பாடகர்களான தான்யஶ்ரீ, மாளவிகா இவர்கள்தம் குரலினிமையுடன்  ராஜேஷ் வைத்யாவின் வீணையிசையும் சேர்ந்த பாரதியாரின் இப்பாடல் எம்மை முற்றாகவே வசியப்படுத்திவிடுகின்றது.

காற்றினிலே வரும் கீதம்: காற்று வெளியிடைக் கண்ணம்மா!

கேட்டு மகிழ்வதற்கான காணொளி: https://www.youtube.com/watch?v=YQZotAqfQzk

மகாகவி பாரதியார்

காற்று வெளியிடை கண்ணமா பாடல் வரிகள்

காற்று வெளியிடைக் கண்ணம்மா - நின்றன்
காதலை எண்ணிக் களிக்கின்றேன் - அமுது
ஊற்றினை ஒத்த இதழ்களும் - நிலவு
ஊறித் ததும்பும் விழிகளும் - பத்து

மாற்றுப்பொன் ஒத்தநின் மேனியும் - இந்த
வையத்தில் யானுள்ள மட்டிலும் - எனை
வேற்று நினைவின்றித் தேற்றியே - இங்கோர்
விண்ணவ னாகப் புரியுமே! இந்தக்

காற்று வெளியிடைக் கண்ணம்மா - நின்றன்
காதலை எண்ணிக் களிக்கின்றேன்

நீயெனது இன்னுயிர் கண்ணம்மா! - எந்த
நேரமும் நின்றனைப் போற்றுவேன் - துயர்
போயின, போயின துன்பங்கள் நினைப்
பொன்எனக் கொண்ட பொழுதிலே - என்றன்

வாயினிலே அமு தூறுதே - கண்ணம்மா
என்ற பேர்சொல்லும் போழ்திலே
கண்ணம்மா ம்ம்ம்
கண்ணம்மா ம்ம்ம் - கண்ணம்மா
என்ற பேர்சொல்லும் போழ்திலே - உயிர்த்
தீயினிலே வளர் சோதியே - என்றன்
சிந்தனையே, என்றன் சித்தமே! - இந்தக்

காற்று வெளியிடைக் கண்ணம்மா - நின்றன்
காதலை எண்ணிக் களிக்கின்றேன்