பதிவுகள் முகப்பு

இசைக்குயில் பி.சுசீலாவின் பிறந்ததினம் இன்று! - ஊர்க்குருவி -

விவரங்கள்
- ஊர்க்குருவி -
கலை
13 நவம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- நவம்பர் 13 பி.சுசீலாவின்  பிறந்ததினம்! -

கலைஞர்கள் அவர்கள் எத்துறைகளைச் சேர்ந்தவர்களாகவிருந்தாலும் (எழுத்தாளர்கள், நடிகர்கள், பாடகர்கள், இசைக்கலைஞர்கள் எனக் கலைஞர்கள் எவராகவிருந்தாலும்) மானுடர்களாகிய எம் வாழ்வுடன் பின்னிப் பிணைந்தவர்கள். எம் இன்ப துன்பங்களில் அவர்கள் கலந்து நிறைந்து நிற்பவர்கள். அவ்வகையில் எம் வாழ்வில் பின்னிப் பிணைந்த கலைஞர்களிலொருவர் பாடகி பி.சுசீலா.  அவரது பிறந்ததினம் இன்று.  யார் சொன்னது இலக்கம் 13 நல்ல இலக்கம் அல்ல என்று. எங்கள் இன்ப துன்பங்களில் கலந்திருக்கும்  அவரை இவ்வுலகுக்குத் தந்த அதிருஷ்டம் மிக்க இலக்கம் அல்லவா.

மேலும் படிக்க ...

என் வாசிப்பனுவப்படிக்கட்டுகளில் அகிலனின் படைப்புகள்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
12 நவம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எழுத்தாளர் அகிலனின் நூற்றாண்டு வருட நிகழ்வுகள் தமிழகத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.  என் வாசிப்பனுவத்தில் எழுத்தாளர் அகிலனின் படைப்புகளுக்கும் முக்கியமானதோரிடமுண்டு. அகிலனின் புகழ்பெற்ற படைப்புகள் பல கல்கியில் வெளியானபோது அவற்றை நான் அறிந்திருக்கவில்லை. 'வேங்கையின் மைந்தன்', 'கயல்விழி' வெளியானபோது நான் தவழ்ந்துகொண்டிருந்தேன்.  எனக்கு மிகவும் பிடித்த 'பாவை விளக்கு' கல்கியில் தொடராக வெளியானபோது நான் இவ்வுலகில் அவதரித்திருக்கவில்லை. நான் 'பொன்னியின் செல்வன்'  உட்பட வாசிப்பை ஆரம்பித்திருந்த காலகட்டத்தில் ஆனந்தவிகடனில் ஓவியர் கோபுலுவின் ஓவியங்களுடன் 'சித்திரப்பாவை' தொடராக வெளியாகிக்கொண்டிருந்தது. கலைமகளில் 'எங்கே போகின்றோம்' நாவலும் அக்காலகட்டத்தில்தான் தொடராக வெளிவந்தது. ஆனால் அவை என்னைப் பெரிதும் கவரவில்லை.

மேலும் படிக்க ...

முதல் சந்திப்பு - மணிவிழாக் காணும் சிவராசா கருணாகரன் - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
12 நவம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

யாழ். தீம்புனல் வார இதழில் கடந்த ஒரு வருட காலத்திற்கும் மேலாக நான் எழுதி வருகின்றேனென்றால், அதற்கு வித்திட்டவர்  யார்..? என்பது பற்றி சொல்லியவாறே  இந்த முதல் சந்திப்பு தொடருக்குள் இம்முறை வருகின்றேன். அவரை நான் முதல் முதலில் அவரது எழுத்தின் ஊடாகவே தெரிந்துகொண்டேன்.   நான் வாசிக்கும்  எவரதும்  இலக்கியப் படைப்பு என்னை கவர்ந்துவிட்டால், அதனை எழுதியவரைப்பற்றி மேலதிக தகவல் அறிவதும், தேடிச்செல்வதும் எனது இயல்பு. அவ்வாறுதான் கிளிநொச்சியில் வதியும் படைப்பிலக்கியவாதியும் ஊடகவியலாளருமான சிவராசா கருணாகரன் எனக்கு முதலில் அறிமுகமானார். இவர் இலங்கையில் மட்டுமன்றி தமிழகம் மற்றும் தமிழர் புகலிட நாடுகளிலும் இலக்கிய வாசகர்களின் கவனிப்பிற்குள்ளானவர்.  கவிஞராகவே முன்னர் அறியப்பட்டவர். வெளிச்சம் இதழின் ஆசிரியராகவுமிருந்தவர். பத்தி எழுத்தாளர் - ஊடகவியலாளர் - பதிப்பாளர் - இலக்கிய இயக்கச் செயற்பாட்டாளர். கலை , இலக்கிய நண்பர்களின் விசுவாசத்திற்குமுரியவர்.  எனக்கு அவர்  மிகவும் நெருக்கமானதற்கு இக்காரணங்களே போதும்  கருணாகரன் இலக்கியத்தின் ஊடாக எனக்கு அறிமுகமானது 2008 இல்தான்.

முல்லை அமுதன் தொகுத்து வெளியிட்ட இலக்கியப்பூக்கள் தொகுப்பில்,  மறைந்த செம்பியன் செல்வனைப் பற்றி கருணாகரன் எழுதியிருந்த கட்டுரை வித்தியாசமானது. வழக்கமான நினைவுப் பதிவுகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டு புதியகோணத்தில் எழுதப்பட்டிருந்தது. எனக்கு அந்தத் தொகுப்பில் மிகவும் பிடித்தமான அக்கட்டுரையை எழுதிய கருணாகரன் யார்? அவர் எங்கே இருக்கிறார்? என்று ஒரு நாள்  லண்டனுக்கு தொலைபேசி தொடர்பெடுத்து முல்லை அமுதனிடம் விசாரித்தேன். கருணாகரன் வன்னியிலிருப்பதாக தகவல் கிடைத்தது. 2009 இல்  நான் வதியும்  மெல்பனில் நடந்த எழுத்தாளர் விழாவில் இலக்கியப்பூக்கள்  அறிமுகப்படுத்தப்பட்டது. பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா அறிமுகப்படுத்தினார். இவ்விழாவில் கலந்துகொண்ட ஜெயமோகன்,  தமிழகம் திரும்பியதும் எழுதிய புல்வெளிதேசம் நூலிலும் இந்தத் தகவலை பதிவுசெய்திருந்தார்.

மேலும் படிக்க ...

முருகபூபதியின் கதைத் தொகுப்பின் கதை : புலம்பெயர் வாழ்வியல் அனுபவத்தோடு ஈழ அரசியலையும் பேசும் கதைகள் ! - கானா பிரபா -

விவரங்கள்
- கானா பிரபா -
நூல் அறிமுகம்
10 நவம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

-   (  சிட்னியில் அண்மையில் நடந்த இலக்கிய சந்திப்பில்,  கானா. பிரபா எழுதிய வாசிப்பு அனுபவத்தை சமர்ப்பித்தவர் : செல்வி அம்பிகா அசோகபாலன் )  -

இன்றைய ஈழத்து இலக்கியப் பரப்பில் ஒரு நடமாடும் வரலாற்று ஆவணமாகத் திகழ்பவர் எழுத்தாளர் முருகபூபதி.  சொல்லப் போனால் கிட்டத்தட்ட ஐம்பது  வருட கால ஈழத்து இலக்கிய மரபின் ஒரே சாட்சியமாக முருகபூபதி விளங்குகின்றார் என்றால் மிகையில்லை.  வாராந்தம் அவர் பகிரும் இலக்கிய மடல்கள், சக எழுத்தாளர்கள், அரசியல் கொண்டோர் குறித்து அவரின் பகிர்வுகள் எல்லாமே முன் சொன்னதை நியாயப்படுத்தும்.  முருகபூபதியின் படைப்புகளும் ஒரு குறுகிய வட்டத்தோடு நின்று விடவில்லை. அதனால்தான் அவை கட்டுரை, நாவல், பயண இலக்கியம், சிறுவர் இலக்கியம், புனைவு சாரா இலக்கியம் என்பவற்றோடு, சிறுகதைகளாகவும் பன்முகப்பட்டு நிற்கின்றன. தமிழக, ஈழத்து இலக்கியவாதிகளின் நட்பையும், பரந்துபட்ட வாசகர் வட்டத்தையும் சம்பாதித்து வைத்திருக்கும் முருகபூபதி, இரண்டு தடவைகள் இலங்கையின் தேசிய சாகித்திய விருது பெற்ற பெருமையையும் தனதாக்கிக் கொண்டவர்.

முருகபூபதி சமீப ஆண்டுகளில் புனைவு சாரா இலக்கியங்களிலேயே அதிகம் மூழ்கிப்போய்விட்டார் என்ற குறையைக் களையுமாற் போல,  “கதைத் தொகுப்பின் கதை” என்ற அவரின் சிறுகதைத் தொகுப்பு வெளிவந்துள்ளது. அவரது ஏழாவது கதைத் தொகுதியான இந்தத் தொகுப்பை இலங்கை  ஜீவநதி வெளியிட்டிருக்கின்றது. மொத்தம் பதினைந்து சிறுகதைகள் திரட்டப்பட்டு இந்தத் தொகுப்பு வழங்கப்பட்டிருக்கிறது.  அவுஸ்திரேலிய மண்ணில் மேற்படிப்புக்காக வந்த புலமையாளர் கலாமணி அவர்களின் மகன் பரணீதரனை  சிறுவனாக இந்த மண்ணில் கண்டவர் முருகபூபதி.  தற்போது  அதே சிறுவனை ஜீவநதி ஆசிரியர் பரணீதரனாகக் கண்டு, அவரே  பின்னாளில் தன்னுடைய நூலை வெளியிடுவார் என்று  முருகபூபதி  அன்று நினைத்திருப்பாரா என்று இந்த நேரம் சிந்திக்கத் தோன்றுகிறது. அது முருகபூபதியின் நீண்ட இலக்கியப் பயணத்தையும் சொல்லாமற் சொல்லி வைக்கின்றது.

மேலும் படிக்க ...

கனடா தமிழ் மிரர் பத்திரிகையின் விருது விழா - குரு அரவிந்தன் -

விவரங்கள்
- குரு அரவிந்தன் -
நிகழ்வுகள்
10 நவம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

சென்ற ஞாயிற்றுக்கிழமை 6-11-2022 அன்று ரொறன்ரோவில் உள்ள சீனா கலாச்சார மண்டபத்தில் கனடா தமிழ் மிரர் பத்திரிகையின் விருது விழா அரங்கம் நிறைந்த விழாவாகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழ்நாட்டில் இருந்து வந்த சிறந்த பேச்சாளரான திரு. கலாநிதி கலியமூர்த்தி அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்தார். கோவிட் காரணமாக கடந்த இரண்டு வருடங்களாகப் பிற்போடப் பட்டிருந்த இந்தவிழா இம்முறை மிகச் சிறப்பாக நடந்தேறியது.

திரு. சாள்ஸ் தேவசகாயம் அவர்களைப் பிரதம ஆசிரியராகக் கொண்டு ஆங்கிலத்திலும், தமிழிலும் வெளிவரும் இந்தத் தமிழ் மிரர் பத்திரிகை தமிழ் வாசகர்களை மட்டுமல்ல, ஆங்கிலம் தெரிந்த பல்வேறு சமூகங்களையும் சென்றடைவதால், தமிழர்களைப் பற்றி, அவர்களின் பண்பாடு கலாச்சாரத்தை, அரசியல் பிரச்சனைகளைப் பற்றியெல்லாம் ஏனைய கனடியர்களும் அறிந்து கொள்ள மிகவும் உதவியான ஊடகமாக இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க ...

குறிஞ்சி நிலத் தலைவன் தெளிவத்தை ஜோசப் நினைவாக..

விவரங்கள்
- தகவல் - 'காலம்'செல்வம் -
நிகழ்வுகள்
09 நவம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

காலம் - நவம்பர் 12, 2022  சனிக்கிழமை பிற்பகல் 4 மணி.   
இடம் - Scarborough Village Recreation Center ,  3600 Kingston Road, Toronto.

‘அந்திம காலத்தின் இறுதி நேசம்’ சிறுகதைத் தொகுப்புக்காக, எம்.ரிஷான் ஷெரீபுக்கு ‘இலங்கை அரச சாகித்திய இலக்கிய விருது’

விவரங்கள்
- தகவல் - எம்.ரிஷான் ஷெரீபு -
நிகழ்வுகள்
09 நவம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 

இலங்கையில் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் ஒவ்வொரு வருடமும் வெளிவரும் பல்லாயிரக்கணக்கான நூல்கள் பரிசீலிக்கப்பட்டு அவற்றுள் சிறந்த நூல்களுக்கு இலங்கை அரச சாகித்திய இலக்கிய விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த வெள்ளிக்கிழமை (28.10.2022) கொழும்பில் நடைபெற்ற 'அரச சாகித்திய இலக்கிய விருது' விழாவில் இலங்கை தமிழ் எழுத்தாளர் எம்.ரிஷான் ஷெரீப் மொழிபெயர்ப்பில் வெளியான 'அந்திம காலத்தின் இறுதி நேசம்' நூல், சிறந்த மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்புக்கான விருதினை வென்றுள்ளது. தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட, சிங்களப் பெண் எழுத்தாளர் தக்‌ஷிலா ஸ்வர்ணமாலியின் சிறுகதைகள் அடங்கிய அந்த நூலை ஆதிரை பதிப்பகம் வெளியிட்டிருந்தது.

மேலும் படிக்க ...

அஞ்சலி: பால்ய பருவத்து நண்பர் மெளலி! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
09 நவம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

வவுனியா மகாவித்தியாலயத்தில் என் பால்ய பருவம் கழிந்தபோது ,ஏழாம் வகுப்பில் என்னுடன் படித்த மாணவர்களில் என்னுடன் நன்கு பழகியவர்களை முகநூல் மீண்டும் என்னுடன் இணைத்துள்ளது. விக்கி (எழுத்தாளர் ஶ்ரீராம் விக்னேஸ்) , திருநாவுக்கரசன் (Thirunavukkarasan Sittampalam) , சண்முகராஜா இவர்களெல்லாரும் இன்று என்னுடன் முகநூலிலுள்ளார்கள். இந்நிலையில் நேற்று திருநாவுக்கரசன் பதிந்திருந்த அஞ்சலிச் செய்தியொன்று என் கவனத்தைக் கவர்ந்தது. அது ஏழாம் வகுப்பில் எம்முடன் வவுனியா மகா வித்தியாலயத்தில் படித்த நண்பர் மெளலியின் மறைவைப் பற்றியது.  மெளலீஸ்வரன் என்பது முழுப்பெயராக இருக்க வேண்டுமென்று நினைக்கின்றேன்.  ஶ்ரீமுருகன் திரையரங்குக்கு அருகிலிருந்த வீதியில் இவரது இல்லமிருந்தது நினைவுக்கு வருகின்றது. சில சமயங்களில் இவருடன் ஶ்ரீ மூருகன் திரையரங்கில் பின் பகுதியில் எரிந்த நிலையில் எறியப்பட்டிருக்கும் திரைப்பட ஃபிலிம் சுருளின் துண்டுகளைத் தேடித்திரிந்ததும் நினைவுக்கு வருகின்றது.

இவரை நினைக்கையில் இவரது சிரித்த முகத்துடன் கூடிய தோற்றம் நினைவுக்கு வருகின்றது. வவுனியா மகா வித்தியாலயத்தை வீட்டு நீங்கிய பின்னர் இவரை இதுவரை நான் சந்தித்ததில்லை. ஆனால் இவரது  நினைவு அழியாமல் இருக்கும் வகையில் என்னிடமொரு நினைவுச் சின்னம் இன்னுமுண்டு. அது இவருடன் நானும் , தம்பியும் இன்னுமொரு நண்பர் நொச்சிமோட்டைப் பகுதியைச் சேர்ந்த பேரின்பராசாவும் சேர்ந்து எடுத்த புகைப்படம்தான். அக்காலகட்டத்தை நினைவு படுத்தும் வகையில் தற்போது என்னிடமுள்ள ஒரேயொரு நினைவுச்சின்னம் இதுதான். இப்புகைப்படம் எடுத்தது தற்செயலானது. எட்டாம் வகுப்பிலிருந்து நான் யாழ் இந்துக்கல்லூரிக்குச் செல்லும் திட்டத்தில் இருந்ததால், தற்செயலாலத் தீர்மானித்து இப்புகைபபடத்தை ஶ்ரீ முருகன் திரையரங்குக்கு முன்பாக அமைந்திருந்த அஜந்தா ஸ்டுடியோவில் எடுத்திருக்க வேண்டுமென்று நினைக்கின்றேன்.

மேலும் படிக்க ...

தொடர் நாவல்: நவீன விக்கிரமாதித்தன் (9) - மின்காந்தமணி என்னுமென் சகி! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
நாவல்
08 நவம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அத்தியாயம் ஒன்பது - மின்காந்தமணி என்னுமென் சகி!

வழக்கம்போல் முடிவற்று விரிந்திருக்கும் இரவு வானை, நட்சத்திரங்கள் கொட்டிக்கிடக்கும் இரவும் வானைப் பார்த்தபடியிருக்கின்றேன்.  இரவு வான் எப்பொழுதும் புதிர்களை அடுக்கி வைத்துள்ள நூலைப்போல் என்னைப் பிரமிக்க வைக்குமொன்று. காலத்தின் அடுக்குகளுக்குள் விரிந்து கிடக்கும் இரவு வான் இருப்பின் புதிர்களின் விடைகளைத் தாங்கி நிற்கும் ஞானப்பெட்டகமாக எப்பொழுதும் எனக்குத் தெரிவதுண்டு. அதனால் அதனை எத்தனை தடவைகள் பார்த்துக்கொண்டிருந்தாலும் எனக்கு அலுப்பதேயில்லை.

"என்ன எவளைப்பற்றி யோசனை?"

எதிரில் மந்தகாசப் புன்னகையுடன் மனோரஞ்சிதம் நிற்கின்றாள்.

"வேறு யாரைப்பற்றி? எல்லாம் என் சகியைப்பற்றித்தான். இருப்பில் என்னுடன் எப்பொழுதுமிருக்கும் என் இன்பச் சகியைப்பற்றித்தான்  கண்ணம்மா"

"கண்ணா,  இந்தக் கண்ணம்மாவை விட்டால் உனக்கு வேறு யார் சகி இருக்க முடியும்?"

"யார் சொன்னது இருக்க முடியாது என்று. இவள் என்னை எப்பொழுதும்  வியப்பிலாழ்த்தும் என் சகி. மின்காந்தமணி. இவளது ஆளுமை எப்பொழுதும் என்னைப் பிரமிக்க வைக்குமொன்று."

'அதென்ன மின்காந்தமணி. வித்தியாசமான பெயராகவிருக்கிறதே. கண்ணா யாரிவள்? உண்மையா இல்லை இதுவும் உன் வேடிக்கைப்பேச்சுத்தானா?"

"கண்ணம்மா, நான் ஏனுனக்கு  வேடிக்கை காட்ட வேண்டும். காந்தமணியைப்பற்றி நீ மட்டும் விரிவாக அறிந்திருந்தால் இவ்விதம் கூற மாட்டாய்."

"கண்ணா, நிச்சயமாக இவளும் உன்  அகவெளி நண்பர்களிலொருத்திதான், இல்லையா? அவ்விதமிருக்கும் பட்சத்தில் எனக்கு எவ்வித ஆட்சேபணையுமில்லை. நீ தாராளமாக எவ்வளவு நேரமானாலும் உரையாடு. நினைத்து நினைத்து மாய்ந்து போ. கவலையில்லை."

மேலும் படிக்க ...

தொடர்ந்தும் சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதி எழுத்தாளர் விவேகானந்தனூர் சதீஸ்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
08 நவம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

-  விவேகானந்தனூர் சதீஸ். -

இன்னும் இலங்கையில் சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகள் எதற்காக இவ்விதம் வாட வேண்டும் என்பது புரியாத புதிர். நாட்டில் யுத்தம் முடிந்து பதின்மூன்று ஆண்டுகளைக் கடந்து விட்டன.  தமிழர்களைக் கொன்றதற்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ வீரரை பதவியிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி கோத்தபாயா ராஜபக்ச பொது மன்னிப்பு அளித்து விடுதலை செய்கின்றார். ஆனால் பயங்கரவாதத்தடைச் சட்டத்தின் கீழ் சந்தேகத்தின் பேரில்  கைது செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளில் 34 பேர் இன்னும் சிறைகளில் வாடுகின்றார்கள். இவர்களை அரசு உடனடியாக விடுதலை செய்வதே சரியான செயல். அதே சமயம் மரண தண்டனை விதிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட இராணுவ வீரர் மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட வேண்டும். அவரால் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்.

இவ்விதம் விடுதலை செய்யப்படும் அனைத்து அரசியல் கைதிகளுக்கும், இதுவரை சிறைக்கம்பிகளின் பின் தம் சுதந்திரத்தை இழந்திருந்ததற்காக உரிய நட்ட ஈடும் வழங்கப்பட வேண்டும். இதற்காக நீதிக்காகப் போராடும் அமைப்புகள், வழக்கறிஞர்கள், அரசியல்வாதிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் அனைவரும் தொடர்ந்தும் குரல் கொடுக்க வேண்டும். இவ்விதம் சிறையினில் வாடும் அரசியல் கைதிகளுக்காகக் குரல் கொடுக்கும் 'குரலற்றவர்களின் குரல்' அமைப்பு, ஊடகங்கள் ஆகியவற்றின் பங்களிப்பு முக்கியமானது. தமிழ் அரசியல்வாதிகளின் பங்கு இன்னும் அதிகமாக இருக்க வேண்டும்.

மேலும் படிக்க ...

தேவகாந்தனின் ‘காற்று மரங்களை அசைக்கின்றது’ தேடலைத் தூண்டும் ஒரு விமர்சன நூல்! (பகுதி இரண்டு) - ஈழக்கவி -

விவரங்கள்
- ஈழக்கவி -
ஆய்வு
07 நவம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்


 “காதல் என்கிற மனமெய் உணர்வு எங்கேயும் எப்போதும் அழகானது. சரித்திரம் அவ்வாறான வியக்கத்தக்க காதல்களைக் கொண்டிருக்கிறது மெய்யாகவே. ஆனாலும் அதன் சாரம், நவீன மனோதத்துவ,  தத்துவ ரீதிகளில் அணுகப்படும் நாவல்களினால் பிழிந்தெடுத்து முன்வைக்கப்படுகிறபோது, மனம் வாசகப் பரவசம் கொண்டுவிடுகிறது.” பக். 15

‘காற்று மரங்களை அசைக்கின்றது’ பிரதி 17 நாவல் பிரதிகளை தன் விமர்சனப் சுழற்சிக்குள் அசைத்துக்காட்டியிருக்கிறது. தேவகாந்தன் பத்து நாவல்களை வெளிக்கொணர்ந்திருப்பவர். 'யுத்தத்தின் முதலாம் அதிகாரம்', 'கனவுச்சிறை', 'கலிங்கு' முதலான நாவல்கள் அவரது நாவல் ஆக்கும் ஆற்றலை பறைசாற்றுகின்றன. அவரது தேடல் அவரது புனைவுத்திறனை ஆழ அகலப்படுத்தியிருக்கிறது. எனவே தான் அவரே நேர்காணலொன்றில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்: “பேச்செல்லாம் நச்சுப் பாவை தொடர் துப்பறியும் நவீனமாக இருந்த நிலையில் மு.வரதராசன், நா.பார்த்தசாரதி, கல்கி, அகிலன் போன்றோரது வாசிப்புடன் எழுத வந்தவன் நான். எனது எழுத்தும் போக்கும், நோக்கமும் அப்போது அப்படித்தான் இருந்திருக்கும். இருந்திருக்க முடியும்.  ஆனால் நான் மாறினேன். நீண்டதும் தீவிர மானதுமான வாசிப்புகளின் மூலம் மாறினேன். புதுமைப்பித்தனும், ஜெயகாந்தனும், கு.அழகிரிசாமியும், ஜானகிராமனும் அறிமுகமாகிறபோது அந்த மாற்றம் தன்னை என்னில் ஊன்றத் தொடங்குகிறது. இதன் அர்த்தம் வாசிப்பை என் தேர்விலிருந்தல்ல, எனக்குள்ள வாய்ப்பிலிருந்தே நான் அடைந்து கொண்டிருந்தேன் என்பதே.  பின்னர்தான் தெரிந்தது வாசக உலகம் பல தளங்களை தனித்தனிக் கோளங்களாய்க் கொண்டிருக்கிறதென்பது. அப்போது என் குறி வெகுஜன வாசகப் பரப்பிலிருந்து தீவிர வாசகப் பரப்பாக மாறுகிறது. அதுவே எனது படைப்புகளின் இலக்காகவும் பின்னர் பரிமாணம் பெறுகிறது.  அப்போதும் விமர்சன உலக அக்கறை என்னில் இருக்கவே செய்தது. ஏனெனில் அந்த விமர்சனங்களிலிருந்துதான் நான் மாறவேண்டுமென்ற அவசியத்தை  உணர்ந்தேன்.  என் வளர்ச்சியின் படிகள் இவை. இவையே எப்படைப்பாளியின் படிகளாகவும் இருக்கமுடியும். இல்லை, எனக்கு 'தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண் மதிசூடி' என்பதுபோல் எடுத்த எடுப்பிலேயே தீவிரமாய் எழுத வந்ததென யாராவது கூறின் அவரை நாம் புரிந்துகொள்ளலாம்”.

    “1986இல் வெளிவந்த எனது முதல் நாவலான 'உயிர்ப் பயணம்', அது வெளிவந்த காலத்தில் என்னைப்போலவே எனது வாசக நண்பர்களையும் திருப்திப்படுத்தியிருந்ததை இப்போது என்னால் நினைவுகொள்ள முடிகிறது. ஆனால் இன்றைக்கு அந்த நாவலின் பலஹீனமும் குறைகளும் எனது அவதானத்துக்கும் வருகின்றன. அன்றைக்கு எண்ணியிருந்ததுபோல அதை ஒரு நாவலாக இன்று என்னால் கொண்டுவிட முடியாதிருக்கிறது. முக்கியமான சில நாவல்கள்பற்றி தீர்க்கமான விமர்சனங்களையும், வியாசங்களையும் மிகவும் பிரக்ஞையோடு எழுதியிருக்கிறேனென்கிற வகையில், எனது சொந்த நாவலான 'உயிர்ப் பயணம்' பற்றிய மதிப்பீட்டில் நான் தயக்கம் காட்டிவிடக் கூடாது. அதை ஒரு நெடுங்கதையாகவோ குறுநாவலாகவோதான் இன்றைக்கு என்னால் கருத முடிகிறது. அதீத உணர்வுச் செறிவுள்ள பாத்திரங்களைக் கொண்டதாகி, இலட்சியவாத உரையாடல்கள் உள்ளதாகவும் ஆகியிருந்தது. நாவலுக்கு அந்தத் தன்மை பேரிடர் விளைப்பது. மேலும் அது நாவலுக்கிருக்கவேண்டிய பல்பரிமாண உள்ளடுக்குகள் அற்று ஒற்றைப் பரிமாணத்தில் கட்டுமானமும் ஆகியிருந்தது. உரையாடற் சிக்கனத்திலும் போதிய கவனத்தை நான் காட்டியிருக்கவில்லை.” (பார்க்க, வ.ந.கிரிதரனின் பதிவுகள்' இணைய இதழ்: “தேவகாந்தன்”) தேவகாந்தன் தன்னுடைய படைப்புகள் பற்றி (மனம் திறந்த) இவ்வாறான விமர்சன மதிப்பீடுகளைக் கொண்டிருப்பவர். எனவே ‘காற்று மரங்களை அசைக்கின்றது’ நூலிலுள்ள நாவல்களைப் பற்றிய பத்திகளில் அவரே குறிப்பிடுவது போல, ‘நாவல்கள்பற்றி தீர்க்கமான விமர்சனங்களையும், வியாசங்களையும் மிகவும் பிரக்ஞையோடு’ எழுதியிருக்கிறார்.

மேலும் படிக்க ...

ஆய்வு: புலம்பெயர்ந்த ஈழத்தமிழரின் இதழியற் செயற்பாடுகள்! - கலாநிதி சு. குணேஸ்வரன் -

விவரங்கள்
- கலாநிதி சு. குணேஸ்வரன் -
ஆய்வு
06 நவம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அறிமுகம்

புலம்பெயர்ந்தோரின் இலக்கிய முயற்சிகள் ஆரம்பித்து இற்றைக்கு ஒரு தலைமுறை கடந்துவிட்டது. இக்காலத்துள் ஏராளமான புனைவெழுத்துக்களும் புனைவு சாராத எழுத்துக்களும் வந்துள்ளன. இவை எல்லாவற்றிற்கும் ஆரம்பப் படிகளை இட்டவர்கள் சஞ்சிகையாளர்களே. தனிநபர்களின் ஆர்வத்தினாலும்  நண்பர் வட்டங்களின் கூட்டுமுயற்சியினாலும் ஆரம்பிக்கப்பட்ட இதழ்கள் படிப்படியாக அமைப்புகள் சார்ந்து வெளிவரக்கூடியளவுக்கு வளர்ச்சியடைந்தன

1983 யூலைக் கலவரங்களுக்குப் பின்னரே இலங்கையின் வடக்கு கிழக்குப் பகுதியில் வாழ்ந்த இளைஞர்கள் பெருமளவில் மேற்கு நாடுகளுக்குப் புலம்பெயர்ந்தனர். அவர்களின் இலக்கியச் செயற்பாடுகளே ‘புலம்பெயர் தமிழ் இலக்கியம்’ என்ற புதிய இலக்கிய வகைமைக்கு வழிவகுத்தது. புலம்பெயர்ந்தவர்களில் எழுத்தார்வம் உள்ளோர் தங்கள் அக - புற நெருக்கடிகளை, உணர்வுகளை வெளிப்படுத்த இதழ்களை வெளியிட்டனர்.  ஐரோப்பிய நாடுகளிலும் அவுஸ்திரேலியாவிலும்  வடஅமெரிக்காவில் கனடாவிலும் இருந்து அதிகமான பத்திரிகைகள், சஞ்சிகைகளை வெளிக்கொண்டு வந்த வரலாறு இவ்வாறுதான் ஆரம்பித்தது. இந்த முயற்சிகள் புலம்பெயர்ந்தோரின் இதழியல் வரலாற்றில் ஆவணப்பதிவுகளாக அமைந்துள்ளன.


முதல் முயற்சி

    புலம்பெயர்ந்தோர் மத்தியிலிருந்து முதலில் வெளிவந்த சஞ்சிகையாக ‘தமிழ்முரசு’ என்ற இதழை இனங்காணலாம். பிரான்சில் இருந்து வெளியாகிய இவ்விதழ் பற்றி கலைச்செல்வன் பின்வருமாறு எழுதியுள்ளார்.

    “பிரான்சில் புகலிட இலக்கியத்தின் உருவாக்கம் கார்த்திகை 1981 இல் வெளியான ‘தமிழ்முரசு’ என்னும் சஞ்சிகையுடன் உருவாகின்றது. இலங்கைத் தமிழரிடையே 1981ஆம் ஆண்டில் உருவாகிய சில காலங்களிலேயே அஸ்தமித்துப்போன பாரிஸ் தமிழர் இயக்கத்தினால் முதன்முதல் தமிழ்முரசு 1981ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியாகியது.” (16ஆவது இலக்கியச் சந்திப்பு மலர், நெதர்லாந்து, 1993) என்று ‘பிரான்ஸ் தமிழ்ச் சஞ்சிகைகள் ஒரு பதிவு’ கட்டுரையில் கலைச்செல்வன் குறிப்பிட்டுள்ளார்.

    தமிழ் முரசின் ஆசிரியராக உமாகாந்தன் பணியாற்றினார். தமிழ்முரசு ஆரம்பத்தில் 16 பக்கங்கள் கொண்ட கையெழுத்திலான ஒளிப்படப்பிரதியாகவும் (Photo Copy) பின்னர் 40-60 பக்கங்களைக் கொண்ட தட்டச்சுச் செய்யப்பட்ட பிரதியாகவும் 1981-1989 ஆம் ஆண்டுவரை 72 இதழ்கள் வெளியாகியது. கலை இலக்கியம் அரசியல் குறித்த இவ்விதழின் ஊடாகவே உமாகாந்தன், செல்வம், கலாமோகன், அருந்ததி, சுகன், தேவதாஸ் முதலான படைப்பாளிகள் இலக்கியச் சூழலில் அறியப்பட்டனர்.

மேலும் படிக்க ...

ஆய்வு: காதலர் கொஞ்சுமொழியில் பாலீற்று மாற்றம்! - முனைவர் ச.முத்துச்செல்வம், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, தியாகராசர் கல்லூரி, மதுரை - 09. -

விவரங்கள்
- முனைவர் ச.முத்துச்செல்வம், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, தியாகராசர் கல்லூரி, மதுரை - 09. -
ஆய்வு
06 நவம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

பூக்கோள உயிரினங்கள் அனைத்திற்கும் பொதுவாக இயற்கை அளித்த பரிசு உணர்வு. அவ்வுணர்விலும் காதல் உணர்வு சிறப்பிற்குரியது. இவ்வியற்கை அற்புதப் பிறவியாக மனிதனைப் படைத்து காதலைக் கொடுத்ததோடு மட்டுமல்லாமல் அக்காதலைப் பரிமாறிக்கொள்ள மொழியையும் கொடுத்துள்ளது. இத்தகைய மொழி காலந்தோறும் மனிதப் பண்பாட்டிற்கேற்ப மாறும் இயல்பினையுடையது. இம்மொழி மாற்றத்தில், காதலர்கள் பயன்படுத்தும் சொற்களில் பாலீற்று விகுதிகள் எவ்வகையில் மாற்றம் பெற்றுள்ளன என்பதனை ஆய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

கருதுகோள்
மொழிமாற்றம் ஏற்படுத்தும் காரணிகளில் காதலும் ஒன்றாகின்றது என்பதே இவ்வாய்வின் கருதுகோளாகும்.

பால் விகுதிகள்

    கிளவியாக்கத்தில் பாலுணர்த்தும் எழுத்திற்கெல்லாம் இலக்கணம் கூறுகின்ற பொழுது,

        “இருதிணை மருங்கின் ஐம்பாலறிய
        ஈற்றுநின் றிசைக்கும் பதினோரெழுத்தும்
        தோற்றந் தாமே வினையொடு வருமே”     (தொல்.தெய்வ.10)

சொல்லாக்கத்தில் வழுவின்றி வாக்கியங்களை எழுதுவது சிறப்பிடம் பெறுகின்றது. (தொல்.சொல்.தெய்வ. நூ. 5, 6, 7, 8, 9) போன்ற ஐந்து நூற்பாக்களும் ஐம்பால் ஈறுகள் (ன, ள, ர, ப, மார், து, டு, று, அ, ஆ, வ) பற்றிக் குறிப்பிடுகிறது. இங்குப் பால் ஈறுகளின் பங்கு முக்கிய இடம் பெறுகின்றது. பால் ஈறுகள் பால்களைக் காட்டுவது மட்டுமின்றி எண்ணையும் காட்டுகிறது. இவ்வீறுகளை வழுப்படாமற் எழுதுவதற்கென்று பெயரியலிலும் வினையியலிலும் பொருத்திக் காட்டியுள்ளார். இதனை,

மேலும் படிக்க ...

எழுத்தாளர் தாமரைச்செல்வியின் 'தாகம்' நாவல் மற்றும் அவர் பற்றிய சிந்தனைகள் ! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
06 நவம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- ஜீவநதி சஞ்சிகையின் எழுத்தாளர் தாமரைச்செல்வி சிறப்பிதழில் வெளியான கட்டுரை. -

எழுத்தாளர் தாமரைச்செல்வியை அவர் எழுபதுகளில் எழுதத்தொடங்கிய காலத்திலிருந்து அறிந்திருக்கின்றேன். நானும் என் பால்ய, பதின்ம வயதுக்ளிலிருந்து எழுதிக்கொண்டுவருவதால் தமிழக, இலங்கைப் பத்திரிகைகள், சஞ்சிகைகளென்று மேய்ந்துகொண்டிருந்தேன். அவ்விதமானதொரு சூழலில் தாமரைச்செல்வியின் எழுத்துகள் அறிமுகமாகின. பின்னர் மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தமிழ்ச் சங்கத்தின் 1980/1981 கால இதழாசிரியர் குழுத்தலைவராகவிருந்த சமயம் வெளியான 'நுட்பம்' வருடாந்த இதழுக்கும் தாமரைச்செல்வி  அவர்கள் 'எதிர்பார்ப்புகள்' என்றொரு சிறுகதையினைத் தந்திருந்தார். அன்றிலிருந்து இன்றுவரை எழுதிக்கொண்டிருக்கின்றார் தாமரைச்செல்வி. சிறுகதை, நாவல், கட்டுரையென்று பன்முக இலக்கிய ஆளுமை மிக்க படைப்பாளிகளிலொருவரான தாமரைச்செல்வி ஓவியரும் கூட. ஊடகங்களில் வெளியான அவரது கதைகள் பலவற்றுக்கு அவரே ஓவியங்களும் வரைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. இது பற்றி அவருடனான முகநூல் உரையாடலொன்றின்போது குறிப்பிட்டிருக்கின்றார்.

தாமரைச்செல்வி அவர்களின் ஓவியங்கள் பற்றி நினைவு கூர்கையில் இன்னுமொரு நினைவும் தோன்றுகின்றது. சில வருடங்களுக்கு முன்னர் கனடாவில் மறைந்த என் அக்கா முறையிலான உறவுக்காரரான மீனா நகுலன் (அவரும் ஓர் ஓவியர்) தாமரைச்செல்வியைப்பற்றியும், அவரது சகோதரியைப்பற்றியும் கூறியது நினைவுக்கு வருவதுண்டு. தாமரைச்செல்வியின் சகோதரி அப்பொழுது யாழ் இந்து மகளிர் கல்லூரியில் விடுதியில் தங்கிப் படித்திருக்க வேண்டுமென்று நினைக்கின்றேன். அவரும் தாமரைச்செல்விபோல் ஓவியர். எழுத்தாளர் தாமரைச்செல்வியின் சகோதரியும் யாழ் இந்து மகளிர் கல்லூரியில் படிப்பதாகவும், அவர் சிறந்த ஓவியரென்றும் மீனா நகுலன் அவர்கள் கூறுவதுண்டு. மீனா நகுலன் தன் இறுதிக்காலத்தில் நகுலேஸ்வரி என்னும் பெயரில் வரைந்த ஓவியங்கள் சில பதிவுகள் இணைய இதழிலும் வெளியாகியுள்ளன.

இவ்விதம் எழுத்தாளர் தாமரைச்செல்வியின் பெயர் பல்வேறு  தருணங்களில் என் வாழ்வில் எதிர்பட்டுக்கொண்டிருந்தது. இன்னுமொரு விடயத்திலும் அவரது பெயர் என்னைக் கவர்ந்திருந்தது. எனக்குப் பிடித்த புனைபெயர்களிலொன்று. அதற்கான காரணத்தை அண்மையில் முகநூலில் அவரது  பதிவொன்றின் அல்லது எதிர்வினையொன்றின் மூலமே அறிந்துகொண்டேன்.  எழுத்தாளர் மீ.ப.சோமுவின் கல்கி சஞ்சிகயில் வெளியான நாவலான 'நந்தவனம்' நாவலில் வரும் நாயகி தாமரைச்செல்வியின் தாக்கத்தால் அவர் வைத்துக்கொண்ட  புனைபெயர் என்பதை  அப்போதே அறிந்துகொண்டேன். அது போல் மீ.பா.சோமுவின் இன்னுமொரு புகழ்பெற்ற் வரலாற்று நாவலான 'கடல் கொண்ட கனவு' நாவலின் நாயகி யாழ்நங்கையின் தாக்கமே எழுத்தாளர் அன்னலட்சுமி ராஜதுரை அவர்கள் தன் புனைபெயராக 'யாழ்நங்கை' என்னும் பெயரைத் தேர்ந்தெடுத்ததன் காரணம் என்பதையும் அண்மையில்தான் அறிந்தேன். அதுவும் எனக்குப் பிடித்த இன்னுமொரு புனைபெயர்.

மேலும் படிக்க ...

எழுத்தாளர் தேவகாந்தனின் இதழியற் பங்களிப்பு மற்றும் 'இலக்கு' சிற்றிதழ் பற்றிய சுருக்கமானதொரு குறிப்பு! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
05 நவம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- ஜீவநதி சஞ்சிகையின் சிற்றிதழ்கள் சிறப்பிதழ் 175இல் வெளியான கட்டுரை. -

எழுத்தாளர் தேவகாந்தனைச் சிறுகதையாசிரியராக, நாவலாசிரியராக நாமனைவரும் அறிவோம். ஆனால் அவரது இதழியற் பங்களிப்பு பற்றி அதிகமாக இலக்கியச்சூழலில் கதைப்பதில்லை. ஏன்? தெரியவில்லை. தமிழ் இலக்கியச் சூழலில் அவரது இதழியற் பங்களிப்பு முக்கியமானது. கனடாத் தமிழ் இலக்கியச் சூழலில் அவரது ஆண்டிதழான கூர் முக்கியமானது.அதேபோல் அவர் இந்தியாவில் இருந்தபோது தொண்ணூறுகளில் அவரை ஆசிரியராகக் கொண்டு வெளியான 'இலக்கு' சிற்றிதழும் முக்கியமானது. அதிக எண்ணிக்கையில் வெளிவந்திருக்காவிட்டாலும் , வெளிவந்த அனைத்து இதழ்களும் காத்திரமான இலக்கியச்சிறப்பு மிக்கவை. புதுமைப்பித்தன் மலர், பாரதியார் மலர், நா.பார்த்தசாரதி மலர், டானியல் மலர், பேராசிரியர் க.கைலாசபதி மலர்கள், ஆண்டு மலர், தி.ஜானகிராமன் மலர் என தரமான , இலக்கியச்சூழலில் நிலைத்து நிற்கக்கூடிய சிற்றிதழ் மலர்கள் அவை.

மேலும் படிக்க ...

'கலைச்செல்வி' சஞ்சிகையும் அதன் இலக்கியப் பங்களிப்பும்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
05 நவம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- ஜீவநதி சஞ்சிகையின் சிற்றிதழ்கள் சிறப்பிதழ் 175இல் வெளியான கட்டுரை. -

கலைச்செல்வி சஞ்சிகையின் ஆரம்பமும், நோக்கங்களும் பற்றி.....

இலங்கைத் தமிழ் இலக்கியத்தில் தடம் பதித்த முக்கியமான சஞ்சிகைகளிலொன்று 'கலைச்செல்வி'.   இச் சஞ்சிகை எழுத்தாளர் சிற்பி  (சிவசரவணபவன்) அவர்களை ஆசிரியராகக்கொண்டு ஆடி 1958இலிருந்து வெளியானது.  'புதிய சொல'  சஞ்சிகையின் , ஜனவரி-மார்ச் 2016 வெளியான,  முதலாவது இதழில்  எழுத்தாளர் அருண்மொழிவர்மன் எழுதிய 'கலைச்செல்வி' பற்றிய கட்டுரையில் முதலாவது கலைச்செல்வி இதழ் ஆகஸ்ட் 1958 வெளியானதாகக் குறிப்பிட்டிருந்தாலும், அதன் முதலாவது இதழ் ஆடி 1958 வெளியானது என்பதை 'நூலகம்' தளத்திலுள்ள ஆடி 1958 இதழிலிருந்து அறிய முடிகின்றது. 1966 வரை வெளியான சஞ்சிகை. அக்காலகட்டத்தில் அதன் 70 இதழ்கள் வெளிவந்துள்ளதாக எழுத்தாளர் அருண்மொழிவர்மன் கலைச்செல்வி பற்றிய 'புதிய சொல்' இதழில் வெளியான கட்டுரையில்  'ஈழத்தின் மிகமுக்கியமான இதழ்களில் ஒன்றாக கலைச்செல்வி 1958 முதல் 1966 வரையாக 8 ஆண்டு காலத்தில் கிட்டத்தட்ட 70 இதழ்கள் வரை வெளியானது' என்று குறிப்பிட்டிருப்பார்.  ஆனால் ஜூன் 2008 ஞானம் இதழில் வெளியான சிற்பியின் 'கலைச்செல்விக்காலம்'  கட்டுரையின் இறுதியில் கலைச்செல்வி  71 இதழ்கள் வெளியானதாகக் கட்டுரையாளர் சிற்பி கூறுவார்: "அவர் கையளித்த பிரதிகளுடன் என்னிடமிருந்த பிரதிகளையும் சேர்த்து, ஆண்டு - மாத வாரியாக ஒழுங்கு படுத்தினேன். அந்த எட்டு ஆண்டுகளில் 71 பிரதிகள் மட்டுமே வெளியாகியிருந்தன; அவற்றுள் இரண்டு பிரதிகள் தொலைந்தே விட்டன. " (ஞானம் ஜூன் 2009 பக்கம் 129)

இவற்றிலிருந்து கலைச்செல்வி சஞ்சிகையின் முதல் இதழ் ஆடி 1958இல் வெளியானதென்பதையும், மொத்தம் 71 இதழ்கள் வெளியானதென்பதையும் அத்துடன் சஞ்சிகை 1966 வரை வெளியானதென்பதையும் அறிய முடிகின்றது. எண்ணிம நூலகம் தளத்தில் கலைச்செல்வி சஞ்சிகையின் இறுதி இதழாக அக்டோபர் 1966 இதழ் பற்றிய விபரமேயுள்ளது. அதற்கான இணைப்பு வேலை செய்யவில்லை. இவ்விதழ் கலைச்செல்வியின் கடைசி இதழா என்பது தெரியவில்லை. ஏனென்றால் கலைச்செல்வி இதழானது தொடர்ச்சியாக மாதா மாதம் வெளிவந்திருக்கவில்லை. சில சமயங்களில் இரு மாதங்களுக்கு ஓர் இதழாகவும் வெளிவந்துள்ளதை நூலகம் தளத்திலுள்ள கலைச்செல்வி இதழ்களிலிருந்து அறிய முடிகின்றது. அருண்மொழிவர்மனின் கட்டுரையிலிருந்து சில மாதங்களில் அது வெளிவராமலுமிருந்திருக்கின்றது என்பதையும் அறிய முடிகின்றது.  டிசம்பர் 1966  வரை இதழ் வந்ததா அல்லது மேற்படி அக்டோபர் இதழே அதன் இறுதி இதழா என்பது நிர்ணயிக்கப்பட வேண்டியதொன்று. எது எபபடியிருந்தாலும் ஆடி 1958இல் வெளியாகத்தொடங்கிய கலைச்செல்வி 1966இன் இறுதிப்பகுதியில் தன் பயணத்தை நிறுத்துக்கொண்டது என்பது தீர்மானமாகத்தெரிகின்றது.

மேலும் படிக்க ...

தேவகாந்தனின் ‘காற்று மரங்களை அசைக்கின்றது’ தேடலைத் தூண்டும் ஒரு விமர்சன நூல்! (பகுதி ஒன்று) - ஈழக்கவி -

விவரங்கள்
- ஈழக்கவி -
ஆய்வு
05 நவம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

“படைப்பு மட்டுமல்ல, படைப்பாளியே இதில் விமர்சனமாவது விசேஷம். அவனது எழுத்தின் செல்நெறி மாற்றமும்,  பின்னால் உண்டாகும் பலமும் பலவீனங்களும்  இங்கே தெளிவாக முன்னெடுத்து வைக்கப்படுகின்றன. க.நா.சு.விலிருந்து ந.ரவீந்திரனூடாக பல விமர்சகர்களும்  இந்நிலையை எடுத்து விளங்கப்படுத்தியிருப்பினும்,  வாசகனை இணங்கச் செய்து தன்னுடன் அழைத்துச் செல்லும்  விந்தையை நூலாசிரியனின் இக்கட்டுரை செய்திருக்கிறது.”  காற்று மரங்களை அசைக்கின்றது; பக். 211

இணையவழி தேடலும் வாசித்தலும் ஒரு உயிர்ப்பான செயற்பாடாக அமைந்து விட்டது, எனக்கு. நிதானமான வாசிப்புக்கு இணையம் வழிசமைக்கின்றது; புதிது தேடலுக்கு வித்திடுகின்றது; அறிதலின் பரப்பை விஸ்தீரனமாக்குகின்றது. வானொலியில் எதிர்பாரத நேரத்தில் நம் மனசை தொடுகின்ற பாடல்களை கேட்க முடிவதைப்போல, இணையத்திலும் பல அரிய புதிய கருத்தியல்களை அறிய முடிகின்றது. அண்மையில் இணைய வழி உசாவலின் போது, 'யு டியூப்'பில் (www.youtube.com/watch?v=LHovj0cb_GY)   “ஆறு சிறுகதைகள் ஒரு பகுப்பாய்வு” என்ற என் புத்தகத்தின் தலைப்பினைக் கண்டேன். யாரோ இதே தலைப்பில் எழுதியிருக்கக்கூடும் என்ற நினைப்பில் அதனை பார்த்து கேட்டபோது வியப்பாக இருந்தது. என் நூலை பற்றிய உரை அது. உரையின்  ஆரம்பமே என் உணர்வுகளை உசுப்பிவிட்டது.

“சென்ற ஆண்டு இலங்கை சென்றிருந்தபோது ஜீவநதி அலுவலகத்தில் வாங்கிவந்திருந்த ஏ.எச்.எம்.நவாஷின் (ஈழக்கவி)  ‘ஆறு சிறுகதைகள்: ஒரு பகுப்பாய்வு’ என்கிற நூலை சமீபத்தில் வாசிக்க முடிந்திருந்தது. நூலையும் ஜீவநதியே வெளியிட்டிருக்கிறது. அதன் 54வது வெளியீடு அது. அடக்கமான அழகிய பதிப்பு.  ஆச்சரியமாக இருந்தது, இன்றைய காலகட்டத்து இலங்கைத் தமிழிலக்கியத்திற்குத் தேவையான விமர்சனக் கூறுகளையும் கண்ணோட்டத்தையும் நூல் தாங்கியிருந்தது காண. 2015இல் வெளிவந்த நூல் இன்றுவரை கவனம் ஆகியிருக்கவில்லையே என மனம் கனத்தது. ஜீவநதியைப் பாராட்டுகிற வேளையில் அதற்கான வருத்தத்தையும் கொஞ்சம் பட்டுக்கொள்ளவேண்டும்.

மேலும் படிக்க ...

14/40 கொண்டை ஊசி வளைவு - சுப்ரபாரதிமணியன் நாவல். மாயத்தைப் பின்வைத்து, .ஆசைகளை முன் வைத்து உள் மனநிலை வெளிப்பாட்டின் எண்ணத்தொகுப்பு! - மு.கவியரசன் , திருநெல்வேலி. -

விவரங்கள்
- மு.கவியரசன் , திருநெல்வேலி. -
நூல் அறிமுகம்
02 நவம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

நாவல்: 14/40 கொண்டை ஊசி வளைவு - சுப்ரபாரதிமணியன்
வெளியீடு - உயிர்மை பதிப்பகம்  |  விலை -ரூபா  135


மனிதன் என்பவன், என்னதான் அறிவாலும், ஆற்றலாலும், சிந்திக்கக்கூடிய செயல்திறன் படைத்தவனாக உயர்ந்து விளங்கினாலும், இவ்வுலகில் வாழும் மற்ற உயிர்களைப் போலத்தான் அவனும். இவற்றிற்குள் இருக்கக்கூடிய வேறுபாட்டை புரிந்துகொள்ளுதல் அவசியம். ஓர் உயிர் பிறக்கிறதென்றால் அதற்கென்று உரிய கடமைகள் இருக்கின்றது. முதலில் ஆரோக்கியமான வாழ்வு சூழலை ஏற்படுத்திக்கொண்டு, தன் இனத்தை, தலைமுறையை அடுத்தக்கட்ட நகர்விற்கு எடுத்துச்செல்ல வேண்டும். இதுதான் எல்லா உயிர்க்கும் பொதுவான, முக்கியமான கடமை. மனிதனும் இதற்கு விதிவிலக்கல்ல. இதன்பின் தான் மனிதனுக்கான அறிவு, நாகரீகம், மற்ற பிற எல்லாம். ஆனால் மனிதன் தன்னுடைய எண்ணவோட்டங்களுக்கு ஏற்ற, சூழ்நிலைக்கும் ஏற்றவாறு நிலையான மனநிலைப்பாட்டோடு இருப்பது கடினம். நடைமுறை வாழ்க்கைக்கும், இப்படித்தான் வாழவேண்டும் என்று யூகித்து எழுதிய வாழ்க்கைக்கும், நிலைத்தன்மை என்பது உறுதியானதாக இருப்பது அரிதானது. இதற்குள் எப்போதும் ஓர் அலை என்பது இருந்துகொண்டே இருக்கும். அவ்வலையைத்தான்  சுப்ரபாரதிமணியனின் 14/40 கொண்டை ஊசி வளைவு எனும் நாவலில் இடம்பெறும் பாத்திரங்களின் வழியாக விவரிக்கிறது.

மேலும் படிக்க ...

நீடித்த இயற்கை சூழல் என்பது கனவா? - சுப்ரபாரதிமணியன் -

விவரங்கள்
- சுப்ரபாரதிமணியன் -
சுப்ரபாரதிமணியன் பக்கம்
02 நவம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

நீடித்த இயற்கை சூழல் என்பது பூஜ்ஜியம் கழிவு மேலாண்மையில் மட்டுமே சாத்தியப்படும் .

திருப்பூர் பின்னலாடை துறை சார்ந்த இரண்டு நிறுவனங்கள் 2020 பிப்ரவரியில் ஒரு சாதனையை நிகழ்த்தி இருக்கிறார்கள். பின்னலாடை துறையில் வெளியேறும் சாயக்கழிவுகள் பற்றிய விமர்சனங்கள் எப்போதும் உண்டு .ஆனால் அவர்கள் அந்த கழிவுகளை சார்ந்து பல்வேறு ஆய்வுகளை தொடர்ந்து நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.  இப்போது நாம் பயன்படுத்திய பழைய போத்தல்களை பயன்படுத்தி சட்டை தயாரிக்கும் பணியில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். நாம் வீசி எறியும் தண்ணீர் போத்தல்கள் பேருந்து நிலையங்களில் குவிந்து கிடக்கும் அவற்றின் மலைத் தன்மை போன்றவை நம்மை எப்போதும் பயமுறுத்தும். அந்த தண்ணீர் போத்தல்களை எடுத்து அதிலிருந்து பைபர் நூலை பிரித்து பின்னலாடை துறையில் பயன்படுத்த இரண்டு நிறுவனங்கள் வெற்றி கண்டிருக்கிறார்கள் .ஒன்று சுலோச்சனா நிட் என்ற ஒரு நிறுவனம். இன்னொன்று சிண்டிகேட் இம்பெக்ஸ். இவர்கள் இருவரும் வெளிநாட்டு தொழில் நுட்பத்தை முன்வைத்து குஜராத்தில் நிகழ்த்தப்பட்ட ஆய்வுகளில் அடிப்படையில் தண்ணீர் போத்தல்களில் இருந்து பைபர் நூலை பிரித்தெடுக்கும் முயற்சியில் வெற்றி பெற்று பின்னர் ஆடைகளை உற்பத்தி செய்திருக்கிறார்கள் .அது ஆஸ்திரேலியாவின் உலக ஓபன் டென்னிஸ் போட்டிகளின் போது பயன்படுத்தப்பட உள்ளது .இந்தப் போட்டியின் போது பந்துகளை சேகரிக்கும் தரும் சிறு பையன்கள் பயன்படுத்துகிற பின்னலாடை  ஆகியுள்ளன.  இந்த தண்ணீர் போத்தல்கள் டீசர்ட்டுகளாக  மாறியுள்ளன .உலகத்தில் முதல் முயற்சி இது .அந்த டீ சர்டுக்களை அடிக்கடி துவைக்க வேண்டியது இல்லை .

மேலும் படிக்க ...

தொடர் : தீவுக்கு ஒரு பயணம் (2) - கடல்புத்திரன் -

விவரங்கள்
- கடல்புத்திரன் -
நாவல்
01 நவம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

"(கோல்) கால் " துறைமுகம்  ( யூனெஸ்கோவினால் அமெரிக்காவின்  ஏழு அதிசயங்கள் ஒன்று என பதியப்பட்டிருக்கிறது   )

 வீட்டை அடைந்த பிறகு , தில்லை  மறுபடியும் தேனீர் அருந்தினான் . ஜெயந்திக்கும்  , பூமலருக்கும்  ரிம் கொட்டனே   போதுமாகவிருந்தது .

      வீட்டிலே , பூமலர் செய்திருந்த ' கோழிக்கறி ' பழைய நினைவு ஒன்றைக் கிளறி விட்டது . ஜெயந்தியும் " நல்லாயிருக்கிறதே " என்று ரெசிபியைக் கேட்டாள் . தில்லை  " இப்படி உருளைக் கிழங்கு கறியையும் வைத்தால் ...தூக்கலாக இருக்கும் " என்றான் . "  இதுக்கு எப்பவும் சாப்பாட்டு நினைப்பு தான் " என்று ஜெயந்தி சொல்ல பூமலர் சிரித்தாள் . யாழ்ப்பாணத்து பிளவுஸ் , மொக்கங் கடைகளில் ரோஸ்ட் கறிகளில்  இந்த உப்பும் , உறைப்பும் அப்படியே இருந்தது . " முதல் நாள் மெரினேற் பண்ணி குளிர்ப்பெட்டியில் வைத்து காலையில் எடுத்து சமைக்க வேண்டும்  .  இங்கே என் சினேகிதி ஜீவி நல்லா சமைப்பார் . அவர் தான் சொல்லித் தந்தார் .  இப்படி  வைத்தால் சித்திராவும் , சுமியும் உடனேயே முடித்து விடுவார்கள் . திரேசாவின் பிள்ளைகளுக்கும் பிடிக்கும் " என்றாள் .

     சிறிது நேரம்  இளைப்பாறிய பிறகு ,  " களைப்பு இல்லை என்றால் பக்கத்தில் இருக்கிற ஒன்றை பார்த்து வரலாமே  ".   என்றாள்  பூமலர் . " இரண்டு மணி நேரம் ஓடி கலைத்திருப்பாய் , நான் ஓடுகிறேன் " என்று தில்லை கூற    (கார் ஓட்டம் ) பூமலர்  தில்லையிடம்  .   சாவியைக்  கொடுத்து கராஜ் கதவைத் திறந்து விட்டாள் . குறுக்கலான நிலைகளைத் தட்டிக் கொள்ளாமல்  , ஒரு கட்டத்தில்  பக்கக் கண்ணாடி ஒன்றை மடித்து விட்டே பிரயாசைப்பட்டு வெளியில் எடுத்தான் .  " இந்த கண்ணாடியை மடிக்கலாம் என்று எனக்கு தெரியாதே  " ....என்று வியக்கிறாள் . அரும்பொட்டு இடைவெளியில் கராஜ் கதவுகளை ஏன் அமைக்கிறார்கள்  .  பழைய கார்கள் தற்போதைய காரை விட அகலத்தில் குறந்தவையா இருக்க வேண்டும் . அப்ப இருந்த  கட்டட விதியை  ( பில்டிங் கோட்) மாற்றாமல் விட்டு விட்டார்கள் போல இருக்கிறது . இப்படியும் ஒரு ரோதனை . .  வழி காட்ட செலுத்துகிறான் .

மேலும் படிக்க ...

கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையம் - எழுத்தாளர் அரங்கம் 3

விவரங்கள்
- தகவல் - பேராசிரியர் இ.பாலசுந்தரம் -
நிகழ்வுகள்
01 நவம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இலக்கியப்பூக்கள் இதழ் 267 - முல்லைஅமுதன் -

விவரங்கள்
- முல்லைஅமுதன் -
நிகழ்வுகள்
31 அக்டோபர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

வணக்கம், இவ்வாரம் வெள்ளிக்கிழமை (04/11/2022) லண்டன் நேரம் இரவு 08.15இற்கு(இரவு 8.00 மணி பிரதான செய்திக்குப்பிறகு) அனைத்துலக உயிரோடைத்தமிழ் மக்கள்வானொலியில் (www.ilctamilradio.com) இலக்கியப்பூக்கள் இதழ் 267 ஒலிபரப்பாகும்.

நிகழ்வில்,

         கவிஞர்.பழ மோகன்(சிங்கப்பூர்) (கவிதை: பெருங்கடல் நட்பில் கலக்க...நன்றி:அய்யப்ப மாதவன்(தமிழகம்),
         எழுத்தாளர்/முனைவர்.முபீன் சாதிகா(குறுங்கதை:புத்தகம்),
         கவிஞர்.பிரேம பிரபா)சென்னை) (கவிதை:ஒற்றைப் புன்னகை),
         எழுத்தாளர்.ஜெயா சுந்தா (குறுங்கதை:தோல்வி..),
         எழுத்தாளர்.'பாடுமீன்'சிறீஸ்கந்தராஜா(அவுஸ்திரேலியா) (இலக்கியம்: குறளின்பம்),
         கவிஞர்.பழநி பாரதி (கவிதை:வீட்டுக்காரம்மாள் சாமிக்கு...),
         கவிஞர்.பா.திருச்செந்தாழை (கவிதை:ஒரு பாறையின்  மீது வெய்யில் விழுந்து...),
         கவிஞர்.இரா.மதிராஜ்(தமிழகம்) (கவிதை:அறச்சாலை..),
         கவிஞர்.அகமது பைசால் (இலங்கை) (கவிதை:புது இடம்..),
         கவிஞர்.காசி ஆனந்தன் (குறுங்கதை:இரவு...),

ஆகியோரின் படைப்புக்கள் இணைகப்பட்டுள்ளன.

மேலும் படிக்க ...

ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் நடத்தும் இணைய வழிக் கலந்துரையாடல்: நூல்களைப் பேசுவோம் தொடர்: “ஒல்லாந்த தளபதி சுவார்தகுரூனின் யாழ்ப்பாண நினைவுத்திரட்டு”

விவரங்கள்
ரொறன்ரோ தமிழ்ச் சங்கம்
நிகழ்வுகள்
31 அக்டோபர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மேலும் படிக்க ...

சிந்தனைக் களம்: நாட்டிய நாடக வடிவமைப்பு (Choreographic techniques of Dance Drama)

விவரங்கள்
- தகவல்: பேராசிரியர் நா.சுப்பிரமணியன் -
நிகழ்வுகள்
31 அக்டோபர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மேலும் படிக்க ...

படித்தோம் சொல்கின்றோம்: நாட்டியக் கலாநிதி கார்த்திகா கணேசரின் இந்து மதத்தின் பரிணாமச் சிந்தனைகள் - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
31 அக்டோபர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

நாட்டியக் கலாநிதி  கார்த்திகா கணேசர், நாட்டியம் மாத்திரம் ஆடவில்லை. அதற்கும் அப்பால் சென்று பல கலைஞர்களை உருவாக்கிய ஆளுமை.  கார்த்திகா   ஏனைய  நடன  நர்த்தகிகளிடமிருந்து  வேறுபட்டிருப்பதற்கு  அவரிடமிருக்கும்  ஆற்றலும்,  தேடலும் மாத்திரம்  காரணம்  அல்ல.   நாட்டியக்கலை தொடர்பாக  அவர் நீண்டகாலம் ஆய்வுசெய்து  நூல்களும் எழுதியிருக்கும் எழுத்தாளரும் ஆவார்.   நடன நர்த்தகியாக  மாத்திரமன்றி  தமது ஆய்வின்  வெளிப்பாடாக  நாட்டியக் கலாநிதியாகவும்  மிளிர்ந்தவர்.  இதுவரையில் தமிழர் வளர்த்த ஆடற்கலைகள், காலம் தோறும்  நாட்டியக்கலை,  இந்திய  நாட்டியத்தின்  திராவிட  மரபு, நாட்டியக்கடலில் புதிய  அலைகள் முதலான நூல்களை வரவாக்கியிருப்பவர.  இந்த ஆண்டு  தனது பவளவிழாக்காலத்தில் மற்றும் ஒரு நூலை அவர் வரவாக்கியிருக்கிறார்.  நூலின் பெயர் இந்து மதத்தின் பரிணாமச் சிந்தனைகள்.   

இந்த நூல் என்னிடம் வந்து சேர்ந்தபோது, இதனை எவ்வாறு உள்வாங்கப் போகின்றேன் என்ற தயக்கமும் முதலில் வந்தது. சமகாலத்தில் இந்த பொன்னியின் செல்வன் திரைக்கு  வந்து நடக்கின்ற அலைப்பறைகளுக்கு மத்தியில், இந்த நூல் எனது வசம் வந்து சேர்ந்தது. இந்தியா சுதந்திரமடைவதற்கு முன்னர், அங்கே சைவம், வைணவம், சமணம் ஆகிய மதங்கள்தான் இருந்தன.  இந்தியாவை பல வருடகாலம் தங்களது ஆளுகைக்குள் வைத்திருந்த ஆங்கிலேயர்கள், சுதந்திரத்தையும் தந்துவிட்டு, மூன்று மதங்களையும் ஒரே குடைக்குள் வைத்து இந்து மதம் என்ற பொதுப்பெயரை வைத்துவிட்டு,  மகாராணியின் மகுடத்தில் பதிப்பதற்காக கோகினூர் வைரத்தையும் எடுத்துச்சென்றுவிட்டார்கள்.  மகாராணி மறைந்தபின்னர்தான் அந்தக்கிரீடத்தில் இருப்பவை எங்கெங்கிருந்து சென்றன என்பதும் தெரியவந்துள்ளது. கார்த்திகா கணேசரின் இந்த நூல் பற்றி பேசுவதற்கு முன்னர் ஒரு குட்டிக்கதையை சொல்லிவிடுகின்றேன்.  கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கள். சொன்னபிறகும் கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கள். ஒரு குழந்தை தனது அம்மாவிடம் கேட்கிறது.    அம்மா,  நான் இந்த உலகத்திற்கு எப்படி வந்தேன்...? 

மேலும் படிக்க ...

மற்ற கட்டுரைகள் ...

  1. விருதுகளும் , தமிழ் எழுத்தாளர்களும்! - வ.ந.கிரிதரன் -
  2. கவிதை: வித்தைக்காரனின் பின்னால் இருப்பவன் - துவாரகன் (சு.குணேஸ்வரன் ) -
  3. புத்தக கண்காட்சி, நூல் வெளியீடுகள், உரைகள் …. முழு நாள் நிகழ்வு - தகவல்- எம்.பெளசர் -
  4. மலையகத் தலைவர்களை மறுபரிசீலனை செய்யத் தூண்டும் “மலையக அரசியல் தலைவர்களும் தளபதிகளும் எனும் சி.வி.வேலுப்பிள்ளையின் நூல். - சு.முரளிதரன் -
  5. எழுத்தாளர் செ.சுதர்சனின் 'காலிமுகம் 22' கவிதைத்தொகுப்பு!
  6. மெல்பனில் இலக்கிய சந்திப்பு - கனடா ஶ்ரீரஞ்சனியின் 'ஒன்றே வேறே' புதிய கதைத்தொகுதி வெளியீடு! - தகவல் - முருகபூபதி -
  7. தொடர் நாவல் - நவீன விக்கிரமாதித்தன் (8) - காலக்கப்பற் பயணமும் 'எதிர்காலச்சித்தன் பாடல்' கவிதையும்! - வ.ந.கிரிதரன் -
  8. கவிஞர் விக்கிரமாதித்யன் பற்றியொரு குறிப்பு! - ஊர்க்குருவி -
  9. நினைவு கூர்வோம்: கவிஞர் திருமாவளவன் & கலை, இலக்கிய விமர்சகர் வெங்கட் சாமிநாதன் - வ.ந.கிரிதரன் -
  10. தொடர்கதை: நவீன விக்கிரமாதித்தன் (7) - அத்தியாயம் ஏழு - ஓரு பழைய புத்தகக்கடை அனுபவமும், எழுத்தாளர் முத்துசிவத்துடனான சந்திப்பும்! - வ.ந.கிரிதரன் -
  11. மாநிலத்தில் தீபாவளி வாய்த்திருக்கு எமக்கு ! - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர், மெல்பேண், அவுஸ்திரேலியா -
  12. தொடர்கதை: தீவுக்கு ஒரு பயணம்! (1) - கடல்புத்திரன் -
  13. ஆய்வு: ஆண்டாள் பாசுரங்களில் அழகியல்நடை - முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, தியாகராசர் கல்லூரி, மதுரை.
  14. அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் வருடாந்த தமிழ் எழுத்தாளர் விழா! - முருகபூபதி -
பக்கம் 73 / 115
  • முதல்
  • முந்தைய
  • 68
  • 69
  • 70
  • 71
  • 72
  • 73
  • 74
  • 75
  • 76
  • 77
  • அடுத்த
  • கடைசி