இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
மே 2009 இதழ் 113  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

கடன் தருவோம்!


நீங்கள் கனடாவில் வசிப்பவரா? உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்! விபரங்களுக்கு இங்கே அழுத்துங்கள்

மணமக்கள்!



தமிழர் சரித்திரம்

Amazon.Caசுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்|

In Association with Amazon.ca
தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
Download Tamil Font
இலக்கியம்: அனுபவம்1
கிழக்கு தீமோர்

நடேசன்


விடுமுறைக்கு கிழக்கு தீமோருக்கு செல்வதானால் ஆயள் காப்புறுதி இப்பொழுது செய்ய முடியாது. வந்த பின்பு தொடர்பு கொள்ளுங்கள் எனக் கூறிவிட்டார் எனது ஆயள்காப்புறுதி முகவர். நான் காரணம் கேட்டபோது அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சு கிழக்கு தீமோர் உல்லாசப் பிரயாணிகள் தவிர்க்க வேண்டிய இடமாக அறிவித்துள்ளது எனப் பதில் வந்தது.

ஐந்து வருடங்களாக திட்டமிட்ட இந்த பிரயாணத்தை தொடர முடிவு செய்து டார்வினுக்கு சென்றேன். அங்கிருந்து ஒன்றரை மணிநேர பிரயாணம் என்பதால் சிறிய விமானத்தில் ஏறி ஒரு மணிநேரம் பறந்த பின்பு தொழில் நுட்பக் கோளாறு என அறிவித்து விட்டு மீண்டும் அந்த விமானம் டார்வினை அடைந்தது.

கிழக்கு தீமோர்இரு மணி நேரமாக டார்வின் ஏர்போட்டில் இருந்துகொண்டு மரணம் குறித்து யோசித்தேன். பல விதமாக பூமியில் மரணங்கள் நிகழ்ந்தாலும் எதில் குறைந்த வலியில் மரணம் உண்டாகும் என சிறிய ஆராய்ச்சியில் ஈடுபட்டபோது சயனைட்டுதான் என முடிவு
கண்டபோது என் முதுகில் தட்டிக்கொண்டேன். இதை விட ஆகாயத்தில் ஏற்படும் மரணத்தின் தன்மையை மனதிலே நினைத்துக் கொண்டே இருந்த போது மீண்டும் டெல்லி செல்வதற்கு அழைக்கப்பட்டேன். வேறு விமானத்தில் ஏறினேன்.

இம்முறை விமானம் திரும்பாமல் நேராக பறந்தது.

கிழக்கு தீமோர் மேலாக விமானம் பறந்த போது மடிப்பு மடிப்பாக இருந்த பச்சை மலைகள் இலங்கையின் மத்திய மலைப் பிரதேசத்தை நினைவு படுத்தியது.. சிறிய விமான நிலயம் அக்காலத்து பலாலியை நினைவு படுத்தியது.

விமான நிலையத்தில் இருந்து நகரத்தின் உள்ளே செல்லும் போது கண்ணுக்கு தென்பட்டது சாந்தா குருஸ் செமற்றி
இந்தோனேசியப் படைகளால் நிராயுத பாணியான கிழக்கு தீமோர் மக்கள் சுட்டு கொலை செய்யப்பட்ட இடம்.. வாகனத்தை விட்டு இறங்கி பத்து நிமிடம் என்னை அறியாமல் அங்கு நின்று விட்டேன்

இந்தோனேசியா கிழக்கு தீமோரை விட்டுச் சென்றாலும் இந்தோனேசியாவின் மொழியைத்தான் பேசுகிறார்கள். .தொலைகாட்சி, வங்கி போன்றவைக்கு இந்தோனேசியாவின் தொடர்பு தொடர்கிறது..கறுவா எண்ணை இந்தோனிசிய சிகரட்டின் மணம் டெல்லியின் உப்பு காற்றில் கலந்துள்ளது. நான் சந்தித்த கிழக்கு தீமோர் வாசிகளிடம் இந்தோனேசியா காலத்தில் ஏற்பட்ட இழப்புகளால் கசப்புகள் இருந்தாலும் வெறுப்பற்ற தன்மையும் புவியியல் அரசியல் பொருளாதார நிதர்சனத்தை ஏற்றுக் கொண்டு
செல்லும் தன்மை எனக்கு பிடித்தது. சாதாரணமானவர்களிடமும் அரசாங்க உயர் அதிகாரிகளிடமும் இப்படியான தாராள
மனப்பான்மையைக் காண முடிந்தது. ஏனது நண்பன் அமைச்சரின் ஆலோசகராக இருந்ததால் பல உயர் அதிகாரிகள் பலரை குறுகிய
காலத்தில் சந்திக்க முடிந்தது.

கிழக்கு தீமோர்எனது கிழக்கு தீமோர் நண்பனது குடும்பத்துடன் தங்கி இருந்ததால் அவனது உறவினர்கள் வீடுகளுக்கு மட்டுமல்ல இறந்த உறவினர்கiளைக்கூட சென்று பார்த்தேன். ஐப்பானியர்கள் இரண்டாம் உலக யுத்த காலத்தில் கிழக்கு தீமோரை தம்வசம் வைத்திருந்த பூட்டன், போர்த்துக்கேயரின் காலத்தில் இறந்த தாத்தா இந்தோனேசியர காலத்தில் இறந்த பெரியப்பா என குடும்பத்துடன் சென்று பிரார்த்தித்தார்கள்.

உலகம் பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் இந்தக் காலத்தில் பத்து வீதத்திற்கு மேல் பொருளாதார வளர்ச்சியைக் காட்டும்
ஒரே நாடு கிழக்கு தீமோராகத்தான் இருக்கும.;. டெல்லி துறை முகத்தில் தரித்து நின்ற கொள்கல கப்பல்கள் அதற்கு சாட்சியாகும். சுpறு குழந்தையின் விரைவான வளரச்;சிக்கு ஒப்பானது.

நானுறு வருடங்களாக காலனி ஆதிக்கம் செய்ந்த போர்க்துக்கேயர் கிழக்கு தீமொரில் சந்தன மரங்களையும் கோப்பியையும் பெறும்
பிரதேசமாக பார்த்தார்கள். எந்த வித அபிவிருத்தியிலும் ஈடுபடவில்லை. இந்தோனேசியாவை எதிரப்;பவர்கள் கூட இருபத்தி ஐந்து வருடகாலத்தில் ஏற்பட்ட வளரச்;சியை ஏற்றுக் கொள்வார்கள். இந்தோனேசிய படைவீரர்கள் மேற்கு தீமோரை நோக்கி பின்வாங்கும் போது ஒரு கிழக்கு தீமோரின் ஒரு நகரத்தை எரித்து விட்டுச் சென்றார்கள்.

இந்த எரிந்த பாடசாலைகள் சந்தைக் கட்டிடங்கள் அரசாங்க அலுவலகங்கள் மற்றும் வீடுகள் கரிபடிந்த நிலையில் குட்டி சுவர்களாக காட்சியளித்தன. ஐந்து வருடங்களாக பெய்த மழைத் தண்ணீரால்கூட கழுவ முடியவில்லை. வரலாற்றில் பலகாலங்களில் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள். இந்தோனேசிய ஆக்கிரமிப்பு காலத்தில் சனத்தொகையில் கால்பங்கை இழந்தவர்கள். இதன் முன்பு இரண்டாம் உலகப்போரில் ஆஸ்திரேலியப் படைவீரர்களுக்கு உதவியபோது ஐப்பானிய படையினரால் ஐம்பதுனாயிரத்துக்கு மேற்பட்ட கிழக்கு தீமோர்
மக்கள் கொல்லப்பட்டார்கள். ஆக்கிரமிப்பாளர்கள் மேற்கு நாட்டவர்களாக இருந்தாலும் சரி ஆசியராக இருந்தாலும் கொலை அவர்களது நடவடிக்கையில் வேறுபாடற்றவர்கள் என்பதற்கு கிழக்கு தீமோர் ஒரு உதாரணமாகும்

uthayam@optusnet.com.au


© காப்புரிமை 2000-2009 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner