இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google
 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
மார்ச் 2010  இதழ் 123  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!



தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
அறிவித்தல் / அரசியல்!
மானிட நேசன் 'தோழர்" சுரேந்திரன் காலமானார்

- வி. ரி. இளங்கோவன் (பிரான்ஸ்)

பிரான்ஸ் நாட்டில் வாழும் இலங்கைத் தமிழ் மக்களால் 'தோழர்" என வாஞ்சையோடு அழைக்கப்பட்ட மானிட நேசன், தோழர் ச. சுரேந்திரன், பாரிஸில் கடந்த செவ்வாய்க் கிழமை காலை (02 - 03 - 2010) காலமானார்பிரான்ஸ் நாட்டில் வாழும் இலங்கைத் தமிழ் மக்களால் 'தோழர்" என வாஞ்சையோடு அழைக்கப்பட்ட மானிட நேசன், தோழர் ச. சுரேந்திரன், பாரிஸில் கடந்த செவ்வாய்க் கிழமை காலை (02 - 03 - 2010) காலமானார். பாரிஸில் பல்துறை சார்ந்த அதிக நண்பர்களையும், ஐரோப்பாவெங்கும் தமிழ் வானொலி, தொலைக்காட்சி நேயர்களின் அபிமானத்தையும் பெற்ற தோழர் சுரேந்திரன் இலங்கையில் வட்டுக்கோட்டை - சித்தங்கேணியைச் சேர்ந்தவர். யாழ்ப்பாணக் கல்லூரியில் உயர்கல்வி கற்றபின் தமிழகம்; சென்று பொறியியல் துறையில் உயர்கல்வி மேற்கொண்டார். சில மாதங்களின் பின் நாடுதிரும்பி காரைநகரில் இயங்கிய 'சிநோர்" நிறுவனத்தில் கடமையாற்றினார். அக்காலத்தில் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டார். அன்றைய கம்யூனிஸ்ட் கட்சியின் (மொஸ்கோ சார்பு) வடபிரதேசத் தலைவர்களான வி. பொன்னம்பலம், எஸ். விஜயானந்தன் ஆகியோருடன் நெருங்கிப் பழகி தொழிற்சங்க நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுழைத்தார்.

நாட்டுச் சூழ்நிலை காரணமாக இடம்பெயர்ந்து 1981-ஆம் ஆண்டு பாரிஸ் வந்துசேர்ந்தார். இங்கு தமிழ் மக்களை ஒன்றிணைத்து 'தமிழர் பேரவையை" ஆரம்பிக்க நண்பர்களுடன் முன்னின்று பாடுபட்டார். பின்னர் தமிழர் பேரவை அரசியல் காரணங்களால் பிளவுற்ற போதிலும் தோழர் சுரேந்திரன் முற்போக்குக் கொள்கைகளிலிருந்து வழுவிடவில்லை.

காலஞ்சென்ற பிரபல எழுத்தாளர் எஸ். அகஸ்தியர், வி. ரி. இளங்கோவன் ஆகியோருடன் தோழர் சுரேந்திரன்.

சிறந்த மேடைப் பேச்சாளரான தோழர் சுரேந்திரன் அங்கு நாட்டிலும், இங்கு ஐரோப்பாவிலும் பல மேடைகளில் முழங்கியவர். அரசியல், கலை இலக்கிய மேடைகளில் அவரது குரல் தொடர்ந்து ஒலித்து வந்தது. தாயகத்தில் எழுத்தாளர்கள் டொமினிக் ஜீவா, கே. டானியல், நாவேந்தன் ஆகியோரை அதிகம் நேசித்தவர். அவர்களது படைப்புகள் குறித்து இங்கு இளந்தலைமுறையினர்க்கு எடுத்துக்கூறி வந்தவர்.
தமிழ், சிங்கள மக்கள் புரிந்துணர்வோடு ஐக்கியப்பட்டு செயற்படுவதின் மூலமே ஒரு சோசலிச அரசை நிறுவமுடியுமென்பதில் நம்பிக்கை கொண்டவர்.

ஐரோப்பாவில் முதன்முதலில் ஆரம்பிக்கப்பட்ட இருபத்திநான்குமணிநேரத் தொலைக்காட்சியான 'ரி. ஆர். ரி." தமிழ் ஒளி தொலைக்காட்சியின் நிகழ்ச்சி முகாமையாளராகக் கடமையாற்றினார். கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்புவரை 'ரி. ஆர். ரி." தமிழ் ஒலி வானொலியில் பல நிகழ்ச்சிகளைத் தொகுத்தளித்து வந்தார்.

கண் பார்வை குன்றிவந்த நிலையில் தமிழகம் சென்று சிகிச்சை பெற்று வந்தார்.  நண்பர்களை மிகவும் நேசித்தவர். எல்லோருடனும் உள்ளம் திறந்து பழகும் பண்பினர். நண்பர் குழாம் சூழவிருப்பதில் ஆனந்தம் கொள்வதுடன், நண்பர்களுக்கு உதவுவதிலும் முன்னிற்பவர்;.
சிறந்த கலைஞனாகவும் விளங்கியவர். பாரிஸில் தயாரிக்கப்பட்ட தமிழ்த் திரைப்படங்கள், குறும்படங்கள் சிலவற்றில் பங்களிப்புச் செய்தவர். வானொலி, தொலைக்காட்சி நாடகங்களிலும் தனது நடிப்பாற்றலால் புகழீட்டியவர். ஓரளவு இசை ஞானமும், மிருதங்க வாசிப்பும் கைவரப்பெற்றவர். இவரது மனைவி ஒரு சங்கீதப் பட்டதாரி ஆசிரியராவார்.

பாரிஸில் 1991ஆம் ஆண்டு முதல் எனது நூல் வெளியீடுகள் மற்றும் விழாக்கள் பலவற்றிலும் தோழர் சுரேந்திரன் உரையாற்றத் தவறுவதில்லை.  தனது கவிதைகளையும், வானொலி நிகழ்ச்சிக் குறிப்புகள் சிலவற்றையும் தொகுத்து நூல்களாக வெளியிடுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகச் சொல்லியிருந்தார்.
தோழா... நண்பா... என உரத்த குரலில் யாவரையும் புன்னகை தவழ அன்போடு அழைத்து அளவளாவி மகிழ்ந்த தோழர் சுரேந்திரனை இனி எப்போது காண்பது..? சிறந்த மேடைப் பேச்சாளனாக, முற்போக்குவாதியாக, கலைஞனாக, கவிஞனாகத் திகழ்ந்த தோழர் சுரேந்திரனின் மறைவு முற்போக்கு சக்திகளுக்கும், நண்பர்களுக்கும் பேரிழப்பாகும்.

vtelangovan@yahoo.fr


 
aibanner

 © காப்புரிமை 2000-2010  Pathivukal.COM. Maintained By: Infowhiz Systems Inc.. Pathivukal is a member of the National Ethnic Press and Media Council Of Canada .
முகப்பு||
Disclaimer|வ.ந,கிரிதரன்