இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
பெப்ருவரி 2009 இதழ் 110  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

கடன் தருவோம்!


நீங்கள் கனடாவில் வசிப்பவரா? உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்! விபரங்களுக்கு இங்கே அழுத்துங்கள்

மணமக்கள்!



தமிழர் சரித்திரம்

Amazon.Caசுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்|

In Association with Amazon.ca
தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
Download Tamil Font
நிகழ்வுகள்!
பேர்லின் சர்வதேசத் திரைப்பட விழாவின் போட்டித் தெரிவில் புகலிட தமிழ்த் திரைப்படம்
'இவ்வருடம் பெப்ரவரி மாதம் 5ம் திகதி தொடக்கம் 15ம் திகதி வரை ஜேர்மனியின் தலைநகரான பேர்லினில் ‘பேர்லினால’ எனப்படுகின்ற பேர்லின் சர்வதேசத் திரைப்படவிழாவின் 59வது தொடர் நடைபெற இருக்கின்றது. இவ்விழாவில் பிரான்ஸில் இருக்கும் ரவீந்திரன் பிரதீபன் அவர்களின் இயக்கத்தில் உருவான ‘என் வீட்டின் முற்றத்தில் ஒரு மாமரம்’ என்கின்ற குறும் படம் நான்கு தடவைகள் திரையிடப்பட இருக்கின்றது. சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குறும்படங்களில் இருந்து பதினொரு படங்கள் மட்டுமே போட்டிக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ளன. ‘என் வீட்டின் முற்றத்தில் ஒரு மாமரம்’ குறும்படமும் இத் தெரிவுக்குள் அடங்குகின்றது. இக்
குறும்படமானது பிரான்ஸில் இருந்து வெளிவருகின்ற உயிர்நிழல் சஞ்சிகையை வெளியிடும் எக்ஸில் வெளியீட்டகத்தின் இணை அமைப்பான «எக்ஸில் இமாஜ்»
‘Exil Image’ இனால் தயாரிக்கப்பட்டுள்ளது.

இக் குறும்படமானது இலங்கையின் போர்ச் சூழலில் நடைபெறுகின்ற ஆட்கடத்தல், சிறுவர்கள் போராளிக் குழுக்களில் சேர்க்கப்படுதல், பெண்கள் மற்றும் பெண்பிள்ளைகள்மீதான பாலியல் வன்முறை, உக்கிரமடைந்து வருகின்ற போர் மற்றும் மனித விழுமியங்களின் அழிப்பு போன்றவற்றை நுணுக்கமாகக் குறியீடுகளுடன் சொல்லிப் போகின்றது. இக் குறும்படம் ஒரு தலைமுறையின் சிதைக்கப்பட்ட கனவுகளைப் பேசுகின்றது.

‘பேர்லினால’ திரைப்படவிழாவானது 1951ம் ஆண்டில் ஆரம்பிக்கப் பட்டது. சுமார் 5 இலட்சம் பார்வையாளர்கள் கலந்து கொள்ளும் இவ்விழாவானது தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும். ஆண்டு தோறும் இவ்விழாவில் 125 நாடுகளைச் சேர்ந்த 16000 திரைப்படத்துறை நிபுணர்கள் மற்றும் 82 நாடுகளைச் சேர்ந்த 4000க்கும் அதிகமான பத்திரிகையாளர்கள் கலந்து கொள்கின்றனர். இவ்விழாவிற்கான போட்டியில் வெற்றி பெறும் முதலிரண்டு முழுநீளத் திரைப் படங்களுக்கும், முதலிரு குறும்படங்களுக்கும் தனித்தனியே ‘தங்கக் கரடி’, ‘வெள்ளிக் கரடி’ விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றது. ‘கரடி’ பேர்லின் நகரத்தின் சின்னமாகும். இத் திரைப்படவிழாவின் 59 வருடகால வரலாற்றில் போட்டித் தெரிவு பெற்ற முதல் தமிழ்த் திரைப்படம் இது என்பதும் முக்கியமானது.

மிருணாள் சென், சத்யஜித்ரே, அடுர் கோபாலகிருஷ்ணன், ஆனந்த் பட்டவர்த்தன், விஸ்வநாதன், மீரா நாயர்,  மணிரத்னம் போன்ற இயக்குநர்களை இவ்விழா கெளரவித்திருக்கின்றது. மேலும் இவர்களில் சிலர் தேர்வு நடுவர்களாகவும் இருந்திருக்கிறார்கள்.

இன்றைக்கு இலங்கையில் நிலவுகின்ற நெருக்கடியான காலகட்டத்திற்கு ஏற்ற கருவை உள்ளீடாகக் கொண்டிருப்பது இக்குறும்படத்தின் சிறப்பம்சமாகும்.

திரையிடல் விபரங்கள் வருமாறு:

வெள்ளிக்கிழமை 06.02.2009 - 22:00 மணிக்கு
CinemaxX 3
Potsdamer Platz, Potsdamer Straße 5, 10785 Berlin, Germany
U/S-Bahn: Potsdamer Platz

ஞாயிற்றுக்கிழமை 08.02.2009 - 17:30 மணிக்கு
Collosseum
Schönhauser Allee 123, 10437 Berlin, Germany
U/S-Bahn: Schönhauser Allee


செவ்வாய்க்கிழமை 10.02.2009 - 16:00 மணிக்கு
(இக் காட்சி சர்வதேச பத்திரிகையாளர்களுக்கு மட்டுமே காண்பிக்கப்படுகின்றது)
CinemaxX 6
Potsdamer Platz, Potsdamer Straße 5, 10785 Berlin, Germany
U/S-Bahn: Potsdamer Platz


சனிக்கிழமை 14.02.2009 - 22:00 மணிக்கு
CinemaxX 3
Potsdamer Platz, Potsdamer Straße 5, 10785 Berlin, Germany
U/S-Bahn: Potsdamer Platz


மேலதிக விபரங்களுக்கு :
http://www.uyirnizhal.com/mangotree.html
exilpub@gmail.com

© காப்புரிமை 2000-2009 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner