பதிவுகள் முகப்பு

அடையாளம் குறித்த தேடல்: வ.ந. கிரிதரனின் ‘கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்’ - ஒரு பார்வை! - கலாநிதி சு. குணேஸ்வரன் -

விவரங்கள்
- முனைவர் சு. குணேஸ்வரன் -
ஆய்வு
16 ஜனவரி 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- இலக்கியவெளி சஞ்சிகையின் சிறுகதைச் சிறப்பிதழில் வெளியான கட்டுரை. 'கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்' சிறுகதைத் தொகுப்பு (2021)  நூலினை வெளியிட்டது ஜீவநதி பதிப்பகம், கலை அகம், அல்வாய், இலங்கை. -


வ.ந கிரிதரன் கனடாவில் வாழ்ந்து வருகிறார். புலம்பெயர்ந்த ஈழப்படைப்பாளிகளில் ஒருவர். இலக்கியத்துறையில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறார். பதிவுகள் இணைய இதழின் ஊடாக உலகில் வாழும் தமிழ்ப்படைப்பாளர்களின் படைப்புக்களை குவிமையப்படுத்தி வருகிறார். அவர் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பான ‘கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்’ பற்றி இக்கட்டுரை நோக்குகின்றது.

மேற்கு நாடுகளுக்குப் புலம்பெயர்ந்த ஈழப்படைப்பாளிகள் 80 களிலிருந்து தாயகம் சார்ந்தும் போரால் ஏற்பட்ட பல்வேறு நெருக்கடிகள் சார்ந்தும் இதுவரை அதிகமாக எழுதி வந்தார்கள். அந்தப் பொருண்மையில் அண்மைய புலம்பெயர் படைப்புக்கள் கணிசமான அளவு மாற்றங்களைக் கண்டுள்ளன. புலம்பெயர்ந்து வாழ்கின்ற ஈழத்தமிழர்களின் வாழ்வனுபவங்கள் அந்த மாற்றங்களுக்குக் காரணமாக அமைந்திருக்கின்றன. வ. ந. கிரிதரனின் இத்தொகுப்பு, அடையாளம் குறித்த கேள்விகளையும் ஈழத்தமிழர் மாத்திரமன்றி ஒடுக்குதலுக்குள்ளாகிய வேற்று நாட்டவர்கள் அகதிகளாக வாழ்வது பற்றியும் புலம்பெயர்ந்த தமிழ்க் குடும்பங்கள் மத்தியில் இருக்கக்கூடிய உளவியற் சிக்கல்கள் பற்றியும் அதிகம் கவனத்தில் கொண்டிருக்கின்றது. இந்தப் பொருண்மை மாற்றங்களைப் படிப்படியாக ஏனைய எழுத்தாளர்களும் பதிவு செய்து வருகின்றனர். இவ்வகையில் கிரிதரனின் கதைகள் சர்வதேசியத் தளத்தில் நிற்கும் மனிதன் ஒருவனின் புகலிட வாழ்வனுபவம் சார்ந்த பார்வையாக விரிவடைந்துள்ளது.

அடையாளம் குறித்த கதைகள்

அடையாளம் குறித்தவற்றில் மனிதமூலம், Where are you from?, நீ எங்கிருந்து வருகிறாய், ஆபிரிக்க அமெரிக்க கனேடியக் குடிவரவாளன், யன்னல் ஆகிய சிறுகதைகளை இனங்காணலாம். நான் யார்? எங்கிருந்து வந்தேன்? எனது உணர்வுகள் மதிக்கப்படுகின்றனவா? நானும் மனிதனாக மற்றவர்களால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றேனா? முதலான வினாக்கள் இக்கதைகளில் இழையோடுகின்றன. இற்றைக்கு மில்லியன் கணக்கான மக்கள் உலக நாடுகளில் நாடிழந்து அகதிகளாகவும் நாடோடிகளாகவும் வீடற்றவர்களாகவும் வாழ்கின்றனர். அவர்களின் உணர்வுகளைப் பதிவு செய்யும் விதமாக மேற்கூறிய சிறுகதைகள் அமைந்துள்ளன.

Where are you from? என்று தலைப்பிட்ட சிறுகதையானது, புகலிடத்தில் அகதிகளாக வந்து சேர்ந்தவர்களை அந்நாட்டவர்கள் முதலில் கேட்கும் கேள்வியாக அமைகின்றது. இந்தக் கேள்வியினை எதிர்கொள்ளும் நபர் இதனால் அடையும் மன உளைச்சலை யாரும் பொருட்படுத்துவதில்லை. தமிழர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும்போதும் இவ்வாறு கேட்பதோடு அடுத்தடுத்த வினாக்களையும் தொடுப்பார்கள் ‘அண்ணை ஊரில எந்த இடம்?’ என்பார்கள். இவர்களின் வினாக்களில் தொக்கி நிற்பது சாதியத்தை அறியவேண்டும் என்பதே!

மேலும் படிக்க ...

பேராசிரியர் கோபன் மகாதேவா பகிர்ந்துகொண்ட எண்ணங்கள்.. - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
16 ஜனவரி 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அமரர் பேராசிரியர் கோபன் மகாதேவா அவர்கள் இறுதிவரை, தன் உடல் நிலை இடம் கொடுக்கும் வரை எழுதிக்கொண்டிருந்தார்.  இங்கு அவர் நினைவாக அவர் என் முகநூல் பதிவுகளுக்கு எழுதிய எதிர்வினைகள், முகநூல் உரையாடலில் பகிர்ந்த  கருத்துகள், அனுப்பிய மின்னஞ்சல்கள் ஆகியவற்றில் முக்கியமானவற்றைப் பகிர்ந்துகொள்கின்றேன். இவை ஒருவகையில் ஆவணங்களாகவும் இருக்குமென்பதால் இவ்விதம் பகிர்ந்துகொள்வது நல்லதேயென்றும் தோன்றுகின்றது.


அமரர் பேராசிரியர் கோபன் மகாதேவாவின் முகநூல் எதிர்வினைகள் சில...  

எனது கலை, இலக்கிய விமர்சகர் கே.எஸ்.சிவகுமாரனின் மறைவையொட்டிய முகநூல் பதிவுக்கான எதிர்வினை.

Kopan Mahadeva - 16.9.2022

I first met Sivakumaran in the field of literature when he did expertly review my English book, 'The Pearly Island &. Other Poems' in Colombo, in 1974. At that time he was working in regular contact with Drs. K. Kailasapathy and K. Sivathamby, and Daily News Editor Mervyn de Silva (who himself wrote a review of my book in his columns later). From that time I too had watched the work and progress of Siva. It appeared to me that he seemed overpowered by the academic 'stature' that Kailas and Sivathamby were wielding at that time. May be, that was one reason, he was outwardly modest to make high claims for his writings. That was one of Siva's noble and uplifting qualities. I believe Mervyn too, readily published the review of my poetry book that Siva wrote at that time. Thus I support Pathivukal editor Giritharan Navaratnam, in his long and thorough research type of article he has published above, on the quality of the many reviews and critical commentaries that the late Mr. K.S. Sivakumaran wrote over the past several decades, internationally. Any university, in my opinion would have seriously considered him for a PhD, had he submitted his works for an academic award. Even now, it is not too late for some interested university to award a posthumous PhD/DLitt so as to honour him. -- Prof. Kopan Mahadeva, 16.9.2022.

மேலும் படிக்க ...

பேராசிரியர் கோபன் மகாதேவாவின் ஆக்கங்கள் சில!

விவரங்கள்
பேராசிரியர் கோபன் மகாதேவா -
இலக்கியம்
16 ஜனவரி 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- ஜனவரி 14 அன்று இலண்டனில் பேராசிரியர் கோபாலப்பிள்ளை மகாதேவா (கோபன் மகாதேவன்) மறைந்த செய்தியினை அவரது குடும்பத்தினர் பேராசிரியரின் முகநூல்  பக்கத்தில் அறிவித்துள்ளார்கள். அவரது இழப்பால் ஆழ்ந்த துயரிலிருக்கும் அனைவர்தம் துயரில் 'பதிவுக'ளும்  பங்குகொள்கின்றது. 'பதிவுகள்' இணைய இதழின் ஆலோசகர்களில் ஒருவராகவிருந்தார். கடந்த சில வருடங்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்தபோதும் தொடர்ந்தும் புத்துண்ர்ச்சியுடன் முகநூலில் இயங்கிக்கொண்டிருந்தவர் பேராசிரியர். அவரது ஆக்கங்கள் பல, கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள் என, பதிவுகள் இணைய இதழிலும் வெளியாகியுள்ளன. அவற்றில் சிலவற்றை அவர் நினைவாகப் பகிர்ந்துகொள்கின்றோம். - ஆசிரியர், பதிவுகள்.காம்  -



1. உனக்காக என் இதயத்திலிருந்தொரு கவிதை!

 - மறைந்த அவரது  மனைவி  வைத்தியர் திருமதி சீதாதேவி மகாதேவா நினைவாகப் பேராசிரியர் கோபன் மகாதேவா எழுதிய கவிதை. -

நித்திரையே வாராத நீள் இரவின்  நதியினில் நீந்துகிறேன்.
பத்தரை மாற்றவள் எனப் பல் மக்கள் புகழ்ந்து சொன்ன
பத்தினியாள் பிரிந்துசென்று வாரம் ஏழு ஆகுது இன்று.

எத்தனையோ எண்ணங்கள் எனது நுனி மனக் குகையில்
நத்தைகள்போல் நெளிந்து நித்திரையை அரித்து உண்டு
புத்தியையும் புண் ஆக்கிச் செல்லும் வேகமும் அடக்கிச்

சத்தியமும் சபலமும் சாக்கடையின் சேறையும் கலந்து
மெத்தையிலே நீரூற்றாய் மேனி தனைக் குளிப்பாட்டி
எத்தையுமே நிரல் போட்டு எத்தனிக்கும் அதை நிறுத்தி

முத்துமுத்தாய் முன்னாளில் கவி புனைந்த என் மனசைக்
குத்திக் குடைவதனால் குழப்பத்துக்கு உருக்கொடுத்து
கத்திக் கதற வைத்துப் பல கலவரங்கள் உண்டு செய்து

சத்தம் இல்லா இரவினிலே சலசலப்பால் நிறை குலைத்து
செத்து ஒழிந்த நாட்களுக்கு நான் செல்லாமல் முன் போக
உத்தி ஒன்றும் தோன்றாது உருளுகிறேன் தீச்சுடரில்

மேலும் படிக்க ...

பேராசிரியர் கோபன் மகாதேவன் மறைவு!

விவரங்கள்
- தி. ஞானசேகரன், பிரதம ஆசிரியர், 'ஞானம்' சஞ்சிகை-
இலக்கியம்
16 ஜனவரி 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 - ஜனவரி 14 அன்று இலண்டனில் பேராசிரியர் கோபாலப்பிள்ளை மகாதேவா (கோபன் மகாதேவன்) மறைந்த செய்தியினை அவரது குடும்பத்தினர் பேராசிரியரின் முகநூல்  பக்கத்தில் அறிவித்துள்ளார்கள். அவரது இழப்பால் ஆழ்ந்த துயரிலிருக்கும் அனைவர்தம் துயரில் 'பதிவுக'ளும்  பங்குகொள்கின்றது. 'பதிவுகள்' இணைய இதழின் ஆலோசகர்களில் ஒருவராகவிருந்தார். கடந்த சில வருடங்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்தபோதும் தொடர்ந்தும் புத்துண்ர்ச்சியுடன் முகநூலில் இயங்கிக்கொண்டிருந்தவர் பேராசிரியர். அவரது ஆக்கங்கள் பல, கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள் என, பதிவுகள் இணைய இதழிலும் வெளியாகியுள்ளன. அவற்றில் சிலவற்றையும், அவரைப்பற்றி ஞானம் சஞ்சிகையின் ஆசிரியர் ஞானசேகரன் எழுதி ஞானம் சஞ்சிகையில் வெளியான அறிமுகக் கட்டுரையினையும் பகிர்ந்துகொள்கின்றோம். - - ஆசிரியர், பதிவுகள்.காம் -



(பதிவுகள்.காம்) பேரறிஞர் பேராசிரியர் கோபன் மகாதேவா

    - தி. ஞானசேகரன், பிரதம ஆசிரியர், 'ஞானம்' சஞ்சிகை-    


பேராசிரியர் கோபன் மகாதேவா அவர்களை முதன்முதலில் அவரது இலக்கியப் படைப்புக்கள் மூலமே அறியும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. ஞானம் சஞ்சிகையில் அவர் எழுதிய சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் அவரைச் சிறந்த படைப்பாளியாக எனக்கு அறிமுகப் படுத்தியிருந்தன. சென்ற 10-10-2015 அன்று டென்மார்க்கில் இடம்பெற்ற ஏழு சங்கங்கள் இணைந்து நடத்திய கலைவிழாவில் பிரதம அதிதியாக நானும் எனது மனைவியும் அங்கு சென்றபோது, பேராசிரியரும் அவ்விழாவிலே சிறப்பு அதிதியாகக் கலந்து கொள்ள வந்திருந்தார். அவ்வேளையிலேதான், 1974ல் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நான்காவது அனைத்துலகத் தமிராய்ச்சி மகாநாட்டின் பிரதம செயலாளராகச் செயலாற்றிய கலாநிதி கோபாலபிள்ளை மகாதேவாதான் அவர் என்பதும், அவரே தொடர்ந்து தற்போது கோபன் மகாதேவா என்ற பெயரில் பிரபல்யமாகி பல்துறைச் செயற்பாடுகளிலும் இலக்கியத்திலும் ஈடுபாடுகொண்டு இயங்கிவருகிறார்; என்பதும் தெரியவந்தது.

யாழ்ப்பாணத்தில்  அனைத்துலகத் தமிழாராய்ச்சி மகாநாட்டை நடத்த முடியாது என்றும் கொழும்பிலேதான் அது நடத்தப்பட வேண்டும் என்றும் அன்றைய பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்காவின் மந்திரிசபையில் தீர்மானித்திருந்த வேளையில் கலாநிதி கோபாலபிள்ளை மகாதேவா சிறிதும் தளராமல் தனது திறமையைப் பயன்படுத்தி சிறிமா அம்மையாருடன் வாதாடி யாழ்நகரிலேயே அந்த மாநாட்டை நடத்த அனுமதிபெற்றவர் என்பதும் என் நினைவில் வந்தது.

மேலும் படிக்க ...

பொங்கல் கவிதை: பொங்கலிட்டு மகிழ்வோமே தங்கமே தங்கம் ! - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா , மெல்பேண், அவுஸ்திரேலியா -

விவரங்கள்
- மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா , மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர், மெல்பேண், அவுஸ்திரேலியா  -
கவிதை
14 ஜனவரி 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

தை பிறக்கப் போகுதடி தங்கமே தங்கம்
தளர் வகலப் போகுதடி தங்கமே தங்கம்
கை நிறையப் போகுதடி தங்கமே தங்கம்
கை யணைத்து நிற்போமே தங்கமே தங்கம்

பொங்கல் வரப்போகுதடி தங்கமே தங்கம்
புத்துணர்வு பெற்றிடுவோம் தங்கமே தங்கம்
மங்கலங்கள் வரவெண்ணி தங்கமே தங்கம்
பொங்கலிட்டு மகிழ்வோமே தங்கமே தங்கம்

உறவுகளைக் கூட்டிடுவோம் தங்கமே தங்கம்
உவகையுடன் பொங்கிடுவோம் தங்கமே தங்கம்
அறவுணர்வை அகமிருத்தி தங்கமே தங்கம்
அனைவருமே பொங்கிடுவோம் தங்கமே தங்கம்

புதுப்பானை எடுத்திடுவோம் தங்கமே தங்கம்
புத்தரிசி வாங்கிடுவோம் தங்கமே தங்கம்
அடுப்பெடுத்து வைத்திடுவோம் தங்கமே தங்கம்
அதில்பானை ஏற்றிடுவோம் தங்கமே தங்கம்

மேலும் படிக்க ...

சிங்கிஸ் ஐத்மாத்தாவின் அன்னை வயல்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
12 ஜனவரி 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அளவில் சிறிய இந்த நாவல். தல்கோனை என்னும் முதிய பெண் வயலுடன் பேசுவதாக ஆரம்பிக்கின்றது. முடிவில் அவ்வயலிடமிருந்து அவள் பிரியாவிடை கூறுவதுடன் முடிகிறது. இதற்கிடையில் அவள் அதுவரை காலத்துத் தன் வாழ்வை பகிர்ந்துகொள்கின்றாள். சிறுமியாக, யுவதியாக, மனைவியாக, தாயாக, மாமியாக, பாட்டியாக என அவளது வாழ்வின் அனைத்துப் பருவச் சம்பவங்களையும் விபரிக்கின்றாள். எவ்விதம் ஜெர்மனியருடனான போர் அவர்கள் வாழும் கிராமத்து மனித வாழ்க்கையையே மாற்றிவிடுகின்றது என்பதை விபரிக்கும் நாவல் போர்ச் சூழலில் வாழ்ந்த அனைவருக்கும் தம் வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்க வைக்கும்.

மேலும் படிக்க ...

வாசிப்புப் பகிர்வு: 'சிந்துவின் தைப்பொங்கல்' - தகவல்: ஶ்ரீரஞ்சனி -

விவரங்கள்
- தகவல்: ஶ்ரீரஞ்சனி -
ஶ்ரீரஞ்சனி
12 ஜனவரி 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

zoom இல் இணைந்து கொள்ள:  https://bit.ly/thaipongalbook

 

சிந்தி லோப்பரின் 'Time After Time'! - ஊர்க்குருவி -

விவரங்கள்
- ஊர்க்குருவி -
கலை
12 ஜனவரி 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்



என் புகலிட வாழ்க்கையில் ,நியூ யோர்க் மாநகரத்து அகதியாக அலைந்து கொண்டிருக்கையில் பட்டி தொட்டியெங்கும் ஒலித்த இன்னுமொரு குரல் பாடகி சிந்தி லோப்பரினுடையது (Cyndi Lauper) பல் வர்ண ஆடை அணிகலன்களுடன் கூடிய அலங்காரம், நிறமூட்டப்பட்ட சிகையலங்காரம் இவை இவரது தனித்துவம் மிக்க அம்சங்கள். இதன் காரணமாக இவரது பாடசாலைக் காலத்தில் சக மாணவிகளின் தாக்குதல்களுள்ளாகினதாகவும் கேள்விப்பட்டிருக்கின்றேன்.

மேலும் படிக்க ...

நிகழ்வு: சிலாவத்துறை பாடசாலை வரலாறு நூல் வெளியீடு - வெலிகம ரிம்ஸா முஹம்மத் -

விவரங்கள்
- வெலிகம ரிம்ஸா முஹம்மத் -
நிகழ்வுகள்
11 ஜனவரி 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

சிலாவத்துறை பாடசாலை வரலாறு நூல் வெளியீடானது 24.12.2022 அன்று  சிலாவத்துறை பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நூலின் முதல் பிரதியை கலைத்தென்றல் கவிஞர் ஹாமித் எம். சுஹைப் அவர்கள் நூலாசிரியரும் ஆய்வாளருமான எஸ்.எம். அன்ஸார் அவர்களிடமிருந்து பெற்றுக்கொள்வதையும்,  இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்தவர்களையும் படங்களில் காணலாம்.

மேலும் படிக்க ...

யாழ்ப்பாணத்தில் ஜனவரி 10, 1974இல் நடைபெற்ற நான்காவது உலகத் தமிழாராச்சி மாநாட்டுத் துயர நினைவுகள்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
10 ஜனவரி 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்



இன்று என் வாழ்வில், உலகத் தமிழர்கள் வாழ்வில் மறக்க  முடியாத துயர நினைவுகளைச் சுமந்து நிற்குமொரு நாள். இருக்கும் வரையில் என் நினைவை விட்டு இந்நாள் ஒருபோதும்  ஓடி விடப்போவதில்லை. ஏனென்றால் இந்நாளில் நடந்த அந்தத் துயர நிகழ்வின் நேரடிச் சாட்சிகளில் ஒன்றாக நானிருந்திருக்கின்றேன். 1972இல் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற உலகத் தமிழாராச்சி மாநாட்டின் இறுதி நாளான ஜனவரி 10இல் , இரவில் நடந்த கூட்டத்தில் பொலிசார் ஏற்படுத்திய கலவரமும், அதனைத் தொடர்ந்து நடந்த துப்பாக்கிச் சூட்டின் விளைவாக அறுந்து விழுந்த மின் கம்பியில் அகப்பட்டு உயிரிழந்த  துயரச் சம்பவமும்,  அது வரை அமைதி வழியில் சென்று கொண்டிருந்த இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தை ஆயுத வழிக்குத் திசை திருப்பின.

இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தில் முதன் முதலில் உரும்பிராய் சிவகுமாரனை ஆயுதம் தூக்க வைத்தது அன்று நடைபெற்ற தமிழ் மக்களின் மரணங்கள்தாம்.  அன்று யாழ் மேயராக விளங்கிய அல்ஃபிரட் துரையப்பா அவர்களைப் பொன்னாலையில் வைத்துத் தமிழ் இளைஞர்கள் பின்னர் படுகொலை செய்ததற்கும் முக்கிய காரணமாகவிருந்தது அன்று நிகழ்ந்த தமிழர்கள் மீதான வன்முறையும், அழிவும்தாம்.

மேலும் படிக்க ...

சிறுகதை; பிரியாவும் ஜேம்சும் - தேவகி கருணாகரன், சிட்னி, அவுஸ்திரேலியா -

விவரங்கள்
- தேவகி கருணாகரன், சிட்னி, அவுஸ்திரேலியா -
அரசியல்
10 ஜனவரி 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- தேவகி கருணாகரனின் 'பிரியாவும் ஜேம்சும்' என்னும் இச்சிறுகதை மாறிவரும் உலகின் மாற்றத்தின் விளைவொன்றைப்பற்றிப் பேசுகிறது. அம்மாற்றம் என்ன என்பது பற்றி அறிய இச்சிறுகதையை முழுமையாக வாசியுங்கள். இக்கதையின் கூறு பொருளும், எழுத்து நடையும், பாத்திரப்படைப்பும் இதனை நல்லதொரு முக்கியமான சிறுகதையாக இதனை மாற்றியுள்ளன. இச்சிறுகதையில் வரும் குழந்தை  கீர்த்தி நெஞ்சைத்தொடுகின்றாள். முடிவில் அவளில்  ஏற்படும் மாற்றம் முக்கியமானது. அவ்வகையில் அவளொரு குறியீடு. மாறாத உணர்வுகள், கருதுகோள்களுடன் மாறுவதற்குச் சிரமப்படும் சமுதாயமொன்றைப் பிரதிநிதிப்படுத்தும் குறியீடு அவள். - பதிவுகள்.காம் -


அவுஸ்திரேலியாவின் நியுவ் சவுத் வேல்ஸ் மாநிலத்தின் கிராவின் புறநகரின் ’புனித அந்தோனியார்’ ஆரம்பப்பள்ளிக்குள் நுழைந்த பிரியா, தன் மகள் கீர்த்தியின் முதலாம் வகுப்பை அடைந்ததும்,  “வாடா குஞ்சு, வீட்டைப் போகலாம்,” எனக் கீர்த்தியை அன்போடு தூக்கிக் கொஞ்சிய பிரியாவை உற்று நோக்கி புதிதாக பார்ப்பது போல் பார்த்தாள் கீர்த்தி. திரும்பி நன்சிக்கு பக்கத்தில் நின்ற அவளது தாயாரையும் பார்த்தாள். ”இன்றைக்கு என்ன செய்தீங்கள்? கைவேலை செய்தீங்களா?”  எனக் கேட்டபடி நன்சியைத் தூக்கிக் கொண்டுபோன அவளது தாயையும். பிரியாவையும், மாறி மாறிப் பார்த்தாள். அவளது சின்ன மூளைக்கு எதுவுமே புரியாது குழம்பியது. அந்தச் சின்ன மூளைக்கு எதோ புரிகிற மாதிரி இருந்தது ஆனால் புரியாத மாதிரியும் இருந்தது.

    வீட்டுக்கு வந்ததும் குளிக்கும் தொட்டியில் பதமான சூட்டுக்கு வெந்நீரை, நிரப்பி கீர்த்தியைக் குளிப்பாட்டி, அவளுக்குப் பிடித்த `பணானாஸ் இன் பிஜாமாஸ்` பிரிண்ட் போட்ட, பிஜாமாவைப் போட்டு விட்டு,  ”எங்கள் கீர்த்தி இளவரசி நல்ல வாசனையாக இருக்கிறாள்,” எனக் கீர்த்தியை முகர்ந்தபடி சொன்ன பிரியாவை., கீர்த்தி கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்தாள். பிரியா கிச்சனுக்கு போகவும், அறையிலிருந்த விளையாட்டுப் பொருட்களில் கீர்த்தியின் கவனம் லயித்துப் போக, முற்பள்ளியில் அவளது சின்ன மூளையில் எழுந்த சந்தேகம், கேள்வி எல்லாமே மறைந்து போய்விட்டது,

    ”கீர்த்திக் குட்டி, டினர் ரெடி!” எனப் பிரியா கிச்சனிலிருந்து அழைக்கவும், வாசற் கதவைத் திறந்து கொண்டு அவளது ஜேம்ஸ் டடி வரவும் சரியாகவிருந்தது. அவரைக் கண்டதும் கீர்த்தி ஓடிச்சென்று ஜேம்ஸ் மேல் தாவி அவர் கைகளுக்குள் தஞ்சமானாள். தந்தையைக் கொஞ்சியவளின் முகத்தில் ஒரே சந்தோசம். ஏனோ அவளுக்கு ஜேம்சோடு இருப்பதில் ஒரு தன்னம்பிக்கையும் மகிழ்ச்சியும்.

மேலும் படிக்க ...

இசையும் அரசியலும் - இசைக்கலைஞர் மொஹமெட் இக்பாலுடன் ஒரு நேர்காணல்! - நேர்காணலைக் கண்டவர் - ஜோதிகுமார் -

விவரங்கள்
- ஜோதிகுமார் -
நேர்காணல்
09 ஜனவரி 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 

                   - இசைக்கலைஞர் மொஹமெட் இக்பால் -

-  இசைக்கலைஞர் மொஹமெட் இக்பாலுடனான (Mohammed Iqbal) இந் நேர்காணல்  ‘பதிவுகள்’ இணைய இதழுக்காக எழுத்தாளரும், சமூக,அரசியல் செயற்பாட்டாளருமான ஜோதிகுமாரினால்  நடாத்தப்பட்டது. மொஹமெட்  இக்பால் அவர்கள், இலங்கையின் அதிமுக்கிய இசை வல்லுநர்களில் ஒருவர்.  தனது பல்கலைக்கழக நாட்களில் விக்டர் ஹாரா (Victor Hara) இசைக்குழு என்ற இசைக்குழுவை நடத்தியவர். இன்றுவரை இதே இசைக்குழு, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றது. ‘கிட்டார்’ இசைகருவியை இசைப்பதிலும், பாடுவதிலும் வல்லுநராக திகழும் திரு. மொஹமெட் இக்பாலின் பங்களிப்பு, இசை உலகில் குறிப்பிடத்தக்கது. இது போன்றே இந்நாட்டின் அரசியலிலும் இவரது இசையின் அதிர்வுகள் முக்கிய இடத்தை வகிக்கின்றன.  -


கேள்வி: இதுவரை எத்தனை பாடல்களுக்கு இசையமைத்துள்ளீர்கள்?

பதில்: கிட்டத்தட்ட 40 பாடல்கள். 100 இசை கச்சேரிகள் அளவில் நிகழ்த்தியுள்ளேன். இதில் நான் வீதிகளிலும், தொழிலாளர்கள் மத்தியிலும், தொழிற்சாலைகளிலும், சிறு குழுவினரிடையேயும் நடாத்தும் நிகழ்ச்சிகள் கணக்கில் அடங்காதவை ஆகும். இது தவிர சில வருடங்களில் Guitar Festival யும் நடத்தியுள்ளேன். இவைகள் அனைத்தும் மிகுந்த பணத் தேவையை உள்ளடக்குவதாய் உள்ளன. இதனால் இவற்றின் எல்லைப்பாடுகளும் புரிந்துகொள்ளத் தக்கவையே.

கேள்வி: உங்கள் பாடல்களில் முக்கியமான இரண்டை எமது வாசகர்களுக்காக தெரிவு செய்வீர்கள் என்றால் அவை எவை எவையாக இருக்கக் கூடும்?

பதில்: ‘மொனரவில’ என்ற பாடலையும் ‘மினிசா’ என்ற பாடலையும் நான் குறிப்பிடலாம்.

கேள்வி: ‘மொனரவில’ பாடல் எதைப் பற்றியது? அதன் பின்னணி என்ன?

பதில்: 1817இல், ‘ஊவா வெல்லஸ்ஸ’ இடத்தில் நடந்த மாபெரும் போராட்டமே, இலங்கையில் நடந்த, பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான, முதலாவது போராட்டம் எனலாம். இதற்கு தலைமை தாங்கியவரே ‘மொனரவில கெப்படிபொல’ எனும் வீரர். இப்போராட்டத்தின் பிறகு கிட்டத்தட்ட 40 ஆயிரம் மக்களை பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் கொன்று குவித்தனர். அவரைப் பற்றிய பாடலே இது.

மேலும் படிக்க ...

லயனல் ரிச்சியின் 'ஹலோ' - ஊர்க்குருவி -

விவரங்கள்
- ஊர்க்குருவி -
கலை
08 ஜனவரி 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

83 கலவரத்தைத் தொடர்ந்து முதல் முதலாக அந்நிய நாடொன்றில், அமெரிக்காவின் உலகப்புகழ் பெற்ற நியூயோர்க் மாநகரில் அகதியாக அலைந்து கொண்டிருந்தபோது பட்டி தொட்டியெங்கும் ஒலித்துக்கொண்டிருந்த பாடகர்கள் நால்வர். அதனால் அப்பாடகர்கள் பற்றிய நினைவுகள் எழும்போதெல்லாம் எனக்கு அமெரிக்க மண்ணில் அகதியாக அலைந்து திரிந்த அந்த நாட்கள் நினைவுக்கு வந்து விடும். லயனல் ரிச்சி, சிந்தி லோப்பர், பில்லி ஜோயெல், மைக்கல் ஜாக்சன் இவர்கள்தாம் அப்பாடகர்கள். மைக்கல் ஜாக்சனின் 'திரில்ல'ரும் வெளியாகியிருந்த காலம். கறுப்பினப் பதின்ம வயதுச் சிறுவர்கள் ஆங்காங்கே நடைபாதைகளில் கசட் பிளேயரில் மைக்கல் ஜான்சனின் பாடல்களை ஒலிக்கவிட்டு உடம்மை வளைத்து, முறுக்கி, வெட்டி 'பிரேக் டான்ஸ்' ஆடுவார்கள்.

மேலும் படிக்க ...

தொடர் நாவல் - நவீன விக்கிரமாதித்தன் (18) : தளைகள்! தளைகள்! தளைகள்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
நாவல்
07 ஜனவரி 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அத்தியாயம்  (18) : தளைகள்! தளைகள்! தளைகள்!

"கண்ணம்மா, எத்தனை எத்தனை தளைகள்.  சுற்றியெங்கு பார்த்தாலும் தளைகள். உள்ளே தளைகள். வெளியேயும் தளைகள்."

என்ற என்னைப்பார்த்து ஒரு வித வியப்புடன் கேட்டாள் மனோரஞ்சிதம் "என்ன கண்ணா, தளைகளா? எந்தத் தளைகளைச் சொல்லுறாய்?"

"பொதுவாகக் கூறினேன் கண்ணம்மா, நாம் வாழும் சமுதாயத்தில் நிலவும் தளைகள்தாம் எத்தனை? எத்தனை?"

"கண்ணா நீ சொல்வதும் சரிதான். சமுதாயக் கட்டுப்பாடுகள், வர்க்கங்களின் பிரிவுகளால் பலம் வாய்ந்த வர்க்கங்களினால் செலுத்தப்படும் ஆதிக்கத் தளைகள், பால் ரீதியான கட்டுப்பாட்டுத் தளைகள், தீண்டாமைத் தளைகள், இன, மத, மொழி, தேசரீதியிலான கட்டுப்பாட்டுத் தளைகள், ..இத்தளைககளால் பிணைக்கப்பட்ட கைதிகள் நாங்கள் கண்ணா"

"கண்ணம்மா, இவையெல்லாம் புறத்தில் இருக்கும் தளைகள்.  இதேபோல் இவற்றின் தாக்கங்கள், மற்றும் மானுடப் படைப்பின் தன்மையால் அகத்தில் உருவான  தளைகளாலும் பிணைக்கப்பட்டு இருக்கிறோம். இல்லையா கண்ணம்மா?  இவ்வகையான தளைகள்  அனைத்திலுமிருந்து  விடுபடுவதன் மூலம்தான் மானுடருக்கு முழுமையான விடுதலை கிடைக்கும்.  ஒன்று புற விடுதலை. அடுத்தது அக விடுதலை. இல்லையா கண்ணம்மா?"

மேலும் படிக்க ...

எழுத்தாளரும், சமூக,அரசியற் செயற்பாட்டாளருமான ஜெயக்குமாரன் மகாதேவனின் (ஜெயன் தேவா) இறுதிக்கிரியை பற்றிய தகவல்!

விவரங்கள்
Administrator
நிகழ்வுகள்
07 ஜனவரி 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அண்மையில் மறைந்த எழுத்தாளரும், சமூக,அரசியற் செயற்பாட்டாளருமான ஜெயக்குமாரன் மகாதேவனின் (ஜெயன் தேவா) இறுதிக்கரியைகள் எதிர்வரும் 11.01.2023  அன்று லிவர்பூலில் நடைபெறவுள்ளது.

 

ஜனவரி 01 – எழுத்தாளர் சந்திரனுக்கு 60 வயது! மணிவிழா நாயகன் ஆவூரான் சந்திரன்! கலை , இலக்கிய, தன்னார்வத் தொண்டர்! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
06 ஜனவரி 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 -  எழுத்தாளர் 'ஆவூரான்' சந்திரன் -

வட இலங்கையில் சப்த தீவுகளில் ஒன்றான நெடுந்தீவை பூர்வீகமாகக் கொண்டிருக்கும் எழுத்தாளர், அவ்வூரின் மற்றும் ஒரு பெயரையே தனது புனைபெயராக்கியும்கொண்டார். அவர்தான்  'ஆவூரான்' சந்திரன்  நெடுந்தீவு பல விடயங்களில் புகழ்பெற்றது. உலகத் தமிழராய்ச்சிக்கு வித்திட்ட அருட்திரு. தணிநாயகம் அடிகளார் பிறந்த மண்.  அத்துடன் பல கலை, இலக்கியவாதிகளும் கல்விமான்களும் சமூகப்பணியாளர்களும் தோன்றிய பிரதேசம். இங்கு 1963 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 01 ஆம் திகதி சண்முகம் – பொன்னம்மா தம்பதியருக்கு ஏழாவது பிள்ளையாக பிறந்திருக்கும் சந்திரன், இலக்கியப் பிரவேசம் செய்தபோது, ஊரின்மீதிருந்த அளவு கடந்த நேசத்தினால், உள்ளுருக்கு மட்டுமன்றி வெளியூருக்கெல்லாம் பசுவின் பாலை வழங்கிய தீவின் மற்றும் ஒரு பெயரையே புனைபெயராக்கிக் கொண்டவர். அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்து வந்த பின்னரும், நெடுந்தீவையும் அங்கு வாழும் மக்களையும் மறந்துவிடாமல், தன்னால் முடிந்த உதவிகளையும் அம்மக்களுக்கு – குறிப்பாக மாணவர் சமூகத்திற்கு வழங்கி வரும் ஒரு தன்னார்வத் தொண்டர். சமூகத்திற்காக பேசுவதும் சமூகத்தை பேசவைப்பதுமே ஒரு படைப்பாளியின் பிரதான நோக்கமாகவிருக்கும். அந்த நோக்கத்துடனேயே எழுத்துலகில் பிரவேசித்த காலம் முதல் அயர்ச்சியின்றி இயங்கி வருகின்றார். அதனால் எமது நெஞ்சத்துக்கும் நெருக்கமானார்.

மேலும் படிக்க ...

கொழும்பில் நாடகக் கலைஞர் பாலேந்திராவின் நூல் வெளியீடு! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
நிகழ்வுகள்
06 ஜனவரி 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அரை நூற்றாண்டுக்கும் மேலாக  தமிழ் நாடகக் கலை வளர்ச்சியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டிருக்கும் நாடகக் கலைஞர் க. பாலேந்திராவின் அரங்கக் கட்டுரைகள் எனும் புதிய நூலின் வெளியீட்டு அரங்கு இம்மாதம் 07 ஆம் திகதி ( 07-01-2023 ) சனிக்கிழமை மாலை 4-30 மணிக்கு கொழும்பு தமிழ்ச்சங்கம் வினோதன் மண்டபத்தில் நடைபெறும்.

ஈழத்து நவீன தமிழ் நாடக உலகில் ஐம்பது வருடங்களுக்கும் மேலாக இயங்கிவருபவரும், தற்போது இங்கிலாந்தில் வசிப்பவருமான கலைஞரும் நாடக இயக்குநருமான   க. பாலேந்திரா எழுதி கொழும்பு குமரன் இல்லம் பதிப்பகத்தினால் வெளியாகியிருக்கும் பாலேந்திராவின் அரங்கக்கட்டுரைகள் நூலில், அவர் ஏற்கனவே எழுதி ஊடகங்களில் வெளியான பல  ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன.

மேலும் படிக்க ...

தொடர் நாவல் : தீவுக்கு ஓர் பயணம் (6) - கடல்புத்திரன் -

விவரங்கள்
- கடல்புத்திரன் -
நாவல்
05 ஜனவரி 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அத்தியாயம் ஆறு -  அடுத்த நாள்

 " முதல் நாளைப் போல அதிகம் ஓடாமல் கிட்ட இருக்கிற சிறிய டவுண் பக்கம் போவோம் " என்றாள் பூமலர் . அவர்கள் சென்ற இடம் வூத்வில்  .  விவசாயப் பண்ணைகளிற்கு மையமாக இப்படி ஒரு  சந்தைகடை  ( ஃபாம் மார்க்கட்) , மற்றும்  வேறு சில கடைகளும் சேர்ந்த   தொகுதிகள் அங்காங்கே இருக்கின்றன . " நான் இந்த கடையிலே வந்து நல்ல காய்கறிகளை வாங்கிறேன்  " என்றாள்  பூமலர் . அந்த மார்க்கட் கடையில் வீட்டிற்கு வேண்டிய  சகலப் பொருட்களும்  நிறைந்த  பெரிய கடையாக இருக்கிறது . எல்லாம் மனித தயாரிப்புடைய பழமைச் சாயல் . அவற்றை ரசனையோடு பார்த்தார்கள் லொப்ஸ்டர் இடுக்கிகள்  தொங்கின்றன . நண்டு போன்ற (ஓடு) கோதுகளை உடைத்து சாப்பிடுவதற்கு உபயோகிக்கப்படுகிறது . இடுக்கிகளையும் வைக்கிறார்கள் . இங்கே , உணவகங்களில் லொப்ஸ்டர் பேகர்  சன்விச்கள் கூட  விற்கப் படுவதாக கேள்வி .

    பூமலர் சமைக்கிறதுக்கு  வாங்கி விட்டு  , ஐஸ்கிரீமையும்  வாங்கினார்கள் . பக்கத்தில் பூங்கா போல இருந்த இளைப்பாறும்  இடத்தில்  ஆடு  ,மாடு  , பறவைகளை  கம்பிக் கூண்டில் வைத்திருக்கிறார்கள் .  அவற்றிற்கு  போட உணவையும் மெசினில் டொலரைப் போட்டு எடுத்து சாப்பிட போடலாம் . வங்கிகள்  ,  மற்றும் ரொரொன்ரோவில் இருக்கிற மாதிரியான ஒரு கடையையும் கண்ணில்  காணவில்லை . எங்கையும் ஓரிரண்டு இருக்கலாம் . ஐரோப்பியர்கள் உணவை ரசித்து சாப்பிடுறவர்கள்  .  உணவகங்கள் வழியே இருந்து சாப்பிடுறவர்கள் இல்லை . குறைந்த வாழ்க்கைச் செலவு .  சிக்கனம் உள்ளவர்கள் .  சேவைப்பிரிவினரே கடையே தவம் என அலைபவர்கள்  .  இங்கே ஒரு கிராமியமே முழுதாய்  படர்ந்திருந்தது . வியாபாரம் இருந்தால் தானே கடைகள் பூக்கும் . தவிர , மக்கள் தொகையும் கூடுதலாக இருக்க வேண்டும் . இங்கே இரண்டும் இல்லை .

மேலும் படிக்க ...

எழுத்தாளர்கள் ஶ்ரீரஞ்சனி விஜேந்திரா, சிவகாமியின் 'சிந்துவின் தைப்பொங்கல்' பற்றிய என் எண்ணப்பதிவு! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
05 ஜனவரி 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எழுத்தாளர்கள்  ஶ்ரீரஞ்சனி  விஜேந்திரா , சிவகாமி (தாயும் மகளுமாக ) இணைந்து எழுதிய, புகலிடத் தமிழ்க் குழந்தைகள்  இலக்கியத்துக்கு, உலகத் தமிழ்க் குழந்தைகள்  இலக்கியத்துக்கு வளம் சேர்க்குமொரு படைப்பாக வெளியாகியுள்ளது 'சிந்துவின் தைப்பொங்கல்'. முதலில்  இந்நூல் ஏன் நல்லதொரு சிறுவர் நூல்  என எனக்குத் தென்படுவதன் காரணத்தைக் கூறி விடுகின்றேன்.  சித்திரக்கதையாக வெளியாகியுள்ள இந்நூலில் குழந்தைகள் உள்ளங்களைக் கொள்ளைக்கொள்ளும் அனைத்து விடயங்களும் உள்ளன. குழந்தைகளை மிகவும் கவரும் மூன்று விடயங்கள்.  கதை, சித்திரம் , பாவிக்கப்பட்டுள்ள நிறங்கள்.  இம்மூன்றும் இந்நூலில் ஒன்றுக்கொன்று சளைக்காமல் அமைந்துள்ளன என்பதே இந்நூலின் முக்கிய சிறப்பு.

கதை

கதை சிறப்பாகப் பின்னப்பட்டுள்ளது. கதையில் தனது தாய், தகப்பனுடன் 'டொராண்டோ'வில் வசிக்கும் சிந்து என்னும் சிறுமி யாழ்ப்பாணம் சென்று தைப்பொங்கலைக் கொண்டாடுகின்றார். இந்தக் கதை குழந்தைகளுக்காக எழுதப்பட்டுள்ள கதை. உலகின் எங்கும் வாழும் தமிழ்க்குழந்தைகளும் பொங்கல் நிகழ்வைப் பற்றிய காரணங்களை, விளக்கங்களை அறிந்துகொள்ளும் வகையில் , அவர்களுக்குப் புரியும் எளிமை கலந்த சரளமான இனிய நடையில் எழுதப்பட்டுள்ள கதை. 

இக்கதை தமிழிலும், ஆங்கிலத்திலும் கூறப்பட்டுள்ளதும் ஆரோக்கியமான விளைவினைத் தருமொரு விடயமாகவே தென்படுகின்றது. புகலிடத் தமிழ்க் குழந்தைகளுக்குத் தமிழ்ப்பொங்கல் பற்றிய விளக்கங்களுடன்  , அவர்களுடைய தாய், தந்தையரின் பிறந்த மண்ணின் சூழலையும் வெளிப்படுத்துகின்றது. சேவல் கூவலுடன் விடியும் காலை, கிணற்றுத் தண்ணீரை வாளி மூலம் அள்ளும் வழக்கம், தை மாதக் காலநிலை, அரிசிக்கோலம் , கும்பம் அமைக்கும் முறை, மண் பானையில் பொங்கல், வெடி கொளுத்துதல் , கதிரவனுக்குப் பொங்கலிட்டு வணங்குதலெனப் பல விடயங்களை இச்சித்திரைக்கதை நூல் சிறப்பாகவே வெளிப்படுத்துகின்றது.

மேலும் படிக்க ...

கார்க்கியின் இறுதிக் காலத்து நாவல்: ஆர்ட்டமோனோவ்- (மூன்று தலைமுறைகள்) - ஜோதிகுமார் -

விவரங்கள்
- ஜோதிகுமார் -
ஜோதிகுமார்
03 ஜனவரி 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கார்க்கி தனது நாவலான ‘ஆர்ட்டமோனோவை’, 1900லேயே, தன் எண்ணத்தில் கரு கொண்டு விட்டதாக கருதப்படுகின்றது.  1901-1902 காலப்பகுதியில் டால்ஸ்டாயை சந்திக்கும் கார்க்கி, அவரிடம் பின்வருமாறு தான் உத்தேசித்திருக்கும் நாவலை பற்றி கூறியதாக எழுதுகின்றார்:

“அவரிடம், நானறிந்த, வர்த்தக குடும்பமொன்றின் மூன்று தலைமுறைகளின் கதையை, கதையாக கூறினேன். அக்குடும்பத்தின் கதையில், இடம்பெறும் உளவியல் சீரழிவும் சிதைவும், எப்படி, இடைவிடாது தன் இயங்கு விதிகளுக்கேற்ப இயங்குகின்றது என்பதனையும், எப்படி ஏனைய விதிகளும் இயங்குகின்றன என்பதனையும் கூறினேன். எனது சட்டை கையை பற்றி இழுத்த அவர் கூறினார்: “ஆ… அனைத்தும் உண்மை!... நான் தனிப்பட்ட முறையில் ஏற்கனவே அறிந்திருக்கும் ஒன்று இது. துலாவில் (வுரடய) இரண்டு அப்படியான குடும்பங்கள் உண்டு. நான் அறிந்திருக்கின்றேன். இது எழுதப்பட்டே ஆக வேண்டும். நீங்கள் இதனை ஒரு பெரிய நாவலாக ஆனால் சுருக்கமாக எழுத வேண்டும். புரிகின்றதா. நிச்சயமாக…”.

1904 அளவில், நாவலின் வடிவம் கார்க்கியின் மனதில் மெது மெதுவாக வடிவம் பெற தொடங்குகிறது.  ஆனால் 1908-1910 இல் கார்க்கியை சந்திக்கும் லெனின், கார்க்கியிடம் கூறுகின்றார்:

“உங்களது அனுபவங்களை, தொடர்ந்தும் பிய்த்து, பிய்த்து சிறு கதைகளாக கொடுப்பது தவறு. இவற்றையெல்லாம் நீங்கள் ஒரு நூலில் அடக்கி ஒரு நாவலாக வார்த்தெடுக்கும் தருணம் இது”.

மேலும் படிக்க ...

முகநூல் குறிப்புகள்: திசைமாறி ஓடாத இலக்கிய நதி - பரணீதரன் என்ற அசாதாரண இலக்கியன் பற்றிய சிறு குறிப்புகள் - சிவ சேகரன் - -

விவரங்கள்
- சிவ சேகரன் -
முகநூல் குறிப்புகள்
02 ஜனவரி 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- முகநூற் பக்கங்களில் வெளியாகும் பயனுள்ள குறிப்புகள் அவற்றின் பயன் கருதிப் பதிவுகளின் இப்பக்கத்தில் வெளியாகும். -  பதிவுகள்.காம் -


ஈழத்து இலக்கிய பரப்பில் நின்று வென்று வாழ்வது எப்போதும் சாத்தியமில்லை என்பதில் மாற்று கருத்தில்லாதவன் நான். எவ்வளவு எழுதியும் இயங்கியும் நின்றாலும் ஒரு எழுத்தை செயலை கொண்டாடவும், சமூகத்திடமும் அடுத்த தலைமுறையிடமும் கொண்டோடவும் மனமில்லாத மானிடர் வாழ்கின்ற இலக்கிய உலகம் ஈழத்துக்கு உரிய தனிக்குணம்.

இலக்கியத்தையும் அதனுடனான செயற்பாடுகளையும் கோட்பாட்டு குண்டுச் சட்டிகளுக்குள்ளும் மெட்டுக்குடி மனோபாவத்துடனும் ஒதுக்கி வைக்கும் ஒரு கூட்டம் இருக்கும் வரை ஈழத்து இலக்கியம் என்றும் உச்சமாக பேசப்படப் போவதில்லை. இத்தகைய அபத்தங்களையெல்லாம் கண்டு கொள்ளாமல் பேசினால் என்ன? கொண்டாடினால் என்ன? என்ற முடிவோடுதான் இன்று இளையவரும் மூத்தவரும் எழுதியும் இயங்கியும் வருகிறார்கள் என்பது கசப்பான உண்மை.

திட்டமிட்ட இருட்டடிப்புகளும் ஒதுக்குதல்களும் மலிந்தும் பதிந்தும் போன இங்கு அவற்றையெல்லாம் சட்டை செய்யாமல் தன் வழியில் தனி வழியில் ஓடிக்கொண்டே இருக்கிறார் பரணீதரன் என்ற இலக்கிய மானுடன்.  முன்கோபி; மரியாதை தெரியாதவன் என்றெல்லாம் அவரை பற்றி என்னிடமும் அவரின் நண்பர்களிடமும் கோள் சொன்னவர்கள் உளர்;அதை அவரும் அறிவார். ஆனால் அவரை முன்கோபியாகவும் மரியாதை இன்றி பேசவும் வைத்தவர்கள் எம்மைப்போன்றவர்கள். அவரின் கருணையால் நூல்களையும் வெளியீடுகளையும் கண்டவர்கள்; இலவசமாக நூல்களையும் இதழ்களையும் பெற்றவர்கள் மனச்சாட்சி அற்று போகும் போது அவர் தன்னிலை இழக்கிறார். அவரும் மனிதன் தானே?

மேலும் படிக்க ...

ஆய்வு: கம்பராமாயணத்தில் மீன்கள் - முனைவர் க. மங்கையர்க்கரசி. உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி(சுழல்- II), மீனம்பாக்கம், சென்னை. -

விவரங்கள்
- முனைவர் க. மங்கையர்க்கரசி. உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி(சுழல்- II), மீனம்பாக்கம், சென்னை. -
ஆய்வு
02 ஜனவரி 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

முன்னுரை

மீன்களை நன்னீரில் வாழ்பவை என்றும், கடல் நீரில் வாழ்பவை என்று இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம். கெண்டை மீன், கெழுத்திமீன், நெத்திலி மீன், வஞ்ஜ்ரமீன், விலாங்குமீன், செண்ணாங்குனிமீன்,மோவல் மீன், சங்கரா மீன், கிழங்கா மீன், பாறை மீன், விரால்மீன், மத்தி மீன், சால மீன், சீலா மீன் என்று பல வகையான மீன்கள் காணப்படுகின்றன. கம்ப ராமாயணத்தில் கெண்டைமீன்,பனைமீன், கயல்மீன், வாளைமீன், விரால்மீன், இறால் மீன், சேல்மீன், திமிங்கிலம், திமிங்கிலம் ஆகிய மீன்கள் குறித்தும், மீன்களின் தன்மை, இயல்பு குறித்தும் இக்கட்டுரையில் ஆராய்வோம்.

உலகின் உயிர்களுக்கு அன்பை விளைவிக்கும் கடவுளான மன்மதனின் கொடி ‘மீன்கொடி’. மூவேந்தர்களில் பாண்டியர்களின் கொடி மீன்கொடி ஆகும்.

மீன்கள் முட்டையிட்டு தம் பார்வையாலேயே குஞ்சு பொறிக்கும் இயல்புடையன.

1.கெண்டைமீன்

தேரையானது தெங்கின் இளம் பாளையை நாரையென்று நடுங்குவதாகவும், கெண்டைமீன் கூரிய நுனியையுடைய ஆம்பல் கொடியை சாரைப்பாம்பு என்று நினைத்துப் பயந்ததாகவும் கம்பர் குறிப்பிடுகின்றார்.

" தேரை வன் தலைத் தெங்கு இளம் பாளையை
  நாரை என்று இளங் கெண்டை நடுங்குவ
  தாரை வன் தலைத் தண் இள ஆம்பலைச்
  சேரை என்று புலம்புவ தேரையே”
  (ஆறுசெல் படலம் 927)

உலாவியற் படலத்தில் வெட்டப்பட்டதால், மேலும் தழைக்க முடியாத கரும்பை வில்லாகப் பெற்றுள்ள மன்மதன் செலுத்திய அம்புகள் பாய்ந்தமையால் ஏற்பட்ட புண்கள் நீங்கப் பெறாத நூலிழையும் இடையை செல்ல முடியாமல் நெருங்கிய இளமையான முலைகளை உடைய ஒருத்தி, காதணியில் மோதிப் பிரகாசிக்கும் கெண்டைமீனைப் போன்ற கண்கள், மேகத்தைப் போல நீர்த்திளிகளைச் சிந்த, சோர்வடைந்து, மேகத்தில் பொருந்தாமல் தேகத்தில் பொருந்திய மின்னலைப் போன்ற நுண்ணிடை துவள்வது போலத் துவண்டு நின்றாள்.

மேலும் படிக்க ...

எண்ணிம நூலகமான 'நூலக'த்துக்கு ஆதரவளிப்பீர்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
01 ஜனவரி 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

நூலகம் அறக்கட்டளை தமிழ் நூல்களை, சுவடிகளை ஆவணப்படுத்தும் அரியதொரு சேவையினைச் செய்து வருகின்றது. உதாரணத்துக்கு என் சொந்த அனுபவத்தையே எடுத்துக்கொண்டால்.. நான் மாணவனாக ஈழநாடு பத்திரிகையின் மாணவர் மலரில் எழுதத்தொடங்கிய என் ஆரம்ப  காலப் படைப்புகளிலிருந்து, இளைஞனாக அதன் வாரமலரில் எழுதிய கட்டுரைகள், சிறுகதைகள் வரை பலவற்றை என்னால் மீளப்பெற முடிந்ததற்குக் காரணம்  எண்ணிம நூலகமான  'நூலக'மே.

அத்துடன் இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களின் பல்வகைப்பட்ட நூல்களை (புனைவுகள், அபுனைவுகள் என) , தமிழில் வெளியான பல்வகைச் சஞ்சிகைகள், பத்திரிகைகளையெல்லாம் மீண்டும் வாசிக்கச் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தந்தது நூலகமே.

எழுத்தாளர்கள் பலரின் ஆக்கங்கள் பலவற்றைச் சேமித்து மீள அவற்றைப் பெற உதவும் நூலகம் அமைப்பு  கலை, இலக்கிய, அரசியல், வரலாற்று நூல்களை , சஞ்சிகைகள், பத்திரிகைகளைச் சேகரித்து வைத்திருக்கும் அரியதோர் ஆவணச்சுரங்கம். இது பேணிப்பாதுகாக்கப்பட வேண்டும். இதன் வளர்ச்சிக்கு அனைவரும் தம்மால் முடிந்த அளவில், வடிவிலான  பங்களிப்பை நல்கலாம்.

மேலும் படிக்க ...

இலக்கியங்களில் மூன்றாம்பாலினத்தவா் பதிவுகள் - முனைவா் பா.பொன்னி, உதவிப்பேராசிரியா் மற்றும் துறைத்தலைவா், முதுகலை மற்றும் தமிழாய்வுத்துறை, தி ஸ்டாண்டர்டு ஃபயா் ஒா்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி ( தன்னாட்சி ), சிவகாசி. -

விவரங்கள்
- முனைவா் பா.பொன்னி, உதவிப்பேராசிரியா் மற்றும் துறைத்தலைவா், முதுகலை மற்றும் தமிழாய்வுத்துறை, தி ஸ்டாண்டர்டு ஃபயா் ஒா்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி ( தன்னாட்சி ), சிவகாசி. -
ஆய்வு
01 ஜனவரி 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இறைவன் எழுதிய மானுடம் என்ற புத்தகத்தில் ஏற்பட்ட சில இலக்கணப் பிழைகள் திருநங்கைகள். ஆண்பால், பெண்பால் என்ற இரண்டு பாலினத்தவரையும் தாண்டி தற்காலத்தில் மூன்றாம்பாலினத்தவா் என்ற குரலை அதிகமாகக் கேட்க இயலுகின்றது. பிறப்பால் ஆணாகவோ பெண்ணாகவோ இருந்து மாற்றுப்பாலினத்தவரின் உணா்வுகளை மிகுதியாகப் பெற்றவா்களை மூன்றாம் பாலினத்தவா் என்று குறிப்பிடுகின்றனா். ஆனால் மானுடவியலாளா் மாறுபட்ட உணர்வுகளைக் கொண்டவா் என்பதனை ஏற்பது இல்லை. ஏனெனில் உணா்வுகள் குறிப்பிட்ட சமுதாயத்தாரால் கட்டமைக்கப்பட்டு அம்மக்கள் அச்சமுதாயத்தால் வார்க்கப்படுகின்றனரே அன்றி பிறப்பால் அமையும் உணா்வுகள் என்பது வேறு என்பது மானுடவியலாளா் கருத்து.  இம்மூன்றாம் பாலினத்தவர் குறித்த கருத்துகளை தற்காலத்தில் மட்டும் இல்லாமல் தொல்காப்பியா் காலம் முதற்கொண்டே காணமுடிகிறது. இலக்கியங்கள் இவா்கள் பற்றிய குறிப்புகளை நோ்மறையாகவும் எதிர்மறையாகவும் பதிவு செய்துள்ளன அவற்றை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

திருநங்கைகள்

தம்பால் நிலையில் இருந்து உடல்மற்றும் உளநிலையில் திரிபடைபவர்களே திருநங்கைகள் ஆவர். இவர்களில் ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறுபவர்களும் உண்டு. பெண்ணாகப் பிறந்து ஆணாக மாறுபவர்களும் உண்டு. திருநங்கை என்றசொல் இவ்விருவருக்கும் வழங்கப்பட்டுள்ள பொதுப்பெயர் ஆகும். இந்தஆய்வுக்கட்டுரையில் திருநங்கைகள் என்ற சொல்லாட்சியே பயன்படுத்தப்பட உள்ளது.

திருநங்கைகள் வேறுபெயர்கள்

எதிர்பாலினத்தவர் உணர்வுகளைப் பெற்று இருப்பவர்களைக் குறிக்க அரவாணிகள், அலிகள், திருநங்கைகள் என்ற பல்வேறு சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன. “ வேதஇலக்கியங்கள், திருத்தியபிராக்ரிதி, சாண்டா, கலிபா, பாண்டா, காமி என்ற பெயர்களாலும், கிறித்துவமதத்தின் வேதநூலான பைபிள் அண்ணகர் என்ற சொல்லினாலும் திருநங்கையைக் குறிப்பிடுகின்றது. மனுஸ்மிருதி திருநங்கையை நிபூசகம் என்ற பெயரில் குறிப்பிடுகின்றது”1    என்று குறிப்பிடுவா்.

மேலும் படிக்க ...

புகலிடத்தில் புதியதொரு கலை, இலக்கிய இணைய இதழ் - அபத்தம்!

விவரங்கள்
- வ.ந.கி -
நூல் அறிமுகம்
01 ஜனவரி 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எழுத்தாளர் ஜோர்ஜ்.இ.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு , சிறந்த வடிவமைப்பில் 'அபத்தங்கள்' என்னும் கலை, இலக்கிய இணைய இதழ்  வெளியாகியுள்ளது.

 ஜோர்ஜ்..குருஷேவ், க.கலாமோகன், கற்சுறா, மாலினி, ஜி.மலர்நேசன், மொனிக்கா.ஜி, பூங்கோதை , நோயல்  நடேசன், சந்துஷ், எஸ்.ஃபாயிசா அலி, எம்.ஆர்.ஸ்டாலின், வ.ந.கிரிதரன் ஆகியோரின் படைப்புகளை உள்ளடக்கி முதல் இதழ் '"கிறுக்கர்களின் கிறுக்கர்கள்' என்னும் அட்டைப்பட அறிமுகத்துடன் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க ...

மற்ற கட்டுரைகள் ...

  1. இன் ஆண்டே வருக! இன்பம் எங்கும் தருக! - வ.ந.கிரிதரன் -
  2. கிடைக்கப்பெற்றோம் - காலமும் மனிதர்களும்: எல்.சாந்திகுமார்! - வ.ந.கிரிதரன் -
  3. கவிதை: பிறக்கும் வருடம் சிறக்க மனத்தால் இறையை வேண்டிடுவோம்! - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா , மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர், மெல்பேண் , அவுஸ்திரேலியா -
  4. மூத்த எழுத்தாளர், பாரதி இயல் ஆய்வாளர் தொ. மு. சி. ரகுநாதன் நூற்றாண்டையொட்டி ஒரு நினைவுப்பதிவு! டிசம்பர் 31 நினைவுதினம்! - முருகபூபதி -
  5. தமிழில் முதன் முதலில் மருத்துவம் போதித்த மேதையின் 200ஆவது ஆண்டு நினைவு (1822 – 2022) - நவஜோதி ஜோகரரட்னம், லண்டன். -
  6. காலத்தால் அழியாத கானம் - 'நதியே நீராழி அதையே சேர்தல் நாம் சேர்ந்தோம்' - ஊர்க்குருவி -
  7. திருப்பூர் சக்தி விருது 2023
  8. 'இயற்கையை வணங்கி வாழ்ந்த சமத்துவ தமிழ்த் தொன்மை'! - இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்-லண்டன். -
  9. நெடுங்கதை: ஓக்காடு --- முனைவர் கோ.சுனில்ஜோகி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி, கோவை. - -
  10. சிறுகதை: ஆலகாலம் – கே.எஸ்.சுதாகர் -
  11. தொடர் நாவல் - நவீன விக்கிரமாதித்தன் (17) நடுக்காட்டில் வழிதப்பிய நாயகன்! - வ.ந.கிரிதரன் -
  12. சமூக, அரசியல் செயற்பாட்டாளர் மகாதேவன் ஜெயக்குமரனுடனோர் உரையாடல்! - வ.ந.கிரிதரன் -
  13. மக்கள் திலகம் எம்ஜிஆர் நினைவாக... - ஊர்க்குருவி -
  14. அண்மையில் பார்த்த யு டியூப் காணொளிகள் இரண்டு! - ஊர்க்குருவி -
பக்கம் 58 / 104
  • முதல்
  • முந்தைய
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60
  • 61
  • 62
  • அடுத்த
  • கடைசி