வாசகர் கடிதங்கள் சில.Kuru Aravinthan <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.> wrote:
Subject: RE: நஸ்ரியா
Date: Sunday, June 21, 2015, 10:37 AM

நீண்ட நாட்களின் பின் நல்லதொரு கவிதை படித்ததில் துயரம் கலந்த மகிழ்ச்சி. முகநூலில் இருந்து தேடி எடுத்து தந்த முத்துக்காகக் கண்கள் பனிக்கின்றன.

நீரடித்து
நீர் விலகாதெனில்
உன்னையும்
என்னையும்
எப்படி விலக்கலாம்?

தமிழினி ஜெயகுமாரனுக்கும், கவிதையைப் பதிவு செய்த தங்களுக்கும் எனது நன்றி.

அன்புடன்
குரு அரவிந்தன்


From: "seyon yazhvaendhan" <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>
Subject: கவிதை சமர்ப்பித்தல்
Date: Friday, June 19, 2015, 10:54 AM

அன்புள்ள ஆசிரியருக்கு, பதிவுகள்  இணைய இதழில் ஏற்கனவே எனது கவிதைகளை வெளியிட்டமைக்கு மிக்க நன்றி.

அன்புடன்
சேயோன் யாழ்வேந்தன்


"Bala Devakanthan" <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
 Subject: correction
 Date: Wednesday, April 29, 2015, 11:37 PM
 
கிரி, ஒரு  திருத்தம். முடிந்தால்  உடனேயே  திருத்திவிடுங்கள். எனது அரங்காடல் 17  கட்டுரையில் கடைசி பத்தியில் முதல் வரியில் 'மோகப்பறவை'  என்று வருவதை 'செரஸ்  தேவதை ' என  மாற்றிவிடுங்கள்.

 தேவகாந்தன்
 


 Swaminathan Venkat <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.> wrote:
 Subject: பதிவுகள் இதழுக்காக

 Date: Sunday, June 14, 2015, 6:12 AM
 
அன்புளள  நண்பரும் ஆசிரியருமான  கிரிதரன்  அவர்களுக்குக்  கடந்த முறை  அனுப்பிய வழியே அனுப்புகிறேன். ஒரு  தொடர் கட்டுரையின்  முதல் பகுதியை.
 அன்புடன்,
 வெ.சா.


From: Mani Kandan
Sent: Tuesday, January 06, 2015 8:38 PM
Subject: அழைப்பிதழ்

அன்புள்ள பதிவுகள், திண்ணை ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்.  'மின் ஊடகங்களில் சங்க இலக்கியச்சொல்லடைவுகளும் அகராதி தொகுத்தலும்' என்னும் தலைப்பில் தேசியக் கருத்தரங்கம் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்துடன் இணைந்துநடத்துகின்றோம். எனவே அழைப்பிதழை தனிப்பட்ட முறையில் அனுப்பி வைக்கின்றேன். அழைப்பிதழை இணையப் பக்கத்தில் வெளியிட்டு உதவுமாறுஅன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

அன்புடன்
Dr.Durai.Manikandan
Head, Tamil Department
Bharathidasan University Constutient College
Navalurkuttappattu., Tiruchirappalli.
Tamilnadu, India.
cell: 91-9486265886
blogs:http://manikandanvanathi.blogspot.com/


From: Letchumanan Murugapoopathy
To: Navaratnam Giritharan
Sent: Tuesday, December 30, 2014 4:54 PM
Subject: சொல்லமறந்த கதைகள் - நயப்புரை - ஜே.கே. ஜெயக்குமாரன்

அன்புள்ள   நண்பர்  கிரிதரனுக்கு  புத்தாண்டு  நல்வாழ்த்துக்கள்.   மலரும் புத்தாண்டில்  தங்களுக்கும்  தங்கள்  குடும்பத்தினர்  மற்றும்  நட்பு வட்டத்தினருக்கும்  அனைத்து  நன்மைகளும்  கிட்டவேண்டும்  என வாழ்த்துகின்றோம்.    தங்கள்  பதிவு  இணைய  இதழ்பற்றி அவுஸ்திரேலியாவுக்கு   வருகைதரும்  இலங்கை   இலக்கிய நண்பர்களிடமும்  பிரஸ்தாபித்து   அவர்களையும் பதிவுகளைப்பார்க்கத்தூண்டிவருகின்றேன்.    தங்கள்  இலக்கியப்பணிகள் தொடரவும்    எனது  மனமார்ந்த  வாழ்த்துக்கள்.

அன்புடன்
முருகபூபதி


From: Kuru Aravinthan
To: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Sent: Tuesday, November 11, 2014 8:23 PM
Subject: RE: Thanks


வணக்கம், தங்கள் இணைய இதழில் தமிழ் மிரர் இலக்கிய விருது எனக்குக் கிடைத்தது பற்றிய செய்தியை வெளியிட்டமைக்காக எனது மனமார்ந்த நன்றியைத்தெரிவித்துக் கொள்கின்றேன்.

அன்புடன்
குரு அரவிந்தன்  

 


From: Thurai Kumaresan
To: பதிவுகள் - கிரிதரன்
Sent: Friday, December 26, 2014 8:28 PM
Subject: சிந்தாமணி நிகண்டு மின்–அகராதி

வணக்கம் கிரிதரன், இயற்றமிழ்ப்போதகாசிரியர் என்று அறியப்பட்ட வல்வை ச.வைத்தியலிங்கம்பிள்ளை ( 1843 – 1900 ) அவர்களால் இயற்றப்பட்ட சிந்தாமணி நிகண்டினை(1876)  மின்–அகராதியாக மாற்றியுள்ளோம்.   நிகண்டில் உள்ள சொற்கள் யாவற்றையும் அனைத்துத் தேடுபொறிகளாலும் தேடிஎடுக்கும் நிலையில், ஒருங்குறியில், தரவுதளமாக மாற்றி எனது விருபா தளத்தில் இணைத்துள்ளேன். இதனை பின்வரும் இணைய முகவரியில் பார்வையிடலாம்.  http://www.viruba.com/Nigandu/Nigandu.aspx?id=1

நட்புடன்,

குமரேசன்


From: "Muthuselvam Santhanam" <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>
To: <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>
Sent: Monday, August 18, 2014 7:25 AM
Subject: my article


வணக்கம் ஐயா நான் கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத் தமிழ் துறையில் முனைவர் பட்டம் மேற்கொண்டு வருகிறேன். என் கட்டுரையை பதிவுகளில் வெளியிட்டமைக்கு நன்றி.


From: Sairul Cadeer
Sent: Wednesday, July 16, 2014 1:19 PM
Subject:

அன்பு ஆசிரியருக்கு வணக்கம். இத்துடன் இணைக்கப்பட்ட தகவல்களை தங்களது இதழில் பிரசுரித்து எமது தோப்பு இலக்கிய வட்டத்துக்கு பங்களிக்குமாறு தங்களை தாழ்மையுடன் வேண்டுகிறேன்.தங்களது உதவி என்றும் மெச்சப்படும்

நன்றி
அன்புடன்
கதீர்
தோப்பு இலக்கிய வட்டம், கல்முனை, இலங்கை.

[தகவலுக்கு நன்றி. தொடர்ந்தும் தங்கள் செயற்பாடுகள் பற்றிய விபரங்களை அறியத்தாருங்கள். - ஆசிரியர்]


From: Nagarasa Iyer Subramaniam
Sent: Tuesday, June 24, 2014 2:39 PM
Subject: ஈழத்துத் தமிழ்நாவல் இலக்கியம் என்ற நூல் பற்றிய தங்களது மதிப்பீடு தொடர்பாக ... _

மதிப்புயர் அன்ப!  உங்களைப்பற்றிய விபரங்களை நண்பர்  குரு. அரவிந்தன் அவர்கள்  முன்னரே எமக்குக்கூறியுள்ளார். கடந்த 31-05-2014 அன்று 'மெய்யக' மண்டபத்தில் நிகழ்ந்த நாவலிலக்கியம் தொடர்பான ஒன்றுகூடலில்தான் உங்களை நாங்கள் நேரில் சந்தித்தோம். விரிவாக உரையாட விருப்பம் இருந்தது. ஆனால்  அன்று அதற்கான நேரம் கிட்டவில்லை. பின்னர் சந்தர்ப்பம் கிட்டும்போது நேரில் உரையாடுவோம். கடந்த சில ஆண்டுகளாக  பதிவுகள் இணையதளத்தை நானும் எனது துணைவியாரும்வாசித்து வருகிறோம்.  அதில் இடம்பெற்றுவந்துள்ள கட்டுரைகள் மற்றும் தகவல்களை அவ்வப்போது எமது மாணவர்களுடனும் நாம்  பகிர்ந்துகொள்கிறோம்.

எனது ஈழத்துத் தமிழ்நாவல் இலக்கியம் என்ற நூல் பற்றிய தங்களது மதிப்பீட்டுரையைபதிவுகள் இணையதளத்தில்  நேற்று பார்த்தேன். உடனே வாசித்துவிட்டேன்.   அந்நூலைக்   கவனத்திற்கொண்டு  விரிவானதொரு மதிப்பீட்டை முன்வைத்தமைக்கு  எனது மனம்நிறைந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

நீங்கள் முன்வைத்துள்ள விமர்சனக் குறிப்புகளைக் கருத்திற் கொண்டுள்ளேன். எதிர்காலத்தில் மேற்படி நூல் மீளவும் பதிப்பாகும் சூழ்நிலை ஏற்படும்போது உரிய திருத்தங்களையும்  மாற்றங்களையும்  மேற்கொள்ள முயல்வேன்.

( முன்பு , தேவகாந்தனுடைய 'கனவுச்சிறை' நாவல் பற்றிய  எனது மதிப்பீட்டை நீங்கள் பதிவுகள் இணையதளத்தில் இட்டிருந்தீர்கள்  என்பதை இங்கு நன்றியுடன் நினைவுகூர்கிறேன். )

அன்புடன்
நா. சுப்பிரமணிய ஐயர்.


From: Mani Kandan
Sent: Friday, April 18, 2014 8:30 AM
Subject: கட்டுரை வெளியிடுவது தொடர்பாக.

ஐயா பதிவுகள் இணைய இதழ் ஆசிரியர் அவர்களுக்கு எமது வணக்கம். தங்களுக்கு எமது நன்றியும். எமது கல்லூரியில் நடைபெற்ற “தமிழ்க்கணினி இணையப் பயன்பாடுகள்” பன்னாட்டுக்கருத்தரங்கிற்குக் கட்டுரை எழுதி அனுப்பியது மிகவும் வரவேற்பை பெற்றது. மேலும் இக்கருத்தரங்கில் மொத்தம் 62 கட்டுரைகள் வந்திருந்தன. என்வே தங்கள் பதிவுகள் இதழிலில் இக்கட்டுரைகளை இரண்டு இரண்டாக வெளியிட வேண்டுகின்றேன். இதனால் அனிவரின் பார்வைக்கும் கட்டுரையின் கருத்துக்கள் கிடைக்கும் என்ற நோக்கில்தான். முதல் கட்டுரையாக திரு.சிவாப்பிள்ளை (கோல்ட்ஸ்மித் பல்கலைக்கழகம் லண்டன்) அவர்களின் கட்டுரையை அனுப்பி வைக்கின்றேன்.

அன்புடன்
முனைவர் துரை.மணிகண்டன்
தலைவர், தமிழ்த்துறை
பாரதிதாசன்பல்கலைக்கழக உறுப்பு கலைமற்றும் அறிவியல் கல்லூரி
நவலூர் குட்டப்பட்டு, ஸ்ரீரங்கம் வட்டம், திருச்சிராப்பள்ளி,
தமிழ்நாடு இந்தியா.
அலைபேசி எண்: 91-9


From: pichinikkadu elango
Sent: Tuesday, March 04, 2014 1:36 AM
Subject: article about poetry

Dear Editor,
Thank you very much for your support.

anbudan
pichinikkaduElango


From: tamilmanavalan ethiraj
Sent: Sunday, March 16, 2014 11:20 AM
Subject: Arivippu

மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கம்.தொடர்ந்து நான்காம் ஆண்டாக நடைபெறும், எழுத்தாளர் ஜெயந்தன் நினைவு  இலக்கியப் பரிசுப் போட்ட அறிவிப்பினை இணைத்துள்ளேன். கடந்த ஆண்டுகளில் வெளியிட்டு ஆதரவு நல்கியது போல் இவ்வாண்டும் தயை கூர்ந்து வெளியிட்டு

உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்
அன்புடன்,
தமிழ்மணவாளன்


From: Letchumanan Murugapoopathy
To: Navaratnam Giritharan
Sent: Saturday, December 21, 2013 9:24 PM
Subject: Fwd: Murugapoopathy Urgent

அன்புள்ள கிரிதரனுக்கு வணக்கம். எனது ஆக்கங்களை தங்கள் பதிவுகளில் பதிவுசெய்வதையிட்டு மகிழ்ச்சி. மிக்க நன்றி. நேற்று நண்பர் தெளிவத்தை ஜோசப்புடன் தொலைபேசியில் உரையாடினேன். அவர் நேற்று ஊட்டியில் நின்றார்.  அவர் வசம் தற்பொழுது கணினி இல்லை. எனினும் பல நண்பர்;கள் தங்கள் பதிவுகளை பார்த்துவிட்டு அவருக்குத்தகவல் தெரிவித்திருக்கிறார்கள். அவர் உங்களுக்கும் தனது நன்றியை தெரிவிக்கச்சொன்னார். இன்று கோவையில் விருது விழா நடைபெறுகிறது.
நன்றி
அன்புடன்
முருகபூபதி


From: Srinivasan Subramanian
Sent: Friday, December 13, 2013 12:32 AM
Subject: nandri

பதிவுகள் இணைய  நிறுவன ஆசிரியருக்கு வணக்கம் ,  தங்கள் இணைய  இதழில் என்னுடடைய ஆய்வு கட்டுரையை வெளியிட்டதற்காக நன்றி .

இப்படிக்கு
உண்மையுள்ள

என்றும் அன்புடன்,                        
சீனிவாசன் சு.
முனைவர் பட்ட ஆய்வாளர்,
தமிழ்த் துறை, பாரதிதாசன் பல்கலைக்கழகம்,
திருச்சி-620024.


From: Mani Kandan
Sent: Saturday, January 25, 2014 12:33 PM
Subject: கட்டுரை வெளியிடுவது தொடர்பாக

அன்புள்ள பாதிவுகள் ஆசிரியருக்கு வணக்கம். நலம் நலமறிய ஆவல். பதிவுகள் இணைய இதழ் தமிழகத்தில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அன்புடன்
முனைவர் துரை.மணிகண்டன்


From: "Mathangi" <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>
Sent: Friday, January 24, 2014 3:05 AM
Subject: அறிவிப்பும் அழைப்பும்

அன்புள்ள பதிவுகள் இதழாசிரியருக்கு, வணக்கம். இத்துடன் சிங்கப்பூரி 26.1.2014 அன்று என்னுடைய படைப்புகள் குறித்து நடக்கவிருக்கும் நிகழ்வைப் பற்றிய அறிவிப்பையும் அழைப்பிதழையும் தங்களுக்கு அனுப்புகிறேன்.
நன்றி
அன்புடன்
மாதங்கி


From: Wijey
Sent: Sunday, January 19, 2014 2:30 PM
Subject: An article for Pathivukal.
 
அன்புடன் திரு. கிரிதரன் அவர்களுக்கு, இத்துடன் ‘பனை’ பற்றிய ஓர் ஆய்வுக் கட்டுரையைப் பதிவுகளுக்கு அனுப்புகிறேன். புலம்பெயர்ந்த சிலருக்கு பனை,  நுங்கு,  பனம் பழம்,  ஓலை, பனங்கிழங்கு,  ஒடியல்,,  புழுக்கொடியல்,  பனாட்டு,  பூரான் போன்றன என்னவென்று தெரியாது வாழ்கின்றனர். எனவே கட்டுரைகளில் ஆறு படங்களைப் போட்டு விளக்கமும் கொடுத்துள்ளேன். படங்கள் போடுவது சிரமமாயின் அவற்றை நீக்கி விட்டுக்கட்டுரையைப் பதிவு செய்யலாம். நன்றி.
 
கனிவுடன்,
கா. விசயரத்தினம்.