Friday, 15 January 2021 21:09
- ம.பிரசன்னா, தமிழ் உதவிப்பேராசிரியர், கலசலிங்கம் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், கிருஷ்ணன்கோவில் -
ஆய்வு
முன்னுரை
கடல் என்னும் நீர்நிலையானது, நீர் நிலைகளில் தனித்துவமான ஒன்றாகும். வருடம் முழுவதும் நீரினைக் கொண்டதாகக் கடல் திகழ்கின்றது. அதன் பிரம்மாண்ட அளவும், அது கொண்ட நிறமும், அதன் செயல்பாடும் கொண்டு கடலை பல்வேறு பெயர்களில் நற்றிணைப் புலவர்கள் பதிவு செய்துள்ளனா். ஆசிரியப்பா என்னும் இலக்கண வடிவத்தில் கவிபுனைந்த புலவர்கள், கடற் பெயர்களை அவரவர் புலமை அனுபவத்தில் செம்மையான சொற்செட்டுமானத்துடன் படைத்திருப்பதை நற்றிணைப் பாடல்களின் வழி ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
கடலும் அதன் குடிவழிகளும்
தமிழன் பயன்படுத்திய நீர்நிலைகளில் பல அழிந்துபட்டும் வனப்பு கெட்டும் காணப்படுவதை அறிவோம். இதில் கடல் என்பது மனிதப் பயன்பாட்டில் பெரிய நீர்நிலையாகும். மனிதனால் பெரிதளவு ஆக்கிரமிப்பு செய்யப்படாத நீர்நிலை என்றும் சொல்லலாம். பொதுவாக ஆற்றங்கரைகளின் அருகிலே மனிதகுல நாகரிகம் தோற்றுவிக்கப்பட்டதாய்க் கூறுவர். அதுபோல கடல் அருகிலும் நாகரிகம், இனக்குழுக்கள் தோன்றியுள்ளன. அந்நாகரிகத்தைக் கடற்கரை நாகரிகம், அங்கு தோன்றிய இனக்குழுக்களை பரதவர் இனம் எனும் பெயரில் குறிக்கலாம். ஏனைய திணைகளில் நீர் நிலை அருகாமைக் குடியிருப்புகள் எல்லாம் வேளாண்மை தவிர்த்த பிற தொழில்களால் ஈர்க்கப்பட்டு நீர்நிலைகளுக்கு அடுத்த இடங்களுக்கு மக்கள் நகரத் தொடங்கினா். நெய்தல் நிலக் குடிகள் பெரிதாக நகர்வுக்கு ஆட்படாமல் அந்நிலத் திற்கு உரித்தான தொழில்களையே செய்து நிலவயப்பட்டோராக வாழ்ந்து வருகின்றனா். கடலால் நெய்தலோர் ஈர்க்கப்படக் காரணம் அதன் நீர்வளமும் அது கொண்ட பிற வளங்களும் ஆகும். கடலுக்குச் சென்று கடல் பொருட்களைக் கொண்டுவரும் மீனவர்கள் ஒரு புறம் இருந்துள்ளனா். கடல் நீரால் உப்பு தயாரிக்கும் உமணர்களும் அந்நிலத்தில் வசித்து வந்துள்ளனா். இவைபோக முத்து, கிழிஞ்சல்கள், சங்கு போன்றவற்றால் மதிப்புக்கூட்டுப் பொருள் தயாரிக்கும் மக்களும் அவற்றை விற்பனை செய்யும் மக்களும் அந்நிலத்தில் வாழ்ந்து வந்துள்ளனா். இவ்வாறு கடல் பலதரப்பட்ட மக்கள் வந்து பழகிய இடமாக இருந்துள்ளது. இன்று பொழுதுபோக்கு இடமாக இருக்கும் பல கடற்கரைகளை நாம் பார்க்கின்றோம். அன்றும் கடற்கரைகளில் காதல் வளர்த்த மக்கள் கடற்கரைகளில் இருந்துள்ளனா். இதனாலேயே அகம் சார்ந்த பல பாடல்களில் எரிதிரைக் கொண்கன், மல்குநீர் சேர்ப்பன், பனிநீர்ச் சேர்ப்பன் என்ற அடைகளால் பலவாராகக் காதல் தலைவர்கள் சுட்டப்பெறுகின்றனா்.
Last Updated on Friday, 15 January 2021 21:20
Read more...
|
Friday, 01 January 2021 23:52
- ஊர்க்குருவி -
கலை

"தாமரை மலரில் மனதினை எடுத்து தனியே வைத்திருந்தேன். ஒரு தூதுமில்லை. உன் தோற்றமில்லை. கண்ணில் தூக்கம் பிடிக்கவில்லை. நெஞ்சம் மறப்பதில்லை. அது தன் நினைவை இழக்கவில்லை. நான் காத்திருந்தேன். உன்னைப் பார்த்திருந்தேன் கண்களும் மூடவில்லை. என் கண்களும் மூடவில்லை." - கவிஞர் கண்ணதாசன் -
'யதார்த்ததிலிருந்து தனிமைப்படுத்தல்' (Quarantine from Reality) 'யு டியூப் சான'லிலிருந்து நான் கேட்ட, இரசித்த இக்காலத்தால் அழியாத கானத்தை நீங்களும் ஒரு முறை கேட்டுப்பாருங்களேன். பாடகி அனு ஆனந்த் சிறப்பாகப் பாடியுள்ளார். காணொளியின் இறுதியில் பி.பி.ஶ்ரீனிவாசின் குரலில் பாடகர் பத்மநாபன் பாடுவார். அதுவும் இக்காணொளியின் சிறப்பு.
Last Updated on Saturday, 02 January 2021 00:54
Read more...
Monday, 28 December 2020 23:46
- முனைவர் செ சு நா சந்திரசேகரன் (பாரதிசந்திரன்) -
கணித்தமிழ்
- இனிது இணைய இதழில் (https://www.inidhu.com) வெளியான 'பதிவுகள்' இணைய இதழ் பற்றிய குறிப்பு. -

உலகத்தமிழ் எழுத்தாளர்களின் இலக்கியம் பேசும், நவீன முன்னெடுப்புகளான தமிழின் பல்வேறு வடிவங்களைப் பதிவு செய்யும் இணைய இதழ் தான், பதிவுகள் – பன்னாட்டு இணைய இதழ்! இத்தளத்தின் ஆசிரியர் வ.ந.கிரிதரன் ஆவார். இவர் சிறந்த இலக்கியவாதி, திறனாய்வாளர், வரலாற்றாலாளர், இதழாளர், நூலாசிரியர் எனப் பன்முகம் கொண்டவர். இவரின் சீரிய முயற்சியில் 2000 லிருந்து தொடர்ந்து இவ்விதழை நடத்தி வருகிறார்.
“அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்” எனும் மந்திரச் சொல்லுடன் அறிவை உலகமயமாக்கும் பெரும் தமிழ் உழைப்பே இத்தளம். இத்தளத்திலுள்ள தலைப்புகளுக்குள்ளே ஆயிரம் ஆயிரம் படைப்புகள். அவை கீழ்கண்டவாறு உள்ளன.
Last Updated on Tuesday, 29 December 2020 00:33
Read more...
|
 சு. குணேஸ்வரன் எழுதிய “மண்ணில் மலர்ந்தவை” என்ற நூல் அண்மையில் கிடைக்கப் பெற்றேன். முன்அட்டைப்படமாக தொண்டைமானாற்றின் அருகாமையில் மரபுரிமைச் சின்னமாக அமைந்திருக்கும் கரும்பாவளிக்கேணி மிக அழகாக அச்சில் பதிவாக்கப்பட்டிருக்கின்றது. யாழ்ப்பாணம் Book Lab இன் வெளியீடாக வந்துள்ள இந்த நூலை, யாழ்ப்பாணம் “குரு பிறின்டேர்ஸ்” மிகச் சிறப்பாக அச்சாக்கம் செய்துள்ளது.
சமூக முன்னோடி ஓய்வுபெற்ற அதிபர் திரு செ. சதானந்தன் அவர்களுக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ள இந்நூலில், சிறுகதை பற்றிய இரண்டு கட்டுரைகளும் நாவல் பற்றிய மூன்று கட்டுரைகளும் கவிதைத் தொகுதிகள் பற்றிய ஆறு கட்டுரைகளும் “கரும்பாவாளி” ஆவணப்படம் மற்றும் “ஆஸ்திரேலியவில் தமிழ் கற்பித்தல்” ஆகிய கட்டுரைகளுடன் கலை இலக்கிய ஆளுமைகளான கவிஞர் மு. செல்லையா , வே. ஐ வரதராஜன், கண. மகேஸ்வரன், நந்தினி சேவியர், பேராசிரியர் செ. யோகராசா ஆகியோர் பற்றிய ஐந்து கட்டுரைகளுமாக மொத்தம் பதினெட்டுக் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.
சிறுகதைகள் பற்றி…
இந்த நூலில் முதலாம், மூன்றாம் கட்டுரைகள் ‘குந்தவை’ (சடாட்சரதேவி) என்ற புனைபெயர் கொண்ட தொண்டைமானாற்றைச் மூத்த பெண் எழுத்தாளரின் சிறுகதைகள் பற்றியதாக அமைந்துள்ளன. “யோகம் இருக்கிறது”, “ஆறாத காயங்கள்” ஆகிய சிறுகதைத் தொகுதிகளைத் தந்த குந்தவையின் “பாதுகை” என்ற சிறுகதை பற்றி முதலாவது கட்டுரை எழுதப்பட்டுள்ளது.
இறுதி யுத்தத்தின் பின்னர் காணாமல் ஆக்கப்பட்ட மகனை இழந்த ஒரு தாயின் அவல நிலையை “பாதுகை” என்ற சிறுகதை வெளிப்படுத்தி நிற்பதை குணேஸ்வரன் சிறப்பான முறையில் பதிவு செய்திருக்கிறார்.
Last Updated on Friday, 18 December 2020 21:59
Read more...
கவிஞர் வேந்தனாரின் குழந்தைப்பாடல்கள் மிகவும் முக்கியமானவை. அவரது குழந்தைப்பாடல்கள் தமிழ்க்குழந்தைகளுக்கு இன்பத்தைத்தருபவை. மிகவும் புகழ்பெற்ற 'காலைதூக்கிக் கண்ணில் ஒற்றி' என்னும் பாடலை எழுதியவர் கவிஞர் வேந்தனாரே. குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பாவை அறிந்த அளவுக்கு நம் குழந்தைகள் கவிஞர் வேந்தனாரின் குழந்தைக் கவிதைகளை அறிந்திருக்கின்றார்களா என்றால் இல்லையென்றே கூற வேண்டும். அவரது 'காலைதூக்கிக் கண்ணில் ஒற்றி' மட்டுமே அதிகமாக அறிந்திருப்பார்கள். ஆனால் கவிஞர் வேந்தனார் பல குழந்தைப்பாடல்களை எழுதியுள்ளார். இலங்கையில் வெளியான ஈழநாடு, சுதந்திரன் போன்ற பத்திரிகைகளில் அவரது குழந்தைக் கவிதைகள் பல வெளியாகியுள்ளன. மூன்று தொகுதிகளாக அவரது குழந்தைப்பாடற் தொகுப்புகள் நூலுருப்பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது. 'பதிவுகள்' இணைய இதழின் சிறுவர் பக்கம் பகுதியில் அவரது குழந்தைப்பாடல்கள் அவரது குழந்தைப்பாடற் தொகுப்புகளிலிருந்து தொடர்ந்து வெளியாகும். அவரது குழந்தைப்பாடல்களைத் தமிழுலகு அறியவேண்டியது அவசியம். அதற்காகவே இம்முயற்சி. உங்கள் குழந்தைகளுக்கு அவரது குழந்தைக் கவிதைகளை அறிமுகம் செய்யுங்கள். - ஆசிரியர், பதிவுகள் -
1. வெண்ணிலா

பாலைப் போல வெண்ணிலா பார்க்க நல்ல வெண்ணிலா கோல வானில் நின்றொளியைக் கொட்டு கின்ற வெண்ணிலா
வெள்ளிக் கூட்டம் சுற்றி நிற்க விளங்கு கின்ற வெண்ணிலா அள்ளி அள்ளிச் சோற்றையூட்டி அம்மா காட்டும் வெண்ணிலா
Last Updated on Thursday, 10 September 2020 22:42
Read more...
|
|
|
|
Page 1 of 22 |
'
பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.

பதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
பதிவுகளில் கூகுள் விளம்பரங்கள்
பதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46?single
வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...

'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9?single


© காப்புரிமை 2000-2020 'பதிவுகள்.காம்' - 'Pathivukal.COM - InfoWhiz Systems