இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
ஜனவரி 2007 இதழ் 85 -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

கடன் தருவோம்!


நீங்கள் கனடாவில் வசிப்பவரா? உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்! விபரங்களுக்கு இங்கே அழுத்துங்கள்

மணமக்கள்!



தமிழர் சரித்திரம்

Amazon.Caசுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்|

In Association with Amazon.ca
தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
Download Tamil Font
நிகழ்வுகள்!
சிங்கப்பூர் கணையாழி விருது-2006!

- அகிலா (சிங்கப்பூர்) -

விருது
இரண்டாயிரமாம் ஆண்டில் கவிஞர்களை இணைத்துக்கொண்டு பிச்சினிக்காடு இளங்கோ கம்போங் கிளாம் சமூக மன்றத்துடன் இணைந்து தொடங்கியது "கடற்கரைச்சாலைக் கவிமாலை" என்ற அமைப்பு. அதன் சார்பாக இரண்டாயிரத்து மூன்றாம் ஆண்டிலிருந்து "கவிமாலை இலக்கியக் கணையாழி விருது" சிங்கப்பூரின் மூத்த தமிழ் எழுத்தாளர் ஒருவருக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை, வானொலியின் முன்னாள் மூத்த தயாரிப்பாளரும் இலக்கியப் படைப்பாளருமான திரு பி.கிருஷ்ணன், வெண்பாச்சிற்பி இக்குவனம், தொலைக்காட்சி முன்னாள் செய்தி ஆசிரியர்;ஆனந்தவிகடனின் முன்னாள் துணை ஆசிரியர், எழுத்தாளர் ஜே.எம்.சாலி ஆகியோருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

இவ்வாண்டு ஜாலான் புசார் சமூகமன்றதின் இந்திய நற்பணிச்செயற்குழுவுடன் இணைந்து, சமூகமன்ற மேலாண்மைக்குழு உறுப்பினரும், சிங்கப்பூர் நாணயமாற்று வணிகர்சங்கத்தின் தலைவருமான புதியநிலா சிறப்பாசிரியர் திரு ஜஹாங்கீர் தலைமையில் கணையாழி விருதுவிழா நடைபெற்றது. நவம்பர் 26,2006 நடைபெற்ற கவிமாலை நிகழ்ச்சியில் சிங்கப்பூர் சித்தார்த்தன் எனும் புனைபெயரில் இலகுதமிழில் இனிக்கும் இலக்கணம் எழுதி தமிழக அரசின் விருதைப்பெற்ற தமிழாசிரியர் பா. கேசவன் அவர்களுக்கு "கவிமாலை இலக்கியக் கணையாழி விருது 2006" வழங்கப்பட்டது.

நிகழ்ச்சி மாலை சரியாக 7 மணிக்கு கவிஞர் க. முத்துக்குமரன் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாட தொடங்கியது. நிகழ்ச்சியில் முதல் அங்கமாக சிங்கப்பூர் கவிஞர்,மாதவி இலக்கியமன்றத்தின் தலைவர் மறைந்த மலர்மாணிக்கம் அவர்களுக்கும் தமிழகத்தில் மறைந்த மூத்த எழுத்தாளர் வல்லிக்கண்ணன் அவர்களுக்கும் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. சிங்கப்பூர் இந்தியர் வர்த்தகம் மற்றும் தொழிற்சபையின் தலைவர் திரு M.ராஜாராம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். இந்தியாவின் சாகித்ய அகாடமியின் தமிழ்மாநிலக்குழுத்தலைவர் ,விமர்சகர், கவிஞர், பேராசிரியர் முனைவர் பாலா கலந்துகொண்டு சிறப்புரையில் "பழமையைத்தொலைத்து தொன்மையை, பண்பாட்டைக் காத்து இலக்கியம் படைக்கவேண்டும்.இலக்கயம் அவரவருடைய அனுபவ மொழியில் அமையட்டும்.யாரையும் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை என வழிகாட்டினார்".அருவிபோல் அமைந்த அவருடைய பேச்சு சிங்கப்பூர் இலக்கிய வரலாற்றில் புதிய அனுபவமாக கவிஞர்களுக்கு அமைந்தது. சுமந்து வந்து நகைச்சுவையை கொட்டாமல் இயல்பாக பேசுகிறபோக்கில் எள்ளல்தன்மையோடு கருத்தை எடுத்துவைப்பதைக்கேட்டு கவிஞர்கள் மகிழ்ந்தார்கள்.எது கவிதை என்பதற்கும் எளியமுறையில் விளக்கம் அளித்தது பயனுடையதாக இருந்தது. கவிஞர்களின் பல கேள்விகளுக்கு நல்ல பதில்களை எளிமையாகக்கூறினார் அடுத்தநாள் சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் நடைபெற்ற சந்திப்புக்கூட்டத்தில்.

தலித்தியம்,பெண்ணியம் போன்ற கேள்விகளுக்கு பதில்கூறுகையில்" அங்கே அரசியல் இருக்கிறதே ஒழிய இலக்கியம் இல்லை. இலக்கியம் என்றால் அது இலக்கியம் அவ்வளவுதான்.அது இலக்கியமாக விளங்கி கருத்தை விளக்காமல் அரசியல் பேசக்கூடாது.அரசியலைப்பேசி அதை இலக்கியம் என்கிறார்கள். அதுதான் குறை. இலக்கியத்திற்கு அழகியல் அவசியம்.குறிப்பாக கவிதைக்கு அது மிக அவசியம்.அழகியலைத்தொலைத்திவிட்டு கவிதை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது" வானம்பாடி கவிஞர்களுள் அவரும் ஒருவர் என்பதைத் தெரிந்துகொள்ளமுடிந்தது.

அன்றைய நிகழ்ச்சி புதுமையாகவும் சிறப்பாகவும் நடைபெற்றது. கவிஞர் சேவகன் தலைமையில் ஐம்பூதங்கள் பற்றிய கவிமாலை நடைபெற்றது. நிகழ்ச்சியின் சிறப்பு அங்கமாக பெண்களே கலந்துகொள்ளும் கவியரங்கம் கவிநிலா மலர்விழி இளங்கோவன் தலைமையில் நடைபெற்றது." ஏழிசையாய் இனிக்கும் இல்லறம்" என்ற தலைப்பில் கவிஞர்கள் மாதங்கி, இன்பா, கலையரசிகுமார், இராஜேஷ்வரி ராமச்சந்திரன்,சரண்யா சரவணன், ரேணுகா விசுவலிங்கம் ஆகியோர் கவிதைபாடினார்கள். தொடர்ந்து வெண்பாக்கவிஞர் இளங்கோவன் வடிவமைத்து வழங்கிய இசை நாட்டியத்தில் இலக்கியம் இடம்பெற்றது. கவிஞர் இக்பால் எழுதிய மரபுக்கவிதை, கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ, பாலு மணிமாறன் எழுதிய புதுக்கவிதைகள் ஆகிவவற்றிற்கு நடனம் வடிவமைத்து வழங்கியது நவீனமாக இருந்தது.

கவிஞர்களே நடத்தும் இக்கவிமாலை நிகழ்ச்சி இரண்டாயிரமாம் ஆண்டிலிருந்து மாதந்தோறும் கடைசிச் சனிக்ககிழமை மாலை ஆறுமணிக்கு தொடங்குகிறது.. கவிஞர்கள் குடும்பத்துடன் கலந்துகொள்ளும் இந்நிகழ்ச்சி இதுவரை தொய்வின்றி நடைபெற்று வருகிறது. இவர்கள் அருகிலிருக்கும் தீவுகளுக்குக் கவிதைப்பயணம் மூன்றுமுறை சென்று கவிமாலை நடத்தியிருக்கிறார்கள். கிழக்குக் கடற்கரைச்சாலையில் கவிராத்திரி நடத்தியிருக்கிறார்கள்.மாதந்தோறும் கவிதைப்போட்டி நடத்தி மூன்று பரிசும் வழங்கிவருகிறார்கள். கவிஞர்களே முன்வந்து பரிசும் வழங்குகிறார்கள்.கவிதைக்காக கவிஞர்களே ஒன்றுகூடி சிங்கப்பூரில் நடத்தும் நிகழ்ச்சிதான் கவிமாலை நிகழ்ச்சி. உடன்படுசொல்லாக செயல்படுவது கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ.அங்கே கவிதை வளர்கிறது, கவிஞர்களும் வளர்கிறார்கள், தமிழ் வாழ்கிறது.

அனுப்பியவர்:
pichinikkaduelango@yahoo.com

© காப்புரிமை 2000-2006 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner