குறுநாவல்: வேட்டை! - கடல்புத்திரன் -
-கடல்புத்திரனின் 'வேட்டை' 'பதிவுகள்' இணைய இதழில் வெளியான குறுநாவல். நாவலில் வரும் சம்பவங்கள் , பாவிக்கப்பட்டுள்ள இயக்கப்பெயர்கள் இவற்றிலிருந்து இக்குறுநாவல் இலங்கைத் தமிழர்களின் விடுதலைப்போராட்டத்தின் சில கட்டங்களைத் தொட்டுச் செல்கின்றது என்பதைப் புரிந்து கொள்வீர்கள். இந்நாவலில் பாவிக்கப்பட்டுள்ள இயக்கப்பெயர்கள், சம்பவங்களிலிருந்து அவற்றின் உண்மையான இயக்கப்பெயர்களை நீங்கள் ஊகித்துக்கொள்ளலாம். பெரிதாக நடந்த இயக்க மோதற் கால அனுபவங்களை மிகவும் யதார்த்தபூர்வமாக விபரிக்கும் குறுநாவலின் அனுபவங்கள் இலேசாக அவ்வப்போது மனத்தில் மெல்லிய வலியினை ஏற்படுத்து விடுகின்றன. அதே சமயம் முட்டி மோதிக்கொண்ட அமைப்புகளின் அடிமட்டத்தோழர்களுக்கிடையிலான நேரடிச் சந்திப்புகளின் அனுபவங்கள் சிலவற்றையும் இக்குறுநாவல் பதிவு செய்கின்றது. -
பயிற்சி முகாமிலிருந்து வந்து ஒரு வருசம் கடந்து விட்டது . ஆனைக்கோட்டைத் தோழர்களைச் சந்திக்கும் ஆசை பெடியகளுக்கு நிறைவேறவே இல்லை . ” போய்ப் பார்ப்போமா ? ” என்று கேட்டுக் கொண்டே இருந்தார்கள் வேறு ” அவன் எங்கே ? ; இவன் எங்கே ? ” …என்ற குரல்கள் அங்காங்கே எழுந்து கொண்டிருந்தன . இங்கேயும் , ரஸ்யப்புரட்சியில் எழுந்த மாதிரி , மென்செவிக்குகள் எழுச்சியுற்று இரண்டாகி பிரிந்து விடுமோ ? என்றிருந்தது . கேள்விகளை எழுப்புவது ,கண்டமாதிரி விமர்சனங்களை அள்ளிக் கொட்டுவது என …. ரசிகர் மன்றம் மாதிரி ஒவ்வொரு பகுதியும் சுறுசுறுப்பாகவும் இயங்கிக் கொண்டிருந்தன . ஒருபுறம் பயிற்சியால் வந்து குவிந்து கொண்டிருக்கும் தோழர்கள் . இந்திய அரசை விலத்தி ஆயுதங்களை வாங்கியதில் கோபமுற்று அத்தனையும் பறித்து விட்ட நிலைமை. வாழ்வியலில் வறுமை எவ்வளவு மோசமோ …அதைப் போன்றதே , . இயக்கத்திலும் ஆயுத வறுமையும் . ஒட்டு மொத்தத்தில் மார்க்சிச வழியில் பிரபலமாக விளங்கிய தாமரை பலவித சிக்கல்களில் சிக்கித் தவித்தது.
வெளியில் , சிதைவுறுகிறதை விட சிதைக்கப்படுகிறதோ…என்ற மாதிரியான நிகழ்வுகள் தான் அதிகம் . முதலில் , தளமாநாடு கூட்டப்படுவதென்றும் , பிறகு , , அதில் பெறப்படும் அறிக்கைகளையும் சீர்தூக்கி பார்த்து பின்தளமாநாடு கூட்டப்படும் என்ற விநோதமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படலாயின . ஏற்கனவே , அல்லி இயக்கத்தினுள் காங்கிரஸ் என்று ஒரு அவை கூடி செயலதிபர் தொட்டு பலர் மீள்தெரிவும் , ஆராய்வும் என புதுவிசயங்கள் தொடங்கி விட்டிருந்தன . இருந்தாலும் அதிலேயும் கோடாலியால் கொத்தியது மாதிரிப் பிளவு படும் போலத் தான் இருந்தது . அரசியலில் பல படிகளைக் கடந்து கொண்டிருந்திருந்தாலும் இலக்கை …… அடைவோமா ? என்பது தெரியாது . கழுகு , திறமான இயக்கம் கிடையாது . அப்படி தன்னை நினைத்துக் கொண்டு சங்கரத்தையிலுள்ள முல்லைமுகாம் மீது அதிகாலையிலே தாக்குதலைத் தொடுத்து விட்டது . தூக்கம் கலையாது வரிசையில் படுத்துக் கிடந்த தோழர்களுக்கு “என்ன நடந்தது ? ” எனத் தெரிய முதலே , எம் 16 சுடுகருவி சடசடவென சுட்டுத்தள்ளி விட , திறந்த முளிகளை, மூடாமல்…. சுமார் 24 , 25 உடல்கள் இரத்தக்குளத்தில் கிடந்தன .
‘ ஓரிரு மாதங்களுக்கு முதலே , முல்லைக்கு ‘போதாக்காலம் தொடங்கி விட்டது . வெளியில் தெரிய , அவர்களுடைய தளத்திலிருந்த இரு உபத்தலைவர்களுக்கிடையில் நிலவிய காழ்ப்புகள் முற்றி பூசல்களாக வெடித்திருந்தன . அவ்வளவாகப் படித்திராத . அச்சம் என்பதை அறியாத . சாண்டில்யன் கதைகளில் வருகிற மாதிரி எதிரி சுடுகிற போதிலும் காயங்களுடனும் ஆக்ரோசமாக சிங்கம் போல சிலிர்த்து முன்னேறிச் சென்று அச்சம் கொள்ள வைத்தவர்களும் அதில் இருந்தனர் . பெருமளவு படையினரையும் , பெரிய நகரக்காவல் நிலயமொன்றையும் முழுமையாக ,வெற்றிகரமாக தாக்கி அழித்த இயக்கம் . அச்சமயங்களில் . பெருமளவு ஆயுதங்களையும் கைப்பற்றி மக்களையும் புளாகிதமடையச் செய்திருந்தனர் . குட்டக்குட்டக் குனிபவரில்லை ” தமிழர்கள் ” என புதிய வரலாற்றை புதிதாகத் தொடக்கி வைத்தவர்கள் . வடமராட்சியில் ,ஒருமுறை இவர்களுடன் எதேச்சையாக கழுகுத்தோழர் ஒருவர் கொளுவப் போக ” ஊருக்குள்ளே ஒருத்தருமே கால் வைக்கக் கூடாது ” என கர்ஜித்து , கழுகுக்கெதிராக ஊரடங்குச்சட்டம் போட்டு அட்டகாசப்படுத்தி விட்டார்கள் . கழுகு , அதை வெகு அவமானமாகவேக் கருதியது . ஆனால் காளி சொன்னால் சொன்னது தான் . தாஸின் கண்ணிலிருந்து எவருமே தப்ப முடியாது , அவனது வலது கரமாக நின்றான் . இன்னும் சிலத் தோழர்கள் துவாரபாலகர்கள். தோளை உயர்த்தி சிலிர்ப்பவர்கள் .

காங்கேசந்துறை சீமெந்து தொழிற்சாலையில் காலைநேரச் சங்கு ஊதியதும், அயலவர்கள் பரபரப்பானார்கள். தொழிற்சாலைக்குச் சொந்தமான குவாட்டேஸில் அருகருகே வசித்த பாரமநாதனும், அப்துல் காதரும் ஒன்றாகவே வேலைக்குக் கிளம்பினார்கள். அவர்களின் பிள்ளைகளான ஜெகனும், ஹானியாவும் ஒன்றாகவே ஐந்தாம் வகுப்பில் படித்ததால் கல்லூரி வீதியில் உள்ள பாடசாலைக்கு ஒன்றாகவே போய்வருவார்கள். இருவரும் படிப்பிலும், விளையாட்டிலும் கெட்டிக்காரர்களாக முன்னிலையில் இருந்தார்கள். ஹானியாவின் உறவினர்களால் அவர்களின் மதம் சார்ந்த அதிககட்டுப்பாடு இருந்தாலும், பெற்றோர்கள் புரிந்துணர்வு உள்ளவர்களாக இருந்ததால் இவர்கள் ஒன்றாகவே பழகினார்கள்.
அன்பால் அனைவரையும் அரவணைத்த பண்பாளர் கலைத்தூது அருட்தந்தை மரியசேவியர் அடிகளார், இப்பூவுலகைவிட்டு மறைந்தாலும் அவரால் நேசிக்கப்பட்ட மக்களாலும் நண்பர்கள் மற்றும் கலை, இலக்கியவாதிகளினாலும் மறக்கப்பட முடியாத அற்புதமான பிறவி. தனது சமயப்பணிகளுக்கும் அப்பால், தமிழ்க்கலை வளர்த்த கர்மயோகி. தேடல் மனப்பான்மையுடன் அவர் தேடியது பணம், பொருள் அல்ல. எங்கள் தமிழின் தொன்மையைத் தேடியவர். “ தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் “ என்ற கூற்றுக்கு அமைய, தான் தேடிப்பெற்றதையும் கற்றுக்கொண்டதையும் தமிழ்மக்களுக்கு நினைவூட்டிச்சொல்லிவந்த பெருந்தகை. “கன்னித் தமிழ் வேர்களுக்குள் முத்தெடுப்போம் , காலமெல்லாம் முத்தம் பதிப்போம். “ என்ற தாரகமந்திரத்துடன், இலங்கையில் திருமறைக் கலாமன்றத்தை தங்கு தடையின்றி இயக்கிவந்தவர். “ மனிதநேயமொன்றையே இவரிடம் காணமுடிகிறது. கலை என்ற புனிதமான பாதையில் மனிதநேயம் என்ற ஒளியைத்தேடி, பூரணத்துவமான பாதையில் சலசலப்பின்றி தெளிந்த நீரோடைபோல் தனது பயணத்தை தொடர்பவர் “ என்று 1998 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மல்லிகை கலை, இலக்கிய மாத இதழில் இவர் பற்றி பதிவாகியிருந்தது. அந்த இதழின் முகப்பை அலங்கரித்தவர் மரியசேவியர் அடிகளார்தான். அட்டைப்பட அதிதியாக இவர் பற்றிய பதிவை பேராதனை ஏ. ஏ. ஜுனைதீன் எழுதியிருந்தார். அதனைப்படித்தது முதல், அடிகளாரை சந்திக்கவேண்டும் என விரும்பியிருந்தேன். நான் 1987 ஆம் ஆண்டே அவுஸ்திரேலியாவுக்கு வந்துவிட்ட பரதேசி. அதனால், அடிகளாரின் அருமை பெருமைகளை மல்லிகையின் குறிப்பிட்ட இதழிலிலேயே தெரிந்துகொண்டேன்.எனது ஆவல் காலம் கடந்து அவுஸ்திரேலியாவில் நிறைவேறியது. 2000 ஆம் ஆண்டு காலப்பகுதியென நினைக்கிறேன்.
கவிஞர் புலமைப்பித்தனின் மறைவு துயரைத்தந்தாலும், அவர் ஒரு நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்துவிட்டுத்தான் சென்றிருக்கின்றார். கலைஞர்களுக்கு என்றுமே அழிவில்லை. இரண்டாயிரம் ஆண்டுகள் கடந்த பின்னும் வள்ளுவர் இன்னும் இலக்கிய உலகில் வாழ்ந்துகொண்டிருக்கின்றார். சிலப்பதிகாரம் தந்த இளங்கோவடிகள், மணிமேகலையை வழங்கிய சீத்தலைச் சாத்தனாரென்று தமிழின் தலை சிறந்த இலக்கியப்படைப்பாளிகள் இன்றும் தம் படைப்புகளூடு வாழ்ந்துகொண்டுதானிருக்கின்றார்கள். மகாகவி பாரதி மறைந்து பல தசாப்தங்கள் கடந்து விட்டன. இன்றும் அவரது படைப்புகளூடு வாழ்ந்து கொண்டிருதானிருக்கின்றார். கவிஞர் புலமைப்பித்தனின் மறைவும் இத்தகையதுதான். இனியும் அவர் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தமிழ் இலக்கியத்தில் வாழ்ந்துகொண்டிருதானிருப்பார்.
கிளிநொச்சியிலிருந்து வந்து சுமார் ஒன்றரை வருஷத்தை வடமராட்சியில் கழித்த பரஞ்சோதி பாதியாக சுருங்கிப் போனாள். எலும்பும் உருகிச் சிறுத்துப் போயிருந்தாள். துயரத்தின் வேர்கள் அவளுள் ஆழமாய் இறங்கியிருந்தன. சாந்தமலருக்கு தாயைப் பார்க்கவே முடியவில்லை. அவளால் செய்ய எதுவுமிருக்கவில்லை. வன்னியில் யுத்தம் நடந்துகொண்டிருந்தது. அது தொடங்குகிற காலத்தில், போன வருஷம் ஜுன் மாதமளவில், ஏ9 பாதை மூடப்பட்டது. யுத்தம் முடிந்து ஒரு ஸ்திரமான நிலைமை தோன்றும்வரை அது மீண்டும் திறக்கப்போவதில்லை. அம்மாவுக்கான கதவுகள் அடைத்தே இருக்கும். யுத்தம் எப்போதும் நடந்துகொண்டிருந்தது. அது வெளிவெளியாய் நின்றிருந்தால், உள்ளுள்ளாய் நடந்தது. சமாதான காலத்திலும் நடந்தது. எப்போதும் நடந்தது. கிழக்கு மாகாணத்தில், வன்னியின் எல்லைகளில் குறிவைத்த தாக்குதல்களாய் அது வடிவங்கொண்டிருந்தது. துல்லியமான விமானக் குண்டு வீச்சினால் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் போன்றவர்கள் அழிக்கப்பட, ஆழ ஊடுருவும் படையினரின் கிளைமோர் தாக்குதல்களால் புலிகளுக்கு ஆதரவான ‘கிளி பாதர்’ கனகரத்தினம் அடிகள்போன்ற கத்தோலிக்க மதகுருமாரும் இல்லாமல் ஆக்கப்பட்டதற்கான முன்னெடுப்பும் யுத்தம்தான். நாடாளுமன்ற அங்கத்தவர்கள் சந்திரநேரு, ஜோசப் பரராஜசிங்கம் போன்றவர்களும் கொலைக் குறியில் மறைந்தனர். அரசாங்கத்தின் யுத்த முன்னெடுப்பிற்கு எதிரானதும், புலிகளின் செயற்பாட்டுக்கு ஆதரவுமான நிலைப்பாடு கொண்டிருந்த தராகி சிவராம்போலவே, லசந்த விக்ரமதுங்கபோன்ற பத்திரிகை ஆசியர்களும் காட்சியிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். சிங்கள ஊடகவியலாளர்களே நாட்டைவிட்டு தப்பித்து ஓடுமளவு நிலைமை பயங்கரம்கொள்ள வைக்கப்பட்டிருந்தது. புத்துயிர் பெற்றிருந்த தேசப் பாதுகாப்புக்கான ஊடக மையம் ஊடகத் துறையிலுள்ள மாற்றுக் கருத்தாளரை முற்றாக அழித்தது. அவையெல்லாம்கூட யுத்தத்தின் உபகூறுகளே.
இப்போதெல்லாம் அக்காள் என்னிடம் முகம்கொடுத்துப் பேசுவதே குறைவு. நினைக்கும்போது மனத்துக்குள் அழுத்தமாக இருந்தாலும், சுதந்திரமாக நடமாட முடிகிறதே என்னும் ஒரு ஆறுதல்.
உலகிலேயே கல்வியைக் கலைமகளாக வணங்கும் இனம் நம் தமிழினம். கல்விக்கு மிக முக்கியமான இடத்தை நம் முன்னோர்கள் வழங்கியிருந்தார்கள். மாற்றம் ஒன்றே மாறாதது என்பதற்குக் கல்வியும் விதிவிலக்கல்ல. கல்விமுறையில் காலந்தோறும் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வந்தாலும் தற்போதைய பெருந்தொற்றுக் காலத்தில் இணையவழியில் கற்பிக்கப்படும் கல்வி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதை மறுக்க இயலாது.அது இளம்தலைமுறைக்கு வரமா? சாபமா? என்பதை இக்கட்டுரையில் காணலாம்.
இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம். இல்லை உலக உயிர்களின் முதுகெலும்புதான் விவசாயம். கணிப்பொறியிலோ ஆய்வகத்திலோ நெல்லையும் கம்பையும் உருவாக்கமுடியாது . மற்ற நாடுகளைக் காட்டிலும் இந்தியாவின் விவசாயம் அதள பாதாளத்துக்குப் போய் விட்டது. காரணம் யோசிக்க வேண்டிய அரசாங்கமோ பன்னாட்டு நிறுவனங்களுக்கு பாய் விரித்துப் படுக்கச் சொல்கிறது . தன் நாட்டில் சுற்றுப்புறத்திற்கும் நிலத்திற்கும் பாதிப்பு ஏற்படும் தொழில்களை இங்கே நிறுவி வியாபாரம் பார்க்கிறார்கள் பன்னாட்டு வியாபாரிகள்.
இன்று கே.எஸ்.ராஜா நினைவு தினம். எம் தலைமுறையினரின் பதின்ம வயதுப்பருவத்தில் எம்மையெல்லாம் கவர்ந்த இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன அறிவிப்பாளர்களில் ஒருவர். இவரது குரலும், இவரது தனித்துவம் மிக்க அறிவிப்புப் பாணியும் இவரது பலமான அம்சங்கள். இவரைப் பற்றி எண்ணியதும் முதலில் நினைவுக்கு வருவது: தனது பெயரைக் குறிப்பிடுகையில் சிவாஜியின் ராஜா படப்பாடலொன்றில் வரும் ராஜா என்னும் சொல்லை ஒலிக்கச்செய்வார். அதுதான்.
- எழுத்தாளர் உதயகுமாரி பரமலிங்கம் (நிலா) அவர்கள் மறைந்த செய்தியினை துயரத்துடன் வசதிகள் வாசகர்களுக்கு அறியத்தருகின்றோம். நிலா, வஸந்தா என்னும் பெயர்களில் இவரது இலண்டன் நிகழ்வுகள் பற்றிய கட்டுரைகள் பதிவுகள் இணைய இதழில் வெளியாகியுள்ளன. அவ்வப்போது பதிவுகள் இதழில் வெளியாகும் நிகழ்வுகள் பகுதிக்கு இலண்டனில் நடைபெற்ற நிகழ்வுகள் பற்றிய கட்டுரைகளைப் புகைப்படங்களுடன் அனுப்பி, அவை பதிவுகள் இணைய இதழில் வெளியாகியுள்ளன. எழுத்தாளர் மாதவி சிவலீலனின் 'இமைப்பொழுது' நூல் வெளியீட்டு நிகழ்வு பற்றிய இவரது கட்டுரை 11 டிசம்பர் 2017 வெளியான பதிவுகள் இணைய இதழில் 'இலண்டனில் இமைப்பொழுது' என்னும் தலைப்பில் , நிகழ்வுக் காட்சிகளை வெளிப்படுத்தும் புகைப்படங்களுடன் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. 




1980களில் நான் சென்னையிலிருந்த காலத்தில், என் மாணவப் பருவத்து நண்பனான இரகுபதியை சந்தித்ததேன். அக்காலத்தில்தான் இரகுபதியின் ஆய்வு நூல் சென்னையில் பதிக்கப்பட்டது. இராமாயணத்தில் அணிலாக Early Settlements in Jaffna என்ற ஆய்வு நூலின் பதிப்பில் எனது பங்கும் இருப்பதால் சில உண்மைகளை விளம்ப விரும்புகிறேன்.
" எங்கும் கும்மிருட்டு..... நடுநிசி..... "கி....ரீ.... ரீ... ரீ...ச்" என எங்கோ யாரோ கூரிய நகங்களால் எதையோ பிறாண்டும் சத்தம்! அச்சத்தம் காதுகளில் புகுந்து முள்ளந்தண்டை சில்லிட்டது. படுக்கையில் இருந்து துள்ளி எழுந்து...... "என்ன, 'மர்மக்கதை மன்னன்' பி.டி.சாமியின் மர்ம நாவலில் இருந்து ஒரு பக்கத்தை படிக்கிறேன் என எண்ணினீர்களோ? “ அது தான் இல்லை! ஏப்ரல் 14, 1912 இல் தன் கன்னிப் பயணத்தில் RMS டைட்டானிக் எனும் பாரிய பயணிகள் கப்பல் பனிப்பாறையுடன் உரசிய வேளையில் எழுந்த மரண ஒலி அது! அது சரி, 109 வருடங்களுக்கு பின் இந்த நனவிடை தோய்தல் எதற்காம் என நீங்கள் கேட்பது புரிகிறது. அதை பின்னர் சொல்லட்டுமா? சரி, கதைக்கு வருவோம்.
- அண்மையில் முகநூலில் நானிட்டிருந்த பேராசிரியர் நுஃமானின் பெயர் பற்றிய பதிவும் , அதற்கான எதிர்வினைகளும் இவை. ஒரு பதிவுக்காக இங்கு பதிவு செய்கின்றேன். - வ.ந.கி -
இலங்கைத் தமிழ் ஆய்வாளர்களில் பேராசிரியர் இளையதம்பி பாலசுந்தரம் அவர்கள் முக்கியமானவர்களிலொருவர். இலங்கைத் தமிழ்ப்பகுதிகளின் ஊர்ப்பெயர்கள் பற்றிய இவரது ஆய்வு நூல்கள், நாட்டார் இசை, பாடல்கள் பற்றிய நூல்கள், ஒப்பனைக்கலை மற்றும் கனடாத் தமிழர்தம் வரலாறு பற்றிய 'கனடாவில் இலங்கைத்தமிழரின் வாழ்வும், வரலாறும்’ என்னும் நூல் போன்ற இவரது ஆய்வு நூல்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை.
'தலைமுறை தாண்டிய பயணம்: பத்மநாப ஐயர் - 80!' என்னும் மெய்நிகர் நிகழ்வில் (வணக்கம் லண்டன் நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட நிகழ்வு) உரையாற்றிய கலை, இலக்கிய விமர்சகர் மு.நித்தியானந்தன் அவர்கள் கூறிய வரலாற்றுத் தகவலொன்று என் கவனத்தை ஈர்த்தது. அது முனைவர் பொ.ரகுபதியின் Early Settlements in Jaffnaஅ நூல் பற்றியது.

வ.ந.கிரிதரனின் வெளியான நூல்கள்: