைவர் மாஓவினால் பாராட்டப்பட்ட தோழர் சண்முகதாசன், மக்கள் இலக்கியக் கர்த்தா கே. டானியல், புதுநெறி காட்டிய பேராசான் கைலாசபதி, தமிழறிஞர் சிவத்தம்பி, அன்று தென்தமிழகத்தைக் கவர்ந்திருந்த இலங்கை வானொலியில் தன்குரல்வளத்தால் எம்மைச் சொக்கவைத்த பல்கலைவேந்தர் சில்லையூர் செல்வராசன், சீனாவில் பல ஆண்டுகள் தமிழ்ப்பணியாற்றிய வீ. சின்னத்தம்பி, ஆங்கில இலக்கியத்துறையில் உலகப்புகழ்பெற்ற அழகுசுப்பிரமணியம் மற்றும் பல சிறந்த ஆளுமைகளைப்பற்றி, அவர்களுடன் பழகிய அனுபவங்களைச் சிறப்பாக நூலில் தந்துள்ளார் வி. ரி. இளங்கோவன். புலம்பெயர்ந்த ஈழத்து இளந்தலைமுறையினர் மாத்திரமல்ல நாமும் இந்நூலை அவசியம் படிக்கவேண்டும். சிறந்த ஆவணமாகவுள்ள இந்நூலை அளித்த இளங்கோவன் எமது பாராட்டுக்குரியவர். நூலை அச்சிட்டு வெளியிட்ட மதுரை தழல் பதிப்பகம் இத்தகைய நல்ல நூல்களைத் தொடர்ந்து வெளிக்கொணர வேண்டும் " இவ்வாறு மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் கடந்த மாதம் 23 -ம் திகதி (23 - 12 - 2019) நடைபெற்ற 'நூல் அரங்கேற்றம்" நிகழ்வில் உரையாற்றிய கவிஞர் மூரா குறிப்பிட்டார்.
Last Updated on Monday, 20 January 2020 01:32
Read more...
Saturday, 18 January 2020 12:04
- தகவல்: எஸ்.குணேஸ்வரன் -
நிகழ்வுகள்
Last Updated on Saturday, 18 January 2020 12:15
Saturday, 18 January 2020 07:06
- தகவல்: குரு அரவிந்தன் -
நிகழ்வுகள்

கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் : சர்வதேச சிறுகதைத் தொகுப்பு நூல் வெளியீடு – 11- 04- 2020
வணக்கம். கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் முத்தமிழ் விழாவும், நூல் வெளியீடும் வருகின்ற ஏப்ரல் மாதம் 11 ஆம் திகதி (11-04-2020) சனிக்கிழமை மாலை கனடா ஐயப்பன் கோயில் கலாச்சார மண்டபத்தில் நடைபெறும் என்பதை அங்கத்தவர்களுக்கும், இலக்கிய ஆர்வலர்களுக்கும் அன்புடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Last Updated on Friday, 27 March 2020 17:24
Read more...
Monday, 06 January 2020 10:25
- Jayanthi Sankar -
நிகழ்வுகள்
Last Updated on Monday, 06 January 2020 10:32
Read more...
Friday, 27 December 2019 01:31
- தகவல்: ராஜேஸ் பாலா -
நிகழ்வுகள்
Last Updated on Friday, 27 December 2019 01:39
Read more...
Friday, 20 December 2019 11:21
- அகில் -
நிகழ்வுகள்

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
Last Updated on Tuesday, 24 December 2019 11:56
Friday, 20 December 2019 11:02
- இளங்கோவன் -
நிகழ்வுகள்

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
Last Updated on Friday, 20 December 2019 11:13
Friday, 20 December 2019 10:23
- அழகிய சங்கர் -
நிகழ்வுகள்
Last Updated on Friday, 20 December 2019 11:13
Friday, 20 December 2019 09:38
- பேராசிரியர் மௌனகுரு -
நிகழ்வுகள்
 அண்மைக்காலமாக முக நூலிலும் பத்திரிகைகளிலும் பரத அரங்கேற்றங்கள் பற்றிய செய்திகள் மிக அலங்காரமான புகைப்படங்களுடன் விளம்பரப்படுத்தப்படுகின்றன. அதிலும் கொழும்பில் நடைபெறும் பரத நடன அரங்கேற்றங்கள் முக்கிய சில பத்திரிகைகளிள் பெரிய அழகிய புகைப் படங்களுடன் வெளியாகின்றன. சில பத்திரிகைகளில் அவை முழுப்பக்கத்தையே நிரப்பிகொண்டு உறுத்துகின்றன. தரமில்லாத நடனங்களும் அதை நிகழ்த்துவோரும் ஊடக விளம்பரத்தால் உயர்ந்த நடனங்களாகவும் மிகச் சிறந்த நடன தாரகைகளாகவும் கட்டமைக்கப்படுகின்றனர். ஊசியும் செம்பொனும் ஒப்பவே நோக்கும் யோக நிலையான பற்றற்ற நிலையை இப்பத்திரிகைகள் அடைந்து விட்டனவோ என்று எண்ணத் தோன்றுகிறது.திறமையானவர்கள் இனம் காணப்படுவதில்லை. ஆடுவோர் எல்லாம் நடனக் கலைஞர் ஆக்கப்பட்டு விடுகிறார்கள். தடி எடுத்தோரெல்லாம் தண்டல் காரர் ஆகிவிடுவது போல. ஒரு பரத நடன விமர்சன மரபு எம்மிடமில்லை. இதனால் ஆடும் பரத நடனங்கள் யாவும் அற்புதம் என்றும் ஆடுவோர் அனைவரும் அற்புத நடன மணிகள் என்றும் கூறும் நிலைக்கு அனைவரும் வந்து விடுகின்றனர்
Last Updated on Friday, 20 December 2019 09:51
Read more...
Friday, 20 December 2019 09:12
- மணிமாலா - கனடா. -
நிகழ்வுகள்

கனடாவில் இருந்து வெளிவரும் தளிர் இதழின் ஆறாவது ஆண்டு நிறைவு விழா சென்ற ஞாயிற்றுக்கிழமை ரொறன்ரோவில் உள்ள குயின்ஸ் கலாச்சார மண்டபத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இளம் தலைமுறையினருக்காக இவர்கள் நடத்திய இசை, நடனப்போட்டியான ‘சலங்கையும் சங்கீதமும்’ என்ற நிகழ்வின் இறுதிச் சுற்றும் நேற்றையதினம் வெகு சிறப்பாக அந்த மண்டபத்தில் நடை பெற்றது இந்த நிகழ்வில் பார்வையாளர்கள், பெற்றோர்கள் என மண்டபம் நிறைந்த கலைஞர்கள் மற்றும் இசைக்கலைஞர்கள், நடனக்கலைஞர்கள் என ஒரு விழாக்கோலம் பூண்ட மாபெரும் நிகழ்வு அரங்கேறியது.
Last Updated on Friday, 20 December 2019 09:26
Read more...
Saturday, 14 December 2019 09:33
- தகவல்: பா.அ.ஜயகரன் -
நிகழ்வுகள்
Saturday, 14 December 2019 09:17
- நவஜோதி ஜோகரட்னம், லண்டன் -
நிகழ்வுகள்
‘இறைவனின் புண்ணிய ஸ்தலங்களுக்குத் தீர்த்த யாத்திரை செய்து இறைவனை வழிபட்டு வருவது நீண்ட நெடுங்காலமாக அனுஷ்டிக்கப்பட்டு வரும் யாத்திரையாகும். அதிலும் கைலாச யாத்திரை என்பது கைலயங்கிரியில் வாழும் சிவனைத் தரிசிக்கும் புண்ணிய யாத்திரையாகும். கடினமும். ஊக்கமும்.இறைவனின் பெயரருளும் சித்தித்தால் மட்டுமே அடையக்கூடிய மகத்தான யாத்திரையாகும். சில புண்ணிய ஸ்தலங்கள் தரிசிப்பதால் மட்டுமல்ல நினைத்துப்பார்த்தாலுமேகூட அருள் தருகின்ற புண்ணிய ஸ்தலங்களாகும். அந்த வகையில் லண்டன் டாக்டர் அம்பி அவர்கள் ஆகம முறைகளை அனுசரிக்கும் இந்துப் பெருமகனாய் கைலாசத்தை இரண்டு முறைகள் தரிசித்து வந்திருக்கிறார். அதுமட்டுமல்ல பயண அனுபவத்தை ஒழுங்காகக் குறித்து அழகிய தமிழில். தான் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெறவேண்டும் என்ற நோக்கிலே ‘கண்டேன் கைலாசம்;’ என்ற நூலினை எழுதி வெளியிட்டிருப்பது நாம் பெருமையுடன் பாராட்டவேண்டிய அம்சமாகும்’ என்று பிரம்மஸ்ரீ கைலை நாகநாத சிவாச்சாரியார் ‘கண்டேன் கைலாசம்’ என்ற நூல் வெளியீட்டு விழாவின்போது தனது ஆசியுரையில் தெரிவித்தார்.
Last Updated on Saturday, 14 December 2019 09:30
Read more...
Saturday, 14 December 2019 08:59
- Jayanthi Sankar -
நிகழ்வுகள்
Last Updated on Saturday, 14 December 2019 09:36
Read more...
Saturday, 07 December 2019 10:02
- குவிகம் இல்லம் -
நிகழ்வுகள்

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
Last Updated on Tuesday, 10 December 2019 10:46
Friday, 29 November 2019 11:04
- குவிகம் இல்லம் -
நிகழ்வுகள்

KUVIKAM ILLAM <
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
>
Last Updated on Tuesday, 10 December 2019 10:45
Friday, 29 November 2019 01:41
- சமாதானித்திற்கான கனேடியர்கள் ஸ்ரீ லங்கா சார்பு -
நிகழ்வுகள்

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
Last Updated on Friday, 29 November 2019 01:51
Wednesday, 27 November 2019 01:38
- மாலன் , முகநூல் -
நிகழ்வுகள்
சாகித்திய அகாதெமி (சென்னை) நிறுவனம் 'புவி எங்கும் தமிழ்க் கவிதை' கவிதைத்தொகுப்பினை வெளியிட்டுள்ளது. உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் கவிதைகளைத் தொகுத்துள்ளார் எழுத்தாளர் மாலன்.

Last Updated on Wednesday, 27 November 2019 11:55
Read more...
Saturday, 16 November 2019 23:23
- தகவல்: கருணாகரன் -
நிகழ்வுகள்
Last Updated on Saturday, 16 November 2019 23:28
Saturday, 16 November 2019 00:04
- இலக்கிய அமுதம் -
நிகழ்வுகள்
Last Updated on Saturday, 16 November 2019 00:11
Friday, 15 November 2019 02:35
- அகில் -
நிகழ்வுகள்
Last Updated on Friday, 15 November 2019 02:43
Read more...
Monday, 28 October 2019 08:55
- குவியம் -
நிகழ்வுகள்

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
Last Updated on Monday, 28 October 2019 09:01
Saturday, 26 October 2019 08:55
- பா.அ.ஜயகரன் -
நிகழ்வுகள்
Last Updated on Saturday, 26 October 2019 09:03
Sunday, 20 October 2019 21:46
- நவஜோதி ஜோகரட்னம், இலண்டன். -
நிகழ்வுகள்

ஒரு நர்த்தகி என்பவள் தனது உடலைப் பயிற்சிகளுக்கு உட்படுத்தி குறிப்பிட்ட கலையில் அழகியல் அம்சம் நிறைந்த உடலாக மாற்றியமைக்கின்றாள். அவளது உடல் அதிகளவு அழகிய அம்சமுடைய சக்தியின் இருப்பிடமாக விளங்குகிறது. அந்த வகையில் பரணீதரி தில்லைநாதன் தன்னைப் பல்வேறு பயிற்சிகளுக்கு உட்படுத்தி விடாமுயற்சியுடன் ஒரு தாயாக நின்று அரங்கேற்றம் செய்வது என்பது மிகவும் பாராட்டப்படவேண்டிய ஒரு விடயமாகும்.
Last Updated on Sunday, 20 October 2019 22:05
Read more...
Sunday, 20 October 2019 07:51
- அகில் -
நிகழ்வுகள்

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
Friday, 18 October 2019 07:25
administrator
நிகழ்வுகள்

இலங்கையில் நீடித்த போர் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட தமிழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு, 1988 ஆம் ஆண்டு முதல் அவுஸ்திரேலியாவிலிருந்து உதவிவரும் தன்னார்வத் தொண்டு நிறுவனம் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் முப்பத்தியோராவது ஆண்டு நிறைவு நிகழ்வும், வருடாந்த பொதுக்கூட்டமும் இம்மாதம் 19 ஆம் திகதி ( 19-10-2019) சனிக்கிழமை மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணிவரையில் மெல்பனில் வேர்மண் தெற்கு சனசமூக நிலையத்தில் ( Vermont South Community House - Karobran Drive, Vermont South VIC 3133) நிதியத்தின் தலைவர் திரு. லெ. முருகபூபதியின் தலைமையில் நடைபெறும்.
Last Updated on Friday, 18 October 2019 07:34
Read more...
Saturday, 12 October 2019 21:06
- வஸந்தா -
நிகழ்வுகள்

செப்டெம்பர் பதினொராம் திகதி மாலை ஆறு மணி முதல் எட்டு மணி வரையிலான காலப்பொழுதில் ‘குவியம்’ அறிமுக விழாவை இலண்டன் ஈலிங் அம்மன் கோவிலின் அரங்கில் நடாத்தி வைத்தனர். புரட்சிக் கவிஞன் பாரதியார் பிறந்ததினமாகிய அன்று ‘குவியம்’ என்றொரு இலக்கியம் சார்ந்த அமைப்பை எழுத்தாளரும் கவிஞருமான நிலா துவங்கியுள்ளார்.
அந்த விழாவை குவைத்திலிருந்து வந்திருந்த எழுத்தாளரும் கவிஞருமாகிய திரு வித்தியாசாகர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பித்து வைத்தமை மகுடமாக அமைந்தது. திருமதி யமுனா தருமேந்திரனின் தொகுத்து வழங்கலில் அமைந்த விழா மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமானது.
Last Updated on Saturday, 12 October 2019 21:24
Read more...
Tuesday, 08 October 2019 22:55
- நவஜோதி ஜோகரட்னம், லண்டன் -
நிகழ்வுகள்

‘அரங்கேற்றம் என்பது ஒரு இளம் கலைஞரின் வாழ்க்கையில் ஒரு முக்கிய கட்டத்தை எட்டிவிட்டதைக் குறிக்கும். பத்து வருடங்களுக்கு மேலாக புல்லாங்குழல் இசையை, பிரபல வேணுகானமணி ஸ்ரீ பிச்சையப்பா ஞானவரதனைக் குருவாகக் கொண்டு பயின்ற பிரீத்தியின் அரங்கேற்றமோ ஒரு புல்லாங்குழல் கச்சேரியைப் பார்த்தது போன்ற பிரமிப்பை ஏற்படுத்தியது. அபாரமான தேர்ச்சி பெற்ற கலைஞர் போன்று பிரித்தி பவித்ரா பிரபல மிருதங்க வித்துவான் ஸ்ரீ பிரதாப் ராமச்சந்திரா, பிரபல வயலின் வித்துவான் ஸ்ரீ சிதம்பரநாதன் ஜலதரன் போன்ற கலைஞர்களுடன் தனது புல்லாங்குழல் இசையின் தாள லயம் குறித்த உணர்வை முக பாவங்கேளோடு வெளிப்படுத்திய விதம் பார்வையாளர்களைக் கட்டிப்போட்டது. பிரீத்தியின் அண்ணனான டாக்டர் மேவின் மகேந்திரன் தன்னடக்கத்தோடு மோர்ஷிங் இசையை அழகாக வாசித்து தங்கைக்கு புத்துணர்வை ஏற்படுத்திய விதம் மகிழ்வு தரும் ஒன்றாகும்’ என்று செப்டம்பர் 21ஆம் திகதி லண்டன் ‘பெக்’ தியேட்டரில் இடம்பெற்ற அரங்கேற்றத்தில், சென்னையிலிருந்து வருகை தந்திருந்த ஸ்ரீ என். ராமகிருஷ்ணன் தனது பிரதம விருந்தினர் உரையில் தெரிவித்திருந்தார்.
Last Updated on Tuesday, 08 October 2019 23:01
Read more...
Tuesday, 08 October 2019 06:13
- யாழ் இந்துக் கல்லூரி (கனடா) -
நிகழ்வுகள்
Saturday, 05 October 2019 23:55
- தகவல்: ASK -
நிகழ்வுகள்
Saturday, 05 October 2019 23:30
-இலக்கிய அமுதம் -
நிகழ்வுகள்
Last Updated on Saturday, 05 October 2019 23:49
Wednesday, 02 October 2019 21:28
- தகவல்: செல்வன் -
நிகழ்வுகள்

வணக்கம், புதியவன் ராசையாவின் ஒற்றைப்பனைமரம் என்ற திரைப்படத்தை மீண்டும் Saturday October 12 ம் திகதி பிற்பகல் 3:00 மணிக்கு திரையிட நண்பர்களில் சிலர் யோசித்துள்ளோம். இத் திரையிடலுக்கான உங்கள் ஆதரவை ம் வழங்குமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
நன்றி!
அன்புடன்,
செல்வன்
Last Updated on Wednesday, 02 October 2019 22:07
Read more...
Tuesday, 01 October 2019 01:57
- தகவல்: தேவகாந்தன் -
நிகழ்வுகள்
Last Updated on Tuesday, 01 October 2019 02:18
Read more...
Saturday, 28 September 2019 22:21
- தகவல்: முருகபூபதி -
நிகழ்வுகள்
Saturday, 28 September 2019 22:15
- தகவல்: முருகபூபதி -
நிகழ்வுகள்
Last Updated on Saturday, 28 September 2019 22:23
Friday, 27 September 2019 19:57
- முனைவர் வே. மணிகண்டன் -
நிகழ்வுகள்

தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரியின் தமிழாய்வுத்துறையும் பன்னாட்டு இணைய ஆய்விதழான 'பதிவுக'ளும் இணைந்து நடத்திய 'தமிழ் இலக்கியஙளில் பண்பாட்டுப்பதிவுகள்' என்னும் தலைப்பில் அமைந்த தேசியக்கருத்தரங்கமானது 25.09.2019 அன்று சிறப்புடன் நடைப்பெற்றது. இத்தேசியக்கருத்தரங்கின் வரவேற்புரை மற்றும் சிறப்பு விருந்தினர் அறிமுக உரையினை தமிழாய்வுத்துறைத்தலைவர் முனைவர் மு. மங்கையர்கரசி அவர்கள் வழங்கினார். கல்லூரியின் ஆய்வுப்புல முதன்மையர் முனைவர் C.R. உத்ரா அவர்கள் தொடக்கவுரை வழங்கினார். இவ்வுரையில் பண்பாட்டின் சிறப்புகள், நமது வாழ்வியலில் பண்பாட்டுக்கூறுகள் பெறும் உயர்ந்த இடம், இன்றைய சூழலில் பண்பாட்டு ஆய்வுகளின் தேவைகள் ஆகியவை குறித்து விவரித்தார். E.S.S.K கல்விக்குழுமத்தின் பதிவாளர் முனைவர் E.செளந்தரராஜன் அவர்கள் சிறப்புரையாற்றினார். இவ்வுரையில் தொன்மைக்கும் நவீனத்திற்கும் பாலமாய் நிற்கும் தமிழ் பண்பாட்டின் தனிப்பெரும் தனித்தன்மைகள், தமிழ் ஆய்வின் போக்குகள், பண்பாட்டு நெருக்கடிகள் மற்றும் பண்பாட்டு ஆய்வுகளின் தேவைகள் ஆகியவை குறித்து தெளிவாக எடுத்துரைத்தார். பதிவுகள் இதழின் ஆசிரியரும், படைப்பாளருமான வ.ந. கிரிதரன் அவர்களின் வாழ்த்துச்செய்தி மற்றும் பதிவுகள் இதழ் குறித்த பொது அறிமுகச்செய்திகள் வாசிக்கப்பட்டன.
Last Updated on Friday, 27 September 2019 20:14
Read more...
Monday, 23 September 2019 23:01
- தகவல்: முருகபூபதி -
நிகழ்வுகள்
Last Updated on Monday, 23 September 2019 23:07
Read more...
Wednesday, 18 September 2019 07:57
- தகவல்: அகில் -
நிகழ்வுகள்
Last Updated on Wednesday, 18 September 2019 08:06
Tuesday, 17 September 2019 20:13
-- தகவல்: கருணாகரன் -
நிகழ்வுகள்
Last Updated on Tuesday, 17 September 2019 20:43
Read more...
Monday, 16 September 2019 08:38
- தகவல்: முனைவர் வே.மணிகண்டன் -
நிகழ்வுகள்
தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி (தன்னாட்சி) தமிழாய்வுத்துறையும், பதிவுகள் பன்னாட்டு இணைய ஆய்விதழும் இணைந்து நடாத்தும் தேசியக் கருத்தரங்கம்: தமிழ் இலக்கியங்களில் பண்பாட்டுப் பதிவுகள் (நாள்: 25.09.2019) கீழுள்ள படங்களை அழுத்தினால், அவை பெரிதாக, தெளிவாகத் தெரியும்.

Last Updated on Tuesday, 17 September 2019 05:54
Read more...
Friday, 13 September 2019 07:01
-இலக்கிய அமுதம் -
நிகழ்வுகள்
Last Updated on Friday, 13 September 2019 07:10
Read more...
Wednesday, 11 September 2019 07:39
- முருகபூபதி -
நிகழ்வுகள்
அவுஸ்திரேலியா - இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் உதவிபெற்ற நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி மாணவர்கள்

அவுஸ்திரேலியாவிலிருந்து கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிவரும் தன்னார்வத் தொண்டு நிறுவனமான இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் உதவியைப்பெறும் நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி மாணவர்களுக்கான இவ்வாண்டின் இறுதிக்கட்ட நிதிக்கொடுப்பனவுகள் அண்மையில் வழங்கப்பட்டது. கல்லூரி அதிபர் திரு. புவனேஸ்வரராஜா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் நடப்பாண்டு தலைவர் திரு. லெ. முருகபூபதியும் கலந்துகொண்டார்.
Last Updated on Wednesday, 11 September 2019 08:29
Read more...
Wednesday, 11 September 2019 00:02
- தகவல்: கருணாகரன் சிவராசா -
நிகழ்வுகள்

பிராந்திய கால்நடை அபிவிருத்திப் பயிற்சி நிலைய மண்டபம் (மத்திய வங்கியின் பிராந்திய நிலையத்துக்கு அருகில்), அறிவியல் நகர், கிளிநொச்சி 2019 செப்ரெம்பர் 21, 22 சனி, ஞாயிறு காலை 9.00 மணி தொடக்கம் மாலை 6.30 மணி வரை
முன்வைப்புகளும் உரையாடலும்
1. வன்னி – நிலம், நீர், சமூகம் 2. வறுமையின் நிறம் பச்சை – பிரதிகள் காட்டும் வழி? 3. வன்னிக் காடு – வாழ்வும் அரசியலும் (பிரதிகளில் உள்ளடக்கப்பட்டவையும் உள்ளடக்கப்படாதவையும்) 5. முஸ்லிம் சமூகமும் சமகால நெருக்கடிகளும் 6. அந்தரிப்புக்குள்ளானோரும் சமூகத்தின் பொறுப்பும் (காணாமலாக்கப்பட்டோர் மற்றும் போரில் இழப்புகளையும் நெருக்கடிகளையும் சந்தித்தோர் பிரச்சினை) 7. இலக்கிய அரசியல்: உண்மையும் விடுபடலும் 8. பிரதிகளில் இயற்கை, சூழல், உயிரினங்கள் (வரலாற்றுச் சித்திரிப்பும் புதிய உணர்தல்களின் அவசியமும்) 9.போருக்குப் பிந்திய ஈழ இலக்கியம்: கச்சாப்பொருள், சந்தை, பதிப்பு முயற்சிகள் 10. போரின் பின்னான பத்திரிகைகள்: அறிக்கையிடலின் உளவியல் 11. ஈழ அகதிகள்: தமிழகத்திலும் தமிழகத்திலிருந்து ஈழத்திலும் 12. போருக்குப் பின்னரான சிறுகதைப் பிரதிகள் மீதான வாசிப்பும் புரிதலும் 13. தெய்வம் – சடங்கு – மரபு: வன்னி நிலமும் கையளிப்புகளும் 14. வரலாற்றின் பயணவழியில் மக்கள் பண்பாடும் போர்ச்சுவடுகளும் 15. மரபும் நவீனமும்: மன்னார்ப்பண்பாட்டு இடையசைவுகள் 16. திரையும் நிஜமும்
Last Updated on Wednesday, 11 September 2019 06:59
Read more...
Thursday, 29 August 2019 22:41
- குவிகம் இலக்கியவாசல் -
நிகழ்வுகள்

குவிகம் இலக்கிய வாசல் <
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
>
Last Updated on Thursday, 29 August 2019 22:46
Tuesday, 27 August 2019 00:35
- சு.குணேஸ்வரன் -
நிகழ்வுகள்

இழப்பும் இருப்பும் (LOSS AND EXISTENCE) காண்பியக்காட்சி யாழ்.பல்கலைக்கழக கலைவட்டத்தின் ஏற்பாட்டில் இடம்பெறுகிறது. கடந்துபோன காலங்களையும் கடந்து கொண்டிருக்கும் காலங்களையும் கண்முன்கொண்டுவரும் வகையில் நிலானியின் ஓவியங்கள் அமைந்துள்ளன. வேலிகளும் எல்லைகளும் வீடுகளும் முகப்புக்களும் வாழ்விடங்களும் Unveiled Barrier, Address of Residence ஆகிய தலைப்புகளில் கோடுகளால் நிறைந்து அவரவர் வாழ்வனுபவத்திற்கு ஏற்ப அர்த்தத்தைத் தருவனவாக அமைந்துள்ளன. அவரின் Yall Jewellery எனப் பெயரிடப்பட்ட காட்சிகள் வித்தியாசமான வடிவத்தைக் கொண்டு வந்துள்ளன. ஈழத்து ஓவியக் கலைக்கு நிலானியின் தொடர் பங்களிப்பு வளம்சேர்க்கவேண்டும். வாழ்த்துக்கள்.
Last Updated on Tuesday, 27 August 2019 01:15
Read more...
Sunday, 25 August 2019 03:01
-தகவல்: முருகபூபதி -
நிகழ்வுகள்
Thursday, 15 August 2019 06:59
administrator
நிகழ்வுகள்

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
Last Updated on Thursday, 15 August 2019 07:04
Thursday, 15 August 2019 06:29
- அகில் -
நிகழ்வுகள்
Last Updated on Thursday, 15 August 2019 06:40
Read more...
Sunday, 11 August 2019 00:40
- தகவல்: எம்.பெளசர் -
நிகழ்வுகள்
Last Updated on Sunday, 11 August 2019 00:43
Read more...
Sunday, 11 August 2019 00:32
- குவிகம் -
நிகழ்வுகள்

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
Last Updated on Sunday, 11 August 2019 00:36
Wednesday, 07 August 2019 00:10
- சுந்தர் குப்புசாமி, தலைவர், வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை -
நிகழ்வுகள்

அன்புடையீர் வணக்கம்.
வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் 32ஆவது தமிழ் விழா, 10ஆவது உலகத்தமிழாராய்ச்சி மாநாடு மற்றும் சிகாகோ தமிழ்ச்சங்கத்தின் பொன் விழா நிகழ்வுகள் முப்பெரும் விழாவாக சிகாகோ நகரில் ஜூலை 4 முதல் 7 வரை மிகச்சிறப்பாகக் கொண்டாடப்பட்டன. இவ்விழாவிற்கு உலகெங்கிலுமிருந்து வந்து கலந்து சிறப்பித்த 6000- த்திற்கும் மேலான தமிழர்களுக்கு விழாக்குழுவினர் சார்பில் மிக்க நன்றி உரித்தாகுக. வட அமெரிக்கத் தமிழர் வரலாற்றில் இந்த நிகழ்வு, ஒரு மைல் கல் என்றால் மிகையாகாது. உலகத்தமிழர்கள் தமிழின்பால் கொண்டுள்ள அன்பையும், பிணைப்பையும் இந்த முப்பெரும் விழா உலகிற்குப் பறைசாற்றி உள்ளது.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட மொரிசியஸ் நாட்டுக் குடியரசுத் தலைவர் மாண்புமிகு பரமசிவம் பிள்ளை வையாபுரி, ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை அமைப்பின் முன்னாள் தலைவர் திருமதி நவநீதம் பிள்ளை, தமிழ் நாட்டு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாண்புமிகு மா.பா.பாண்டிய ராஜன், அமெரிக்கக் காங்கிரஸ் உறுப்பினர் திரு. ராஜா கிருஷ்ணமூர்த்தி, கனடிய ப் பாராளுமன்ற உறுப்பினர் திரு. கேரி ஆனந்த சங்கரி, யாழ்ப்பாண மாநகரத்தந்தை திரு. இமானுவேல் ஆனல்ட், இந்தியப் பாராளுமன்ற உறுப்பினர் திரு. சு. வெங்கடேசன், தமிழாராய்ச்சி மாநாட்டிற்கு வந்திருந்த தமிழ் அறிஞர்கள், தமிழக அரசு மற்றும் பிற நாடுகளிலிருந்து வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள், கலைஞர்கள் அனைவருக்கும் நன்றிகள் பல உரித்தாகுக. பேரவை விழா மற்றும் 10வது உலகத்தமிழாராய்ச்சி மாநாடு நடத்த பொருளுதவி செய்த புரவலர்கள், பேராளர்கள் மற்றும் நன்கொடையாளர்களுக்கு மிக்க நன்றி. கொடையாளர்கள் உதவி இல்லை என்றால் இந்த முப்பெரும் விழாவை நடத்துவது சாத்தியமல்ல. அதற்காக அரும்பாடு பட்ட விழா ஒருங்கிணைப்பாளர் திரு. வீரா வேணுகோபால் மற்றும் திரு. சிவா மூப்பனார் ஆகியோருக்கும் நன்றி. முப்பெரும் விழாவில் 5.5 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலையொன்றை நிறுவ முழு உதவி செய்த தொழிலதிபர் வி. ஜி. சந்தோசம் அவர்களுக்கு விழாக்குழு தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
Last Updated on Wednesday, 07 August 2019 00:19
Read more...
Thursday, 01 August 2019 00:20
- முருகபூபதி -
நிகழ்வுகள்
 இந்திய சுதந்திரத்திற்கு முன்னரும் பின்னரும் தமிழகத்தின் நாகர்கோயிலில் விருட்சமாக வளர்ந்து நின்ற ஒரு புளியமரத்தைச்சுற்றி நிகழும் கதையை இற்றைக்கு ஐம்பத்தி மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் சொன்னவர் சுந்தரராமசாமி. இக்கதை விஜயபாஸ்கரன் சிறிது காலம் நடத்திய சரஸ்வதி இதழில் தொடராக சில அத்தியாயங்கள் வௌிவந்தது. சிற்றிதழ்களுக்கு வழக்கமாக நேர்ந்துவிடும் இழப்பிலிருந்து அந்த சரஸ்வதியும் தப்பவில்லை. அதனால், சுந்தரராமசாமி அதனை முழுநாவலாகவே எழுதி முடித்து 1966 இல் வெளியிட்டார். அதன் முதல் பிரதி வெளியானபோது கல்கி இதழில் சிறந்த நாவல்களின் வரிசையில் ஒரு புளியமரத்தின் கதை பற்றிய சிறிய அறிமுகத்தை படித்திருக்கின்றேன். அப்பொழுது நான் பாடசாலை மாணவன். உடனே அதனை கொழும்பில் வாங்கி வாசித்தேன். அதில் வரும் பாத்திரங்கள், சம்பவங்கள், காட்சிகள் மனதில் மங்கிப்போன சித்திரமாகவே வாழ்ந்தன. அதில் வரும் ஆசாரிப்பள்ளம் சாலையை ஏனோ மறக்கமுடியவில்லை.
அதன்பின்னர் சுந்தரராமசாமியின் கதைகள், நாவல்கள், கட்டுரைகளையும் நேர்காணல்களையும் படித்திருந்தாலும், அவரது முதல் நாவல் ஒரு புளியமரத்தின் கதை கனவாகவே மனதில் நீண்டிருந்தது. மெல்பன் வாசகர் வட்டத்தை கடந்த இரண்டு வருடகாலமாக ஒருங்கிணைத்துவரும் தீவிர இலக்கிய வாசகி திருமதி சாந்தி சிவகுமார், தொலைபேசியில் அழைத்து, “இந்த மாதம் சு.ரா.வின் புளியமரத்தின் கதை பற்றி பேசப்போகின்றோம் “ எனச்சொன்னதும் வியப்படைந்தேன்.
அரைநூற்றாண்டுக்கு முன்னர் எழுதப்பட்ட நாவல், பல பதிப்புகளையும் கண்டது. அத்துடன் இந்திய மொழிகளிலும் ஒரு சில பிறநாட்டு மொழிகளிலும் பெயர்க்கப்பட்டதுடன், நோபல் பரிசுக்கும் பரிந்துரைக்கத்தக்க நாவல் என்று சிலாகித்தும் பேசப்பட்டது. மெல்பன் வாசகர் வட்டத்தின் இரண்டு ஆண்டு நிறைவைக்கொண்டாடுமுகமாக கடந்த ஞாயிறன்று வாசகர்களின் ஒன்றுகூடல் இடம்பெற்றது. இலக்கியப்பிரதிகளை அயராமல் தொடர்ந்து வாசித்து, தங்கள் அனுபவங்களை பகிர்ந்துவரும் தீவிர வாசகர்கள் குளிரையும் பொருட்படுத்தாமல் வருகை தந்திருந்தனர்.
மிலேனியம் வருடத்திற்கு முன்பின்னாக பிறக்கும் ஒருவர் வாசகராகும் பட்சத்தில், அது என்ன ஒரு புளியமரத்தின் கதை..? அந்தமரத்தில் என்ன இருக்கும்? அது எப்படி வளரும் ? அதன் பயன்பாடு என்ன ? தாவரவியல் பாடத்திற்கான எளிய விளக்கங்களுடன் அமைந்த நூலா..? எனவும் கேட்கவும் கூடும்!
Last Updated on Thursday, 01 August 2019 00:32
Read more...
Thursday, 01 August 2019 00:16
- குரு அரவிந்தன் -
நிகழ்வுகள்
- 24-06-2019 அன்று மகாஜனக்கல்லூரியில் எழுத்தாளர் குரு அரவிந்தன் நிகழ்த்திய மகாஜனக்கல்லூரி நிறுவியவர் நினைவுதின நினைவுப் பேருரையில் இருந்து ஒரு பகுதியை இங்கே தருகின்றேன் -
வணக்கம். எனது உரையை ஆரம்பிக்கு முன், கனடாவில் மகாஜனா பழைய மாணவர் சங்கத்தின் முக்கிய உறுப்பினர்களாக இருந்து எம்மை வழி நடத்தியவர்களும், மகாஜனன்களுக்கு மிகவும் ஆதரவாக இருந்து எம்மைவிட்டுப் பிரிந்தவர்களுமான முன்நாள் அதிபர் திரு. பொ. கனகசபாபதி அவர்களுக்கும், சமீபத்தில் எம்மைவிட்டுப் பிரிந்த ஆசிரியர் திரு. எம். கார்த்திகேசு அவர்களுக்கும், மற்றும் எம்மைவிட்டுப் பிரிந்த அனைவருக்கும் அகவணக்கம் தெரிவித்து எனது உரையை ஆரம்பிக்கின்றேன்.
‘கல்லூரித் தாபகர் கல்விக் கலைஞன் துரையப் பாபுகழ் துதிப்போம்’
இந்த வரிகள் எங்கள் வாழ்வோடு கலந்துவிட்ட, காலத்தால் அழிக்க முடியாத மகாஜனன்களின் இதயத்தில் பதிந்து விட்டதொன்றாகும். இன்று ஆயிரக் கணக்கான மாணவ, மாணவிகள் திக்கெல்லாம் மகாஜனாவின் புகழ்பரப்ப அன்று அடிக்கல் நாட்டியவர்தான் எங்கள் கல்விக் கலைஞன் பாவலர் துரையப்பாப்பிள்ளையாவார். இந்தப் பாடல் வரிகளைக் கல்லூரிக் கீதத்தில் எமக்காக விட்டுச் சென்றவர், எமக்குத் தமிழ் அறிவைத் தந்து தமிழ் உணர்வைப் புகட்டிய எமது ஆசான், அமரர் வித்துவான் நா. சிவபாதசுந்தரனராவார். கல்லூரியில் படித்த காலத்தில் மட்டுமல்ல, இன்றும் கனடாவில் பழைய மாணவர் சங்க நிர்வாகசபை கூட்டங்களிலும் சரி, ஏனைய நிகழ்ச்சிகளின் போதும் சரி நிகழ்ச்சி தொடங்கும் போது, கல்லூரிக் கீதத்தை நாங்கள் இசைப்போம். அனேகமான நாடுகளில் இருக்கும் பழைய மாணவர் சங்கங்கள் எமது கல்லூரிக் கீதத்தின் மூலம் கல்லூரி வாழ்க்கையின் நினைவுகளை எப்பொழுதும் மீட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். எமது நினைவுகள் எல்லாம் நாம் கல்விகற்ற கல்லூரியைச் சுற்றியே இருப்பதற்குக் காரணம் என்னவாக இருக்கும் என்று எண்ணிப்பார்ப்பதுண்டு. ‘பல்லாயிரக் கணக்கான மைல்களுக்கு அப்பால் இருக்கும் உங்கள் கல்லூரியை இங்கே இப்பொழுதும் நினைவில் வைத்திருக்கிறீர்களா?’ என்று இன்றைய தலைமுறையினர் எங்களைக் கேட்பார்கள். அவர்களுக்குப் புரியுமோ இல்லையோ, ‘எம்மை வளர்த்து ஆளாக்கிய அன்னையை எங்களால் மறக்க முடியுமா?’ என்ற பதில்தான் அவர்களுக்காக எம்மிடம் இருக்கும்.
சமூக மேன்மைக்கான கலை, இலக்கியங்களின் பெறுமதியை மகாஜனன்களுக்கு உணர்த்திய கல்லூரி ஸ்தாபகர் பாவலர் துரையப்பாபிள்ளை அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்ட எங்கள் கலை, இலக்கியப் பயணம் புலம் பெயர்ந்த மண்ணிலும் இன்று ஆரோக்கியமாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. புலம்பெயர்ந்த நாடுகளில் எங்கே கலை இலக்கிய விழாக்கள் நடந்தாலும் அங்கே கட்டாயம் குறைந்தது ஒரு மகாஜனனின் பங்களிப்பாவது இருப்பதை அவதானிக்கலாம். எங்கள் கல்லூரிக்கு அந்த நிகழ்வுகள் எப்பொழுதும் பெருமை சேர்ப்பதாக அமைந்திருக்கும்.
Last Updated on Thursday, 01 August 2019 00:19
Read more...
Thursday, 01 August 2019 00:11
- Jayanthi Sankar -
நிகழ்வுகள்
My dear good friends, Hope all is well with you and your families. I am very glad to introduce Baskar. Through SRK (No, ????not Shah Rukh Khan, Sathyarajkumar), just days ago, I just got to know Baskar who is president of the famous Tamil school in Washington DC area and he is tirelessly working for recognition of Tamil in US government establishments. Successfully included Tamil for foreign language credits in all the high schools of few counties in this area. Added Pongal to the list of official festival in the State of Virginia (First state to recognize Pongal). Officially added Tamil books to the county libraries here so the books will be available through the library system. Even people can search and get the receipt in Tamil from the kiosks in those libraries.
Importantly, let me make it very clear that I am taking this initiative voluntarily, not because I was asked/expected to. I am doing this in the common interest of our language. Just trying to support in the little possible way when I came to know of the huge cause that Baskar is taking forward.
So, what am I (Jayanthi) expecting from you all friends? Well, I hope you could all donate THAMIZH books to those libraries in the State of Virginia, USA.
What kind of THAMIZH books to donate? If you are only a reader, any title/s that are worthy of reading. Those that are in good condition. Your own titles if you are an author. You can include the titles of other authors as well. Those who love Thamizh so much and can also afford, could even order and arrange to send directly to Baskar.
Ideally, 2 copies of each title. But only one copy also should be welcome. Baskar would clarify that when you contact him.
How? By shipping/courier. Please remember to wrap them with waterproof sheets before packing in a carton. I am aware that this process requires spending. Most of us would happily do that. When you contact Baskar, he will suggest how to do this to those of you who have books to donate but cant afford to spend on this.
Contact info? Baskar will share with you the address and tel.no as and when you should interest and involvement through your response.
Last Updated on Thursday, 01 August 2019 00:16
Read more...
Tuesday, 30 July 2019 22:52
- நவஜோதி ஜோகரட்னம், லண்டன் -
நிகழ்வுகள்
‘ இத்தாலியில் வாழ்ந்தாலும் தான் வாழ்ந்த நாரந்தனை மண்ணின் கனவுகளைச் சுமந்து ‘புலத்தின் கனவு’, ‘குளிர்விடும் மூச்சு’ ஆகிய இரண்டு கவிதைத் தொகுதிகளை தந்திருக்கும் அந்தோனிப்பிள்ளை ஜெயசீலனின் தமிழ் உணர்வு பாராட்டுக்குரியதொன்றாகும். சொந்த மண்ணில் வழங்கள் நிறைய இருந்தபோதிலும் அவற்றை பூரணப்படுத்திக் கொள்ள முடியாத பல தடைகள் தாயக மண்ணிலே நிகழ்ந்துவிட்டதே என்று மனதில் எழும் ஆதங்கங்களை மென்மையான கவிதை வரிகளிலே தமிழ் உணர்வும், ஆத்மீக மரபும்ää சமூக பொறுப்புணர்வும் கொண்டு படைத்திருக்கும் இக்கவிதை நூல்கள் ஜெயசீலனின் வெற்றிகரமான முயற்சியாகும். மிகவும் குறுகிய காலமே அவருடன் நான் பழக நேர்ந்தபோதிலும் ஒரு கருமத்தை எடுத்தால் அதனை நேர்த்தியாகச் செய்யும் ஆற்றல் அவரிடம் பொதிந்துள்ளது கண்டு வியந்திருக்கிறேன்’ என்று இத்தாலியின் பலர்மோ நகரின் கோல்டன் திரையரங்கில் இம்மாதம் ஆறாம் திகதி சனிக்கிழமை நடைபெற்ற நூல்வெளியிட்டு விழாவில் தலைமை தாங்கி உரையாற்றிய ஆன்மீகப்பணியக இயக்குனர் அருட்பணி பீற்றர் ராஜநாயகம் தெரிவித்தார்.
‘புலம் பெயர்ந்து வாழ்ந்த நிலையிலும் இங்குள்ள தமிழ் சிறார்கள் தமிழ் மொழியைக் கற்று நமது தமிழ் பண்பாட்டை பேணிப்பாதுகாக்க வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தோடு பலர்மோவில் இலக்கிய மன்றத்தை நிறுவி தமிழ்ப்பணி ஆற்றி வரும் ஜெயசீலனின் சமூக உணர்வு மதிக்கத்தக்கதொன்றாகும். கவிதைகள் மெல்லுணர்வுகளை வாசிப்போர் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் கவிபுனையும் ஆற்றல் ஜெயசீலனிடம் நிறையவே காணக்கிடக்கிறது’ என்று கௌரவ விருந்தினராக பிரான்சிலிருந்து வருகை தந்திருந்த குரூஸ் ஜெயசீலன் அவர்கள் தனது உரையில் தெரிவித்திருந்தார்.
‘கலை, கலாச்சாரம், நற்சிந்தனை ஆகியவற்றை போதித்து என்றும் நல்லதையே செய்ää நல்லதையே நினை, வீழ்ந்தாலும் தாழ்ந்தாலும் துணிவோடு எழுந்து நில் என்று என்னைச் செதுக்கி வளர்த்தது போலவே என் தந்தை தன்; அயராத உழைப்பினால் கவிதை மணிகளைத் தந்திருக்கும் பண்பினை எண்ணிப் பெருமைப் படுகின்றேன்’ என்று செல்வி . யூலியா ஜெயசீலன் அவர்கள் இத்தாலி மொழியிலும், தமிழிலும் உரையாற்றும்போது தெரிவித்திருந்தார்.
Last Updated on Tuesday, 30 July 2019 23:14
Read more...
Saturday, 20 July 2019 22:45
- இலக்கிய அமுதம் -
நிகழ்வுகள்

இலக்கிய அமுதம் <
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
>
Last Updated on Saturday, 20 July 2019 22:52
Wednesday, 17 July 2019 23:14
- கனகவரதா, செயலாளர், யாழ் இந்துக்கல்லூரி (கனடா) அமைப்பு -
நிகழ்வுகள்
யாழ் இந்துக்கல்லூரி (கனடா) அமைப்பினரின் கலையரசி (2019) விழா மலருக்கு ஆக்கங்களை அனுப்பி வையுங்கள்!

வணக்கம், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சங்கம்-கனடா ஆண்டுதோறும் வெளியிடுகின்ற கலையரசி மலருக்கான ஆக்கங்கள் கோரப்படுகின்றன. கடந்த ஆண்டுகளில் கலையரசி என்கிற உபகுழுவினூடாக நெறிப்படுத்தப்பட்ட கலையரசி நிகழ்வும் மலர் வெளியீடும் இவ்வாண்டு முதலாக யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் கலை-மரபுரிமை உபகுழு என்கிற ஆழ்ந்தகன்ற நோக்குடன் பரிணமித்த குழுவினூடாக நெறிப்படுத்தப்படுகின்றது,
இதனடிப்படையில் இவ்வாண்டு மலருக்கான ஆக்கங்கள் வரலாறும் வரலாற்றுணர்வும் என்கிற கருப்பொருள் சார்ந்ததாக எதிர்பார்க்கப்படுகின்றன. ஆக்கங்கள் புனைவுகளாகவோ, கட்டுரைகளாகவோ, ஆற்றுகைப் பிரதிகளாகவோ அமையலாம். உங்கள் ஆக்கங்கள் 800 சொற்களுக்கு உட்பட்டதாக அமைவது அவசியம். நீங்கள் அனுப்பிவைக்கின்ற பிரதிகள் மலரில் பிரசுரிக்கப்படுவது தொடர்பாக மலர்க்குழுவின் தீர்ப்பே இறுதியானது.
தயைகூர்ந்து உங்கள் ஆக்கங்களை ஜூலை மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னதாக
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
Last Updated on Wednesday, 17 July 2019 23:20
Read more...
Tuesday, 16 July 2019 08:41
-தகவல்: யாழ் இந்துக் கனடாச் சங்கம் -
நிகழ்வுகள்
Last Updated on Tuesday, 16 July 2019 08:49
Read more...
Tuesday, 16 July 2019 08:37
- Rupa Nadarajah -
நிகழ்வுகள்
Thursday, 11 July 2019 14:52
- தகவல்: எம்.பெளசர் -
நிகழ்வுகள்
Last Updated on Thursday, 11 July 2019 14:59
Read more...

toronto tamilsangam <
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
>
Saturday, 06 July 2019 09:30
- குவிகம் -
நிகழ்வுகள்

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
Last Updated on Saturday, 06 July 2019 09:37
Thursday, 04 July 2019 08:30
- வேந்தனார் இளஞ்சேய் -
நிகழ்வுகள்
Last Updated on Thursday, 04 July 2019 08:39
Read more...
Wednesday, 03 July 2019 08:32
- தகவல்: ஜெயராமன் -
நிகழ்வுகள்
Last Updated on Wednesday, 03 July 2019 08:38
Wednesday, 03 July 2019 08:28
-தகவல்: ஜெயராமன் -
நிகழ்வுகள்
Last Updated on Wednesday, 03 July 2019 08:38
Saturday, 29 June 2019 22:07
- முருகபூபதி -
நிகழ்வுகள்
அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் வருடாந்த கவிதா மண்டலம் நிகழ்ச்சி இம்முறை எதிர்வரும் ஜூலை 06 ஆம் திகதி (06-07-2019) சனிக்கிழமை மாலை 3 மணி முதல் 6 மணிவரை இடம்பெறவுள்ளது.
நிகழ்வு இடம்பெறும் முகவரி:
Neighbourhood house Community Centre - 6, Mount Street, Glen Waverley. Vic 3150
கவிதா மண்டலத்தில் கலந்து சிறப்பிக்குமாறு, கலை, இலக்கிய ஆர்வலர்களை அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் அன்புடன் அழைக்கின்றது.
மேலதிக விபரங்களுக்கு:
திரு. சங்கர சுப்பிரமணியன் ( தலைவர்) அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம்
தொலைபேசி இலக்கம்: 0423 206 025
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
Last Updated on Saturday, 29 June 2019 22:13
Thursday, 27 June 2019 09:36
- இ. ஓவியா. -
நிகழ்வுகள்
 'ஈழத்தில் பண்டிதர்களும், புலவர்களும், வித்துவான்களும் நிறைந்து காணப்பட்ட 1940 -களின் பிற்பகுதியில் ஒரு முற்போக்குச் சிந்தனையாளராக, தமிழ்ப்பற்றாளராக, நல்ல தமிழாசானாக, பிஞ்சுக் குழந்தைகள் முதல் பெரியோர்வரை பாடிக்களித்திட பாடல் தந்த கவிஞராக, உணர்ச்சிமிக்க பேச்சாளராக, ஆய்வுக் கட்டுரையாளராகப் பர்ணமித்துத் தமிழறிஞர்களின் கவனத்தைக் கவர்ந்தவர்;. தமிழே உயிர் மூச்சாகக் கொண்டு தமிழ்ப்பணியாற்றியவர்;. இந்நாட்டில் தமிழர் சமவுரிமையுடன் தலைநிமிர்ந்து வாழவேண்டுமென்ற தணியாத தாகம் மிகக்கொண்டவராக, எழுத்திலும் பேச்சிலும் அதனை வலியுறுத்தியவர் வித்துவான் வேந்தனார் ஆவார்.' இவ்வாறு, பாரிஸ் மாநகரில் கடந்த ஞாயிறு மாலை (23 - 06 - 2019) நடைபெற்ற வித்துவான் வேந்தனார் நூற்றாண்டு விழா நூல்கள் வெளியீட்டு நிகழ்வுக்குத் தலைமைவகித்து உரையாற்றிய மூத்த எழுத்தாளர் - 'கலாபூஷணம்' வி. ரி. இளங்கோவன் குறிப்பிட்டார்.
அவர் மேலும் பேசுகையில் குறிப்பிட்டதாவது :- 'நாட்டிற்காய் இளைஞர் கூட்டம் கிளர்ந்தெழுதல் வேண்டுமென அவரது 'அவளும் அவனும்' என்னும் காவியத்தில்வரும் கருத்துக்கள் தீர்க்கதரிசனமானவையெனப் பலர் குறிப்பிட்டுள்ளனர். 'அறப்போருக்கு அறைகூவல்' என்ற தலைப்பில் தொடர்ச்சியாக அவர் எழுதிவந்த கவிதைகள் கவனத்துக்குரியன. 'ஈழகேசரி'யில் அவர் எழுதிய கட்டுரையின் தாக்கத்தால் அப்பத்திரிகை 'இலக்கிய அரங்கம்' என்ற விவாதமேடையையே அமைத்து தொடர்ந்து கட்டுரைகளைப் பிரசுரித்தது. அதனால் வித்துவான் வேந்தனார் தமிழ்ப்பற்றாளர் எல்லோரதும் கவனத்துக்குரியவரானார்.
யாழ்ப்பாணம் பரமேஸ்வராக் கல்லூரியில் 1951 -ம் ஆண்டு ஏப்ரல் 29, 30, மே 1 -ம் திகதிகளில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க 'தமிழ்விழா' சிறப்பாக நடைபெற வேந்தனார் முன்னின்று செயற்பட்டார். தமிழகம், பெங்கள10ர், புதுடில்லியைச் சேர்ந்த சுமார் 18 -க்கு மேற்பட்ட தமிழறிஞர்களும், இலங்கையின் பத்துக்கு மேற்பட்ட தமிழறிஞர்களும் இவ்விழாவில் பங்குபற்றிச் சிறப்பித்தமை வரலாறு. இவ்விழாவில் மூன்றாம் நாள் இறுதிப் பேச்சாளராகக் கலந்துகொண்ட வித்துவான் வேந்தனாரின் 'வாழும் இலக்கியம்' என்ற தலைப்பிலான சிறப்புரையைத் தமிழகத்துத் தமிழறிஞர்கள் செவிமடுத்து வியந்து பெரிதும் மெச்சினர்.
Last Updated on Thursday, 27 June 2019 09:54
Read more...
Sunday, 16 June 2019 01:31
- வேந்தனார் இளஞ்சேய் -
நிகழ்வுகள்

அன்பிற்குரியவர்களே! எனதருமைத் தந்தையார் வித்துவான் வேந்தனார் அவர்களின் நூற்றாண்டு விழா- நூல்கள் வெளியீட்டு விழா, பாரிஸ் மாநகரில் , வரும் 23.06.2019 , ஞாயிறு மாலை 4 மணிக்கு தொடங்கி நடைபெறவுள்ளது. இவ் விழாவினை " வேலணை மத்திய மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கம் - பிரான்ஸ்" அமைப்பினர் பொறுப்பெடுத்து நடத்துகின்றார்கள். இதற்கான அழைப்பிதழை இங்கு இணைத்துள்ளேன்.
Last Updated on Sunday, 16 June 2019 01:40
Read more...
Wednesday, 05 June 2019 09:05
- அட்மின் -
நிகழ்வுகள்
Last Updated on Wednesday, 05 June 2019 09:11
Tuesday, 04 June 2019 07:00
- தகவல்: முருகபூபதி -
நிகழ்வுகள்
அவுஸ்திரேலியாவில் மெல்பனில் வதியும் படைப்பிலக்கியவாதியும் பத்தி எழுத்தாளருமான விலங்கு மருத்துவர் நடேசன் இதுவரையில் எழுதியிருக்கும் நாவல்கள், சிறுகதைகள், தொழில் சார் அனுபவ நூல்கள் மற்றும் பயண இலக்கியம் தொடர்பான அறிமுகமும் விமர்சன அரங்கும் எதிர்வரும் 08 ஆம் திகதி (08-06-2019) சனிக்கிழமை மெல்பனில் நடைபெறும். நடேசன் அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்த பின்னரே இலக்கியப்பிரதிகள் எழுதத் தொடங்கியவர். இவரது விலங்கு மருத்துவத்துறை சார்ந்த கதைகளை உள்ளடக்கிய நூல் வாழும் சுவடுகள் இதுவரையில் இரண்டு பதிப்புகளைக்கண்டுள்ளன. இதுவே இவரது முதலாவது நூலாகும்.
இலங்கையில் மதவாச்சியா தொகுதியில் பதவியா என்னுமிடத்தில் விலங்கு மருத்துவராக இவர் பணியாற்றிய அனுபவத்தின் பின்னணியில் எழுதிய முதலாவது நாவல் வண்ணாத்திக்குளம். இக்கதையை தமிழக திரைப்பட இயக்குநர் (அமரர்) முள்ளும் மலரும் மகேந்திரன் திரைப்படமாக்குவதற்கு விரும்பி, திரைக்கதை வசனமும் எழுதியிருந்தார். எனினும் இலங்கை அரசியல் சூழ்நிலைகளினால் அந்த முயற்சி கைவிடப்பட்டது. எனினும் இந்த நாவல் Butterfly Lake என்ற பெயரில் ஆங்கிலத்திலும், சமணள வெவ என்ற பெயரில் சிங்களத்திலும் வெளிவந்துள்ளன. 1983 இனக்கலவரத்தை பின்னணியாகக் கொண்டு நடேசன் எழுதிய உனையே மயல்கொண்டு என்ற நாவலும் Lost in you என்ற பெயரில் ஆங்கிலத்தில் வெளியாகியுள்ளது. நடேசனின் தேர்ந்தெடுக்கப்பட்ட சில சிறுகதைகளும் மலேசியன் எயர் லைன் 370 என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது. இந்த நூலும் சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அசோகனின் வைத்தியசாலை என்ற நாவலும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு அச்சுக்குத்தயாராகியுள்ளது.
எதிர்வரும் ஜூன் 08 ஆம் திகதி பிற்பகல் 2.30 மணிக்கு மெல்பனில், வேர்மன் தெற்கு கல்வி நிலையத்தில், கலை, இலக்கிய ஆர்வலர் மருத்துவர் ( திருமதி) வஜ்னா ரஃபீக் தலைமையில், நடேசன் இதுவரையில் எழுதியிருக்கும் அனைத்து நூல்களின் விமர்சன அரங்குடன், புதிய நாவலான கானல் தேசம், மற்றும் நனவிடை தோயும் சுயவரலாற்று பத்தி எழுத்து தொகுப்பான எக்ஸைல் முதலான நூல்களும் அறிமுகப்படுத்தப்படும்.
Last Updated on Tuesday, 04 June 2019 07:16
Read more...
Thursday, 30 May 2019 00:54
administrator
நிகழ்வுகள்
Thursday, 30 May 2019 00:48
-தகவல்: முருகபூபதி -
நிகழ்வுகள்
Last Updated on Thursday, 30 May 2019 00:53
Read more...
Wednesday, 29 May 2019 23:14
administrator
நிகழ்வுகள்
Last Updated on Wednesday, 29 May 2019 23:46
Wednesday, 22 May 2019 08:29
- முல்லைஅமுதன்-
நிகழ்வுகள்
வணக்கம்.
காற்றுவெளி மின்னிதழ் முன்னர் சிற்றிதழ் சிறப்பிதழ் ஒன்றை வெளிக்கொண்டுவதிருந்தது. மீண்டும் ஒரு இதழைக் கொண்டுவரவுள்ளதால் படைப்பாளர்களிடமிருந்து சிற்றிதழ்கள் பற்றிய கட்டுரைகளை எதிர்பார்க்கிறோம்.சிற்றிதழ்கள் பற்றிய அறிமுகங்களை, அவற்றின் இன்றைய அவசியம், காலம் வென்று நினைவில் நிற்கும் சிற்றிதழ்கள் என பல்வேறு வகையில் கட்டுரைகளைத் தரலாம். கட்டுரைகள் யூனிக்கோட் எழுத்துருவில் நான்கு பக்கங்களுக்கு மேற்படாதவண்ணம் அனுப்புங்கள். மின்னஞ்சல் முகவரி:
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
நட்புடன், முல்லைஅமுதன்
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
Last Updated on Wednesday, 22 May 2019 08:33
Saturday, 18 May 2019 02:11
- தகவல்: பா.அ.ஜயகரன் -
நிகழ்வுகள்
Last Updated on Saturday, 18 May 2019 02:16
Thursday, 16 May 2019 02:06
- குவிகம் இல்லம் -
நிகழ்வுகள்

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
Last Updated on Thursday, 16 May 2019 02:11
Monday, 13 May 2019 23:19
- தகவல்: குரு அரவிந்தன் -
நிகழ்வுகள்
கனடா தமிழ் எழுத்தாளர் இணையம்
வணக்கம், கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் நடத்திய சர்வதேச சிறுகதைப்போட்டி – 2019 போட்டி முடிவுகள்:
பரிசு பெற்றவர்கள்
1 முதலாம் பரிசு- (தாள் திறவாய் )- இலங்கை ரூபாய்கள் - 50,000 (சுந்தரேசன் நந்தகுமார் வெருகம்பாக்கம் சென்னை - 600092) 2 இரண்டாம் பரிசு -(மலர் )- இலங்கை ரூபாய்கள் - 30,000 (டலின் இராசசிங்கம் கொய்யாத்தோட்டம் யாழ்ப்பாணம் இலங்கை) 3 மூன்றாம் பரிசுகள்- இரண்டு - தலா இலங்கை ரூபாய்கள் - 20,000
(ஒரு முழு நாவல்) (இரட்ணசிங்கம் விக்னேஷ்வரன் வீரவநல்லூர் திருநெல்வேலி தமிழ்நாடு) (உறவின் தேடல்) (விமலாதேவி பரமநாதன் றுஸ்லிப் மிடில்செக்ஸ் இங்கிலாந்து)
பாராட்டுப் பரிசுகள் - (7) இலங்கை ரூபாய்கள் தலா 5000
(நான் யார்) தேவகி கருணாகரன் நியூசவுத்வேல்ஸ் - 2065 அவுஸ்ரேலியா , (கமழி) கோவிந்தராயு அருண்பாண்டியன் அண்ணாநகர் மேற்கு, தமிழ்நாடு , (இடுக்கண்களைவதாம்) சுமதி பாலையா காமராசர்நகர் பாண்டிச்சேரி -605006
(காணாமலே) ஹரண்யா பிரசாந்தன் பற்றிமாகிரிவீதி மட்டக்களப்பு இலங்கை , (கனடாவில் அம்மா) இராமேஸ்வரன் சோமசுந்தரம் சோலேஸ் றோட், மார்க்கம் கனடா , (நிர்ப்பந்தம்) இதயராஜா சின்னத்தம்பி ஸ்ரீசரணங்கார வீதி, தெகிவல இலங்கை , (போ வெளியே) அருண்சந்தர் றோட்1011 அல்சல்மானியா Kingdom of Bahrain
ஊக்கப் பரிசுகள் - (5) இலங்கை ரூபாய்கள் தலா 3000
(சுயகௌரவம்) சசீலா ராஜ்குமாரன் வரோதயநகர் திருகோணமலை இலங்கை. (களவும் கற்று மற) பரமேஸ்வரி இளங்கோ ஹேகித்த வத்தளை இலங்கை (தீக்குருவி) மொகமட்ராபி பாலையூற்று திருகோணமலை இலங்கை (மெல்ல திறந்தது கதவு) ஜெயபால் நவமணிராசையா அண்ணா நகர், சென்னை-600101 (ஐந்தறிவு விதவை) அண்ணாதுரை பாலு ராஜபாளயம் விருதுநகர் 626117 தமிழ்நாடு
Last Updated on Monday, 13 May 2019 23:28
Read more...
Thursday, 09 May 2019 22:35
- தகவல்: ரதன் -
நிகழ்வுகள்
Last Updated on Thursday, 09 May 2019 22:40
Thursday, 09 May 2019 08:36
- நவஜோதி ஜோகரட்னம், லண்டன். -
நிகழ்வுகள்

பெண்கள் சந்திப்பின் 34 ஆவது நிகழ்வு நெதர்லாந்தின் சோஸ்ட் என்னுமிடத்தில் திருமதி.திரேசிற்றா அந்தோனியின் ஒருங்கிணைப்பில் ஏப்ரல் 20ஆம் திகதி நடைபெற்றது. இச்சந்திப்பில் இந்தியா. கனடா. ஜேர்மனி. பிரான்ஸ். இங்கிலாந்து போன்ற நாடுகளிலிருந்து வருகை தந்திருந்த பெண்கள் தமது பெண்ணியக் கருத்துக்களை பல்வேறு கோணங்களில் வெளிப்படுத்தியிருந்தனர். சுய அறிமுகத்துடன் ஆரம்பித்த இந்தப் பெண்கள் சந்திப்பை திரேசிற்றா அந்தனி தனது வரவேற்புரையை வழங்கிச் சிறப்பித்திருந்தார்.
ஜேர்மனியிலிருந்து வருகை தந்திருந்த தர்சனாவின் அறிமுகத்துடன் தமிழ் நாட்டிலிருந்து வருகை தந்திருந்த வழக்கறிஞர் கிருபா முனியப்பா பேசும்போது: ‘இந்தியாவிலும் குறிப்பாகத் தமிழகத்திலும் சாதி அடக்குமுறைகளினால் தலித்தியப் பெண்கள் மிக மோசமான வன்முறைக்கு உள்ளாகியிருப்பதை விரிவாக எடுத்துப் பேசினார். தனிப்பட்ட முறையில் இந்த வன்முறைகளை எதிர்கொண்ட பல பிரச்சனைகளை எடுத்துக்கூறிப் பேசியிருந்தார். இன்று இந்த சட்ட ஒடுக்கு முறைகளுக்கு எதிராக நியாயமன்றத்தில் நியாயம் கூறும் ஒரு துணிச்சலான செயற்பாடுகளை கிருபாவின் உரையில் உணர முடிந்தது’
Last Updated on Thursday, 09 May 2019 08:46
Read more...

On behalf of the World Tamil Research Conference (WTC) team, We would like to thank you for your continued support over the years in both participating as well as funding to preserve and enrich our Tamil traditions and culture.
We are honored to invite you to our upcoming 10th World Tamil Research Conference (WTC) to be held in Chicago. This event will take place at the Schaumburg Convention Centre, Schaumburg, IL, USA from 4th to 7th July 2019.
This will be a historical event with two days of cultural extravaganza and two days of research conference and entrepreneurship meet (GTEN) with an expected audience of over 6000 attendees from around the world. The conference offers an outstanding platform to display the rich heritage and significance of Tamil language and culture.
To grace this occasion, we have invited several Tamil Scholars from around the world, political figures from various states including governor, senators and congressman. We have also invited several eminent artists, poets, performers and academicians from all over the world.
Last Updated on Thursday, 09 May 2019 08:24
Read more...
Wednesday, 01 May 2019 08:36
- தகவல்: அகில் -
நிகழ்வுகள்
Last Updated on Wednesday, 01 May 2019 08:43
Read more...
Wednesday, 01 May 2019 07:54
- இ. ஓவியா -
நிகழ்வுகள்
'மக்கள் பணிபுரிந்த மாமனிதர்கள் குறித்துச் சிறப்பான பதிவுகளை இளங்கோவன் செய்துவருகிறார். அவை அவசியமான சிறந்த பணியாகும். நவீன தொழில்நுட்ப வசதி> முகநூல்> இணையத்தளங்கள் புத்தக வாசிப்பை அருகிடச் செய்துவிட்டது எனக் கூறுகிறார்கள். ஆனால் புத்தக வாசிப்பு உடலுக்கும் உள்ளத்திற்கும் நன்மை தருவதாகும். முற்போக்குச் சிந்தனையுடனும் மாறாத இலட்சியப் பிடிப்புடனும் எழுதிவருபவர் இளங்கோவன். அவரது நூல்கள் ஆங்கிலம், இந்தி மொழிகளில் வெளியாகி பல நாடுகளிலும் பாராட்டைப் பெற்றுள்ளமை மகிழ்ச்சியளிக்கிறது." இவ்வாறு கடந்த 31 -ம் திகதி ஞாயிறு (31 - 03 - 2019) இலண்டன் மாநகர் - ஈலிங் ஶ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலய மண்டபத்தில் நடைபெற்ற 'இலக்கிய மாலை" நிகழ்வுக்குத் தலைமைவகித்து உரையாற்றிய மூத்த எழுத்தாளர் கரவை மு. தயாளன் குறிப்பிட்டார். இந்நிகழ்வில் 'கலாபூஷணம் - இலக்கிய வித்தகர்" வி. ரி. இளங்கோவனின் 'ஈழத்து மண் மறவா மனிதர்கள், என் வழி தனி வழி அல்ல, ஒளிக்கீற்று" ஆகிய நூல்களும் 'பாரதி நேசன்" வீ. சின்னத்தம்பியின் 'ஈழத்தின் வடபுலத்தில் கம்யூனிஸ இயக்கத்தின் வளர்ச்சியில் தமிழ்ப்பெண்கள்" என்ற நூலும் வெளியிடப்பட்டன.
நிகழ்வில் எழுத்தாளர் மு. தயாளன் மேலும் பேசுகையில் குறிப்பிட்டதாவது: 'இலக்கியப் பாரம்பரியக் குடும்பத்தைச் சேர்ந்த இளங்கோவனின் புலமையை அவரது கவிதை நூலில் கண்டு மகிழ்ந்தேன். அந்நூலில் யாரிடமும் அணிந்துரை பெறாது தைரியத்துடன் அவர் எழுதியுள்ள முன்னுரை என்னைக் கவர்ந்தது. அவர் கவிதைகள் காலத்தின் பதிவாகச் சிறப்பாகவுள்ளன. ஈழத்தில் மட;டுமல்ல புலம்பெயர்ந்த நாட்டிலும் எழுத்தாளன் தனது படைப்புகளை நூலுருவில; வெளிக்கொணர்ந்து மக்களிடம் சேர்ப்பிக்கப் பல அவதாரங்கள் எடுக்கவேண்டியுள்ளது. சிந்தனையில் வந்ததை எழுதி முடித்தல், ஒழுங்காகப் பதிதல், அச்சகம் தேடிக் கொடுத்தல், பிழை திருத்தம் பார்த்தல்> அச்சுக்கூலியைத் தேடிக் கொடுத்தல், நூல்களைத் தேவையான இடங்களில் சேர்ப்பித்தல், வெளியீட்டு விழாக்களை ஒழுங்கு செய்தல், விமர்சனம் என்ற வகையில் பேச்சாளர்களின் அறுவைகளைக் கேட்டுக் கொள்ளல், மிகுதி நூல்களை வீட்டில் அடுக்கி வைத்தல், மனைவி - பிள்ளைகளின் நச்சரிப்பைத் தாங்குதல் - இப்படியான நிலைமைகளையெல்லாம் சமாளித்து எழுத்தாளன் தன்னளவில் திருப்திப்படவேண்டியுள்ளது. இந்த அவல நிலைதான் எம்மிடையே உள;ளது. இத்தகைய நிலையிலும் சளைக்காது பல நூல்களை வி. ரி. இளங்கோவன் தொடர்ந்து வெளியிட்டுவருவது பாராட்டுக்குரியது" என்றார்.
ஊடகவியலாளர் எஸ்.கே.ராஜன் பேசுகையில் குறிப்பிட்டதாவது: 'என் பள்ளிப் பருவம் முதல் வி. ரி. இளங்கோவனுடன் பழகி வருகின்றேன். அவர் ஒரு தகவல் பொக்கிசமாகத் திகழ்பவர். இலக்கியம், அரசியல் சம்பந்தமான எந்தச் சந்தேகங்களையும் அவரிடம் கேட்டு நிவிர்த்திக்கலாம்;. அவை குறித்து ஆர்வத்துடன் விளக்கமாகக் கூறுவார். மறக்க முடியாத மனிதர்களின் பணிகள் குறித்துப் பதிவுகள் செய்த அவர் இன்றைய தலைமுறைக்கேற்ற பல படைப்புகளை, பதிவுகளை மேலும் தரவேண்டும்" என்றார்.
Last Updated on Wednesday, 01 May 2019 08:04
Read more...
Monday, 29 April 2019 07:06
- வ.ந.கிரிதரன் -
நிகழ்வுகள்
இன்று ஸ்கார்பரோவில் அமைந்துள்ள 'ஹீரோ பார்ட்டி ஹா'லில் அண்மையில் இலங்கையில் நிகழ்ந்த கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் நட்சத்திர ஹொட்டல்கள் ஆகியவற்றில் தற்கொலைக்குண்டுத் தாக்குதல்களில் பலியான, பாதிக்கப்பட்ட மக்களுக்கான நினைவஞ்சலிக் கூட்டமும், கலந்துரையாடலும் நடைபெற்றன. தற்போதுள்ள சூழலில் மிகவும் கட்டாயமாக நடத்த வேண்டிய இந்நிகழ்வினைச் சிறப்பாகக் குறுகிய நேரத்தில் ஏற்பாடு செய்ததற்காகக் 'சமாதானத்திற்கான கனடியர்கள் அமைப்பு' பாராட்டுக்குரியது. குறிப்பாக அவ்வமைப்பினைச் சேர்ந்த ரட்ணம் கணேஷ், நேசன் & டெரென்ஸ் அந்தோனிப்பிள்ளை , சபேசன், சத்தியசீலன் ஆகியோர் பாராட்டுக்குரியவர்கள்.
நிகழ்வில் கனடியக் கலை, இலக்கிய, சமூக மற்றும் அரசியல் வெளிகளில் பங்கு பற்றும் பலரைக் காண முடிந்தது. குறிப்பாக நேசன் , பாலா (கரவெட்டி), எல்லாளன், அலெக்ஸ் வர்மா, கிருபா, திலீபன், மெலிஞ்சி முத்தன், கலாநிதி சுல்ஃபிகா, பாலசுப்பிரமணியம் (கரவெட்டி), கற்சுறா, ஜெபா கற்சுறா, எஸ்.கே.விக்னேஸ்வரன், அவரது மகள் அரசி விக்னேஸ்வரன் , 'அரங்காடல்' செல்வன் , நிரூபா ஆயிலியம், சிவா கந்தையா (டெலோ),பாக்கியம் முருகேசு எனப் பலரைக் காண முடிந்தது.
நிகழ்வு அண்மையில் இலங்கையில் குண்டுத்தாக்குதல்களில் பலியாகிய மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மெளன அஞ்சலி செலுத்துவதுடன் ஆரம்பமாகியது. 'சமாதானத்திற்கான கனடியர்கள் அமைப்'பினைச் சேர்ந்த ரட்ணம் கனேஷின் ஒருங்கிணைப்பில் ஆரம்பமாகியது. நிகழ்வினை ஆரம்பித்து வைத்து அவராற்றிய உரையில் 'சமாதானத்திற்கான கனடியர்கள் அமைப்பு' நடைபெற்ற தாக்குதல்கள் பல்லின மக்களுக்கிடையிலான இணக்கத்துக்கு அபாயத்தை ஏற்படுத்தியதுடன் இலங்கையின் பொருளாதாரத்துக்கும் பெரிய பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது என்று எடுத்துரைத்ததுடன் அரசு மேலும் எதிர்காலத்தில் இது போன்ற தாக்குதல்கள் நிகழாதவாறு நடவடிக்கைகளை எடுத்து மக்களைப் பாதுகாக்க வேண்டுமெனவும் வேண்டிக்கொண்டார். இதற்கு மக்களாகிய நாமனைவரும் ஒத்துழைக்க வேண்டுமெனவும் வேண்டிக்கொண்டார்.
அவரைத்தொடர்ந்து கலாநிதி ந.ரவீந்திரன் அவர்கள் உரையாற்றினார். அவரது உரை இலங்கையின் கடந்த கால மற்றும் தற்கால அரசியல் பற்றிய தெளிவான உரையாக அமைந்திருந்தது. இலங்கையில் மார்க்சிசக் கட்சிகளின் செயற்பாடுகள், தேசியப் பிரச்சினை , சோவியத் உடைவுக்குப்பின்னர் பண்பாட்டுத்தளத்தில் முன்னெடுக்கப்படும் சமூக, அரசியற் செயற்பாடுகள், இலங்கையில் நிலவிய சாதியை, இன, மத, மொழி மற்றும் வர்க்கத்தை மையமாக வைத்தியங்கிய அடையாள அரசியல், பயங்கரவாதத்தை ஆரம்பத்திலிருந்தே ஆதரித்த இலங்கைத்தமிழர்கள் (இவ்விதமான நடவடிக்கைகளை அவர்களது 'பையன்க'ளே செய்திருந்தாலும் வெளியில் அவர்கள் அவற்றை அவர்களது 'பையன்கள்' செய்யவில்லை என்று கூறிக்கொண்டாலும், அவர்கள் 'பையன்க'ளின் பயங்கரவாத நடவடிக்கைகளைக் கண்டிக்காலம் ஆதரவானதொரு நிலைப்பாட்டினையே எடுத்திருந்தார்கள் ) இவற்றைப்பற்றியெல்லாம் தொட்டுச் சென்றது அவரதுரை. அவர் தனதுரையில் முஸ்லிம் மக்கள் தம்மினத்தவர் செய்த தற்கொலைக்குண்டுத்தாக்குதல்களைக் கண்டித்ததன் மூலம் பயங்கரவாத நடவடிக்கைகளை ஆரம்பத்திலேயே கண்டித்திருக்கின்றார்கள் என்பதையும் சுட்டிக்காட்டத் தவறவில்லை.
Last Updated on Monday, 29 April 2019 07:26
Read more...
Thursday, 25 April 2019 08:02
-தகவல்: ரட்னம் கணேஷ் -
நிகழ்வுகள்
Last Updated on Thursday, 25 April 2019 22:10
Thursday, 25 April 2019 07:53
- நிரூபா (முகநூல்) -
நிகழ்வுகள்
Last Updated on Thursday, 25 April 2019 22:09
Saturday, 20 April 2019 08:34
- தகவல்: த.இளங்கோவன் -
நிகழ்வுகள்
முற்போக்கான , சமூகம் சார்ந்த நூல்களை உள்ளடக்கிய நூலகத்துடன் கூடிய புத்தகக்கடை வரவேற்கத்தக்க விடயம். சமூக மற்றும் இலக்கியப் பிரக்ஞை மிக்க அனைவரும் பாவிக்க வேண்டிய அமைப்பு. பாவிப்பீர்! பயனடைவீர்!

Last Updated on Saturday, 20 April 2019 08:49
Friday, 19 April 2019 00:35
- தகவல்: முருகபூபதி -
நிகழ்வுகள்
Last Updated on Friday, 19 April 2019 00:38
Thursday, 11 April 2019 23:17
- தகவல்: குரு அரவிந்தன் -
நிகழ்வுகள்
Last Updated on Thursday, 25 April 2019 22:11
Thursday, 11 April 2019 22:44
- தகவல்: இலக்கிய அமுதம் -
நிகழ்வுகள்

இலக்கிய அமுதம் <
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
>
Last Updated on Thursday, 25 April 2019 22:12
Thursday, 11 April 2019 07:24
- தகவல்: பெளசர் -
நிகழ்வுகள்
Last Updated on Thursday, 11 April 2019 22:48
Friday, 05 April 2019 23:13
- தகவல்: ஜெயராம சர்மா -
நிகழ்வுகள்
Last Updated on Thursday, 25 April 2019 22:12
Thursday, 04 April 2019 21:31
- நொயல் நடேசன் -
நிகழ்வுகள்
புனைவை வாசிக்கும்போது தனிமனிதர்களையும் அபுனைவுகளை வாசிக்கும்போது சமூகத்தையும் புரிந்துகொள்ள முடியும் என்பதாககேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் பேராசிரியர் நுஃமானின் அபுனைவு எனக்குப் புனைவுகளைப் புரிய வைத்தது என்று சொல்லலாம். நான் இலக்கியத்தை முறையாகப் பயின்றவனில்லை. சுயம்புலிங்கமாகப் புரிந்துகொண்டவன் என்பதால் “சமூக யதார்த்தமும் இலக்கிய புனைவும்” என்ற பேராசிரியர் எம்.ஏ. நுஃமானின் புத்தகம் தெளிவைக்கொடுத்தது.
தமிழகத்திற்கு 84இல் முதல் முதலாக சென்ற நான், இராமேஸ்வரத்தில் இறங்கி அங்கும், அதன் பின்பு சென்னை சென்ற இரயிலிலும் கோட்டுப் போட்டஆண்களையும் பொன்னிறப் பெண்களையும் தேடி ஏமாற்றமடைந்தேன் என எனது எக்ஸைல்புத்தகத்தில் எழுதியிருந்தேன். நான் பார்த்த சினிமா ஊடகம் எனக்கு அவ்விதமான தேடலை உருவாக்கியது. அதேபோல் கவிதாயினி அனாரை சந்தித்தபோது, ” நான் கவிதையை ஊன்றிப் படிப்பவனில்லை “என்றேன். இது உங்களுக்குப் படிக்க இலகுவாக இருக்கும் எனச்சொல்லியவாறு, ‘கிழக்கிலங்கை நாட்டுப் பாடல்கள்’ என்ற நூலை கையில் தந்தார். வாசித்தபோது அதில் உள்ள பெண்களும் ஆண்களும் ஒருவரை ஒருவர் நோக்கிப் பாடும் பாடல்கள் எனக்கு வியப்பைக் கொடுத்தன . பெண் விடுதலையான சமூகத்தை அந்த நாட்டுப் பாடல்களில் பார்த்தேன்.
புனைவிற்கும் சமூக யதார்த்தத்திற்கும் தூரம் அதிகம் எனத் தெரிந்தாலும் சமூகத்திலிருந்து இலக்கியம் இவ்வளவு தூரம் தள்ளியிருக்குமென்பதை நாட்டார் இலக்கியத்தில் காதல் பாடல்களில் – யதார்த்தத்தையும் புனைவையும் எடுத்து பேராசிரியர் நுஃமான் தெளிவாகக் கூறியுள்ளார். எமது இஸ்லாமியச் சமூகத்தில் இப்படியான விடயங்கள் நடப்பதற்கான சாத்தியமில்லை . அதாவது இவைகள் காதலர்களது படைப்புக்கள் அல்ல.முக்கியமாகக் கிழக்கிலங்கையில் விவசாய வேலைகளில் ஆண்களே ஈடுபடுவதாகவும் இப்படியான சினிமாத்தனமான பாடல்களுக்கு இடமில்லை என்கிறார்.
உதாரணமாக பெண்பாடுவது போல்
“ கச்சான் அடிக்க கயல்மீன் குதி பாய மச்சானுக்கென்று வளர்த்தேன் குரும்ப முலை “
இப்படியான பாடல் பெண்ணால் பாடியிருக்க முடியாது. ஆண் கவிஞர்களது புனைவு என்கிறார் .
இதே தர்க்கத்தை நாம் வைத்தால், நமது அகநானூறு சங்கப் பாடல்கள் எல்லாம் சமூகத்தின் யதார்த்தத்தை விலகி நடந்த புனைவாக வேண்டும் . சங்ககால எழுத்துகளை வைத்து அந்தக் காலத்தை அறிய எத்தனை பேர் ஆய்வுசெய்தார்கள் ? அகநானுறை விடுங்கள். புறநானுறை உண்மையென நம்பி ஈழத்தில் புதிதாக மீண்டுமொரு சங்க காலத்தைப் படைக்க இரத்தத்தையும் எலும்புகளையும் நிலமெங்கும் வாரியிறைத்தோமே? புனைவை ஆய்வது பரவாயில்லை. ஆனால், புனைவை நிஜம் எனச்சொல்வதுதானே இங்கே உதைக்கிறது . இந்தியர்கள் ராமன் இருந்த இடம், கடந்த இடமென்பதுபோல் நாமும் கானலைத் தேடி தாகத்துடன் அலைந்தோம்.
Last Updated on Thursday, 04 April 2019 21:35
Read more...
Thursday, 04 April 2019 21:14
- தகவல்: அகில் -
நிகழ்வுகள்

அகில:
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
Last Updated on Thursday, 25 April 2019 22:13
Thursday, 04 April 2019 21:00
- தகவல்: எழுத்தாளர் கற்சுறா -
நிகழ்வுகள்
"நண்பர் எழுத்தாளர் கற்சுறா அனுப்பியுள்ள நிகழ்வு பற்றிய இவ்வறிவித்தலை 'பதிவுகள்' வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன். தேடக அமைப்புடன் இணைந்து இயங்கிய திரு. சண்முகலிங்கன் அவர்கள் இலங்கையில் இருந்த காலத்தில் காந்தியம் அமைப்புடன் இணைந்து இயங்கிய சமூக, அரசியற் செயற்பாட்டாளர்; தன்னார்வத்தொண்டர். அதன் காரணமாகவே சிறைவாசம் அனுபவித்தவர். அவரைச் சந்திக்கும் வேளைகளிலெல்லாம் அவரது அனுபவங்களைப்பதிவு செய்யும்படி கூறுவேன். சிரித்தபடியே செய்யவேண்டும். 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிப்பதற்காக எழுதித்தருகின்றேன் என்று கூறுவார். அது நிறைவேறாமலே போனாலும் காலம் அவரை மறந்துவிடவில்லை என்பதற்குச் சான்று இந்நிகழ்வு. இந்நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ள அவரது நண்பர்களுக்கு வாழ்த்துகள். சண்முகலிங்கம் அவர்களை நினைத்தால் அவரது சிரித்த முகமும், 'கிரிதரன்' என்று வாஞ்சையுடன் அழைக்கும் குரலுமே எப்பொழுதும் நினைவுக்கு வரும். ஒரு காலகட்டத்துக்குரிய வரலாற்றுப்பங்களிப்பைச் செய்த இவரைப்போன்றவர்களை வரலாறு ஒருபோதும் மறந்துவிடுவதில்லை." - வ.ந.கி -
Last Updated on Thursday, 04 April 2019 21:20
Thursday, 04 April 2019 00:22
- தகவல்: முருகபூபதி -
நிகழ்வுகள்

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
Last Updated on Thursday, 04 April 2019 00:24
Thursday, 04 April 2019 00:14
- தகவல்: முனைவர் மு.இளங்கோவன் -
நிகழ்வுகள்
Last Updated on Thursday, 04 April 2019 00:19
Monday, 01 April 2019 06:55
- தகவல்: அருள் சவரிமுத்து -
நிகழ்வுகள்

Arul Saverimuthu <
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
>
Friday, 15 March 2019 07:12
-தகவல்: முருகபூபதி -
நிகழ்வுகள்

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
Last Updated on Friday, 15 March 2019 07:15
Thursday, 07 March 2019 21:53
- தகவல்: முருகபூபதி -
நிகழ்வுகள்

வடமேற்கு இலங்கையில் கம்பகா மாவட்டத்தில் நீர்கொழும்பில் 1954 ஆம் ஆண்டு விவேகானந்தா வித்தியாலயம் என்னும் பெயரில் தொடங்கப்பட்ட இன்றைய விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியின் முதலாவது தலைமை ஆசிரியரும் முத்தமிழ் அறிஞரும் பன்னூலாசிரியருமான கதிரேசர் மயில்வாகனனார் (1919 – 2019) அவர்களின் நூற்றாண்டு விழா 09 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 3.00 மணிக்கு கல்லூரி பிரதான மண்டபத்தில் ஆரம்பமாகும். கல்லூரியின் ஸ்தாபகர் ( அமரர் ) எஸ்.கே. விஜயரத்தினம் அவர்களின் மருமகளும் நீர்கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் ( அமரர்) ஜெயம் விஜயரத்தினம் அவர்களின் துணைவியாருமான திருமதி யோகேஸ்வரி ஜெயம் விஜயரத்தினம் மற்றும் கல்லூரியின் முன்னாள் மாணவரும் அவுஸ்திரேலியாவில் இயங்கும் தன்னார்வ தொண்டு நிறுவனமான இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் முன்னாள் தலைவரும் பரிபாலன சபை உறுப்பினருமான திரு. இராஜரட்ணம் சிவநாதன் ஆகியோர் முதன்மை விருந்தினர்களாக இவ்விழாவில் கலந்துகொள்வர்.
Last Updated on Thursday, 07 March 2019 22:22
Read more...
Wednesday, 06 March 2019 06:08
- தகவல்: வேந்தனார் இளஞ்சேய் -
நிகழ்வுகள்

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
>
Last Updated on Wednesday, 06 March 2019 06:12
Monday, 04 March 2019 05:23
- தகவல்: லஷ்மி -
நிகழ்வுகள்
Last Updated on Monday, 04 March 2019 05:27
Wednesday, 27 February 2019 17:01
- தகவல்: எழுத்தாளர் முருகபூபதி -
நிகழ்வுகள்

படைப்பிலக்கியவாதியும் ஊடகவியலாளருமான அவுஸ்திரேலியாவில் வதியும் லெ. முருகபூபதி எழுதிய சொல்லவேண்டிய கதைகள் மற்றும் சொல்லத்தவறிய கதைகள் ஆகிய இரண்டு நூல்களின் அறிமுக அரங்கு எதிர்வரும் மார்ச் மாதம் 02 ஆம் திகதி சனிக்கிழமை யாழ்ப்பாணம் – நல்லூரில் நாவலர் மண்டபத்தில் மாலை 3.00 மணிக்கு நடைபெறும். 'சொல்லவேண்டிய கதைகள்' - யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் ஜீவநதி கலை இலக்கிய மாத இதழின் வெளியீடாகும். யாழ்ப்பாணம் காலைக்கதிர் வார இதழ் உட்பட பல இணைய இதழ்களிலும் வெளியான 'சொல்லத்தவறிய கதைகள்' கிளிநொச்சி மகிழ் பதிப்பக வௌியீடாகும்.
Last Updated on Wednesday, 27 February 2019 17:05
Read more...
Thursday, 21 February 2019 22:20
- தகவல்: முருகபூபதி -
நிகழ்வுகள்

- தகவல்: முருகபூபதி -
Last Updated on Thursday, 21 February 2019 22:28
Monday, 18 February 2019 07:35
- தகவல்: யோகா வளவன் தியாகு -
நிகழ்வுகள்
Last Updated on Monday, 18 February 2019 07:39
Monday, 18 February 2019 07:19
- தகவல்: ஜயகரன் -
நிகழ்வுகள்
Last Updated on Monday, 18 February 2019 07:28
Read more...
Saturday, 09 February 2019 03:16
- குவிகம் -
நிகழ்வுகள்
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
Last Updated on Saturday, 09 February 2019 03:20
Wednesday, 06 February 2019 00:12
-தமிழ் ஸ்டுடியோ.காம் -
நிகழ்வுகள்
சென்னை சுயாதீன திரைப்பட விழா 2019 - முன்பதிவு தொடங்கியது
பிப்ரவரி 8, 9, 10 (வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை முழுநாள்)
பிரசாத் லேப் (70 MM திரையரங்கம், பிரிவியூ திரையரங்கம், சினிமா சந்தை)
MM திரையரங்கம் (கோடம்பாக்கம் மேம்பாலம் அருகில்)
நுழைவுக்கட்டணம்: ₹ 250 (மூன்று நாட்களுக்கும் சேர்த்து) உதவி தொழிற்நுட்ப கலைஞர்கள் மற்றும் திரைப்பட மாணவர்களுக்கு ₹ 150, பணம் இல்லை ஆனால் நிறைய ஆர்வம் இருக்கிறது என்பவர்கள் 100 ரூபாய் செலுத்தினால் போதும். பணமில்லை என்றால் இலவசமாகவே வந்து அனுமதி சீட்டை பெற்றுக்கொள்ளலாம். ஆனால் அனுமதி சீட்டு இல்லாமல் திரைப்பட திருவிழாவில் பங்கேற்க இயலாது.பணம் பிரச்சனையில்லை. ஆனால் முன்பதிவு செய்துக்கொள்ளுங்கள்.
முன்பதிவு செய்ய: 9840644916, 044 48655405
இந்தியாவின் முதல் பொது மக்கள் நிதி சுயாதீன திரைப்பட விழாவான தமிழ் ஸ்டுடியோவின் சென்னை சுயாதீன திரைப்பட விழாவின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா எதிர்வரும் வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு பெரும் கலை விழாக்களுடன் தொடங்குகிறது. இந்தியாவில் வேறெங்கும் பார்க்க முடியாத பல்வேறு மிக முக்கியமான திரைப்படங்களை இந்த சென்னை சுயாதீன திரைப்பட விழாவில் பார்க்க முடியும். திரைப்படங்கள் மட்டுமின்றி, பயிற்சிப்பட்டறைகள், மாஸ்டர் க்ளாஸ், கலந்துரையாடலை, முக்கிய திரைக்கலைஞர்களுடன் விவாதம் நிகழ்ச்சி என உலகின் எல்லா திரைப்பட விழாக்களுக்களி இருந்தும் மாறுபட்டு தனித்து நிற்கிறது IFFC . இது தவிர, உங்களிடம் இருக்கும் கதைகளுக்கு தேவையான திரைக்கதை ஆலோசனை, நடிப்பு பயிற்சி ஆலோசனை, உங்கள் படத்திற்கு தேவையான இணை தயாரிப்பாளர்களுடன் கலந்துரையாடல் என "சினிமா சந்தை" என்கிற பிரிவும் இருக்கிறது. மிக குறைந்த விலையில் உணவு வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
Last Updated on Wednesday, 06 February 2019 00:16
Read more...
Monday, 04 February 2019 01:56
- தகவல்: முருகபூபதி, எம்.பெளசர் -
நிகழ்வுகள்

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
Last Updated on Monday, 04 February 2019 02:00
Thursday, 31 January 2019 21:43
- தகவல்: அகில் -
நிகழ்வுகள்
Last Updated on Thursday, 31 January 2019 21:49
Read more...
Saturday, 26 January 2019 01:47
- தகவல்: வேதா இலங்காதிலகம் -
நிகழ்வுகள்
Last Updated on Saturday, 26 January 2019 01:51
Friday, 25 January 2019 07:32
- குவிகம் இலக்கிய வாசல் -
நிகழ்வுகள்

குவிகம் இலக்கிய வாசல் <
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
>
Thursday, 24 January 2019 09:33
- தகவல்:முருகபூபதி -
நிகழ்வுகள்

அவுஸ்திரேலியா மெல்பனில் வதியும் படைப்பிலக்கியவாதியும், ஊடகவியலாளருமான முருகபூபதியின் புதிய வரவு, சொல்லத்தவறிய கதைகள் நூலின் அறிமுக அரங்கும், முருகபூபதியுடனான இலக்கியச்சந்திப்பும் எதிர்வரும் பெப்ரவரி 03 ஆம் திகதி (03-02-2019) ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணிக்கு பாரிஸில் எழுத்தாளர் வாசுதேவன் தலைமையில் நடைபெறும். நிகழ்ச்சி நடைபெறும் முகவரி: TIASCI --- 13, RUE DE L'AQUEDUC ---- 75010 PARIS . பாரிஸிலிருந்து வெளியாகும் " நடு" இணைய இதழின் ஏற்பாட்டில் இந்நிகழ்ச்சியை "நடு" ஆசிரியர் எழுத்தாளர் கோமகன் ஒழுங்குசெய்துள்ளார்.
Read more...
Thursday, 24 January 2019 09:28
- தகவல்: முருகபூபதி -
நிகழ்வுகள்

தகவல்: முருகபூபதி -
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
Wednesday, 23 January 2019 01:15
- தகவல்: கவிஞர் கருணாகரன் -
நிகழ்வுகள்

- தகவல்: கவிஞர் கருணாகரன் -
Last Updated on Wednesday, 23 January 2019 01:19
Sunday, 20 January 2019 15:24
- தகவல்: கவிஞர் அகணி சுரேஸ் -
நிகழ்வுகள்
 தமிழ் அழகே எங்கள் தமிழ் அழகே! மேலும் ஒரு முயற்சி! காணொளியை பார்த்தும் கேட்டும் கருத்துக் கூறுங்கள். முடிந்தளவு பகிர்ந்து கொள்ளுங்கள். இசையமைப்பாளர் சுதர்சன் மற்றும் எல்லாக் கலைஞர்களுக்கும் மிக்க நன்றி. காணொளியை பார்த்தும் கேட்டும் கருத்துக் கூறுங்கள். முடிந்தளவு பகிர்ந்து கொள்ளுங்கள். இசையமைப்பாளர் சுதர்சன் மற்றும் எல்லாக் கலைஞர்களுக்கும் மிக்க நன்றி.
பாடல் வரிகள் & பாடல் தயாரிப்பு : கவிஞர் அகணி சுரேஸ் இசையமைப்பாளர் : சுதர்சன் பாடகர்கள் : மதுசிகன் , மதுசா குகதாசன், டெனின்ரா (மழலைக் குரல்) அணிசேர் கலைஞர்கள் : தசா குகன் - புல்லாங்குழல் , ரட்ணம் ரட்ணதுரை - மிருதங்கம், ரூபன், அபிஸன், வெற்றி துஷ்யந்தன் ஒளிப்பதிவு : வினு
My sincere appreciation to Music Director Sutharsan and all artists. Kindly sign in to you tube and give your comments.
https://www.youtube.com/watch?v=3tqb2Dx4ZnI
Last Updated on Sunday, 20 January 2019 15:37
Read more...
Tuesday, 08 January 2019 20:38
- தகவல்: அல்ஃபிரெட் -
நிகழ்வுகள்

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
Last Updated on Tuesday, 08 January 2019 20:46
Tuesday, 08 January 2019 08:23
- சத்தியன் -
நிகழ்வுகள்
Last Updated on Tuesday, 08 January 2019 08:27
Read more...
Monday, 07 January 2019 07:11
- தகவல்: மைக்கல் கொலின் -
நிகழ்வுகள்

"வேலணை.காம்" (கனடா) இன் நிதி அனுசரணையில் "தட்டுங்கள்.காம்" (கனடா) இன் ஊடக பங்களிப்புடன் "மகுடம்" கலை இலக்கிய சமூக பண்பாட்டுக் காலாண்டிதழ் ஆண்டு தோறும் வழங்கவிருக்கும் "பிரமிள் விருது"ம் பிரமிள் நினைவுப் பேருரைத் தொடரும். 20-04-2019 இல் அமுத விழா காணும் நவீன தமிழ் இலக்கியத்தில் பாரதிக்கு பின் மிகப் பெரும் இலக்கிய ஆளுமையாக கருதப்படும் உலகம் போற்றும் தமிழ் கவிஞர் பிரமிள் என அழைக்கப்படும் தர்மு சிவராம் நினைவாக கவிதைக்கு வழங்கப்படவிருக்கும் " பிரமிள் விருது" தொடர்பான அறிவிப்பும் நிபந்தனைகளும்.
Last Updated on Monday, 07 January 2019 07:48
Read more...
Wednesday, 02 January 2019 20:30
- தகவல்: அகில் -
நிகழ்வுகள்

toronto tamilsangam <torontotamilsangam
Last Updated on Wednesday, 02 January 2019 20:33
Sunday, 30 December 2018 23:18
- தகவல்: முருகபூபதி -
நிகழ்வுகள்
Last Updated on Sunday, 30 December 2018 23:41
Thursday, 27 December 2018 09:00
- விருட்சம் -
நிகழ்வுகள்
Last Updated on Thursday, 27 December 2018 20:27
Thursday, 20 December 2018 00:17
- தகவல்: அகில் -
நிகழ்வுகள்
Friday, 14 December 2018 19:57
-தகவல்: விருட்சம் -
நிகழ்வுகள்
Thursday, 06 December 2018 06:53
- தகவல்: இளங்கோவன் -
நிகழ்வுகள்
கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் எதிர்வரும் 9-ம் திகதி (09 - 12 - 2018) ஞாயிறு மாலை 5 மணிக்கு ஆறு நூல்களின் அறிமுக நிகழ்வு இடம்பெறவுள்ளது. தமிழ்ச் சங்கச் சங்கரப்பிள்ளை மண்டபத்தில், பொதுவுடமைத் தத்துவ ஆசான் தோழர் என். சண்முகதாசன் அரங்கில், மூத்த பத்திரிகையாளர் வீ. தனபாலசிங்கம் தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில், மூத்த கலை இலக்கியப் படைப்பாளர் - பத்திரிகையாளர் திருமதி அன்னலட்சுமி இராசதுரை கௌரவிக்கப்படவுள்ளார். இலக்கியப் புரவலர் ஹாசிம் உமர் முன்னிலை வகிப்பார். 'ஞானம்" சஞ்சிகை ஆசிரியர் தி. ஞானசேகரன், ஓய்வுபெற்ற கல்லூரி அதிபர் மா. கணபதிப்பிள்ளை, கொழும்பு மாநகரசபை உறுப்பினர் எஸ். பாஸ்கரா ஆகியோர் வாழ்த்துரை வழங்கவுள்ளனர்.
பிரான்ஸ் நாட்டில் வதியும் மூத்த எழுத்தாளர் வி. ரி. இளங்கோவனின் 'ஈழத்து மண் மறவா மனிதர்கள், என் வழி தனி வழி அல்ல..., ஒளிக்கீற்று" ஆகிய நூல்களும் பத்மா இளங்கோவனின் 'செந்தமிழ் குழந்தைப் பாடல்கள், செந்தமிழ் பாப்பாப் பாடல்கள்" ஆகிய நூல்களும் 'பாரதி நேசன்" வீ. சின்னத்தம்பியின் 'ஈழத்தின் வடபுலத்தில் கம்யூனிஸ இயக்கத்தின் வளர்ச்சியில் தமிழ்ப் பெண்கள்" என்ற நூலும் இந்நிகழ்வில் வெளியிடப்படுகின்றன.
Last Updated on Thursday, 06 December 2018 06:57
Read more...
Monday, 03 December 2018 20:52
- தகவல்: அருள் சவரிமுத்து -
நிகழ்வுகள்
Arul Saverimuthu <
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
>
Last Updated on Monday, 03 December 2018 21:02
Monday, 03 December 2018 20:34
- தகவல்: முல்லை அமுதன் -
நிகழ்வுகள்

வணக்கம், காற்றுவெளி மார்கழி (2018) மாத இதழ் உங்கள் பார்வைக்கு. படைப்புக்கள் தந்துதவிய அனைத்துப்படைப்பாளர்களுக்கும் எமது நன்றி. தொடர்ந்து நீங்கள் தரும் ஆதரவே எம்மால் தொடர்முடிகிறது. கார்த்திகை (2018) இதழுடன்,26 & 27ஆம் திகதிகளில் சிறப்பிதழ்களையும் தந்திருந்தோம். மின்னிதழ் கிடைக்காதவர்கள் உங்கள் மின்னஞ்சலை தாருங்கள். தொடர்வோம்.
நம்பிக்கையுடன், முல்லைஅமுதன்
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
http://kaatruveli-ithazh.blogspot.com/
Last Updated on Monday, 03 December 2018 20:42
Monday, 03 December 2018 20:25
- தகவல்: எம்.பெளசர் -
நிகழ்வுகள்
காலம்- 08 டிசம்பர் 18 (சனி) மாலை 3.00 மணிக்கு இடம் - Trinity Centre, East Avenue, Eastham ,E12 6SG (Nearest Underground Station: East Ham)
அனைவரையும் அழைக்கிறோம். உரிய நேரத்திற்கு நிகழ்வு தொடங்கும் ACTIVITY CENTRE FOR TAMIL LANGUAGE COMMUNITIES – A.C.T தொடர்பு 07817262980 (Fauzer), 07402868713 (Sabesan)
அமர்வு-01 - வழிப்படுத்தல் - நா.சபேசன்
1. "ஆராய்ச்சியாளர், பத்திரிகையாளர் ஐராவதம் மகாதேவன்" - உரை - எஸ். விசாகன் (மானிடவியல், சாசனவியல் ஆய்வாளர்) 2. "முழு நேர ஊழியன் தோழர் ஏ.எம்.கோதண்டராமன்" - கட்டுரை - முன்னாள் பேராசிரியர் தெய்வசுந்தரம் , சென்னைப் பல்கலைகழகம் 3. "கூத்துப்பட்டறை நிறுவனர் ந.முத்துசாமி " உரை - மு. நித்தியானந்தன் ( எழுத்தாளர் கல்வியலாளர், கலை இலக்கிய விமர்சகர்)
Last Updated on Monday, 03 December 2018 20:29
Read more...
Monday, 03 December 2018 20:04
-தகவல்: தீவகம் வே.இராசலிங்கம் -
நிகழ்வுகள்
Last Updated on Monday, 03 December 2018 20:59
Saturday, 24 November 2018 00:52
- ரிம்ஸா முஹம்மத் -
நிகழ்வுகள்
வெலிகம ரிம்ஸா முஹம்மத் எழுதிய 'விடியல்' நூல் அறிமுக விழா 2018 டிசம்பர் 02 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை மாலை 4.15 மணிக்கு கொழும்பு தமிழ்ச் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
பூங்காவனம் இலக்கிய வட்டம் ஏற்பாடு செய்திருக்கும் இந்நிகழ்வு, இலக்கியப் புரவலர் அல்ஹாஜ் ஹாஷிம் உமர் அவர்கள் முன்னிலையில் பேராசிரியர் சபா. ஜெயராசா அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அமைச்சர் அல்ஹாஜ் ரிசாட் பதியுத்தீன் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பிக்கவுள்ளார். அத்துடன் விசேட அதிதியாக முன்னாள் கடற்தொழில் நீரியல் வள கிராமிய பொருளாதார அலுவல்கள் துறை பிரதி அமைச்சர் அல்ஹாஜ் எம்.எஸ்.எஸ். அமீர் அலி அவர்கள் கலந்துகொள்ளவுள்ளார். தொழிலதிபர் அல்ஹாஜ் ஏ.ஆர்.எம். அரூஸ் நூலின் முதற்பிரதியைப் பெற்றுக்கொள்ளவுள்ளார்.
கொடைவள்ளல் அஸ்ஸெய்யத் ஹனீப் மௌலானா, ஓய்வு பெற்ற அதிபர் கவிஞர் மூதூர் முகைதீன் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கொழும்பு பல்கலைக்கழக உளவளத்துறை விரிவுரையாளர் அல்ஹாஜ் யூ.எல்.எம். நௌபர், மூஷான் இன்டர்நெஷனல் தலைவர் அல்ஹாஜ் எம். முஸ்லிம் ஸலாஹுதீன், இப்ராஹீமிய்யா கல்லூரி பணிப்பாளர் அல்ஹாஜ் வை.எம். இப்ராஹிம், டாக்டர் அல்ஹாஜ். ஏ.பீ. அப்துல் கையூம் (ஜே.பி.), கலாநிதி யூசுப் கே. மரைக்கார், பன்னூலாசிரியர் கலாபூஷணம் பீ.ரீ. அஸீஸ், அமேசன் கல்லூரி பணிப்பாளர் ஜனாப். இல்ஹாம் மரிக்கார், அஸீஸ் மன்றத் தலைவர் அல்ஹாஜ் அஷ்ரப் அஸீஸ் ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவும் கலந்துகொள்வார்கள்.
மௌலவி. காத்தான்குடி பௌஸ் அவர்களின் கிராஅத்துடன் ஆரம்பிக்கவிருக்கும் இந்நிகழ்வில் தர்காநகர் தேசிய கல்வியியல் கல்லூரி விரிவுரையாளரும் எழுத்தாளருமான யாழ். ஜுமானா ஜுனைட் வரவேற்புரையை நிகழ்த்த வாழ்த்துரைகளை சிரேஷ்ட கலைஞர் கலைச்செல்வன், காப்பியக்கோ டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன், நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் அல்ஹாஜ் என்.எம். அமீன் ஆகியோர் நிகழ்த்தவுள்ளார்கள்.
Last Updated on Saturday, 24 November 2018 01:15
Read more...
Thursday, 22 November 2018 07:16
- svashindia -
நிகழ்வுகள்
Last Updated on Thursday, 22 November 2018 07:25
Read more...
Thursday, 15 November 2018 21:50
- தகவல்: விருட்சம் -
நிகழ்வுகள்
Last Updated on Thursday, 15 November 2018 21:58
Monday, 12 November 2018 07:17
- ரொறன்ரோதமிழ்ச்சங்கம் -
நிகழ்வுகள்
Last Updated on Monday, 12 November 2018 07:24
Read more...
Sunday, 11 November 2018 03:17
- முருகபூபதி -
நிகழ்வுகள்
 
அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஏற்பாட்டில் தமிழக எழுத்தாளரும் இலக்கிய ஆய்வாளருமான தமிழச்சி தங்கபாண்டியன் கலந்துகொள்ளும் இலக்கியச்சந்திப்பு மெல்பனில், வேர்மண் தெற்கு சமூக மண்டபத்தில், எதிர்வரும் 25 ஆம் திகதி ( 25-11-2018) ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணிக்கு நடைபெறும்.
Last Updated on Sunday, 11 November 2018 03:23
Read more...
Saturday, 10 November 2018 19:22
- தகவல்: தேவகாந்தன் -
நிகழ்வுகள்
 'காயம் பட்ட நிலம்' இலங்கைத் தமிழ் மக்கள் மட்டுமில்லை, பூப்பரப்பின் பல்வேறு மக்களும் இயற்கையும் பட்ட காயத்தினது அடையாளமாகும். (இதழின் ஆசிரிய தலையத்திலிருந்து)
கூர் 2018 'காயம் பட்ட நிலம்' வெளியீடு இம்மாதம் 18ஆம் திகதி (நவ. 18, 2018) ஞாயிற்றுக்கிழமை மாலை 04.00 மணிக்கு Scarborough Recreation Centre, 3600 Markham Rd., ON M1M 1R9 என்ற முகவரியில் நிகழவிருக்கிறது. இலக்கிய ஆர்வலர்கள், கூர் 2018 படைப்பாளிகள் அன்புடன் அழைக்கப்படுகிறார்கள். -கூர் இலக்கிய வட்டம் -
Last Updated on Saturday, 10 November 2018 19:39
Wednesday, 07 November 2018 20:23
- தகவல்: தேசபாரதி தீவகம் வே.இராசலிங்கம் -
நிகழ்வுகள்

Rajalingam Velauthar <
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
>
Last Updated on Wednesday, 07 November 2018 20:29
Tuesday, 06 November 2018 22:39
- மணிமாலா -
நிகழ்வுகள்
சென்ற ஞாயிற்றுக் கிழமை (4-11-2018) திரு.அகணி சுரேஸ் அவர்களின் மணிமேகலைப் பிரசுரத்தால் பதிக்கப்பட்டுள்ள, இன்னும் இருக்கிறது இனிய வாழ்வு என்ற நாவல் நூலின் சிறப்புப் பிரதிகள் வழங்கல் நிகழ்வு ஈஸ்ட்ரவுன் ஒன்றுகூடல் மண்டபத்தில் மாலை மூன்று மணியளவில் அமரர் அலெக்ஸ்சாந்தர் நினைவு அரங்கில் ஆரம்பித்து மிகவும் சிறப்பாக நடைபெற்றது. மங்கள விளக்கேற்றி, தமிழ்தாய் வாழ்த்து, கனடிய தேசிய கீதம், அகவணக்கம் ஆகியவற்றைத் தொடர்ந்து வரவேற்புரை இடம் பெற்றது. சிற்றுண்டி உபசாரத்தோடு ஆரம்பித்த இந்த நிகழ்வு வழமையான நூல் வெளியீடு போன்று இருக்காது சற்று வித்தியாசமானதாக இருந்தது.
இந்நிகழ்வில் நூல் பற்றிய விமர்சன உரைகளோ அல்லது வாழ்த்துரை, அறிமுகவுரை போன்ற நூலாசிரியர் பற்றிய உரைகளோ இருக்கமாட்டாது என்று நூல் ஆசிரியர் விரும்பம் தெரிவித்தாலும் மாறாகச் சிலரின் உரை வாழ்த்துரையாக மாறியிருந்தது. ‘எதிர்காலச்சந்தியினரை எவ்வாறு படைப்பாளர்களாக மாற்றுவதற்கு ஊக்கப்படுத்தலாம்’ என்ற தலைப்பில் அறிஞர்களின் உரைகள் இடம்பெறவேண்டும் என்று ஆசிரியர் விரும்பி இருந்ததால் உரையாற்றியவர்கள் அதுபற்றித் தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர். அவையோர் மிகவும் ஆர்வத்துடன் உரைகளைக் கேட்டு மகிழ்ந்தனர். சிறுவர், சிறுமிகளின் சிறப்பான திறமைகளும் இந்த நிகழ்வில் வெளிக்காட்டப் பெற்றன. நிகழ்வுகளை தந்த சிறுவர், சிறுமிகளுக்குப் பரிசுகள் கொடுக்கப்பட்டு, அவர்களின் பெற்றோரும் பாராட்டப்பட்டனர். அறிஞர்களின் உரைகளுக்கு இடையில் அரைமணித்தியாலங்களுக்கு ஒரு தடவை சிறப்புப் பிரதிகள் வழங்கப்பட்டன. நூல் வெளியீட்டின் போது, அகணி சுரேஸ் அவர்கள் இயற்றிய பாடல் ஒன்றும் அவரது மகனால் இசை அமைக்கப் பெற்று ஒலி வடிவில் இடம் பெற்றது.
நிகழ்வின்போது இடம் பெற்ற எழுத்தாளர் குரு அரவிந்தனின் உரையில் இருந்து ஒரு பகுதியயைத் தருகின்றேன்:
எதிர்காலச்சந்ததியினரை எவ்வாறு படைப்பாளர்களாக மாற்றலாம் என்ற தலைப்பில் உரையாற்றும்படி நூலாசிரியர் கேட்டிருந்தார். பொதுவாக எடுத்துக் கொண்டால் படைப்பாளிகள் என்று குறிப்பிடும் போது படைப்பாளிகள் பல விதப்பட்டாலும் இங்கே ஆக்க இலக்கியத்தை மட்டும் கவனத்தில் எடுத்துக் கொண்டு, அதைப்பற்றிக் குறிப்பிட விரும்புகின்றேன். எதிர்கால சந்ததியினரைப் படைப்பாளிகளாக மாற்றுவதற்கு முதலில் இலக்கியத்தில் ஈடுபாடு கொள்வதற்கு ஏற்ற சூழலை அவர்களுக்காக உருவாக்கிக் கொடுக்க வேண்டும். அதற்கு முதற் கட்டமாக வாசிப்புப் பழக்கத்தை அவர்களிடம் ஏற்படுத்த வேண்டும். தாயகத்தில் படித்தவர்கள் அதிகமாக இருந்தாலும் அவர்கள் எல்லோரும் படைப்பாளிகளாக மாறவில்லை. பள்ளிப்படிப்பைத்தவிர வேறு எந்தப் பொழுது போக்குப்படிப்புகளுக்கும் அனேகமான பெற்றோர் பிள்ளைகளை அனுமதிக்கவில்லை. குறிப்பாக கதைப்புத்தகங்கள், வார, மாத இதழ்களைகூட வாசிக்க விடவில்லை. அதனாலே உயர்கல்வி கற்ற பலர் குறிப்பிட்ட துறையில் கல்வி அறிவு பெற்றிருந்தாலும், இலக்கியத்திலோ அல்லது பொது அறிவிலோ சிறந்து விளங்கவில்லை. எங்கள் சமூகத்தில் இன்றும் அங்கும்சரி, இங்கும்சரி அது ஒரு குறைபாடாகவே இருக்கின்றது. ஆனாலும் இதை எல்லாம் கடந்து ஆங்காங்கே பல படைப்பாளிகள் உருவாக்கப் பட்டிருந்தார்கள் என்பதே உண்மை.
Last Updated on Tuesday, 06 November 2018 22:52
Read more...
Monday, 05 November 2018 23:09
- வாசன் -
நிகழ்வுகள்
இதுவரை நான்கு முழுநாள் நாவல் கருத்தரங்கினை நடாத்தி முடித்த விம்பம் கலை இலக்கிய திரைப்பட கலாச்சார அமைப்பானது கடந்த சனிக்கிழைமை (03.11.2018) அன்று முழுநாள் சமகால கவிதை அரங்கொன்றினை ஈஸ்ட்ஹாம் Trinity Centre London இல் வெற்றிகரமாக நடாத்தி முடித்திருந்தது. இலங்கை,இந்தியா, புகலிட நாடுகள் என்று உலகெங்கும் பரந்து கிடக்கும் சுமார் 20 கவிஞர்களின் படைப்புக்களை ஒரே அரங்கில் அறிமுகப்படுத்தவும், விமர்சனம் செய்யும் முகமாகவும் நடத்தப்பட்ட இந்நிகழ்வில் அருந்ததி ரட்ணராஜ், T.சௌந்தர் ஆகியோரது ஓவியக்கண்காட்சியும் இடம் பெற்றிருந்தது.
மேற்குறித்த இரு ஓவியர்களினதும் ஓவியங்களினால் அலங்கரிக்கப்பட்டிருந்த ஒரு அற்புதமான அரங்க சூழலில் இந்நிகழ்வானது காலை 11 மணியளவில் ஆரம்பமாகியது. மூன்று அமர்வுகளாக நடந்தேறிய இந்நிகழ்வில் இங்கு உரையாற்றுபவர்கள் ஒவ்வொருவருக்கும் 15 நிமிடங்கள் மட்டுமே பேசக் கொடுக்கப்பட்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
முதலாவது அமர்வினை மீனாள் நித்தியானந்தன் வழிநடத்தினார். முதலாவது உரையினை கவிஞர் சுகிர்தராணியின் ‘இப்படிக்கு ஏவாள்’ கவிதைத்தொகுதி குறித்து தோழர் வேலு அவர்கள் நிகழ்த்தினார். அவர் தனதுரையில் உடல் தொடர்பான வலிகளை வதைகளை ஆனந்தத்தை விபரிக்கும் சுகிர்தராணி சமூகப்பிரச்சினைகள் தொடர்பாக எப்போதும் தனது ஆழ்ந்த கருத்துக்களை வைப்பதாக கூறி அவரது கவிதைகள் மட்டுமல்லாமல் அது வெளிப்படுத்துகின்ற மொத்த சாராம்சத்தினை அவரது கருத்தியல் குறித்தும் பேசினார்.
நெற்கொழுதசனின் ‘வெளிச்சம் என் மரணகாலம்’ தொகுதி குறித்து குல சபாநாதனும் கலா ஸ்ரீரஞ்சனும் உரையாற்றினார்கள். குலசபாநாதன் இவரது கவிதைகள் தவறவிட்ட தருணங்களின் தவிப்புக்கள் என்றும் கலா ஸ்ரீரஞ்சன் துவாரங்கள் வழியாக சீறிப்பாயும் ஒளிக்கீற்றுக்கள் போல இக்கவிதைகள் ஒவ்வொருவர் எண்ணங்களிலும் வெவ்வேறு பரிமாணங்களாக பரிணமிக்கும் என்றும் குறிப்பிட்டனர்.
Last Updated on Monday, 05 November 2018 23:17
Read more...
Thursday, 01 November 2018 23:07
- குரு அரவிந்தன் -
நிகழ்வுகள்
கனடாவில் கடந்த 25 வருடங்களாகப் பல்வேறு வழிகளில் கலை, இலக்கிய சேவையாற்றிவரும் கனடா தமிழ் எழுத்தாளர் இணையம், தனது 25வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடத்தும் உலகளாவிய சிறுகதைப் போட்டி. பரிசு பெறும் எழுத்தாளர்களுக்காகப் 16 பரிசுகள், மொத்தம் இலங்கை நாணயம் 170,000 ரூபாய்களும்;, சான்றிதழ்களும் காத்திருக்கிறன. பரிசுபெறுகின்றவர்கள் வாழும் நாடுகளில் உள்ள நாணயப் பெறுமதிக்கு ஏற்ப அவர்களுக்குரிய பரிசு, நாணய மாற்றம் செய்யப்படும்
முதலாவது பரிசு இலங்கை ரூபாய்கள் – 50,000 (அமரர் பண்டிதர் எவ். எக்ஸ். அலெக்ஸாந்தர் ஞாபகார்த்தமாக.) இரண்டாவது பரிசு இலங்கை ரூபாய்கள் – 30,000 (அமரர். திருமதி வள்ளிநாயகி இராமலிங்கம் (எழுத்தாளர் குறமகள்) ஞாபகார்த்தமாக) மூன்றாவது பரிசு (இரண்டு எழுத்தாளர்களுக்கு) தலா இலங்கை ரூபாய்கள் - 20,000 (ஒன்று அமரர்களான திரு, திருமதி. தம்பியப்பா ஞாபகார்த்தமாகவும் மற்றையது அமரர். அதிபர் பொ. கனகசபாபதி (மகாஜனா) ஞாபகார்த்தமாகவும்) ஏழு பாராட்டுப் பரிசுகள் ஒவ்வொருவருக்கும் இலங்கை ரூபாய்கள் – 5000 (அமரர் அதிபர் அ. குருநாதபிள்ளை (நடேஸ்வரா) ஞாபகார்த்தமாக.) ஐந்து ஊக்கப் பரிசுகள் ஒவ்வொருவருக்கும் இலங்கை ரூபாய்கள் – 3000 ( அமரர் தாவளை இயற்றாலை கணபதிப்பிள்ளை கந்தசாமி ஆசாரியார் ஞாபகார்த்தமாக. )
போட்டிக்கான விதி முறைகள்: போட்டிக்கு அனுப்பப்படும் சிறுகதைகள் அச்சுப் பதிவில் 1200 வார்த்தைகளுக்கு மேற்படாமல் இருக்க வேண்டும். ஒரு எழுத்தாளர், ஒரு சிறுகதை மட்டுமே அனுப்ப முடியும். போட்டிக்கு அனுப்பிவைக்கப்படும் சிறுகதைகள், இதற்கு முன் எந்தப் பத்திரிகையிலோ, அல்லது இணையத்தளத்திலோ பிரசுரமாகவில்லை என்றும், இந்தப் போட்டி முடிவுகள் வெளியாகும்வரை பிரசுரத்திற்காக அனுப்புவதில்லை என்றும் உறுதி மொழி தரவேண்டும். விதிமுறைகளுக்கு மீறிய கதைகள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
போட்டியில் பங்குபற்றும் எழுத்தாளர்கள் அனுப்பிவைக்கும் சிறுகதைகள் தங்கள் சொந்தக் கற்பனை என்பதையும் இந்தப் போட்டிக்காக அவர்களால் எழுதப்பட்டது என்பதையும் மின்னஞ்சல் மூலம் உறுதிப் படுத்த வேண்டும். உறுதிப்படுத்தாத கதைகள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. போட்டிக்கான சிறுகதைகள் தமிழர்களின் வாழ்வியலோடு தொடர்புடையதாக அவர்களது அரசியல் பொருளாதார சமூகம் சார்ந்த விடயங்களுக்குள் அமைவது வரவேற்கத்தக்கது.
Last Updated on Thursday, 01 November 2018 23:13
Read more...
Thursday, 01 November 2018 21:49
-முருகபூபதி -
நிகழ்வுகள்
அவுஸ்திரேலியா விக்ரோரியா மாநிலத்தில் மெல்பனில் நாளை 4 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் வருடாந்த நிகழ்வான தமிழ் எழுத்தாளர் விழா நடைபெறுகிறது. சங்கத்தின் தலைவர் திரு. சங்கர சுப்பிரமணியன் தலைமையில் இம்முறை மெல்பனில், Keysborough Secondary College மண்டபத்தில் நடைபெறும் இவ்விழா குறித்து இலங்கையிலிருந்து வெளிவரும் ஞானம் கலை இலக்கிய மாத இதழின் பிரதம ஆசிரியர் மருத்துவர் தி. ஞானசேகரன் அனுப்பியிருக்கும் தனது வாழ்த்துச்செய்தியில், " 2001ஆம் ஆண்டு முதல் மிகவும் சிறப்பான முறையில் இடம்பெற்றுவரும் அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கியச் சங்கத்தின் தமிழ் எழுத்தாளர்விழா இவ்வருடம் மெல்பன் நகரில் இடம்பெறுவது மகிழ்ச்சியைத் தருகிறது. " என குறிப்பிட்டுள்ளார்.
இச்செய்தியில் மேலும் தெரிவித்திருப்பதாவது:
அவுஸ்திரேலியாவில் வதியும் எழுத்தாளர்கள், கலைஞர்கள், கவிஞர்கள், ஊடகவியலாளர்கள், கலை-இலக்கிய ஆர்வலர்கள் வருடந்தோறும் ஒன்றுகூடும் விழாவாக இது நடைபெற்றுவருகிறது. அத்தோடு இலங்கையிலிருந்தும் வேறு நாடுகளிலிருந்தும் எழுத்தாளர்கள் இவ்விழாவில் கலந்துகொள்வது வழக்கமாகும்.2001ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாவது எழுத்தாளர் விழாவிலே நானும் எனது துணைவியாரும் பங்குபற்றினோம். அவ்விழாவில் மல்லிகை அவுஸ்திரேலியச் சிறப்பிதழை அதன் ஆசிரியர் டொமினிக் ஜீவாவின் சார்பில் வெளியிட்டுவைத்து உரையாற்றியமை மறக்கமுடியாத அனுபவமாகும். அத்தோடு அவ்விழாவில் இடம்பெற்ற கருத்தரங்குகளில் பங்குகொண்டதும் ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பித்ததும் இனிமையான நிகழ்வுகள். அதன்பின் 2004ஆம், 2006ஆம், 2016ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற விழாக்களிலும் நாம் இருவரும் பங்குபற்றினோம். 2004ஆம் ஆண்டு கன்பரா மாநிலத்தில் நடைபெற்ற விழாவில் "ஞானம்" இதழின் அவுஸ்திரேலிய நான்காவது தமிழ் எழுத்தாளர் விழா சிறப்பிதழை வெளியிட்டது எமக்குப் பெருமைதரும் நிகழ்வாக அமைந்தது.
வருடம்தோறும் நடக்கும் இவ்விழாக்கள் மெல்பன், சிட்னி, கன்பரா, குவின்ஸ்லாந்து ஆகிய இடங்களில் இடம்பெற்று, இப்பிரதேசங்களில் உள்ள எழுத்தாளர்கள், கலைஞர்கள் பங்குகொள்ள வகைசெய்வதும் சிறப்பான செயற்பாடாகும். இவ்வருட விழாவில் ஓவியக்கண்காட்சி, மறைந்த தமிழ் அறிஞர்கள், படைப்பாளர்கள் ஒளிப்படக்காட்சி, நூல்கள், இதழ்கள்,பத்திரிகைகள் கண்காட்சி, நாவல் இலக்கியக் கருத்தரங்கு, கவிஞர்கள்அரங்கு, மெல்லிசை அரங்கு என்பன இடம்பெறவுள்ளதை அறிந்து மகிழ்ச்சியடைகின்றோம். தமிழ்மொழியை தமிழர்பண்பாட்டை தமிழர் தம் கலை இலக்கிய முயற்சிகளை புகலிட நாட்டில் போற்றிப் பேணும் பெரும்பணியாக இவ்விழாக்கள் அமைகின்றன. ஒவ்வொரு வருடமும் இவ்விழாவைச் சிறப்பாக ஒழுங்குசெய்து சிறந்த முறையில் நடத்திவரும் அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கியச் சங்க நிர்வாகிகள் யாபேரது பணிகளையும் பாராட்டுகிறேன். விழா சிறப்புற அமைய வாழ்த்துகிறேன்.
Last Updated on Thursday, 01 November 2018 23:13
Read more...
Sunday, 21 October 2018 01:02
- ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி-கனடா -
நிகழ்வுகள்
Last Updated on Sunday, 21 October 2018 01:06
Sunday, 21 October 2018 00:51
- சமாதானத்திற்க்கான கனேடியர்கள் மற்றும் சம உரிமை இயக்கம் -
நிகழ்வுகள்
Last Updated on Sunday, 21 October 2018 01:06
Sunday, 21 October 2018 00:28
- தகவல்: தீவகம் வே.இராசலிங்கம் -
நிகழ்வுகள்
Last Updated on Sunday, 21 October 2018 00:34
Sunday, 21 October 2018 00:21
- அகணி சுரேஷ் -
நிகழ்வுகள்

காலம் (Date & Time) : 04-11- 2018 ஞாயிற்றுக்கிழமை மாலை 2:30 மணி – மாலை 5:30 மணி இடம் (Venue) : ஈஸ்ட் ரவுண் மண்டபம் (East Town Banquet Hall) (Eglinton Avenue E & Brimley Intersection) 2648, Eglinton Avenue East Scarborough, ON, M1K 2S3
அன்புடையீர்! உங்கள் பொன்னான நேரத்தில் ஒரு சில மணித்துளிகளை எனது முயற்சிக்கு ஆதரவு தருவதற்காகச் செலவழித்து வருகை தந்து சிறப்புப் பிரதிகளை வாங்கிச் செல்லுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன். உங்களின் வரவையும், வாழ்த்தினையும், ஆதரவையும் எதிர்பார்க்கின்றேன்.
அன்புடன் அகணி சுரேஸ், நூலாசிரியர் Cell: 416-732-8021
Suresh S A <
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
>
Last Updated on Sunday, 21 October 2018 00:59
Sunday, 21 October 2018 00:06
- தகவல்: வி.என்.மதியழகன் -
நிகழ்வுகள்
"உங்கள் வருகை எங்கள் உவகை. உள்ளன்போடு அழைக்கிறேன். உங்கள் வி.என்.மதிஅழகன்"
"வி.என்.மதிஅழகன் சொல்லும் செய்திகள்" கருவி நூல் வெளியீடு ஸ்காபறோ சிவிக் சென்ரர் அங்கத்தவர் சபா மண்டபம். நொவம்பர் மாதம் 3-ம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 3.00 மணி. ஒலிபரப்பாளர்கள், ஒளிபரப்பாளர்கள், பத்திரிகையாளர்கள், செய்தியாளர்கள், எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், அறிஞர்கள், கல்வியாளர்கள், தகைசார் வல்லுனர்கள், கலைஞர்கள், நேயர்கள், வாசகர்கள், உறவினர்கள் சங்கமிக்கும் ஓர் உன்னத நிகழ்வு.
உங்கள் வருகை எங்கள் உவகை. உள்ளன்போடு அழைக்கிறேன். உங்கள் வி.என்.மதிஅழகன்.

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
Last Updated on Sunday, 28 October 2018 19:50
Saturday, 20 October 2018 23:22
- எஸ்.வாசன் -
நிகழ்வுகள்
மீண்டுமொரு முழுநாள் நாவல் கருத்தரங்கொன்றினை விம்பம் கலை, இலக்கிய கலாச்சார அமைப்பானது வெற்றிகரமாக நடாத்திக் காட்டியுள்ளது. ஏற்கனவே ஒளியூட்டப்பட்ட நாவல்கள் அல்லது பிரபல்யமான படைப்பாளிகளின் நாவல்கள் என்றில்லாமல் எப்போதுமே விளிம்பு நிலை மக்களின் வாழ்வியலை களமாகக் கொண்டு ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலிக்கின்ற படைப்புக்களையே தனது தேர்வாகக் கொண்டுள்ள விம்பம் அமைப்பானது இம்முறையும் தான் வரித்துக் கொண்ட கோட்பாட்டிலிருந்து சற்றும் வழுவாமல் தனது கடமையை செவ்வனே நிறைவேற்றிக் காட்டியுள்ளது. இதற்காக தனியொரு மனிதனாக இருந்து அர்ப்பணிப்புடன் இயங்கும் ஓவியர் கிருஷ்ணராஜாவின் பணிகள் என்றுமே எம்மைப் பிரமிப்பிலும் வியப்பிலும் ஆழ்த்துபவை. இது நான்காவது நாவல் கருத்தரங்கு. கடந்த 22.10.201 சனிக்கிழமையன்று வழமை போன்று ஈஸ்ட்ஹாம் Trinity Centre London இல் காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை நடை பெற்ற இம்முழு நாள் கருத்தரங்கில் சமகால இலக்கியப் படைப்புக்கள் ஆன 10 ஈழ, தமிழக, பிறமொழி நாவல்கள் 18 விமர்சகர்களினால் அறிமுகமும் விமர்சனமும் செய்யப்பட்டன. இது மட்டுமன்றி ஒளிப்படக் கலைஞர்கள் சுகுணசபேசன் (லண்டன்), தமயந்தி (நோர்வே), தமிழினி (கனடா), அமரதாஸ் (சுவிஸ்), கருணா (கனடா), சாந்தகுணம் (லண்டன்) ஜெயந்தன் (சுவிஸ்)ஆகியோரது ஒளிப்படக் கண்காட்சியும் அங்கு இடம்பெற்றிருந்தது.
கலை 11 மணியளவில் நிகழ்ச்சி ஆரம்பமாகியது. அரங்கின் இருபுறமும் காட்சிப்படுத்தப் பட்டிருந்த ஒளிப்படங்களினால் அரங்கம் பிரமிப்பூட்டும் அழகுடன் திகழ்ந்தது.
நிகழ்வின் முதலாவது அமர்வு நவஜோதி யோகரட்ணம் தலைமையில் நடைபெற்றது. முதலாவதாக தேவகாந்தன் எழுதிய ‘கந்தில் பாவை’ நாவல் விமர்சனத்திற்கு எடுக்கப்பட்டது. இந்நாவல் குறித்து கனடாவில் இருந்து ஸ்கைப் மூலம் கவிஞர் மு.புஷ்பராஜன் அவர்களும் கவிஞர் நா.சபேசனும் நிகழ்த்தினார்கள். இருவருமே இந்நாவல் குறித்த எதிர்மறையான கருத்துக்களையே அதிகம் வைத்தனர். முக்கியமாக இருவரும் இந்நாவலில் உள்ள வரலாற்று, புவியியல், விஞ்ஞான தகவல் பிழைகளையே அதிகமாக சுட்டிக்காட்டினர். இன்னமும் விரிவாக எழுதப்பட்டிருக்க வேண்டிய நாவல் அவசரத்தில் எழுதி முடிக்கப்பட்ட நாவல் போல் குறுகி விட்டதாகவும் கூறினார்கள். இதனை அவர்கள் எத்தகைய கண்ணோட்டத்தில் அல்லது எண்ணவோட்டத்தில் சொன்னார்களோ தெரியவில்லை. ஆனால் இது தேவகாந்தன் என்னும் ஒரு அற்புதமான கதை சொல்லியினால் ஒரு உன்னதமான தளத்தில் படைப்பு மொழியில் எழுதப்பட்ட நாவலாகவும், கடந்த பல வருடங்களில் வெளிவந்த சிறந்த நாவல்களில் ஒன்றாகவும் நான் கருதியிருந்த எனது எண்ணங்களில் எந்தவித மாற்றங்களினையும் ஏற்படுத்தவில்லை.
Last Updated on Sunday, 21 October 2018 07:38
Read more...
Sunday, 14 October 2018 21:35
- முருகபூபதி -
நிகழ்வுகள்
அவுஸ்திரேலியா : 30 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வும் வருடாந்த ஆண்டுப்பொதுக்கூட்டமும்
இலங்கையில் நீடித்த போர் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட தமிழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு, 1988 ஆம் ஆண்டு முதல் அவுஸ்திரேலியாவிலிருந்து உதவிவரும் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் முப்பதாவது ஆண்டு நிறைவு நிகழ்வும், வருடாந்த ஆண்டுப்பொதுக்கூட்டமும் இம்மாதம் 27 ஆம் திகதி ( 27-10-2018) சனிக்கிழமை மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணிவரையில் மெல்பனில் வேர்மண் தெற்கு சனசமூக நிலையத்தில் ( Vermont South Community House - Karobran Drive, Vermont South VIC 3133) நிதியத்தின் தலைவர் திரு. விமல் அரவிந்தன் தலைமையில் நடைபெறும்.
இதுவரையில் நூற்றுக்கணக்கான அன்பர்களின் ஆதரவுடன் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு உதவிய கல்வி நிதியத்தின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பான செயல் அமர்வும், மாணவர்களின் முன்னேற்றம் பற்றிய தகவல் அமர்வும் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு நிதியத்தின் உறுப்பினர்களையும், மாணவர்களுக்கு உதவ விரும்பும் அன்பர்களையும் அன்புடன் அழைக்கிறது இலங்கை மாணவர் கல்வி நிதியம்.
இந்நிகழ்வில், கலந்துரையாடலும் இராப்போசன விருந்தும் இடம்பெறவிருப்பதனால், தங்கள் வருகையை உறுதிப்படுத்தவும். இந்நிகழ்வில் கிடைக்கப்பெறும் நன்கொடைகள் நிதியத்திற்கே வழங்கப்பட்டு, மாணவர்களின் நிதிக்கொடுப்பனவில் சேர்த்துக்கொள்ளப்படும்.
Last Updated on Wednesday, 17 October 2018 07:53
Read more...
Sunday, 14 October 2018 07:47
- தகவல்: த.சிவபாலு -
நிகழ்வுகள்

நாள்: ஒக்ரோபர் 20, 2018 (சனிக்கிழமை) பிற்பகல் 5.00 மணி இடம்: ஐயப்பன் கோவில் மண்டபம் (635 Middlefield Rd, Scarborough, ON M1V 5B8)
குடும்ப சகிதம் வந்து எமது விழாவில் கலந்து சிறப்பிக்கும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்
நன்றி
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
Last Updated on Sunday, 14 October 2018 07:54
Sunday, 14 October 2018 07:13
- தகவல்: டாக்டர் போல் ஜோசேப் -
நிகழ்வுகள்
Last Updated on Sunday, 14 October 2018 07:16
Friday, 12 October 2018 07:35
- தகவல்: A.ராமச்சந்திரன் -
நிகழ்வுகள்

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
Last Updated on Friday, 12 October 2018 07:41
Wednesday, 10 October 2018 21:37
- தகவல்: குவிகம் -
நிகழ்வுகள்
Last Updated on Wednesday, 10 October 2018 21:41
Thursday, 04 October 2018 21:55
administrator
நிகழ்வுகள்

“தமிழியல் ஆய்வுகள் – வரலாறும் வளர்ச்சியும்.” பிரதம பேச்சாளர்: பேராசிரியர் கலாநிதி நா.சுப்பிரமணியன்
சிறப்புப் பேச்சாளர்கள் உரை: “தமிழில் பெண்ணியச் சிந்தனைகளின் தோற்றமும் வளர்ச்சியும்” - கலாநிதி மைதிலி தயாநிதி “தமிழரின் இசையியல் மற்றும் நடனவியல் ஆய்வுகள்” - கலாநிதி கௌசல்யா சுப்பிரமணியன் “சைவத்தின் புதிய புரிதல்களும் தெரிவுகளும்” - வைத்திய கலாநிதி இ.லம்போதரன்
ஐயந்தெளிதல்அரங்கு
நாள்: 27-10-2016 நேரம்: மாலை 3:00 முதல் 7:00 வரை இடம்: ரொறன்ரோதமிழ்ச்சங்கம் Unit 7, 5633, Finch Avenue East, Scarborough, M1B 5k9
Last Updated on Thursday, 04 October 2018 21:56
Read more...
Thursday, 04 October 2018 21:43
- மெல்போண் தமிழ் ஊடகப்பிரிவு -
நிகழ்வுகள்
ஈழத்து திரைப்படங்களில் ஒன்றான பனைமரக்காடு என்ற திரைப்படத்தின் முதலாவது காட்சி மெல்பேர்ணில் எதிர்வரும் ஒக்ரோபர் 6 ஆம் திகதி மாலை 3 மணிக்கும், சிட்னியில் ஒக்ரோபர் மாதம் 14 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 2 மணிக்கும், பின்னர் மாலை 5 மணிக்கும் என இரண்டு காட்சிகளாகவும் திரையிடப்படவுள்ளது. அதேவேளை ஒக்ரோபர் மாதம் 14 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தின் ராஜா திரையரங்கில் சிறப்பு விருந்தினர்களுக்கான மூன்று காட்சிகள் காண்பிக்கப்படவுள்ளன. அதனைத் தொடர்ந்து ஈழத்தின் அனைத்து பகுதிகளிலும் தமிழர் புலம்பெயர் தேசங்களிலும் திரையிடுவதற்கான பணிகள் நடைபெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மெல்பேர்ண் காட்சி விபரம் காலம்: ஒக்ரோபர் 6 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 3 மணிக்கு இடம்: Menzies Building E365, Monash University, Wellington Road, Clayton Victoria அன்பளிப்பு: $10 வெள்ளிகள்
தாயகத்திலிருந்து புதிய வெளியீடாக கேசவராஜனின் இயக்கத்தில் வெளிவரும், பனைமரக்காடு என்ற முழுநீள திரைப்படமானது போரிற்கு பின்னரான காலத்தில், தமிழ்மக்கள் எதிர்கொள்கின்ற நெருக்கடிகளை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படமாகும். ஈழத்து படைப்புக்களமானது உரியவகையில் ஆதரவு வழங்கப்பட்டு ஊக்குவிக்கப்படாது போனால், எமது தாயகத்தின் உயிர்ப்பான வரலாறுகள் மறைக்கப்பட்டுவிடும். இருக்கின்ற இடைவெளியில் எமது மக்களின் உணர்வுகள் சிலவற்றை சொல்லலாம், சிலவற்றை சொல்லாமல் சொல்லலாம் எனச்சொல்லும் இயக்குநர், 1986 இல் “தாயகமே தாகம்” என்ற திரைப்படத்துடன் அறிமுகமாகி, தமிழீழ திரைப்படத்துறையின் ஊடாக பிரபலமான “பிஞ்சுமனம்”, “திசைகள் வெளிக்கும்”, கடற்புலிகளின் “கடலோரக்காற்று”, “அம்மா நலமா” என்ற திரைப்படங்களையும் பல குறும்படங்களையும் இயக்கியவர்.
Last Updated on Thursday, 04 October 2018 21:51
Read more...
Sunday, 30 September 2018 06:29
- தகவல்: ஶ்ரீரஞ்சனி விஜேந்திரா -
நிகழ்வுகள்
Last Updated on Sunday, 30 September 2018 21:54
Thursday, 27 September 2018 07:41
- முருகபூபதி -
நிகழ்வுகள்

பம்பரு எவித் ( சிங்களம்) - பொன்மணி ( தமிழ்) ( Films ‘Bambaru Avith' and 'Ponmanie' )
In Commemoration of the Life and Times of Dr Dharmasena Pathiraja
Renowned Sri Lankan Filmmaker and Progressive Thinker People for Human Rights and Equality (PHRE) will screen ‘Bambaru Avith' (the wasps are here) with English subtitles followed by 'Ponmanie' with English and Sinhala Subtitles
30 September at 3 pm Chandler Theatre 28 Isaac road, Keysborough VIC 3173
Last Updated on Thursday, 27 September 2018 07:48
Read more...
Saturday, 22 September 2018 20:43
- தகவல்: அகில் -
நிகழ்வுகள்
Last Updated on Saturday, 22 September 2018 20:48
Read more...
Saturday, 22 September 2018 20:24
- தகவல்: ரவீந்திரா கந்தசாமி -
நிகழ்வுகள்
Last Updated on Saturday, 22 September 2018 20:28
Saturday, 22 September 2018 18:34
- பனுவல் -
நிகழ்வுகள்

கானுலா! காடு இதழ் ஒருங்கிணைக்கும் பயணம்.! இடம். சத்தியமங்கலம் காடு நாள்: அக் 13 - 14, 2018 ( சனி, ஞாயிறு) பயணம் தொடக்கம், நிறைவு - பனுவல் புத்தக விற்பனை நிலையம். திருவான்மியூர், சென்னை.
Last Updated on Saturday, 22 September 2018 18:39
Read more...
Thursday, 20 September 2018 21:57
- அகில -
நிகழ்வுகள்
Last Updated on Thursday, 20 September 2018 22:02
Read more...
Monday, 17 September 2018 22:37
- தகவல்: க.நவம் -
நிகழ்வுகள்

ஈழத்தின் படைப்பிலக்கிய ஆளுமைகளில் ஒருவரான தெணியான் அவர்களின் படைப்புலகம் பற்றிய உரைகளும், மூன்று நாவல்களின் அறிமுகமும்!
காலம்: 22-09-2018 சனிக்கிழமை பி.ப. 4:30 மணி இடம்: Scarborough Village Recreation Centre, 3600 Kingston Rd., Toronto, On M1M 1R9 (Markham & Kingston/Eglinton)
Last Updated on Monday, 17 September 2018 22:41
Read more...
Saturday, 08 September 2018 21:58
- சக்தி சக்திதாசன் -
நிகழ்வுகள்

அன்பினியவர்களே ! அன்பான வணக்கங்கள். இதோ மிக நீண்டதோர் இடைவெளியின் பின் "தமிழ்ப்பூங்கா" புதியதோர் வடிவமைப்புடன் காலாண்டு இதழாக புதுவடிவம் பெற்று உங்களிடம் வருகிறது. வாழ்வின் கடமைகளை நிறைவேற்றுவதில் ஏற்பட்ட காலதாமதத்திற்கு வருந்துகிறேன். இது வழமை போல P.D.F ஆக இணைக்கப்பட்டுள்ளது. இத்துடன் இதனை வெள்ளோட்டமாக ஒரு மின்புத்தகமாக்கும் முயற்சியில் அதற்குரிய இணையத்தளத்தினைத் தருகிறேன் இதனைப் பார்வையிடுவதற்கு Adobi Flash மென்பொருள் உங்கள் கணணியில் இருக்க வேண்டும். என்றும் போல இப்பவும் உங்கள் ஆதரவையும், ஆக்கங்களையும் தந்து ஆதரவளிபீர்கள் எனும் நம்பிக்கை எனக்குண்டு. இ-புத்தக வடிவில் பார்க்க இணையத்தளம் - https://www.flipsnack.com/thamilpoonga/2.html
Last Updated on Saturday, 08 September 2018 22:05
Read more...
Saturday, 08 September 2018 21:30
administrator
நிகழ்வுகள்

09-09-2018, ஞாயிறு, மாலை 6 மணிக்கு.
பியூர் சினிமா புத்தக அங்காடி, எண்.7 , மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி, விக்ரம் ஸ்டுடியோ எதிரில், வாசன் ஐ கேர் அருகில், டயட் இன் உணவகத்தின் இரண்டாவது மாடியில். கூகிள் மேப்பில் pure cinema book shop என்று தேடினால் எளிதாக கண்டடையலாம்.
திறந்து வைப்பவர்: ஒளிப்பதிவாளர் ரவிவர்மன்.
இந்தியாவில் செயல்படும் நிலையில் இருக்கும் முழுக்க முழுக்க சினிமா புத்தகங்களுக்காகவே செயல்படும் இந்தியாவின் ஒரே சினிமா புத்தக அங்காடியான பியூர் சினிமா புத்தக அங்காடி சென்னையில் கடந்த மூன்றாண்டுகளுக்கு மேல் செயல்பட்டு வருகிறது. இன்னும் சீரிய முறையில் செயல்படும் வகையிலும், பல்வேறு கிரியேட்டிவ் செயல்பாடுகள் கொண்ட இடமாகவும் மாற்றியமைக்கப்பட்டு எதிர்வரும் ஞாயிறு அதாவது செப்டம்பர் 9 ஆம் தேதி, மாலை 6 மணியளவில் திறக்கப்படுகிறது. இதனை இந்தியாவின் மிக முக்கிய ஒளிப்பதிவாளராக, பாலிவுட்டின் மோஸ்ட் வான்டட் கேமராமேன் திரு. ரவிவர்மன் அவர்கள் திறந்து வைக்கிறார். ஒளிப்பதிவு, ஓவியங்கள், லைட்டிங் குறித்தும் மிக முக்கிய உரையொன்றையும் நிகழ்த்த இருக்கிறார்.
Last Updated on Saturday, 08 September 2018 21:35
Read more...
Saturday, 08 September 2018 06:43
- தகவல்: வி.என்.மதியழகன் -
நிகழ்வுகள்
Last Updated on Saturday, 08 September 2018 06:47
Saturday, 08 September 2018 06:38
- தகவல்: வேதா இலங்காதிலகம் -
நிகழ்வுகள்
Last Updated on Saturday, 08 September 2018 06:43
Saturday, 08 September 2018 06:32
- றஞ்சி -
நிகழ்வுகள்
Last Updated on Saturday, 08 September 2018 06:37
Read more...
Saturday, 01 September 2018 00:14
- சோழ. நாகராஜன் -
நிகழ்வுகள்
"பல்துறை ஆற்றலாளரான வி.ரி.இளங்கோவன் அவர்களது கவிதைத் தொகுதியினை ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவையின் புத்தகத் திருவிழாவில் இடம்பெறும் உலகத் தமிழர் படைப்பரங்கில் வெளியீடு செய்வதில் மகிழ்ச்சியடைகிறோம். கலை - இலக்கியவாதியாகவும், முற்போக்குச் சிந்தனையாளராகவும் விளங்கும் இளங்கோவன் புலம்பெயர்ந்து வாழும் பிரான்ஸ் நாட்டிற்கும் எமக்குமிடையே தமிழ் இலக்கியப் பாலமாக - தொடர்பாளராக விளங்குகிறார். பல நூல்களை வெளியிட்டுள்ள குறிப்பிடத்தக்க சிறந்த படைப்பாளியான அவரது கவிதைத் தொகுதியை உலகத்த தமிழர் படைப்பரங்கில் வெளியிட முன்வந்தமைக்காக அவருக்கு மக்கள் சிந்தனைப் பேரவை மகிழ்ச்சியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறது."
இவ்வாறு ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவரும் எழுத்தாளருமான ஸ்டாலின் குணசேகரன் கடந்த 12-ம் திகதி பகல் (12-08-2018) ஈரோடு புத்தகத் திருவிழா உலகத் தமிழர் படைப்பரங்கில் இடம்பெற்ற கலாபூஷணம், இலக்கியவித்தகர் வி. ரி. இளங்கோவனது "ஒளிக்கீற்று" கவிதைத் தொகுதி வெளியீட்டு நிகழ்வுக்கு தலைமை வகித்துப் பேசுகையில் குறிப்பிட்டார்.
"ஒளிக்கீற்று" கவிதைத் தொகுதியை வெளியிட்டு வைத்து, தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற ஈரோடு மாவட்டச் செயலாளர் ஓடை பொ. துரைஅரசன் பேசுகையில், ஈழத்துக் கவிஞர்கள் பலரின் கவிதைகள் யதார்த்தப் பூர்வமானவை. அந்தவகையில், முற்போக்குச் சிந்தனை வயப்பட்ட இளங்கோவனின் கவிதைகள் அவரது அனுபவங்களைப் பிரதிபலிக்கின்றன, சிந்தனையைத் தூண்டுகின்றன. மரபு சார்ந்தும், மரபு சாராமலும் உணர்வுகளின் ஊற்றாக அவரது கவிதைகள் சிறப்பாகப் படைக்கப்பட்டுள்ளன. புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சுகின்றன. அவருக்கு எமது பாராட்டுக்கள்." எனக் குறிப்பிட்டார். நூலாசிரியர் இளங்கோவனது உணர்ச்சிமிகுந்த ஏற்புரை சபையோரின் பாராட்டுதலைப் பெற்றது. ஓடை பொ. துரைஅரசன் நூலை வெளியிட, மூத்த வழக்கறிஞர் யு. கே. செங்கோட்டையன் அதனைப் பெற்றுக்கொண்டார். படைப்பாளிகள், இலக்கிய அபிமானிகள், பேராசிரியர்கள் உட்பட பெருந்தொகையானோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
Last Updated on Saturday, 01 September 2018 00:33
Read more...
Saturday, 25 August 2018 07:15
- முனைவர் த. சத்தியராஜ் -
நிகழ்வுகள்
Last Updated on Saturday, 25 August 2018 07:23
Read more...
Thursday, 23 August 2018 07:12
- பனுவல் -
நிகழ்வுகள்

அன்பார்ந்த பனுவல் வாசகர்களே, சென்னை BOOK FAIR 2018, Y.M.C.A மைதானம், ராயப்பேட்டையில் நடந்து வருகிறது. உங்களுக்குத் தேவையான அனைத்து தமிழ் புத்தகங்களும் “பனுவல்” புத்தகக் கடையில் கிடைக்கும். வருகை புரிவீர்!!! அதிகப்படியான தள்ளுபடி பெறுவீர்!!! அரிய வாய்ப்பை தவற விடாதீர்!!!
கடை எண் : 38 (பனுவல் புத்தகக் கடை) கடை எண் : 152 (தடாகம் பதிப்பகம்)
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
Last Updated on Thursday, 23 August 2018 07:14
Thursday, 23 August 2018 06:57
- முல்லை அமுதன் -
நிகழ்வுகள்

வணக்கம். ஈழத்துக் கவிஞர்களின் கவிதைகள் அடங்கிய தொகுதி ஒன்றை வெளியிடவிரும்புகிறேன். புதிதாக,எங்கும் வெளிவராத,நூலில் ஒரு பக்கத்துள் வரக்கூடிய மாதிரி கவிதைகளை அனுப்பலாம். தனி நபர் வாழ்த்தாக,யாரையும் சாடாத கவிதைகளாக இருத்தல் வேண்டும். சமூக அக்கறையுடன் கவிதைகள் இருப்பின் நன்று.
Last Updated on Thursday, 23 August 2018 07:04
Read more...
Wednesday, 22 August 2018 23:27
- பாலேந்திரா -
நிகழ்வுகள்
Last Updated on Wednesday, 22 August 2018 23:31
Wednesday, 22 August 2018 23:03
- அகில் -
நிகழ்வுகள்

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
Last Updated on Wednesday, 22 August 2018 23:30
Thursday, 16 August 2018 05:47
- வாசன் -
நிகழ்வுகள்
கடந்தவாரம் சனிக்கிழைமையன்று (21.07.2018) மீண்டுமொரு மாலை வேளை ஈஸ்ட் ஹாம் Trinity Centre இல் தமிழ் மொழி சமூகங்களின் செயற்பாட்டகம் அமைப்பினரால் ‘பிரதிகள் மீதான வாசிப்பும் கலந்துரையாடலும்’ என்ற பதாகையின் கீழ் பல நூல்களின் அறிமுக விழாவும் கலந்துரையாடல்களும் இடம்பெற்றன.
மூன்று அமர்வுகளாக இடம்பெற்ற இந்நிகழ்வின் முதலாவது நிகழ்வினை கவிஞர் நா.சபேசன் நெறிப்படுத்தினார். இதில் முதலாவதாக ஜிப்ரி ஹாசனின் படைப்புலகமாக அவரது மூன்று நூல்களான ‘போர்க்குணம் கொண்ட ஆடுகள்’ என்ற சிறுகதைத்தொகுதியும் ‘மூன்றாம் பாலினத்தின் நடனம்’ என்ற மொழிபெயர்ப்புக் கவிதைகள் தொகுப்பும் ‘விரியத் துவங்கும் வானம்’ விமர்சன நூலும் எடுத்துக்கொள்ளப்பட்டது. இவை குறித்து அறிமுகம் செய்யுமாறும் நான் கேட்கப்பட்டிருந்தேன். மூன்று நூல்கள். எனக்கு 25 நிமிடங்கள் தரப்பட்டிருந்தது. ஒரு வகையாக 35 நிமிடங்கள் வரை எடுத்து பேசி முடித்தேன். ஜிப்ரி ஹாசன் இன்று கிழக்கிலங்கையின் முக்கியமான படைப்பாளி, விமர்சகர், மொழி பெயர்ப்பாளர். அவரது படைப்புலகம் குறித்து இங்கு ஓரிரு வார்த்தைகளில் எழுதி முடித்து விட முடியாது. அவரது இந்த மூன்று நூல்களும் இன்று ஈழத்தில் பலராலும் விதந்துரைக்கப்படுகின்ற முக்கியமான நூல்கள் என்பதினை மட்டும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
அடுத்த நிகழ்வாக அனோஜன் பாலகிருஷ்ணனின் ‘பச்சை நரம்பு’ சிறுகதைத்தொகுதி குறித்து ஹரி இராஜலெட்சுமியும் பாத்திமா மஜிதாவும் உரை நிகழ்த்தினார்கள். ஹரி ‘அனோஜனின் சிறுகதைகளில் ஆண்களும் எதிர்பாலின ஒழுங்கு சீர்திருத்தங்களும்’ என்ற தலைப்பில் உரையாற்றினார். அவர் தன்னுரையில் போரின் தரிசனங்களை சாட்சியங்களாக வெளிப்படுத்த வேண்டும் என்ற நோக்கம் சயந்தன், யோ.கர்ணன், போன்றவர்களின் கதைகளில் இருப்பதாகவும் அது வாசிக்கும் போது களைப்பினை ஏற்படுத்துவதாகவும் ஆனல் அனோஜன் அதிலிருந்து விலகி அக உணர்வுச் சிக்கல்களை அழகாகவும் தத்ரூபமாகவும் வெளிப்படுத்துகிறார் எனவும் ஆயினும் இவரது கதைகளிளும் போரின் சாட்சியங்கள் அரூப தரிசனங்களாக வெளிப்படுகின்றன எனவும் குறிப்பிட்டார்.
Last Updated on Thursday, 16 August 2018 05:54
Read more...
Tuesday, 14 August 2018 13:30
- அழகிய சங்கர் -
நிகழ்வுகள்

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
Last Updated on Tuesday, 14 August 2018 13:34
மீண்டும் ஒரு அக்னிபார்வை நிகழ்ச்சி குறித்து. இம்முறை நிகழ்ச்சித் தொகுப்பாளர் தோழர் நடேசன் அவர்கள் புதிய திசைகள் ஒருங்கிணைப்பாளர் தோழர் மாசில் பாலன் அவர்களை நேர்காணல் செய்கிறார். தோழர் பாலன் அவர்கள் ஒரு தீவிரமான அரசியல் செயற்பாட்டாளர். புரட்சிகர குடும்பப் பின்னணியும் பின்புலமும் கொண்ட அவர் சிறு வயது முதலே தன்னை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்துடன் பிணைத்துக் கொண்டவர். 90 களின் பின்பும் பல்வேறு மக்கள் அமைப்புக்களுடன் இணைந்து பணி புரிந்தவர். இன்று முள்ளிவாய்க்கால் இன அழிப்பிற்கு பின்னான புலிகளின் ஆயுதப் போராட்டம் மௌனித்த பின்பு அங்கு ஏற்பட்டுள்ள ஒரு வெற்றிடத்தை நிரப்பும் முகமாக ‘புதிய திசைகள்’ என்ற அமைப்பினை ஒருங்கிணைத்து தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் பல்வேறு விதமான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருபவர். இந்நிகழ்வில் அவர் தனது அமைப்பு குறித்தும் அதனது வேலைத்திட்டங்கள் குறித்தும் விளக்கமாக எடுத்துரைத்தார்.
“ஈழவிடுதலைப் போராட்டம் அழிந்து போய்விடவில்லை. இல்லாமல் போய் விடவில்லை. அது பின் தங்கியுள்ளது” என்று கூறிய அவர் ‘புதிய திசைகள்’ மற்றைய அமைப்புகளிடம் இருந்து எவ்வாறு வேறுபடுகின்றன என்பதினையும் போராட்டத்தை எவ்வாறு முன்னெடுக்கின்றது என்ற விளக்கத்தையும் அளித்தார். இந்நிகழ்வில் அவர் முக்கியமாக குறிப்பிட்ட விடயங்கள் ஆவன.
•இன்று தமிழீழ விடுதலை குறித்து பேசுகின்ற எந்த ஒரு அமைப்பும் தமது அரசியல் வேலைத்திட்டங்களை முன் வைக்கவில்லை. •போரிற்கு பிந்திய சூழலில் அனைத்து கட்டுமானங்களும் சிதைவடைந்துள்ள. சமூகங்களுக்கு இடையில் அடிப்படை அலகுகள் எதுவுமே கிடையாது. அதனை கட்டி எழுப்ப வேண்டும். •சாதியம், வர்க்கம் போன்ற அகமுரண்பாடுகளிற்காக எமது உரிமைகளை விற்க முடியாது. •தலித்தியம் என்பது இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கருத்தாடல். •வர்க்கம், சமூகங்களின் பிணைப்புக்களின் மூலம் ஒரு ஐக்கிய முன்னணியை உருவாக்க வேண்டும்.
மேலும் “எமது போராட்டம் என்பது ஒரு வெள்ளைக் காகிதம் அல்ல” என்று எடுத்துரைத்த அவர் எமது சமூகமானது பல களங்களைக் கண்ட பல இழப்புக்களையும் வேதனைகளையும் கண்ட ஒரு வலி மிகுந்த சமூகமாக இருக்கின்றது என்பதினையும் அதிலிருந்து அடுத்த கட்டத்தை நோக்கி போராட்டத்தை நகர்த்துவதில் உள்ள சிரமத்தினையும் விளக்கிக் கூறினார்.
முஸ்லிம் – தமிழ் முரண்பாடுகள் குறித்து அவர் பேச முற்படும்போது நிகழ்ச்சியை நெறிப்படுத்தியவர் அதனை இடையிலேயே மறித்து வேறு திசைக்கு மாற்றியது கொஞ்சம் ஏமாற்றத்தை அளித்தது. அத்துடன் அவர் பஞ்சமர் என்ற சாதியக் கட்டுமானம் இப்போது இல்லை என்று கூறியது ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு கருத்தாகவே எமக்குப் படுகின்றது.
Last Updated on Thursday, 16 August 2018 06:02
Read more...
கொஞ்சம் தாமதமான பதிவு. ஆயினும் இதனை இங்கு பதிவிடாமல் இந்த உரையாடல் வெளியினை கடந்து செல்ல முடியாது. கடந்த மாத இறுதியில் 30.06.2018 சனிக்கிழமையன்று மக்கள் கலை பண்பாட்டுக் களம் அமைப்பினரின் சார்பில் ஒரு நிகழ்வு ஒன்று இலண்டன் தெற்குப் பகுதியில் அமைந்திருந்த நியூ மோல்டன் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பறையிசை, பாடல்கள், கவிதா ஆற்றுகை போன்ற பல்வேறு கலை நிகழ்வுகளுடன் புதிய ஜனநாயக மார்க்சிய லெனினியக் கட்சியின் பொதுச்செயலாளரும் ‘புதிய பூமி’ பத்திரிகையின் ஆசிரியருமாகிய சி.கா. செந்தில்வேல் எழுதிய ‘வட்டுக்கோட்டையில் இருந்து முல்லைத்தீவு வரை’ என்ற நூல் அறிமுகமும் நடைபெற இருப்பதாக அவர்கள் குறிப்பிட்டிருந்தார்கள்.
மக்கள் கலை பண்பாட்டுக் களம் அமைப்பானது மிக அண்மையில் (ஒரு சில வருடங்களுக்கு முன்பே) உருவாக்கம் பெற்ற இடது சாரி சார்பு நிலை கொண்ட ஒரு புரட்சிகர அமைப்பாகும். மக்களின் சமகால பிரச்சனைகளை, சமூக வாழ்வியலை அவர்களின் வாழ்வியலினூடக, அவர்களின் வாழ்க்கையின் மொழியினூடாக, கலை, இலக்கிய வடிவங்களாக வெளிக்கொண்டுவருவதும் அதையே அவர்களது போராட்ட ஆயுதமாக்குவதும் தான் மக்கள் கலை பண்பாட்டு களத்தின் நோக்கமாகும்.
அவர்கள் கடந்த காலங்களில் நடாத்திய நிகழ்வுகள் அனைத்தையும் மற்ற அமைப்பினர்களைப் போல் அல்லாமல் ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் குறித்த நேரத்தில் நடாத்தியது இங்கு குறிப்பிடத்தக்கது. அந்த எண்ணத்தில் நானும் குறித்த நேரத்திற்கு முன்பே சமூகமளித்திருந்தேன். ஆனால் இந்த தடவை அவர்களது நிகழ்வும் ஒரு கொஞ்ச நேரம் தாமதமாகவே ஆரம்பமாகியது என்பதினையும் இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டும்.
ஒரு நிமிடநேர மௌன அஞ்சலியுடன் ஆரம்பமாகிய அந்நிகழ்வானது நேரிடையாகவே தோழர் சி.கா.செந்தில்வேல் இன் ‘வட்டுக்கோட்டையில் இருந்து முல்லைத்தீவு வரை’ நூல் அறிமுகத்திற்குள் நுழைந்தது.
நிகழ்வினை தோழர் வேலு அவர்கள் நெறிப்படுத்தினார். முதலில் புதியதிசைகள் ஒருங்கிணைப்பாளர் மாசில் பாலன் அவர்கள் உரையாற்றினார். இது போன்ற வரலாற்று ஆவணங்கள் வெளிவரவேண்டியத்தின் அவசியத்தை வலியுறித்தி வரவேற்று பேசிய அவர் அதற்குமப்பால் இந்நூல் குறித்தும் புதிய ஜனநாயக மார்க்சிய லெனினியக் கட்சியின் செயற்பாடுகள் குறித்தும் பல்வேறுவிதமான காட்டமான விமர்சனங்களை முன்வைத்தார். ஈழ விடுதலைப் போரை முற்று முழுதாக நிராகரிக்கும் அவர்கள் அந்த முப்பது வருட காலத்தில் வெறும் அறிக்கைகள் விட்டதற்கும் அப்பால் செய்த நடவடிக்கைகள் என்ன என்றும், முற்போக்கு தேசியம் குறித்தும், அப்படி ஒரு தேசியம் உருவானால் அதனுடன் இணைந்து பயணிப்பதாகவும் இப்போது குறிப்பிடும் இவர்கள் கடந்த காலங்களில் ஒரு முற்போக்கு தேசியத்தின் உருவாக்கத்திற்கு என்ன நடவைக்கைகளை மேற்கொண்டார்கள் என்ற கேள்வியையும் எழுப்பினார்.
Last Updated on Friday, 03 August 2018 21:36
Read more...
Tuesday, 24 July 2018 21:31
- குரு அரவிந்தன் -
நிகழ்வுகள்

கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் நடத்தும் பயிற்சிப்பட்டறை இம்மாதம் எதிர் வரும் சனிக்கிழமை (28-07-2018) அன்று காலை 10:15 தொடக்கம் 11:45 வரை ஸ்காபுறோவில் 90 Littles road (BLue clour building - Sewell and Littles ) என்னும் விலாசத்தில் உள்ள மண்டபத்தில் நடைபெறும் என்பதை அறியத்தருகின்றோம்.
சிறுகதை பயிற்சிப்பட்டறை – எழுத்தாளர் குரு அரவிந்தன். நாவல் (புதினம்) பயிற்சிப்பட்டறை – எழுத்தாளர் கே. ரவீந்திரநாதன்
சிறுகதை, நாவல் இலக்கியத்தில் ஆர்வமுள்ள இலக்கிய ஆர்வலர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் Kuru Aravinthan <
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
>
Last Updated on Tuesday, 24 July 2018 22:27
Tuesday, 24 July 2018 21:26
- அழகியசிங்கர் -
நிகழ்வுகள்

தலைப்பு: கல்கி இதழில் வளர்ந்த எழுத்தாளர்கள் சிறப்புரை ஆர் வெங்கடேஷ் (பத்திரிகையாளர், கவிஞர், சிறுகதை ஆசிரியர், நாவலாசிரியர். கட்டுரையாளர்) இடம் : கிளை நூலகம், தேதி 26.07.2018 7 இராகவன் காலனி 3வது தெரு, (வியாழக்கிழமை) ஜாபர்கான் பேட்டை, சென்னை நேரம் மாலை 5.45 மணி
அன்புடன் நண்பர்கள் வட்டம்
தொடர்புக்கு : அழகியசிங்கர் - தொலைபேசி எண் : 9444113205
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
Last Updated on Tuesday, 24 July 2018 21:29
Friday, 13 July 2018 12:22
- மாலினி அரவிந்தன் -
நிகழ்வுகள்

கனடா, மிசசாகாவில் உள்ள சொப்பா குடும்ப மன்றத்தின் கனடாதினக் கொண்டாட்டம் கடந்த சனிக்கிழமை, யூன் மாதம் 30 ஆம் திகதி 2018 இல் மிசசாகாவலியில் உள்ள எல்.சி. ரெயிலர் அரங்கில் கொண்டாடப்பட்டது. 500 மேற்பட்ட குடும்ப அங்கத்தவர்களைக் கொண்ட இந்த அமைப்பு கடந்த ஒன்பது வருடங்களாக மிகவும் சிறப்பாக இயங்கிவருகின்றது. சென்ற சனிக்கிழமை மிசசாகா நகரில் கனடா தினம் கொண்டாடப்பட்ட போது பல்வேறு சமூகம் சார்ந்த பல அரசியல் பிரமுகர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு இந்த நிகழ்வைச் சிறப்பித்தனர்.
கனடாதின விழாவின் ஆரம்பத்தில் விசேட விருந்தினர் ரஜீவ்கரன் முத்துராமன் அவர்களால் கனடா தேசியக் கொடி ஏற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து தேசிய கீதம், தமிழ் வாழ்த்து, சொப்கா மன்றக் கீதம் ஆகியன மன்ற அங்கத்தவர்களால் இசைக்கப்பட்டன. இந்த நிகழ்வில் வைத்தியகலாநிதி வி. பிகராடோ, திருமதி பிகராடோ ஆகியோர் பிரதம விருந்தினர்களாகக் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தார். இந்த நிகழ்வின்போது கனடா பிறந்ததின கேக் வெட்டப்பட்டு, அவரது பிரதம விருந்தினர் உரையும் அப்போது இடம் பெற்றது. அதைத் தொடர்ந்து விழாவிற்கு வருகை தந்திருந்த மிசசாகா மேயர் மதிப்புக்குரிய போணி குறம்பி (டீழnnநை ஊசழஅடிநை) அவர்களின் உரை இடம் பெற்றது. தொடர்ந்து நகரசபை, மாகாணசபை அங்கத்தவர்களின் உரைகள் இடம் பெற்றன. இதைத் தொடர்ந்து மன்றத்தின் முன்னாள் தலைவியும், தற்போதைய காப்பாளருமான சட்டத்தரணி வாணி செந்தூரன் அவர்கள் மன்றத்தின் தற்போதைய தலைவர் குரு அரவிந்தனால் அவரது கடந்தகால சேவைகளைப் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டார்.
Last Updated on Friday, 13 July 2018 12:33
Read more...
Wednesday, 11 July 2018 21:52
- ஆசி கந்தராஜா -
நிகழ்வுகள்
|