இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google
 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
ஜூலை 2010  இதழ் 127  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!



தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
நிகழ்வுகள்!
கனடாவில் பாரதி கலைக் கோயிலின் திறன்காணல் நிகழ்வு – 2010  - மாலினி அரவிந்தன் -
கனடாவில் பாரதி கலைக் கோயிலின் திறன்காணல் நிகழ்வு – 2010

பாரதி கலைக் கோயிலின் திறன் காணல் நிகழ்வு – 2010 பலமணவ செல்வங்கள் கலந்து கொண்டு தங்கள் பல்வேறு வகைப்பட்ட திறமைகளை வெளிப்படுத்தும் ஒரு நிகழ்வாக ரொறன்ரோவில் அமைந்திருந்தது. மே மாதம் 28, 29, 30 ஆகிய மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்வில் சுமார் 500 மேற்பட்ட மாணவர் கலந்து கொண்டனர். இறுதி நாளான ஞாயிற்றுக் கிழமை மாலை ஆறு மணியளவில் ஜ+னியர் சிங்கர் கனடாவின் இரண்டாவது சுற்று நிகழ்ச்சி நடைபெற்றது. முதலாவது சுற்றில் தென்னிந்திய திரைப்படப்பாடகி மதுமிதா கலந்து சிறப்பித்திருந்தார். இரண்டாவது சுற்றில் தகுதிபெற்ற இருபது இளம் பாடகர்கள் இதில் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர். சின்னத்திரையில் நடக்கும் ஒரு நிகழ்வை நேரடியாகப் பார்த்த உணர்வை ரொறன்ரோ எவரெஸ்ட் மண்டபத்தில் கூடியிருந்த இசைப்பிரியர்கள் பெற்றுக் கொண்டனர்.

விரல்விட்டு எண்ணக்கூடிய அளவு மாணவர்களோடு 1996ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பாரதி கலைக்கோயில் இன்று வளர்ந்து கிளைபரப்பி இசைத் தாகத்தைத் தீர்க்கும் கற்பகதருவாய் நிற்கிறது. இதன் வளர்ச்சிக்கு திரு. எஸ். மதிவாசனும் அவரது மனைவியான அமரர் பவதாரணி மதிவாசனுமே முக்கிய காரணமாக இருந்தனர். கனடாவில் மட்டுமல்ல, இலங்கை, இந்தியா, ஐரோப்பிய நாடுகள் என்று சமீபத்தில் உலகெல்லாம் அவர்கள் இசைப்பயணம் மேற்கொண்டு தமது திறமைகளை வெளிக்காட்டியிருந்ததைப் பலரும் அறிந்ததே. ‘இசைத்தாய்’ என்று மாணவர்களால் பாராட்டப்பட்ட பாரதி கலைக் கோயில் அதிபர் பவதாரணியின் திடீர் மறைவு மாணவர்களுக்கும், இசைப்பிரியர்களுக்குப் பெரியதொரு இழப்பாகும்.

கனடாவில் பாரதி கலைக் கோயிலின் திறன்காணல் நிகழ்வு – 2010

தமிழ், வாய்ப்பாட்டு, வீணை, மிருதங்கம், வயலின், பரதநாட்டியம், தபேலா, ட்றம்ஸ், கிட்றார், கீபோர்ட் போன்ற நுண்கலைத் துறைகளில் மாணவர்கள் கற்ற நெறிகளில் இருந்து திறன் காணல் நிகழ்வு இடம் பெற்றது. மூன்று நாட்கள் நடைபெற்ற நிகழ்வில் ரொறன்ரோவைச் சேர்ந்த பலகல்விமான்களும், பல்வேறு துறைசார் கலைஞர்களும் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர். வெள்ளிக்கிழமை ஆரம்பமான நிகழ்வில் கவிஞர் வி. கந்தவனம் கலந்து கொண்டார். சனிக்கிழமை காலை நடந்த நிகழ்வில் கனடா உதயன் பத்திரிகை ஆசிரியர் ஆர் என். லோகேந்திரலிங்கம், சிந்தனைப்பூக்கள் திரு. திருமதி பத்மநாதன், வைத்திய கலாநிதி லம்போதரன் ஆகியோர் கலந்து கொண்டனர். மாலை நடைபெற்ற நிகழ்வில் எழுத்தாளர் திரு. திருமதி குரு அரவிந்தன் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர். ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற நிகழ்வில் மகாஜனக்கல்லூரி முன்னாள் அதிபர் திரு பொ. கனகசபாபதி, கனடா தமிழ் எழுத்தாளர் இணையத் தலைவர் த. சிவபாலு, நாடக நெறியாளர் சாந்திநாதன், மூத்த கலைஞரும் நடிகருமான கே. எஸ். பாலச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். பாரதி கலைக்கோயில் நிறுவனர் திரு.எஸ்.மதிவாசனின் வழிநடத்தலில் திரு. கதிர் துரைசிங்கம் நிகழ்ச்சிகளைக் கொண்டு நடத்தினார். இவர்களுடன் ஏனைய தன்னார்வத் தொண்டர்களும், மாணவர்களும், பெற்றோர்களும் விழா சிறப்பாக நடைபெற முன்னின்று பாடுபட்டனர். இந்த நிகழ்வில் திரு திருமதி ஜெயானந்தசோதி, திரு. திருமதி காந்தி ஆகியோரும் கௌரவிக்கப்பட்டனர்.

ராகுணா, சுபவீன், சாலினி, நவீன், சரிகா, ஆதவன், அபிஷ்கா, சாம்பவி, அஜந்தன், மயூரதி, தக்ஷிகா, சாஜித்தியன், சுரபி, பிரம்யா, துளசி, பிரணவன், மாதங்கி, ஜெசிகா, ஆதித்தியன், அன்யுகா, பாரதி, அபிநயா ஆகியோர் யூனியசிங்கர் கனடா நிகழ்வில் கலந்து, தங்கள் திறமையை வெளிக்காட்டிச் சிறப்பித்தனர். ஒவ்வொரு பாடகரும் தங்கள் திறமையை வெளிக்காட்டியபோது, மண்டபம் நிறைந்த கரவோசையைப் பெற்றுக் கொண்டனர்.

வருடாவருடம் நடக்கும் இத்தகைய திறன் காணல் நிகழ்வுகள் மூலம் பாரதி கலைக் கோயில் நிறுவுனர் அமரர் திருமதி பவதாரணி மதிவாசனின் கனவுகள் அக் கல்லூரி மாணவர்களின் பங்களிப்போடு ஒவ்வொன்றாக நிறைவேறுவதை நினைக்க எமக்கும் பெருமையாக இருக்கிறது. இது போன்ற இசைக் கல்லூரிகள் தொடர்ந்தும் புலம் பெயர்ந்த மண்ணில் சிறப்பாகச் சேவையாற்றி, எனது மொழி, பண்பாடு, கலாச்சாரம், இசை, நுண்கலை, போன்றவற்றைப் பேணிக்காக்க வேண்டும் என்று மனதார வாழ்த்துகின்றோம்.

maliniaravinthan@hotmail.com


 
aibanner

 © காப்புரிமை 2000-2010  Pathivukal.COM. Maintained By: Infowhiz Systems Inc.. Pathivukal is a member of the National Ethnic Press and Media Council Of Canada .
முகப்பு||
Disclaimer|வ.ந,கிரிதரன்