இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google
 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
டிசம்பர் 2009 இதழ் 120  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!



தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
இலக்கியம்!
அண்ணாவின் நாடகங்களில் மொழிநடை
- முனைவர் துரை.மணிகண்டன் -
( விரிவுரையாளர், தமிழ்த்துறை, 'டாக்டர்' கலைஞர் கலை அறிவியல் கல்லூரி - பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி - லால்குடி, திருச்சி)

“அண்ணா அவர்கள் நமது நாட்டுக்குக் கிடைத்த ஒரு நிதி என்றுதான் சொல்ல வேண்டும்” என்றார் தந்தை பெரியார் அஃது உண்மையும் கூட. அண்ணா தமிழகத்திற்கு சீர்திருத்த திறவுகோல் ஆவார். தாழந்து அடிமைபபட்டுச் சாதிகளால் சிக்குண்டு கிடந்த மக்களை ஒன்றிணைக்க புறப்பட்ட புரட்சியாளர்; ; இளைஞர்களின் எழுச்சி தீபம்; அரசியலையும், படைப்புகளையும் தன் இரு கண்களாகிக்கொண்டு வாழந்த வள்ளல்;;; இப்பேரும் புகழும் பெற்ற அண்ணாவின் படைப்புகள் பல. கவிதை, கட்டுரை, புதினம், சிறுகதை, நாடகம் வழக்காடு மன்றம் என இலக்கியப் பணியில் பன்முகத் தன்மை கெர்ணடவர். இவர் படைப்புகளான நாடகங்களில் கையாண்டுள்ள மொழி நடையைப் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

மொழி நடை
மொழி சொற்களால் ஆடைக் கட்டிக் கொள்கிறது. அவ் ஆடைகள் பலவாக இருக்கலாம். படைக்கும் படைப்பாளனை ஒட்டியே அஃது அமைகிறது. ஒரு கருத்தை மற்றவர்களுக்குப் புரியவைப்பதற்கு மொழி ஒரு பாலமாக இயங்குகிறது.  “நடை என்பது அந்தந்த ஆசிரியரின் தனித்தன்மையை வெளிப்படுத்த வல்லதாகும். அவரை இனங்கண்டு கொள்ளும் வகையில் அவரவருக்கே உரியதாக இருக்கும் வெளி;ப்பாட்டின் மொழிப்பாங்கே அது இலக்கியத்தில் அதுவே மிகப் பெரிய சாதனையாகும் என்று மா.ராமலிங்கம் மொழிநடைக்கு விளக்கம் தருகிறார். (20 ஆம் நூற்றாண்டு தமிழ் இலக்கியம் ப.160) “அகத்தின் அழகு முகத்தில் தெரிவது போல எழுத்தின் அழகு நடையில் வெளிப்பட வேண்டும் “ (இலக்கியக் கலை ப.145) என்று அ..ச. ஞானசம்பந்தன் நடையைப்பற்றி விளக்குகிறார் இவ்வாறு மொழிநடை இலக்கிய படைப்புகளையும் படைப்பாளனையும் இனங்கண்டு கொள்ள மொழி நடை தேவைப்படுகிறது.

அண்ணாவின் நாடகங்கள்
சந்திரோதயம், சிவாஜி கண்ட இந்து ராஐ;யம் (சந்திரமோகன்), வேலைக்காரி, ஒர்.இரவு, நீதி தேவன் மயக்கம், கண்ணீர்த் துளி என்பன அண்ணாவின் நாடகங்கள் ஆகும். இவைகளில் மக்கள் ஆண்டாண்டு காலமாக சிக்குண்டு கிடந்த மூடப் பழக்க வழக்கத்திலிருந்து வெளிக்கொணருகிறார் முதலாளிகளின் மூக்கையும் பணத்திமிர் பிடித்த பண்ணையாளர்களின் முகமூடிகளைiயும் தன் சொல்லாலும் வாக்காலும் மக்களுக்த் துகிலுரித்துக்காட்டுகிறார். சாமியார்களின் உல்லாச உறவையும், அவர்களின் கபட வேசத்தையும் வெளிப்படுத்தும் கருப்புத்தங்கம். ஆறம்பட வந்த மறவன் எனலாம்;. எனினும் நாடகங்களில் அண்ணா மொழி நடையயை நேர்த்தியான முறையில் கையாண்டுள்ளார்.; குறிப்பாக உணர்ச்சி நடை மேலோங்கி நிற்கிறது. அடுத்து உவமை நடை, அடுக்கு மொழி நடை, வினா நடை, போன்றவைகளினால் மொழிநடையைப் பயன்படுத்தியுள்ளார்.

உணர்ச்சி நடை
அண்ணாவின் படைப்புகள் அனைத்திலும் உணர்ச்சி மேலெழுந்து காணப்படுகிறது. நாடகங்களிலும் இது சற்று உயர்வாகவே இருப்பதை;க காணமுடிகிறது. ஒரு கருத்தை வலியுறுத்த இலகுவாகக் கூறினால் மக்களோ வாசகனோ ஏற்றுக் கொள்வது சற்று குறைவு அதையே உணர்ச்சியுடன் கூறினால் எழுதினால் மக்கள் அதனை உடனே ஏற்றுக் கொண்டுவிடுவார்கள் என்பது அண்ணாவிற்கு தெரிந்திருக்க வேண்டும்.

உவமை நடை
படைப்புகளில் கையாளப்படும் நடையில் உவமைநடை மிக முக்கியமானதாகும். கருத்தைத் தெளிவுப்பட கூறவும் விளங்க வைக்கவும் இந்த நடை தேவை. அண்ணா தனது
நாடகங்களில் மிகுதியாக உவனையைக் கையாண்டுள்ளார். “ஒர் இரவு” நாடகத்தில் சுசீலா என்ற பாத்திரத்தின் மூலம் தன் வீட்டிற்குத் திருடவந்தவனை என்னைக் காதலிப்பதாக கூறி நடி என்கிறாள். இதற்கு ஆசிரியர் தந்திருக்கும் உவமை “எனக்கொரு உபகாரம் செய்கிறாயா? களவாட வந்தவனை ஒரு கன்னி உபகாரம் செய் என்று கேட்பது படமெடுத்தாடும் நாடகத்தைப் பார்த்து மாணிக்கம் கொடு என்று கேட்பது போலிருக்கிறதா?” (ஒர் இரவு ப.35) என்று உவமைக் கருத்தை விளக்க கையாண்டுள்ளார். இதைப் போன்றே ‘சந்திரமோகன’; நாகடத்திலும் சாதுவிடம் பேசும் ஆண்டி இந்த சமாதானம் அறிவுரைகள் இப்பொழுது

இருக்கும் சூழலில் ஒத்துவராது. சாதி, மதம் என இவர்களை எப்படி சந்திப்போம் என்று பாருங்கள் என்கிறான் “ பாம்பின் வாயிலே சிக்கிய தேரைக்கும் புலியின் பிடியிலே சிக்கிய மானுக்கும் போய்ச் செய்யும் இந்த போதனையை பொறுமையாம் பொறுமை பொறுத்ததெல்லாம் போதாதா? (சந்திரமோகன் ப.8)

இந்நாடகத்தில் கங்கு, ரங்கு பாத்திரங்கள் உரையாடலின் போது பல உவமைகள் பதிவுச் செய்யப்பட்டுள்ளன. “நீயே யோசித்துச் சொல் புத்தி தீட்சண்யம் இருக்க வேணுமடா ரங்கு சதுப்பு நிலத்திலே நடந்து செல்கிறவனுக்குக் காலிலே திடம் இல்லாவிட்டால் என்ன ஆகும். அதுபோலத்தான் நமது சாஸ்திர புராணாதிகளிலே உள்ள சம்சயங்களைப் போக்க நமக்குத் தெரியவிட்டால் நமது பாடும் “(சந்திரமோகன் ப.62) என்கிறார். இதனைக் கேட்ட ரங்கு “ஆமாம் பழச்சாறும் பருக வேணும் பழமும் கெடக்கூடாது என்பது போல சிக்கலாக இருக்க ” (சந்திரமோகன் ப.62)

‘சந்திரமோகன்’ நாடகத்தில் வீர சிவாஐp பாhப்பணர்களின் வஞ்சக வலையில் வீழந்து விடுகின்றான். சிவாஐpயின் உற்ற தோழனான மோகன் எவ்வளவோ எடுத்துக் கூறுக்கின்றான். “மராட்டியமே மண்டியிடாதே!வீரமே வீழ்ச்சியுறாதே!மராட்டிய மாவீரர்களே மன்னன்சிவாஐpயை மாற்றான் முன் மண்டியிடச் செய்த கோழைகளானீர் கொடுமை, கொடுமை இது. அறிவுலகத்திலே அனைவரும் இதைக் கண்டித்தே பேசுவர் முடி நமது சிவாஐp மன்னனிடம் பிடி இந்த வேதம் ஒதியிடம்” (சந்திரமோகன் ப.112) என்று மராட்டிய மக்களைப் பார்த்து உண்மையை எடுத்துரைக்கும் உணர்ச்சிநடையைக் காணமுடிகிறது. மேலும் மோகன் காகபட்டர் என்பவரிடம் நீங்கள் நயவஞ்சகத்தால ;எங்கள் சிவாஐpயை மண்டியிட வைக்க முயற்சி செய்கிறீர்கள் அது மக்கள் மத்தியில்உண்மை ஒருநாள் தெரியும் என்பதை. “காகபட்டரே மண்டியிடும் மன்னர்கள் மட்டுமே மாநிலத்தில் உள்ளனர் என்று எண்ணாதீர். மக்கள் மன மயக்கம் வெகு விரைவிலே தெளியப் போகிறது. அப்போது உங்கள் அட்டகாசம் அடியோடு ஒழியும்”(சந்திரமோகன் ப.114) என்றுகூறுகிறார். மோகன்சிவாஐpயிடம எவ்வளவோ எடுத்துரைத்து ஒருவழியாக கபடக்காரர்களிடமிருந்து தன்னை விடுவித்துக்கொள்கிறார்.  விளைவு மீண்டும் மோகனைச் சந்தித்து

“அஞ்சா நெஞ்சு படைத்த நீ மக்களிடம் பரவி இருக்கும் மயக்கத்தைப் போக்கு வாளால் அரசுகளை அமைத்து விடலாம். ஆனால் அது நிலைக்க அறிவு தேவை. அந்த ஆயுதத்தை வீசு, நாடு ழுழுவதும் வீசு, பட்டி தொட்டிகளெல்லாம் வீசு, மக்களை வீரர்களாக்கு”;. (சந்திரமோகன் ப.118) என்று உணர்ச்சி ததும்ப தன் கருத்துகளை முன்கூறுக்கின்றார்.காதல் Nஐhதி’ என்ற நாடகத்தில் பொன்னனும் தங்கவேலும் உரையாடும் பாகத்தில்அண்ணா உவமையைத் தெளிவாகக் கையாண்டுள்ளார். “ஊத்து கிடைக்காத இடத்திலே வெட்டி வெட்டி பார்த்தா என்ன பலன்காணமுடியும் அதைப்போல சுகுணாவுக்கும் நமக்கும் காதல் வளர்ந்து என்பிரயோசனம்”(காதல் Nஐhதி ப.170) என்று பாமர மக்களும் அறிந்து கொள்ளும் எளிமையானஉவமைகளைப் டத்துக்காட்டியுள்ளார்.

அடுக்கு மொழி நடை
மொழி நடையில் புதிய உத்தியைக் கையாண்டவர்கள் படைப்புலகில் வெற்றிப் பெற்றுள்ளனர். பாரதி, பாரதிதாசன,; மு.வ, புதுமைப்பித்தன், அப்தூல் ரகுமான் எனபட்டியல் நீலும் அந்தவகையில் அண்ணாவின் எழுத்து நடைக்கும் பேச்சு நடைக்கும்மிக முக்கியமான நடை, என்றால் அஃது அடுக்குமொழி நடை எனலாம். “இலக்கிய படைப்பாளியை இனங்கண்டுகொள்வதற்கு அவர்களது மொழி நடைபெரிதும் பயன்படுகிறதென்பதில் ஐயமில்லை” (நடையியல் ப.34)என்று nஐ. நீதிவானன் குறிப்பிடுவது இங்கு உற்று நோக்கத் தக்கது.‘வேலைக்காரி’ நாடகத்தில் பரமனும் மணியும் உரையாடுகின்றனர்.பரமனிடம் மணிகூறுவதுபோன்று“சட் கோழையைப் போல பேசாதே இப்பொழுது நீ ஏழையல்ல” ( வேலைக்காரி ப.38)என்ற அடுக்கு மொழியைக் கையாண்டுள்ளதைக் காணமுடிகிறது. இதே போன்று சுசிலா தனியாக இருக்கும் பொழுது அறையில் திருடன் புகுந்து விடுகின்றான். இருவருக்கும் வாக்குவாதம் நடக்கிறது.

“(நிதானமாக) எனக்கென்ன பயம்? இங்கே கள்ளன் கீழே காமுகன் உனக்கு உன் உடைமை வேண்டும் அவனோ என்னையே அபகரிக்க வந்திருக்கிறான். நீ கருந்தேள் கீழே கருநாகம் (ஒர்இரவு ப.35) என்று தன் இயலாமையைச் சுசீலா கள்ளனிடம் கூறும் அடுக்கு மொழியாகும் மேலும் காதலைப் பற்றி அண்ணா கூறும்போது “காதல் என்பது சூது-கவிகளின் கற்பனை மாளிகையில் தரப் படும் மது” (ஒர்இரவுப.40) என் அடுக்குமொழியில் விளக்கம் தருகிறார் காதல் எத்தகையது என்று கூறிய அண்ணா போர் வீரனுக்கும் சாந்திக்கும் நடக்கும் காதல் எத்தகையது என்பதனையும் கூறுகிறார். “நீயே சொல்லு!போர் வீரனுடைய வாழ்க்கை ஆபத்து நிறைந்தது.; பயங்கரமனாது. அவள். இந்து பூங்கொடி;; நீ புயல் காற்று அவள் மெழுகுநீ அனல்.”(சந்திரமோகன் ப.18;)என்று விவரிக்கிறாh.;  மேலும் காகப்பட்டா பேசும் போது“துன்பமில்லாத இன்பம் மாசு இல்லாத மாணிக்கம் முள்ளில்லாத ரோஐh இந்த மகத்தான வித்தியாசத்தை தெரிந்து கொள்” (சந்திரமோகன் ப.56)என்று வாழ்க்கையில் இன்பம் துன்பம் இரண்டுமே சமமானது என்பதை தனது அடுக்குமொழி நடையில் தெளிவுப்படுத்துகிறார். பிராமணர்களி;ன் பிடியில் சிக்குண்ட சிவாஐpயையும் மராட்டிய மக்களையும் பார்த்து மோகன்விளித்துப் பேசுவது போல ஒரு அடுக்குமொழிநடையை “கூண்டிலே சிக்கிய புலி, தூண்டிலே சிக்கிய மீன், வலையிலே வீழ்ந்த மான,;வாருணாசரமத்திலே வீழ்ந்த வீரன்”(சந்திரமோகன் ப.82) என்று உரைப்பது போல படைத்துக்காட்டியுள்ளார்.

வினா நடை .
அண்ணாவின் நாடகங்களில் வினா நடையையும் அதிகமாகக் காணலாம் மூர்த்தி கதாப்பாத்திரத்தின் மூலம் சாமியர்களைக் கேட்கும் கேள்வியாக, “பாதி ராத்திரியேலே போகியாக காட்சியளிக்கும் பேடிப் பயலே! ஆசிரமமா இது? மோட்சசாம்ராஐ;யத்திற்குப் பயிற்சிக் கூடமா? பரமனின் பாதார விந்தத்துக்குப் பாதை காட்டும் சன்மார்க்க ஸ்தாபமனா? (வேலைக்காரி ப.68)என்று வினா நடையிலேயே கேட்டுள்ளார். அப்பாவிடம் மகள் சுசீலா கேட்பதாக

“அப்பா அவருடைய மிரட்டலுக்கு ஏன் பயப்படுகிறீர்? மாமாவைச் சமாதானப் படுத்துவது முடியாத காரியமா? ஏன் அவரிடம் அவ்வளவு பயப்படுகீறீர் என்ன செய்வது விடுவாரப்பா? (ஓர் இரவு ப.24) என்று வினாவுக்குமேல் வினாவாக கேட்கிறார். இதைப் போன்றே hகப்பட்டார்
குழப்பவாதியாகச் செயல்பட்டு வருகிறார். நாட்டில் நல்லது நடந்தால் நாம் வேலைக்கு என்ன செய்வோம்? அது தான்,“தர்மமா? அதர்மமா? பாவமா? புண்ணியமா? என்றெல்லாம் எண்ணிக் குழப்பம் அடையவேண்டாம்” (சந்திரமோகன் ப.106 )என்று நாம் கழகம் செய்தால்தான் எல்லாரும் நம்மை அனுகுவார்கள் ;என்று உரைக்கின்றார்
.
இவ்வாறாக அண்ணாவின் படைப்புகளில் அவருடைய மொழிநடையே அவரை முன்னிலைப்படுத்தியது என்பது உண்மையே. மொழிக்கு நடை எவ்வளவுமுக்கியம் என்பதை உணர்ந்து அந்தந்த இடத்திற்கு எந்தந்த நடையை கையால வேண்டும் என்றழுழுத்திறமைப் பெற்றவர்தான் அறிஞர் அண்ணா. இவரது நாடகங்களில் நாம் இது வரைக்கண்டது உணர்ச்சி, உவமை அடுக்குமொழி வினா,  நடைகளை எவ்வாறு பயன்படுத்தியுள்ளார். என்பது நமக்குத் தௌ;ளத் தெளிவாகிறது. இவைகள் இல்லாமல் கலப்பு நடை, இயற்கைவருணைனை நடை,பழமொழி நடைகள் , வழக்கு நடை, போன்றவற்றையும் தம்மொழிநடைக்கு பயன் படுத்தியுள்ளார். ப.ஐPவானந்நம் கூறுவது போல “அண்ணாத்துரையை மாணவர்கள் விரும்பினார்கள். வாலிபர்கள் சூழ்ந்தனர். ஏனெனில் அவரின் சொல் வன்மையும்எழுத்து வன்மையும் புத்துணர்ச்சியைத் தந்தது என்பார். “ அதுபோல இன்றைய படைப்பாளர்களும் அண்ணா கூறிய மொழி நடை வழியில் சீர்திருத்த வாதிகளாகச்செயல் படவேண்டும்.

ஆய்வுக்குப் பயன்பட்ட நூல்கள்
1. மா. ராமலிங்கம், இருபதாம் நூற்றாண்டு தமிழ் இலக்கிய வரலாறு 1965
2. அ.ச. ஞானசம்பந்தன,; இலக்கிய கலை, கழக வெளியிடு
3. nஐ. நீதிவானன், நடையியல்
4. சிவாஐp கண்ட இந்துராஐpயம் (சந்திரமோகன்); சீதைப் பதிப்பகம் சென்னை
5. ஒர் இரவு சீதைப் பதிப்பகம சென்னை
6. வேலைக்காரி சீதைப் பதிப்பகம் சென்னை
7. காதல் Nஐhதி சீதைப் பதிப்பகம் சென்னை
8. மு.வா இலக்கிய வரலாறு, சாகித்ய அகாதமி வெளியிடு

mkduraimani@gmail.com


 
aibanner

 © காப்புரிமை 2000-2009  Pathivukal.COM. Maintained By: Infowhiz Systems Inc.. Pathivukal is a member of the National Ethnic Press and Media Council Of Canada .
முகப்பு||
Disclaimer|வ.ந,கிரிதரன்