கண்ணம்மா (மலேசியா) கவிதைகள் -

1. உறவுமலர்!

ஒவ்வோர் உறவும்
பூந்தோட்டத்தில் பூத்த
விதவிதமலர்கள் போலும்.
அவ்வளவும் அற்புத
அழகு.

2. பாதபூஜை.

இனிமேல் பார்க்கக் கிடைக்குமோ,
தனியாய் தொலைந்த காரணமோ,
பனித்த கண்களால்
பாதம் கழுவி,
புனிதம் அடைந்தேன்.