எழுத்தாளர் வல்லிக்கண்ணன்

எழுத்தாளர் வல்லிக்கண்ணன் அவர்களை என்னால் ஒருபோதுமே மறக்க முடியாது. தமிழகத்தில் ஸ்நேகா பதிப்பக வெளியீடாக 'அமெரிக்கா' , 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' ஆகிய நூல்கள் வெளியானபோது , நண்பர் ஸ்நேகா பாலாஜி அந்நூல்களை வல்லிக்கண்ணன் அவர்களுக்குக் கிடைக்கச் செய்தார். அவ்விதம் கிடைத்த எனது நூலான 'அமெரிக்கா' பற்றிய கருத்துகளைத் தெரிவித்து அவர் தனது முத்து முத்தான கையெழுத்தில் எட்டு பக்கக் கடிதமொன்று அனுப்பியிருந்தார். அதனை இங்கு நண்பர்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்