முதல் சந்திப்பு: பல்துறை ஆற்றல் மிக்க கலா வித்தகி ஆனந்தராணி பாலேந்திரா! - முருகபூபதி -

உள்ளார்ந்த கலை, இலக்கிய, ஊடக ஆற்றல் மிக்கவர்கள் தமது தாயகம்விட்டு உலகில் வேறு தேசங்களில் வாழ நேர்ந்தாலும், தமது ஆற்றல்களை வெளிப்படுத்திக்கொண்டேயிருப்பார்கள் என்பதற்கு மற்றுமோர் உதாரணமாகத்திகழ்பவர் ஆனந்தராணி பாலேந்திரா. இவரை 1970 களில் செல்வி ஆனந்தராணி இராஜரட்ணம் என்ற பெயருடன் முதல் முதலில் சந்தித்தது இலங்கை வானொலி கலையகத்தில்தான்.
1970 – 1977 காலப்பகுதியில் இவர் பங்கேற்ற மேடை நாடகங்கள், நாட்டிய நாடகங்கள், திரைப்படங்களில் இவரைப் பார்த்திருக்கின்றேன். நடன நர்த்தகி கார்த்திகா கணேசரின் நெறியாள்கையில் அரங்கேறிய எல்லார – காமினி நாட்டிய நாடகத்தில் கெமுனுவின் தாய் விகாரமாதேவியாகவும், கலைஞர் தாசீஸியஸின் பிச்சை வேண்டாம் நாடத்திலும், வாடைக்காற்று, கோமாளிகள் திரைப்படங்களில் முக்கிய நாயகியாகவும் பார்த்தேன். எனினும், நாம் மீண்டும் சந்தித்து எமது கலை, இலக்கிய, வானொலி ஊடகத்துறை நட்பை வளர்த்துக்கொண்டது புகலிடத்தில்தான்.
இவரது கணவர் பாலேந்திராவை 1974 இல் சுஹேர் ஹமீட்டின் ஏணிப்படிகள் நாடகத்தில் பிரதான பாத்திரத்தில்தான் முதல் முதலில் பார்த்தேன். இவர்கள் இருவரையும் இல்லற வாழ்க்கையில் இணைத்தது, இந்திரா பார்த்தசாரதியின் மழை நாடகம்தான். இந்த நாடகத்திற்கென ஓர் அபூர்வ செய்தி இருப்பதாக எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி அடிக்கடி சொல்வார். மழை நாடகத்தில் நடிக்கும் நாயகனும் நாயகியும் பின்னர் மணம் முடித்து இல்லற வாழ்வினை தொடங்கிவிடுவார்களாம். ஆனந்தராணி – பாலேந்திராவுக்கும் இதுதான் நடந்தது.


சார்லிக்கு இன்று என் மீது கோபம். அவன் தட்டில் வைத்த எதையும் இன்று சாப்பிடவில்லை. தினமும் நான் கொடுக்கும் அந்த உலர்ந்த கொடிமுந்திரியைக்கூட தொடவில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். அதுதான் அவன் 'பேஃவரிட்'.....அதைக்கூட..... காலையில் இருந்து "உர்ர்ர்.....உர்ர்ர்" என்று ஏதோ விசித்திர சத்தம் வேறு எழுப்பிக்கொண்டேயிருந்தான். 





ஒருமுறை நாரதர், 'கடவுள்' கிருஷ்ணரைப் பார்த்து, "நீங்கள் அறுபதினாயிரம் கோபிகைகளுடன் கூடி இருக்கின்றீரே, எனக்கு ஒரு பெண்ணையாவது தரக்கூடாதா?" என்று கேட்டாராம். அதற்குக் கிருஷ்ணர், "நான் உடன் இல்லாமல், வீட்டில் தனியாய் இருக்கும் பெண்ணை நீ எடுத்துக்கொள் என்றாராம். இதற்கு நாரதர் உடன்பட்டு அறுபதாயிரம் வீடுகளிலும் சென்று பார்த்தாராம். ஆனால் எங்கும் கிருஷ்ணன் இல்லாத பெண்களைக் காண முடியாததால், நாரதர் மீண்டும் கிருஷ்ணனிடமே வந்து அவர் திருமேனியில் மோகம் கொண்டு அவரை நோக்கி "நான் உங்களிடமே பெண்ணாக இருந்து உடலுறவு கொள்ள விரும்புகிறேன்" என்றாராம்.


முன்பனி பின்பனி மாறிய பின்னே



நீங்கள் அதிசயமானவர்கள்


இன்று, ஏப்ரில் 10, சர்வதேச சகோதரர் நாள் ஆகும். எங்களுடைய வாழ்க்கையின் பெரும்பகுதியைச் சகோதரர்கள்தான் பங்கிட்டுக் கொள்கிறார்கள். நண்பர்களையோ, வேறெந்த உறவுகளையோ அறிவதற்கு முன் பெற்றோருக்கு அடுத்ததாக நாங்கள் பழகும் உறவும் அதுதான். எங்களின் ஆரம்பகால வருடங்களின் பெரும்நேரத்தைக் குடும்பமாக அவர்களுடன்தான் செலவிடுகிறோம். அவர்களுடன் சேர்ந்து நாங்களும் வளர்கிறோம். அந்தவகையில் சகோதரங்களுடான உறவு ஆரோக்கியமானதாக அமையவேண்டியது அத்தியாவசியமான தேவைகளில் ஒன்றெனலாம்.



இதுவே, இக்கட்டுரை தொடரில், சென்ற இருமுறையும் வாதிக்கப்பட்ட விடயங்களின் சாரமாகும். அதாவது, ஒருபுறம் மத்திய கிழக்கின் சவுதி முதல் சிரியா வரையிலான நாடுகள். மறுபுறம் ஆசியாவின் சீனா முதல் இந்தியா வரையிலான நாடுகள், மேலும் ஆப்ரிக்கா கண்டத்தின் அனேக நாடுகள், பின் பிறேசில் முதல் இந்தோனேசியா வரையிலான நாடுகள் - இவை அனைத்தினது முகங்களும் தீவிர மாறுகைக்கு உட்படும் போது, G-7 ன்ற அமைப்புக்கு நேரெதிராக, G-20 அல்லது ஒரு BRICS அல்லது SCO போன்ற அமைப்புக்கள் திரள்வதும், அவை ஓர் சவால் நிலையை கட்டவிழ்க்க நேர்வதும், தவிர்க்கமுடியாததாகின்றது. அதாவது G-7 என்ற நாடுகள்-உலகை வழி நடாத்திய காலம் முடிந்து, அது ஒரு கடந்த காலமாகி, அதற்குப் பதிலாக புதியதோர் ஒழுங்குமுறை கட்டவிழப் பார்க்கிறது.