இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
ஜனவரி 2007 இதழ் 85 -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

கடன் தருவோம்!


நீங்கள் கனடாவில் வசிப்பவரா? உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்! விபரங்களுக்கு இங்கே அழுத்துங்கள்

மணமக்கள்!



தமிழர் சரித்திரம்

Amazon.Caசுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்|

In Association with Amazon.ca
தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
Download Tamil Font
அரசியல்!
நினைவு தினம் டிசம்பர் 24.
'மக்கள் திலகம்' எம்ஜிஆர்!

மக்கள் திலகம் எம்ஜிஆர்மக்கள் திலகம், புரட்சித் தலைவர், பொன்மனச் செம்மல், புரட்சி நடிகர் என்றெல்லாம் பல பட்டப்பெயர்களுக்குச் சொந்தக்காரர் எம்.ஜி.ஆர். அவரது மறைவு தினம் டிசம்பர் 24. பல்வேறு பட்ட எதிர்ப்புகளையெல்லாம் துணிந்து எதிர்த்து நின்று வாழ்க்கையில் வெற்றிக் கொடி நாட்டியவர் எம்ஜீஆர். அவரது வாழ்க்கை நம்பிக்கையிழந்து, சோர்ந்து கிடக்கும் உள்ளங்களுக்கெல்லாம் உற்சாகத்தை, நம்பிக்கையினைக் கொடுக்குமொரு நூல். அவரது திரைப்படப் பாடல்களும், படங்களும் மீண்டும் மீண்டும் வாழ்க்கைக்கு நம்பிக்கையூட்டக் கூடிய தத்துவங்களையே வலியுறுத்தின. அதனால்தான் அவை இன்றும் கேட்கும்பொழுது சோர்ந்து துவண்டு கிடக்கும் உள்ளங்களுக்கு ஒருவித உத்வேகத்தினை, உற்சாகத்தினைக் கொடுக்கின்றன. கூத்தாடியென்றார்கள். மலையாளியென்றார்கள் . ஆரம்பகாலத்தில் எத்தனையோ பல வருடங்கள் சென்னையில் அவரது கால்களே படாத இடமில்லை என்னுமளவுக்கு அலைந்து திரிய வைத்தது காலம். தயாரிப்பாளர்களெல்லாரும் அவரை ஆரம்பத்தில் பல்வேறு வழிகளில் ஏளனம் செய்து ஒதுக்கி வைத்தார்கள். துப்பாக்கிக் குண்டுகள் உடலைப் பதம் பார்த்தன. வாழ்வில் அவர் எதிர்கொண்ட சோதனைகள் கொஞ்சமல்ல. இளமையில் வறுமை அவரை வாட்டியது. துயரங்கள் ஒன்றன்மேல் ஒன்றாக அவரை ஆட்கொண்டன. முதல் மனைவி வறுமை காரணமாகக் கேரளாவில் இறந்த பொழுது அவர் அங்கு செல்வதற்கு முன்னரே அங்குள்ள வழக்கப்படி மனைவியின் இறுதிக் கிரியைகள் முடிந்து விட்டன. வாழ்வில் அனைத்துச் சவால்களையும் உறுதியாக எதிர்கொண்டு வெற்றிக் கொடி நாட்டியவர் எம்ஜிஆர். இருந்தவரையில் சினிமா, அரசியல் இரண்டிலுமே தனிக்காட்டு இராஜாவாக இருந்து மறைந்தவர் எம்ஜிஆர். இறந்து இருபதாண்டுகளைக் கடந்த நிலையிலும் அவரது ஆளுமை தமிழ் சினிமா மற்றும் அரசியல் ஆகியவற்றைப் பாதிப்பது ஆச்சரியமானதொன்றல்ல.

சத்துணவுத் திட்டம்: எம்ஜிஆர் குழந்தைகளுடன்

இளமையில் முறையான கல்வி கற்க முடியாத நிலை, வறுமை ஆகியவற்றின் பாதிப்பு அவர் மனதை எப்போதுமே வாட்டி வந்தது. முதலமைச்சராக வந்ததும் இதன் காரணமாகவே சத்துணவுத்திட்டம் மற்றும் பல்வேறு மாணவர் நலத்திட்டங்களைக் கொண்டு வந்தார். ஆரம்பத்தில் இவற்றை அவர் கொண்டு வந்தபொழுது பலர் அவை தமிழ்நாட்டின் திறைசேரியினைக் காலியாக்கி விடுமென்று குரல்கொடுத்தார்கள். அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் அத்திட்டத்தை உறுதியாக நிறைவேற்றினார். இலட்சக்கணக்கான மாணவர்கள்
பாடசாலை செல்வதை ஊக்கி உற்சாகப்படுத்தின அத்திட்டங்கள். மக்கள் திலகம் எம்ஜிஆர்இறந்தும் தன் சொத்துக்களை குருடான, செவிடான மாணவ மணிகளுக்கு உதவும்பொருட்டு வழிவகைகள் செய்தவரிவர். இன்றும் அவரது திட்டங்களின் பயன்களை இலட்சக்கணக்கான தமிழகக் குழந்தைகள் அனுபவித்து வருகின்றார்கள். உலகத் தமிழர்களின் உள்ளங்களையெல்லாம் இவரைப் போல் கொள்ளை கொண்ட ஒருவர் அண்மைக்காலத்தில் பிறந்ததில்லையென்று நிச்சயம் துணிந்து கூறலாம். ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் எம்ஜீஆருக்குத் தனியிடமுண்டு. அவரது நினைவு நாள் டிசம்பர் 24. அவரைப் பற்றிய விக்கிபீடியா கட்டுரையில் அவரது வாழ்வினை வெளிப்படுத்தும் பல்வேறு புகைப்படங்களுள்ளன. அவரது ஞாபகார்த்தமாகப் பதிவுகள் வாசகர்களுக்கு அக்கட்டுரையின் இணைப்பினைத் தருகின்றோமிங்கு...உள்ளே.

அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்....

The Man from Marathur and Malai Nadu
-
Sachi Sri Kantha, 1999

The Man from Marathur and Malai Nadu Eighty two years ago, a baby boy was born to a migrant couple, Gopala Menon and Sathyabama, in a ‘line-room’ of a tea estate in Kandy. Later, this baby boy would grow into a leader with the name Maruthur Gopalan Ramachandran (popularly adored by Tamils all over the world with the acronym MGR).Maruthur was the ancestral village in the Kerala state from where his parents hailed from. Many have ridiculed the uncertainty of his birth date, though MGR had used 17 January 1917 in his personal documents. One should sympathise with MGR on this matter because he was born to an Indian immigrant family in a tea plantation in Ceylon....Read More

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஒருவ்ரலாறு.....உள்ளே

எம்ஜிஆர் திரைப்படக் காட்சிகள் சில.....

'நாடோடி மன்னன்' விளமபரம்

'ஆயிரத்தில் ஒருவன்' விளம்பரம்..'படகோட்டி' திரைப்படக் காட்சி

'அடிமைப் பெண்', 'ஆயிரத்தில் ஒருவன்'  விளமபரம்


© காப்புரிமை 2000-2006 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner