இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
அக்டோபர் 2006 இதழ் 82 -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

கடன் தருவோம்!


நீங்கள் கனடாவில் வசிப்பவரா? உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்! விபரங்களுக்கு இங்கே அழுத்துங்கள்

மணமக்கள்!



தமிழர் சரித்திரம்

Amazon.Caசுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்|

In Association with Amazon.ca
தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
Download Tamil Font
இலக்கியம்!
புலம்பெயரிலக்கியம்: ‘குமார்மூர்த்தி கதைகள்’ நூலை முன்வைத்து படைப்பு, படைப்பாளி, படைப்பின் இயங்குதளம் குறித்த விசாரணை

- தேவகாந்தன் -


குமார்மூர்த்தி உயிர் வாழ்ந்த காலத்தில் 1995இல் வெளிவந்த ‘முகம் தேடும் மனிதன்’ சிறுகதைத் தொகுப்பிற்குப் பின்னால், அவர் மறைந்து ஓராண்டின் பிறகு 2002இல் வெளிவந்திருக்கிறது அவரின் ஒட்டுமொத்த தொகுப்பான ‘குமார்மூர்த்தி கதைகள்’ என்கிற இந் நூல். குமார்மூர்த்தியின் படைப்பாளுமை, அவரின் கருத்தியல் கலைஞான இயங்குதளங்கள் குறித்து படைப்பினூடாக ஓர் அலசலை மேற்கொண்டு பார்க்கும் முயற்சியே என்னது.

குமார் மூர்த்திஇத் தொகுப்பு இருபத்தைந்து சிறுகதைகளைக் கொண்டது. ‘முகம் தேடும் மனிதன்’ தொகுப்பிலுள்ள 11 கதைகளுடன், தொகுப்பின் பின்னால் இதழ்களிலோ பத்திரிகைகளிலோ வெளிவந்த இரண்டு கதைகளையும், வெளிவராத 12 கதைகளையும், முற்றுப்பெறாத ‘சிதைவுறும் சித்திரங்கள்’ என்ற நாவலின் பகுதி, சுயவிசாரிப்பான ‘என்னைப்பற்றி’ என்ற தலைப்பிலான கட்டுரைகளையும் கொண்டிருக்கிறது இது. ஆனால் ‘சப்பாத்து’ என்ற குமார்மூர்த்தியின் சிறுகதை இத் தொகுப்பில் இல்லை. அது தற்செயலாகவே தவிர்ந்துகொண்டதா அல்லது தவிர்க்கப்பட்டதா என்று ஒரு அய்யம் என்னில் உண்டு. குமார்மூர்த்தியின் இக் கதையிலிருந்து ஒரு குறும்படத்தின் கதை உட்பட தலைப்புமே கொப்பியடிக்கப்பட்டதாக காஞ்சனா மணியன் திண்ணை இணைய தளத்தில் பிரச்னை கிளப்பிய பிறகு இத் தொகுப்பில் ‘சப்பாத்து’ கதைக்கான இருத்தல் நியாயம் மிக்க வலுவாக இருந்த நிலையிலும் அக் கதை தொகுப்பில் வெளிவராது போனது விசாரிப்பிற்குரியது.

ஆனாலும் அது இங்கே இப்போது என் கவனமில்லை. ‘சப்பாத்து’ உள்ளடங்கிய 26 கதைகளின் விமர்சனத்தையே இங்கே நான் முன்வைக்கிறேன்.

ஒரு ஒட்டுமொத்த தொகுப்பென்பது சிறந்தது, நல்லது, சுமாரானது, மோசமானது என்ற பல்தரத்தினதாக இருப்பது தவிர்க்கமுடியாதது. இத் தொகுப்பும் இந்த விதிக்கு விலக்கானதில்லை. எந்தவொரு படைப்பாளியினதும் படைப்புக்கள் ஒரு ஒட்டுமொத்தப் பார்வைக்கான வாய்ப்புத் தளத்தைக் கொண்டிருக்கவேண்டுமென்பதுதான் இத் தொகுப்பினது இருத்தலுக்கான நியாயமும். இதிலிருந்து குமார்மூர்த்தியென்கிற படைப்பாளி ஈழத்து இலக்கியத்தில் பெறும் இடத்தை வரையறைவு செய்வது ஒரு விமர்சனத் தேவையே.

இத் தொகுப்பின் 26 கதைகளையும் இவ்வாறு வகைப்படுத்தலாம். 1) முதல் எட்டுக் கதைகள் ஈழத்தைத் கதைப் புலமாகக் கொண்டவை. 2) ஒன்பதாவது கதையான ‘எங்கள் ஊரும் பள்ளிக்கூடமும்’ என்ற கதையை தளமாற்றுக் கதையாகக் கொண்டு பார்த்தால் பத்தாம் கதையிலிருந்து இருபத்தோராம் கதைவரை (‘வாழைக் குலை’ என்ற கதை நீங்கலாக) பதினொரு கதைகள் கனடா மண்ணைத் தளமாகக் கொண்டவை. 3) மேலே வரும் நான்கு கதைகளும் மறுபடி ஈழச் சூழலில் சஞ்சாரம் செய்பவை.

இன்னொரு முறையிலும் இத் தொகுப்பை அணுக முடியும். அ) முதல் பதினொரு கதைகள் ‘முகம் தேடும் மனிதன்’ தொகுப்பில் வெளிவந்தவை. ஆ) மீதியில் இரண்டு கதைகள் முதல் தொகுப்பின் பின்னால் வெளிவந்தவை. மற்றையவை வெளிவராத கதைகள். இங்கே ‘சப்பாத்து’ கதையை ஏதோவோர் இடத்தில் பொருத்திக்கொள்ளவேண்டும்.

இது ஒரு அசாதாரணமான சிரமம் கொண்ட வேலை. ஏனெனில் ஒரு தொகுப்பு கொண்டிருக்கவேண்டிய கதைகள் குறித்த விபரமேதும் தொகுப்பில் இல்லை. வெளிவந்த இதழ்கள் பத்திரிகைகளின் பெயர், கால விபரங்கள் அற்றிருக்கிற நிலையில் படைப்பாளியின் வளர்ச்சிப் போக்குக் குறித்தும், கருத்தியல் வளர்ச்சி குறித்தும் கொள்ளவேண்டிய தீர்க்கங்களை எடுப்பதில் சிரமங்கள் தோன்றுகின்றன. காலவாரியாகக் கதைகளை அணுகுவதுதான் ஆய்வுக்கான சிறந்த வழி. அதுவில்லாத பட்சத்தில் ஒரு பொத்தம்பொதுவான அணுகுமுறையே சாத்தியம். அந்தச் சாத்தியம்தான் இங்கே கைக்கொள்ளப்பட்டிருக்கிறது.

‘ஹனிபாவும் இரண்டு எருதுகளும்’, ‘பயணம்’ இரண்டும் முஸ்லீம் மக்களின் இடப்பெயர்ப்புப் பற்றியவை. மீதிக் கதைகள் ஈழத்தில் போராட்டச் சூழலிலுள்ள தமிழர்களினதும் கனடாத் தமிழரினதும் வாழ்நிலைமைகளைத் தளமாய்க்கொண்டவை.

இந்த இருபத்தாறு கதைகளில் பின்வரும் கதைகளை குறிப்பிடத் தகுந்த கதைகளாகக் கொள்ளமுடியும்.

1) முகம் தேடும் மனிதன்.
2) சின்னத் துப்பாக்கி.
3) கேஸ்.
4) சந்திரா.
5) இறுதி அத்தியாயம்.
6) மஞ்சள் குருவி.

1. முகம் தேடும் மனிதன்

ஆயுதப் போராட்டம் தொடங்கிய காலத்தில் அதை ஆதரிக்கிறவராக இருக்கிறார் பிரகாசம். மகன் போராட்டத்தி;ல் இணைகிற காலகட்டத்தில் இயக்க உட்பூசல்கள் காரணமான இயக்கக் கொலைகள் வெகுத்தும், கருத்து முரண்பாடானவர்கள் தாக்கப்படுதலும், துரோகிகள் என்று கொல்லப்படுதலுமான ஒரு சூழ்நிலைமை வளர்ந்திருக்கிறது. வீதிகளில் மனிதர்கள் கொன்றுபோடப்படுகிறார்கள்.

சமூகம், மகன் என்ற அக்கறைகளால் நிம்மதியிழந்து தடுமாறிப்போகிறரர் பிரகாசம். ஒருகாலத்தில் போராட்டத்தை ஆதரித்தமைக்கான அவரது வருத்தம் அதிகரிக்கின்றது. படைப்பு பின்வரும் வரிகளைப் பதிவாக்குகிறது. ‘தன்னைப் பழிவாங்குவதற்குத்தான் வீதியோரங்களில் முகங்கள் வீசியெறியப் பட்டிருப்பதாக துடித்துப் போவார். மரண வேதனையை வாங்கிக்கொண்ட அந்த முகங்களோடு தன்னுடைய முகத்தைப் பொருத்திப் பார்ப்பார். அது பரந்து விரிந்து சூரபத்மனாகி….ஐயோ என்று அலறுவார். சத்தம் தொண்டைக்குள்ளேயே சிக்கிக்கொள்ளும்.’

மனவுலைச்சலின் வெளிப்பாடு சிறப்புற அமைந்திருக்கும் இக் கதை இவ்வாறு முடிவடைகிறது: ‘கூக்குரல்களுக்கும் ஒப்பாரிகளுக்கும் நடுவில் இரத்த விலாறாக அடிக்கப்பட்ட மகனின் உடல் முற்றத்தில் கிடத்தப்பட்டிருந்தது. அதில் மரணத்தின் வேதனை கோடுகளாகி வழிந்திருந்தது. மறுபடியும் மறுபடியும் காரணமில்லாமல் மின்கம்ப மனிதனின் முகமும் நினைவுக்கு வந்து அழிய மறுத்தது. வலுக்கட்டாயமாக மகனின் உண்மையான முகத்தைப் பார்ப்பதற்காக மீண்டும் மீண்டும் உற்றுப் பார்த்துக்கொண்டேயிருந்தார்.

‘இப்போது அவர் சுவரொட்டிகளில் மகனின் முகத்தைத் தேடுகிறார்.’


2) சின்னத் துப்பாக்கி

துரோகியாகக் கணிக்கப்பட்ட ஒருவன் தன்னைக் கொன்று புதைப்பற்கான குழியைத் தானே வெட்டும்படிக்கு நிர்ப்பந்திக்கப்படுகிறான். அக் குழியை வெட்டுகையில் அவனது மனநிலை, மாறிமாறியெழும் நம்பிக்கை நம்பிக்கையீனங்கள், மரணம் குறித்த உயிர்வதை போன்றன சிறப்புற வெளிப்படுத்தப்பட்டுள்ள கதை இது.

இது இவ்வாறு முடியும்: ‘பசியும் தாகமும் களைப்பும் மேலிட மணிவண்ணன் அண்ணாந்து கெஞ்சுபவனைப்போல் அவர்களைப் பார்த்தான். அவன் கண்கள் பஞ்சடைத்ததுபோல் வெளிறி ஓரங்களில் நீர் திரையிட்டது. முழங்கால்களும் கொஞ்சமாக மண்டியிட்டன. கைகள் இரண்டையும் கூப்பி தண்ணீர் கேட்கும் பாவனை காட்டியது வாய். ஏதோ காணக்கூடாத காட்சியைக் கண்டதுபோல் கண்கள் மிரட்சியுடன் சுற்றிச் சுற்றிப் பார்த்தன. அதே நேரத்தில் முரளியின் கையில் இருந்த சின்னத் துப்பாக்கி அந்த வண்ணப்படத்தில் இருந்ததுபோல் அவனுக்கு நேராக உயர்ந்தது. முன்னைப்போல் சற்றுத் தள்ளிக்கொள்ள எத்தனித்தபோது அந்தச் சின்னத் துப்பாக்கி சின்னதாய்ச் சீறியது.

‘குழிக்குள்ளிருந்து ‘அம்மா!’ என்றொரு சின்னக் குரல் குழியைவிட்டு மேலெழும்பி மரத்தின் இலையைத் தொட்டபோது மரங்கள் அதைப் பத்திரப்படுத்திக்கொண்டன.’

3) கேஸ்

சிறுகதையளவில் தோல்வியுறும் கதையெனினும், இது முக்கியத்துவம் பெறுவது அதன் எடுத்துரைப்புத் தன்மை காரணமாகவே. தேடகம் எரிந்த அல்லது எரிக்கப்பட்ட நிகழ்வின் பின்னணியில் உருப்பெறும் கதையிது. குமார்மூர்த்திக்கு தேடகத்தோடு நெருங்கிய தொடர்பு இருந்திருப்பதாகத் தெரிகிறது. எனினும் அதைப் பதிவாக்கும் எண்ணம் மட்டுமே அவர் கொண்டிருந்தாரென்று சொல்லமுடியாது. இது ஒருவகையில் அவரது படைப்பின் நோக்கம் பதிவாக்குதல் அல்லது பிரச்சாரம் என்பதில்லையென்ற நிலைப்பாட்டை அவர் கொண்டிருந்தார் என்பதைச் சொல்லுவதுமாகும்.

இக் கதையில் தேடகம் என்ற பெயர் மட்டுமில்லை, நூலகம் என்ற சொல்கூட வருவதில்லை. கதையின் ஆரம்பத்தில்; ‘அங்கு’ என்றும், பின்னர் ;அந்த இடம்;’ என்றும் மட்டுமே தேடகம் குறிப்பிடப்படுகிறது. ஒரு எழுத்து முயற்சியில் அதன் கலாபூர்வமான தன்மையையே அவர் பிரதானமாகக் கருதியிருந்ததை இது காட்டுகிறது.

4) சந்திரா

கணவன் ராணுவத்தால் கைதுசெய்யப்படுகிறான். திரும்பி வருவானா, எப்போது வருவான் என்ற ஏக்கத்துள் ஆழ்கிறாள் கர்ப்பிணியாயிருக்கும் அவனது மனைவி சந்திரா. நித்திரை, சாப்பாடு வெறுத்து அவளது வதை தொடர்கிறது. அவனது கைதுக்கு தன் விரத அனு~;டானக் குறைகள் காரணமாகலாமோ என மன விசாரிப்பில் இறங்குகிறாள் அவள். செவ்வாய் விரத நாளில் தன் சுத்தம் கெடும்படிக்கு கணவனோடு கொள்ளும் உடலுறவுகளை மனத்துள் கடிகிறாள் அவள். அவன் விரையில் வருவது முடியாததென எண்ணுகையில் அவளுக்கு அழுகை வெடித்துக்கொண்டுவரும். உடனே காணிக்குள் இருக்கும் குச்சுக் கோயிலுக்குச் சென்று கற்பூரமெடுத்து ஏற்றுவாள். அவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில், அன்றுகூட தான் சுத்தமாக இல்லையென்பது நினைவிலெழ துடித்துப் போவாள். அப்போது, ‘சந்திரா’ என்ற கணவனின் குரல் எழுகிறது. அவசரத்தில் திரும்புகிறாள். இடறுப்பட்டு விழும் அவளை மரணம் வாரியெடுக்கிறது.

கதை முடிகிறது. கூட சிறுகதையும் சாகிறது. ஆனாலும் சந்திரா பாத்திரமாய் வாசகன் மனத்தில் நிலைபெறுவது தவறாமலே நிகழ்கிறது.

5) மஞ்சள் குருவி

இறந்து கிடக்கும் ஒரு மஞ்சள் குருவியை வேலைக்குச் செல்லும் ‘நான்’ காண்கிறார். அழகான இறகுகள் கொண்ட அதன் மரணம் அவரை வருத்துகிறது. அதைக் காலடிகளில் மிதிபடாமல் ஒரு புதருக்குள் வைத்துவிட்டு வேலைக்கு பஸ் ஏறும் ‘நான்’, பறவை குறித்த மனவுளைச்சலை தொழிற்சாலையிலும் அடைகிறார்.

மாலையில் வீடு திரும்பும் அவருக்கு மஞ்சள் குருவியின் மரணம் விளைத்திருந்த சோகம், மனைவியின் தரிசனத்திலும், குழந்தையின் ஸ்பரிசிப்பிலும், குளிர் பியரின் மணத்திலும் மெல்லமெல்லமாய் மறைகிறது. கனடாவின் வாழ்வுச் சுழல் ஒரு மனிதனின் இரக்கவுணர்வுகளைக் கொன்று அவனையும் எவ்வாறு ஒரு எந்திரமாய் மாற்றிவிடுகிறது என்பதை எடுத்துரைக்கும் கதையிது.


6) இறுதி அத்தியாயம்

சமூகத்தில் நடைபெறும் தனிமனிதக் கொலைகளையும், மற்றும் கருத்துச் சுதந்திர மறுப்புகளையும் பதிவாக்க நினைக்கும் ஒரு பாடசாலை ஆசிரிய வட்டம் அதனை நிறைவேற்;ற ஒரு ஆசிரியையும் நியமிக்கிறது. பதிவாக்க முயற்சிகள் பூரணப்படவிருக்கிற ஒருநாளில் ஆசிரியை பள்ளி முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருக்கிறாள். பின்னால் வரும் இரண்டு சிறுவர்களைப்பற்றி அவளது எண்ணவோட்டம் எழுகிறது. பள்ளி போபவர்களாக இருப்பார்களோ, பசியால் வாடுபவர்களாகத் தோன்றுகிறார்களே சாப்பிடவில்லையோ, பொழுது சாய்கிற நேரமாகிற இந்த நேரத்தில் ராணுவம் வந்தால் என்ன நேரும் அவர்களுக்கு என்று பலவாறு மனம் பதறுகிறாள். போராட்டச் சூழல் குழந்தைகளின் வாழ்வை எவ்வாறு பாதித்துள்ளது என்பது அவளால் ஜீரணிக்கப்பட முடியாத நிஜமாக முன்னெழுந்து நிற்கிறது. அவர்களை விரைவில் வீடு சென்றுவிடச் சொல்லும் நினைப்போடு நடையைச் சுணக்குகிறாள்.

ஆசிரியன் மேலே கதையை இவ்வாறு நடத்தி முடிப்பான்: ‘அவர்கள் அண்மித்ததும் சினேகமான புன்சிரிப்போடு சொல்லவேண்டியதைச் சொல்ல வாயெடுத்தவள், மிரண்டு போனவளாய் வார்த்தைகள் வெளிவராமலே துவண்டு நிலத்தில் விழுந்தாள். பிடரித் துவாரத்தினூடாக குருதி கூந்தலை நனைத்து மண்ணில் இறங்கியது. கண்கள் அவர்கள் போகும் திசையைப் பார்க்க எத்தனித்தது. ஆனால் பார்க்க முடியாமல் இருள் முழுவதுமாக அவளை முந்திக்கொண்டது.’

மொத்தத் தமிழ்ப் பரப்பிலும் வெளியான கதைகளில் இன்றும் என்னைப் பிசைந்துகொண்டிருக்கும் ஒரு சிறுகதை மலே~pய எழுத்தாளர் இளங்குமரன் எழுதிய ‘பாக்கி’ சிறுகதை. அது செய்த பாதிப்புப்போல் தமிழ்ச் சிறுகதைகளில் ஒரு அனுபவத்தை நான் அடைந்ததில்லையென்று துணிந்து சொல்லமுடியும். அந்தக் கதைக்கு நிகரானதாகவில்லையெனினும், பின்னாலேயாவது வரக்கூடிய வலு கொண்டது குமார்மூரர்த்தியின் ‘இறுதி அத்தியாயம்’.

தன்னளவில் சிறுகதையாய்க் கட்டமைந்து, முடிவுறும் கணத்தில் ஒரு பாதிப்பினை நிகழ்த்திய இக் கதையை இவரின் சிறந்த சிறுகதையாக மட்டுமன்றி, ஈழ இலக்கியப் பரப்பினுள்ளும் சிறந்த சிறுகதைகளுள் ஒன்றாகக் குறிப்பிட எனக்குத் தயக்கமில்லை.

ஒரு படைப்பு பன்முக வாசிப்பினைக் கோரி நிற்பதுபோல், பன்முறை வாசிப்பும் ஒரு சிறந்த படைப்பைக் கண்டடைய வைக்கிறது. இம்முறையான வாசிப்பின் மூலமே உன்னதமான படைப்பொன்று இனங்காணப்பெறுகிறது என்று சொன்னாலும் தப்பில்லை. இத்தொகுதியின் கதைகளையும் பலமுறை நான் வாசித்தேன். சிலவற்றை மூன்றுக்கு மேற்பட்ட தடவைகள்கூட. ரசிப்பின் சுகங்களுக்கூடாய் விமர்சன நோக்கலை எறிகிற பொழுதில்கூட இக்கதையைச் சிறந்த ஈழத்துக் கதைகளுள் ஒன்றாக நான் நிச்சயமாய்ச் சொல்வேன்.

‘உச்சகட்டப் படைப்பாக்க காலம் என்ற ஒன்று குமார் மூர்த்திக்கு நேராமல் மரணம் இடை புகுந்துவிட்டது துரதிர்ட்டவசமானது’ என்ற சி.மோகனின் முன்னுரை வாசகத்தினோடு எனக்கு நிறைந்த உடன்பாடு உண்டு.

சுட்டவேண்டிய இன்னுமொரு முக்கியமான வி~யம், அவரது சுயவிசாரிப்புப் பகுதியிலுள்ள ஒரு கருத்து. ஒரு இடத்தில் அவர் சொல்கிறார், ‘சிறியவர் பெரியவர் என்ற பேதமில்லாமல் மனித சமுதாயம் வன்முறையைநோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது என்பது மட்டும் புரிகிறது’ என்று.

தீவிரவாதமென்ற சொல்லே இன்று ஆதிக்க அரசுகளால் கொச்சைப் படுத்தப்பட்டிருக்கிறது. உயர்ந்துநின்ற இரட்டை அதிகாரக் கோபுரங்களின் தகர்ப்போடு தீவிரவாதம் பயங்கரவாதமாகவும் உருப்படுத்தப்பட்டு விட்டது. ஏகாதிபத்திய, இனவறுப்பு அரசுகள் இன்று தங்கள் முகமூடிகளாக எதிர்ப்பியக்கங்கள்மீதான இத் தூற்றுதலையே கைக்கொள்கின்றன என்ற உண்மை வரலாற்றுரீதியிலான வன்முறைகளைப் புரிந்துகொள்ள மிக முக்கியமானது. அந்த வகையில் குமார்மூர்த்தியின் புரிதல், ‘சிறியவர் பெரியவர் என்ற பேதமில்லாமல் மனித சமுதாயத்தை அதிகார வர்க்கங்கள் வன்முறையைநோக்கி நகர்த்திக்கொண்டிருக்கின்றன’ என்று இருந்திருக்கவேண்டுமென நான் நினைக்கிறேன்.

இது அவரது சிறுகதைகளில் தவிர்கமுடியாத சில கருத்து இடறல்பாடுகளை ஏற்படுத்தியுள்ளமையை இத் தொகுப்பில் என்னால் அவதானிக்க முடிந்திருந்தது. இது ஒரு படைப்பின் அடியாதாரமான விடயமல்லவெனினும், முக்கியமான அம்சம். அந்த நேரத்திலும் ‘இறுதி அத்தியாயம்’ தன் கலாபூர்வம் காரணமாய் நிமிர்ந்தே நிற்கும்.

(கடந்த யூலை 30 ஞாயிற்றுக் கிழமை மாலை தமிழர் வகைதுறை வள அமைப்பினரால் முன்னெடுக்கப்பட்ட குமார்மூர்த்தி நினைவுக் கூடலில் தேவகாந்தன் நிகழ்த்திய பேச்சின் உரை வடிவம் இது.)

எழுத்தாளர் தேவகாந்தன்
bdevakanthan@yahoo.com


© காப்புரிமை 2000-2006 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner