'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
யூலை 2004 இதழ் 55 -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.
பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.
இங்கே விளம்பரம் செய்ய வேண்டுமா? 
ads@pathivukal.com
Amazon.Ca
In Association with Amazon.ca
தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான ணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் ணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் முரசு அஞ்சலின் tscu_inaimathi, Inaimathi, Inaimathitsc அல்லது ஏதாவது தமிழ் tsc எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று ணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, ணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
Download Tamil Font
இலக்கியம்!
அறிஞர் அ.ந.கந்தசாமி! 

-வ.ந.கிரிதரன் -

விதை, சிறுகதை, நாவல், நாடகம், ­லக்கிய விமர்சனம், மொழிபெயர்ப்பு -இத் துறைகளில் புலமையும் திறமையும் ஆற்றலும் மிக்கவர் அமரர் அறிஞர் அ.ந.கந்தசாமி அவர்கள். ஈழத்தின் தலைசிறந்த சிருஷ்டி எழுத்தாளர்களில் ஒருவராகக் கருதப்படுபவர். தமிழில் மட்டுமல்ல, ஆங்கிலத்திலும் ­த் துறைகளில் எழுதவும் பேசவும் வல்லவர். தேசாபிமானி, சுதந்திரன், ரிபியூன் ஆகிய ­தழ்களின் ஆசிரிய பீடங்களை அலங்கரித்தவர். ஈழத்துப் புதுமை இலக்கியத்தின் மூத்தபிள்ளைகளில் ஒருவராகக் கருதப்படுபவர். எழுத்தில் மட்டுமல்ல மேடைப் பேச்சிலும் வல்லவர். ­வரது 'மதமாற்றம்' நாடகம் பலமுறை மேடையேறி, பலத்த சர்ச்சைகளைக் கிளப்பியது. இவரது 'மனக்கண்' நாவல் தினகரனில் தொடராக வெளிவந்து பெருத்த வரவேற்பினைப் பெற்றதோடல்லாமல் சில்லையூர் செல்வராசனால் வானொலியில் நாடகமாகவும் ஒலிபரப்பப்பட்டது.'கடவுள் என் சோர நாயகன்', 'துறவியும் குஷ்ட்டரோகியும்', 'சிந்தனையும் மின்னொளியும்', 'எதிர் காலச் சித்தன் பாடல்', 'வில்லூண்டி மயானம்' போன்ற இவரது கவிதைகள் பண்டிதமனி கணபதிப்பிள்ளையுட்பட பலரின் பாராட்டுதல்களயும் பெற்றவை. எமிலி சோலாவின் 'நாநா' நாவலை மொழிபெயர்த்து சுதந்திரனில் வெளியிட்டவர். 'கவீந்திரன்' என்ற பெயரிலும் இவர் கவிதைகள் படைத்துள்ளார். இவரது சிறுகதைகள் 'சமூகத்தை வன்மையாகச் சாடுபவை' என்பார் பேராசிரியர் சிவத்தம்பி. மறுமலர்ச்சி எழுத்தாளர்களில் முக்கியமானவர். பேராசிரியர் கைலாசபதியின் பெருமதிப்பிற்குரியவர்.  தனது ' ஒப்பியல் ­லக்கியம்' நூலை பேராசிரியர் கைலாசபதி அறிஞர் அ.ந.கந்தசாமிக்கே சமர்ப்பணம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. பண்டிதர் திருமலைராயர் என்ற பெயரில் இவர் எழுதிய கட்டுரைகளை பெரியார் தனது 'குடியரசு' பத்திரிகையில் மறுபிரசுரம் செய்தார். 'திருக்குறள்' பற்றிய ­வரது ஆங்கிலக் கட்டுரைகள் பெரும் வரவேற்பினைப் பெற்றன.  

இதுவரையில் இவரது படைப்புக்களில் 'மதமாற்றம்' இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்க வெளியீடாகவும், தமிழக பாரி நிலைய வெளியீடாக 'வெற்றியின் இரகசியங்கள்' என்னும் நூல்களுமே வெளி வந்துள்ளன. 'வெற்றியின் ­ரகசியங்கள்' நூலைப் பொறுதத வரையில் தமிழில் உதயமூர்த்தி போன்றவர்கள் வாழ்வின் வெற்றிக்கு வழிவகுக்கும் நூல்களை எழுதுவதற்கு முன்னரே(1967­ல்) அ.ந.க.வின் இந்நூல் வெளிவந்தது குறிப்பிடத் தக்கது. எமில் கூ, கார்ல் யூங், பிராய்ட்  உட்பட பலரின் கோட்பாடுகளை மையமாக வைத்து, தெள்ளிய துள்ளு தமிழ் நடையில் இந் நூல் எழுதப்பட்டுள்ளது.    இந் நூல் மற்றும் 'மதமாற்றம்' வெளிவருவதற்கு ஈழத்தின் மூத்த எழுத்தாளர் செ.கணேசலிஙகனின் பங்களிப்பு முக்கியமானது. 'தேசிய ­லக்கியம்', 'தமிழ்க் கவிதை' ,'நாடகத் தமிழ்' பற்றிய ­வரது விமர்சனக் கட்டுரைகள் பெரும் பாராட்டினைப் பெற்றவை. ­வரது ஏனைய படைப்புக்களும் நூல்களாக வெளீவரவேண்டும். இவரது கவிதைகளையும் , 'மனக்கண்'நாவலையும் தமிழகத்தில்வெளியிடும் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அனேகமாக ­ன்வாண்டினிறுதிக்குள் வெளிவருமென எதிர்பார்க்கலாம்.  

­வர் மறைந்தபோது , ஈழத்திலிருந்து வெளிவந்த அனைத்துப் பத்திரிகை சஞ்சிகைகளும் ஒட்டு மொத்தமாக அஞ்சலி செலுத்தின. 'போர்ச் சுவாலை அமரச் சுடராகியது' என்று தேசாபிமானி தனது ஆசிரியத் தலையங்கத்தில் குறிப்பிட்டிருந்தது. தமிழமுது அட்டையில் (சரவணயூர் மணிசேகரனை ஆசிரியராகக் கொண்டு வெளீவந்தது) ­வரது படத்தைப்பிரசுரித்துக் கண்ணீர் அஞ்சலி செலுத்தியது. 'தினகரன்', 'தினபதி', 'வீரகேசரி' யுட்பட  சகல தமிழ்  ஆங்கிலப் பத்திரிகைகளெல்லாம் முன்பக்கச் செய்தியாக செய்திகளை வெளியிட்டு அஞ்சலி செலுத்தின. மல்லிகை ­வரைத் தனது அட்டைப் படத்தில் போட்டுக் கெளரவித்தது. அந்தனி ஜீவா அடிக்கடி ­வரைப் பற்றி நினைவு கூர்ந்து கட்டுரைகளை பத்திரிகை சஞ்சிகைகளில் எழுதியுள்ளார். தினகரனில் அந்தனி ஜீவா எழுதிய 'சாகாத ­லக்கியத்தின் சரித்திர நாயகன்' என்ற தொடர் குறிப்பிடத்தக்கது. யாழ்பல்கலைக்கழக மாணவி செல்வி யுவராணி ஜுவானா 'அ.ந.கந்தசாமி படைப்புக்கள் ஒரு மதிப்பீடு' என்னும் தலைப்பில் ஆய்வுக் கட்டுரை படைத்துள்ளார். மறைந்த எழுத்தாளர் அகத்தியர் அ.ந.க. பற்றிய நினைவுகளை கட்டுரைகளாக தினகரனில் வரைந்துள்ளதுடன் 'எரியும் நெருப்பில் ­டைபாதையில்லை' என்னும் நாவலைஅ.ந.க.விற்குச் சமர்ப்பணம் செய்துள்ளார். கவிஞர் மகாகவியும் தனது 'கண்மணியாள் காதை' யினை அ.ந.க.விற்குச் சமர்ப்பணம் செய்துள்ளார்.  ஈழத்து முற்போக்கு ­லக்கியத்தின் முன்னோடியான , அனைவராலும் அன்புடன் அறிஞர் அ.ந.க என அழைக்கப் பட்ட அறிஞர் அ.ந.கந்தசாமியின் மறைவு தினமான மாசி 14 ­ல் அவரை நினைவு கூர்வதுடன், அவரது படைப்புக்களை நூலுருவில் கொணர்வதே நாம் அவர்க்குச் செய்யும் உண்மையான அஞ்சலியாகும்.

ஈழத்தெழுத்துலகை
விழிக்க வைத்த பேரறிஞன்.
கொடுமைகளை எதிர்ப்பதிலே
கடும் புயலாய்க்
குமுறி விடும்
கந்தசாமி எழுத்துலகிலோர்
கலங்கரை விளக்கமாவான்.
துடிப்பான
துள்ளு தமிழ் நடைதனையே
வடிப்பதென்றால்
இவனிற்குக் கை
வந்த கலை.
சிந்தனையைத் தூண்டிவிடும்
சீர் சிருத்தக் கருத்துக்களை
சொற்களிலே வடித்து விடும்
சிற்பியிவன்சிந்தனைகள்
அழியாது நிலைத்து நிற்கும்
மொழியாகத் தொடர்ந்து வரும்.

-வ.ந.கிரிதரன் -
அ.ந.கந்தசாமி கவிதைகள்!
  • சிந்தனையும் மின்னொளியும்
  • எதிர்காலச் சித்தன் பாடல்.
  • துறவியும் குஷ்ட்டரோகியும்
  • மாம்பொழிலாள் நடனம்
  • வில்லூன்றி மயானம்
  • வள்ளுவர் நினைவு
  • நான்செய் நித்திலம் தேன் செய்ததுவே.
  • அன்னையின் பிரிவு
  • காதல் தத்துவம்
  • முத்தம்
  • தேயிலைத் தோட்டத்திலே
  • ரவீந்திரர்
  • கடைசி நம்பிக்கை
  • எங்கிருந்தோ வந்தாள்
  • நாட்டுப் பற்று
  • முன்னேறும் சேனை
  • சிந்தனையும் மின்னொளியும்!
    சாளரத்தின் ஊடாகப் பார்த்திருந்தேன் சகமெல்லாம்
    ஆழ உறங்கியது அர்த்த ராத்திரி வேளையிலே,
    வானம் நடுக்கமுற, வையமெல்லாம் கிடுகிடுக்க,
    மோனத்தை வெட்டி யிடியொன்று மோதியதே!
    'சட்' டென்று வானம் பொத்ததுபோல் பெருமாரி
    கொட்டத்தொடங்கியது. 'ஹேர்' ரென்ற ­இரைச்சலுடன்
    ஊளையிடு நரியைப் போல் பெருங்காற்றும் உதறியது.
    ஆளை விழுத்திவிடும் அத்தகைய பேய்க்காற்று
    சூறா வளியிதுவா உலகினையே மாய்க்க வந்த
    ஆறாத பெருஊழிக் காலத்தின் காற்றிதுவா?
    சாளரத்துக் கதவிரண்டும் துடிதுடித்து மோதியது.
    ஆழிப்பெரும் புயல்போல் அல்லோலம் அவ்வேளை
    உலகம் சீரழிவிற்ற(து); அப்போ வானத்தில்
    மாயும் உலகினுக்கு ஒளிவிளக்கந் தாங்கிவந்த
    காயும் மின்னலொன்று கணநேரம் தோற்றியதே.
    கொட்டுமிடித்தாளம் இசைய நடம் செய்யும்
    மட்டற்ற பேரழகு  வான்வனிதை போல் மின்னல்
    தோன்றி மறைந்ததுவே; சிந்தனையின் தரங்கங்கள்
    ஊன்றியெழுந்தன இவ் வொளிமின்னல் செயல் என்னே?
    வாழ்வோ கணநேரம்; கணநேரம் தானுமுண்டோ?
    சாவும் பிறப்புமக் கணநேரத் தடங்குமன்றோ?
    ஐனனப் படுக்கையிலே ஏழைமின்னல் தன்னுடைய
    மரணத்தைக் கண்டு துடிதுடித்து மடிகின்ற
    சேதி புதினமன்று; அச் சேதியிலே நான் காணும்
    சோதி கொளுத்திச் சோபிதத்தைத் செய்துவிட்டு
    ஓடி மறைகிறது; வாழும் சிறு கணத்தில்
    தேடி ஒரு சேவை செகத்திற்குச் செய்ததுவே!
    சேவையதன் மூச்சு; அச்சேவை யிழந்தவுடன்
    ஆவிபிரிந்து அகல்வானில் கலந்ததுவே!
    என்னே இம் மின்னல(து) எழிலே வென்றிருந்தேன்.
    மண்ணின் மக்களுக்கு மின்னல் ஒரு சேதி சொல்லும்.
    வாழும்சிறு கணத்தில் வைய மெலாம் ஒளிதரவே
    நாளும் முயற்சி செய்யும் நல்லசெயல் அதுவாகும்.
    ­ந்த வாறாகச் சிந்தனையில் ஆழ்ந்துவிட்டேன்.
    புந்தி நடுங்கப் புரண்டதோர் பேரிடி; நான்
    இந்த உலகினிற்கு வந்தடைந்தேன்; என்னுடைய
    சிந்தனையால் இச்சகம்தான் சிறிதுபயன் கண்டிடுமோ?

    -அறிஞர் அ.ந.கந்தசாமீயின் ஆரம்பகாலக் கவிதையியிது. ஈழகேசரியில் வெளிவந்தது.-

    Back to the top

    எதிர்காலச் சித்தன் பாடல்!
    எதிர்காலத் திரைநீக்கி அதற்கப் பால்யான் 
    ஏகிட்டேன் ஏகிட்ட போதில் என்முன் 
    கதிர்போலும் ஒளிமுகத்தான் கருனையூறும் 
    கமலம்போற் கண்ணினையான் ஒருவன் வந்தான் 
    "எதிர்கால உலகமிஃது மனிதா நீயிங் 
    கேன்வந்தாய் இவண்காணும் பலவுமுன்னை 
    அதிர்வெடி போல் அலைக்கழிக்கும் ஆதலாலே 
    அப்பனே நிகழ்காலம் செல்க" என்றான். 

    அறிவினிலே அடங்காத தாகம் கொண்டேன் 
    அவ்வுரையால் அடங்கவில்லை அவனை நோக்கிச் 
    'செறிவுற்ற பேரறிவின் சேர்க்கை வேண்டும் 
    செந்தமிழன் யானொருவன் ஆதலாலே 
    மறுவற்ற பேராண்மைக்கோட்டை என்னை 
    மலைவுறுத்தா தெதிர்காலம்" என்று கூறிக் 
    குறுகுறுத்த விழியுடையான் குழுத வியான் 
    குணமென்ன பெயரென்ன என்று கேட்டேன். 

    "எனக்குமுன்னே சித்தர்பலர் ­ருந்தா ரப்பா 
    எதிர்காலச் சித்தன்யான் நிகழ்காலத்தர் 
    உனக்குமுன்னர் வாழ்ந்திட்ட சித்த ரல்லால் 
    உன்காலச் சித்தரையும் ஏற்கா ரப்பா 
    மனக்குறைவால் கூறவில்லை மகிதலத்தில் 
    மடமையொரு மயக்கத்தின் ஆட்சி என்றும் 
    கனத்துளதிங் கென்பதையே கருதிச் சொன்னேன் 
    காசினியின் பண்பிதனைக் காணப்பா நீ. 

    வருங்காலச் சித்தனுரை செய்த வார்த்தை 
    வையகத்தார் அறிதற்காய் இங்கு சொல்வேன் 
    "பெரும்போர்கள் விளைகின்ற நிகழ்காலத்தில் 
    பிளவுறுத்தும் பலவகையாம் பேதமுண்டு 
    ஒருமைபெறும் மனிதர்களை ஒன்றா வண்ணம் 
    ஊடமைத்த சுவரனைய பேதம் யாவும் 
    நோக்கிடுவாய் தூரஎதிர் கால மீதே" 

    அண்டுபவர் அண்டாது செய்வதேது 
    அநியாய பேதங்கள் பெயரைச் சொல்வேன் 
    துண்டுபட்டுத் தேசங்கள் என்றிருத்தல் 
    தூய்மையாம் இனம்மொழிகள் மதங்க ளென்று 
    அன்றுதொட்டிங் கின்றுவரை இருக்குமந்த 
    அர்த்தமிலாப் பிரிவினைகள் எல்லாம் சாகும். 
    ஒன்றுபட்டிவ் வுலகெல்லாம் ஒற்றையாகும் 
    ஒருமொழியில் ஓரரசு பிறக்குமப்பா. 

    அரசெல்லாம் ஒழிந்துலகில் ஓரரசே யுண்டாம் 
    அறங்கூறும் ஒருமதமே உலகெல்லாம் ஆகும் 
    விரசமொடு விகற்பங்கள் வளர்க்குமொழி எல்லாம் 
    வீழ்ந்துவிடும் ஒருமொழியே இவ்வுலகில் உண்டாம் 
    சரசமொடு உலகத்து மககளெல்லாம் தம்மைச் 
    சமானர்கள் மனித்குலம் என்ற இன மென்பார் 
    அரசர்கள் ஏழைபணக்காரனென்ற பேதம் 
    அத்தனையும் ஒழிந்து  விடும் எதிர்கால உலகில். 

    செந்தமிழும் சாமீழச் சிங்களமும் சாகும் 
    செகமெல்லாம் ஒருமொழியே தலை  தூக்கி நிற்கும். 
    நந்தமிழர் இனஞ்சாகும் பிற இனமும் சாகும் 
    நாடெல்லாம் மனித இனம் ஒன்றுதலை தூக்கும். 
    எந்தமொழி இவ்வுலகில் நிலவுமெனக் கேட்பில் 
    எண்ணிக்கை கொண்டமொழி எம்மொழியோ இங்கு 
    அந்த மொழி தானப்பா அரசாளும் உண்மை 
    அதுநன்று தானப்பா பிரிவினைகள் ஒழிதல். 

    நிகழ்காலச் செந்தமிழர் இது கேட்டுச்  சீறி 
    நீசனுரை நிகழ்த்தாதே செந்தமிழே உலகின் 
    புகழ்மொழியாய் உலகத்தின் பொது மொழியும் ஆகும் 
    புதுமைதனை காண்பீர்கள் என்றுபுகன் றிடுவார். 
    இகழ்ந்திடுவார் எதிர்காலச் சித்தனுரை தன்னை 
    இம்மியள வேணும்  மானமில்லா மூர்க்கன் 
    நிகழ்காலத் திருந்திருந்தால் செய்வதறிந்திடுவோம். 
    நெஞ்சுபிளந் தெறிந்திருப்போம் என்றிகழ்த்திடுவார். 

    பிறப்பாலே யானுயர்வு தாழ்வுரைக்க மாட்டேன் 
    பிறப்பாலே என்மொழியே சிறந்ததெனச் சொல்லேன். 
    பிறப்பென்றன் வசமாமோ? பிரமத்தின் வசமாம். 
    பீருவில் பிறந்திருந்தால் பீருமொழி பீடே 
    வெறிமிகுந்த நிகழ்காலத்   தீதுணரமாட்டார் 
    விழழுக்கே பெருங்கலகம் விளக்கின்றார் அன்னார் 
    அறிவற்றே துன்பங்கள் அனவர்க்கும்  விளைப்பவர் 
    ஐய்யய்யோ இவர்மடமை என்னென்று சொல்வேன். 

    புதுயுகத்தின் குரல்போல் எதிர்காலச் சித்தன் 
    புகன்றமொழி கேட்டபின்னர் யானவனைப் பார்த்து 
    "எதிர்காலச் சித்தா உன் இனியமொழி கேட்டேன். 
    எண்ணங்கள் விரிவடையும் என்னுடன் நீவந்து 
    மதி கெட்டார் வாழ்கின்ற வையகத்தில் புதிய 
    வாழ்வேற்றிச்செல்வாயோ என்றிறைஞ்சி நிற்க 
    மெதுவாகச் செவ்விதழ்கள் திறந்ததையுமங்கே 
    மென்னிலவுக் குஞ்சிரிப்புப் பிறந்ததையும் கண்டேன். 

    காலத்தின் கடல் தாவி நீ­ங்கு வந்த 
    காரணத்தால் ஏதறிவு என்பதை நீ கண்டாய் 
    ஞாலத்தில் நிகழ்கால மயக்கத்தி லுள்ளோர். 
    ஞானத்தைக் காண்பாரோ? காணார்களப்பா 
    காலத்தை யான்தாண்டிக் காசினிக்கு வந்தால் 
    கட்டாயம் எனையவர்கள் ஏற்றிமிதித்திடுவார் 
    ஆலத்தைத் தந்தன்று சோக்கிரதரைக்  கொன்ற 
    அன்பர்களுன் மனிதச் சோதரர்களன்றோ?

    ஆதலினால் நிகழ்கால மனிதா அங்கு 
    யான்வரேன் நீபோவாய் என்றான் ஐயன் 
    காதலினால் கால்களென்னும் கமலம் தொட்டுக் 
    கண்ணொற்றி விடைபெற்றேன் திரை நீங்கிற்று. 
    பாதகர்கள் முழுமடைமைப் போர்கள் சூழும் 
    பாருக்கு நிகழ்காலம் வந்தேன் எங்கும் 
    தீதுகளே நடம்புரியும் நிலைமை கண்டு 
    திடுக்கிட்டேன் என்றிவர்கள் உண்மைகாண்டல்? 

    வள்ளூவர் நினைவு!
    வள்ளுவனார் செய்திட்ட நிறைநூலைப் போற்றி 
    வாழ்த்தெடுக்க வந்திட்டேன் வன்கவிஞர் மன்றில் 
    தெள்ளுதமிழ்த் தீங்கவிதைத் தேனமுதம் நல்கும் 
    தெவிட்டாத நடராசர் கவியரங்கின் தலைவர் 
    விள்ளுகவி கேட்டோம்; பிறர்கவியும் கேட்டோம் 
    வேலணையூர் வீசுபுகழ் தொல்காவியல் மன்றில் 
    வள்ளுவனார் புகழ்பாட வாய்த்ததொரு வாய்ப்பு 
    வாய்ப்பளித்த பண்டிதர்க்கு என்னுளத்தின் வாழ்த்து. 

    பாட்டாலே உலகத்தைக் கவர்ந்திட்ட பேரில் 
    பைந்தமிழர் தம்மிடையே வள்ளுவர்போல் யாரே? 
    பாட்டாளிக் கவிஎனவே அன்னவனைப் போற்றி 
    பரவிடுவேன் அதற்கும்பல் ஆதாரம் சொல்வேன் 
    நாட்டினிலே மிகச்சிறந்த நெசவென்னும் கலையை 
    நற்றொழிலாய்க் கொண்டிட்ட கவியரசர் கோமான் 
    பாட்டாக வடிவெடுத்தான் அநுபவத்தின் கோர்வை 
    பாரெல்லாம் போற்றுததைத் தமிழ்வேதம் என்றே. 

    மதங்களினை அடிப்படையாய்ப் பிறபுலவர் கொள்ள
    மன்னுலக வாழ்வைமட்டும் வள்ளுவனார் கொண்டார்
    விதவிதமாய் வீடென்றார் மோட்சமென்றார் மற்றோர் 
    வீரமிகும் வள்ளுவனார் அறம்பொருளோ டின்பம் 
    இதமாக இல்வாழ்வில் காணுமிவை மூன்றும் 
    இனிமையுள முப்பால்நூல் எற்றியுரைத்திட்டார் 
    இதுநல்ல மாற்றமென இங்கெடுத்துச் சொல்வோம் 
    இவர்குறளைக் கைஏந்தி இவ்வுலகை வெல்வோம். 

    வறுமையினை ஒழித்திடுதல் வேண்டுமெனும் நெஞ்சம் 
    வள்ளுவனார் கொண்டிருந்தார் என்பதையார் இங்கே 
    வெறுமொழிஎன் றியம்பிடுதல் கூடுமிதோ பாரீர் 
    வேந்தரது அரண்சிறப்புச் சொல்லவந்தபோது 
    1"உறுபசியும் பிணிநோயும் செறுபகையும் சேரா(து) 
    உற்றிடுதல் ஒன்றல்ல நா"டென்று கேட்டார் 
    பெரும்பசியை முதற்குற்ற மெனஎடுத்துச் சொன்னார் 
    பெரும்புலவர் வள்ளுவனார் ஏழைகளின் தோழன். 

    வள்ளுவனார் வழிவந்த பாரதியார் சொன்னார் 
    2"வையத்தை அழித்திடுவோம் தனிமனிதன் ஒருவன் 
    உள்ளநிறை வோடுண்ண உணவில்லை என்று 
    உளம்வருந்து வானாயின்" என்பதவர் பாட்டு. 
    வள்ளுவர் தாமும்பல் லாண்டுகட்கு முன்னர் 
    வழுத்தினார் ­தன் பொருளை ஆவேசத்தோடு 
    3"தள்ளுவதோ வாழ்க்கையினைப் பிச்சைஎடுத் திங்கே? 
    அவிவிதமேல் சாய்கஅந்த ஆண்டவனும்" என்றார். 

    நெசவுசெயும் தொழிலாளி நேர்மையுள நெஞ்சன் 
    செய்திட்ட நிறைநூ லில் பெய்திட்ட எண்ணம் 
    ­சைவுடனே காலத்தை வென்றிங்கு வாழும்! 
    எல்லைகளைக் கடந்திங்கு உலகெல்லாம் சூழும்! 
    திசையெல்லாம் கேட்கட்டும் திருக்குறளின் கோஷம்!
    தீரட்டும் ஓயட்டும் தீயர்வெளி வேஷம்!
    ­சைநூலை நாமிழந்தோம் நாடகமும் ­ழந்தோம்
    ஏதிழந்தா லுமிந்தக் குறளொன்று போதும்.

    கடலெழுந்து விம்மியது காவிரியின் நீரில்
    கடல்வெள்ளம் கலக்கின்ற புகாரென்னுமூரில்
    கடலுண்ட தய்யாநம் கற்கண்டுத் தமிழை
    கணக்கில்லா நூல்கலெள்ளாம் கடலோடு போச்சு!
    கடலுக்குத் தமிழினிமை தெரிந்ததனால் வந்த
    காரியமோ யாமறியோம்! செந்தமிழர் நாட்டுக்
    கடலன்றோ கவியமுதின் சுவைதெரிந்த தென்று
    கவிராயர் சொலக்கூடும்! சத்தியமும் அதுவோ?

    நீருண்ட இவைபோக இருப்பதெல்லாம் எச்சம் 
    நெருப்போடு கறையான்கள் உண்டவற்றின் சொச்சம் 
    பாரிடத்தே பைந்தமிழின் நூலெல்லாம் சேர்த்துப் 
    பஷ்மீகர மானாலும் குறளென்னும் சொத்து 
    ஊரிடத்தே எஞ்சிநின்றால் அஃதொன்று போதும் 
    உற்றகுறை எங்களுக்கு இல்லை ­வன் யாதும் 
    நேரில்லா வள்ளுவனார் குறள்வாழ்க வாழ்க 
    நிறைநூ லின் கருத்திந்த உலகெல்லாம் சூழ்க. 

    கலைக்காகக் கலைஎன்று கதறுபவர் உண்டு
    கருத்துக்கே முதன்மை தரும் வள்ளுவனார்கண்டு
    கலை­ந்தச் சமுதாய வளர்ச்சிக்கே என்று
    கருத்துடையார் உணரட்டும் காசினியில் அன்று
    விலையில்லாத் திருக்குறளைத் தந்திட்ட மேதை
    வியனுலகில் காட்டுகின்றார் பாதையதே பாதை.
    கலைஞர்களே எழுந்திடுங்கள் வள்ளுவனார் காட்டும்
    கவினுடைய பாதையிலே பேனாவை ஓட்டும்.

    செந்தமிழர் நாட்டுக்குப் புகழ்தருமோர் நூலின் 
    சிறப்புசில எடுத்துரைத்தேன் என் அறிவில் பட்ட 
    பைந்தமிழ்நற் கருத்துக்களைப் பகர்ந்துள்ளேன் ­ங்கு 
    பகர்ந்தவற்றில் கொள்வதனைக் கொள்வீர்கள் மற்ற 
    நொய்ந்திட்ட கருத்துக்களை நோயென்று தள்ளீீர் 
    நுவலரிய புகழ்பெற்றாள் தமிழன்னை பெற்ற 
    மைந்தர்களே மாநிலத்தில் குறள்புகழைப் பாடி 
    மகிழ்ந்திடுவீர் நீவிரிங்கு நீடூழி வாழி. 

    -வேலணையூர்த் தொல்காவிய மன்றில் நடைபெற்ற தமிழ்மறை விழாக் கவியரங்கில் அ.ந.கந்தசாமி பாடியவை.- 

    நான் செய் நித்திலம்!
    வானிலோர் முத்தினை வைத்திழைத் ததுபோல் 
    வளர்மதி தவழ்ந்தது; மாடியின் மீதுயான் 
    ­ப்பி ஒன்றில் முத்தொன் றிட்டனன்; 
    கழிந்தது; கழிந்தபின் என்மனை விளங்கக் 
    கண்ணன் போலொரு கனிவாய்க் குழந்தை 
    வந்தது; வந்தபின் வாணிலா முகத்தென் 
    மனையாள் அதைஎன் மடியிடைக் கிடத்தி 
    ஈரைந்து திங்களின் முன்னால் ஒருநாள் 
    நீங்கள் செய்த நித்திலம் ­துவே. 
    என்று கூறி மகிந்தனள்; அவள் கண் 
    ஓரம் கண்டேன்; ஒளிமுத் தொன்று 
    அங்கு துடித்ததும் கண்டனன்; அவள் விழி 
    தொட்டேன்; முத்துத் தீய்ந்தது; மகிழ்ச்சியில் 
    உள்ளத்திப்பியில் உதித்துக் கண்வழி 
    வந்தஅம் முத்தில் வையகத் தின்பம் 
    யாவும் கண்டனன்; அம்முத்தெனது 
    மடியிடைக் கிடந்த மணிமிசை விழுந்திட 
    மணியை எடுத்துநான் மலர்க்கரம் தடவி 
    உச்சி மோந்தே உளம்மகிழ்ந் திட்டேன். 
    நான் செய் நித்திலம் தேன் செய்ததுவே!  

    வில்லூன்றி மயானம்!
    நாட்டினர்நீர் அறிவீர் வில்லூன்றி தன்னில் 
    நாம் கண்ட  ஈமத்தீ வெறுந்தீ அன்று 
    கேட்டினிலே உளபிணத்தை உண்பதற்குக் 
    கிளர்ந்தெழுந்த தீயன்று நெடுநா ளெங்கள் 
    நாட்டினிலே கிளைபரப்பும் சாதி என்னும் 
    நச்சுமர வீழ்ச்சியினைக் காண்பதற்காய்க் 
    வாட்டமுற்ற மக்களுளம் கனன்று பொங்கும் 
    வல்லதொரு புரட்சித்தீ  வாழ்க வஃது. 

    மக்கள்குல மன்றோநாம் மரமோ கீிழாம் 
    மாடுகளோ விலங்குகளோ கூறும் என்று
    திக்கற்றான் நெஞ்சினிலே பிறந்த வைரத் 
    தீ அதுவாம் திசை எங்கும் பரவுதற்கு 
    மக்கள்நாம் மறுப்பதெவர் என்று கூறி 
    மாவுரிமைப் போர்தொடங்கி விட்டான் அந்தத் 
    திக்கதனை வில்லூன்றித் திருத்த லத்தைச் 
    சிர்ந்தாழ்த்தி வணங்குவோம் புனித பூமி. 

    கேளீர் ஓர் வீரமிகு காதை ஈது. 
    கிளரின்பம் நல்குமொரு சேதி யன்றோ? 
    பாழினிலே பயந்திருந்த பாம ரர்கள் 
    பலகாலந் துயில்நீங்கி எழுந்துவிட்டார் 
    வாழியரோ வரப்போகும் நவயு கத்தின் 
    வளக்காலை ­ளம்பருதி வரவு ணர்த்தும் 
    கோழியது சிலம்பலிது  வெற்றி ஓங்கல் 
    கொள்கைக்காதரவு, நல்குவோம் நாம். 

    பரம்பரையாய்ப் பேணிவந்த பழக்கமென்று 
    பழங்கதைகள் பேசுகின்றார் மனிதர் பார்ப்பின் 
    பரம்பரையாய்ப்  பேணிடினும் தீயதான 
    பழக்கமெனப் பகுத்தறிவாற் கண்ட பின்னும் 
    சிரங்குவிப்பதோ அதற்கு? மூடச் செய்கைச் 
    சிறுமைஎன்று செகமெல்லாம் நகை நகைத்துச் 
    சிரிபபதற்குச் செவிதாரீர் தீண்டாய்ப் பேயின் 
    சிரங்கொய்தே புகைத்திடுவோம் வாரீர் வாரீர். 

    அன்னையார் பிரிவு!
    ஒப்பரிய காந்தியரி னொப்பில் லாத 
    ஓர்மனைவி செம்மையறங் காத்த சீர்மைச் 
    செப்பரிய பெரும்புகழாள் தேய மெல்லாம் 
    தாயெனவே செப்பிடுமோர் இல்லின் தெய்வம்; 
    இப்புவிதான் கலங்கிடவும் இந்தியத்தாய் 
    அழுதரற்றிக் கூவிடவும் இறந்துபட்டாள்; 
    இப்பெரிய துன்பந்தான் இதயந் தன்னை 
    ஈர்க்குதே இந்தியர்கள் வேர்க்கின்றாரே! 

    பாரதத்தின் மக்களெல்லாம் காந்திதம்மைப் 
    பண்புடைய பிதாவென்றும் அம்மையாரைச் 
    சீருதவும் செவ்வியளாம் மாதாவென்றுஞ் 
    சிந்தையிலே நினைத்திருந்தார் அந்தோ வின்று 
    நீருகுத்து நிலைகலங்கல் ஆனா ரன்னை 
    தனைப்பிரிந்தே வாடுகின்றார்; நீளுந் துன்பம் 
    பாரிடத்தெ கொண்டுவிட்டார் செயல்ம றந்து 
    பரிதவித்துப் பதறுகின்றார் என்னே துன்பம்! 

    மாரியினிலே பெருமழைதான் கொட்டுகின்ற 
    காரிரவில் பல்லிடிகள் பின்னே வந்த 
    பேரிடிபோல் வந்ததையோ! அன்னை யாரின் 
    பிரிவுதனை என்னசொல்வேன்; காந்தியாரின் 
    சீரினிய பத்தினியே! சிறப்பின் மிக்க 
    கஸ்த்தூரி  யன்னாய்! எம் கருத்தே! கண்ணே! 
    பாரினிலே யெமைவிட்டும் சென்றாய்! இஃதோ 
    பண்புடையார் செயல்? நம்மை மறந்தாய் கொல்போ? 

    சீதையும் சாவித்திரியாம் தேவி மற்றும் 
    சிறப்புள்ள நளாயினி என்போரெல்லாம் 
    காதையிலே உலாவுகின்ற கன்னியர்கள் 
    கடுகேனும் உண்மையங்கு ­ல்லை யென்று 
    ஓதியவர் தலைநாணச் செய்து பெண்மைப் 
    பெருங்குலத்தின் உயர்வுதனை நாட்டினாய்! நல் 
    மாதரசே! மாதர்களை முன்னே வைத்தாய் 
    உன்வாழ்வு மாதிரியை மறத்த லாமோ?

    மாம்பொழிலாள் நடனம்!
    மத்தள மெத்த முழங்க முழங்க
    மாங்குயி லோஎனக் கீதம் இசைக்க
    தத்தரி நெடுங்கண் திசைகளில் ஓடத்
    தாம்தீம் ததிங்கின தோம்தோம் என்று
    முத்தன மூரல் மென்மதி சிந்தி
    முனிவரும் தங்கள் யோகம் மறப்ப
    பத்தரை மாற்றுத் தங்கம் அனையாள்
    பாரத சாத்திரச் சதிர்பயின் றாளே.

    கட்டிள மெல்லுடல் கைகள் அசைய
    கமல்பொற் பாதச் சலங்கை கிலுங்க
    மொட்டிள முலைகள் முந்திடக் கன்னி
    மோகன மெல்லிசை தானும் அசைய
    பட்டுடை காற்றில் விசிறி அலைய
    பார்ப்பவர் நெஞ்சினிற் காதலை மூட்டி
    கட்டுட லாளந்த மாம்பொழி லாள்தன்
    கண்களை வீசிச் சதிர்­டுகின்றாள்.

    ஆடகப் பொன்னணி மன்னிடக் காலில்
    அழகு சிலம்பு புலம்பிட நங்கை
    நாடக மாடுதல் கண்டிடு நம்பியர்
    நங்கையின் வேல்விழி உண்டிடுகின்றார்
    கூடுதல் வேண்டிக் குமைந்திடு கின்றார்
    குறிதவ றாதே ஐம்மலர் மன்மத
    வேடுவன் வீசிடு வெங்கணை தன்னால்
    வெய்துயித் திட்டார் வெந்திடுகின்றார்.

    கோல்வளை வேல்விழி கொன்றிட லாலே
    குமரர்கள் கோதையின் தாமரை போலும்
    கால்தனில் நூபுரக் கிண்கிணி யாகி
    கன்னியின் மெல்லுடல் தழுவ நினைந்தார்.

    கன்னிகை யாளோர் கதிரொளி மின்னல்
    காசினி வந்தே ஆடுதல் போல
    புன்னகைப் பூவினை அள்ளி எறிந்து
    புதுநட மிடுமக் காட்சியைக் கண்டு
    மன்னவன் விச்சவி மகிபனின் மைந்தர்
    மையலில் மூழ்கித் தனித்திட லானார்
    மின்னிடை யாளின் பொன்னணி மேனி
    முயங்கிட வேண்டி மயங்கிநின் றாரே.

    எங்கிருந்து வந்தாள்?
    எங்கிருந்து வந்தாளோ எழிலரசி யாமறியோம்
    தங்கத்தை உருக்கிஅதில் தாவிவரும் உயிர்வார்த்துப்
    பொங்குகின்ற பேரழகு பூரித்து நிற்கும் நல்
    அங்கங்கள் அமைந்திங்கே ஆரனுப்பி னார்அவளை?

    வானத்துச் சந்திரனை வாவியிலே தாமரையை
    கானத்து மாமயிலைக் காரிகையார் குலத்தினையே
    மோனத்தில் மூழ்கி ­வன் முற்ர்ருவித்த பேரயனார்
    தேனொத்த சேயிழையைத் தெரிந்திங்கு படைக்கையிலே

    அதுவரையும் தான்படைத்த அழகென்னும் பொருளெல்லாம்
    மதுவொத்த மைவிழியாள் மலருடலின் அழகின்முன்
    ­துவெல்லாம் ஓர் அழகோ ­ன்பப்பூங் கொடி ­வளின்
    மெதுவுடலின் அழகன்றோ அழகென்று மேதினியார்.

    மெச்சட்டும் என்றிங்கு மெலச் செய்து விட்டானோ?
    நச்சொச்ச நயனத்தின் நளினத்தின் வயப்பட்டு
    விச்சவிநாட் டிளைஞர்கள் வல்லியவள் லீலைக்காய்
    சச்சரவிட் டுலகம்­து சாயட்டும் என்றெண்ணி

    சூதாகச் சுடர்விழியாள் சுவைமிக்க நல்லமுறை
    மாதாக அனுப்பினனோ மாஞ்சோலை மன்றுக்கு
    ஏதெந்தக் காரணத்தால் ஏந்திழையை அனுப்பிடினும்
    போதொத்தாள் போந்ததனால் பொலிவுற்ற தப்பொழிலே.

    குயிற்பேடு பாட்டிசைக்கக் கோலமயில் சதிராடும்
    பயிலும்வெண் சிறையன்னம் பதுமமலர் வீற்றிருக்கும்
    வெயிலணுகா நிழல்சூழ்ந்த வேனில்வேள் பாசறைபோல்
    கயல்புரளும் ஓடைபல கவினூட்டும் அப்பொழிலில்

    பளிங்குமா மண்டபமோர் பாங்கரிலே அமைந்திருந்து
    களங்கமிலாப் பேரழகுக் காட்சி ­வண் நல்கியது
    வளங்கொழிக்கும் மாஞ்சோலை வனப்பினுக்கு வனப்பளிக்கும்
    பளிங்குமா மண்டபத்திற் பாவையிவள் துயில்கின்றாள்.

    கடைசி நம்பிக்கை!
    புத்திரன் பிறந்தால் புத்திக் கூர்மை
    மெத்தவே அவனிடம் மேவுதல் வேண்டும்
    என்றே யாவரும் எண்ணுவர் ஆயின்,
    யானோ எனது புத்தியின் கூர்மையால்
    வாழ்க்கை முழுவதும் வரண்டு கிடக்கிறேன்
    இன்றென் நினைவு ஒன்றே யாகும்:
    என்சிறு பிள்ளை நன்கு வளர்ந்து
    அறியா மையிலும் மடமைச் சிறப்பிலும்
    எவர்க்கும் குறைவிலா திலங்கி அமைதி
    நிலவும் வாழ்க்கை நீள நடாத்தி
    ஈற்றில் இந்த நாட்டை இயக்கும்
    மந்திரி சபையிலும் குந்தி யிருப்பான்
    என்ற ஆசை ஒன்றே
    என்னுளம் மன்னி இருப்பது வாமே. 

    [தேன்மொழி 2, 1955]

    காதல் தத்துவம்!

    சிற்றாறு பேராற்றிற் கலக்க வந்தச்
    சீறுமொலிப் பேராறு கடலிற் சென்று
    வற்றாத அதன் நீலப் பரப்பி னுள்ளே
    வடிவழியும் உலகினிலே தனிமையாக
    நிற்காது பொருளென்றும் மேலேயுள்ள
    நீள்விசும்பில் அலைகாற்றில் கந்தம் சேரும்
    சுற்றாடல் முற்றாயிச் சேதி தானே
    சுந்தரிநீ மட்டுமென்ன விலக்கோ அன்றே.
    வானகத்தை வளர்மலை தான் தழுவி நிற்கும்
    வாருதியின் அலகளெலாம் தழுவி நிற்கும்
    தேனகப்பூ மெல்லிதழைச் சுவைத்து நிற்கும்
    சிதைவண்டு பூமிதனை முத்தமிட்டு
    வானரசன் கதிர்நீண்டு மகிழும் ­ந்த
    வளர்முத்த வகையெல்லாம் கண்டுமென்ன
    கானகத்து மடமானே நீயு மென்னைக்
    கரங்கொண்டு அன்புடனே தழுவாவிட்டால்?

    [ஆங்கிலக் கவி ஷெல்லியின் கருத்தினைத் தழுவியது. தேன்மொழி 4, 1955 மார்கழி]

    முத்தம்!
    முத்தமொன் றுனக்குத் தருவேன் என்றேன்

    சிச்சீ சிச்சீ வேண்டா மென்றாள்
    சித்தத் துனக்கு வேண்டா மாயின்
    வேண்டடி த்ருப்பித் தரலாமென்றேன்.
    கன்னிகை சிரித்தாள் காதல் தெரிந்தது
    கட்டியனைத்தொரு முத்தம் கொடுத்தேன்
    புன்னகையோடு வேண்டாம் ­ஃதோ
    பிடியுங்கள் என்று திருப்பித் தந்தாள்.
    மீண்டும் கொடுத்தேன் மீண்டும் தந்தாள்
    நீண்ட விழியாள் ­வள் செயல் லென்னே!
    முத்தங் கொடுத்தால் வைத்திருக்காளாம்
    முழுதும் திருப்பித் தந்திடு கின்றாள்.


    © காப்புரிமை 2000-2004 Pathivukal.COM/font>
    முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
    aibanner