பதிவுகள் முகப்பு

சிறுகதை: ஜள்ளெ - முனைவர் கோ.சுனில்ஜோகி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி, கோவை. -

விவரங்கள்
- முனைவர் கோ.சுனில்ஜோகி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி, கோவை. -
சிறுகதை
23 ஏப்ரல் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

1

“கள்ளா! ஏய்… கள்ளா!

இன்னும் என்னதா பன்னுற…

எவ்ளோ நேரந்தா காத்திருக்கிறதோ…

ஏய்… கள்ளா! கள்ளா!”

குனிக்கியின் ஓலம் அந்த அடர்காட்டின் காதுகளை அடைத்தது. சில்லிடும் பனிக்காற்று, பொழியும் நிலா, சீகூரிப் பூச்சிகளின் இரைச்சல், மென்மையாக அசையும் மரங்களின் இலைகள் அந்த உலகம் வருணனைக்கு அப்பாற்பட்டது.

ஆதியின் அத்தனைச் சுவடுகளும் அதற்குள் அடக்கம். அதன் அடக்கத்துள் குனிக்கியின் கணவன் கோடனும் ஒருவன்.

பெண்கள் அணுகவியலா அந்தத் ‘தொட்டசோலெ’ அடர்ந்த காப்புக்காடு. பூவுடல் கடந்த பல்லோர் உறையும் இடமென்பது நம்பிக்கை.

‘ஜக்கக்கம்பை’ ஊரில் தொடங்கி ‘சிரியூர்’ வரை நீளும் பேரூலகம் இது. உள்ளே நுழைந்ததும் ஆதியால் அணைத்துக் கொள்ளுமது. வெளியே வரும்வரை எவ்வளவு முயன்றாலும் அது விடாது. அந்த விடாத உலகம் குனிக்கியையும் விடாது பிடித்திருந்தது.

பாதைதெரியாது தடுமாறுவதைவிடவும், கற்பனைக்கெட்டாத பெருநிலமொன்றில் தொலைந்த ஒன்றினைத் தேடுவது அவ்வளவு கடினமானது. அது பெரும் காட்டு ஆடின் பெரும் ‘ஜள்ளெ’ ஆனாலும் சிறு கடுகினும் நுண்ணியது.

பல்லைக் கடித்துக்கொண்டே உறுமும் சப்தம். ஒருவகையில் சீழ்க்கைக் கலந்த மிரட்டும் சப்தமும்கூட. அது மனிதனா? அல்ல, அல்ல… மிருகமா?... அல்ல, அல்ல… இரண்டும் கலந்த கலவையா? ஆம்.. ஆம்.. அதேதான். மிருகமல்ல... ஒருவகை மனிதன்தான். ஆனால், மிருகம் மிகுந்த மனிதன். மனிதம் மிக மிக குறைந்த மிருகம்.

பல நூற்றாண்டுகளாக ஓங்கிவளர்ந்த ‘பைகெ’ மரத்தின் பொந்துதான் அதற்கான இடம். வழிதவறி அந்தக் காடோடிய எருமைகளைத் தன்பக்கம் இழுப்பதே, அதை கண்ணியாய் வைத்து நரபலிக் கொள்வதே அதன் சீழ்கை உறுமலின் நோக்கம்.

மேலும் படிக்க ...

முதல் சந்திப்பு: பல்துறை ஆற்றல் மிக்க கலா வித்தகி ஆனந்தராணி பாலேந்திரா! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
22 ஏப்ரல் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

உள்ளார்ந்த கலை, இலக்கிய, ஊடக ஆற்றல் மிக்கவர்கள் தமது தாயகம்விட்டு உலகில் வேறு தேசங்களில் வாழ நேர்ந்தாலும், தமது ஆற்றல்களை வெளிப்படுத்திக்கொண்டேயிருப்பார்கள் என்பதற்கு மற்றுமோர் உதாரணமாகத்திகழ்பவர் ஆனந்தராணி பாலேந்திரா. இவரை 1970 களில் செல்வி ஆனந்தராணி இராஜரட்ணம் என்ற பெயருடன் முதல் முதலில் சந்தித்தது இலங்கை வானொலி கலையகத்தில்தான்.
1970 – 1977 காலப்பகுதியில் இவர் பங்கேற்ற மேடை நாடகங்கள், நாட்டிய நாடகங்கள், திரைப்படங்களில் இவரைப் பார்த்திருக்கின்றேன். நடன நர்த்தகி கார்த்திகா கணேசரின் நெறியாள்கையில் அரங்கேறிய எல்லார – காமினி நாட்டிய நாடகத்தில் கெமுனுவின் தாய் விகாரமாதேவியாகவும், கலைஞர் தாசீஸியஸின் பிச்சை வேண்டாம் நாடத்திலும், வாடைக்காற்று, கோமாளிகள் திரைப்படங்களில் முக்கிய நாயகியாகவும் பார்த்தேன். எனினும், நாம் மீண்டும் சந்தித்து எமது கலை, இலக்கிய, வானொலி ஊடகத்துறை நட்பை வளர்த்துக்கொண்டது புகலிடத்தில்தான்.

இவரது கணவர் பாலேந்திராவை 1974 இல் சுஹேர் ஹமீட்டின் ஏணிப்படிகள் நாடகத்தில் பிரதான பாத்திரத்தில்தான் முதல் முதலில் பார்த்தேன். இவர்கள் இருவரையும் இல்லற வாழ்க்கையில் இணைத்தது, இந்திரா பார்த்தசாரதியின் மழை நாடகம்தான். இந்த நாடகத்திற்கென ஓர் அபூர்வ செய்தி இருப்பதாக எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி அடிக்கடி சொல்வார். மழை நாடகத்தில் நடிக்கும் நாயகனும் நாயகியும் பின்னர் மணம் முடித்து இல்லற வாழ்வினை தொடங்கிவிடுவார்களாம். ஆனந்தராணி – பாலேந்திராவுக்கும் இதுதான் நடந்தது.

மேலும் படிக்க ...

நான் நினைவில் வைத்துக்கொள்கிறேன் கோமகன்! - நெற்கொழுதாசன் -

விவரங்கள்
- நெற்கொழுதாசன் -
முகநூல் குறிப்புகள்
21 ஏப்ரல் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- எழுத்தாளரும் , 'நடு' இணைய இதழ் ஆசிரியருமான கோமகன் (தியாகராஜா ராஜராஜன்)  மறைந்து ஒரு வருடமாகின்றது. அவரது நினைவாக எழுத்தாளர் நெற்கொழுதாசன் எழுதிய அஞ்சலிக் குறிப்பிது. கோமகனின் சகோதரரான எழுத்தாளர் வடகோவை வரதராஜன் தன் முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதனைக் கோமகனின் நினைவாக பதிவுகள் இணைய இதழும் இங்கு பகிர்ந்துகொள்கின்றது.  மின்னலைப் போல் ஒளி வீசி மறைந்த கோமகனை வரலாறு அவரது இலக்கியப் பங்களிப்புகளூடு நினைவில் வைத்திருக்கும். - பதிவுகள்.காம் -


கோமகன் மறைந்து  ஆண்டு ஒன்றாயிற்று. பாரிஸின் ஆரம்பகாலங்களிலேயே உருவாகிய உறவு அவரது.   எப்போது கோமகனை சந்தித்தாலும்  ஒருவகையறியாத  மகிழ்வு  உண்டாகும். அவரது குரலில்  இழையும்  சொற்கள் மிதப்பான வெள்ளந்தித்தனத்தை  உருவாக்கும்.  அது அவரது உரையாடல் பாணி.  அல்லது  தனிக்கதை. ஓராண்டாக ஒலிக்காத, பிசுறு தட்டாத அவரது  குரலைக் கொண்டுவந்து மனத்தில் நிகழ்த்திப் பார்க்கிறேன். வெறுமை. அந்த இடம் கோமகனுக்கானது. யாராலும் நிரப்ப முடியாதது.

யாழ் இணையத்தில் நானும் எழுத்தாளன்தான் என்ற கோதாவில் எழுதிக்கொண்டிருந்த நாள்களில்,  பாராட்டும் சின்ன சின்ன சீண்டல்களுமென கருத்துக்களை எழுதுவார். ஒருநாள் உங்களோடு கதைக்கவேண்டும் என்று தொலைபேசி இலக்கத்தை அனுப்பியிருந்தார். அழைத்தேன். பேசினோம். சந்தித்தோம். பாரிஸில் நான் அமைத்து வைத்திருந்த நட்பு, உறவு வட்டத்திற்கு  வெளியேயான இன்னொரு தளத்தில் உருவாகிய நெருக்கம் அது. இறுதிவரை விலக்கமும் நெருக்கமுமாக தொடர்ந்துகொண்டு தானிருந்தது.   

மேலும் படிக்க ...

சிறுகதை: இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்.... - கிறிஸ்டி நல்லரெத்தினம் -

விவரங்கள்
- கிறிஸ்டி நல்லரெத்தினம் -
சிறுகதை
21 ஏப்ரல் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

சார்லிக்கு இன்று என் மீது கோபம். அவன் தட்டில் வைத்த எதையும் இன்று சாப்பிடவில்லை. தினமும் நான் கொடுக்கும் அந்த உலர்ந்த கொடிமுந்திரியைக்கூட தொடவில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். அதுதான் அவன் 'பேஃவரிட்'.....அதைக்கூட..... காலையில் இருந்து "உர்ர்ர்.....உர்ர்ர்" என்று ஏதோ விசித்திர சத்தம் வேறு எழுப்பிக்கொண்டேயிருந்தான்.  

காலையில் எழுந்ததுமே சார்லிக்கு அருகில் சென்று "ஹலோ சார்லி" என்பேன். பதிலுக்கு "ஹலோ" என்றுவிட்டு கூட்டின் வாசலுக்கு அருகில் வந்து அமர்ந்துகொள்வான். கூட்டின் கதவுகளை அகலத் திறந்து, ஒரு தொட்டில் இருந்து மழலையை தூக்கும் தாயின் கவனத்துடன், மிகப் பவ்வியமாக சார்லியை என் விரல்கள் மூடிக்கொள்ளும். அவனின் பஞ்சுபோன்ற மிருதுவான இறகுகள் என் விரல்களுக்கு ஒரு இதமான மென்மையை அறிமுகப்படுத்தும். என் பெருவிரலுக்கும் சுட்டுவிரலுக்கும் இடையே உருவாகும் அந்த இடைவெளியில் அவன் தலையை வெளித்தள்ளி குறுகுறுவென தலையை பல கோணங்களில் திருப்பி ஒரு புதிய உலகைக் கண்டுகொண்ட ஒரு மாலுமியின் வியப்புமிகுந்த கண்டடைதல் அங்கு நடந்தேறும்.

என் விரல்களில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு மெதுவாய் என் கை வழி ஏறி தோளில் அமர்ந்து கொண்டு என் காதின் ஓரங்களை தன் கூரிய அலகுகளால் கவ்வி விடுவிப்பான். இந்த சீண்டல் பல நிமிடங்களுக்கு நடந்தேறும். எஜமானுக்கு வலி ஏற்படுத்தாத 'செல்லச் சீண்டல்' அது. அவனது அன்பின் அடர்த்தியின் அளவுகோல் அது.

மேலும் படிக்க ...

குரு அரவிந்தன் வாசகர் வட்டம் சிறுகதைத் திறனாய்வுப் போட்டி-2023, முடிவுகள்! - சுலோச்சனா அருண் -

விவரங்கள்
- சுலோச்சனா அருண் -
நிகழ்வுகள்
21 ஏப்ரல் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

1ஆம்பரிசு  - முகம்மது நூர்தீன் பாத்திமா றிஸாதா    ரூபா 30,000   காத்தான்குடி-06 இலங்கை
2ஆம்பரிசு  - ஜூனியர் தேஜ்,  வரதராஜன்  ரூபா 25,000    சீர்காழி, தமிழ்நாடு
3ஆம்பரிசு  - ஹஜிஸ்தா நூரி முஹம்மட் ஹிராஸ்  ரூபா 20,000   காத்தான்குடி-5 இலங்கை
4ஆம்பரிசு  - பர்வின் பானு. எஸ்    ரூபா 15,000 தேனாம்பேட்டை, சென்னை
5ஆம்பரிசு  - கலாதர்ஷினி குகராஜா ரூபா 10,000   நுஹேகொடை, இலங்கை

20  பாராட்டுப்  பரிசுகள் - தலா ரூபா 5000        

1. திருப்பதி. தீ,  புதுக்கோட்டை, தமிழ்நாடு
2. அருள் சுனிலா.ஜா, சகோ.(முனைவர்) பெரியகுளம், தேனி
3. ஏழுமலய். சொ, (முனைவர்) புதுச்சேரி - 5, இந்தியா
4. அனுதர்ஷினி சந்திரசேகர், மெசன்ஜர் வீதி, கொழும்பு
5. சந்தனமாரியம்மாள்.கோ,(முனைவர்)கோவில்பட்டி, தூத்துக்குடி.
6. அம்பிகா வாசுதேவன்,  ரொசெஸ்ரர், நியூயோர்க்.
7. வேல்முருகன். த,  கோவில்பளையம், ஈரோடு
8. ரகுநாதன். டி. எஸ், நேதாஜி நகர், கோயம்புத்தூர்
9. சுப்ரபாரதி மணியன்,  பாண்டியன் நகர், திருப்பூர்.
10. சந்திரன் வேலாயுதபிள்ளை, மார்க்கம், கனடா
11. பொரவியா பிள்ளை புஷ்பராஜூ,கொழும்பு-15, இலங்கை

மேலும் படிக்க ...

நினைவு கூர்வோம்: புரட்சிப்பெண் பிறேமாவதி மனம்பெரி! - வ.ந.கி -

விவரங்கள்
- வ.ந.கி -
அரசியல்
19 ஏப்ரல் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஜேவிபி'யினரின் அரசுகெதிரான 1971 புரட்சியின் போது கதிர்காமம் அவர்களின் முக்கியதொரு கோட்டையாக விளங்கியது. அங்கு புரட்சியாளர்களை அடக்கிய இலங்கை அரச படையினர் ஆண்கள், பெண்களென்று பலரைக் கைது செய்தார்கள். அவர்களில் பிரேமவதி மனம்பெரியும் ஒருவர்.

இரவு முழுவதும் தடுப்புக்காவலில் அவரைப்பலமாகச் சித்திரவதைக்குட்படுத்தினர். அவரிடமிருந்து எவ்விதமான தகவல்களையும் பெற முடியாத நிலையில் ஆத்திரமுற்ற உயர் இராணுவ அதிகாரி அவரை நகரத்தெருக்களினூடு நிர்வாணமாக்கி நடக்க வைத்தார். அவ்விதம் செல்லும்போது இன்னுமோர் அதிகாரி அவரைப்பலமாகத் தாக்கினார். இறுதியில் தபால் நிலையமருகில் அவரைச்சுட்டு உயிருடன் புதைகுழிக்குள் விட்டுச் சென்றனர். பின் மீண்டும் இரு தடவைகள் வந்து அவரைச் சுட்டுக் கொன்றனர். பிரேமவதி மனம்பெரிக்கு அப்பொழுது வயது 22.

மேலும் படிக்க ...

கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையம் - எழுத்தாளர் அரங்கம் எட்டு!

விவரங்கள்
- தகவல்:இராஜலிங்கம் வேலாயுதர் -
நிகழ்வுகள்
19 ஏப்ரல் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ZOOM  Meeting ID - 813 3804 3947 |  Passcode - 2023

ZOOM  Meeting ID - 813 3804 3947 |  Passcode - 2023

நினைவு கூர்வோம்: அன்னை பூபதி கணபதிப்பிள்ளையின் நினைவு நாள் ஏப்ரில் 19. - வ.ந.கி -

விவரங்கள்
- வ.ந.கி -
அரசியல்
18 ஏப்ரல் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

போராட்ட அரசியலை அமைப்பையோ அல்லது பாராளுமன்ற அரசியல் அமைப்பையோ சேராத தாயொருவர் , மட்டக்களப்பு - அம்பாறை அன்னையர் முன்னணி என்னுமொரு சமூக அமைப்பைச் சேர்ந்த தாயொருவர், நாட்டில் நிகழ்ந்துகொண்டிருந்த போரை நிறுத்தி , பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க வேண்டுமென்பதற்காகத் தன்னுயிரை அமைதி வழியில் உண்ணாவிரதமிருந்து தந்துள்ளார்.

அன்னையர் முன்னணியின் சார்பில் ஏற்கனவே உண்ணாவிரதமிருந்த அன்னம்மா டேவிட் என்பவரின் உண்ணாவிரதம் இடை நடுவில் தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில், 'தான் சுய நினைவுடனே இம்முடிவுக்கு வந்துள்ளதாகவும், தான் நினைவிழக்கும் பட்சத்தில் யாரும் தன் போராட்டத்தைத் தடுக்கக் கூடாது' என்ற முன் கூட்டியே அறிவித்து விட்டு உண்ணாவிரதமிருந்த அந்தத் தாயின் நெஞ்சுறுதி போற்றுதற்குரியது.

மேலும் படிக்க ...

எழுத்தாளர் ரொய் ரட்னவேல் ( Roy Ratnavel)வாழ்க்கை அனுபவ நூலான Prisoner # 1056 (கைதி # 1056) வெளியீடு! - வ.ந.கி -

விவரங்கள்
- வ.ந.கி -
நூல் அறிமுகம்
17 ஏப்ரல் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எழுத்தாளர் ரொய் ரட்னவேல் ( Roy Ratnavel) எழுதிய அவரது வாழ்க்கை அனுபவ நூலான  Prisoner # 1056 (கைதி # 1056) என்னும் நூலை ஏப்ரில் 18, 2023 அன்று வெளியிடுகின்றது உலகப் புகழ்பெற்ற பதிப்பகங்களில் ஒன்றான பென்குயின் பதிப்பகத்தின் கனடாப் பிரிவான பென்குயின் ராண்டம் ஹவுஸ் (Penguin Random House Company) பதிப்பகம்.

இலங்கையில் போர்ச்சூழல் நிலவிய காலத்தில் நூற்றுக்கணக்கில் வடபகுதி இளைஞர்கள் கைது செய்யப்பட்டுப் பூசா முகாமில் அடைக்கப்பட்டார்கள்.  என் மாமா ஒருவரின் (அம்மாவின் தம்பி)  புத்திரர்களும் அவ்விதம் பூசாவில் அடைக்கப்பட்டு, மாமாவின் முயற்சியினால் பூசாவிலிருந்து விடுவிக்கப்பட்டுக் கனடா வந்தவர்கள்.  ரொய் ரட்னவேலும் அவ்விதம் அடைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுக் கனடாவுக்குத் தனது பதினேழாவது வயதில் வந்தவர்.  சிறையில் கைதியாக இவர் அடைக்கப்பட்டபோது சித்திரவதை செய்யப்பட்டுத் துன்பத்தினை அனுபவித்திருக்கின்றார். அப்போது கைதியாக அவருக்குக் கொடுக்கப்பட்ட கைதி இலக்கம் 1056.

மேலும் படிக்க ...

முகநூற் பதிவு: கிருஷ்ணரும், நாரதரும் கூடிப்பெற்ற 60 பிள்ளைகளில் 37 வது பிள்ளையின் பெயர் சோபகிருது. - சூர்யா சேவியர் (Surya Xavier) -

விவரங்கள்
- சூர்யா சேவியர் (Surya Xavier) -
முகநூல் குறிப்புகள்
17 ஏப்ரல் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- முகநூற் பக்கங்களில் வெளியாகும் பயனுள்ள குறிப்புகள் அவற்றின் பயன் கருதிப் பதிவுகளின் இப்பக்கத்தில் வெளியாகும். -  பதிவுகள்.காம் -


சித்திரைப்புத்தாண்டை அண்மையில் கொண்டாடினோம்., பலர் சோபகிருது புத்தாண்டு வாழ்த்துகள்  என்று வாழ்த்தினார்கள். சோபகிருது என்னும் வடமொழி சித்திரைப்புத்தாண்டில் எவ்விதம் நுழைந்தது ? சித்திரைப்புத்தாண்டு தமிழ்ப்புத்தாண்டா என்பதை ஆராய்கிறது சூர்யா சேவியர் (Surya Xavier)  எழுதிய இம்முகநூற் பதிவு. இப்பதிவில் தன் நிலைப்பாட்டை உணர்ச்சி வசப்படாது , தர்க்கபூர்வமாக , ஆதாரங்களுடன் எடுத்துரைக்கின்றார் பதிவாளர்.  இதனை எனக்கு அறியத்தந்த கவிஞர் தம்பாவுக்கு நன்றி. "சித்திரையை ஆண்டின் தொடக்கமாக கருதுபவர்கள் இதைக் கொண்டாடிவிட்டுப் போவதில் பிரச்சனையில்லை. உலகில் பலபகுதிகளில் பலவிதமான ஆண்டு தொடக்கங்கள் கொண்டாடப்பட்டே வருகிறது. இதை தமிழ் புத்தாண்டு என்று சொல்வதில் தான் பிரச்சனை எழுகிறது. '' என்று பதிவாளர் கூறுவதை ஏற்றுக்கொள்ளலாம். எம் பால்ய பருவத்திலிருந்து சித்திரைப்புத்தாண்டைக் கொண்டாடி வருகின்றோம். அப்படியே கொண்டாடி வருவதில் பிரச்னையில்லை. தமிழ்ப்புத்தாண்டு என்று கொண்டாடத் தேவையில்லை.

இப்பதிவில் பதிவாளார் "இளவேனில் என்பது சித்திரை-  வைகாசி மாதங்களுக்கு உரிய காலம் என சிலர் வாதிடுகிறார்கள். ஆனால் அது முற்றிலும் தவறு." என்றும் கூறியிருப்பார். நான் அதனை முற்றிலும் தவறாகக் கருதவில்லை. நானும் இளவேனில் பங்குனி ,சித்திரை, வைகாசி என்றே கருதுகின்றேன். அப்பொழுதுதான் உயிரினங்கள் பலவற்றின் வசந்த காலம் அப்பொழுதுதான் ஆரம்பமாகின்றது. இலை உதிர்ந்த மரங்கள் அப்பொழுதுதான் தளைக்க ஆரம்பிக்கின்றன. மேலும் பதிவாளர் "முன்பனி (புரட்டாசி - ஐப்பசி),  பின்பனி (கார்த்திகை - மார்கழி)" என்று கூறுவதையும் என்னால் ஏற்க முடியவில்லை. யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரையில் பின்பனிக்காலம் 'தை - மாசி'தான்.  அதனால்தான் 'மாசிப்பனி மூசிப்பெய்யும்' என்று நாம் கூறுவதுண்டு என்றும் கருதுகின்றேன். உண்மையில் என் அனுபவத்தின்படி மாசிப்பனி மூசித்தான் பெய்யும். - வ.ந.கிரிதரன் -


கிருஷ்ணரும், நாரதரும் கூடிப்பெற்ற 60 பிள்ளைகளில் 37 வது பிள்ளையின் பெயர் சோபகிருது. - சூர்யா சேவியர் (Surya Xavier)

ஒருமுறை நாரதர், 'கடவுள்' கிருஷ்ணரைப் பார்த்து, "நீங்கள் அறுபதினாயிரம் கோபிகைகளுடன் கூடி இருக்கின்றீரே, எனக்கு ஒரு பெண்ணையாவது தரக்கூடாதா?" என்று கேட்டாராம்.  அதற்குக் கிருஷ்ணர், "நான் உடன் இல்லாமல், வீட்டில் தனியாய் இருக்கும் பெண்ணை நீ எடுத்துக்கொள் என்றாராம். இதற்கு நாரதர் உடன்பட்டு அறுபதாயிரம் வீடுகளிலும் சென்று பார்த்தாராம். ஆனால் எங்கும் கிருஷ்ணன் இல்லாத பெண்களைக் காண முடியாததால், நாரதர் மீண்டும் கிருஷ்ணனிடமே வந்து அவர் திருமேனியில் மோகம் கொண்டு அவரை நோக்கி "நான் உங்களிடமே பெண்ணாக இருந்து உடலுறவு கொள்ள விரும்புகிறேன்" என்றாராம்.

கிருஷ்ணர் நாரதரை "யமுனையில் குளித்தால் பெண்ணாய் மாறுவாய்" எனச் சொல்ல, நாரதர் அவ்வாறே செய்து, ஓர் அழகுள்ள பெண்ணாக மாறினாராம் .  பின் 'கடவுள்' கிருஷ்ணருடன் அறுபது வருடம் உடலுறவு கொண்டு , அறுபது மகன்களைப் பெற்றாராம். அவர்கள் பிரபவ தொடங்கி அட்சய முடிய என பெயர் பெற்றார்களாம். இவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வருடமாகும் வரம் பெற்றார்களாம். இதுதான் சித்திரையை புத்தாண்டு என்று சொல்வதற்கு சொல்லப்படும் புராணக்கதை. இக்கதைக்கு ஆதாரம் எது? சென்னை பச்சையப்பா கல்லூரியில் தமிழ் பண்டிதராகப் பணியாற்றிய ஆ.சிங்காரவேலு முதலியாரால் தொகுக்கப்பட்டு, இராமநாதபுரம் சேதுபதி பரம்பரையில் வந்த பாண்டித்துரை தேவர் உதவியால் 1910 வெளியிடப்பட்ட நூல் அபிதான சிந்தாமணி. அபிதான சிந்தாமணி நூலின் 1392 ம் பக்கத்தில் தான், வருடப்பிறப்பு குறித்த, மேற்கூறப்பட்ட இக்கதை எழுதப்பட்டுள்ளது. 60 பெயர்களில் பிரபவ தொடங்கி அட்சய வரை எதுவும் தமிழ் பெயர் இல்லை.

மேலும் படிக்க ...

கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் 'தூங்காதே! தம்பி தூங்காதே!' - ஊர்க்குருவி -

விவரங்கள்
- ஊர்க்குருவி -
கலை
16 ஏப்ரல் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பிறந்தநாள் ஏப்ரில் 13. அவரது நினைவாக எனக்கு மிகவும் பிடித்த அவரது பாடலொன்று - 'தூங்காதே தம்பி தூங்காதே.'. 'நாடோடி மன்னன்' திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள கருத்தாழம் மிக்க பாடல். 'நாடோடி மன்னன்'  எம்ஜிஆரின் இயக்கத்தில் வெளியாகி வசூலில் சாதனை புரிந்த திரைப்படம்.  எம்ஜிஆரின் திரையுலகில் முக்கிய மைல் கல் 'நாடோடி மன்னன்'. இதில்தான் அவர் சரோஜாதேவியை முதன் முதலாகத் தன் திரையுலக நாயகியாக அறிமுகப்படுத்துகின்றார்.

கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் முற்போக்குக் கவிஞர். பொதுவுடமையைப் பாடிய கவிஞர். வர்க்க விடுதலையை நாடிய கவிஞர். அவரது இன்னுமொரு புகழ்பெற்ற பாடல் 'சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா'.  'நாடோடி மன்ன'னில் இடம் பெற்றுள்ள 'சும்மா இருந்த நிலத்தைக் கொத்தி' பாடலும் அவரது முக்கியப் பாடல்களிலொன்று.

மேலும் படிக்க ...

Srilankan Australians ( Inc ) Presents மெல்பனில் புத்தகம், ஓவியம், ஒளிப்படக் கண்காட்சி! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
நிகழ்வுகள்
14 ஏப்ரல் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மேலும் படிக்க ...

புத்தாண்டு பிறக்கட்டும்.! பெய்யட்டும் இன்பப் பெருமழை! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
கவிதை
14 ஏப்ரல் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- பதிவுகள் வாசகர்கள்,  ஆக்கப்பங்களிப்பளிக்கும் அனைவருக்கும் சித்திரைப்புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது.  -

பிளவுகளால் பிரிந்திருக்கும்  பூவுலகில்
புரிந்துணர்வு பூக்கட்டும்; மலரட்டும்.
வளமான வாழ்வுக்கு மானுடர்தம்
வாழ்வில் வேண்டாத பிரிவுகள்
வீணே! வீணே! வீணே!
பிறக்குமிப் புத்தாண்டில் இப்
புரிந்துணர்வு பிறக்கட்டும்.

கட்டடக்காட்டுக் கனவுகளில்
களிக்கும் ககனத்தின் கனவுகள்
கலையட்டும் - ககனம்
எட்டுத் திக்கெங்கும் சிறகடிக்கும்
சிட்டுக் குருவிகளின் கனவுகளில்
சிறக்கட்டும்.

மேலும் படிக்க ...

நெஞ்சாரச் சித்திரையை வரவேற்று மகிழ்வோம்! - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர், மெல்பேண், அவுஸ்திரேலியா -

விவரங்கள்
- மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர், மெல்பேண், அவுஸ்திரேலியா -
கவிதை
14 ஏப்ரல் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

முன்பனி பின்பனி மாறிய பின்னே
இளவேனில் துளிர்க்க சித்திரை மலரும்.
தைப் பொங்கலுண்டு  தளர்வகலும் வேளை
புத்துணர் வூட்டச் சித்திரை  கைகோர்க்கும்.

பெற்றோரும் மகிழ்வர் பிள்ளைகளும் மகிழ்வர்.
உற்றவரும் மகிழ்வர் உறவுகளும் மகிழ்வர்.
மணமேடை அமர மங்கலநாள் அமைய
சிறப்பான நாளை சித்திரையே திறக்கும்.

வருடத்தின் தொடக்கம் சித்திரையே என்போம்.
சித்திரையே தொடக்கமாய் பஞ்சாங்கம் காட்டும்.
பஞ்சாங்கம் பார்ப்போம்  பலன்களையும் அறிவோம்.
நெஞ்சாரச் சித்திரையை வரவேற்று மகிழ்வோம்.

மேலும் படிக்க ...

காலத்தால் அழியாத கானம்: பொன்னெழில் பூத்தது புது வானில் - ஊர்க்குருவி -

விவரங்கள்
- ஊர்க்குருவி -
கலை
14 ஏப்ரல் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

நரசிம்ம பல்லவராக எம்ஜிஆரும், நர்த்தகி சிவகாமியாகச் சரோஜாதேவியும் திரையில் வரும் இப்பாடல் இடம்பெற்றுள்ள திரைப்படம் 'கலங்கரை விளக்கம்'.  இசை - மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி.  கேட்பதற்கு இனிமையான, மனத்துக்கு ஒத்தடம் தரும் பாடல்களிலொன்று இந்தப்பாடல். பாடல் வரிகள் ஒவ்வொன்றும், அவற்றைப் பாடிய டி.எம்.எஸ் & பி. சுசீலா குரல்களின்  இனிமையும் , அபிமான நடிகர்களின் நடிப்பும் நெஞ்சைக் கொள்ளுவன. எப்பொழுது கேட்டாலும் கேட்பவர் உள்ளங்களை இன்பத்திலாழ்த்தும்  பாடல். காதலின் சிறப்பைச் சிறப்பாக எழுத்தில் வடித்திருப்பார் கவிஞர். இப்பாடலை எழுதியவர் கவிஞர் கண்ணதாசனல்லர். அவரிடம் உதவியாளராகவிருந்த பஞ்சு அருணாசலம். கண்ணதாசனின்  கவி உதவியாளரும் கவிதை எழுதுவார் என்று எண்ண வைக்கும் பாடல்.

மேலும் படிக்க ...

கவிஞர் கதிரேசர்பிள்ளை நூற்றாண்டு நிகழ்வும், 'கதிரேசர் கவிதைகள்' நூல் அறிமுகவிழாவும்!

விவரங்கள்
- தகவல்: சபேசன் -
நிகழ்வுகள்
13 ஏப்ரல் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

சிறுகதை: தைகெ - முனைவர் கோ.சுனில்ஜோகி, உதவிப்போசிரியர், தமிழ்த்துறை, குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி, கோவை. -

விவரங்கள்
- முனைவர் கோ.சுனில்ஜோகி, உதவிப்போசிரியர், தமிழ்த்துறை, குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி, கோவை. -
சிறுகதை
13 ஏப்ரல் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

1


“ஏய் மிச்சி, அந்தக் கோட்டு எங்கே?

ஏத்தனவாட்டி சொல்றது?

ஆ… இந்தக் ‘கொறடுலெ’ வைனு..”

என்றவாறு பல்லை நறநறவென கடித்தான் மல்லன்.

அவனது இந்தப் புது நடத்தை வித்தியாசமாய்ப்பட்டது. இதய அறுவைசிகிச்சைக்குப் பிறகு பெரும்பாலும் மகள்வீடே கதியென்று ஆனநிலையில் அவர் வேறு வழியின்றி அந்தச் சூழலைச் சகித்துக் கொண்டிருந்தார்.

தனது ஒரே மகளை நெருங்கிய சொந்தத்திற்குதான் அளித்திருந்தார். ஆயிரமிருந்தாலும் அது மருமகன்வீடு. அங்கிருக்கும் போதெல்லாம் அவனின் நடத்தை பெருங்கவனம் போர்த்தியிருக்கும். அதிலும், குறிப்பாக வார்த்தையில். அவர் ‘கவுடராக’ இருந்தபோது எத்தனையோ தீர்ப்புகளைக் கூறிய அவரின் வாய் இன்று அடிக்கடி பல்லைக்கடித்து தன் வார்த்தைகளை அடக்கம் செய்துக்கொண்டிருந்தது.

“ஏய்…. இவளே.. பொறப்பட்டாச்சா…

மறக்காமா எல்லாத்தையு எடுத்துக்கோ…

அந்தக் கிழிந்த தலைப்பாகையை மறந்துடாதே…

ஏய்.. ஏய்… அந்தக் கொடெய…”

அவனின் செக்கச்சிவந்த முகம் மேலும் சிவந்தது. நேற்றிரவெல்லாம் தூக்கம் தொலைத்து செவ்வரியோடிய கண்கள் அங்குமிங்கும் அலைந்தன. மேல்வயிற்றின் இடப்பக்கம் விலாவிற்குக்கீழ் சற்று வீங்கியிருந்தது. அதை இடதுகையில் பொத்திக்கொண்டே பெருமூச்செறிந்தார்.

மிச்சியும் தன் கணவனின் இந்த விசித்திரமான செய்கையைக் கோபம் கலந்த பிரம்மிப்புடன் எதிர்நோக்கினாள். அவளும் தன் மகள் மாசியும் வைத்தக்கண் வாங்காமல் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

மேலும் படிக்க ...

அழகினை மறைத்தலும்! மறைத்தலின் கொடூரமும்! பாத்திமா மாஜிதாவின் 'பர்தா' நாவல் குறித்த ஒரு பார்வையும், சில குறிப்புக்களும்! - வாகீசன் -

விவரங்கள்
- வாகீசன் -
வாகீசன்
13 ஏப்ரல் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அரசியல் புனைவுகள் அதிகமாக வெளிவந்து கொண்டிருக்கும் காலகட்டம் இது. படைப்பாளிகள் கொந்தளிக்கும் சமகால நிகழ்வுகளைப் பேசு பொருளாக்கித் தமது படைப்புக்களின் ஊடாக உடனுக்குடனேயே தமது வாசகர்களுடன் உரையாடும் சூழலொன்று இன்று உருவாகி வந்துள்ளது. இந்த வகையில் கடந்த சில வருடங்களாக பலத்த சர்ச்சைகளையும் விவாதங்களையும் உருவாக்கியிருந்த இஸ்லாமியப் பெண்களின் ஆடைகள் குறித்தும் அந்த ஆடைகளுக்கு எதிரான குரல்கள் குறித்ததுமான சம்பவங்களை மையப்படுத்தி 'பர்தா' எனும் நாவல் 'எதிர்' வெளியீடாக வெளிவந்துள்ளது. இந்நாவலினை பாத்திமா மாஜிதா எழுதியுள்ளார். கிழக்கிலங்கையில் பிறந்து இப்போது இலண்டனில் வசித்து வரும் இவர் ஏற்கனவே பல சிறுகதைகளை எழுதியிருந்த போதிலும் இது இவர் எழுதிய முதலாவது நாவல் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. கடந்த சென்னை புத்தகக் கண்காட்சி நடைபெற்ற காலப்பகுதியில் வெளிவந்த இந்நாவல் பல்வேறு ஆளுமைகளினாலும் எழுதாளர்களினாலும் சிறந்த ஐந்து புத்தகங்களில் ஒன்றாக பரிந்துரை செய்யப்பட்டதும், இதன் வெளியீட்டாளர் இதனை அதிக விற்பனையான புத்தகங்களில் ஒன்றாக அறிவித்ததும் நாம் அறிந்த செய்திகள்.

இந்நாவல் மூன்று தலைமுறைகளின் கதையினைப் பேசி நிற்கின்றது. கிழக்கிலங்கையில் உள்ள மாவடி என்ற கிராமத்தைக் களமாகக் கொண்டு கிளைக்கும் நாவல் கிழக்கு இலண்டன் பகுதி வரை நகர்கின்றது. மாவடி கிராமத்தில் அமைதியாகவும் எளிமையாகவும் வாழ்ந்து வரும் அந்த இஸ்லாமியப் பின்னணி கொண்ட சமூகத்தில் மதம் என்ற போர்வையின் கீழ் ஏதோ ஒரு தேசத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு உள் நுழையும் பர்தா என்னுமோர் அந்நிய ஆடையானது ஏற்படுத்தும் களேபரங்களும் குழப்பங்களும் மாற்றங்களுமே இந்தக் கதையின் மையக்கரு.

மேலும் படிக்க ...

முனைவர் பீ. பெரியசாமி கவிதைகள் மூன்று!

விவரங்கள்
- முனைவர் பீ. பெரியசாமி -
கவிதை
13 ஏப்ரல் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

1. நீங்கள் அதிசயமானவர்கள்!

நீங்கள் அதிசயமானவர்கள்
அதிவிரைவாக சம்பாதித்ததால்
நாங்கள் அலட்சியமானவர்கள்
உங்களை சம்பாதிக்க வைத்ததால்

சேமிக்கும் காசு கூட காணவில்லை
ஏதேதோ சொல்லி நீங்களே
எடுத்துக் கொண்டிர்கள்
நீங்கள் நாடாள,
நாங்கள் நடுத்தெருவில்,
நீங்கள் அதிசய மானவர்கள்

ஏழைகளே இல்லாத நாடு என்பீர்
ஏனோ உங்கள் கண்களுக்கு
 நாங்கள் தென்படுவதேயில்லை

இறந்துக்கிடக்குது இங்கே சுதந்திர இந்தியா
நீங்கள் சொல்கிறீர்கள் பாரத் மாதா கீ ஜே
என்றும் நீங்கள் அதிசய மானவர்கள்

மேலும் படிக்க ...

எதிர்மறை கவிவரையும் படி செய்தது தலைநகர்! - ம.ஆச்சின் -

விவரங்கள்
- ம.ஆச்சின் -
கவிதை
13 ஏப்ரல் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

விண்ணில் ஓசையிட்டு செல்லும் விமானம்,
விரைந்து ஓடும் மாநகர இரயில்கள்,
சிக்னலில் தவித்துக் கொண்டிருக்கும்
இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள்,
அனுதினமும் பறக்கும் அவசர ஊர்திகள்,
பரபரப்பில் ஓடும் மருத்துவர்,
அவர்களுக்கு வழிவிடாமல் செல்லும்
மானிடக்கூட்டம்!

மேலும் படிக்க ...

அஞ்சலிக்குறிப்பு : அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் அயராமல் எழுதிய ஊடகவியலாளர் மாணிக்கவாசகம் மறைந்தார்! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
12 ஏப்ரல் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இன்று ( 12 ஆம் திகதி ) முற்பகல் நடைப்பயிற்சிக்கு சென்றுகொண்டிருந்தபோது, கனடாவில் வதியும் எழுத்தாளர், இலக்கிய நண்பர் ஜெகதீசனிடமிருந்து, எமது மூத்த ஊடகவியலாளர் பொன்னையா மாணிக்கவாசகம் நேற்று நள்ளிரவு வவுனியாவில் மறைந்து விட்டார் என்ற துயரமான செய்தி எனது மின்னஞ்சலுக்கு வந்தது. அதனைப்படித்ததும் அதிர்ச்சியில் மனம் நிலைகுத்தியது. தாமதிக்காமல் “ என்ன நடந்தது..? “ எனக்கேட்டு எழுதினேன். சில நிமிடங்களில் பின்வரும் குறிப்பு வந்தது:

ஊடகவியலாளர் பாரதி ராஜநாயகத்தின் முகநூல் பதிவு  'நீண்ட காலமாக காலனுடன் போராடிக்கொண்டிருந்தவா். அவரது மனத்துணிவுதான் அவரை இயக்கிக்கொண்டிருந்தது. மருத்துவமனையில் இருக்கும் போதும் மடிக்கணினியில் வேலை செய்துகொண்டுதான் இருப்பாா். மூன்று தினங்களுக்கு முன்னா் - ஞாயிற்றுக்கிழமை அவரைப் பாா்ப்பதற்காக ராமும் நானும் சென்றிருந்தோம். அவரால் பேச முடியவில்லை. ஆனால், நாம் புறப்படும் போது  "இருங்கோ இருங்கோ கதைப்பம்" என்றாா். அவரது உடல்நிலை மோசமாக இருப்பது தெரிந்தது. ஆனால், இவ்வளவு விரைவாக விடைபெறுவாா் என்பது எதிா்பாா்க்காதது. தன்னுடைய வாழ்நாள் சாதனையாக பல நுால்களையும் எழுதியிருக்கின்றாா். இன்னும் ஒரு நுால் தயாரிப்புக்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. அதனையும் முடித்து வெளியிட வேண்டும் என்ற ஆதங்கம் அவருக்கு இருந்தது. கொஞ்சம் சுகமாக இருந்தாலும் கணினியைக் கொண்டுவரச் சொல்லி வேலையைத் தொடங்கிவிடுவாா் என்று அவரது மனைவி சொன்னா். வேலை மீதிருந்த பேராா்வமும் மனத்துணிவும்தான் அவரை இயக்கிக்கொண்டிருந்தது.'

நண்பர் இராஜநாயகம் பாரதியின் மேற்கண்ட பதிவுடன் எனது நினைவுகளை இங்கே பகிர்ந்துகொள்கின்றேன். வீரகேசரியில் நான் பணியாற்றிய காலத்தில் மாணிக்கவாசகம், வவுனியா பிரதேச நிருபராக இருந்தார். அவரது கையெழுத்துக்களை, முதலில் ஒப்புநோக்காளர் பிரிவிலிருந்தபோதும், அதன்பின்னர் 1984 தொடக்கம் 1987 தொடக்கம் வரையிலும் ஆசிரிய பீடத்திலிருந்தும் பார்த்து வந்திருக்கின்றேன்.
நான் ஆசிரிய பீடத்திலிருந்த சுமார் மூன்று ஆண்டுகள் எனது கடமை நாட்களில் தினம் தினம் தொலைபேசியில் பேசும் ஒருவராகவும் நண்பர் மாணிக்கவாசகம் திகழ்ந்தார்.

மேலும் படிக்க ...

சர்வதேச சகோதரர் நாள் - சிறீரஞ்சனி -

விவரங்கள்
- சிறீரஞ்சனி -
சமூகம்
12 ஏப்ரல் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இன்று, ஏப்ரில் 10,  சர்வதேச சகோதரர் நாள் ஆகும். எங்களுடைய வாழ்க்கையின் பெரும்பகுதியைச் சகோதரர்கள்தான் பங்கிட்டுக் கொள்கிறார்கள். நண்பர்களையோ, வேறெந்த உறவுகளையோ அறிவதற்கு முன் பெற்றோருக்கு அடுத்ததாக நாங்கள் பழகும் உறவும் அதுதான். எங்களின் ஆரம்பகால வருடங்களின் பெரும்நேரத்தைக் குடும்பமாக அவர்களுடன்தான் செலவிடுகிறோம். அவர்களுடன் சேர்ந்து நாங்களும் வளர்கிறோம். அந்தவகையில் சகோதரங்களுடான உறவு ஆரோக்கியமானதாக அமையவேண்டியது அத்தியாவசியமான தேவைகளில் ஒன்றெனலாம்.

சகோதர உறவின் மேன்மையைக் காட்டும் பல்வேறு திரைப்படங்களும் கதைகளும் வெளிவந்திருக்கின்றன. செம்புலப் பெயல்நீர் போல எனக் காதலுக்கு உறுதிகூறும் சங்ககாலத் தலைவனின் வரிகளை ஓட்டி,

“செம்மண்ணிலே தண்ணீரைப் போல் உண்டான சொந்தம் இது
சிந்தாமணி ஜோதியை போல் ஒன்றான பந்தம் இது”

எனக் கவிஞர் கண்ணதாசன் சகோதர உறவின் இறுக்கத்தையும் சிறப்பையும் மிக அழகாக வர்ணித்திருப்பார். இந்தப் பந்தத்துக்கு முக்கியத்துவம் வழங்கும் வகையில் 1995 முதல் கொண்டாடப்படும் சர்வதேச சகோதரர் நாள் வலுவிழந்த சகோதரர்களுக்கான நாளாக ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும், சகோதர வாஞ்சையுடன் பழகும் இரத்த உறவற்ற உறவுகளும் கொண்டாடக்கூடிய ஒரு நாளாகவே இருந்து வருகிறது.

மேலும் படிக்க ...

ஏப்ரல் மாதச் `சிந்தனைக்களம்’ நிகழ்வு: ‘பண்ணிசைமரபும் ஓதுவார்மூர்த்திகளும்’

விவரங்கள்
- தகவல்: பேராசிரியர் நா.சுப்பிரமணியன் -
நிகழ்வுகள்
12 ஏப்ரல் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மேலும் படிக்க ...

இலக்கியவெளி நடத்தும் இணையவழிக் கலந்துரையாடல் - அரங்கு 29: “கலாப்ரியா கவிதைகள்”(தொகுதி இரண்டு) குறித்த ஓர் உரையாடல்

விவரங்கள்
- தகவல்: அகில் -
நிகழ்வுகள்
12 ஏப்ரல் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மேலும் படிக்க ...

ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் நடத்தும் இணையவழிக் கலந்துரையாடல்

விவரங்கள்
- ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் -
நிகழ்வுகள்
12 ஏப்ரல் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மேலும் படிக்க ...

மற்ற கட்டுரைகள் ...

  1. வங்குரோத்து நிலையை நோக்கி அமெரிக்கா: 31.4 ட்ரில்லியன் டாலர் (அதாவது 31.4 லட்சம் கோடி ரூபா)! இது மொத்த தேசிய கடன்! மீளுமா அல்லது தாழுமா? - ஜோதிகுமார் -
  2. சிங்களக் கவிதைகளின் தமிழ் மொழிபெயர்ப்பு: 'நீ கூறுகிறாய் இறந்துவிட்டாயாம் நீ' - வானா நானா கீனா -
  3. ஜெயகாந்தன் நினைவாக....... - வானா நானா கீனா -
  4. கவிஞர் தமயந்தி கவிதைகள் ஏழு! - தமயந்தி -
  5. கனடாவில் சண்டிலிப்பாய் ஐக்கிய மன்றத்தினரின் ஒன்றுகூடல்! - குரு அரவிந்தன் -
  6. ஒளவையார் - முனைவர் ச. தனலெட்சுமி, உதவிப் பேராசிரியர், முதுகலை மற்றும் தமிழாய்வுத் துறை, தி ஸ்டாண்டர்டு ஃபயர்ஒர்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி, சிவகாசி. -
  7. ஐக்கிய இராச்சியம்: போக்காளி விமர்சனம் & கலந்துரையாடல்! - பூங்கோதை -
  8. வங்குரோத்து நிலையை நோக்கி அமெரிக்கா: “31.4 ட்ரில்லியன் டாலர் (அதாவது 31.4 லட்சம் கோடி ரூபா)! இது மொத்த தேசிய கடன்! மீளுமா அல்லது தாழுமா? (பகுதி-2) - ஜோதிகுமார் -
  9. நெடுங்கதை: சமத்துவம் தேடும் சமாதானப் புறா (2) - தமிழகத்து நெல்லை வீரவநல்லூர ஸ்ரீராம் விக்னேஷ் -
  10. கலை, இலக்கிய விமர்சகர் மு.நித்தியானந்தன் பற்றிய நினைவுக் குறிப்புகள்! - வ.ந.கிரிதரன் -
  11. அஞ்சலிக்குறிப்பு: மொழிபெயர்ப்பாளர் தேவாவின் மறைவு! ஈடு செய்யப்படவேண்டிய இழப்பு!! - முருகபூபதி -
  12. இலங்கை வரலாற்றின் சில பக்கங்களின் சாட்சியாகத் திகழும் கலகக் குரல் மு. நித்தியானந்தன்! ஏப்ரில் 01 இல் பவளவிழா நாயகன்! - முருகபூபதி -
  13. நெடுங்கதை: சமத்துவம் தேடும் சமாதானப் புறா (1) - தமிழகத்து நெல்லை வீரவநல்லூர் ஸ்ரீராம் விக்னேஷ். -
  14. மு. நித்தியானந்தன்- இலங்கை, தமிழகம், புகலிடம் அரை நூற்றாண்டுக்கு மேற்பட்ட பிரசன்னம்!- பவள விழாக்காணும் நாளில்,இனிய பிறந்த நாள் வாழ்த்து! - எம்.பௌசர் -
பக்கம் 51 / 104
  • முதல்
  • முந்தைய
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • அடுத்த
  • கடைசி