இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google
 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
பெப்ருவரி 2010  இதழ் 122  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!



தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
நிகழ்வுகள்!

சுவிஸ் பாசல் நகரில் லண்டன் பேராசிரியர்
கணினி மூலம் தமிழ் ப‌யிற்சி - ஆல்ப‌ர்ட்,அமெரிக்கா
-

சுவிஸ் நாட்டிலுள்ள பாசல் நகரில், பாசல் தமிக் கலவன் பாடசாலையின் அழைப்பின்பேரில், லண்டன் பல்கலைக்கழகப் பேராசிரியர் சிவா பிள்ளை அவர்கள், 20.01.10 அன்று கணினி மூலம் தமிழ் ப‌யிற்சியை ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் நடாத்தினார். சுவிஸ் நாட்டிலுள்ள பாசல் நகரில், பாசல் தமிக் கலவன் பாடசாலையின் அழைப்பின்பேரில், லண்டன் பல்கலைக்கழகப் பேராசிரியர் சிவா பிள்ளை அவர்கள், 20.01.10 அன்று கணினி மூலம் தமிழ் ப‌யிற்சியை ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் நடாத்தினார்.
இன்றைய காலகட்டத்தில், கணனியின் பயன்பாடு நன்றாக அதிகரித்திருப்பதால், கணினி மூலமான கல்விமுறை, மாணவர்களை எளிதாகச் சென்றடைய ஒரு வழியாகும் என்பதே,பேரா.சிவா பிள்ளையின் மூலக் கருத்தாக இருந்தது. கணினி மூலம் கல்வி கற்பிக்கும் பல்வேறு முறைகளை இவர் திரையில் காண்பித்து, அவற்றிற்கான விளக்கத்தையும் கொடுத்தார்.படங்களைக் காட்டி, அதிலுள்ளவற்றை விபரிக்கும்படி கேட்கும்போது, பிள்ளைகளின் கற்பனைச் சக்தி வளமடைகின்றது என்பதையும் இவர் சுட்டிக்காட்டினார்.

பல மாணவாகளிடமும், பெற்றோர்களிடமும் நேரடியாகக் கேள்விகள் தொடுக்கப்பட்டு, விடைகள் உள்வாங்கப்பட்டன. ஆசிரியர்களுக்கு நடாத்தப்பட்ட பயிற்சிப் பட்டறைக்கு நேரம் போதாது என்பது ஒரு பெருங்குறையாக இருந்தது. ஆசிரியர்களுக்கு பல பயிற்சிகள் கொடுக்கப்பட்டு, செய்வித்தல் மூலந்தான், இந்தப் பயிற்சிப் பட்டறை முழுமையடையும் என்பது இவர் கருத்தாக இருந்தது.

ஓர் உறைக்குள் எழுத்துக்களை, கைகளால் தடவி, இந்த எழுத்துக்களைக் கண்டுபிடிக்கும் பயிற்சி ஆசிரியர்களுக்குக் கொடுக்கப்பட்டது. நேரம் அதிகம் இருக்கும்போது, இது போன்ற பல பயிற்சிகளைச் செய்ய முடியும் என்று பேரா.சிவா பிள்ளை அபிப்பிராயப்பட்டார். இன்னொரு தடவை, ஆசிரியர்களுக்கு மாத்திரம், நீண்ட நேரம் எடுத்து, இன்னொரு பயிற்சிப்பட்டறையை நடாத்துவது என்றும் இறுதியில் முடிவெடுக்கப்பட்டது. பாசல் தமிழ்க் கலவன் பாடசாலை நிர்வாகம் சார்பில் ஏ.ஜே.ஞானேந்திரன் பேரா.சிவாபிள்ளை அவ‌ர்க‌ளுக்கு நினைவு ப‌ரிசு வ‌ழ‌ங்கி ந‌ன்றி ந‌வின்றார்.

சுவிஸ் நாட்டிலுள்ள பாசல் நகரில், பாசல் தமிக் கலவன் பாடசாலையின் அழைப்பின்பேரில், லண்டன் பல்கலைக்கழகப் பேராசிரியர் சிவா பிள்ளை அவர்கள், 20.01.10 அன்று கணினி மூலம் தமிழ் ப‌யிற்சியை ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் நடாத்தினார்.

மக்கள்,மாணவர்கள், ஆசிரிர்கள்,சந்திப்பு கலந்துரையாடல் மிகவும் பயன் உள்ள‌தாக‌ இருந்த‌தாக‌ ப‌யிற்சிக்கு வ‌ந்திருந்த‌ பொதும‌க்க‌ள் க‌ருத்து தெரிவித்த‌ன‌ர்.பேரா.சிவாபிள்ளை அவர்களின் பயிற்சியானது, சுவிஸ் நாட்டில் வாழும் தமிழ் குடும்பங்களுக்கு மிகப் பயனுள்ளதாக அமைந்தது. 250 பேர்க‌ளுக்கு மேல் க‌ல்ந்துகொண்ட‌ இந்த‌ப் ப‌யிற்சிக்கு பாச‌ல் தமிழ்க் கலவன் பாடசாலை நிர்வாக‌ம் ஏற்பாடு செய்திருந்த‌து குறிப்பிட‌த்த‌க்க‌து.

சுவிஸ், பாசல் நகரில் 500ற்கும் மேற்பட்ட தமிழ் மாணவர்கள் தாய்மொழிக் கல்வியினைப் பயில்கின்றார்கள். எதிர்வரும் காலங்களில் சுவிஸ் பாடசாலைகளில் தமிழ்மொழியும் ஒரு பாடமாக அங்கீகரிக்கப்படவுள்ளது. அதன் மாதிரி முயற்சியாக இங்குள்ள சுவிஸ் பாடசாலையில் தமிழ்மொழியும் கற்பிக்கப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது. பாசல் நகரப் பாடசாலைகளில் ஏழுக்கு மேற்பட்ட தமிழ் மாணவர்கள் கல்வி கற்றால் அங்கே அவர்களுக்கு தமிழ் கட்டாய பாடமாகப் பயிற்றுவிக்கப்படவுள்ளதாக பாசல் கல்வித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சுவிஸ் நாட்டிலுள்ள பாசல் நகரில், பாசல் தமிக் கலவன் பாடசாலையின் அழைப்பின்பேரில், லண்டன் பல்கலைக்கழகப் பேராசிரியர் சிவா பிள்ளை அவர்கள், 20.01.10 அன்று கணினி மூலம் தமிழ் ப‌யிற்சியை ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் நடாத்தினார்.

- “தமிழர்க்கு தொண்டு செய்யும் தமிழனுக்கு தடைசெய்யும் நெடுங்குன்றும் தூளாய் போகும்! தமிழுக்கு தொண்டு செய்வோன் சாவதில்லை!” பாரதிதாசன் -

செய்தியும் த‌க‌வ‌லும்: albertgi@gmail.com


 
aibanner

 © காப்புரிமை 2000-2010  Pathivukal.COM. Maintained By: Infowhiz Systems Inc.. Pathivukal is a member of the National Ethnic Press and Media Council Of Canada .
முகப்பு||
Disclaimer|வ.ந,கிரிதரன்