பதிவுகள் முகப்பு

மறு யுகம் வெளியீடான 'வாழ்வின் பின் நோக்கிய பயணமிது' பற்றிய குறிப்புகள்.. - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
15 நவம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 மறு யுகம் பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ள 'வாழ்வின் பின் நோக்கிய பயணமிது' நூலை வாசித்தேன். இந்நூல் எனக்குக் கிடைப்பதற்கு வழி செய்த நண்பரும், சமூக, அரசியற் செயற்பாட்டாளருமான எல்லாளனுக்கு நன்றி. சிவகாமி, யாழினி என்னும் இரண்டு முன்னாட் பெண் போராளிகளின் போராட்ட அனுபவங்களைக் கூறும் நூல். சிவகாமியின் போராட்ட அனுபவங்கள் படர்க்கையில் விபரிக்கப்பட்டுள்ளன. இவரது அனுபவங்களே 48 பக்கங்களைக் கொண்ட இச்சிறு நூலின் பிரதான பகுதியாக அமைகின்றது.

பல்வேறு இயக்கங்களைச் சார்ந்தவர்களாலும் அவரவர் சார்ந்த அமைப்புகளைப்பற்றிய விமர்சனங்கள் எழுந்துள்ளன. சமூக, அரசியல் மற்றும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களால் அமைப்புகளைப்பற்றிய , இலங்கையின் அரசுகளைப்பற்றிய விமர்சனங்கள் எழுதப்பட்டுள்ளன. 2009 ற்கு அடுத்த காலகட்டத்தில் முன்னாட் பெண் போராளியான விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த தமிழினியின் 'ஒரு கூர்வாளின் நிழலில்' என்னும் சுய விமர்சனத்தை உள்ளடக்கிய சுய சரிதை நூல் எழுதப்பட்டு வெளியானது. இவ்விதமானதொரு சூழலில் தற்போது இன்னுமொரு சிவகாமியினால் இன்னுமொரு விமர்சன நூல் எழுதப்பட்டு வெளியாகியுள்ளது முக்கிய கவனத்தைப்பெறுகின்றது. இந்நூல் அவர் சார்ந்திருந்த அமைப்பு மீதான விமர்சனத்தை, இயக்கங்களுக்கு இடையிலான உள் முரண்பாடுகள் காரணமாக அவரை இரு தடவைகள் கைது செய்து இருபாலைத் தடுப்பு முகாமில் வைத்திருந்த விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான விமர்சனத்தை முன் வைக்கின்றது. நூலின் அளவு சிறியதானாலும், கடுகு சிறுதானாலும் காரம் பெரிது என்பதற்கேற்ப நூல் அமைந்துள்ளது.

பெண் போராளியின் குடும்பச் சூழல், நாட்டில் நிலவிய அரசியற் சூழல் இவற்றின் காரணமாகச் சிவகாமி தமிழீழ விடுதலை இயக்கத்தில் இணைந்து கொள்கின்றார். மேலதிகப் பயிற்சிக்காகத் தமிழகம் செல்கின்றார். அப்போது நிகழ்ந்த மனோ மாஸ்டரின் படுகொலையை அடுத்து பெண் போராளிகளில் சோதியா போன்ற சிலர் சிலர் விடுதலைப்புலிகள் அமைப்பில் சேர்ந்து கொள்கின்றனர். ஏனையோர் இலங்கை திரும்புகின்றனர். இவ்விதம் ஏனைய பெண் போராளிகள் அமைப்பினர் பத்திரமாக நாடு திரும்பும் வரையில் அவர்களுக்குப் பாதுகாப்பாக ஆண் போராளிகளொருவராக விளங்கிய எல்லாளன் (ரஞ்சித்), மனோ மாஸ்ட்டரின் சகோதரன் ராஜன் மற்றும் ஏனைய போராளிகள் சிலர்  இருந்ததையும் நூல் பதிவு செய்கின்றது. உண்மையில் இந்நூல் வெளிவருவதற்கு முக்கிய காரணங்களிலொன்றாக எல்லாளன் எழுதிய அவரது நினைவுக் குறிப்புகள் இருந்துள்ளதையும், அதன் காரணமாகவே மெளனமாகப் பல்வேறு நாடுகளில் வாழ்ந்து கொண்டிருந்த 'டெலோ' அமைப்பின் முன்னாட் போராளிகளுக்கிடையில் மீண்டும் தொடர்புகள் ஏற்பட்டதையும், நூலுக்கான எல்லாளனின் 'ஞாபகக் குறிப்'பிலிருந்து அறிந்துகொள்ள முடிகின்றது.

மேலும் படிக்க ...

கோவை குமரகுரு கல்வி நிறுவனத்தின் குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறையில் முனைவர் பட்டம் மேற்கொள்ள விரும்பும் மாணவர்கள் கவனத்துக்கு.. - தகவல்: முனைவர் கோ.சுனில்ஜோகி -

விவரங்கள்
- தகவல்: முனைவர் கோ.சுனில்ஜோகி -
நிகழ்வுகள்
15 நவம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 பெருமதிப்பிற்குரியீர் வணக்கம். கோவை குமரகுரு கல்வி நிறுவனத்தின் அங்கமாக விளங்கும் குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறையில் முனைவர் பட்டம் மேற்கொள்ள விரும்பும் மாணவர்கள் வரவேற்கப்படுகின்றனர்.

தமிழியல் சார்ந்த உயராய்வு மற்றும் பன்னாட்டளவிலான தமிழ் ஆய்வு மையங்களை ஒருங்கிணைக்கும் அமைப்பாக திகழ்ந்துவரும் நா.மகாலிங்கம் தமிழாய்வு மையத்துடன் கல்லூரியின் தமிழ்த்துறையும் இணைந்து செயலாற்றுவது பெருமைக்குரிய ஒன்றாகும்.

கோவை குமரகுரு கல்வி நிறுவன வளாகத்துள் அமைந்துள்ள இந்தத் தமிழ் உயராய்வு மையம் ஏறத்தாழ ஒரு இலட்சம் நூல்கள் அடங்கிய, ஆய்வு நோக்கில் வகைமைப்படுத்தப்பட்ட ஆய்வு நூலகத்தையும் தன்னகத்துள் கொண்டுள்ளது குறிப்பிடத்தகுந்ததாகும். இது தமிழாய்வினை மேற்கொள்ளும் ஆய்வாளர்களுக்குப் பெரிதும் துணைநல்கும் என்பதில் ஐயமில்லை. மேலும், இம்மையத்தில் ஆய்வு மேற்கொள்ளவிருக்கும் தகுதியுடைய ஆய்வு மாணவர்களுக்கு (முழுநேரம்) ஊக்கத்தொகையும் தரத் திட்டமிடப்பட்டுள்ளது.

சிறந்த, நவீன கட்டமைப்புடனும் ஆய்வு மேற்கொள்வதற்குரிய அனைத்துவிதமான வசதி வாய்ப்புகளுடனும் இம்மையம் அமைந்துள்ளது. எனவே தாங்கள் அறிந்தவரையில், தமிழாய்வில் ஆர்வங்கொண்ட, முனைவர் பட்டம் மேற்கொள்ள விரும்பும் சிறந்த ஆய்வாளர்கள் இருந்தால் அவர்களுக்கு நம் மையத்தையும், துறையினையும் அறிமுகம் செய்து வைக்கும்படியும், வழிகாட்டும் படியும் கேட்டுக்கொள்கிறோம். தமிழாய்விற்குத் துணைநல்கும் இத்தகவலைத் தங்களுக்குப் பகிர்வதில் பெரிதும் மகிழ்கிறோம்.

மேலும் படிக்க ...

விதை குழுமத்தின் அறிதலும் பகிர்தலும் 09 - தேசியவாதம் பற்றிய கோட்பாடுகள் நிகழ்வுக்கான அழைப்பு!

விவரங்கள்
- விதை குழுமம் -
நிகழ்வுகள்
13 நவம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

விதை குழுமத்தின் தோழமைகளுக்கு வணக்கம், இனக்குழும மோதல்கள் பற்றி ஆய்வு செய்யும் துறைசார் அறிஞர்கள் இனக்குழும பன்மைத்துவம் [ETHNIC DIVERSITY] காணப்படும் பகுதிகளில், இலகுவில் விளங்கிக்கொள்ள முடியாத புதிர் [PUZZLE] தன்மையுடைய அனுபவ யதார்த்தத்தைக் கண்டனர். சில பிராந்தியங்கள் [REGIONS], தேசங்கள் [NATIONS], சில நகரங்கள், சில கிராமங்கள் ஆகிய பகுதிகளில் ஒரு கால எல்லைக்கு முன் இனக்குழுக்களிடையே அமைதி பேணப்பட்டு வந்ததையும், வாழ்க்கை அமைதியாக ஓடிக்கொண்டிருந்ததையும் அவதானித்தனர். இப்பகுதிகளில் பின்னர் இடைவிடாது நம்பவே முடியாத வகையில் வியப்பையும் அதிர்ச்சியையும் தரும் வகையிலான இன வன்முறை, சூறைக் காற்று போல் வீசியடித்து கோர தாண்டவம் ஆடிவிட்டுப் போவதையும் கண்டனர். இதனை இனத்துவமும் தேசியவாதமும் [ETHNICITY AND NATIONALISM] பற்றிய தீர்வுகாணப்படாத புதிர் [UNRESOLVED PUZZLE] என்று குறிப்பிடுவதோடு 'காலமும் இடமும் [TIME AND SPACE] சார்ந்த வேறுபாடுகளை புரிந்து கொள்வது எப்படி?' என்னும் வினாவை வார்ஷ்னே [VARSNEY] என்ற ஆய்வாளர் தமது நூல் ஒன்றில் முன்வைக்கிறார். [பேராசிரியர் உயன்கொடவின் 2010 இல் வெளியான நூலின் பக்-22 இல் தரப்பட்ட மேற்கோள்].

மேலே குறிப்பிட்டது போன்ற விடுவிக்கமுடியாத புதிர்கள் பல உள்ளன. இப்புதிர்களை விடுவிப்பதற்குத் தேசியவாதம் பற்றிய கோட்பாடுகள் [THEORIES OF NATIONALISM] உதவ முடியுமா? என்ற வினாவை முன்வைத்து 'அறிதலும் பகிர்தலும்' அரங்கில் 9 ஆவது உரையாடல் நிகழ்வு இடம்பெற உள்ளது. ஆதிமுதல்வாதம் [PRIMORDIALISM], நவீனத்துவ வாதம் [MORDENISM], இனக்குழும குறியீட்டுவாதம் [ETHNO-SYMBOLISM], கருவிவாதம் [INSTRUMENTALISM] போன்ற தேசியவாதம் பற்றிய கோட்பாடுகள் பற்றிய விளக்கங்களையும் எரிக் ஹொப்ஸ்பாம், பெனடிக்ட் அன்டர்சன், அந்தனி டி.சிமித் போன்ற கோட்பாட்டாளர்களின் கருத்துக்களையும் முன்வைத்து சமூக விஞ்ஞான ஆய்வறிஞர் கந்தையா சண்முகலிங்கம் இவ்வுரையாடலை நிகழ்த்துவார். நிகழ்ச்சியை ஒருங்கிணைக்க இருப்பவர் திரு. சத்தியதேவன்.

மேலும் படிக்க ...

(பயணக் கட்டுரைகள்) என் கொடைகானல் மனிதர்கள் (2): அட்டுவம்பட்டி - பிளம்ஸ் மரம் - ஜோதிகுமார் -

விவரங்கள்
- ஜோதிகுமார் -
ஜோதிகுமார்
12 நவம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- இலங்கையிலிருந்து வெளிவந்த 'நந்தலாலா' , 'தீர்த்தக்கரை' ஆகிய சஞ்சிகைகளின் ஆசிரியர்களில் ஒருவரும் சட்டத்தரணியுமான திரு. ஜோதிகுமார் தனது பயணங்களில் சந்தித்த மனிதர்கள் பற்றிய கட்டுரைத்தொடர் 'என் கொடைகானல் மனிதர்கள்!  - பதிவுகள்.காம் -


 அட்டுவம்பட்டி - பிளம்ஸ் மரம்

பள்ளங்கி போகும் வழியில், சப்த கன்னிமாரை பார்த்து, அவர்கள் பொருத்து கேட்டுவிட்டு போகும் நோக்கில், அந்த ஸ்டாப்பில் இறங்கி, அருகில் இருந்த தேனீர் கடைக்குள் நுழைந்தேன். காப்பியை குடித்து முடித்து, மாதிடம் கேட்டேன், கன்னிமார் கோயில் பொருத்து. ஏதேதோ தரவுகளை தர முயற்சித்துவிட்டு, “ஆனா இன்னும் தெரிஞ்சிக்கிறதுன்னா ரெண்டு வீடு தள்ளி இருக்கிற பச்ச வீட்டுல கேளுங்க… அவுக அந்த பூசாரிக்கு சொந்தகாரவுக – சம்பந்தம் இருக்கு…” என்று தணிந்த குரலில் ரகசியமாய் சொன்னாள்… அவள்.

“ஓ கன்னிமாரூ கோயிலா… குமாருன்னு ஒரு பூசாரி இருக்காரு… வில்லேஜ்ஜில கேளுங்க… சொல்லுவாங்க…” என்று அங்கு கூறப்பட்டது.

அட்டுவம்பட்டி என்பது (அப்போது) – அதாவது ஒரு ஏழு எட்டு வருடங்களுக்கு முன்பு – ஒரு முப்பது நாற்பது வீடுகளை ஒன்று சேர்த்து ஒருபிடி பிடித்து வைத்தது போன்ற ஒரு தொகுதி. ஒடுங்கிய, அந்த பஸ் செல்லும் பாதையின் இரு மருங்கிலும், நெருக்கி நெருக்கி நிற்கும் வீடுகள். அனைத்துமே சிமென்டால் கட்டப்பட்டவை. அதாவது குடிசைகள் இல்லை – இதைத்தான் ஒரு விலேஜ் – கிராமம் என்று இப்பகுதியில் வர்ணிக்கின்றார்கள். இங்கு மாடுகளையும் காணமுடிவதில்லை… இரண்டொன்று தோட்டங்களில் தலையை குனிந்து அப்புறம் இப்புறம் பார்க்காமல் மேய்ந்து கொண்டிருப்பதுடன் சரி…

இது ஒரு மலைப்பகுதி… இரு புறமும் மலைத்தொடர்களின் சரிவுகள்… அச்சரிவுகள் சந்திக்ககூடிய பள்ளத்தாக்குகள் அல்லது படுக்கைகள் – இவற்றில்தான் இந்த குடியிருப்புகள் – வாகன பாதை அனைத்துமே அமைந்து கிடந்தன. பாதையை ஒட்டி இருந்த அந்த குட்டையான சிமென்ட் கட்டடத்திற்குள் இரண்டொரு நடுத்தர வயது பெண்கள் அமர்ந்து சாவதானமாக பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கருகே ஒருத்தி சிறு சாப்பாட்டு கூடையுடன் நின்றவாறு பேசிக்கொண்டிருந்தாள். வினவினேன்.

மேலும் படிக்க ...

கவிதை: நான் பெண் என்பதால், நான் படிக்க வேண்டும்! - மூலம்: கமலா பாசின் | தமிழில்: முனைவர் பாரதி ஹரிசங்கர்

விவரங்கள்
- மூலம்: கமலா பாசின் | தமிழில்: முனைவர் பாரதி ஹரிசங்கர் -
கவிதை
11 நவம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- அமரர் கமலா பாசின் (Kamla Bhasin, 24 ஏப்ரல் 1946 – 25 செப்டம்பர் 2021) இந்தியாவின் முக்கிய ஆளுமைகளிலொருவர். பெண்ணியவாதி, கவிஞர், எழுத்தாளர், சமூக அறிவியலாளர் எனப் பன்முக ஆளுமைகள் மிக்கவராக விளங்கியவர். பாலினம், கல்வி, மனித வளர்ச்சி, ஊடகங்கள் பற்றிய துறைகளில் கவனத்தைச் செலுத்தியவர். சங்கத் என்ற தெற்காசியப் பெண்ணிய வலை அமைப்பை நிறுவியவர். பெண்ணியம் என்பது மேலைத்தேசக் கோட்பாடு என்பதை நிராகரித்தவர் கமலா பாசின். இந்தியப் பெண்ணியமானது தனது போராட்டங்களாலும், இன்னல்களாலும் உருவானதென்று கருதியவர். பெண்ணியம் ஆண்களுக்கும் பெண்களுக்குமிடையிலான யுத்தம் அல்ல என்பது இவரது எண்ணம். பெண்ணியமானது ஆணை உயர்த்தி அவனுக்கு அதிகாரம் கொடுக்கும் கருதுகோளுக்கும், சம உரிமையை வலியுறுத்தும் கருதுகோளுக்குமிடையிலான , இரு கருதுகோள்களுக்குமிடையிலான போராட்டமே பெண்ணியம் என்றிவர் கருதினார். - பதிவுகள்.காம் -


படிப்பா, நீ ஏன் படிக்க வேண்டும்?
தந்தை மகளிடம் கேட்டார்.
என் மகன்கள் பலர் படிப்பார்கள்.
பெண்ணே! நீ ஏன் படிக்க வேண்டும்?

நான் ஏன் படிக்க வேண்டும்?
நீங்கள் கேட்பதால் பதிலளிக்கின்றேன்.
நான் பெண் என்பதால், நான் படிக்க வேண்டும்.

பல நாள் மறுக்கப்பட்ட உரிமையென்பதால், நான் படிக்க வேண்டும்.
என் கனவுகள் சிறகடிக்க, நான் படிக்க வேண்டும்.
அறிவு புதிய வெளிச்சம் பாய்ச்சுமென்பதால், நான் படிக்க வேண்டும்.
போர்கள் பல புரிய வேண்டுமென்பதால், நான் படிக்க வேண்டும்.
நான் பெண் என்பதால், நான் படிக்க வேண்டும்.

மேலும் படிக்க ...

முகநூற் குறிப்புகள்: கவிதை - வாழிய சென்னை! - வ.ஐ.ச.ஜெயபாலன் -

விவரங்கள்
- வ.ஐ.ச.ஜெயபாலன் -
முகநூல் குறிப்புகள்
11 நவம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்
- கவிஞர் வ.ஐ.ச. ஜெயபாலன் தனது முகநூற் பதிவாக 'வாழிய சென்னை' என்னுமொரு கவிதையினைப் பதிவு செய்துள்ளார். சிறப்பான கவிதை. தற்போதைய கொரோனாக் கால ஊரடங்கால் முடங்கிக்கிடக்கும் சென்னையில் வாழும் கவிஞரின் உணர்வுகளின் வெளிப்பாடு. அண்மைக்காலக் கவிதைகளில் மீண்டும் மீண்டும் என்னை வாசிக்கத்தூண்டிய கவிதை. ஜெயபாலனின் கவிதை மொழி என்னை மிகவும் கவர்ந்த மொழி. கவிதையை முழுமையாகக் கீழே தந்துள்ளேன்.. வாசித்துப் பாருங்கள். - வ.ந.கி -
 
வாழிய சென்னை!
 
- வ.ஐ.ச.ஜெயபாலன் -
 
மீண்டும் ஊரடங்கு.
கொலம்பசுகள் கிராமங்களைத் தேடி
கப்பற் பாய்களை விரித்தனர்.
ஏனையோர் கான்கிரீட் பொந்துகளுள்.
கொரோனாவையும் காவலரையும் தவிர
வீதிகளில் யாருமில்லை என்கிறார்கள்.
மாலைக் கருக்கலில் நிழற்சாலைகளூடு
பெசன்ற்நகரை சுற்றுகிற நான்கூட
மொட்டைமாடியில் எட்டுப் போட்டபடி.
ஜப்பான் குண்டுவீச்சில்கூட
சென்னை இப்படி முடங்கியதில்லையே.
மேலும் படிக்க ...

தொடர்நாவல் : கலிங்கு (2009 - 8) - தேவகாந்தன் -

விவரங்கள்
- தேவகாந்தன் -
தேவகாந்தன் பக்கம்
10 நவம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 

2009 -8

ராணுவம் அடுத்த முன்னகர்வுக்கு வழக்கமாக எடுக்கும் ஓய்வை அந்தமுறை எடுக்கவில்லைப்போல் தெரிந்தது. எரி குண்டுகளும், ஷெல்களும் விழுந்து சிதறின. அங்கே நிறையப் போராளிகளும் கூடியிருந்தனர். ஒரு யுத்தத்திற்கான முன்னாயத்தங்கள் தெரிந்தன. அது அவ்வாறுதான் இருக்கும். புலிகள் இயக்கத்து தலைமையின் மையம் அது. போராளிகளின் பிரசன்னம் பாதுகாப்புக்கான அம்சமாக ஒரு காலத்தில் இருந்ததுதான். அப்போது இல்லை. அதன் அர்த்தம் போராளிகள் நிறைய இருக்கிறவரையில் புதுக்குடியிருப்பு இனி பாதுகாப்பில்லை என்பதுதான். முருகமூர்த்தி உஷாரானான். “பையை எடு, ஜோதி” என்றான்.

ஜோதி சாமன்களை அடுக்கிக் கட்டினாள். அவன் தறப்பாளை கழற்றி மடித்தான். ஆயிற்று. மூவரினதும் பயணம் மேலே தொடங்கியது. அது இரணைப்பாலையை நோக்கியதாய் இருந்தது.

நாகியும் குடும்பமும்கூட பின்னால் போய்க்கொண்டிருந்தது. ஓட்டமும் நடையுமாகத்தான்.

பொக்கணையும் இரணைப்பாலையும் பிதுங்கி மக்களால் வழிந்துகொண்டிருந்தது. ஊடறுத்துத்தான் செல்லவேண்டி இருந்தது. முந்திவிட எடுக்கிற மூர்க்கம் உயிரச்சத்தின் விளைவெனினும், அது ஒரு சமயத்தில் சகிக்கமுடியாது இருந்தது.

எப்படியோ தறப்பாளைக் குத்தி குந்தியிருக்க இடமொன்றுக்கு ஏற்பாடு செய்தாகிவிட்டது. இரணைப்பாலையில் இன்னும் காய்கறிகளும், மற்றும் சமையல் சாமான்களும் வாங்கக்கூடியதாக இருந்தது. முருகமூர்த்தி போய் சமையலுக்கு சில காய்கறி வாங்கிவந்தான்.
அன்றைய பொழுது கழிந்தது.

ஒரு மாதமளவான காலத்தை அங்கே கழித்தார்கள். பணமிருந்தால் அங்கேயே சில நாட்கள் இன்னும் இருந்துவிடலாமென சிலபேருக்குப் பட்டது. முருகமூர்த்தியிடம் ஆபத்து அந்தரத்துக்கென்று கொஞ்சப் பணம் இருந்தது. அதை கடைசிவரை அவன் இறுக்கமாய் வைத்திருந்தே ஆகவேண்டும்.

மேலும் படிக்க ...

தொடர்கதை: ஒரு கல் கரைந்தபோது…..!(9) - நெல்லை வீரவநல்லூர் ஸ்ரீராம் விக்னேஷ் -

விவரங்கள்
நெல்லை வீரவநல்லூர் ஸ்ரீராம் விக்னேஷ் -
நாவல்
10 நவம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 அத்தியாயம் ஒன்பது!

“சாமி….. முகூர்த்த டைம் முடியிறத்துக்கு இன்னும் அரைமணி நேரத்துக்கு மேல இருக்கு…. நாமெல்லாம் மனசுவெச்சா இந்தக் கேப்புக்குள்ள கலியாணத்தையும் முடிச்சிடலாம் இல்லியா….”

அனவருமே சற்று ஆடித்தான் போனோம்.

தன்னைச் சுதாகரித்துக்கொண்ட ஐயர் கேட்டாக.

“என்ன சொல்லிட்டேள்….. அதுக்கிண்ணு நாள் பாக்கவேண்டாமோ…. பந்தல்கால், பத்திரிகை எதுவுமே இல்லாம…… ”

பேச்சிலே சுதி குறைந்தது.

அண்ணன் சிரித்தபடி பேசினாங்க.

“என்னசாமி பேசிறீங்க…. என்னடா இவங்க நிச்சயார்த்தம்னு சொல்லி கூட்டிக்கிட்டு வந்தாங்க….. பேசின ரேட்டுக்குள்ளையே கலியாணத்தயும் முடிச்சிட்டு, நோவாம நம்மளைக் கழட்டி விட்டுருவாங்களோண்ணு பயப்பிடாதீங்க…. ரெண்டுக்கும் சேத்தே துட்டுக் குடுத்திடுறோம்….”

ஐயர் சமாளித்துச் சிரித்தார்.

“என்ன புசுக்கிண்ணு இப்பிடிச் சொல்லிட்டேள்…. அது அதுக்கிண்ணு முறைகள் உண்டில்லையா….. அதைத்தான் சொல்ல வந்தேன்….. அத்தோட அதெல்லாம் மாப்பிள்ளை வீட்டில வெச்சு நடத்தவேண்டிய பங்சன் பாருங்கோ…..”

“சாமி…. நியதிகளையும், முறைகளையும் மனிசனுக்காக, அவன் வசதி, வாழ்க்கைக்காகத்தான் ஆக்கியிருக்காங்க….. அந்த நியதிகளே மனிசனோட வசதிகளுக்கும், வாழ்க்கைக்கும் இடைஞ்சலா வர்ரப்போ அதயெல்லாம் மாத்திக்கவேண்டியதுதான் புத்திசாலித்தனம்…. இண்ணிக்கு பொதுநாள் கிடையாது….. நெறைஞ்ச முகூர்த்தநாள்…. நேரமும் அதுக்கிண்ணு உள்ளதைப் பாத்துத்தான் எல்லாமே செய்யிறோம்…. அந்த நேரத்துக்குள்ள செய்து முடிக்கலாமான்னுதான் கேக்குறேன்….”

ஐயர் உள்பட அனைவரிடமுமிருந்து அமைதியே வெளிப்பட்டது.

மேலும் படிக்க ...

பயணக் கட்டுரைகள்: என் கொடைகானல் மனிதர்கள்! (1) பிளம்ஸ் மரங்களும் சடை சவுக்குகளும்! -  ஜோதிகுமார் -

விவரங்கள்
-  ஜோதிகுமார் -
ஜோதிகுமார்
08 நவம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 - இலங்கையிலிருந்து வெளிவந்த 'நந்தலாலா' , 'தீர்த்தக்கரை' ஆகிய சஞ்சிகைகளின் ஆசிரியர்களில் ஒருவரும் சட்டத்தரணியுமான திரு. ஜோதிகுமார் தனது பயணங்களில் சந்தித்த மனிதர்கள் பற்றிய கட்டுரைத்தொடர்  'என்  கொடைகானல்  மனிதர்கள்!  பிளம்ஸ் மரங்களும் சடை சவுக்குகளும்' .  அத்தொடரின் முதற் கட்டுரை இது. ஏனையவை 'பதிவுகள்' இணைய இதழில் தொடராக வெளிவரும். - பதிவுகள்.காம் -


ஒரு காலத்தின் வாழ்க்கையை நான் இவ்விதமாக பதிவு செய்ய நேர்ந்தது. இது ஒரு கடந்த காலமா? இருக்கலாம். இருந்தும், இடைவிடாத இப்போராட்டத்தின் அடித்தளம், நாளைக்கும், நாளை மறுதினமும் முகிழ்க்க கூடிய, புது முளைகளுக்கு உயிர் தர கூடியவையே. நான் சந்தித்த அந்த மனிதர்கள் - அவர்கள் , இன்றும் எனக்கு உயிர் தரும் பெரியோர்கள். அவர்களுக்கு என் வணக்கம்.

சடை சவுக்கு

அந்த குளம் அப்படி கிடந்தது, யாதொன்றும் அறியாதது போல. அவரை தற்செயலாகத்தான் நான் சந்திக்க நேர்ந்தது. குளத்தின் சுற்றளவு, ஓர் ஆறு கிலோமீற்றர் என்றார்கள். குளத்தில் படகு சவாரி, அந்தக் காலை வேளையிலேயே ஆரம்பமாகியிருந்தது. மெல்லிய பனிபடலம் அவ்வப்போது குளத்தின் குறுக்காய், சில இடங்களில் தோன்றி, அவசரமற்று, மெது மெதுவாக, மெல்லிய ஒரு ஓவியம் போல் வழுக்கி, பின் கலைந்து அகன்றது.

சில சிறுவர்கள் தூண்டில்கள் போட்டவாறு ஓரங்களில் நின்றார்கள். இன்னும் சில, ஏழெட்டு வயது சிறுவர்களின் கூட்டமும், அவர்களது முழங்கால் வரை மட்டுமே நீராழம் இருந்த இடங்களில், இறங்கி சிறிய சிறிய பொலித்தீன் பைகளைக் கொண்டு, தம் சிறிய கரங்களாலும் கால்களாலும் தண்ணீரை உதைத்து, உதைத்து அதிர்வலைகளை உண்டுபண்ணி, குட்டி குட்டி மீன்களை விரட்டி அந்த பொலித்தீன் பைகளுக்குள் வரச்செய்து, அவற்றை பிளாஸ்டிக் போத்தலுக்குள் அடைத்து, பின் தூக்கி, அவற்றை தமது சிறிய முகங்களுக்கு நேராய் பிடித்து, அச்சிறிய மீன்கள் தமது சிறிய கண்களால் உற்றுப்பார்த்து, தமது சிறிய வாலை ஆட்டியவாறு நீந்துவதை கண்டு, சந்தோசமாய் ஆர்ப்பரித்தனர்.

இதைத்தவிர சில வயது வந்த இளைஞர்களும் முதியவர்களும் ஆங்காங்கே அக்குளக்கரையின் ஓரமாக இருந்த காங்கிரீட் திட்டுகளிலும், பைப்புகளிலும் அமர்ந்து ஆழ்ந்த சிந்தனையுடன் மிக அமைதியாக மீன்பிடிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

அவர்கள், மீன்கள் தம்மை ஏமாற்றி தின்று சென்றிருந்த தூண்டில்களை, ஓரளவு ஏமாற்றம் கலந்த சோர்வுடன் அவ்வப்போது இழுத்தெடுத்து, பின் அசராத ஓர் நம்பிக்கையுடன், மீண்டும் தேவையான மீன் தீணிகளை கவனமாக தம் இரண்டு விரல்களால் கோர்த்து, பின் வலது கையின் பெருவிரலையும் தம் சுட்டுவிரலையும் பயன்படுத்தி தூண்டிலை இரண்டொரு தடவை வட்டமாக ஒரு சுழற்று சுழற்றி நாசுக்காக நீரில் விட்டெறிந்தார்கள்.

அவை, நிதானமாக ஓர் இருபது முப்பது யார் தொலைவுக்கு சென்று விழுந்ததும், நூலை அப்புறமாயும் இப்புறமாயும் இழுத்து அசைத்து, ஓர் வசதியான இடத்தில் தூண்டிலை நிலைபெற செய்கின்றார்கள்.

குளிர்வாடை வீசிய அந்த காலைப்பொழுதில், இவற்றையெல்லாம் நோட்டமிட்டபடி வந்த பொழுது, தற்செயலாகவே இவர் என் கண்ணில் பட்டார். ஓர் அறுபது எழுபது வயதிருக்கும். குண்டாகவும் கட்டையாகவும் இருந்த அந்த மனிதர் குளத்தை ஒட்டி மிக செழிப்பாய் வளர்ந்திருந்த மெல்லிய புற்றரையின் ஓரமாய் கால்களை நீட்டி போட்டுக்கொண்டு தன்பாட்டில் மீன்பிடிப்பில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.

மேலும் படிக்க ...

ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் இணைய வழிக் கலந்துரையாடல்: “வேற்றுக்கிரக மனிதர்கள்” (அறிவியல் தொடர் - 4)

விவரங்கள்
- ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் -
நிகழ்வுகள்
08 நவம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் இணைய வழிக் கலந்துரையாடல்: “வேற்றுக்கிரக மனிதர்கள்” (அறிவியல் தொடர் - 4)


நாள்: 19 நவம்பர் வெள்ளிக்கிழமை 2021
நேரம்: இரவு 8:00 - 10:00 மணி (கனடா ரொறன்ரோ)
பேசுபவர்: திருமதி உமை பற்குணரஞ்சன்

மேலும் படிக்க ...

இலக்கிய வெளி: தேவகாந்தனின் நான்கு நூல்கள் விமர்சன அரங்கு!

விவரங்கள்
- தேவகாந்தன் -
நிகழ்வுகள்
08 நவம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மெய்நிகரில் மூன்று நாட்கள் தமிழ் எழுத்தாளர் விழா ! அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் வருடாந்த நிகழ்வு !! இம்மாதம் 12 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பம் ! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
நிகழ்வுகள்
08 நவம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 

அவுஸ்திரேலியாவில் தமிழ் கலை, இலக்கிய முயற்சிகளை மதிப்பீடு செய்யும்போது அவற்றுக்கான ஊற்றுக்கண் திறந்து மூன்று தசாப்தங்களுக்கு மேலாகியிருப்பதையும் அவதானிக்கமுடிகிறது. தமது தாயகத்தில் கலை, இலக்கிய, ஊடகத்துறைகளில் ஈடுபட்டவர்கள் புகலிடம் நாடி இங்கு வந்த பின்னரும் உள்ளார்ந்த ஆற்றல்கள் வற்றிப்போகாமல் இயங்கியமையால் தமிழ் கலை , இலக்கிய படைப்புலகத்தில் அவுஸ்திரேலியாவின் பங்களிப்பும் குறிப்பிடத்தகுந்ததாக விளங்குகிறது.

அவுஸ்திரேலியாவில் தமிழ் கலை, இலக்கியம், இதழியல், வானொலி , தொலைக்காட்சி முதலானவற்றை மதிப்பீட்டிற்குட்படுத்தும்போதுதான் புலம்பெயர் இலக்கியம் இங்கும் உலகளவிலும் எவ்வாறு பேசுபொருளானது என்பதையும் அறியமுடியும். இந்தியாவிலிருந்து ஒரு காலத்தில் இலங்கைக்கும் ஃபிஜி மற்றும் ஆபிரிக்காவிற்கும் தமிழர்கள் புலம்பெயர்ந்து சென்றிருந்தாலும், இலங்கையிலிருந்து தொழில் நிமித்தமும் கல்வியின் பொருட்டும் ஏராளமானோர் வெளிநாடுகளுக்கு சென்றிருந்தாலும், 1983 இல் இலங்கையில் இனவாத வன்செயல் வெடித்ததன் காரணமாக தமிழர்களில் நிகழ்ந்த பாரிய புலப்பெயர்வின் பின்னர்தான் அவர்கள் மத்தியிலிருந்த கலை, இலக்கிய வாதிகளின் இயக்கத்தினால் புலம்பெயர்ந்தோர் இலக்கியம் பேசுபொருளானது.

மேலும் படிக்க ...

தேடியெடுத்த கதையும் கவிதையும்: 'பல்லி தந்த பாடம்' & 'விழித்தெழும் புது யுகம்' - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
08 நவம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

நான் இந்த சிறுகதை மீண்டும் கிடைக்குமென்று எதிர்பார்க்கவேயில்லை. ஆனால் நூலகம் தளத்தின் உதவியால் மீண்டும் இச்சிறுகதையினைப் பெற முடிந்தது. அதற்காக நூலகத்துக்கு நன்றி.

என் பதின்ம வயதுகளில் இரவுகளில் என் அறையில் படுக்கையில் சாய்ந்தபடி சுவரில் பூச்சி பிடித்துண்டும் பல்லிகளையு, உணவாகும் பூச்சிகளையும் அவதானிக்கையில் எழுந்த உணர்வின் வெளிப்பாடு இச்சிறுகதை. ஜுலை 6, 1980 வெளியான ஈழநாடு வாரமலரில் வெளியாகியுள்ளது. 'பல்லி தந்த பாடம்' என்னும் தலைப்பில் வெளியான சிறுகதை. இந்நிலையில் மீண்டும் இச்சிறுகதை என் கைகளை வந்தடைந்தது மகிழ்ச்சியைத் தருகின்றது. அக்காலகட்டத்தில் நான் எழுதிய ஈழநாடு வாரமலரில் வெளியான கடைசிச்சிறுகதை இதுதான். ஈழநாடு வாரமலரில் வெளியான எனது ஆரம்பச் சிறுகதைகளில் என்னிடம் இல்லாத சிறுகதை இதுதான். ஈழநாடு நிறுவனமும் பல தடவைகள் போர்ச்சூழலில் எரிக்கப்பட்ட நிலையில் இச்சிறுகதை மீண்டும் கிடைக்குமென நான் நினைத்திருக்கவேயில்லை. உண்மையில் இச்சிறுகதை கிடைத்தது எதிர்பாராத மகிழ்ச்சிதான். என் பால்ய, பதின்ம மற்றும் இளமைப்பருவங்களில் என் படைப்புகளைப் பிரசுரித்து ஊக்குவித்த ஈழநாடு பத்திரிகையை என்னால் ஒருபோதுமே மறக்க முடியாது. எப்பொழுதும் என் நெஞ்சில் அதற்கோரிடமிருக்கும்.

பின்னர் புகலிடம் நாடிப் புலம்பெயர்ந்திருக்கையில் தாயகம் (கனடா) சஞ்சிகையில் இச்சிறுகதையில் வரும் பல்லி- பூச்சி அனுபவத்தை மையமாகக்கொண்டு 'பல்லி' என்றொரு சிறுகதை எழுதினேன். அது வேறொரு பார்வையில் எழுதப்பட்ட சிறுகதை. பின்னர் பல வருடங்கள் கழிந்த நிலையில் இச்சிறுகதையை மையமாகக்கொண்டு விகடனுக்குப் 'பல்லிக்கூடம்' என்றொரு குட்டிச் சிறுகதை அனுப்பினேன். அது விகடனில் அதன் பவள விழாவையொட்டிய காலத்தில் வெளியானதால் முத்திரைக்குட்டிக்கதையாகப் பிரசுரமானது.

மேலும் படிக்க ...

இலக்கியவெளி சஞ்சிகை நடத்தும் "கவிதை உரையாடல் -1" - தகவல்: அகில் -

விவரங்கள்
- அகில் -
நிகழ்வுகள்
06 நவம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

நாள்: ஞாயிற்றுக்கிழமை 07-11-2021
நேரம்:
இந்திய நேரம் - மாலை 7.00
இலங்கை நேரம் - மாலை 7.00
கனடா நேரம் - காலை 8.30
இலண்டன் நேரம் - பிற்பகல் 1:30

வழி: ZOOM, Facebook

Join Zoom Meeting:

Meeting ID: 389 072 9245
Passcode: 12345

https://us02web.zoom.us/j/3890729245?pwd=a1ZERVVXY1VBZjV3SnVCUEh1bEVUZz09

Facebook live:
https://www.facebook.com/ilakkiyavelicom/

மேலதிக விபரங்களுக்கு: - அகில் - 001416-822-6316

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

லண்டனில் உலகத் தமிழ் கலைஞர்கள் கௌரவிப்பு!  - நவஜோதி ஜோகரட்னம், லண்டன் -

விவரங்கள்
- நவஜோதி ஜோகரட்னம், லண்டன் -
நவஜோதி ஜோகரட்னம்
06 நவம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

முதல் முறையாக உலகவாழ் கலைஞர்களை கௌரவிக்கும் நிகழ்வு லண்டன் வோட்டஸ்மித் மண்டபத்தில, ‘கிரிபின் கல்லூரி சர்வதேச கல்விப் பேரவை நுண்கலைத் தெரிவு ஆணைய’த்தினால் அண்மையில் முன்னெடுக்கப்பட்டது.

‘ஆச்சாரிய கலாசாகர விருது', ‘நிர்த்திய சிரோன்மணி விருது’, ‘நாட்டிய கலா விபஞ்சி விருது’, ‘கான கலாதரர விருது’. ‘வாத்திய கலாதரா விருது’. ‘சங்கீத இரத்னா விருது’ போன்ற விருதுகளை விழங்கி கௌரவித்திருந்தனர். தமது வாழ்நாளில் கலைச் சாதனைகளைப் புரிந்தவர்களுக்கும், இசை, நடனம். வாத்தியக் கலைஞர்களுக்கும் அவரவர்களின் கலைத் துறைகளின் திறமைகளுக்கேற்ப கௌரவிக்கப்பட்டிருந்தனர்.

மேலும் படிக்க ...

அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துகள்!

விவரங்கள்
Administrator
சமூகம்
04 நவம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துகள். அனைவர்தம் வாழ்வெனும் நந்தவனத்தில் இன்பமென்னும் ஒளிமலர் பூத்துக் குலுங்கட்டும். இந்நன்னாளில் நல்லெண்ணங்களால் நானிலம் சிறக்கட்டும். மாந்தர்தம் வாழ்வினில் மகிழ்ச்சி பொழியட்டும்.  இந்நாளில் நீங்கள் அனைவரும் இன்ப நீர் வீழ்ச்சியில் நீராடுங்கள் அன்பர்களே!

 

கூவாமல் கூவும் கோகிலம்: வாழ்த்துவோம்! - குயில் -

விவரங்கள்
- குயில் -
சமூகம்
03 நவம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கனடாவின் பிரபல பல்கலைக்கழகங்களில் ஒன்றான யோர்க் பல்கலைக்கழகத்திலிருந்து தனது எண்பத்தியேழாவது வயதில் அரசியல் விஞ்ஞானத்தில் முதுமானிப்பட்டம் பெற்றுள்ளார் இலங்கைத்தமிழ்ப் பெண் ஒருவர்.அவரது பெயர் வரதலட்சுமி சண்முகநாதன் (Varathaledchumy Shanmuganathan) .  இந்த வயதில் இவ்விதம் பிரபலமான பல்கலைக்கழகமொன்றில் முதுமானிப்பட்டம் பெற்ற முதலாவது கனேடியர் மற்றும்
முதலாவது கனேடியப் பெண் என்னும் மேலதிகச் சிறப்புகளையும் இவர் இதன் மூலம் பெறுகின்றார். அவரைப்பற்றிய மேற்படி பல்கலைக்கழகச் செய்திக்குறிப்பினைப் பகிர்ந்துகொள்வதுடன்  அவரை மனம் நிறைந்து வாழ்த்துகின்றேன்.

மேலும் படிக்க ...

பாரதியும் சிறுகதை இலக்கியமும்!   - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
அரசியல்
03 நவம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

பாரதியார் எழுதிய முதல் கவிதையும் , முதல் சிறுகதையும் என்ன... ? என்பது பற்றியும் இலக்கிய உலகில் ஆராயப்படுகிறது. வழக்கமாக இலக்கிய வரலாற்றாசிரியர்கள் வ.வே.சு. ஐயர் ( வரகனேரி வேங்கடேச சுப்பிரமணிய ஐயர் ) எழுதிய குளத்தங்கரை அரசமரம் தான் முதலில் தமிழில் வெளிவந்த சிறுகதை என்று நிறுவுகின்றனர். இவர் 1881 ஆம் ஆண்டு ஏப்ரில் மாதம் 02 ஆம் திகதி திருச்சி வரகனேரியில் பிறந்தார். இந்திய சுதந்திரப்போராட்டத்தின்போது தமிழ் நாட்டில் இவரது பங்களிப்பு மிக மிக முக்கியமானது. லண்டன் சென்று சட்டமும் படித்து பரீஸ்டரானவர். சுதந்திரம் சும்மா கிடைக்காது, ஆயுதத்தினாலும் பெறமுடியும் என நம்பிய தீவிரவாதி. பாரதியின் வாழ்க்கைச் சரிதத்தில் இவரும் முக்கிய தருணங்களில் இடம்பெறுகிறார். பாரதி மறைவதற்கு முதல் நாள் 1921 ஆம் ஆண்டு 11 ஆம் திகதி, சென்னையில் வ.வே.சு. ஐயர் கைதாகி சிறைசெல்லுகிறார். பாரதி கடும் சுகவீனமுற்றிருப்பது அறிந்து, அவரைச்சென்று பார்க்க விரும்பும் ஐயர், பொலிஸாரிடம் அனுமதி கேட்கிறார். இவரை சிறைக்கு அழைத்துச்செல்லும் பொலிஸாருக்கு இரக்க குணம் இருந்திருக்கவேண்டும்.

பாரதியும் சிறை சென்று மீண்ட செம்மல். ஒரு முன்னாள் கைதியை பார்க்க இந்தக்கைதி விரும்பியபோது, பொலிஸார் அதற்கு அனுமதி தந்து திருவல்லிக்கேணிக்கு அழைத்துச்செல்கின்றனர். மருந்து அருந்தாமல் அடம்பிடிக்கும் பாரதியிடத்தில், மிகுந்த அக்கறையோடு மருந்து எடுத்துக்கொள்ளுமாறு கேட்டுவிட்டு சிறைசெல்லும் வ.வே.சு. ஐயர், விடுதலையாக வந்தபின்னர் 1922 ஆம் ஆண்டில் சேரன் மாதேவியில் தமிழ்க்குருகுலம் என்ற கல்வி நிலையத்தைத் தொடக்கி அதனை இயக்குவதற்காக பரத்வாஜ் என்ற ஆசிரமத்தையும் அமைத்தார். அத்துடன் பாலபாரதி என்ற இதழையும் நடத்தினார். இவர் எழுதிய குளத்தங்கரை அரசமரம் தமிழில் வெளிவந்த முதல் சிறுகதை என்று சொல்லப்படுகிறது.

பாரதி மறைந்து நான்கு ஆண்டுகளில் வ.வே.சு. ஐயரின் வாழ்வில் பெருந்துயரம் நேர்ந்துவிடுகிறது. தனது குருகுல மாணவர்கள் சகிதம் அம்பா சமுத்திரம் அருவிக்குச்சென்றவிடத்தில், அவரது மகள் அந்த அருவியில் தவறி விழுந்துவிடவும், அவளைக்காப்பற்ற அருவியில் குதிக்கிறார். தந்தையையும் மகளையும் அருவி இழுத்துச்சென்றுவிட்டது. சடலங்களும் கிடைக்கவில்லை. பாரதிக்கு முன்னர் ஐயர் இறந்திருந்தால், பாரதி, ஐயர் பற்றி ஒரு காவியமே இயற்றியிருப்பார்.

மேலும் படிக்க ...

உலகின் உயரமான மலை ஹவாய் தீவில்தான் இருக்கிறது என்றால் நம்புவீர்களா? - குரு அரவிந்தன் -

விவரங்கள்
- குரு அரவிந்தன் -
குரு அரவிந்தன்
02 நவம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

‘உலகிலே அதி உயரமான மலையின் உச்சியில் இப்போது நீங்கள் நிற்கிறீர்கள்’ என்று சொல்லி எனக்கு அதிர்ச்சி தந்தாள் வரவேற்பில் நின்ற, தலைமுடியில் ஒற்றைப்பூ செருகிய இளம் பெண்மணி. ஹவாயில் உள்ள மௌனாகியா மலையின் உச்சியில் நாங்கள் அப்போது நின்றிருந்தோம். இமயமலை ஆசியாவில்தான் இருக்கிறது என்ற எனது நம்பிக்கையை ஒரு கணம் கேள்விக்குறியாக்கினாள். நேபாளத்திற்கும், தீபெத்திற்கும் இடையே உள்ள இமயமலையின் எவரெஸ்ட் சிகரம்தான் உலகிலே அதிக உயரமான சிகரம் என்பதும், அதன் உயரம் 29,028 அடி என்பதும் மாணவப்பருவத்தில் இருந்தே என் மனதில் பதிந்திருந்தது. அதன்பின் இன்றுவரை இமயமலை 4 அங்குலம் வளர்ந்திருந்ததும் தெரியும். வரவேற்பில் நின்ற பெண்மணிக்கு அனுபவம் போதவில்லை, எவெரெஸ்ட் பற்றி இவர் அறிந்திருக்கவில்லை என்ற நினைவோடு, அவரைப் பார்த்தேன். எனது பார்வையைப் புரிந்து கொண்ட அவரோ அருகே இருந்த பதாதையை நோக்கிச் சுட்டுவிரலை நீட்டினார். மௌனாகியா மலையின் படத்தையும் அதைப்பற்றிய குறிப்பையும் வாசித்த போது என்னால் ஏற்றுக் கொள்ள முடியாமல் ஒருகணம் தடுமாறிப் போனேன்.

மேலும் படிக்க ...

தீபாவளித் திருநாள் - குரு அரவிந்தன் -

விவரங்கள்
- குரு அரவிந்தன் -
குரு அரவிந்தன்
02 நவம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்!  தீப ஒளித் திருநாள் என்றும் தீபாவளியை அழைப்பர். இந்து மதத்தவர்களால் ஐந்து நாட்கள் கொண்டாடப்படுகின்ற பண்டிகை இதுவாகும். மனிதவாழ்க்கையில் இருளை நீக்கி, ஒளியைக் கொடுக்கும் பண்டிகையாக தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகின்றது.

இப்பண்டிகை இந்தியா, இலங்கை, நேபாளம், மலேசியா, மியான்மர், பிஜி தீவு, சிங்கப்பூர் உட்பட பல நாடுகளிலும் கொண்டாடப்படுகின்றது. இப்போது புலம்பெயர்ந்த சில நாடுகளிலும் இந்துக்களால் கொண்டாடப்படுகின்றது. பெரும்பாலான ஆண்டுகளில் பொதுவாக தீபாவளி பண்டிகை ஐப்பசி மாதம் அமாவாசை தினத்தன்று கொண்டாடப்படுகின்றது. தீபாவளித் திருநாளைக் கொண்டாடுவதற்குப் புராணக்கதைகள், இராமாயணக் கதைகள் போன்றவற்றின் மூலம் பல காரணங்களைக் குறிப்பிடுகின்றனர். அறிவியல் வாதிகள் பொருத்தமற்ற புராணக் கதைகள் என்றும் வாதிடுவர். புராணங்களில் வெற்றியைக் கொண்டாடும் வகையில் தீபங்களை ஏற்றி இறைவனை வழிபட்ட தீபத்திருநாளையே இன்று தீபாவளியாகக் கொண்டாடுகிறார்கள். இந்த வருடம் 2021 நவெம்பர் மாதம் 4 திகதி வருவதாக நாட்காட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளது. பல்கலாச்சார நாடாகிய கனடாவில், அவர்களின் நாட்காட்டியின் குறிப்புக்கு ஏற்ப, வெவ்வேறு தினங்களில் தீபாவளி கொண்டாடப்படுகின்றது. சிலர் ‘தீபாபலி’ என்றும் இத்திருநாளைக் குறிப்பிடுவர்.

தீபாவளி அன்று தீபாவளியைக் கொண்டாடும் இந்துக்கள் அதிகாலையில் தூக்கத்தால் எழுந்து எண்ணெய்க் குளியல் செய்து புத்தாடை உடுத்தியும், பட்டாசுகள் வெடித்தும், இனிப்புப் பலகாரங்களைப் பரிமாறியும் கொள்வர். சிலர் விருந்தினருக்குப் பரிசுகள் தந்தும் மகிழ்வர். பெரியோரை வணங்கி அவர்களி;டம் இருந்து ஆசீர்வாதம் பெறுவர். தீப ஒளித் திருநாளன்று பட்டாசு, மத்தாப்பூ போன்றவற்றைக் கொளுத்தி மகிழ்வது மக்களின் வழக்கமாகும்.

மேலும் படிக்க ...

கூவாமல் கூவும் கோகிலம்: கலைஞர் போட்ட தவறான கணக்கால் வாழ்விழந்த மு.க.முத்து! - குயில் -

விவரங்கள்
- குயில் -
கலை
01 நவம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எனக்கு நடிகரும் பாடகருமான மு.க.முத்து மீது எப்போதுமே ஒருவித அனுதாபமுண்டு. கலைஞர் எம்ஜிஆரின் அரசியல் மற்றும் திரையுலகச் செல்வாக்கைப்பற்றித் தப்புக் கணக்கு போட்டார். அரசியலில் அவர் போட்ட தப்புக்கணக்கு எம்ஜிஆரைக் கட்சியிலிருந்து விலக்கியது. விளைவு? எம்ஜிஆர் உயிருடன் இருந்தவரையில் கலைஞரால் ஆட்சியைப் பிடிக்கவே முடியவில்லை. அதுபோல் எம்ஜிஆரைக் கட்சியிலிருந்து விலக்க முன்னர் எம்ஜிஆரின் திரையுலக வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டுவரத் தன் புதல்வனான மு.க.முத்துவைக் கதாநாயகனாக வைத்து எம்ஜிஆரைப்போல் நடிக்க வைத்தார். அது அவர் போட்ட எம்ஜிஆர் பற்றிய முதலாவது தப்புக் கணக்கு. விளைவு? நடிப்புத் திறமை, பாடும் திறமை மிக்க மு.க.முத்துவின் கலையுலக வாழ்க்கை உதித்த வேகத்திலேயே அஸ்தமித்துப்போனது. எம்ஜிஆருக்கு எதிராக மு.க.முத்துவை நடிக்க வைத்ததற்குப் பதிலாக நடிக்க வைத்திருந்தால் மு.க.முத்துவின் கலையுலக வாழ்க்கை பிரகாசித்திருக்கும் என்பதே என் கணிப்பு.

மு.க.முத்துவின் மீது இன்னுமொரு விதத்திலும் எனக்கு அவர் மீது அனுதாபமுண்டு. அவரது தாயான கலைஞரின் முதல் மனைவியும், பாடகர் சி.எஸ்.ஜெயராமனின் சகோதரியுமான பத்மாவதி குழந்தை பிறந்த சில வருடங்களிலேயே காச நோய் காரணமாக இறந்தபோது அவருக்கு வயது 20. குழந்தையிலேயே தாயன்பை இழந்து வளர்ந்தவர் மு.க.முத்து. குழந்தைப் பருவத்திலேயே தாயை இழந்த மு.க.முத்துவின் கலையுலக வாழ்க்கை அவரது தந்தையின் செயற்பாடுகளாலேயே முடிவுக்கு வந்தது. இவ்விதமான வாழ்க்கைப் போராட்டங்களே பின்னர் மு.க.முத்துவின் வாழ்வின் சீரழிவுக்கும் முக்கிய காரணமாக இருந்திருக்க வேண்டுமென்றே தெரிகின்றது.

மேலும் படிக்க ...

அக்டோபர் 31 கலோவீன் தினம்!  - குரு அரவிந்தன் -

விவரங்கள்
- குரு அரவிந்தன் -
குரு அரவிந்தன்
31 அக்டோபர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மேலை நாடுகளில் சிறப்பாகக் கொண்டாடப்படும் தினங்களில் கலோவீன் தினமும் (Halloween) ஒன்றாகும். ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதம் 31ம் திகதி கலோவின் தினம் அயர்லாந்து, இங்கிலாந்து, கனடா, அமெரிக்கா போன்ற மேலை நாடுகளிலும் இதர நாடுகளில் கொண்டாப் படுகின்றது.

பெரியவர்களும் குழந்தைகளும் மிகவும்வேடிக்கையாக இத்தினத்தை இங்கே கொண்டாடுவர். ஊரிலே பிள்ளைகள் இரவிலே வெளியே திரிவதைத் தடுப்பதற்காகப் பெரியவர்கள் பேய்பிடிக்கும், பிசாசு அடிக்கும், கொள்ளிவால் பிசாசு தொடரும், முனி அடித்தால் வாயால் இரத்தம் கக்கும், என்றெல்லாம் சொல்லிப் பயமுறுத்துவதுண்டு. இப்படித்தான் எங்கள் வீட்டிற்கு சற்றுத் தள்ளியிருந்த புளிய மரத்தில் முனி இருக்கிறது என்றெல்லாம் சொல்லி இரவிலே வெளியே திரியாமல் எங்களுக்குப் பயம் காட்டிப் பெற்றோர் மிரட்டி வைத்திருந்ததை இத்தினங்களில் மீண்டும் நான் நினைவுபடுத்திப் பார்ப்பதுண்டு. இரவிலே வெளிக்கிட்டுத் திரிவதற்குப் பயந்து பயந்தே வாழ்ந்ததொரு காலமது.

பிரித்தானியாவில்தான் முதன்முதலாகக் கலோவீன்தினம் 2000 ஆண்டுகளுக்கு முன்பாகக் கொண்டாடப்பட்டது. அறுவடைக்காலம் முடிந்து குளிர்காலம் ஆரம்பிப்பதையும், வெளிச்சகாலம் முடிந்து இருட்டுக்காலம் தொடங்குவதையும் இந்தக் கொண்டாட்டம் குறிக்கும். பழைய ஆங்கிலச் சொல்லான கலோவீன் என்றால் தெய்வீகத்தன்மை பெறச்செய்தல் என்ற கருத்துப்படும். பொதுவாக இத்தினத்தில் ஆரேஞ்ச் நிறமும் கறுப்பு நிறமும் அதிகமாகப் பாவிக்கப்படும். அரேஞ்ச் நிறம் அறுவடைக் காலத்தையும், கறுப்பு நிறம் இறப்பையும் குறிக்கும்.

மேலும் படிக்க ...

காலத்தால் அழியாத கானம்: 'பாலாற்றில் சேலாடுது' - ஊர்க்குருவி -

விவரங்கள்
- ஊர்க்குருவி -
கலை
29 அக்டோபர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 

கே.வி.மகாதேவன் இசையில், கவிஞர் கண்ணதாசன் மொழியில், சீர்காழி கோவிந்தராஜன் & ஜமுனாராணி குரல்களில் ஒலிக்கும் இந்தப்பாடற் காட்சியில் நடித்திருப்பவர்கள் எம்ஜிஆர் & எல்.விஜயலட்சுமி. பாடல் இடம் பெற்றுள்ள திரைப்படம்: 'கொடுத்து வைத்தவள்'.

மேலும் படிக்க ...

'நூலகம்' இணையத் தளத்தில் வ.ந.கிரிதரனின் குடிவரவாளன்

விவரங்கள்
- வ.ந.கி -
வ.ந.கிரிதரன் பக்கம்
29 அக்டோபர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எனது 'குடிவரவாளன்' நாவலைத் தற்போது எண்ணிம நூலகமான 'நூலகம்' தளத்தில் நீங்கள் வாசிக்கலாம். நியூயோர்க் மாநகரத்தில் இலங்கைத் தமிழ் அகதி ஒருவனின் இருத்தலுக்கான போராட்டத்தை விபரிக்கும் நாவல் என் சொந்த அனுபவங்களின் அடிப்படையில் புனையப்பட்டது. இவ்வகையில் ஒரு குறிப்பிட்ட காலச் சம்பவங்களை ஆவணப்படுத்தும் நாவலிது.

மேலும் படிக்க ...

கூவாமல் கூவும் கோகிலம்: ஹார்வார்ட் பல்கலைக்கழகத் தமிழ் இருக்கையும், மொழி வளர்ப்பும்! -

விவரங்கள்
- குயில் -
சமூகம்
28 அக்டோபர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

தமிழை வளர்ப்பது என்றால் எப்படி? தமிழ் நூல்களை அதிக அளவில் தேடிப்பிடித்து இணையத்தில் அல்லது அச்சில் வெளியிடலாம். தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை , வெளியிட்ட சஞ்சிகைகளை, நூல்களை, பத்திரிகைகளைச் சேகரிக்கலாம். ஆனால் இவற்றைச் செய்வதற்கு மிகுந்த உழைப்பு தேவை. பலரின் பங்களிப்பு தேவை. ஆனால் இவற்றையெல்லாம் பல சுய இலாபமற்று இயங்கும் அமைப்புகள் செய்து வருகின்றன. உதாரணத்துக்கு மதுரைத்திட்டத்தைக் குறிப்பிடலாம். நூலகம் அறக்கட்டளையைக் குறிப்பிடலாம். இணையக்காப்பகத்தில் கூட (Archive.org)) பல அரிய தமிழ்ப்படைப்புகள் சேகரிக்கப்பட்டுள்ளன. தமிழ் மொழியை வளர்ப்பதற்கு உதவ விரும்பினால் இவை போன்ற இயங்கிக்கொண்டிருக்கும் அமைப்புகளுக்குக் கொடுங்கள். உதவுங்கள். ஹார்வாட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை இவற்றை விட எவற்றைச் சாதிக்கப்போகின்றது? எத்தனை மில்லியன்கள் சேர்த்துள்ளார்கள். 2030இல் பார்ப்போம்  ஹார்வார்ட்பல்கலைக்கழகத்தமிழ் இருக்கை தமிழ் மொழி வளர்க்க என்ன செய்திருக்கின்றதென்று.

மேலும் படிக்க ...

மற்ற கட்டுரைகள் ...

  1. நேர்காணல் பகுதி இரண்டு: ஓவியர் வீரப்பன் சதானந்தனுடன் ஓர் உரையாடல்! - நேர்காணல் கண்டவர்: எழுத்தாளர் ஜோதிகுமார் -
  2. அதிரடித் தாக்குதலுக்கு உள்ளான ஹவாய் பேர்ள் ஹாபரின் நினைவுச் சின்னங்கள்!  - குரு அரவிந்தன் -
  3. விசுவாசம் மிக்க போராளி: 'ஆனந்தி' (சுப்பிரமணியம் சதானந்தன்)!
  4. வாசிப்பும், யோசிப்பும் 374: கவிஞர் நீலாவணனின் 'பல்லிகள்'! & எழுத்தாளர் அரு ராமநாதனின் பிரேமா பிரசுரமும், வெளியிட்ட மர்ம நாவல்களும், எம் பதின்ம வயதுப் பருவமும்! - வ.ந.கிரிதரன் -
  5. எழுத்தாளர் நந்தனி சேவியருக்கான அஞ்சலி நிகழ்வு!
  6. “நான் கே.எஸ்.பேசறேன்”– நினைவாஞ்சலிக் கூட்டமும் நூல் வெளியீடும்! - லதா ராமகிருஷ்ணன் -
  7. வாசிப்பும், யோசிப்பும் 373: புதுமைப்பித்தனின் 'பொன்னகரம்' சிறுகதையும் , சிறுகதை பற்றிய சிந்தனைகளும்! - வ.ந.கிரிதரன் -
  8. வன்னியியல் ஆய்வரங்கம் -8
  9. “இலக்கியவெளி” நடத்தும் இணைவழி கருத்தாடல் நிகழ்வு! - அகில் -
  10. நம்பிக்கையளிக்கும் சிரித்திரன்!
  11. ஆய்வு: “பட்டினப்பாலைவழி: பழந்தமிழர் வாழ்வில் சூழல் விழிப்புணர்வு” - முனைவர் ஏ. பிரேமானந்த், நிகழ்ச்சித் தொகுப்பாளர் & திரைக்கதை எழுத்தாளர், புதுவை தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிலையம், புதுச்சேரி–605 006 -
  12. ரொறன்ரோவில் எருமை மாட்டின் தலைகள்!  - குரு அரவிந்தன் -
  13. நூல் வெளியீடு: எழுத்தாளர் எஸ்.பத்மநாதனின் சிந்தனைப்பூக்கள் பாகங்கள் 4 & 5!
  14. நேர்காணல் (பகுதி ஒன்று): ஓவியர் வீரப்பன் சதானந்தனுடன் ஓர் உரையாடல்! - நேர்காணல் கண்டவர்: எழுத்தாளர் ஜோதிகுமார் -
பக்கம் 86 / 104
  • முதல்
  • முந்தைய
  • 81
  • 82
  • 83
  • 84
  • 85
  • 86
  • 87
  • 88
  • 89
  • 90
  • அடுத்த
  • கடைசி