பதிவுகள் முகப்பு

எழுத்தாளர் அகணியின் 'இன்னும் இருக்கிறது இனிய வாழ்வு', 'கட்டுரைச் சாரல்' மற்றும் 'இன்பமுற வாழ்வதற்கு இலக்கியப் புதையல்கள்' நூல்களைப்பற்றிய சிந்தனைகள். - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
07 மார்ச் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எனக்குப் பொதுவாக அதிகம் வாசிப்பவர்களை, அதிகமாக எழுதுபவர்களை. அதிகமாகத் தம் தர்க்கரீதியிலான சிந்தனைகளைத் தெளிவாக வெளிப்படுத்துபவர்களைப் பிடிக்கும், அவர்கள்தம் கருத்துகள் முரண்பட்டவைகளாக இருந்தால் கூட அவர்கள் தமக்குச் சரியென்று பட்டதைத்  தாம் பெற்ற இன்பத்தை மற்றவர்களும் பெற வேண்டுமென்பதற்காக இயங்குபவர்கள் என்பதால் நான் அவர்களை மதிப்பவன்.  எழுத்தாளர் அகணி சுரேஷ் (சி.அ.சுரேஷ்) அத்தகையவர்களில் ஒருவராக நான் அடையாளம் காண்பவன்.

பேராதனைப் பல்கலைக்கழகப் பொறியியல் பட்டதாரியான இவர் ஐக்கிய இராச்சியத்தில் கணனித் துறையில் முதுமானிப்பட்டம் பெற்றவர்.  தற்போது கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையத்தலைவராகவும் இருந்து வருபவர். இவரது எழுத்துலகப் பங்களிப்பு கவிதை (மரப்புக்கவிதையுட்பட), சிறுகதை, நாவல், கட்டுரை (அறிவியல், ஆன்மிகம், இலக்கியம்) , இசைப்பாடல் எனப் பன்முகப்பட்டது. சிறந்த பேச்சாளர். இவரது கரகரத்த குரல் கேட்பதற்கு இனிமையானது. தமிழகத்துத் திமுகப் பேச்சாளர்களை நினைவூட்டுவது.

மேலும் படிக்க ...

நனவிடை தோய்தல்: போட்ஸ்வானா - கே.குருபரன் -

விவரங்கள்
- கே.குருபரன் -
பயணங்கள்
07 மார்ச் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

நான் ஆப்பிரிக்காவில் 17 ஆண்டுகள் வேலை செய்திருக்கிறேன். அதில் 16 ஆண்டுகள் போட்ஸ்வானாவில். எனது வாழ்க்கையின்  வசந்த காலம் அது.  எனது  இளமைக்காலமாக  அமைந்தது மட்டுமல்லாது  குறிப்பிடத்தக்க சேமிப்பு, நல்ல ஓய்வு நேரம்,  உயர்ந்த வாழ்க்கைத்தரம், நட்புறவான மக்கள், சட்டம் ஒழுங்கோடு கூடிய அரசியல் ஸ்திரத்தன்மை, மோசமில்லாத காலநிலை என்று நாம் வாழ்ந்த சூழலும் அதற்கு பெரும் பங்கு வகிக்கிறது. எமக்கே இந்த நிலைமை என்றால், ஐரோப்பியர் பற்றி சொல்லத் தேவையில்லை. அங்கு அவர்கள் முதல்தர குடிமக்கள் என்பதோடு வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்கத் தெரிந்தவர்கள் என்பதால் அவர்களுக்கு  போட்ஸ்வானா ஒரு சொர்க்கபூமி. அவர்களைப் பற்றி உள்ளூர் வாசிகள் சுவாரசியமாக ஒன்று சொல்வார்கள். குறிப்பிட்ட காலம் வேலை செய்த பின் "ஊருக்கு போகப்போகிறேன், இனியும் உங்களோடு இருந்து மாரடிக்க என்னால் முடியாது" என்று கூறி விட்டு செல்லும் அவர்கள், இரண்டு மாதத்தில் பெட்டி படுக்கையுடன்  திரும்ப வந்து நிற்பார்கள் . ஏன் எனக் கேட்டால், "இங்கு வாழ்ந்த எம்மால் அங்கே போய் வாழ முடியாது" என்பார்களாம்.

போட்ஸ்வானாவின் நிலப்பகுதி,  ஒண்டாரியோவிற்கு சமனானது. ஆயினும் சனத்தொகை 2.5 மில்லியன் மட்டுமே. கடல் மட்டத்தில் இருந்து கிட்டத்தட்ட 1000 m உயரத்தில் உள்ள சமவெளி பூமியான அதன் சராசரி மழை வீழ்ச்சி 500-700 mm. இங்கு சாரீரப்பதன் மிகவும் குறைவு என்பதால் மிகவும் வறண்ட பூமியாக காட்சி தரும். அரசியல் பொருளாதார நிலை பற்றிக் கூறுவதானால் இதனை ஆப்பிரிக்காவின் சிங்கப்பூர் எனலாம். சிங்கப்பூருக்கு  மனித வளம் போல்,  போட்ஸ்வானாவிற்கு  Diamond, Nickel, Copper போன்ற கனிம வளங்கள்  உதவுகின்றன. 1966 இல் சுதந்திரம் பெறும்போது தனிநபர் வருமானத்தில் உலகத்தின் கடை நிலையில் இருந்த  போட்ஸ்வானா,  இப்போது ஆப்பிரிக்காவின் உச்சியில் உள்ளது.      

மேலும் படிக்க ...

இலக்கியவெளி நடத்தும்இணையவழிக் கலந்துரையாடல் - அரங்கு 36 - “சட்டநாதன் புனைவுகள் : உரையாடல்” - தகவல் - அகில் -

விவரங்கள்
- தகவல்-அகில் -
நிகழ்வுகள்
07 மார்ச் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மேலும் படிக்க ...

ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் நடத்தும் இணையவழிக் கலந்துரையாடல் - "மணிமேகலை கூறும் தொல்தமிழர் அணுவியம்"

விவரங்கள்
- ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் -
நிகழ்வுகள்
07 மார்ச் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

Join Zoom Meeting | Meeting ID: 847 7725 7162 | Passcode: 554268

மேலும் படிக்க ...

நீலகிரி படகர்களின் மரபறிவில், மரபு மருத்துவத்தில் ‘காயிகல்லு’ - முனைவர்.கோ.சுனில்ஜோகி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி, கோவை. -

விவரங்கள்
- முனைவர்.கோ.சுனில்ஜோகி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி, கோவை. -
ஆய்வு
06 மார்ச் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

                           -  நீலகிரிப் படகர் -

வரலாற்றைவிட வழக்காறுகள் இன்றியமையானவை. ஒரு சமூகத்தின் நெடிய மரபும் பண்பாடும் வழக்காறுகளில் வாழ்கின்றன. மானுட சமூகத்தில் நடப்பிலுள்ள வழக்காறுகளில் உட்செறிந்துள்ள மரபறிவினைத் தேடிச்செல்வதும், உற்றுநோக்குவதும் இன்றைய தேவைகளுள் ஒன்று என்பதனைவிட காலத்தின் கட்டாயம் எனலாம். நிலவும் உடலியல், உளவியல் பிணிகட்கும், வாழ்வியல் பிணக்குகளுக்குமான தீர்விற்கு முன்னோக்கி ஆய்வதைவிடவும் பின்னோக்கி ஆய்வதே ஏற்புடையது என்பதில் மாற்றமில்லை. அவ்வகையில் நீலகிரியில் வாழ்கின்ற, யுனெஸ்கோவால் உலகப் பூர்வகுடிகளாக சான்றளிக்கப்பட்ட ‘படகர்’ இனமக்களிடையே வழக்கிலுள்ள ‘காயிகல்லு’ என்ற மருத்துவத் தன்மைமிக்க பொருளொன்றின் பன்முகப் பயனிலையையும் அதன் தொன்மையினையும் இக்கட்டுரை ஆராய்கின்றது.

நீலகிரியும் படகர்களும் -

ஆண்டில் ஒன்பது மாதங்கள் மழைபொழியும் இயல்புடையது நீலகிரி மலை. உலகின் மிக முக்கியமான பல்லுயிர்ச் சூழல் மண்டலமான இம்மலையின் முகடுகளிலும் அதற்கு சற்றுக்கீழும் படகர்கள் வசிக்கின்றனர். இவர்கள் பேசும் மொழி படுகு. இவர்களின் வாழ்வியல் ‘பண்டா – பதுக்கு’ என்ற இருநிலைகளில் அடங்கும். இவர்களின் மொழியில் ‘பண்டா’ என்றால் எருமை மந்தை என்றும், ‘பதுக்கு’ என்றால் வாழ்க்கை என்றும் பொருள். எருமை மந்தை பேணலையே ஆதி வாழ்வாகக் கொண்டிருந்த இம்மக்களின் பெயர்க்காரணம்கூட இதை அடியொற்றியதே. ‘பண்டுக’ (எருமை மந்தைகளை உடையவன்) என்ற சொல்லே ‘படுகா’ என்று மருவியதாகக் கருதலாம். சங்க இலக்கியத்தில் இடம்பெறும் ஆயர்களான பொதுவர்களுக்கும் படகர்களுக்கும்கூட எண்ணற்ற ஒப்புமையுண்டு என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க ...

நான் சந்தித்த ஆளுமைகள் : பேராசிரியர் கா. சிவத்தம்பி - ஜோதிகுமார் -

விவரங்கள்
- ஜோதிகுமார் -
ஜோதிகுமார்
06 மார்ச் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

1

போகும்போது, லைட்டையும் அணைத்துவிட்டு, காதுவரை போர்த்தி படுத்திருந்தார். போர்த்தியவாறே என்னை ஏறிட்டு பார்த்துவிட்டு… காய்ச்சல்… குளிர்காய்ச்சல்… என்று நடுநடுங்கிய குரலில் முனங்கினார். பதறி…  என்ன இது என்று நினைத்து தலைக்கடியில் மடித்து வைத்திருந்த, போர்வையினூடு வெளியே நீட்டியப்படி, இருந்த முழங்கையின் பின்புறத்தை தொட்டு, சுடுகின்றதா என்று பார்த்தேன். அப்போதுதான் குளித்துவிட்டு வந்திருக்க வேண்டும்… சில் என்று இருந்தது.

"பல்ல புடுங்கினன்… ஒன்று கிடந்து ஆடிக்கொண்டிருந்தது… ஒன்றும் சாப்பிட முடியாமல்… புடுங்கி போட்டன்… காய்ச்சலப்பா"…

நாற்காலியை இழுத்து அமரும் போது குமரனும் வந்து சேர்ந்தான்… எழுந்து உட்கார்ந்து கொண்டார்… சற்று நேரத்தில் காய்ச்சலின் அறிகுறியே இல்லை… பாரதி – புதுமைபித்தன் குறித்து அளவிலாவினோம்… "அவர்கள் இருவரும் தான்… இரு அசுர பிரமாக்கள்… பிரமாண்டங்கள்… இருபதாம் நூற்றாண்டில் தமிழிலக்கியத்தில்… புதுமைபித்தன்… ஓ… தமிழின் நெகிழ்வுதன்மையை… இலாஸ்ட்டி  சிட்டியை அவன்தானே முதன்முதலாய் கொணர்ந்து சேர்த்தவன்… நல்லஅறிவு… ஆனால் ஏழையாய் தானே செத்தான்…”

மேலும் படிக்க ...

வாழ்நாள் சாதனையாளர் விருதுபெறும் மூத்த எழுத்தாளர் வி. ரி. இளங்கோவன்..! - அசலை -

விவரங்கள்
- அசலை -
நிகழ்வுகள்
05 மார்ச் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இலங்கைத் தமிழ் இலக்கிய நிறுவகமும்இ இலண்டன் தமிழ் இலக்கிய நிறுவகமும் இணைந்து, இலங்கை மற்றும் புலம்பெயர்ந்த படைப்பாளிகளைக் கௌரவித்து ஊக்குவிக்கும் பொருட்டுக் கடந்த பல வருடங்களாக 'இரா. உதயணன் இலக்கிய விருதுகளை" வழங்கிவருகின்றனர். கொரோனாப் பரவல் காரணமாக 2020,  2021இ 2022 ஆண்டுகளுக்குரிய விருது வழங்கல் அறிவிக்கப்படாமலிருந்தது. தற்போது அந்த ஆண்டுகளுக்குரிய விருதுகள் யாவும் அறிவிக்கப்பட்டுள்ளன. 2020 -ம் ஆண்டுக்குரிய 'வாழ்நாள் சாதனையாளர் விருது"க்கு மூத்த எழுத்தாளர் வி. ரி. இளங்கோவன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க ...

சிரிப்பும் சிந்தனையும் தெறிக்கும் சிரித்திரன்! சிரிப்பே சீவியமாகி செய் தொழிலே தெய்வமாகிட… - ஐங்கரன் விக்கினேஸ்வரா -

விவரங்கள்
ஐங்கரன் விக்கினேஸ்வரா -
இலக்கியம்
02 மார்ச் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 

(தாயக மண்ணில் இலக்கியப் பணி ஆற்றிய சிரித்திரன் சுந்தர் மார்ச் 3 , 1996இல் மறைந்த நாள் நினைவாக பிரசுரமாகிறது)

நாற்பது வருடங்களுக்கு மேலாக கேலிச் சித்திரத்துறையில் தனது ஆளுமையைச் செலுத்திய சிரித்திரன் சுந்தர் பதினைந்து ஆயிரத்திற்கு மேற்பட்ட கேலிச்சித்திரங்களைத் தீட்டியுள்ளார். ‘செய்தொழில் தெய்வம், சிரிப்பே சீவியம்’ என்பதைத் தாரக மந்திரமாகக் கொண்டு கலை இலக்கிய வானில் பறந்து திரிந்தவர் சிரித்திரன் சுந்தர் என அழைக்கப்படும் மாமனிதர் சிவஞானசுந்தரம். மார்ச் 3 ,1924 இல் பிறந்த அவர் மார்ச் 3 , 1996இல் மறைந்தார்.

கேலிச் சித்திரங்கள், பகடிக் கட்டுரைகள் மற்றும் நடைச் சித்திரங்கள் என சிரித்திரனில் சுவைபட இடம்பெற்றன. சிரித்திரன் சுந்தரின் கேலிச்சித்திர நாயகர்களான சவாரித்தம்பர், சின்னக்குட்டி, மைனர் மச்சான், மயில்வாகனத்தார் போன்றவர்கள் வரலாற்றுப் புகழ்பெற்றவர்கள். 'மகுடி பதில்கள்' என்னும் தலைப்பில் சுந்தர் எழுதிய கேள்வி பதில்கள் என்றும் புகழ்பெற்றது.

மேலும் படிக்க ...

எழுத்தாளர் அ.ந.கந்தசாமியின் 'டிரிபியூன்' ஆங்கிலக் கட்டுரை: Was Hitler Another Dr.faustus? - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
அறிஞர் அ.ந.கந்தசாமி பக்கம்
02 மார்ச் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இலங்கை முற்போக்குத் தமிழ் இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவரான அறிஞர் அ.ந.கந்தசாமி என்றழைக்கப்பட்ட எழுத்தாளர் அ.ந.க கந்தசாமி ஆங்கிலத்தில் மிகுந்த புலமை மிக்கவர். டிரிபியூன் சஞ்சிகையில் திருக்குறள் பற்றி, கெளடில்யரின் அர்த்தசாத்திரம் பற்றி இவற்றுடன் மேலும்  பல விடயங்களை மையமாகக் கொண்டு ஆங்கிலக் கட்டுரைகள் எழுதியுள்ளார்.

அவரது ஆங்கில மொழிப் புலமை காரணமாக இலங்கைத் தகவற் திணைக்களத்தில் மொழிபெயர்ப்பாளராகவும் கடமையாற்றியிருக்கின்றார். அப்போது அத்திணைக்களம் வெளியிட்ட ஶ்ரீலங்கா சஞ்சிகையின் ஆசிரிய பீடத்திலுமிருந்திருக்கின்றார்.

மேலும் படிக்க ...

நூல் வாசிப்பு அனுபவம்: முருகபூபதியின் சினிமா: பார்த்ததும் கேட்டதும் - நவஜோதி ஜோகரட்னம் - லண்டன் -

விவரங்கள்
- நவஜோதி ஜோகரட்னம் - லண்டன் -
நவஜோதி ஜோகரட்னம்
02 மார்ச் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

உலகம் பூராகவும் சினிமாக் கதையைக் கேட்பதும், சினிமாவைப்பற்றிப் பேசுவதும், அதனைப் பார்ப்பதும் மக்களிடம் அதிமாகிக் கொண்டே இருக்கின்றது. சினிமாக்காட்சிகள் மனித மனதில் ஏற்படுத்தும் காட்சிப்படிமங்கள் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. அத்தகையதொரு வலிமையான சாதனமாக நாம் சினிமாவைப் பார்க்கலாம். உண்மையில் ஒரு பயங்கரமான செய்தியை பத்திரிகையில் படிக்கும்போது , அதனை ஒரு செய்தியாகப் படித்துவிட்டுக் கடந்துபோய்விடுவோம். ஆனால், அதே செய்தியை , அந்தக் கதையைக் காட்சியாக்கி, மனித மனதை ஆராய்ந்து கலையாக மாற்றப்பட்டு திரைப்படமாகப் பார்க்கும்போது வலிமையான ஊடகமாகிவிடுகின்றது. உணர்ச்சிகள் மேலோங்கி அவை ஒரு திகைப்பை ஏற்படுத்திச் சாதனை படைத்துவிடுகின்றது.

அந்தவகையில் சிறுகதை, நாவல், கட்டுரை, பயண இலக்கியம், சிறுவர் இலக்கியம் எனத் தொடர்ந்து இலக்கியப்பணியை வேகமாக முன்னெடுத்துக் கொண்டிருக்கும் முருகபூபதியின் சினிமா: பார்த்ததும் கேட்டதும் என்ற நூலைப் பார்த்ததும், அவருக்கு சினிமாவைப்பற்றியுமா தெரியும்? ! என்று யோசித்து வாசித்தேன். அவருக்கென்றே உரிய அழகான எழுத்து நடையில் மிகுந்த சுவாரசியமான செய்திகளோடும், நினைவுகளைச் செதுக்கும் புகைப்படங்களோடும் இந்த நூல் காணப்பட்டது. யாழ். ஜீவநதியின் 274 ஆவது வெளியீடாக 2023 இல் வெளிவந்திருக்கும் இந்நூல், பதினாறு தலைப்புக்களுடன் 128 பக்கங்களைக் கொண்ட அடக்கமான நூலாகச் சிறப்புச் சேர்த்திருந்தது.

வருடத்தில் குறைந்தது 200 திரைப்படங்களையாவது பார்க்கிறேன் என்ற முருகபூபதியின் குறிப்பு என்னை அசத்திப்போட்டது. நடிப்பு என்பது ஒரு அற்புதமான கலைதான். ஆனால், எனக்கு இந்த நூல் வாசனையின்போது அறிஞர் ஒருவர் கூறியதுதான் என்நினைவில் வந்தது. ‘தகுதியற்ற பலரின் வெற்றிக்கு இன்றைய உலகில் இதுவும் ஒரு காரணம், உழைப்பவனை விட நடிப்பவன் வாழ்கிறான் உலகில்’ என்பதுதான் அது.

மேலும் படிக்க ...

அஞ்சலி: முன்னாள் கனடாப் பிரதமர் பிரயன் மல்ரோனி (Brian Mulrony) மறைவு!

விவரங்கள்
- வ.ந.கி -
அரசியல்
01 மார்ச் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

குடிவரவாளர்கள் மத்தியில் மிகவும் புகழ் பெற்ற கனடியப் பழமைவாதக் கட்சியின் தலைவராக அமரர் பிரயன் மல்ரோனியைக் (Brian Mulroney) கூறலாம். இவரது ஆட்சிக்காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட குடிவரவாளர்களுக்கான 'நிர்வாக மறுபரிசீலனை' த் திட்டத்தின் (Administrative Review - ADR)  மூலம் கனடாவில் தங்கியிருந்த அகதிக்கோரிக்கைக்காரர்கள், சட்டவிரோதக் குடிவரவாளர்கள்  ஆயிரக்கணக்கில் பயனடைந்தார்கள். நிரந்தர வசிப்பிட உரிமை பெற்றார்கள்.

இவரது ஆட்சிக்காலத்தில் முதன் முறையாகக் கப்பலில் நியூ ஃபவுணலாந்துக் கரையில்  வந்திறங்கிய இலங்கைத்  தமிழ் அகதிகள் காப்பாற்றப்பட்டு அனுமதிக்கப்பட்டார்கள். எதிர்ப்புகளை மீறி அவர் அப்போது கூறிய வார்த்தைகள் முக்கியம். அவர் கூறினார் "we are not in the business of turning away refugees." அக்கூற்றே அன்று வந்திறங்கிய தமிழ் அகதிகள் பிரச்சனையைத் தீர்க்கப் போதுமானதாகவிருந்தது.

மேலும் படிக்க ...

சிறுகதை: அம்மாவின் ஆசைகள்! - வீரவநல்லூர் ஸ்ரீராம் விக்னேஷ், (கல்லிடைக்குறிச்சி) -

விவரங்கள்
- வீரவநல்லூர் ஸ்ரீராம் விக்னேஷ், (கல்லிடைக்குறிச்சி) -
சிறுகதை
28 பிப்ரவரி 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அம்மாவுக்கு தூக்குத்தண்டனை உறுதியாகிவிட்டது.

எத்தனையோ வக்கீல்களுடன் கலந்து பேசினோம். எவ்வளவோ பணத்தைச் செலவு செய்துவிட்டோம். ஆனால், ஒட்டுமொத்தமாக அவர்களிடமிருந்து வந்த ஒரே பதில்...,

“என் மூத்தபையனைக் கொலை பண்ணினது நான்தான்.... நான்தான் கொண்ணேன்..... என் கையாலதான் கொண்ணேன்..... பெத்து, பால்குடுத்து வளத்த நானே பால்ல வெசத்த வெச்சுக் கொண்ணேன்.................
கோர்ட்டில வெச்சு ஜட்ஜு ஐயாவும், எதுக்காகக் கொன்னீங்கன்னு எத்தனதடவை கேட்டபோதிலும், கீறல் விழுந்த இசைத்தட்டுப்போல இதைத்தான் சொன்னாங்க.... காரணத்த சொல்லவேயில்லை......”

“என்னய வெச்சுக் காலத்தையும், கோர்ட்டையும் வேஸ்ட் பண்ணாதீங்க..... நான்தான் கொலைபண்ணினேன்னு ஒத்துக்கிட்டேனே..... சட்டுப்புட்டுண்ணு தீர்ப்பைச் சொல்லி தூக்கில போட்டிடுங்கய்யா..... எனக்கு ஒண்ணும் மூளைக்கோளாறோ பைத்தியமோ இல்லை...... நல்ல தெளிவாத்தான் இருக்கேன்..... சந்தேகமாயிருந்தா என்னய கொண்டுபோயி திரும்பத்திரும்ப, ஒண்ணுக்கு நாலு தரக்கான்னாலும் செக்கப்பு பண்ணிப் பாத்திருங்கையா...... நிதானமான சூழல்லதான் அவனைக் கொண்ணேன்.......”

புதிதாகத்தொடர்பு கொள்வதற்காக நான் தேடிச்செல்லும் வக்கீல்கள்கூட, நான் சொல்வதற்குமுன், என் ஜாதகத்தையே என்முன்னிலையில் எடுத்துப்போட்டார்கள்.

“நாங்க அறிஞ்சவரையில உங்க அண்ணன் கொஞ்சம் முரட்டுத்தமும், குடிப்பழக்கமும் உள்ள ஆளுண்ணு தெரியவந்திச்சு.….. உங்களுக்கு எட்டு வயசும், உங்க அண்ணனுக்கு பத்து வயசும் இருக்கிறப்போ, உங்கப்பா மாடிவீடு ஒண்ணில கொத்தனாரு வேலை பாக்கிறப்போ தவறிக் கீழை விழுந்து ஆஸ்பிட்டல்ல கெடந்து எறந்து போனதாகவும், சாகிறப்போ ரண்டு பசங்களையும் நல்லபடியா, எந்தவொரு கெட்டபேரும் இல்லாம வாழச் சொல்லிக்குடுத்து வளத்து மனிசனாக்கணும்னு உங்கம்மாகிட்ட சத்தியம் வாங்கிக்கிட்டதாகவும்……..

மேலும் படிக்க ...

தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம்: எழுத்தாளர் பெருமாள் முருகனுடன் ஒரு சந்திப்பு!

விவரங்கள்
- தகவல்: ஆ.சி. கந்தராஜா -
நிகழ்வுகள்
27 பிப்ரவரி 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

நூல் அறிமுகம்: வடகோவை வரதராஜனின் 'ஆளப்போகும் வேர்கள்' - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
27 பிப்ரவரி 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

நேற்று நண்பரும், சமூக,அரசியற் செயற்பாட்டாளரும், எழுத்தாளர் வடகோவை வரதராஜன் அவர்களின் சகோதரருமான  யோகராஜா தியாகராஜாவிடமிருந்து  (முகநூலில் யோக வளவன் தியா) வடகோவையாரின் அண்மையில் வெளிவந்த நூலான 'ஆளப்போகும் வேர்கள்' நூலின் பிரதியொன்றினைப் பெற்றுக்கொண்டேன்.  கிழக்கு மாகாணத்திலுள்ள ஏறாவூரிலிருந்து செயற்படும் கஸல் பதிப்பகம் அண்மைக்காலமாக மிகவும் சிறப்பான வடிவமைப்பில், தரமான நூல்களை வெளியிட்டு வருவதை அவதானித்திருக்கின்றேன்.  வடகோவையாரின் இந்நூலையும் மிகவும் சிறப்பாக வடிவமைத்து வெளியிட்டிருக்கின்றார்கள். மேலும் இத்துறையில் அவர்கள் பல நூல்களை வெளியிட்டு இலங்கைத் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்க்க வாழ்த்துகள்.

வடகோவையாரை முகநூலில் அறிவதற்கு முன்னரே என் பதின்ம வயதுகளிலேயே அறிந்திருக்கின்றேன். அவரது சிறுகதைகள் ஈழநாடு வாரமலர், சிரித்திரன் என்று அக்காலகட்டத்தில் நான் விரும்பி வாசித்த ஊடகங்களில்  வெளிவந்திருந்தன. சிறுகதைப்போட்டிகளில் இவரது சிறுகதைகள் முதற் பரிசுகளைப் பெற்றிருக்கின்றன. அப்போதே இவரது கதைகளில் அவ்வப்போது தென்படும் இயற்கையுடனான நேசிப்பை அவதானித்திருக்கின்றேன். ஆனால் அப்போது இவர் ஒரு விவசாயப் பட்டதாரி என்பதை அறிந்திருக்கவில்லை. முகநூலில்தான் இவரது பதிவுகளின் மூலம் இவரது கல்விப் பின்புலத்தை அறிந்துகொண்டேன்.

மேலும் படிக்க ...

தந்தை பெரியார் பற்றி... - தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா -

விவரங்கள்
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா -
அரசியல்
27 பிப்ரவரி 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை அவரது சமூகப்பின்னணியைக் காரணமாக வைத்து விமர்சிப்பார்கள் அவரது அரசியல் எதிரிகள். ஆனால் அவரது இக்கட்டுரையைப் படித்தபோது உண்மையிலேயே வியந்துதான் போனேன். எவ்வளவு தெளிவாகப் பெரியாரின் சமூக,  சீர்திருத்தக் கருத்துகளை அவர் அறிந்து வைத்திருக்கின்றார். பெரியார் மீது எவ்வளவுதூரம் மதிப்பு வைத்திருக்கின்றார். அவரை அவரது சமூகப்பின்னணி பற்றி விமர்சித்த அரசியல் எதிரிகளுக்குக் கூட இவ்வளவு தெளிவு இருந்திருக்குமா என்பது சந்தேகமே. தனது அரசியல் கருத்துகளில் தெளிவாக இருந்ததனால்தான் அவரால் இறுதிவரை மாநில  உரிமைகளை விட்டுக்கொடுக்காமல் உறுதியாக நிற்க முடிந்திருக்கின்றது. Kollywood Entertainment முகநூலில் பகிர்ந்திருந்த ஜெயலலிதாவின் 'தாய்' சஞ்சிகையில் எழுதிய கட்டுரை. - வ.ந.கி -


ஜெ.ஜெயலலிதா அவர்கள்  - தாய் இதழில் எழுதிய தொடரின் ஒரு பகுதி:

1973-ல், நான் கதாநாயகியாக நடித்த ''சூரியகாந்தி" தமிழ்த் திரைப்படத்தின் 100-வது நாள் வெற்றி விழா சென்னை ராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது. அந்த வெற்றி விழாவுக்குத் தலைமை வகித்து, கலைஞர்களுக்குப் பரிசுகளை வழங்கியவர் தந்தை பெரியார் அவர்கள்.

தந்தை பெரியார் அவர்களை நான் நேரில் சந்தித்தது அதுவே முதன் முறை, திரைப்படங்கள் என்றாலே அவருக்கு அவ்வளவாக விருப்பம் இருக்காது. திரைப்படத் துறை சம்பந்தப்பட்ட விழாக்களிலும் சாதாரணமாக அவர் கலந்து கொள்ள மாட்டார் என்றெல்லாம் கேள்விப்பட்டிருந்தேன். எப்படியோ, அன்றைக்கு அவ்விழாவுக்குத் தலைமை தாங்க தந்தை பெரியார் அவர்கள் சம்மதித்ததே என்னுடைய பேரதிர்ஷ்டம் என்று கருதுகிறேன்.

மேலும் படிக்க ...

எனது மூன்று அண்மைய நூல்கள் நூலகம் தளத்தில் ... வாசியுங்கள். கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள். - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
26 பிப்ரவரி 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஓவியா பதிப்பக வெளியீடாக வெளிவந்த எனது நாவல் 'நவீன விக்கிரமாதித்தன்' தற்போது நூலகம் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
வாசியுங்கள். கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள். வாசிக்க

மேலும் படிக்க ...

ஆழ்ந்த இரங்கல்: வரலாற்று நாயகன் ஆரொன் புஷ்னெல் (Aaron Bushnell)

விவரங்கள்
- வ.ந.கி -
அரசியல்
26 பிப்ரவரி 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அமெரிக்க விமானப்படையைச் சேர்ந்த ஆரொன் புஷ்னெல்லுக்கு  (Aaron Bushnell) வயது 25.  வாஷிங்டனிலுள்ள இஸ்ரேலியத் தூதரகத்தின் முன்பாக 'சுதந்திர பாலஸ்தீன்.  நான் இனியும் இன்ப்படுகொலைக்கு  உடந்தையாக இருக்க மாட்டேன்' என்று கூறியவாறே தீக்குளித்தார். காயங்களுடன் மருத்துவ நிலையத்துக்கு எடுத்துச் செல்லப்பட்ட இவர் மரணமடைந்து விட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆழ்ந்த இரங்கல்.

மரணத்தை எதிர்கொள்ளப்போகிறோமே என்னும் எவ்விதத்தயக்கமும் இல்லாமல், மிகவும் இயல்பாகத் தன் எண்ணங்களை எடுத்துரைத்தவாறே சென்று, மிகவும் இயல்பாகவே தன் மீது எரி திரவத்தை ஊற்றி, நெருப்பைப் பற்றவைத்து , Free Palestine என்று கூறியவாறே அவர் மரணத்தை எதிர்நோக்கினார். எத்துணை மனோதிடமும், மானுட நேயமும் மிக்க மனிதன்!

மேலும் படிக்க ...

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா நினைவாக.. - ஊர்க்குருவி -

விவரங்கள்
- ஊர்க்குருவி -
அரசியல்
25 பிப்ரவரி 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்
முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பிறந்ததினம் பெப்ருவரி 24. என்னைப்பொறுத்தவரையில் எம்ஜிஆரும் அவரும் என் அபிமான நடிகர்கள். என் பால்ய பருவத்தில் நான் அதிகமாகத் தமிழ்ப்படங்கள் பார்க்கத்தொடங்கிய காலத்தில் திரையில் கோலோச்சிக் கொண்டிருந்தவர்கள் அவர்கள்.
 
அரசியலைப்பொறுத்தவரையில் ஆணாதிக்கத்திலுள்ள தமிழக அரசியலில் தனித்து, துணிச்சலாக செயற்பட்டவர். அந்தத்துணிச்சல் எனக்குப் பிடிக்கும். பெண் சிசுக்களைக் காப்பாற்றத் தொட்டில் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். பெண்களுக்குப் பல்வேறு வகைகளில் பொருளியல்ரீதியிலான உதவித்திட்டங்களை ஆரம்பித்தார். அம்மா உணவகத்தின் மூலம் அடித்தட்டு மக்களும் பயன்படையச் செய்தார். எம்ஜிஆர் முதல்வராகவிருந்த காலத்தில் சத்துணவுத்திட்ட நிர்வாகத்தில் நிலவிய சீர்கேடுகளைக் களைந்திட உதவினார். தமிழக மாநில உரிமைகளை விட்டுக்கொடுக்காதவாறு தன் அரசியலை நடத்தினார். இவையெல்லாம் அவரது ஆரோக்கியமான பக்கங்கள். அவரது திட்டங்களினால் பலர் பயனடைந்தார்கள்.
மேலும் படிக்க ...

அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம்: மெல்பனில் தமிழக எழுத்தாளர் பெருமாள் முருகனுடன் இலக்கியச் சந்திப்பு - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
நிகழ்வுகள்
24 பிப்ரவரி 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 

தமிழ்நாட்டிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு வருகை தரும் பிரபல எழுத்தாளரும் பல இலக்கிய விருதுகளைப் பெற்றிருப்பவருமான திரு. பெருமாள் முருகன் அவர்களுடனான இலக்கிய சந்திப்பு எதிர்வரும் மார்ச் மாதம் 10 ஆம் திகதி ( 10-03-2024 ) ஞாயிற்றுக்கிழமை மாலை 3-00 மணிக்கு மெல்பனில் Vermont South Learning Centre மண்டபத்தில்  ( 1, Karobran Drive, Vermont South, Vic 3133 ) நடைபெறும்.

எழுத்தாளர் பெருமாள் முருகன், அகராதியியல், பதிப்பியல் ஆகிய துறைகளிலும் மானுடவியல் ஆய்வுகள், வட்டார வழக்கு ஆராய்ச்சி, நாட்டார் இலக்கிய ஆய்வு முதலானவற்றிலும் பங்காற்றியுள்ளார்.

பெருமாள் முருகனின் ஒன்பது நாவல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. நிழல்முற்றம் நாவல் போலிஷ் மொழியிலும் மாதொருபாகன் நாவல் ஜெர்மன் மொழியிலும் செக் மொழியிலும் வெளியாகியுள்ளன. மலையாளம், கன்னடம், தெலுங்கு, மராத்தி, இந்தி உள்ளிட்ட இந்திய மொழிகள் பலவற்றில் மாதொருபாகன்  நாவல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க ...

அ.ந.கந்தசாமி -- வாழ்வும் எழுத்தும் - திக்குவல்லை கமால் -

விவரங்கள்
- திக்குவல்லை கமால் -
இலக்கியம்
24 பிப்ரவரி 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

தீவிர இலக்கியவாதியும் மின்னிதழாளரும் இருபத்தைந்து நூல்களைத் (மின்னூல்களையும் உள்ளடக்கி) தந்தவருமான வ.ந.கிரிதரனின் அண்மைக்கால நூலான ' வ.ந.கிரிதரன் கட்டுரைகள் ' , அழகிய அச்சமைப்போடு 'ஜீவநதி' பிரசுரமாக வெளிவந்துள்ளது.இத்தொகுப்பில் பதிநான்கு கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.கவனிப்புக்குரிய படைப்பாளிகள் பற்றியதாகவும் சர்ச்சைக்குரிய தலைப்புக்களைக் கொண்டதாகவும் இருப்பதனால் நிச்சயமாக இலக்கிய வாசகர்களை ஈர்க்கும்.

இதில் எனது கவனத்தை ஈர்த்த விடயம் அ.ந.க.பற்றிய கட்டுரைகளே.அவர் தொடர்பாக மூன்று கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

1) அறிஞர் அ.ந.கந்தசாமியின் பன்முக ஆளுமை.
2) அ.ந.க.வின் - மனக்கண் -
3) ஈழத்து தமிழ் கவிதை வரலாற்றில் அறிஞர் அ.ந.கந்தசாமியின்   (கவீந்திரன்) பங்களிப்பு.

இம்மூன்று கட்டுரைகளும் நூலின் மூன்றில் ஒரு பகுதியை ஆக்கிரமித்திருப்பது கவனத்திற்குரியது.இன்னும் சில விடயங்களையும் உள்ளடக்கி தனியே ஒரு நூலாக வெளியிட்டிருக்கலாமே என்று எண்ணத் தோன்றியது.

அ.ந.கந்தசாமி என்ற நாவலாசிரியர் எனக்குப் படிக்கும் காலத்திலேயே அறிமுகமானார்.தினகரனில்  'மனக்கண்' தொடர்நாவலைப் போட்டிபோட்டுக்கொண்டு வாசித்தது இன்னும் ஞாபகமுள்ளது.அந்நாட்களில் வாசித்த - சிவகாமியின் சபதம் - கடல் புறா - கரித்துண்டு - பெற்றமனம் - குறிஞ்சி மலர் - முதலான நாவல்களைப் போன்ற ஒன்றாகவே ' மனக்கண்'ணும் தெரிந்தது.அ.ந.க. ஓர் இலங்கை எழுத்தாளர் என்பதைத் தெரிந்துகொள் ளச் சில ஆண்டுகள் சென்றன.இலங்கையிலும் இப்படி எழுதக்கூடியவர்கள் இருக்கிறார்கள் என்பது எனக்கு அப்போது வியப்பாக இருந்தது.

மேலும் படிக்க ...

தாய்வீட்டார் அழைப்பிதழ்! தாய்வீடு இதழ் உரையாடலும் விமர்சனமும் - 2024 - திலீப்குமார் -

விவரங்கள்
- திலீப்குமார் -
நிகழ்வுகள்
24 பிப்ரவரி 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கடந்த 17 ஆண்டுகளாக அச்சு, இணைய இதழாகத் தொடர்ச்சியாக வெளிவந்துகொண்டிருந்த தாய்வீடு இதழ், கடந்த மூன்று ஆண்டுகளாக ஒலி இதழாகவும் வெளிவந்துகொண்டிருக்கிறது.

தாய்வீடு மாத இதழானது சமகாலத்தில் உலகளாவிய அளவில் நடக்கும் சமூக அரசியல் நிகழ்வுகளையும் வரலாறு, பண்பாடு, வாழ்வியல், இலக்கியம், ஆவணப்படுத்தல் சார்ந்த பல்வேறு விடயங்களையும் தமிழ்ச் சமூகத்தின் உரையாடற் பரப்புக்குள் கொண்டுவந்து கொண்டிருக்கின்றது.

வாகசர்களதும் அறிவுஜீவிகளதும் விமர்சனங்களையும் கருத்துகளையும் உள்வாங்கிப் பயணிக்க வேண்டியது பொறுப்புள்ள ஊடகம் ஒன்றின் கடமை என்பதை நன்றாகப் புரிந்துகொண்டுள்ள தாய்வீடு, அந்த நோக்குடன் 'தாய்வீடு இதழ் உரையாடலும் விமர்சனமும் – 2024' எனும் சந்திப்பை எதிர்வரும் 25.02.2024 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு, இல.128, டேவிட் வீதி, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள 'கலைத்தூது அழகியல் கல்லூரி' அரங்கில் நடத்தவுள்ளது.

மேலும் படிக்க ...

சிறுகதை: ஓடை! - வி.குணராஜா -

விவரங்கள்
- வி.குணராஜா -
சிறுகதை
23 பிப்ரவரி 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இதில் நிச்சயமாக மீன்கள் இருக்கும். மூன்று அல்லது நான்கடி அகலம். இன்னும் சில இடங்களில் சற்று அதிகமாக கூட இருக்கலாம். மொத்தத்தில் இது ஒரு ஓடை போன்று தோற்றமளிக்காது தேங்கிய ஒரு நீர் குட்டையைப்போல் காட்சித்தந்தது. உற்றுப்பார்த்தால் மெதுவான ஓர் ஓட்டம் - இவ்வளவுதான் இந்த ஓடை.  ஆனால் ரம்மியமானது. அந்த பரந்த பெரிய வயல்வெளியின் ஓரமாய் - இடையிடையே  ஊதா நிறத்து மலர்களுடன்…

“மீன் இருக்குமா” போகிறப்போக்கில் கேட்டுவைத்தேன்.

“இருக்கும். ஆனால்ச் குறவர் கூட்டம்… அவர்கள் மட்டுமே இங்கே மீன் பிடிக்கலாம். அவர்களுக்கு தெரியும் - முதலைகளைப்பற்றி...”

மேலும் படிக்க ...

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர்களில் ஒருவரான வேலாயுதம் நல்லநாதர் மறைவு! - வ.ந.கி -

விவரங்கள்
- வ.ந.கி -
அரசியல்
23 பிப்ரவரி 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின்  தலைவர்களில் ஒருவரும், அதன் அரசியல் பிரிவான  ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் சிரேஷ்ட உபதலைவரும்,  ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டணியின் செயலாளருமான  வேலாயுதம் நல்லநாதர் ( முகநூலில் R Rahavan) அவர்களின் மறைவினை நண்பர் அலெக்ஸ் வர்மா முகநூலில் பகிர்ந்திருந்தார்.  அவர் தனது அஞ்சலிக் குறிப்பில் '42 வருடங்கள் போராட்டத்திற்கு தனது வாழ்வை பதின்ம வயதிலிருந்து தொடர்ச்சியாக அர்ப்பணித்த மனிதன் தன் மூச்சை இன்றுடன் நிறுத்தி, இன்று (22.2.2024) மாலை விடைபெற்றார்' என்று தெரிவித்திருந்தார். தன் வாழ்வை மக்களுக்காக அர்ப்பணித்து வாழ்ந்தவர்களில் ஒருவர் ஆர்.ஆர் என்றறியப்பட்ட வேலாயுதம் நல்லநாதர் அவர்கள்.   இவரது மறைவால் துயரில் ஆழ்ந்திருக்கும் அனவருக்கும் ஆழ்ந்த  இரங்கல்.

மேலும் படிக்க ...

டாக்டர் ப.விக்கினேஸ்வரா ஈராண்டு நினைவாக நூல் வெளியீடு !- ஐங்கரன் விக்கினேஸ்வரா -

விவரங்கள்
- ஐங்கரன் விக்கினேஸ்வரா -
நிகழ்வுகள்
23 பிப்ரவரி 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

டாக்டர் விக்கினேஸ்வராவின் ஈராண்டு நினைவாக “கலாநிதி த.கலாமணி அணிந்துரைகள்" எனும் நூல் தற்போது ஈழத்தில் வெளிவருகிறது.

சுன்னாகம் புகழ் டாக்டர் ப. விக்கினேஸ்வரா மண்பயனுறச் சேவை நல்கிய மக்கள் மருத்துவர் ஆவார். இடர்காலத்தில் அவர் நல்கிய மருத்துவப் பணிகளை யாழ்ப்பாணம் மண்ணும், மக்களும் என்றும் நினைவில் கொள்வர்.

சுன்னாகத்தில் நாற்பது ஆண்டுகள் மருத்துவ பணியாற்றிய  வைத்தியர்  ப. விக்கினேஸ்வரா அவர்கள் அமரராகி (22/2/22) இரு வருடமாகிறது. ஆனால் அவரிடம் சிகிச்சைபெற்ற மக்கள் இன்றும் அவரது திறமைகளையும், சேவைகளையும் புகழ்ந்து நினைவு கூருகின்றனர்.

மேலும் படிக்க ...

துகள் நடத்தும் சிறுகதைப் போட்டி 2024 - தகவல்: தியான் -

விவரங்கள்
- தகவல்: தியான் -
நிகழ்வுகள்
23 பிப்ரவரி 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

       - *தெளிவாகப் பார்க்க படத்தின் மீது ஒருதடவை அழுத்தவும் -

மற்ற கட்டுரைகள் ...

  1. காலத்தால் அழியாத கானம்: "புஞ்சை உண்டு நஞ்சை உண்டு" - ஊர்க்குருவி -
  2. தாய்மொழித் திருநாள் விழா! - முனைவர் எ.பச்சையப்பன் , இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, வேல்ஸ் அறிவியல் தொழில்நுட்ப உயர் ஆராய்ச்சி நிறுவனம், பல்லாவரம், சென்னை - 600117. -
  3. இரசனைக் குறிப்பு : விரும்பித் தொலையுமொரு காட்டில் விரும்பாது தொலைந்த ஜில் பிராட்லி! பிரமிளாவின் பெண் வார்ப்புகளில் ஒன்று! -ரஞ்ஜனி சுப்ரமணியம் -
  4. கவிதை; இருப்பு - முல்லை அமுதன் -
  5. பேராசிரியர் மா.சின்னத்தம்பியின் 'காலம் அறுபது' பற்றிச் சில குறிப்புகள்.... - வ.ந.கிரிதரன் -
  6. மானிடர் ஆத்மாவை வாய்மொழிப் பாடல்களாக வழங்கிய கவிஞி அனார் ! - முருகபூபதி -
  7. பெண்மொழியும் புனைவும் - முனைவர் மூ.சிந்து, உதவிப்பேராசிரியர், டாக்டர் என்.ஜி.பி கலை அறிவியல் கல்லூரி, கோயமுத்தூர் -
  8. நாடகக் கலைஞர் அண்ணாவியார் கணபதி உதயகுமார்! - வ.ந.கி -
  9. நாவல் அனுபவம் - சுப்ரபாதிமணியன் -
  10. வெள்ளி சிணுங்கி அழ ஏலே ஏலோ - ஊர்க்குருவி -
  11. 'சிறுகதை மஞ்சரி' : 'வாசித்து வாசித்து வாழ்வை வளமாக்குவோம்'
  12. குழந்தைகள் என்னும் கொத்தடிமைகள் - லதா ராமகிருஷ்ணன் -
  13. வாசிப்பு அனுபவம்: அவுஸ்திரேலியாவில் மலர்ந்துள்ள பூமராங் மின்னிதழ் ! - தாமரைச்செல்வி -
  14. ஆவணக்காணொளி ; கு.அழகிரிசாமி கொலக்கால் திரிகை! & எழுத்தாளர் ஶ்ரீரங்கனின் கேள்வியொன்று பற்றி... - வ.ந.கிரிதரன் -
பக்கம் 29 / 104
  • முதல்
  • முந்தைய
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • அடுத்த
  • கடைசி