இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
டிசம்பர் 2008 இதழ் 108  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!



தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
நிகழ்வுகள்!
சென்னையில் கீற்று
வாசகர் சந்திப்பு!

நாள்: 30-11-2008, ஞாயிற்றுக் கிழமை
நேரம்: காலை 10.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை
இடம்:  BEFI Hall, நரேஷ் பால் சென்டர், தேனாம்பேட்டை, சென்னை (காமராஜர் அரங்கம் எதிரில்)

கீற்று இணையத்தைத் தொடங்கியது நாள் முதல் வாசகர்களாகிய நீங்கள், எங்களுக்கு அளித்து வரும் உற்சாகமும், ஆதரவும் அளப்பரியது. கடந்த மூன்றாண்டுகளில் எங்களது தொடர்பு முகவரியோ, கைப்பேசி எண்ணோ தராத நிலையிலும் நண்பர்கள் வாயிலாக அதைப் பெற்று, எங்களைத் தொடர்பு கொண்டு, கீற்றுவின் மீதான தங்களது மதிப்பை வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். தினந்தோறும் எங்களுக்கு வரும் மின்னஞ்சல்களிலும், படைப்புகளுக்கு நீங்கள் தரும் பின்னூட்டங்களிலும் எங்கள் மீதான அன்பை உணர்ந்திருக்கிறோம்.

‘நான் வசிக்கும் நாட்டில் தமிழ்ப் புத்தகங்கள் கிடைக்காத நிலையில் கீற்றுதான் எனக்கு ஒரே துணையாக இருக்கிறது’ என்றும், ‘அகதிகளாக புலம் பெயர்ந்து வாழும் என்னைப் போன்ற ஈழத்தமிழர்களுக்கும், தமிழகத் தமிழர்களுக்கும் இடையேயான உறவுப்பாலமாக கீற்று விளங்குகிறது’ என்றும், ‘தங்களின் பணி பாராட்டுக்குரியது. அடுத்த முறை நான் சென்னை வரும்போது தங்களைச் சந்திக்க விரும்புகிறேன்’ என்றும் வாசகர்கள் அனுப்பும் மின்னஞ்சல்கள் எங்களை நெகிழ்ச்சிக்குள்ளாக்கின்றன. அதுவே தொடர்ந்து இயங்குவதற்கான உற்சாகத்தை எங்களுக்குத் தருகிறது.

கீற்றுவின் நான்காம் ஆண்டு தொடக்கத்தையொட்டி வாசகர்களுக்கு விடுத்த வேண்டுகோளில் எங்களது கைப்பேசி எண்ணைத் தந்திருந்தோம். அதுமுதல் எங்களைச் சந்திக்க விரும்புவதாக வரும் தொலைபேசி அழைப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எனவே வாசகர்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்யும் விதமாக வாசகர் சந்திப்பு ஒன்றை நடத்தலாம் என்று திட்டமிட்டோம். அதுகுறித்து கீற்று வலைக்குழுமத்தில் விவாதித்தபோது நிறையபேர் ஆர்வம் தெரிவித்தார்கள்.

நாள் குறித்தோம், அரங்கைப் பிடித்தோம். இதோ, வாசகர் சந்திப்புக்குத் தயாராகிவிட்டோம். கீற்றுவின் நிறை, குறைகள் குறித்தும், கீற்று தொடர வேண்டிய/ செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் நீங்கள் பேசலாம். கீற்று தொடர்பான வாசகர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிக்கிறோம்.

நாள்: 30-11-2008, ஞாயிற்றுக் கிழமை
நேரம்: காலை 10.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை
இடம்:  BEFI Hall, நரேஷ் பால் சென்டர், தேனாம்பேட்டை, சென்னை (காமராஜர் அரங்கம் எதிரில்)

வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.

என்றும் அன்புடன்
கீற்று ஆசிரியர் குழு.

editor@keetru.com
http://www.keetru.com


© காப்புரிமை 2000-2008 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner