பதிவுகள் முகப்பு

கவிதை: அன்னையார் பிரிவு! - கவீந்திரன் (அ.ந.கந்தசாமி) -

விவரங்கள்
- கவீந்திரன் (அ.ந.கந்தசாமி) -
அறிஞர் அ.ந.கந்தசாமி பக்கம்
29 ஏப்ரல் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மகாத்மா காந்தியின் மனைவியான அன்னை கஸ்தூரிபா மீது மிகுந்த மதிப்பினை வைத்திருந்தவர் எழுத்தாளர் அ.ந.கந்தசாமி. அவர் தனது இருபதாவது வயதில் ஈழகேசரியில் ( 26-3-1944 பதிப்பில்) எழுதிய 'அன்னையார் பிரிவு! 'என்னும் கவிதையிது. கவீந்திரன் - என்னும் புனைபெயரில் எழுதிய கவிதை. இதன் முழு வடிவத்தையும் அண்மையில் ஈழகேசரியில் கண்டோம். - பதிவுகள் -

கவிதை: அன்னையார் பிரிவு! - கவீந்திரன் -

ஒப்பரிய காந்தியரி னொப்பில் லாத
ஓர்மனைவி செம்மையறங் காத்த சீர்மைச்
செப்பரிய பெரும்புகழாள் தேய மெல்லாம்
தாயெனவே செப்பிடுமோர் இல்லின் தெய்வம்;
இப்புவிதான் கலங்கிடவும் இந்தியத்தாய்
அழுதரற்றிக் கூவிடவும் இறந்துபட்டாள்;
இப்பெரிய துன்பந்தான் இதயந் தன்னை
ஈர்க்குதே இந்தியர்கள் வேர்க்கின்றாரே!

மேலும் படிக்க ...

உன் கடவுளிடம் போ! - கே.எஸ்.சுதாகர் -

விவரங்கள்
- கே.எஸ்.சுதாகர் -
நூல் அறிமுகம்
29 ஏப்ரல் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

* தெய்வீகன் எழுதிய `உன் கடவுளிடம் போ’ / தமிழினி பதிப்பகம்

தெய்வீகன் எழுதிய `உன் கடவுளிடம் போ’ / தமிழினி பதிப்பகம் வாசிப்புக்குக் கிட்டியது. புத்தகத்தின் தலைப்பில் உள்ளே எந்தக் கதையும் இல்லை. புதிய களம் / தளத்தில் பயணிக்கும் கதைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான வாசிப்பு அனுபவத்தைத் தந்தது. சில கதைகள் இதற்கு முன் அறிந்திராத பல சங்கதிகளைச் சொல்கின்றது. தொகுப்பின் முதல் கதையான `அவனை எனக்குத் தெரியாது’ -, ஆயுதங்களிடமிருந்து விலகி ஓடுவதை விரும்பியிருந்தும், அதுவாகவே மீண்டும் ஒருவனிடம் சேருவதைச் சொல்கின்றது. ஒரு இடத்தில் ஆரம்பித்து, இன்னோர் இடத்தில் பயணித்து, இரண்டையும் இணைக்கும் கதை. `இருள்களி’ கதை எமது போராட்ட நிகழ்வுகளை, முதலாம் உலகமகா யுத்தத்தின் போது துருக்கியின் கலிப்பொலியில் போரிட்ட அவுஸ்திரேலிய - நியூசிலாந்து வீரர்களின் நினைவுகளுடன் இணைகின்றது. இலங்கையில் கோயிலில் இருந்த பிள்ளையார் சிலை ஒன்று, எங்கெல்லாமோ சுற்றி, இந்தியா சென்று, அவுஸ்திரேலியா மெல்பேர்ணில் உள்ள அருங்காட்சியகத்தில் இருப்பதைச் சுவைபடச் சொல்லும் கதை `உறக்கமில்லாக் குருதி’.`தராசு’ என்ற சிறுகதையை நான் ஒரு குறுநாவலாகவே பார்க்கின்றேன். மேலும் இந்தக் கதையைச் சொல்வதற்கு ஆசிரியர் தேர்ந்தெடுத்த நடை தோதாக அமையவில்லையோ என்று எண்ணத் தோன்றுகின்றது.

மேலும் படிக்க ...

மழைப்பீப்பாய் (Rain Barrel)) வாங்க விரும்புகின்றீர்களா?

விவரங்கள்
- இலண்டன் சூழல் வலையமைப்பு! -
சுற்றுச் சூழல்
29 ஏப்ரல் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஒண்டாரியோவாசிகளின் கவனத்துக்கு: மழைப்பீப்பாய் (Rain Barrel) மழைப்பீப்பாய் வீட்டுத்தோட்டக்காரர்களுக்கு மிகவும் பயன்மிக்கது. மழை நீரைச் சேகரித்துத் தோட்டத்துக்கும் நீர்ப்பாய்ச்சலாம். இதன் மூலம் தண்ணீர்ப் பாவனைக்கான கட்டணச்செலவினையும் குறைக்கலாம். சூழலுக்கு நன்மை பயக்கும். மழைப்பீப்பாய் ஒன்றினை வாங்குவதன் மூலம் இலண்டன் சூழல் வலையமைப்புக்கும் நிதி சேகரிக்க உதவி செய்கின்றீர்கள். நீங்களும் பயனடைகின்றீர்கள்.

மேலும் படிக்க ...

எழுத்தாளர் அந்தனி ஜீவாவின் 'அ.ந.க ஒரு சகாப்தம்' நூல் வெளியீட்டுக் காட்சி!

விவரங்கள்
Administrator
இலக்கியம்
28 ஏப்ரல் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எழுத்தாளர் அந்தனி ஜீவா . எழுத்தாளர் அ.ந.கந்தசாமி பற்றி 'அ.ந.க ஒரு சகாப்தம்' என்னும் நூலை எழுதி வெளியிட்டுள்ளார். அந்நூல் வெளியீட்டு விழாவில் அவர் உரையாற்றுவதை வெளிப்படுத்தும் புகைப்படம்.

ஆய்வு: அ.ந.கந்தசாமியின் 'மனக்கண்' நாவலும் , ;குருட்டு வாழ்க்கை சிறுகதையும் சோபாகிளிஸ்ஸின் எடிப்பஸ் நாடகமும்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
28 ஏப்ரல் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அண்மையில் செங்கை ஆழியான் தொகுத்திருந்த ஈழகேசரிச் சிறுகதைத்தொகுப்பில் எழுத்தாளர் அ.ந.கந்தசாமியின் ஆரம்பகாலச் சிறுகதையொன்றினை வாசிக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. அதன் தலைப்பு 'குருட்டு வாழ்க்கை' இதனைப்பற்றி முன்பும் அறிந்திருக்கின்றேன். ஆனால் வாசித்திருக்கவில்லை. இப்பொழுதுதான் முழுமையாக வாசிக்கக் கிடைத்தது. இது வெளிவந்தது ஈழகேசரியின் 17.05.1942 பதிப்பில். அ.ந.க பிறந்தது ஆகஸ்ட் 8, 1924. அதன் படி இச்சிறுகதை வெளியானபோது அ.ந.க.வுக்கு வயது பதினெட்டு. தொகுப்பிலுள்ள அ.ந.க பற்றிய குறிப்பில் அ.ந.க.வின் முதலாவது சிறுகதை அவரது பதினேழாவது வயதில் ஈழகேசரியில் வெளியானதென்றும் , சிப்பி என்னும் புனை பெயரில் எழுதிய பகல் வெள்ளி என்னும் சிறுகதை 1941இல் பிரசுரமானதென்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்படி சிறுகதை வெளியானபோது அ.ந.க.வின் வயது 17 என்பதால் அதுவே அவரது பிரசுரமான முதலாவது சிறுகதையாகவுமிருக்கக் கூடும். (அ.ந.க ஈழகேசரியின் மாணவர் பகுதியில் நிறைய எழுதியுள்ளார். அவைதாம் அவரது பிரசுரமான எழுத்துகள். அப்பகுதியிலும் அவரது சிறுகதையொன்று வெளியாகியுள்ளது. அது அவர் மாணவராக இருந்த சமயம் எழுதிய சிறுகதை).

இச்சிறுகதையின் கதைச்சுருக்கம் வருமாறு: கதைசொல்லியான ராமலிங்கம் நண்பன் சேகரனைப் பலவருடங்களுக்குப் பின்னர் சந்திக்கின்றான். அப்பொழுது அவன் குருடாகவிருக்கின்றான். அவன் தன் வாழ்வின் கதையைக் கூறுகின்றான். அப்பொழுது அவன் தான் இரு தடவைகள் குருடானதாகக் குறிப்பிடுகின்றான். அவன் செல்வந்தர் வீட்டுப்பிள்ளை. அவனது பாடசாலைக்கண்மையிலிருந்த பெண்கள் பாடசாலையைச் சேர்ந்த அட்வகேட் ஒருவரின் மகளான ராஜம்மாவை அவன் காதலிக்கின்றான். இதனை அவன் நண்பனான ராமலிங்கத்திடம் கூடக் கூறவில்லை. பின்னர் படிப்பு முடிந்து கிராமத்துக்குத் திரும்பியதும் பெற்றோரிடம் இது பற்றிக் கூறுகின்றான். அச்சமயம் ஊரில் பரவிய அம்மை சேகரனுக்கும் தொற்றி விடுகின்றது. அதனால் அவன் கண்பார்வை போய்விடுகின்றது. கண் பார்வை போய்விட்ட சேகரனுக்கு ராஜம்மாவைப் பெண் கொடுக்க அவளது பெற்றோர் மறுத்துவிடுகின்றனர். இதனைக் கேள்விப்பட்ட சேகரன் மனமொடிந்து விடுகின்றான். அவனது பெற்றோரோ அவனுக்கு இன்னுமொரு பெண்ண மணம் முடிக்க முயற்சி செய்கின்றனர். சேகரனோ அதற்குச் சம்மதிக்கவில்லை. இதனால் ராஜம்மாவின் பெற்றோர் சம்மதித்து விட்டதாகப் பொய் கூறி இன்னுமொரு பெண்ணை அவனுக்கு மணம் செய்து வைக்கின்றனர். அந்தப்பெண்ணும் அவனது மனக்கண்ணாக விளங்கி அவனுடன் அன்பாக வாழ்ந்து வருகின்றாள்.

மேலும் படிக்க ...

ஆய்வு: குடும்ப சூழலில் பெண் அடையாளங்கள்! - பா. தாரா, முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை அறிஞர் அண்ணா அரசினர் கலைக்கல்லூரி, விழுப்புரம் – 605 602 -

விவரங்கள்
- பா. தாரா, முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை அறிஞர் அண்ணா அரசினர் கலைக்கல்லூரி, விழுப்புரம் – 605 602 -
ஆய்வு
28 ஏப்ரல் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

முன்னுரை

தொடக்க காலத்தில் மனித இனம் குழுவாக வாழும் இனக்குழு வாழ்க்கை முறையை மேற்கொண்டிருந்தது. இவ்வாறு வாழ்ந்த மனித இனம் நாகரிகம் பெற்ற நிலை மனித இனத்தின் அடுத்தகட்ட வளர்ச்சியாகும். இவ்வின வரலாற்றின் முக்கிய நிகழ்வு இதுவென்று மானிடவியலார் குறிப்பிடுகின்றனர்.

தந்தை ஆதிக்கச் சமூகம்

உடைமைச் சமூகம் பாலியல் வேறுபாட்டினை அடிப்படையாகக் கொண்ட உயர்வு, தாழ்வு என்பதான கருத்தாக்கத்தினை உருவாக்கியது. இதன் காரணமாக இனக்குழுச் சமூக உட்கட்டமைப்பான தாய்வழிச் சமூக முறை முற்றிலும் அற்று தந்தையாதிக்கச் சமூகம் உருவாகியது. இதன் தொடர்ச்சியாகக் குடும்ப அமைப்பு பெண்ணை இரண்டாம் பாலினமாகவும், ஆணை அதிகார மையமாகவும் நிறுவியது.
இரண்டாம் பாலினமாகப் பார்க்கப்படுதல்

இரண்டாம் பாலினமாகப் பார்க்கப்படும் பெண் இனம் உலக அளவிலான பல்வேறு அறிவுசார் மாற்றங்களின் ஊடாக விழிப்படைந்த நிலையில் கல்வியறிவைப்பெறும் வாய்ப்பினைப் பெற்றது. அதன் விளைவாகத் தன்னைக் குறித்தும் தன்னோடு இணைத்துப் புறச் சூழலையும் உள்ளார்ந்து நோக்கும் விழிப்புநிலையை அடைந்தது.

குடும்ப அமைப்பு

அடுத்தகட்ட வளர்ச்சியாக அறிவார்ந்த சூழலில் பெண்கள் இயங்கத் தொடங்கினர். படைப்புச் சூழலைக் கைக்கொண்டு தன் உணர்வை இயல்புத் தன்மையோடு பதிவு செய்ய முன்வந்தனர். அதன் வெளிப்பாடே குடும்பம்.

மேலும் படிக்க ...

சிறுகதை: வாரிசுகள் ! - சுப்ரபாரதிமணியன் -

விவரங்கள்
- சுப்ரபாரதிமணியன் -
சிறுகதை
27 ஏப்ரல் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

” என்னமோ சீரியசா ஏதோ போயிட்டிருந்தது போல. நான் வந்து வாசல்லெ நின்னு கொஞ்ச நேரம் கழிச்சுதா திரும்பிப் பாத்தீங்க .. ”

“ விதவிதமான க்ளயண்ட்ஸ்.. குடிகார நாய் ஒருத்தன் எல்லார்த்தையும் கஷ்டப்படுத்தறான். தற்கொலை பண்ணிக்கவன்னு மிரட்டல் வேற பண்றானம்மா.அதெப்பத்தி பேசிகிட்டிருந்தன்.”

”குடிகாரனோட ஒண்ணு சேத்தி சொன்னீங்களே . அது உங்களுக்கும் சேத்தா ‘

தேவராஜன் பெருமூச்சு விட்டுக்கொண்டார்.

” செரி.. உள் ரூம்லே போயி உட்காருங்க. வந்தர்ரன்.. மகளே உள்ள போயி உட்காரு. வந்தர்ரேன்” சியாமளா தளதளத்துக் கொண்டிருந்த சேலையை சரிசெய்து கொண்டு உள் அறையைப் பார்த்தாள். அவளின் சேலைத்தலைப்பைப் பிடித்திருந்த குழந்தை தன் மிரட்சிப்பார்வையைத்தவிர்த்து இயல்பாகிப் புன்னகைத்தது.

சியாமளா வாசலில் நின்று பார்த்தபோதே நாலைந்து பேர் மும்முரமான விவாதங்களில் இருப்பது தெரிந்திருந்தது. தேவராஜன் அவர்களைப் பார்த்த கணத்தில் அங்கிருந்தே வா மகளே என்றார்.

அங்கிருந்தவர்கள் அதைக் கேட்டு புருவம் உயர்த்துவது போல் பார்த்தார்கள். மகளே என்ற அவரின் விளிப்புதான் அந்த புருவம் உயர்த்தலுக்குக் காரணம்.புருவம் உயர்த்தினவர்களின் மத்தியில் மீண்டும் சென்று உட்கார்ந்து கொண்டான். முன்வாசலில் இருந்த நாய் குரைத்து புது ஆள் யாரோ வருவதைச் சொன்னது

.” சும்மா இருடா கருப்பா. சும்மா சும்மா விசுவாசத்தைக்காட்டிக்காதே “ தேவராஜன் உரக்கச் சப்தமிட்டார். அந்த ஆள் மறைந்து போனார். நாயின் குரைப்பும் நின்று போய் விட்டது. லேசான சப்தத்தில் அந்த விவாதம் ஆரம்பிப்பதற்கான முஸ்தீபு போல் குரல்கள் கேட்டன. முன் வாசலில் கட்டப்பட்டிருந்த கோழியொன்று கரகரத்து அதன் இருப்பைக்காட்டிக் கொண்டிருந்தது. 

மேலும் படிக்க ...

என்னைப் பற்றி.. - பிரபஞ்சன் -

விவரங்கள்
- பிரபஞ்சன் -
இலக்கியம்
27 ஏப்ரல் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்
இன்று, ஏப்ரில் 27,  எழுத்தாளர் பிரபஞ்சனின் பிறந்தநாள். எழுத்தால் வாழ்ந்தவர் இவரென்று கூறலாம். அதன் காரணமாக இவர் அடைந்த வாழ்க்கை அனுபவங்களையெல்லாம், உணர்வுகளையெல்லாம் தன் எழுத்துகளில் பதிவு செய்திருக்கின்றார். குறிப்பாகச் சென்னை நகரத்து வாழ்க்கையைப்பற்றிய இவரது குறிப்புகள் முக்கியமானவை. தமிழ் நாவல்களில் இவரது 'வானம் வசப்படும்' மற்றும் 'மானுடம் வெல்லும்' ஆகியவை முக்கியமானவை. பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் இருந்த பாண்டிச்சேரி மக்கள்தம் வரலாற்றை, சமூக அமைப்பினை, அங்கு நிலவிய முரண்களை இவரது இந்நாவல்களூடு கண்டு கொள்ளலாம்.
 
இவரது 'வானம் வசப்படும்' இந்திய மத்திய அரசின் சாகித்திய விருதினைப்பெற்றது என்பதும், இவரது மறைவின்போது இறுதிச்சடங்குகளை புதுவை அரசு அரச மரியாதைகளுடன் நடத்தியதென்பதும் குறிப்பிடத்தக்கது.
 
தமிழ் எழுத்தாளர்களில் வசீகரம் மிக்க எழுத்தாளர்களில் இவரும் ஒருவர். இவரது மீசையும், புன்சிரிப்பும் இவரைப்பற்றி எண்ணியதுமே கண் முன்னால் வந்து நிற்கின்றன. இன்னும் பல வருடங்கள் வாழ்ந்து மேலும் பல இலக்கிய சாதனைகளைப் புரிந்திருப்பார் என்று எண்ணும் சமயத்தில் இவர் மறைந்தது தமிழ் இலக்கியத்தின் துரதிருஷ்டம்.
மேலும் படிக்க ...

பயனுள்ள மீள்பிரசுரம்: நீல பத்மநாபனின் நாவல்கள் சாதாரணத்துவத்தின் கலை! - ஜெயமோகன் -

விவரங்கள்
- ஜெயமோகன் -
இலக்கியம்
27 ஏப்ரல் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எழுத்தாளர் நீலபத்மநாபனின் பிறந்தநாள் ஏப்ரில் 26. அதனையொட்டி எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் இக்கட்டுரை மீள்பிரசுரமாகின்றது. - பதிவுகள். -


[ஒன்று]

தமிழிலக்கியத்தில் நுழையும் ஒரு வாசகன் நீல பத்மநாபனைப் பற்றி குழப்பமான ஒரு சித்திரத்தையே அடைவான் . அவரது பெயர் அதிகமாக எங்குமே மேற்கோள் காட்டப் படுவது இல்லை. அவரது படைப்புகள் பேசப்படுவதுமில்லை. அவரைப் பற்றி பொதுவான கருத்தைக் கேட்டால் கணிசமான சம கால வாசகர்கள் அவர் தமிழிலக்கியத்தின் கடந்த காலத்து நினைவுகளில் ஒன்று மட்டுமே என்று சொல்லவும் கூடும். இன்று அவருடைய படைப்புகள், அவரது பாணி ஏதும் அவ்வளவு முக்கியமில்லை என்ற எண்ணம் பரவலாக உள்ளதை அவன் காண்பான். பல எளிய இளம் வாசகர்கள் உடனடியாக அவரை ஒதுக்கி விடுவதுமுண்டு . அதே சமயம் தமிழ் நாவல்கள் பற்றிய எந்த ஒரு விமரிசனத்திலும், எந்த பட்டியலிலும் அவரது இரு நாவல்கள் ‘தலைமுறைகள்’, ‘பள்ளிகொண்ட புரம்’ இடம் பெற்றிருப்பதையும் அவன் காண்பான். மிகப் பெரும்பாலான விமரிசகர்களுக்கு அவர்களுடைய மிகச் சிறிய பட்டியலில் கூட கடந்த முப்பத்தைந்து வருடங்களாக அப்படைப்புகளை தவிர்க்க முடியவில்லை என்பது ஓர் எளிய விஷயமல்ல. இந்த நிலை அவ்வாசகனுக்கு ஒரு ஆழமான குழப்பத்தை ஏற்படுத்தக் கூடும்.

நீல பத்மநாபனின் இலக்கிய பங்களிப்பின் முக்கியப் பகுதி அவருடைய இளமைப் பருவத்திலேயே நடந்து விட்டது என்பது ஒரு வகையில் சோகமானது. அதன் பின்பு மெல்ல, மெல்ல காலம் தன்னை கடந்து முன் செல்வதை கண்டபடி அவர் பின் தங்கி நிற்க வேண்டியிருந்தது. இலக்கியவாதிக்கு அங்கீகாரமும், புகழும் அவசியம் கிடைக்க வேண்டிய, முதிய காலத்தில் அவர் பழையவராக கணிக்கவும் படுகிறார் . எந்த படைப்பாளியையும் எப்போதாவது ஒரு நாள் காலம் கடந்து செல்லும். எப்போதைக்குமான படைப்பாளிகள் என்று நமக்கு தோன்றிக் கொண்டிருந்த ஒரு படைப்பாளி சட்டென்று காலத்தின் எல்லைக் கோட்டுக்கு அப்பால் நிற்பதை நாம் பார்க்கும் அனுபவம் இலக்கியத்தில் மிக வியப்பும், பிரமிப்பும், சில சமயம் அச்சமும் தருவதாகும்.

மேலும் படிக்க ...

கலந்துரையாடல்: என்.கே.ரகுநாதம் - தகவல்: கற்சுறா -

விவரங்கள்
- தகவல்: கற்சுறா -
நிகழ்வுகள்
27 ஏப்ரல் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

நேரம் மாற்றப்பட்டிருக்கிறது நண்பர்களே! சனிக்கிழமை
4:00pm to 8:00pm. கொரோனாக்கால வரைமுறை தளர்த்தியதில்
கொஞ்சம் வசதியாக்கப்பட்டிருக்கிறது.
அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்

கவிதை: காலவெளிக் கைதியொருவனின் பிரகடனம்!  - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
கவிதை
26 ஏப்ரல் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

'காலவெளி'ச் சிறைக்குள் நான்
கிடந்து தவிக்கின்றேன்.
மேன்முறையீடு செய்யவும்
அனுமதியில்லா கைதி நான்.
மரணதண்டனைக் கைதி நான்.
மரணதண்டனைக் கைதி நான்.
'நேரவெளி' சுவர்களுக்குள்
நீட்டி நிமிர்ந்து  படுத்திட முடியாமல்
நான் குடங்கிக் கிடக்கின்றேன்.
காலத்தை இச்சிறைக்குள்
கழிக்க நேர்ந்தது எதனால்?

மேலும் படிக்க ...

இலங்கையின் சமகால அரசியல் , பொருளாதார நெருக்கடிகள்! -தொடர் உரையாடல் -06 - தகவல்: எம்.பெளசர் -

விவரங்கள்
- தகவல்: எம்.பெளசர் -
நிகழ்வுகள்
25 ஏப்ரல் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மேலும் படிக்க ...

கிளிம்மின் சரித்திரம் - கார்க்கியின் இறுதி நூல் ஓர் அறிமுகம்! (சென்ற இதழ் தொடர்ச்சி) - ஜோதிகுமார் -

விவரங்கள்
- ஜோதிகுமார் -
ஜோதிகுமார்
23 ஏப்ரல் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 கார்க்கியே ஒரு கட்டத்தில் கூறுவார்: அடிமைகளின் ஒழுக்கமுறை போலவே எசமானர்களின் ஒழுக்கமுறையும் எனக்கு அந்நியமானதுதான். கலகம் செய்ய நிமிர்ந்தவனுக்கு உதவி செய் என்ற ஒழுக்கமுறை எனக்குள் வளர்ந்திருந்தது, என. ஒரு புறம் பைபிள் போன்றவை ஏற்படுத்தியிருந்த அல்லது நியாயப்படுத்தியிருந்த ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் வசதியாக ஏந்திக் கொடு என்பது போன்ற அடிமைகளின் கலாச்சாரம். மறுபுறம், நீட்சே போன்றோர் நியாயப்படுத்தியிருந்த – ‘மக்கள் என்போர், ஒரு சிலரால் அடக்கி ஆளப்பட பிறந்தவர்களே’ என்று போதித்த முதலாளிகளின் அறம். இவ்அறங்களிடையேத்தான், தான் தனது மூன்றாவது ஒழுக்கமுறையை கைக்கொண்டதாக கார்க்கி கூறுவார்.

அவர் மேலும் கூறுவார்: “ வாழ்க்கையில் செயல்பட்டு வருகிற ஏதோ ஒரு சக்தி எல்லோரையும் விகாரப்படுத்தி வருகின்றது. அந்த ‘சக்தியைத்தான்’ இலக்கியம் பிரதிபலிக்க வேண்டுமே தவிர அது விகாரப்படுத்தி வைத்திருக்கும் ‘விஷயங்களை’ அல்ல” என்று. இக்காரணங்களின் நிமித்தமே, சாராம்சத்தில், தஸ்தவாஸ்க்கி முதல் மேலும் அநேகரில் இருந்து கார்க்கி அடிப்படையில் வித்தியாசப்படுவதாய் இருக்கிறார். இப்பார்வையில் நின்றே, கார்க்கி, கிளிம் என்ற பாத்திரத்தை அணுகி உள்ளார் என நம்பலாம். இத்தகைய ஓர் பின்னணியில் கிளிம் ஒரு புதிய படைப்பாக புதிய வார்ப்பாக தோன்றுகிறான். (இதுவரை கார்க்கி படைத்தளித்த தாயின் பாவெல், பிரம்மச்சாரி மாட்வி போன்றவர்களிடமிருந்து வித்தியாசமுற்று…)

மேலும் படிக்க ...

எழுத்தாளர் கோமகனுடனுடனோர் 'உட்பெட்டி' உரையாடல்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
23 ஏப்ரல் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எழுத்தாளர் கோமகனின் எதிர்பாராத மறைவு பலரையும் நிச்சயம் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கும். அவர் அவ்வப்போது உட்பெட்டியில் வந்து தொடர்பு கொள்வார். அவருடனான உட்பெட்டி உரையாடல்களில் சிலவற்றை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன். அவரது ஆளுமையினை எடுத்துக்காட்டும் உரையாடல்கள் இவை என்பதால் இவற்றைப்பகிர்ந்து கொள்வதும் அவசியமென்று நான் கருதுகின்றேன். இவற்றிலிருந்து அவர் தனது 'நடு' இணைய இதழைத் தனது சுய முயற்சியினால் இணையத்தில் கிடைத்த தகவல்களின் உதவியுடன் வடிவமைத்தார் என்பதை அறிய முடிகின்றது. அது அவரது சுய முயற்சியின் மூலம் கற்கும் ஆற்றலை வெளிப்படுத்துகின்றது. அந் 'நடு' இதழைச் சிறப்பாக வடிவமைத்து, காத்திரமான இதழாகக் கொண்டு வந்தது அவரது ஆற்றலின் வெளிப்பாடே.

எப்பொழுதும் ஏதாவது ஆக்கமொன்று தேவையென்றால் 'வணக்கம் கிரிதரன், உங்களால் எனக்கு ஓர் உதவி வேண்டும் .' என்று உட்பெட்டியில் தகவல் அனுப்புவார். ஆனால் அவ்விதமான தகவல்கள் அவரிடமிருந்து இனி வரபோவதில்லை என்பது துயர் தருவது.

'நடு' இதழ் வெளியானபோது அதற்கான படைப்புகளை அவர் எழுத்தாளர்களை அணுகிப் பெற்று வெளியிட்டார். பின்னர் அது முக்கிய இதழாக நன்கறியப்பட்டதும் அதற்கான தேவை இருந்திருக்காது. பலரும் படைப்புகளைத் தாமே விரும்பி அனுப்பியிருப்பார்கள். 'நடு' இதழ் மீது அவர் காட்டிய ஆர்வத்தை, அதை வெளியிடுவதில் அவர் கொடுத்த உழைப்பினை இவ்வுரையாடல்கள் வெளிப்படுத்துகின்றன. அதனால் இலக்கியப் பெறுமதி மிக்கவை.

மேலும் படிக்க ...

'தீர்த்தக்கரை' சாந்திகுமாரின் சமூக, அரசியற் செயற்பாடுகள் பற்றியதொரு பார்வை! (4 -9) - ஜோதிகுமார் -

விவரங்கள்
- ஜோதிகுமார் -
ஜோதிகுமார்
23 ஏப்ரல் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்


4

வேறு வார்த்தையில் கூறுவோமானால், வரலாறு வரலாறாக–அதாவது ஆதிக்க சக்திகளால், தந்திரோபாய ரீதியாக, களமிறக்கி விடப்பட்ட மேற்படி நகர்வுகளால், இலங்கையின் அரசியல் சுவாத்தியமே சீர்குலைந்து மாற்றமுற்ற ஒரு நிலையில், இனவாத ஒடுக்குமுறைக்கான சுவாத்தியங்களும் அதன் பதில் விளைவான தேசியத்திற்கான முகிழ்ப்புகளும், களமிறக்கப்பட்ட நிலையில், இவை பொறுத்த மார்க்சிய நிலைப்பாடுகள் யாவை என்பதுவே கேள்வியானது.

சிறுபான்மை தேசிய முதலாளிகளும், பெருந்தேசிய முதலாளிகளும் (அல்லது ஒடுக்கும் சமூகத்தின் ஆதிக்க சக்திகளும் ஒடுக்கப்படுவோர் சமூகத்தின் ஆதிக்க சக்திகளும்) கைக்கோர்த்திருப்பதை தன் வாழ்நாள் முழுவதும், (தன் பல்கலைக்கழக வாழ்நாள் முடிந்ததிலிருந்து) நாள்தோறுமாய் பார்த்து வந்த ஒரு மனிதர், ஒரு பொழுது முடிய மறுநாள் காலை, தன் விதிமுறைகளை மாற்றியமைத்துக் கொள்வார் என எதிர்ப்பார்ப்பது–சற்றே அதிகமானது. இங்கேயே டானியலின் மேற்படி பத்திரிக்கை குறிப்புகள் முக்கியத்துவப்பட்டு போகின்றன.

இருந்தும் கார்ல்மாக்ஸ்–எங்கெல்ஸ்–லெனின் ஆகியோரின் விடயங்களில், இவ்வகை மாற்றங்கள், சடுதியாக, அதிலும் தக்க தருணங்களில் கைப்பற்றப்பட்டது என்பதும் உண்மையே. அதாவது, ஆட்சியாளர்களின் நடைமுறை தந்ரோபாயங்களை, மிக நுணுக்கமாக பின்தொடர்ந்து, அதற்கூடு உய்த்தெறியும் கூரிய அறிவுத்திறன் கொண்டு, வரலாற்று அனுபவங்களிலிருந்து தம் நகர்வுகளை வகுத்த மேதைமை அவர்களுடையது. இதனுடன் கூடவே, தத்துவம்-அரசியல் விஞ்ஞானம்-பொருளாதாரம் ஆகிய அனைத்து துறைகளையும் அரவணைக்கும் விசாலித்த பார்வையையும் அவர்கள் பின்புலமாகவே கொண்டிருக்க செய்தனர் என்பதும் குறிக்கத்தக்கதே. மறுபுறம், 1971ஐ அடுத்து வந்த காலப்பகுதியில், தூவப்பட்ட இந்நச்சு விதைகளின் மொத்த அறுவடை 1977 ஆகியது. இதன் பரிமாணங்கள் - இருந்த மிச்ச சொச்ச, இடதுசாரி சிந்தனைகளையும் நிர்மூலமாக்குவதாகவே அமைந்திட்டன.

மேலும் படிக்க ...

அறிதலும் பகிர்தலும் 14 _ அரசின் தோற்றமும் வளர்ச்சியும் | ஒரு சமூக மானிடவியல் நோக்கு நிகழ்விற்கான அழைப்பு! - விதை குழுமம் -

விவரங்கள்
- விதை குழுமம் -
நிகழ்வுகள்
23 ஏப்ரல் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மேலும் படிக்க ...

காலிமுகத் திடல் - 2022! - செ.சுதர்சன் -

விவரங்கள்
- செ.சுதர்சன் -
கவிதை
23 ஏப்ரல் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 

01

வயிற்றிலடிக்கிற போது
ஒரு கொடிப் போராட்டமும்
ஒரு எதிர்ப்புச் சுலோகமும்
ஒரு பெரும் புரட்சியை
எவ்வாறு நிகழ்த்தும்!

ஒரு துண்டு பாணும்
ஒரு பால்மா பையும்
ஒரு கலன் எரிபொருளும்
இன்னும்
மின்வெட்டும்....
அதை எவ்வாறு நிகழ்த்தும்!

பசியின் நெருப்பிலிருந்து
புரட்சியின் முதல் பொறி
பற்றுகிறதெனின்...
உண்டாறும் காலம் வருகையில்
அதன் சுவாலை என்னவாகும்!

ஒரு புரட்சியை நிகழ்த்தும்
அதிகாரக் கதிரையின் கால்களை
விலை ஏற்றம் அசைக்கும்
என்ற நம்பிக்கையை
எங்கிருந்து பெறுவேன்!

'எதிர்' என்றொரு சொல்லை
எங்கு நடலாம்?
எவ்வாறு வளர்க்கலாம்?

மேலும் படிக்க ...

அச்சில் வெளியான எனது முதல் ஐந்து படைப்புகள்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
23 ஏப்ரல் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்
பத்திரிகைகளோ அல்லது சஞ்சிகைகளோ சிறுவர்களுக்கான பகுதிகளுக்கும் இடம் கொடுப்பது மிகவும் அவசியமானதொன்று. சினிமா நடிகைகளின் உடலழகைக் காட்டும் கவர்ச்சிப்படங்களை வெளியிடுவதில் காட்டும் ஆர்வத்தை விட அதிக ஆர்வத்தைக் குழந்தைகளுக்கான (அல்லது சிறுவர்களுக்கான) பகுதிகளை நடத்துவதில் காட்ட வேண்டும்.
 
இச்சிறுவர் பகுதிகளே எதிர்கால எழுத்தாளர்கள் பலரை உருவாக்கும் ஆற்றல் மிக்கவை. கண்ணன்(தமிழகம்), வெற்றிமணி (இலங்கை) போன்ற சிறுவர் சஞ்சிகைகளின் பழைய இதழ்களைப் பார்த்தால், ஈழநாடு (மாணவர் மலர்), சுதந்திரன் (வளர்மதி) போன்ற பத்திரிகைகளின் சிறுவர் பகுதிகளைப் பார்த்தால் தெரியும் இவற்றில் எழுதியவர்களில் எத்தனைபேர் பிற்காலத்தில் நாடறிந்த முக்கியமான எழுத்தாளர்களாக உருவாகினார்கள் என்பதை.
 
என்னைப்பொறுத்தவரையில் ஈழநாடு, வெற்றிமணி , கண்மணி ஆகியவற்றின் சிறுவர் பகுதிகளே எனக்கு ஆரம்பத்தில் எழுதுவதற்குக் களம் அமைத்துக்கொடுத்தவை.
மேலும் படிக்க ...

இலங்கையின் சமகால அரசியல் , பொருளாதார நெருக்கடிகள்! -தொடர் உரையாடல் -05 - தகவல்: எம்.பெளசர் -

விவரங்கள்
- தகவல்: எம்.பெளசர் -
நிகழ்வுகள்
22 ஏப்ரல் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மேலும் படிக்க ...

மலைத்தலைய கடற்காவிரி -பட்டினப்பாலை காட்டும் காவிரியின் அழகு! - இளவரசி இளங்கோவன் , மொன்றியல்,கனடா -

விவரங்கள்
- இளவரசி இளங்கோவன் , மொன்றியல்,கனடா -
இலக்கியம்
22 ஏப்ரல் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

உலகத்தமிழ் உறவுகளுக்கு அன்பின் வணக்கங்கள். சங்க இலக்கியம், வரலாற்று ஆய்வாளர்களின் ஆய்வுகளை மெய்ப்பிக்கும் இலக்கிய சான்றுகள். இவற்றில் இல்லாத தகவல்களே இல்லை எனலாம். பழம் இலக்கியங்களை படித்து என்ன ஆகப்போகிறது என நினைப்பவர்கள் சற்றே நேரம் ஒதுக்கி இவ்விலக்கியங்களில் கூறப்பட்டுள்ள வாழ்வியலை படித்தர்களானால், அறம், காதல், வீரம் , வணிகம் , தலைமை , ஆளுமை என்பதெல்லாம் என்ன என்பதில் தெளிவான பார்வையை பெறுவார்கள். தெளிவு பிறந்தால் அச்சமூகம் நிச்சயம் சிறந்ததொரு சமூகமாக வளர வாய்ப்புள்ளது. மேலைநாட்டு வாழ்வியலை கற்றுக்கொள்ள காட்டும் ஆர்வத்தில் ஒரு பங்கேனும் நம் பண்டைத்தமிழ் கலாச்சாரத்தையும் கற்றுக்கொள்ள காட்டுவோமாக.

இந்த கட்டுரையில் காவிரியின் பெருமையை, அழகை சங்க இலக்கியம் பட்டினப்பாலையின் வழியாக பருகுவோம் வாருங்கள்.

301 வரிகளைக் கொண்டதும் ,வரலாற்று ஆய்வாளர்களுக்கும், சமூகவியல் நோக்கர்களுக்கும், இலக்கிய ஆர்வலர்களுக்கும் மற்றும் மொழி ஆராய்ச்சியாளர்களுக்கும் மிகவும் விருப்பமானதும், பயன்தரத்தக்கதுமான நூல்களில் பட்டினப்பாலையும் ஒன்று. உள்ளதை உள்ளபடியே கண்ணாடி போல காட்டுவது சங்க இலக்கிய நூல்களில் காணப்படும் இயல்பு.

மேலும் படிக்க ...

`நோ போல்’ சிறுகதைத்தொகுதியை முன்வைத்து.. - கே.எஸ்.சுதாகர் -

விவரங்கள்
- கே.எஸ்.சுதாகர் -
நூல் அறிமுகம்
22 ஏப்ரல் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஒரு சிறுகதை எப்படி இருக்க வேண்டும் என்று வரும்போது, யாரும் இத்தனை சொற்களுக்குள் சிறுகதை இருக்க வேண்டும் என்று வரையறை செய்வதில்லை. இப்பொழுது வாசிப்புப் பழக்கம் மிகவும் அருகி வருகின்றது. பத்திரிகைகள் சஞ்சிகைகள் கூட சிறுகதைகளின் அளவை மட்டுப்படுத்துகின்றன. நீண்ட கதைகளை விரும்புவதில்லை.

கிருஷ்ணமூர்த்தியின் சிறுகதைகள் அளவில் சிறியவை. ஆனால் உள்ளடக்கத்தில் பல அம்சங்களைத் தொட்டு நிற்பவை. அசத்துபவை. `மகிழ்’ வெளியீடாக, இந்த வருடம் (2022) வந்திருக்கும் `நோ போல்’ சிறுகதைத்தொகுதியில் மொத்தம் எட்டுக்கதைகள் இருக்கின்றன. கடந்த பதினாறு வருடங்களில் எட்டுச் சிறுகதைகள் மட்டுமே எழுதியிருக்கும் கிருஷ்ணமூர்த்தி, வாசிப்பதும் சினிமா பார்ப்பதும் தனக்கு மிகவும் பிடித்தமானது எனக் குறிப்பிடுகின்றார். கிருஷ்ணமூர்த்தியின் ஆரம்பகாலச் சிறுகதைகளில் இருந்த விடயதானம் தற்போதைய கதைகளில் காணக் கிடைக்கவில்லை. வேல் அன்பன், ஒரு வீடு – இருவேறு உலகம், பசி, சாப்பாடு சிறப்பாக வந்திருக்கின்றன. உயிர் சிறுகதை எழுதப்பட்டுள்ள உத்தி ஏனைய கதைகளில் இருந்து வேறுபடுகின்றது.

மேலும் படிக்க ...

யார் பிழை? - முனைவா் சி. இரகு, உதவிப்பேராசிரியா், தமிழ்த்துறை, இலொயோலா கல்லூரி, வேட்டவலம், திருவண்ணாமலை. -

விவரங்கள்
- முனைவா் சி. இரகு, உதவிப்பேராசிரியா், தமிழ்த்துறை, இலொயோலா கல்லூரி, வேட்டவலம், திருவண்ணாமலை. -
கவிதை
22 ஏப்ரல் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

நீ பிழையா …?
நான் பிழையா…?
அல்ல
நாம் தாம் பிழையா…?
எல்லாம் பிழைதான்.

பிழையாய்போனோம்
பிழையாய் வாழ்கின்றோம்
தவறுகளை
தட்டிக்கேட்காமல்
தவறுகளோடு சரியாகின்றோம்.

தவறாய்போன
வழியில்
நோ்மை
எவ்விடத்தில்
அறியவே முற்படுகின்றோம்.

மேலும் படிக்க ...

அஞ்சலிக்குறிப்பு: எழுத்தாளர் கோமகன் நினைவுகள் ! குரலற்றவரின் குரலை ஒலிக்கச்செய்தவரின் குரல் ஓய்ந்தது ! ! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
22 ஏப்ரல் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எழுத்தாளரும் ‘ நடு ‘ இணைய இதழின் ஆசிரியருமான கோமகன் பாரிஸிலிருந்து விடுமுறைக்கு இலங்கைக்கு வந்து திரும்புகையில் கட்டுநாயக்கா விமானநிலையத்தில் மாரடைப்பு வந்து மரணமடைந்தார் என்ற செய்தி அதிர்ச்சியைத்தருகிறது. அற்பாயுளில் மறைந்திருக்கும் கோமகனின் இயற்பெயர் இராஜராஜன். சுறுக்கர் என்ற புனைபெயரையும் கொண்டிருந்தவர். சிறுகதை, பத்தி எழுத்துக்கள், நேர்காணல் முதலான துறைகளில் தொடர்ந்து எழுதிவந்தவர். கடந்த 2017 ஆம் ஆண்டு இவர் வெளியிட்ட குரலற்றவரின் குரல் நேர்காணல் தொகுப்பு இலக்கியப்பரப்பில் கவனத்தை பெற்றிருந்தது. கோமகனின் தனிக்கதை, முரண் முதலான சிறுகதைத் தொகுப்புகளையும் வரவாக்கியிருப்பவர்.

எழுத்தாளர்கள் அனைவருமே ஒரே நேர்கோட்டில் பயணிக்கமுடியாது. மாற்றுக்கருத்துக்களுடன் போராடும் இயல்புள்ளவர்கள்தான் எழுத்தாளர்கள். அவர்களின் இயல்புகளை நன்கு தெரிந்துகொண்டே தொடர்பாடலை மேற்கொண்டு நேர்காணல் தொகுப்பினை வெளியிடுவதே பெரிய சாதனைதான். அச்சாதனையை குறிப்பிட்ட குரலற்றவரின் குரல் தொகுப்பின் மூலம் நிகழ்த்தியவர் கோமகன்.

எதுவரை , வல்லினம் ,காலம் ,எக்ஸெல், முகடு, ஜீவநதி, நடு, மலைகள், ஒருபேப்பர், அம்ருதா, தினகரன், தினக்குரல் முதலானஇதழ்கள்,இணைய இதழ்களில் தொடர்ந்து எழுதியவர். நெருடிய நெருஞ்சி , வாடா மல்லிகை ஆகிய தலைப்புகளில் பயண இலக்கியங்களும் வரவாக்கியிருப்பவர். சர்வதேச இலக்கிய ஆளுமைகளின் ஆக்கங்களை தமிழுக்கு மொழி பெயர்த்தல், ஈழத்து, புலம்பெயர், தமிழக படைப்பாளிகளின் ஆக்கங்களை காய்த்தல் உவத்தலுக்கு இடமின்றி வாசகப் பரப்புக்கு கொண்டு செல்லல், ஒய்வு நிலையில் இருக்கும் ஈழத்து இலக்கிய ஆளுமைகளை வெளிக்கொணரல் முதலான நோக்கங்களுடன், பிரான்ஸிலிருந்து 'நடு' என்னும் இணைய இதழையும் வெளியிட்டு வந்தவர். சினிமா சிறப்பிதழ் ,கிழக்கிலங்கை சிறப்பிதழ் ,மலையக சிறப்பிதழ் முதலானவற்றையும் 'நடு' இணைய இதழ் வெளியிட்டிருக்கிறது.

மேலும் படிக்க ...

அஞ்சலி: எழுத்தாளரும், 'நடு' இணைய இதழ் ஆசிரியருமான கோமகன் மறைவு!

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
20 ஏப்ரல் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்
 
'நடு' இணைய இதழின் ஆசிரியரும், எழுத்தாளர் வடகோவை வரதராஜன் மற்றும் முகநூல் நண்பர் தியோகு வளவன் ஆகியோரின் சகோதரரும் ,என் முகநூல் நண்பர்களில் ஒருவருமான எழுத்தாளர் கோமகன் (தியாகராஜா இராஜராஜன் - Thiagarajah Rajarajan) அவர்களின் மறைவுச் செய்தியினை வடகோவை வரதராஜன் அவர்களின் முகநூற் பதிவின் மூலம் அறிந்து துயருற்றேன்.

இவரது 'நடு' இலக்கியப் பங்களிப்பு புலம்பெயர் தமிழர்தம் இலக்கியப் பங்களிப்பில் முக்கியமானது. இவர் முக்கியமான சிறுகதையாசிரியர்களிலொருவர். இவரது 'முரண்' சிறுகதைத்தொகுப்பு அவ்வகையில் முக்கியமானது. அதற்கு நான் எழுதிய குறிப்பு ஒன்றும் 'நடு' 'பதிவுகள்' , இணைய இதழ்களில் வெளியானது. இவை தவிர 'நடு' வெளியீடுகளாக எழுத்தாளர்கள் பலரின் நூல்களை வெளியிட்டு வந்தார். எழுத்தாளர் அலெக்ஸ் பரந்தாமனின் 'ஒரு பிடி அரிசி' சிறுகதைத்தொகுப்பு வெளிவரக் காரணமாகவிருந்தார் என்பதும் நினைவு கூரத்தக்கது.
மேலும் படிக்க ...

ஈஸ்டர் தாக்குதல்: மூன்று ஆண்டுகள் ! நீதியற்ற தேசத்தில் நாதியற்றவர்கள் !! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
18 ஏப்ரல் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

“ ஏலி ஏலி லாமா சபக்தானி “ என் தேவனே என் தேவனே… ஏன் என்னை கைவிட்டீர்…? “ யேசு சிலுவையில் அறையப்பட்ட போது உதிர்த்த வார்த்தைகள் . 2019 ஆம் ஆண்டு ஏப்ரில் மாதம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் நடப்பதற்கு முன்பே, புலனாய்வுப்பிரிவுக்கு தகவல் கிடைத்திருந்தும், எதனையும் செய்யாமல் கையாலாகத்தனமாக இருந்தவர்களையும் தாக்குதல்களின் சூத்திரதாரிகளையும் விசாரிப்பதற்காக அன்றைய நாடாளுமன்றத்தினால் ஒரு விசாரணை தெரிவுக்குழுவும் நியமிக்கப்பட்டது. அதிலும் இழுபறிகள் நிகழ்ந்தன.

தேசிய புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி சிசிர மெண்டிஸ் அந்த விசாரணைக்குழுவின் முன்னால் தோன்றி சாட்சியமளித்தார். அதனை அவதானித்தார் சம்பவங்கள் நடந்தவேளையில் நாட்டிலிருக்காத தேசத்தின் அதிபர் மைத்திரியார். உடனே என்ன செய்தார்? “ நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளித்தவர்கள், பாதுகாப்பு துறையிலிருந்து வெளியேறியவர்கள் “ என்று ஒரு பெரிய குண்டைப் போட்டார். அது தேவாலயங்களில் பாவிக்கப்பட்ட குண்டுகளை விட மிகவும் வலிமையானது. அந்த பொன்னான வாக்கைக்கேட்டதும் சிசிர மெண்டிஸ் தனது ராஜினாமா கடிதத்தை பாதுகாப்பு செயலாளர் ஷாந்த கோட்டேகொடவிடம் கையளித்துவிட்டு, தனக்கு சுகமில்லை எனச்சொல்லி ஓய்வுக்குச்சென்றார்.

“ நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் புலனாய்வு அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்துவதை தான் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை “ என்றும் மற்றும் ஒரு அதிரடிக் குண்டைப்போட்டார் மைத்திரியார். இவ்வாறெல்லாம் அவர் செய்யப்போகிறார் என்பதைத் தெரிந்துகொண்டே தெரிவுக்குழு பல வாரங்களாக விசாரணை செய்துகொண்டிருந்தது. ஊடகங்களும் அந்த விசாரணை வாக்குமூலங்களுக்காக பக்கங்களை நிரப்பிக்கொண்டிருந்தன. நாமும் படித்துத் தொலைத்( ந்) து கொண்டிருந்தோம்.

மேலும் படிக்க ...

மற்ற கட்டுரைகள் ...

  1. டெஸ்ட்மண்ட் மொரிஸின் 'மனித மிருகக்காட்சிசாலை' (Human Zoo)! - வ.ந.கிரிதரன் -
  2. செ.வே.காசிநாதன் : விற்கன்ஸ்ரைனனின் மொழி, அர்த்தம், மனம் பற்றி...  - நவஜோதி ஜோகரட்னம், லண்டன் -
  3. அளம் நாவல் வெளிக்காட்டும் புலம்பெயர்தலின் அவலம்! - பேரா. செ.நாகேஸ்வரி, M.A.,B.Ed., M.Phil., NET, SET, (Ph.D), உதவிப்பேராசிரியர், இலொயோலா கல்லூரி, தமிழ்த்துறை, வேட்டவலம் -
  4. சிறுகதை : பெண்மனம்!  - க‌டல்புத்திரன் -
  5. பாரதி உரைநடை வகுக்கும் வாழ்வியல் மதிப்புகள்! - முனைவா் நா.கவிதா, தமிழ்த்துறை உதவிப்பேராசிரியா், தி ஸ்டாண்டா்டு ஃபயா் ஒா்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி, சிவகாசி. -
  6. கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள் சிறுகதை பிறந்த வரலாறு! - வ.ந.கிரிதரன் -
  7. ஆய்வு: சங்க இலக்கியத்தில் கழுதை ஓா் பார்வை! - முனைவா் பெ.கி.கோவிந்தராஜ், உதவிப்பேராசிரியா், தமிழ்த்துறை, மஜ்ஹருல் உலூம் கல்லூரி, ஆம்பூா் 635 802, திருப்பத்தூா் மாவட்டம் -
  8. சிறுகதை: ஒரு கிராமம் உறங்கிக்கொண்டிருந்தபோது….. - ஸ்ரீராம் விக்னேஷ் , நெல்லை வீரவநல்லூர் -
  9. தமிழர்களின் புத்தாண்டு எப்போது? - குரு அரவிந்தன் -
  10. கிளிம்மின் சரித்திரம் - கார்க்கியின் இறுதி நூல் ஓர் அறிமுகம்! (1) - ஜோதிகுமார் -
  11. சித்திரையைக் கொண்டாடச் சிறகடிக்கும் கற்பனைகள் ! - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர், மெல்பேண், அவுஸ்திரேலியா -
  12. ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் நடத்தும் இணைய வழிக் கலந்துரையாடல் “சித்திரைப் புத்தாண்டு - வானியல் நோக்கு”
  13. வாசிப்பு அனுபவம்: பெண் ஆளுமைகளின் வாழ்வையும் பணிகளையும் பேசும் முருகபூபதியின் “ யாதுமாகி “! - விஜி இராமச்சந்திரன் – மெல்பன் -
  14. ஜீவநதி (இலங்கை) பதிப்பகத்தின் மலிவு விற்பனை!
பக்கம் 86 / 115
  • முதல்
  • முந்தைய
  • 81
  • 82
  • 83
  • 84
  • 85
  • 86
  • 87
  • 88
  • 89
  • 90
  • அடுத்த
  • கடைசி