Lord ByronMary Anne Chaworth

கவிஞர் பைரனின் (Lord Byron) பிரபல்யமான கவிதைகளிலொன்று 'எனது இனிய மேரி ஆனுக்கு' (To My Dear Mary Anne ). அவரது பதினைந்தாவது வயதில் ஏற்பட்ட முதற் காதல் தோல்வியையடுத்து தன் இழந்த காதலி மேரி ஷாவேர்த்தை (Mary Anne Chaworth) நினைத்து எழுதிய கவிதை. எனக்குப் படைப்பொன்றின் மொழிபெயர்ப்பானது முடிந்தவரை வரிக்கு வரி இருக்க வேண்டும். அதுவே சிறந்த மொழிபெயர்ப்பு என்பது என் கருத்து. ஏனென்றால் பொருளினை உள்வாங்கி அதனடிப்படையில் படைப்பொன்று மொழிபெயர்க்கப்படும்போது மூலத்திலிருந்து  மொழிபெயர்ப்பானது பெரிதும் வேறுபட்டு விடுகின்றது. இக்கவிதை இயலுமானவரையில் வரிக்கு வரி மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

1,

சென்றுவருகிறேன் என் இனிய மேரி, நிரந்தரமாகவே.
அவளிடமிருந்து நான் விரைவாகவே விடைபெற வேண்டும்.
எம்மிருவரையும் *விதித்தேவதைகள் பிரித்தாலும்
அவளது உருவம் என் நெஞ்சில் குடியிருக்கும்.

2,

எரியுமென் நெஞ்சின் சுவாலையானது
காதலர்களின் இதயங்களில் ஒளிர்வதைப்போன்றதல்ல.
மேரி மீது நான் கொண்டுள்ள காதலானது
காமனேற்படுத்தும் காதல் உணர்வுகளை விட
மிகவும் தூய்மையானது.

3,

உன் அமைதி சீர்குலைவதை நான் விரும்பமாட்டேன்.
உன் இன்பம் துன்புறுவதை நான் விரும்பமாட்டேன்.
என் காதல் வேட்கையினைத் தவறாக எடுக்க வேண்டாம்.
உன்னுடைய நட்பொன்றே நான் வேண்டுவது.

4,

என் நெஞ்சு கொண்டிருக்கும் நட்பினைப்
பத்தாயிரம் காதலர்கள் கூட உணரமாட்டார்கள்.
சூடான இரத்தம் என் நரம்புகளில் ஓடிக்கொண்டிருக்கும் வரையில்
இந்த நட்பு எப்பொழுதும் என் இதயத்தில் குடிகொண்டிருக்கும்.

5,

என் மேரி தீயசக்திகளிலிருந்து தன்னைப்பாதுகாக்க
சொர்க்கத்தின் அரசர் பூவுலகை நோக்கட்டும்...
அவள் ஒருபோதும் துன்பத்தின் சீற்றத்தை உணராதிருக்கட்டும்.
அவளது இன்பம் எப்பொழுதுமே முடிவற்றதாகவிருக்கட்டும்.

6,

மீண்டுமொருமுறை என் இனிய பெண்ணே, சென்றுவருகிறேன்.
விடைபெறுகிறேன் மீளும் வேதனையுடன்,
என்னுடைய மார்பிலிருக்கும் இதயத்தின் துடிப்பிருக்கும்வரை
எப்பொழுதும் உன்னை எண்ணிக்கொண்டேயிருப்பேன்.

*விதித்தேவதைகள் - the fates என்பது கிரேக்கர்களின் புராணங்களின் அடிப்படையில் மானுடரின் விதியை நிர்ணயிக்கும் மூன்று நெசவுத் தெய்வங்களைக் குறிப்பது. வெண்ணிற ஆடைகளில் தோன்றும் தேவதைகளிவை. குளோத்தோ (Clotho), லசெசிஸ் (Lachesis) & அட்ரொபொஸ் (Atropos) என்பவை அத்தேவதைகளின் பெயர்கள். மனிதர் ஒருவர் பிறக்கும்போது அவரது வாழ்வை நிர்ணையிக்கும் விதியானது இம்மூன்று தேவதைகள் நிர்ணயிக்கும் விதிகளின் மொத்த விளைவாகும்


To My Dear Mary Anne By Lord Byron

Lord Byron1.

Adieu to sweet Mary forever –
From her I must quickly depart;
Though the fates us from each other sever, '
Still her image will dwell in my heart.

2.

The flame that within my breast burns,
Is unlike what in lovers’ hearts glows;
The love which for Mary I feel,
Is far purer than Cupid bestows.

3.

I wish not your peace to disturb,
I wish not your joys to molest;
Mistake not my passion for love –
’Tis your friendship alone I request.

4.

Not ten thousand Lovers could feel
The friendship my bosom contains;
It will ever within my Heart dwell,
While the warm blood flows through my veins.

5

May the Ruler of Heaven look down,
And my Mary from evil defend;
May she ne’er know Adversity’s frown,
May her Happiness ne’er have an end.

6.

Once more my sweet Girl, Adieu!
Farewell, I with anguish repeat,
For ever I’ll think upon you,
While the Heart in my bosom shall beat.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.