இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
பெப்ருவரி 2009 இதழ் 110  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

கடன் தருவோம்!


நீங்கள் கனடாவில் வசிப்பவரா? உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்! விபரங்களுக்கு இங்கே அழுத்துங்கள்

மணமக்கள்!



தமிழர் சரித்திரம்

Amazon.Caசுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்|

In Association with Amazon.ca
தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
Download Tamil Font
நிகழ்வுகள்!

லண்டன் வெம்பிளியில் கீழைத்தேய பரீட்சைச் சபையின் பட்டமளிப்பு விழா

- நவஜோதி ஜோகரட்னம் (லண்டன்) -

‘கீழைத்தேய பரீட்சைச் சபையினர் நடாத்தி வரும் நுண்கலைகளுக்கான பரீட்சைகள் உயர்ந்த தரத்தைக்கொண்டு காணப்படுவதால் ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலிருந்து பெருந்தொகை மாணவஇ மாணவிகள் இந்தப் பரீட்சைகளில் உற்சாகத்தோடு கலந்துகொள்வதை காணமுடிகிறது’ என்று கீழைத்தேய பரீட்சைச்சபையின் தலைவி ஸ்ரீமதி.அம்பிகா தாமோதரம் கீழைத்தேய பரீட்சைச் சபையின் முதலாவது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போது தெரிவித்தார்.
லண்டன் வெம்பிளியில் கீழைத்தேய பரீட்சைச் சபையின் பட்டமளிப்பு விழா
இந்த நுண்கலைத் தகுதிகளுக்கான சான்றிதழ்கள் மாணவ மாணவிகளுக்குஇ அவர்களின் கலை ஆளுமையை வலுப்படுத்த உதவுகின்றதென்றும், அவர்களின் கலை ஆர்வத்தையும் பாண்டித்தியத்தையும் மேலும் வளர்த்துச் செல்வதற்கும் இச்சான்றிதழ்கள் உற்சாகம் தருவதாக அமைந்திருக்கின்றன
என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
லண்டன் வெம்பிளியில் கீழைத்தேய பரீட்சைச் சபையின் பட்டமளிப்பு விழா
லண்டனில் முதல் தடவையாக வெற்றிகரமாக நடத்துவதற்கு மாணவஇ மாணவிகளும், பெற்றோரும், இசை நடன ஆசிரியர்களும், கலை அபிமானிகளும் காட்டிய ஊக்கமும் அக்கறையுமே பெருந்துணையாக அமைந்தன என்று ஸ்ரீமதி அம்பிகா தாமோதரம் தனது உரையில் மேலும்
தெரிவித்தார்.
லண்டன் வெம்பிளியில் கீழைத்தேய பரீட்சைச் சபையின் பட்டமளிப்பு விழா
‘லண்டனில் இளைய தலைமுறையிடம் இசையிலும்இ வாய்ப்பாட்டிலும், நடனத்திலும் சிறப்புடன் திகழ்வதற்கு பெற்றோர்களின் ஆர்வமும் அக்கறையுமே அடிப்படையாக அமைந்துள்ளது என்றும், நுண்கலைகளில் சிறப்புத் தகுதியை அடைந்து மாணவர்கள் பட்டம் பெறும் இத்தினம்
பிரிட்டனின் கலாச்சார சரித்திரத்தில் தனி முக்கியத்துவம் பெறுகின்றது என்றும்’ லண்டன் முதல் பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து உரையாற்றிய ஸ்ரீமதி விஜயலட்சுமி ஆறுமுகசாமி தெரிவித்தார்.
லண்டன் வெம்பிளியில் கீழைத்தேய பரீட்சைச் சபையின் பட்டமளிப்பு விழா
நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய நவஜோதி ஜோகரட்னம் பேசும்போது, ‘ஸ்ரீமதி அம்பிகா தமோதரம் அவர்கள் இலங்கை வானொலியில் மெல்லிசை ஆரம்பிப்பதற்கு முன்னரேஇ இசைப்பேரரசு சண்முகரத்தினம் இசையமைப்பில் தனது இனிமையான குரலால் வானொலியில் பல பாடல்களைப் பாடிப்
பாராட்டுப் பெற்றவர். மலேசியாவின் 6வது உலகத் தமிழ் மகாநாட்டிலும் 1984ம் ஆண்டு நேபாளத்தில் நடைபெற்ற உலக இந்து மகாநாட்டிலும் இலங்கை அரசின் பிரதிநிதியாக கலந்து பாடிச் சிறப்பித்தவர். இத்தகைய இசைப்புலமை மிகுந்த அம்பிகா தாமோதரத்தின் முன்னோடி முயற்சியில் இந்தப் பட்டமளிப்பு விழா லண்டனில் முன்னெடுக்கப்பட்டிருக்கிறது’ என்று குறிப்பிட்டார். முதல் தடவையாக லண்டனில் இசை நடனத் துறைகளில் தகுதி பெற்ற இளம் கலைஞர்களின் இந்த பட்டம் அளிப்பு விழா கீழைத்தேய பரீட்சைச் சபையின் சரித்திரம் முக்கியத்தவம் வாய்ந்த நாளாகும் என்று மேலும் தனது உரையில் குறிப்பிட்டார்.
லண்டன் வெம்பிளியில் கீழைத்தேய பரீட்சைச் சபையின் பட்டமளிப்பு விழா
கீழைத்தேய பரீட்சைச் சபை நடாத்திய இந்தப் பட்டமளிப்பு விழாவில் 34 மாணவ மாணவிகள் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். கடந்த 6 ஆண்டு காலப் பகுதியில் கீழைத்தேய பரீட்சைச்சபையின் தேர்வுகளில் நாலாயிரத்துக்கும்; மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டிருக்கிறார்கள் என்பது
இப்பரீட்சைச் சபையின் தனி முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகின்றது. லண்டன், நோர்வே, ஜேர்மனி, ஹொலன்ட் ஆகிய நாடுகளிலிருந்து பெருந்தொகையான மாணவர்கள் இந்தப்போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார்கள்.
லண்டன் வெம்பிளியில் கீழைத்தேய பரீட்சைச் சபையின் பட்டமளிப்பு விழா
கீழைத்தேய பரீட்சைச் சபையின் முதலாவது பட்டமளிப்பு விழாவில் திரு பத்மநாதன் தம்பதியினர் முக்கிய அதிதிகளாகக் கலந்து சிறப்பித்தனர். திருமதி இந்திராணி பத்மநாதன் பட்டச் சான்றிதற்களை மாணவர்களுக்கு வழங்கிச் சிறப்பித்திருந்தார். இந்தப் பட்டமளிப்பு விழாவில் திரு கலாதரன் தயாரிப்பில் தமிழ்த்தாய் வணக்கமும், ஸ்ரீமதி பகவதி ஜனார்த்தன ஐயர், சங்கீத வித்துவான் ஏ.ஞானசுந்தரம், ஸ்ரீமதி வி.ஆறுமுகசாமி, புல்லாங்குழல் வித்துவான் ரி.ராகவராம், ஸ்ரீமதி செய்மணி சிறிதரன், ஸ்ரீமதி விநோதினி சண்முகநாதன், ஸ்ரீமதி விநோதினி பரதன், ஸ்ரீமதி ஜெயந்தி யோகராஜா ஆகிய இசைநடன ஆசிரியர்களின் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் மிக நேர்த்தியாக இடம்பெற்றிருந்தன. பட்டமளிப்பு விழா நிகழ்ச்சிகளை நவஜோதி ஜோகரட்னம், குந்தகை செல்வநாதன் ஆகியோர் தொகுத்தளித்திருந்தனர்.

லண்டன் வெம்பிளியில் கீழைத்தேய பரீட்சைச் சபையின் பட்டமளிப்பு விழா

லண்டன் வெம்பிளியில் கீழைத்தேய பரீட்சைச் சபையின் பட்டமளிப்பு விழா
navajothybaylon@hotmail.co.uk
.


© காப்புரிமை 2000-2009 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner