பதிவுகள் முகப்பு

'வணக்கம் இலண்ட'னின் ஏற்பாட்டில் தலைமுறை தாண்டிய பயணம் – 9: சுமைகள் முதல் உயிர்வாசம் வரை தாமரைச்செல்வியின் ஆறு நாவல்களைப் பேசும் இலக்கியக் களம்' மெய்நிகர் அரங்கு !

விவரங்கள்
தகவல்: தாமரைச்செல்வி
நிகழ்வுகள்
31 ஆகஸ்ட் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மேலும் படிக்க ...

சிந்தனைக் களம்: "பரதக்கலை மரபுகளும் மாற்றங்களும்!"

விவரங்கள்
- தகவல்: பேராசிரியர் நா.சுப்பிரமணியன் -
நிகழ்வுகள்
31 ஆகஸ்ட் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்


மேலும் படிக்க ...

இளைஞர் சாதனையாளர் கழகம், மலேசியா: பாரதியின் வேண்டுதல்கள்!

விவரங்கள்
- தகவல்: முனைவர் இ.பாலசுந்தரம் -
நிகழ்வுகள்
31 ஆகஸ்ட் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கூகுள் சந்திப்பு:  https://meet.google.com/srz-beaj-equ

 

எதிர்வினை: வரலாற்றை எழுதியவரது , வரலாற்றுக்குச் சாட்சியானேன்! - நடேசன் (ஆஸ்திரேலியா) -

விவரங்கள்
- நடேசன் (ஆஸ்திரேலியா) -
கட்டடக்கலை / நகர அமைப்பு/ வரலாறு/ அகழாய்வு
30 ஆகஸ்ட் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- அண்மையில் பதிவுகள் இணைய இதழில் வெளியான 'மறைக்கப்பட்ட வரலாற்றுத்தகவல்கள்' என்னும் கட்டுரைக்கான எதிர்வினையிது. - பதிவுகள்.காம் -


1980களில் நான் சென்னையிலிருந்த காலத்தில், என் மாணவப் பருவத்து நண்பனான இரகுபதியை சந்தித்ததேன். அக்காலத்தில்தான் இரகுபதியின் ஆய்வு நூல் சென்னையில் பதிக்கப்பட்டது. இராமாயணத்தில் அணிலாக Early Settlements in Jaffna என்ற ஆய்வு நூலின் பதிப்பில் எனது பங்கும் இருப்பதால் சில உண்மைகளை விளம்ப விரும்புகிறேன்.

வரலாற்றை, வரலாற்றியல் மரபோடு பதிவிட விரும்புவர்கள், அதைத் தாங்களே தேடி அறிந்து பதிவிடுவது நல்லது. மரபைக் கவனிக்காத கூற்றுகளுக்காக ஒதுங்கி இருக்கும் நண்பரை இழுத்து வருவதற்கு எனக்குப் பிரியமில்லை. இருப்பினும், நூல் பதிக்கப்பட்ட காலத்தில் சென்னையில் வாழ்ந்து , விடயங்களைத் தெரிந்துகொண்டு, இந்த நூலுக்கு நிதியுதவி வழங்கியவருள் ஒருவன் என்ற முறையில் எனக்குத் தெரிந்தவற்றைச் சொல்லவேண்டும்.
பத்மநாப ஐயரின் அமுதவிழாவின் சூம் நிகழ்வில், மு. நித்தியானந்தன் கூறிய விடயங்கள் மூன்று; முதலாவது, பத்மநாத ஐயர் அபாயகரமான சூழலில் தனியாக நூற்பிரதியை எடுத்துச் சென்றார் என்பது. பத்மநாப ஐயரும் பொ. இரகுபதியும் ஒன்றாகச் சேர்ந்துதான் கடல் வழியாகப் பயணித்தார்கள் என்பதை பத்மநாப ஐயரே பதிவிட்டிருக்கிறார். நித்தியானந்தன் கூற்று மாறுபட்டுத் தொனிப்பது ஏன்?

இரண்டாவது, நூலாசிரியர் தனது நூலில் பத்மநாப ஐயருக்கு நன்றி தெரிவிக்கவில்லை என்பது. நூலின் நன்றியுரையில் பெயர் குறிப்பிட விரும்பியிராத நண்பர் ஒருவர் (A friend of mine who wishes to remain anonymous) பதிப்பிற்கு முன்முயற்சி எடுத்து அடித்தளமிட்டார் என்று நூலாசிரியர் குறிப்பிட்டிருக்கிறார். அது தனக்குரியது என்று பத்மநாப ஐயர் பல ஆண்டுகளுக்குப்பின் பூடகமாக ஏற்றுக்கொண்டதுடன், தன் முயற்சியால் வந்த நூல்களின் பட்டியலில் இந்நூலையும் இணைத்திருக்கிறார். இதை நூலாசிரியர் இதுவரை மறுக்கவில்லை. அது அவர்கள் இருவருக்கும் இடையிலான புரிந்துணர்வு என்று தோன்றுகிறது.
மூன்றாவது , நூற்பதிப்புச் செலவு இந்தியப் பணத்தில் 55000 ரூபா என்றும் , பத்மநாப ஐயரின் முயற்சியால் வந்த பணத்தில் நூல் பதிப்பிக்கப்பட்டு , பின்னர் அது வெளியானபோது திருமதி. இரகுபதியின் பதிப்பாக வெளியானது என்ற பொருட்பட மு. நித்தியானந்தன் பேசியிருந்தார்.

மேலும் படிக்க ...

மீண்டும் மிதக்கும் டைட்டானிக்!  - கிறிஸ்டி நல்லரெத்தினம் - மெல்பன் -

விவரங்கள்
- கிறிஸ்டி நல்லரெத்தினம் - மெல்பன் -
கிறிஸ்டி நல்லரெத்தினம்
29 ஆகஸ்ட் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 " எங்கும் கும்மிருட்டு..... நடுநிசி..... "கி....ரீ.... ரீ... ரீ...ச்" என எங்கோ யாரோ கூரிய நகங்களால் எதையோ பிறாண்டும் சத்தம்! அச்சத்தம் காதுகளில் புகுந்து முள்ளந்தண்டை சில்லிட்டது. படுக்கையில் இருந்து துள்ளி எழுந்து...... "என்ன, 'மர்மக்கதை மன்னன்' பி.டி.சாமியின் மர்ம நாவலில் இருந்து ஒரு பக்கத்தை படிக்கிறேன் என எண்ணினீர்களோ? “  அது தான் இல்லை! ஏப்ரல் 14, 1912 இல் தன் கன்னிப் பயணத்தில் RMS டைட்டானிக் எனும் பாரிய பயணிகள் கப்பல் பனிப்பாறையுடன் உரசிய வேளையில் எழுந்த மரண ஒலி அது! அது சரி, 109 வருடங்களுக்கு பின் இந்த நனவிடை தோய்தல் எதற்காம் என நீங்கள் கேட்பது புரிகிறது. அதை பின்னர் சொல்லட்டுமா? சரி, கதைக்கு வருவோம்.

ஏப்ரல் 10, 1912 இல் இங்கிலாந்தின் தென்கிழக்கில் அமைந்துள்ள செளதாம்ப்டன் எனும் துறைமுகத்தில் இருந்து ஆயிரத்திற்கும் அதிகமான பயணிகளுடனும் 892 மாலுமிகளுடனும் தன் கன்னிப் பயணத்தை ஆரம்பித்தது 46,328 தொன் எடையுள்ள டைட்டானிக். அக்காலங்களில் இதுவே உலகின் மிகப் பெரிய பயணிகள் நீராவிக் கப்பல் என பெயர் பெற்றது.

ஏப்ரல், மே மாதங்கள் கடல் பயணங்களுக்கு பிரபலம் அல்லாததால் கப்பலின் மொத்த 2,453 பயணச்சீட்டுக்களில் பாதியே விற்பனையாகிற்று. மேலும் அந்நாட்களில் நடைபெற்றுக் கொண்டிருந்த தேசிய நிலக்கரி ஊழியர்களின் வேலை நிறுத்தமும் பயணிகளின் பயணத்தை பின்போட வைத்தது.

கப்பலின் முதலாம் வகுப்பில் பயணம் செய்த 325 பயணிகள் ஒருவருக்கு ஒரு வழிப் பயணத்திற்கு ( இரு படுக்கை அறை ) செலுத்திய தொகை $4,350. இது இன்றய மதிப்பீட்டில் $50,000 ஐ தாண்டும் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்! இவர்களுக்கென ஜிம், நீச்சல் தடாகம், வாசிகசாலை, உயர்தர உணவகங்கள் உட்பட பல சொகுசு வசதிகள் இருந்தன என்றால் சும்மாவா? ஆம், கோடீஸ்வரர்களின் சொர்க்கம்தான்!

மூன்றாம் வகுப்பில் அமெரிக்காவில் தமக்கென ஒரு நல்வாழ்வை அமைத்துக் கொள்ளும் கனவுடன் ஆமேனியா, இத்தாலி, சீரியா, சுவீடன் போன்ற நாடுகளில் இருந்து வந்த சமுதாயத்தின் கீழ்தட்டு மக்களே நிரம்பியிருந்தனர். இவ்வகுப்புப் பயணிகளுக்கு ஆடம்பரமான வசதிகள் இல்லாவிட்டாலும் அக்காலகட்டத்தில் இருந்த மூன்றாம் வகுப்பு வசதிகளை விட டைட்டானிக் மேலாதானதாகவே கட்டமைக்கப்பட்டிருந்தது.

மேலும் படிக்க ...

அஃக்கன்னாவும், தமிழ்ப் பேராசிரியர் ஒருவரின் பெயரும்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
29 ஆகஸ்ட் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 - அண்மையில் முகநூலில் நானிட்டிருந்த பேராசிரியர் நுஃமானின் பெயர் பற்றிய பதிவும் , அதற்கான எதிர்வினைகளும் இவை. ஒரு பதிவுக்காக இங்கு பதிவு செய்கின்றேன். - வ.ந.கி -


பேராசிரியர் நுஃமான் அவர்கள் தனது பெயரை அஃக்கன்னா பாவித்து எழுதுகையில் அஃக்கன்னாவுக்குரிய தமிழ் இலக்கண விதியைப் பாவிப்பதில்லை (நுஃமான் என்பதற்குப் பதிலாக நுஃகுமான் என்றிருந்தால் அது தமிழ் இலக்கண விதிக்குப் பொருத்தமாக இருந்திருக்கும்) . அது ஏன் என்ற கேள்வியும் எனக்கிருந்தது. தற்போது அதற்கான பதில் அவரது முகநூல் எதிர்வினையொன்றின் மூலம் கிடைத்துள்ளது. 'அடிப்படைத் தமிழ் இலக்கணம்' என்னும் தமிழ் இலக்கண நூலில் அஃக்கன்னா  என்னும் எழுத்துக்குரிய  இலக்கண விதியையும் குறிப்பிட்டு விட்டு அதே அட்டையில் நுஃமான் என்று போட்டிருந்ததுதான் என் கவனத்தைக் கவர்ந்தது. அந்நூல் மூலம் தமிழ் படிக்கும் எவருக்கும் இக்கேள்வி எழும்.

அண்மையில் எழுத்தாளர் ந.சுசீந்திரன் அவர்கள் தனது பதிவொன்றில் அஃக்கன்னா பற்றிக் குறிப்பிட்டிருந்தார். அஃக்கன்னா என்னும் எழுத்தை நுஃமான் அவர்கள் தொடர்ந்தும் வாழ வைத்துக்கொண்டிருப்பதாக அதில் அவர் குறிப்பிட்டிருந்தார். அதிலும் நான் என் நுஃமான் பெயர் பற்றிய குழப்பத்தை எதிர்வினையாகக் குறிப்பிட்டிருந்தேன். சுசீந்திரனின் குறிப்புக்கான எதிர்வினையில் நுஃமான் அவர்கள் தான் ஏன் அவ்விதம் இலக்கணத்தவறுடன் தன் பெயரைப் பாவிக்கின்றார் என்பதற்கான காரணத்தைக் குறிப்பிட்டிருக்கின்றார். அது முக்கியமான தகவலென்பதால் அதனைக் கீழே தருகின்றேன்.

மேலும் படிக்க ...

பேராசிரியர் இளையதம்பி பாலசுந்தரம் பற்றிய குறிப்புகள்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
Administrator
வ.ந.கிரிதரன் பக்கம்
28 ஆகஸ்ட் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இலங்கைத் தமிழ் ஆய்வாளர்களில் பேராசிரியர் இளையதம்பி பாலசுந்தரம் அவர்கள் முக்கியமானவர்களிலொருவர். இலங்கைத் தமிழ்ப்பகுதிகளின் ஊர்ப்பெயர்கள் பற்றிய இவரது ஆய்வு நூல்கள், நாட்டார் இசை, பாடல்கள் பற்றிய நூல்கள், ஒப்பனைக்கலை மற்றும் கனடாத் தமிழர்தம் வரலாறு பற்றிய 'கனடாவில் இலங்கைத்தமிழரின் வாழ்வும், வரலாறும்’ என்னும் நூல் போன்ற இவரது ஆய்வு நூல்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை.

இவரது 'கனடாவில் இலங்கைத்தமிழரின் வாழ்வும், வரலாறும்’ என்னும் நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு வேலைகள் தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக அண்மையில் என்னுடன் அலைபேசியில் உரையாடியபோது தெரிவித்தார். அத்துடன் அந்நூல் வெளியானபோது அது பற்றிய குறிப்பொன்றினை 'பதிவுகள்' இணைய இதழில் எழுதியிருந்தேன். அதில் அந்நூலில் விடுபட்ட சில விடயங்கள் பற்றியும் , அந்நூலிலுள்ள என் படைப்புகள் பற்றிய தகவல்கள் பற்றிய மேலதிக விளக்கங்களையும் குறிப்பிட்டிருந்தேன். அவற்றை நினைவில் வைத்திருந்து தற்போது வெளியாகும் ஆங்கில மொழிபெயர்ப்பில் அவற்றையும் உள்வாங்கியுள்ளதாகவும் அண்மைய உரையாடலின்போது பேராசிரியர் தெரிவித்திருந்தார். அவரது இந்தப் பண்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. சிறந்த ஆய்வாளர் ஒருவரின் முக்கிய இயல்புகளிலொன்று தொடர்ச்சியாகத் தனது ஆய்வு பற்றிய தகவல்களைத் தேடிக்கொண்டிருப்பது. அத்தகவல்களின் உண்மைத்தன்மையறிந்து ஆய்வு நூல்களின் புதிய பதிப்புகளில் அவற்றை உள்வாங்கி ஆய்வுகளை மேலும் செழுமைப்படுத்துவது. இந்தப்பண்பு பேராசிரியர் இளையதம்பி பாலசுந்தரம் அவர்களிடத்தில் நிறையவே உள்ளது. இவரைப்போல் தொடர்ந்தும் தன் ஆய்வுகள் பற்றிய புதிய தகல்வகளைத் தேடிக்கொண்டிருக்கும் இன்னுமொருவர் பேராசிரியர் நா.சுப்பிரமணியன் அவர்கள்.

மேலும் படிக்க ...

மறைக்கப்பட்ட வரலாற்றுத் தகவல்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
கட்டடக்கலை / நகர அமைப்பு/ வரலாறு/ அகழாய்வு
26 ஆகஸ்ட் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

'தலைமுறை தாண்டிய பயணம்: பத்மநாப ஐயர் - 80!' என்னும் மெய்நிகர் நிகழ்வில் (வணக்கம் லண்டன் நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட நிகழ்வு) உரையாற்றிய கலை, இலக்கிய விமர்சகர் மு.நித்தியானந்தன் அவர்கள் கூறிய வரலாற்றுத் தகவலொன்று என் கவனத்தை ஈர்த்தது. அது முனைவர் பொ.ரகுபதியின் Early Settlements in Jaffnaஅ நூல் பற்றியது.

இந்நூல் பற்றிக் குறிப்பிடுகையில் மு.நித்தியானந்தன் அவர்கள் கூறிய விபரங்கள் வருமாறு:

யுத்தச் சூழலில், கடற்படையினரின் ஆதிக்கம் நிலவியதொரு சூழலில் பத்மநாப அய்யர் அவர்கள் இயக்கமொன்றின் படகொன்றில் மேற்படி நூற் பிரதியுடன் (தட்டச்சுப் பிரதியாகவிருக்க வேண்டும்) இந்தியா சென்று க்ரியா நிறுவனத்துடன் கடன் அடிப்படையில் நூலைப் பதிப்பிக்க ஒப்பந்தம் செய்ததாகவும், அவ்வேலை அக்காலகட்டத்தில் பாரிசிலிருந்த ரிஷியகுமாரின் பண உதவியுடன் ஆரம்பிக்கப்பட்டதாகவும் நித்தியானந்தன் தனதுரையில் குறிப்பிட்டிருந்தார். அதற்கான மொத்தச்செலவு ரூபா 55,000 என்றும் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் அவர் நூலாசிரியரே பெரும் முயற்சி எடுக்காததொரு சூழலில் பெரு முயற்சியெடுத்தவர் பத்மநாப அய்யர் என்றும் குறிப்பிட்டார். ஆனால் நூல் வெளியானபோது அந்நூலில் பத்மநாப அய்யரின் பெயர் எங்குமே இடம் பெற்றிருக்கவில்லையென்றும் நித்தியானந்தன் சுட்டிக்காட்டினார். மேலும் பத்மநாப அய்யர் வெளியிட்ட தொகுப்பு நூல்கள் பலவற்றில் பலரின் பெயர்கள் இருந்தாலும் , அவை பத்மநாப அய்யரின் முயற்சியால் மட்டுமே வெளியானவையே என்றும் சுட்டிக்காட்டினார் நித்தியானந்தன்.

மேலும் படிக்க ...

கோப்பாய்க் கோட்டை பற்றிச் சில குறிப்புகள்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
26 ஆகஸ்ட் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்
 
கலாநிதி பொ.இரகுபதி எழுதிய Early Settlements in Jaffna நூலில் கோப்பாய்க் கோட்டை பற்றிய இரு பக்கக் கட்டுரையுமுள்ளது. அக்கட்டுரை தற்போது இராசமாளிகை என்றழைக்கப்படும் காணித்துண்டொன்று பற்றிய தகவற் கட்டுரையே. உண்மையில் இது போன்ற இடங்களைப்பற்றிய ஆய்வுகளின்போது அவை பற்றி ஏற்கனவே ஆய்வுக்கட்டுரைகள் அல்லது தகவற் கட்டுரைகள் வெளியாகியிருந்தால் அவற்றையும் தேடிப்பிடித்து வாசித்து அவை பற்றியும் குறிப்பிட்டிருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால் அது ஆய்வாளரின் ஆய்வுச்சிறப்பை எடுத்துக் காட்டும்.
 
கோப்பாய்க் கோட்டை இருந்ததாகக் கருதப்படும் 'பழைய கோட்டை' (Old Castle) பற்றி சுவாமி ஞானப்பிரகாசர் கட்டுரையொன்று எழுதியிருந்தார் ( (Ceylon Antiquary and Literary Register 2(3), Jan 1917, pp.194-195, 'Sankily's Fortress at Kopay'). அது பற்றி கலாநிதி கா.இந்திரபாலாவைச் சந்தித்தபோது சுட்டிக்காட்டியிருந்தார்.  அது யாழ் பல்கலைக்கழக நூலகத்திலுள்ளது. அது பற்றிய விபரங்கள் அறிந்தவர்கள் தகவலையும், அக்கட்டுரை வெளியான பக்கங்களையும் பகிர்ந்துகொண்டால் மிகவும் நன்றியுள்ளவனாகவிருப்பேன்.
 
ரகுபதி அவர்கள் மேற்படி சுவாமி ஞானப்பிரகாசரின் கட்டுரையையும் உள்வாங்கி மேற்படி கோப்பாய்க் கோட்டை பற்றிய கட்டுரையில் குறிப்பிட்டிருந்தால் மிகவும் பயனுள்ளதாகவிருந்திருக்கும்.
 
சுவாமி ஞானப்பிரகாசர் கோப்பாய்க் கோட்டை இருந்த இடம் எதுவென்பதை அடையாளம் கண்டு (திருமதி வேர்ட்ஸ்வேர்த் என்பவருக்குச் சொந்தமான கோப்பாயிலுள்ள old castle என்னும் பகுதியே அது) அதுபற்றி விபரித்திருந்தார். உடனேயே அப்பகுதியைப் பார்க்கவேண்டுமென்ற ஆர்வமெழுந்தது. கோப்பாய் சென்று பழைய கோட்டையின் (old castle) அன்றிருந்த நிலை பற்றி சிறு கட்டுரையொன்றினை எழுதி வீர்கேசரி பத்திரிகைக்கு அனுப்பினேன். அது 'கோப்பாய் பழைய கோட்டையின் கோலம்' என்னும் தலைப்பில் 15.3.1981 அன்று வெளியான வீரகேசரி வாரவெளியீட்டில் வெளியாகியது. சுவாமி ஞானப்பிரகாசரின் காலத்தில் ஒருவருக்குச் சொந்தமாகவிருந்த அக்காணி நான் சென்று பார்த்தபோது பிரிக்கப்பட்டுப் பலருக்குச் சொந்தமாகவிருந்தது. தற்போது தனியாருக்குச் சொந்தமாக அது இருந்த இடமே அடையாளம் காணமுடியாதவாறு மாறியுள்ளது. அது பற்றியும் முகநூற் பதிவொன்று எழுதியிருந்தேன். அதற்கான இணைப்பையும் இப்பதிவின் இறுதியில் தந்துள்ளேன்.
மேலும் படிக்க ...

தலைமுறை தாண்டிய பயணம்: பத்மநாப ஐயர் - 80!

விவரங்கள்
- ஊர்க்குருவி -
இலக்கியம்
26 ஆகஸ்ட் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

தமிழ்க் கலை இலக்கிய உலகில் பத்மநாப ஐயர் நன்கறியப்பட்ட ஒருவர். அவருக்கு ஆகஸ்ட் 24 அகவை 80. அதனையொட்டி 'வணக்கம் லண்டன்' நடத்திய 'தலைமுறை தாண்டிய  பயணம்'  மெய்நிகர் நிகழ்வில் கலை, இலக்கிய ஆளுமைகள் பலர் கலந்து தம் கருத்துகளைத் தெரிவித்தனர்.  இந்நிகழ்வில் உரையாற்றிய அனைவரும் பத்மநாப ஐயரின் இலக்கியப்பங்களிப்பைப்  பல்வேறு கோணங்களில், அவருடனான தம் சொந்த அனுபவங்களின் அடிப்படையில் அணுகி ஆற்றிய உரைகள் பத்மநாப ஐயரின் பன்முகக்  கலை, இலக்கியப் பங்களிப்பை அறிய உதவுகின்றன.

மேலும் படிக்க ...

இதுவரை வெளியான வ.ந.கிரிதரனின் வெளியான நூல்கள் & மின்னூல்கள் (அமேசன் - கிண்டில் வெளியீடு)!

விவரங்கள்
- வ.ந.கி -
வ.ந.கிரிதரன் பக்கம்
25 ஆகஸ்ட் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

வ.ந.கிரிதரனின் வெளியான நூல்கள்:

1. அமெரிக்கா (நாவல் & சிறுகதைத்தொகுப்பு. ஸ்நேகா - மங்கை பதிப்பக வெளியீடு)
2. நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (ஆய்வு நூல். ஸ்நேகா பதிப்பக வெளியீடு)
3. மண்ணின் குரல் (நாவற் தொகுப்பு. குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடு)
4. குடிவரவாளன் (நாவல். ஓவியா பதிப்பக வெளியீடு)
5. அமெரிக்கா (நாவல். திருத்திய பதிப்பு. மகுடம் வெளியீடு)
6. எழுக அதி மானுடா (கவிதைத்தொகுப்பு. மங்கை பதிப்பக வெளியீடு)
7. மண்ணின் குரல் (நாவல், கட்டுரை & கவிதைத்தொகுப்பு. மங்கை பதிப்பக வெளியீடு)


வ.ந.கிரிதரனின் மின்னூல்கள் (அமேசன் - கிண்டில் வெளியீடு):

1. நவீன கட்டடக்கலைச் சிந்தனைகள் (கட்டுரைகள்)
2. வ.ந.கிரிதரனின் கட்டுரைகள் தொகுதி ஒன்று.
3. ஒரு நகரத்து மனிதனின் புலம்பல் (கவிதைத்தொகுப்பு)
4. அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள் (அறிவியற் கட்டுரைகள்: கதைகள் & கவிதைகள))
5. கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள் (புகலிட அனுபவச் சிறுகதைகள்)
6. நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாவது பதிப்பு)
7. கணங்களும் குணங்களும் (நாவல்)
8.மண்ணின் குரல் (நாவல். கனடாவில் வெளியான முதல் நாவல்)
9. அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் (நாவல்)
10. குடிவரவாளன் (நாவல்)
11. அமெரிக்கா (நாவல்)
12. An Immigrant (Novel - Translation by latha Ramakrishnan)
13. Nallur Rajadhani City Layout (Research Paper - Translation By Latha Ramakrishnan)
14. A messsage for Stallion Stealers! (A collection of poems. Five of them are translated by various writers and the rest are my own English poems)
15. America (English Translation by Latha Ramakrishan)

மேலும் படிக்க ...

தமிழறிஞர் த. துரைசிங்கம் காலமானார்! - இளநிலா சுரேசானந்த் -

விவரங்கள்
- இளநிலா சுரேசானந்த் -
இலக்கியம்
25 ஆகஸ்ட் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இலக்கிய வித்தகர், கலாபூசணம், ஓய்வுநிலைக் கல்விப் பணிப்பாளர் த. துரைசிங்கம் (84) திங்கட்கிழமை மாலை (23 - 08 - 2021) கொழும்பில் காலமானார். ஈழத்து இலக்கியப் பரப்பிலும், கல்விப் புலத்திலும் நன்கு அறியப்பட்ட புலமையாளர் த. துரைசிங்கம் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். ஆறு தசாப்தங்களுக்கு மேலாக, எழுத்துத் துறையில் ஈடுபாடு கொண்டு அமைதியாகச் செயற்பட்டு வந்தவர்.

சிறந்த எழுத்தாளர். கவிஞர். நூற்றுக்கு மேற்பட்ட நூல்களின் ஆசிரியர். இளம் வயதிலேயே பத்திரிகைச் செய்தியாளராகப் பணியாற்றத் தொடங்கியவர். ஆசிரியராக, அதிபராக, கோட்டக் கல்வி அலுவலராக, மாவட்டக் கல்விப் பணிப்பாளராகப் பணியாற்றிய பல்துறை அனுபவசாலி.

இவரது எழுத்துப் பணிக்குக் கிட்டிய அங்கீகாரமும் விருதுகளும் ஏராளம். சிறுவர் இலக்கியத் துறைக்கான தேசிய இலக்கிய (சாகித்திய) விருதினை நான்கு முறை பெற்ற பெருமைக்குரியவர். வடக்கு கிழக்கு மாகாணக் கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சு, இலங்கை இலக்கியப் பேரவை, யாழ் இலக்கிய வட்டம், கொழும்பு விவேகானந்த சபை, கலாசார அலுவல்கள் அமைச்சு, மட்டக்களப்பு எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் எனப் பலதரப்பட்ட அமைப்புகள் இவருக்கு விருதுகளை வழங்கிக் கௌரவித்துள்ளன. இலக்கிய வித்தகர், கலாபூசணம், தமிழியல் விருது முதலான பல்வேறு விருதுகளுக்குரித்தானவர். எழுத்துப் பணியில் இடைவிடாது உழைத்துக்கொண்டிருந்த தமிழறிஞர்.

இவரது சிறுவர் இலக்கிய நூல்கள், பல பதிப்புகள் வெளியாகி ஈழத்தில் விற்பனையில் சாதனை படைத்தவையாகும். பைந்தமிழ் வளர்த்த ஈழத்துப் பாவலர்கள், தமிழ் இலக்கியக் களஞ்சியம், ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாறு, ஈழத்துத் தமிழ் அறிஞர்கள், ஈழத்தில் சிறுவர் இலக்கியம் மற்றும் சிறுவர் இலக்கிய நூல்கள் குறிப்பிடத்தக்க, பாராட்டுப் பெற்ற நூல்களாகும். தமிழகத்திலும் இலக்கியவாதிகள், தமிழறிஞர்களின் பாராட்டுகளைப் பெற்றவர்.

மேலும் படிக்க ...

'சென்டானியல் கொலிஜ்' (Centennial College) நினைவுகள்..... - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
23 ஆகஸ்ட் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எனக்கு வாசிப்பது, எழுதுவதைப்போல் இன்னுமொரு பிடித்த விடயமுமுண்டு. அது கற்றல். அவ்வப்போது 'டொராண்டோ'விலுள்ள தொழில் நுட்பக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் எனக்குப் பிடித்த துறைகளில் பாடங்கள் எடுப்பது வழக்கம். 'டொராண்டோப் பல்கலைக்கழகம்' , 'யோர்க் பல்கலைக்கழகம்', 'சென்டானியல் கொலிஜ்', 'செனகா கொலிஜ்' என்று பல கல்விக்கூடங்களில் அவ்வப்போது பாடங்கள் எடுத்திருக்கின்றேன். வானியற்பியல், உயர் கணிதம், இலத்திரனியற் பொறியியல், குடிசார் பொறியியல், தகவல் தொழில் நுட்பம் என்று பல் துறைகளில் படித்திருக்கின்றேன். வாழ்க்கையின் போராட்டங்கள் மட்டுமில்லையென்றால் வாழ்க்கை முழுவதும் படித்துக்கொண்டிருக்கவே விரும்புவேன்.

தொழில் நுட்பக் கல்லூரிகளைப் பொறுத்தவரையில் என் அபிமானக் கல்லூரி சென்டானியல் கொலிஜ்தான். இங்கு நான் எவ்வகைப் பாடங்களை எடுத்தாலும் அத்துறையில் உடனேயே வேலை கிடைத்து விடும்.

ஒரு மாத 'கணினி வரைபடஞர்' (CAD) பாடம் எடுத்தேன். உடனேயே 'கிங் சிட்டியில்' நில அளவையாளரின் நிறுவனத்தில் கணினி வரைபடஞராக வேலை கிடைத்தது. 'Soil Testing' எடுத்தேன். உடனடியாகவே மார்க்கம் நகரிலிருந்த பாகிஸ்தானியக் கனடியப் பொறியியலாளரின் நிறுவனத்தில் அத்துறையில் வேலை கிடைத்தது. இங்குதான் இலத்திரனியற் பொறியியற் தொழில் நுட்ப 'டிப்ளோமா'வும் படித்தேன். அதற்கும் படித்த உடனேயே அத்றையில் வேலை கிடைத்தது. தகவல் தொழில் நுட்பத்துறையில் எனக்கு ஆர்வம் ஏற்பட்டதற்குக் காரணம் இத்தொழில் நுட்பப்படிப்பே.

மேலும் படிக்க ...

படித்தோம் சொல்கின்றோம் : மக்கத்துச்சால்வை மண்ணும் மக்களும் சௌந்தர்ய உபாசகரின் எளிமையான வாழ்வை பேசும் சிறப்பு மலர்! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
23 ஆகஸ்ட் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

பல வருடங்களுக்கு முன்னர் ஈழத்தின் மூத்த எழுத்தாளர் செ. கணேசலிங்கனின் மண்ணும் மக்களும் என்ற நாவல் வெளிவந்தது. அந்த நாவலை, அது அதிதீவிரவாதம் பேசுகிறது என்ற காரணத்தினால் தடைசெய்தார்கள். சில வருடங்களுக்கு முன்னர் ஈழத்தின் மற்றும் ஒரு இலக்கிய ஆளுமை எஸ். எல். எம். ஹனீபா எழுதிய மக்கத்துச்சால்வை என்ற கதைத்தொகுப்பு வெளியானது. ஹனீபாவின் எழுத்துக்களை பிடிக்காத சில அதிமேதைகள் அவரை கிறுக்கன் என்று வர்ணித்தனர். அதற்கு அவர், “ நான் கிறுக்கன் எண்டா, எதுக்கடா என்னுடைய எழுத்துக்களை படிக்காங்கள் … ? “ என்று எதிர்க்கேள்வி போட்டவர். மகாகவி பாரதியைக்கூட அவன் வாழ்ந்த காலத்தில் கிறுக்கன் என்றுதான் சிலர் அழைத்தார்கள். எங்கள் புகலிட நாட்டில் ஒரு கவிஞர் தனக்கு கிறுக்கு பாரதி என்றே புனைபெயரும் வைத்து, அதனையே தனது மின்னஞ்சல் முகவரியுமாக்கியிருக்கிறார். எனவே கிறுக்கு என்பது மோசமான சொல் அல்ல.

எஸ். எல். எம். ஹனீபா அவர்களின் வாழ்வையும் பணிகளையும் விரிவாகப் பதிவுசெய்யும் மக்கத்துச்சால்வை மண்ணும் மக்களும் சிறப்பு மலர், இந்த கொரோனோ காலத்திலும் எப்படியே விமானம் ஏறி, பசுபிக் சமுத்திரத்தையும் கடந்து, அவுஸ்திரேலியாவில் எனது வீட்டு வாசலை வந்தடைந்துவிட்டது. அனுப்பிவைத்த மலரின் தொகுப்பாளரான மக்கத்துச்சால்வை வாசகர் வட்டத்தின் தலைவர் எழுத்தாளர் ஓட்டமாவடி அறபாத் அவர்களுக்கும், மலர் கிடைத்த தகவலை தாமதமின்றி மின்னஞ்சல் வாயிலாக தெரிவித்துவிட்டேன். இதில் ஒரு ஒற்றுமையையும் என்னால் அவதானிக்க முடிந்தது.

ஹனீபாவையும் அறபாத்தையும் நான் முதல் முதலில் சந்தித்தது 2010 டிசம்பரில் கிழக்கிலங்கையில்தான். நான் எனது இலக்கிய நண்பர்களுடன் 2011 ஜனவரியில் இணைந்து கொழும்பில் நடத்திய சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டுக்கான தகவல் அமர்வு நிகழ்ச்சிகளுக்காக இவர்களது வாழ்விடங்களுக்கு சென்றவேளையில்தான் அந்த முதல் சந்திப்பு நிகழ்ந்தது.

அதன்பின்னர் அறபாத்தை சந்திக்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. எனினும் ஹனீபாவை கடந்த 2019 இல் கிளிநொச்சியில் நடந்த 49 ஆவது இலக்கிய சந்திப்பில் காணமுடிந்தது. அந்த இரண்டு நாட்களும் மறக்கமுடியாத தருணங்கள். எனது நினைவறையில் சேமித்து வைத்துள்ளேன். எம்மத்தியில் நன்கு அறியப்பட்ட சில எழுத்தாளர்கள், அவர்களது பூர்வீக ஊரின் பெயரால் அல்லது அவர்கள் எழுதிப்புகழ்பெற்ற புத்தகத்தின் பெயரால் பிரபல்யமாகியிருப்பர். ஒரு கூடைக்கொழுந்து எனச்சொன்னவுடன் எமக்கு மலையக மூத்த படைப்பாளி என். எஸ். எம். இராமையா நினைவுக்கு வருவாரே, அதேபோன்று மக்கத்துச்சால்வை என்றவுடன் ஹனீபாதான் நினைவுக்கு வருவார்.

மேலும் படிக்க ...

சிறுகதை: மேய்ப்பர்கள்!  - எஸ். அகஸ்தியர் -

விவரங்கள்
- எஸ். அகஸ்தியர் -
சிறுகதை
23 ஆகஸ்ட் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

[ எழுத்தாளர் எஸ்.அகஸ்தியர் அவர்களின்  பிறந்த தினமான ஆகஸ்ட் 29 தினத்தினையொட்டி அவரது மகள் எழுத்தாளர் நவஜோதி யோகரடன்ம் 'மேய்ப்பர்கள்' என்னும்  இச்சிறுகதையை அனுப்பியுள்ளார். இது பற்றி அவர் பதிவுகளுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் "எனது தந்தையின் பிறந்த தினம் ஆகஸ்ட் 29 ஆம் திகதி எதிர்நோக்குகிறது. (29.08.1926 – 08.12.1995) அவர் நினைவாக இக்கதையை அனுப்புவதில் மகிழ்வையும், நன்றியையும் உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். நன்றியோடு நவஜோதி நவஜோதி யோகரட்னம்" என்று குறிப்பிட்டுமுள்ளார். அவருக்கு எம் நன்றி. அகஸ்தியர் நினைவாக அவரது இச்சிறுகதையைப் பதிவுகள் பிரசுரிப்பதில் மகிழ்ச்சியடைகின்றது. -பதிவுகள் -]


      “ஏ புள்ள காவேரி,  அந்தாளு அந்தால வந்து இம்புட்டு நேரமாக் காத்துக்கிட்டிருக்கு. நீயி என்னா செஞ்சிக்கிட்டிருக்கே? எந்திரிச்சுப் போ புள்ள”

         “என்னாத்தே சொல்றே? அவரு காத்துக்கிட்டிருந்தா நம்பளுக்கென்ன வவுத்து வலி? அந்தப் பரிசு கெட்ட சமாச்சாரங்களுக்கெல்லாம் நானு ஒருக்காலும் சம்மதிக்கமாட்டேங்’கிறேன்”
 
    “இம்புட்டுக் காலமா கண்டிப் பட்டணத்துச் சாலையோரங்கள்ல கெடக்கிறவங்க சிவியம் இன்னும் பரிசு கெடாம இருக்குதென்னு நெனப்பா? இப்ப என்னா புள்ளே ‘பரிசு கெடுறென்’கிற சமாச்சாரத்தெப் புதுசாப் பேசுறே?”
 
    “ஆத்தாஞ்சி,  நீயி எம்புட்டு நாக்கு வளைச்சுச் சொன்னாலும் உம் மனசு சம்மதிக்காது. எனக்கு உந்தச் சள்ளும் வாணாம் கிள்ளும் வாணாம். இனிமே உப்பிடியான பேச்சை வுட்டுத் தள்ளாத்தே. இதுக்கு நா சம்மதிக்க மாட்டேங்’கிறேன்”
 
        “அடி மூதி,   இத்தின வாட்டியும் நம்ப மனசு சம்மதிச்சா எங்க சிவியம் நடந்திட்டு வருது? ‘கண்டித் தெவிச்சு முடுக்கே கதி’யின்னு வந்து கெடக்கிறமே,  இதும் நம்ப மனசு ஒத்தா நடக்குது புள்ளே?”
 
       “அப்புடீன்னா,  தோட்ட லயத்தேவுட்டுக் கண்டிப் பட்டணப் பக்கமா ஏன் கூட்டியாந்தே?”
 
       “நீயி அதக் கேக்றியா?”
 
       “ஆமா’ன்னே”
 
       “தோட்டங்கள எடுன்னு நம்ம சங்கத்தாக்களுங்க கேட்டாங்க. ‘அது சரி’ன்னுதான் நாம் நெனச்சோம்,  ஆனா,  எடுத்தவுங்க பெரிய பெரிய வெளித்தோட்டங்களை வுட்டுப்புட்டு சின்ன ஊர்த் தோட்டங்கள எடுத்து மறுவாட்டியும் அதிகாரிங்கட கைக்கு மாத்தினாங்க. தோட்டங்களை எடு’ன்னு கேட்டது மொதலாளிங்களுக்குப் பொறுக்கலே. அதெச் சாட்டா வச்சு,  எடுத்த தோட்டத்தில செஞ்சுண்ட நம்ப வேலைய நிப்பாட்டி,
  நம்பளையெல்லாம் லயத்தை வுட்டே தொரத்திட்டாங்க. இப்போ இப்படி ஆச்சு”
 
    “அதுக்காவ,   பொண்ணாப் பொறந்தவங்க மானம் மருவாதிய வுட்டுடறதா’ங்கறேன்!”
 
         “நம்பளாட்டம் கொழும்பு கண்டிச் சாலையோரங்கள்ல வந்து கெடக்கிற பொண்ணுங்கல்லாம் ஆளுக்கு நாலு ஆம்பொடையாங்களப் புடிச்சு வச்சுக்கிட்டுச் சீவிக்கிறா. அவளுகளுக்கு இல்லாத மானம் மருவாதியா நம்பளுக்கு வேணும்கிறே?”
 
    “என்னமோ,  நானு அதுக்கு ஒத்துக்கவே மாட்டேன்”
 
    “ஒன்னப்போல நானு மானம் மருவாதியப் பாத்திருந்தாஇ நீயி இம்புட்டு பெரிய பொண்ணாட்டம் கண்ணுக்கு ஆசையா வளர்ந்திருப்பியா?”
    “அதுக்கு இப்ப என்னா வந்துட்டுது’ங்றேன்?”
மேலும் படிக்க ...

திகில் நாயகன் 'நைட்' ஷியாமளன்! - கிறிஸ்டி நல்லரெத்தினம் – மெல்பன் -

விவரங்கள்
- கிறிஸ்டி நல்லரெத்தினம் – மெல்பன் -
கிறிஸ்டி நல்லரெத்தினம்
23 ஆகஸ்ட் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அன்றும் ஃபிலடெல்பியாவில் காலை சோம்பலுடன் விடிந்தது. அவன் கண்களைக் கசக்கிக்கொண்டு ஒரு சூடான காப்பியை ஊற்றி உறிஞ்சியவாறு ஹாலில் வந்து அமர்ந்தான். என்னதான் செய்வதாம்? டிவியை உயிர்ப்பித்து சனல் வேட்டையை ஆரம்பிக்க வேண்டியதுதான். அப்போது.....தன்பின்னால் மாடிப்படிகளில் ஏதோ கிசு கிசு சப்தங்களும் மகிழ்ச்சி சிணுங்கல்களும்.... என்னவாய் இருக்கும் என ஊகிக்கும் முன்னே மலரிலும் மென்மையான இரு கரங்கள் அவன் கண்களை பொத்திற்று. மற்றும் இரு சோடிக்கரங்கள் அவனின் தோள்களில் பரிவுடன் இறங்கி இறுகிற்று. இந்த குட்டிக் குறும்பில் அவன் திழைத்தான்.

"ஹப்பி ஃபாதேஸ் டே டாட்!"

அந்த அன்புக்கூக்குரலுக்கு சொந்தமான மூன்று பதிவயது பெண்களின் அன்பில் மூழ்கினான் அவன். ஒவ்வொருவராக தம் அன்புத் தந்தையை ஆரத்தழுவி கன்னங்களை நனைத்தனர். கடைக்குட்டி கையில் இருந்த 'தந்தை நாள்' பரிசு கைமாறி அவன் கைக்கு ஊர்ந்தது.

"ப்ளீஸ்.... ஓபிண் இட் டாட்!'

அவர்கள் மூவரினதும் அன்புக் கட்டளைக்கு அடிபணிந்து மெதுவாய் அந்த பார்சலை கட்டியிருந்த இளநீல பட்டியை அவிழ்த்து பிரிக்கிறான். அவனுக்கு பிடித்த நான்கு புத்தகங்கள் புது மணத்துடன் அவனை வரவேற்கின்றன. அத்தனையும் கிராஃபிக் நாவல் எனும் வகுப்புக்குள் அடங்கும் பெரியோர் காமிக்ஸ். கனிவுடன் தன் செல்வங்களைப் பார்க்கிறான். பார்வை ஆயிரம் கோடி நன்றி என சொல்லாமல் சொல்லிற்று. நம் நாயகன் வேறு யாருமல்ல. ஹாலிவுட் கனவுலகையே தன் 'த சிக்ஸ்த் சென்ஸ்' The Sixth Sense படத்தின் மூலம் திரும்பிப்பார்க்க வைத்த திகில் மன்னன் நைட் ஷியாமளன்தான்!

மேலும் படிக்க ...

காலத்தால் அழியாத கானங்கள்: 'உன்னைத்தான் நான் அறிவேன்' - ஊர்க்குருவி -

விவரங்கள்
- ஊர்க்குருவி -
கலை
21 ஆகஸ்ட் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

பாடகி பி.சுசீலாவின் சிறந்த பாடல்களிலொன்று இந்தப்பாடல். வரிகளை உணர்வு பூர்வமாகப் பாடியிருப்பார். கவிஞர் கண்ணதாசன் தன் மொழியாற்றல் காரணமாக, மனத்தை மயக்கும் எளிய , இனிய சொற்களைக்கொண்டு சிறப்பான பாடல்களைத் தருவதில் வல்லவர். இப்பாடலும் அத்தகையதொன்று.

ஜெமினியின் 'வாழ்க்கைப்படகு' படப்பாடல்கள் அனைத்துமே இனியவை; சிறந்தவை. அவற்றிலிதுவுமொன்று. நடிகை தேவிகாவியின் இவ்விதமான நடனப்பாடல்கள் அதிகமில்லை. அவள் அவன் மீதான காதலைச்சொல்வதுடன், காதலின் சிறப்பையும் எடுத்துரைக்கின்றாள். அவன் மீதான காதலை வெளிப்படுத்துகையில் தேவிகாவின் அவன் மீதான காதல் உணர்வுகளை வெளிப்படுத்தும் முகபாவங்கள் அற்புதம். இப்பாடலில் தேவிகாவின் நடன அசைவுகளும் உள்ளங்கவர்பவை.

படம்: வாழ்க்கைப்படகு
பாடியவர்: பி.சுசீலா
வரிகள்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ்.வி - ராமமூர்த்தி
https://www.youtube.com/watch?v=LQ-8LoS5zJ0

மேலும் படிக்க ...

எதிர்வரும் ஞாயிறு நிகழ்வு: Zoom வழியாக , சி. மெளனகுருவின் இரு நூல்கள்- அறிமுகமும் கலந்துரையாடலும்! - எம்.பெளசர் -

விவரங்கள்
Administrator
அரசியல்
20 ஆகஸ்ட் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மேலும் படிக்க ...

முருகபூபதியின் கதைத்தொகுப்பின் கதை ! சிறுகதைத் தொகுப்பில் பெண்கள் ! ஒரு கண்ணோட்டம்!   - சி.ரஞ்சிதா -

விவரங்கள்
- சி.ரஞ்சிதா -
நூல் அறிமுகம்
20 ஆகஸ்ட் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எழுத்தாளர் முருகபூபதி அவர்களுக்கு அறிமுக பாமாலை அவசியமற்றது. எழுத்துலகம் நன்கு அறிந்த ஒரு படைப்பாளி. புலம்பெயர்ந்து அவுஸ்திரேலியாவில் வாழும் இவர் இன்றுவரை எழுத்து துறைக்குள் பயணித்துக்கொண்டு தொடர்ந்து இலக்கியப் பணி ஆற்றிவருகின்றமை மகிழ்ச்சியளிக்கிறது. அவரால் இந்த ( 2021) ஆண்டு படைக்கப்பட்ட கதைத்தொகுப்பின் கதை என்னும் சிறுகதைத்தொகுதி அண்மையில் ஜீவநதி வெளியீடாக வெளிவந்துள்ளது. 15 சிறுகதைகளைக் கொண்ட இத்தொகுப்பில் இடம்பெறும் “அம்மம்மாவின் காதல்”, “அவள் அப்படிதான்”, “ஏலம்”, “கணங்கள்”, “நேர்காணல்” ஆகிய ஐந்து சிறுகதைகளிலும் பரந்து விரிந்து இடம்பிடித்துநிற்கும் பெண்கள் தொடர்பான பிரச்சினைகளை அலசி ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

பெண்கள் தொடர்பான சமூகப் பார்வை, அவர்கள் மீதான கரிசனை – மேலைநாட்டார் வருகையோடு தமிழ்ச்சூழலுக்குள் வேரூன்றியது. பெண் கல்வி, பெண்களுக்கு தொழில், வாக்குரிமை என அவர்களது சமூக அந்தஸ்து உயரவே மேலைநாட்டுப் பெண்ணியச் சிந்தனைகளும் வலுப்பெற ஆரம்பித்தன. அரசியல், பொருளாதாரம், கலை, கலாசாரம் - பெண்களுக்கான அங்கீகாரத்தை வழங்கவே இலக்கியங்கள் வாயிலாகவும் பெண்ணியம் பல எழுத்தாளர்களால் பேசப்பட்டன. பெண்களின் பிரச்சினைகளைப் பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் தமது படைப்பிலக்கியங்களில் ஆழமாக பேசியுள்ளனர். முற்போக்குச் சிந்தனையுடைய பல பெண்ணிய படைப்புக்களை தமிழ்ச்சூழலில் இன்றுவரை நாம் தரிசித்துக்கொண்டுதான் இருக்கிறோம்.

மேலும் படிக்க ...

கவிதை: காலச்சுழல்!  - துவாரகன் -

விவரங்கள்
- துவாரகன் -
கவிதை
14 ஆகஸ்ட் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 

முன்னோர்
புண்ணியத்தை அறுவடை செய்யக்
கற்றுத் தந்தனர்.
நேர்மையைக் கற்றுத் தந்தனர்.
நாங்களோ,
பாவத்தை அறுவடை
செய்து கொண்டிருக்கிறோம்.

மேலும் படிக்க ...

'நடு' இணைய இதழ்: கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலனுடனான நேர்காணல்!

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
இலக்கியம்
14 ஆகஸ்ட் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கலை, இலக்கியத்தின் பல்வகை வடிவங்களிலும் பங்களித்து வருபவரும் கவிஞரும், சமூக அரசியற் செயற்பாட்டாளருமான வ.ஐ.ச.ஜெயபாலனுடனான நேர்காணலொன்று 'நடு' இணைய இதழில் வெளியாகியுள்ளது. 'நடு; இணையை இதழின் ஆசிரியரான கோமகன், ஏப்ரில் 2019இல் நடத்திய நேர்காணலிது.

நேர்காணலுக்கான இணைப்பு: https://naduweb.com/?p=17475

இந்நேர்காணலில் ஜெயபாலன் கவிதை, ஈழத்தமிழர்களின் அரசியல், புகலிடத்தமிழர்களின் அரசியல், தனது அரசியல் அனுபவங்கள், தனது ஆரம்ப கால வாழ்பனுவங்கள், அவரது சினிமா அனுபவங்கள் எனப் பல்வகை அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார்.

இவர் என்றுமே மதில் மேல் பூனையாக இருந்ததில்லை. தான் நம்பியதை, நம்புவதை எப்பொழுதும் எவ்விதத்தயக்கமும் இல்லாமல் எடுத்துரைக்க, இடித்துரைக்கத் தவறுவதில்லை. அது இவர் மீதான என் அபிமானத்துக்கு முக்கிய காரணங்களிலொன்று.

மேலும் படிக்க ...

ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் இணைய வழிக் கலந்துரையாடல்: ‘தமிழரின் காப்பிய அழகியல் ’ - இளங்கோ , கம்பன் ஆகியோரை மையப்படுத்திய பார்வை! பேசுபவர்: பேராசிரியர் நா. சுப்பிரமணியன்!

விவரங்கள்
- ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் -
நிகழ்வுகள்
14 ஆகஸ்ட் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் இணைய வழிக் கலந்துரையாடல்: ‘தமிழரின் காப்பிய அழகியல் ’ - இளங்கோ , கம்பன் ஆகியோரை மையப்படுத்திய பார்வை! பேசுபவர்: பேராசிரியர் நா. சுப்பிரமணியன்!

மேலும் படிக்க ...

இலங்கை மாணவர் கல்வி நிதியம் – அவுஸ்திரேலியா ( 1988 – 2021 )! மலையகத்தில் கொவிட் நெருக்கடி காலத்தில் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் பணிகள்! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
நிகழ்வுகள்
14 ஆகஸ்ட் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அவுஸ்திரேலியாவிலிருந்து கடந்த 33 வருடகாலமாக இயங்கிவரும் தன்னார்வத் தொண்டு நிறுவனமான இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் ( 1988 – 2021 ) ஏற்பாட்டில் கடந்த 2019 ஆம் ஆண்டு இலங்கை மலையகத்தில் நுவரேலியா மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட வறுமைக்கோட்டில் வாழும் ஏழைத்தமிழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவும் நிதிக்கொடுப்பனவு இவ்வாண்டும் அண்மையில் வழங்கப்பட்டது.
கடந்த காலங்களில் இலங்கையில் வடக்கு – கிழக்கில் நீடித்த போர் அநர்த்தங்களினால் பெற்றோரை, குடும்பத்தின் மூல உழைப்பாளிகளை இழந்த ஏழைத்தமிழ் மாணவர்களுக்கு உதவிய இலங்கை மாணவர் கல்வி நிதியம், மலையகத்தில் முன்னைய மண்சரிவு முதலான அநர்த்தங்களினாலும் தந்தையை இழந்தும் பாதிக்கப்பட்ட வறுமைக்கோட்டில் வாழும் மாணவர்களுக்கும் தற்போது உதவி வருகிறது. நுவரேலியா மாவட்டத்தில் நானுஓயா நாவலர் கல்லூரி, டெஸ்ஃபோர்ட் தமிழ் மகா வித்தியாலயம், கந்தப்பளை மெதடிஸ்ட் கல்லூரி மற்றும் மகளிர் பாடசாலை (Our Lady’ School ) , ஆரம்ப பாடசாலை முதலானவற்றைச் சேர்ந்த மாணவர்கள் இத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றனர்.

மேலும் படிக்க ...

சிறுகதை: ஒரு வாய் சோறு! - இணுவையூர் சக்திதாசன், டென்மார்க் -

விவரங்கள்
- இணுவையூர் சக்திதாசன், டென்மார்க் -
சிறுகதை
14 ஆகஸ்ட் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 அவன் கன்னங்கள் இரண்டிலும் வழிந்த கண்ணீர் உதட்டில் விழுந்து உப்பு கரித்த போதுதான் அது கண்ணீர் என்பதை, உணர்ந்தான் ஏகாம்பரம்.

அவன் நினைவுகள் உணர்வுகளற்று உதிரியாக ஆங்காங்கே திட்டுதிட்டாய் நிற்கும், மேகக்கூட்டங்கள் போல திசைமாறி நின்ற இடத்தில் நின்றன. அப்பப்ப உணர்ச்சிகள் உரசப்படும்போது. மேகம் கறுத்து மழை பொழிவதுபோலத்தான் அவன் கண்களும் .

வாழ்வின் நீள அகலங்களை அளந்தவன் ஏகாம்பரம். ஆனாலும், எதிலும் மனம் ஒட்டிக் கொள்ளாமல் வாழை இலையில் விழும் தண்ணீரைப் போல எந்த சந்தோசத்தையும் ஏற்க மறந்தவனாய் விரக்தியின் விளிம்பில் நின்று வாழ்வைக் கடந்து கொண்டிருந்தான்.

வேளாவேளைக்குசாப்பாடு, நேரம்தவறாமல் தண்ணிவண்ணி , கூல்றிங்க்ஸ்..  சாப்பாட்டுக்குப் பிறகு, நொட்டு நொறுக்குகள், பழங்களென ... எந்தக் குறையுமில்லாத வாழ்வுதான் ஏகாம்பரத்தினுடையது.

இதை விட பணிவிடை செய்ய பணியாட்கள் .. வெளியேசென்றுவர வாகன வசதிகள் என, எல்லாம் இருந்தும் எதுவுமில்லாத உணர்வுடன் தான் ஏகாம்பரத்தின் வாழ்வு கரைந்து கொண்டிருந்தது.

எப்பவும், முப்பது நாற்பது பேர் அவனைச் சுற்றியிருந்தாலும், யாருடனும் அனாவசியமாகப்பேச விரும்பமில்லாமல். புன்னகை ஒன்றை மட்டும் வீசிவிட்டு, கடந்து சென்று விடுவான். அவனுக்கென்று இருக்கின்ற பிரத்தியேக அறையில் தானும் தன்பாடுமாய் தனிமையில் இருப்பதையே அவன் விரும்புவான்.

மேலும் படிக்க ...

குறு நாடகம்: ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை. - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
13 ஆகஸ்ட் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

தாயகம் (கனடா) பத்திரிகையில் வெளியான எனது சிறுகதை 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை! பின்னர் அச்சிறுகதை இந்தியாவில் மித்ர பதிப்பக வெளியீடாக வெளிவந்த 'பனியும் பனையும்' புலம்பெயர் தமிழர் சிறுகதைத் தொகுப்பிலும் இடம் பெற்றிருந்தது. பின்னர் திண்ணை, பதிவுகள் ஆகிய இணைய இதழ்களிலும் வெளியானது. அச்சிறுகதையை குறுநாடகமாக்கியுள்ளேன். அதனையே இங்கு நீங்கள் காண்கின்றீர்கள். - வ.ந.கி 


[ தமிழ்க் கனேடியனான ,  'டொரோண்டோ'வில் வசிக்கும் பொன்னையா வாகனத்தில் பஞ்சாப்காரனின் கராஜ் நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றான். அது ஒரு ஞாயிற்றுக்காலை. ]

பொன்னையா (தனக்குள்): வரவர நகரம் பெருக்கத்தொடங்கிட்டுது. முன்பென்றால் ஞாயிறு  விடுமுறை நாள்.  கடைகளைத் திறக்க மாட்டான்கள். இப்ப நிலை மாறிட்டுது. ஞாயிறும் கடைகளைத் திறக்கிறான்கள். 'ட்ரஃபிக்'கும் அதிகமாயிட்டுது. பஞ்சாப்காரன் திட்டப்போகின்றான்."

மேலும் படிக்க ...

மற்ற கட்டுரைகள் ...

  1. பத்மநாபா ஐயர் எண்பதாவது வயதையொட்டிய வாழ்த்துகளும், மதிப்பீடுகளும்! - தகவல்; பெளசர் -
  2. மலைபடு கடாமில் பண்பாட்டுப் பதிவுகள் - ராஜகுமாரி. ஈ, முனைவர் பட்ட ஆய்வாளர் -
  3. தொடர் நாவல்: ஒரு கல் கரைந்தபோது! - ஸ்ரீராம் விக்னேஷ் (நெல்லை வீரவநல்லூர்) -
  4. காமிக்ஸ் பிறந்த கதை! சூப்பர் மேனுக்கு ஏழு வகை நாணயங்களை வெளியிட்ட தேசம் ! - கிறிஸ்டி நல்லரெத்தினம் – மெல்பன் -
  5. கடந்த காலம், எதிர்காலத்தைத் திருட விடலாமா? - ஸ்ரீரஞ்சனி -
  6. தொடர் நாவல்: கலிங்கு (2009 -4) - தேவகாந்தன் -
  7. அஞ்சலி: மாத்தளை கார்த்திகேசு விடை பெற்றார்! மலையக மக்களின் ஆத்மாவின் குரல் ஓய்ந்தது ! - முருகபூபதி -
  8. அ.முத்துலிங்கத்தின் படைப்புகள் பற்றிய ஜெயமோகனின் கருத்துகளும் ஆசி. கந்தராஜாவின் எழுத்துகளும்! - ரஞ்ஜனி சுப்ரமணியம் -
  9. நினைவுகளின் தடத்தில் – (18, 19, 20 , 21 & 22) - வெங்கட் சாமிநாதன் -
  10. பாடகி கல்யாணி மேனன் மறைவு!
  11. கவிதை: எனதான கவிதைத் தேடலில்…… - குறிஞ்சி மைந்தன், புது தில்லி --
  12. ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் இணைய வழிக் கலந்துரையாடல்: நூல்களைப் பேசுவோம்: ‘’வலியின் சுமைகள்” (எழுத்தாளர் வவுனியூர் இரா. உதயணனின் நாவல்)
  13. சமீபத்திய இரு மலேசிய நாவல்கள்! - சுப்ரபாரதி மணியன், திருப்பூர் -
  14. சிறுகதை: திரைச்சீலைப் பறவைகள்! - சுப்ரபாரதிமணியன் -
பக்கம் 91 / 104
  • முதல்
  • முந்தைய
  • 86
  • 87
  • 88
  • 89
  • 90
  • 91
  • 92
  • 93
  • 94
  • 95
  • அடுத்த
  • கடைசி