இலக்கிய வானில் நீங்களும் ஒரு தாரகையாய் ----- கலா சிறிரஞ்சனின் நினைவாக ----- - வாசன்-

கலா சிறிரஞ்சனின் மரணச்செய்தி காதை வந்து எட்டியது. மனம் துணுக்குற்றது. ஒரு சிறிய காலப் பகுதியில் மட்டுமே பழகியிருந்தாலும் மனதில் ஏதோ ஒரு துயரம் அப்பிக் கொண்டது. 'வாழ்க்கை என்பதே மரணத்தை நோக்கிய ஒரு பயணமே! ' என்பது ஒரு நிரந்தரமான உண்மையாயினும் எல்லா மரணங்களையும் எம்மால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை.
முதன் முறையாக அவரை மறுநிர்மாணம் அமைப்பினர் நடத்திய கௌரிகாந்தனின் 'அறமும் போராட்டமும்' நூல் வெளியீட்டு நிகழ்விலேயே பார்த்திருந்தேன். அன்று அந்நிகழ்வினை அவரே நெறிப்படுத்தியிருந்தார். தமிழிலும் ஆங்கிலத்திலும் சரளமாகப் பேசக்கூடியவர் என்பதினையும் கல்விப்புலமையில் தேர்ச்சி பெற்றவராக இருப்பார் என்பதினையும் புரிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது. ஆனால் அன்று எனக்கு அவரிடம் எந்தவித அறிமுகமும் ஏற்பட்டிருக்கவில்லை.
பின்பொருநாள் விம்பம் அமைப்பினர் ஒரு கவிதை விமர்சன நிகழ்வொன்றினை நடாத்தியிருந்தனர். அதற்கு பா.அகிலனின் 'அம்மை ' நூல் குறித்து உரையாற்ற என்னை அழைத்திருந்த படியால் போயிருந்தேன். அங்கு அவரும் வருகை தந்திருந்தார். நெற்கொழுதசனின் 'வெளிச்சம் என் மரணகாலம்' நூல் குறித்து உரையாற்ற வந்திருந்தார். தானாக அறிமுகப்படுத்திக் கொண்டார். தனக்கு இந்தக் கவிதைத்தொகுப்பு மிக நெருடலாக இருந்ததாகவும் ஒரே புலம்பல் என்றும் முறைப்பாடு செய்தார். நெற்கொழுதாசன் படைப்புக்கள் மீது எனக்கு ஏற்கனவே நல்ல பரிச்சயம் இருந்ததினால் அது குறித்து அவருடன் சிலாகித்தேன். தொடர்ச்சியான உரையாடலில் இருந்து அவர் தற்கால நவீன இலக்கியங்களில் இருந்து கொஞ்சம் தூரமாகவே இருக்கின்றார் என்று புரிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது. அதனை அவரும் என்னிடம் தெரிவித்தார். தான் தொண்ணூறுகளில் 'ஈழபூமி' பத்திரிகையில் தொடர்ந்து எழுதியதாகவும் பின்பு தனது பட்டப்படிப்பு, குடும்பம், வேலைப்பளு போன்ற காரணங்களினால் இலக்கிய உலகுடன் ஒரு இடைவெளி ஏற்பட்டிருந்ததாகவும் ஆனால் சில வருடங்களுக்கு முன்பு தமயந்தியின் 'ஏழு கடற்கன்ன்னிகள்' நூல் வெளியீட்டின் மூலம் மீண்டும் இணைந்து கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதனையே அவர் அன்றைய தனது உரையிலும் வெளிப்படையாகவே தெரிவித்துக் கொண்டார். பாரதியார், பாரதி தாசன் கவிதைகளில் இருந்து ஹைக்கூ கவிதைகள் வரையே தனக்கு பரிச்சயம் உள்ளதாகவும் இந்தக் கவிதைகள் தனக்கு கொஞ்சம் புதிராக இருப்பதாகவும் சொல்லிக் கொண்டார். அவர் தனது உரையில் 'தமிழனென்று சொல்லடா ! தலை நிமிர்ந்து நில்லடா!' என்ற பாடலை பாரதியாரின் பாடல்கள் என்று குறிப்பிட்டிருந்தார். அதற்கு நான் 'மன்னிக்கவும் அதனை பாரதி எழுதவில்லை. அது நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை எழுதிய பாடல் ' என்றதும் ஒரு முறை முறைத்தார். பின் சிரித்துக் கொண்டே "நீங்கள் எல்லாம் கொஞ்சம் வில்லங்கமான ஆட்கள்தான் " என்று சொல்லிப் போனார்.


தமிழ் இலக்கிய மரபில் நூல் விமர்சனம் என்பது ஒரு தனித்துவமான அறிவுச் செயல்பாடாகக் கருதப்படுகிறது. அது வெறும் தனிநபரின் விருப்பு–வெறுப்புகளை வெளிப்படுத்தும் முயற்சியாக அல்ல; வாசக சமூகத்தை வழிநடத்தும் பொறுப்புள்ள பணியாகவே பார்க்கப்படுகிறது. ஒரு நூலைப் பற்றி சொல்லப்படுகின்ற கருத்துகள், அந்த நூலின் மதிப்பை மட்டுமல்லாது, இலக்கியச் சூழலையும் சமூகச் சிந்தனையையும் நேரடியாகப் பாதிக்கக்கூடியவை என்பதால், விமர்சனத்திற்கு தெளிவான வரையறைகளும் ஒழுங்குகளும் தேவைப்படுகின்றன.
நண்பர் இப்னு அஸுமத் என்னுடைய பல கவிதைகளை சிங்களத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். இவ்வாரம் "நினைவிழந்த காதலின் சாம்பல் மணம்" என்ற என் கவிதையை மிக நேர்த்தியாக மொழிபெயர்த்திருக்கிறார். அதனை படித்தபோது இந்த விளக்கத்தை எழுதியே முடிவது என்ற முனைப்போடு இதனை எழுதுகிறேன். ஏனென்றால், அவர் என் கவிதை ஒவ்வொன்றையும் மொழிபெயர்த்து அனுப்பும்போது, விரிவாக எழுத நினைப்பேன். ஆனால் எழுதுவதில்லை….



“பத்மாவதி சரித்திரத்தின் முதற்பாகத்தைப் படித்து வந்தோம். கதாசாரத்தையும் அதிலடங்கிய விஷயங்களையும் ஆராயுங்கால் நூலாசிரியரின் கல்வித்திறம் புகழத்தக்கதென நன்கு புலப்படும். அவரது நடை வெகு தெளிவாகவும் சரளமாகவு மிருப்பினும் சிற்சில இடங்களில் ஆங்கிலேய பாஷையின் போக்கை யனுசரித்திருக்கின்றது. இலக்கண விதிக்கு மாறான சில முடிவுகளும் காண்கிறோம். கதைப்போக்கின் தன்மையைப் பார்க்குங்கால் அவர் அதன்பொருட்டு நடந்தவை களை நடந்தவாறே எழுதினாற் போலுமிருக்கிறது. நம்மவர் இடையிடையே பெண்கல்வி முதலிய விஷயங்களைப் பற்றி உபந்நியாசம் செய்யப் புகும் விதமானது நம்மனதிற்கு ஒவ்வாததாக விருக்கின்றது. படிப்போர்க்குப் புகட்டக் கருதும் பலவித நீதிகளும் அறங்களும் எள்ளுக்குள் எண்ணெய் போலச் சம்பாஷணையிலிருந்து திரட்டிக் கொள்ளும் படியாக விருத்தலேயியல்பு” (விவேக சிந்தாமணி:ஜுன்:1898)