இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google
 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
மார்ச் 2010  இதழ் 123  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!



தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
கலை / அறிவித்தல்!
[அண்மையில் காலமான இலங்கையின் பிரபல.நாடகக் கலைஞரான ஸ்ரீதர் பிச்சையப்பா பற்றி வீரகேசரி இணையத் தளத்தில் வெளிவந்த செய்தியும், இறுதிக் கிரியைகள் பற்றிய கவிஞர் மேமன்கவியின் தகவலும்]
மேமன்கவி தகவல்:
கலா பவனத்தில் ஸ்ரீதர் பிச்சையப்பா
ஸ்ரீதர் பிச்சையப்பாநண்பர்களின் கவனத்திற்கு.. கடந்த சனிக்கிழமை காலமான இலங்கையின் பிரபல கலைஞர் ''பல்கலைத்தென்றல்'' ஸ்ரீதர் பிச்சையப்பா வின் பூதவுடல் அஞ்சலிக்காக ஸ்ரீ கதிரேசன் வீதியில் உள்ள அவரது இல்லத்தில் புதன்கிழமை 24.02.2010) காலை 11.00 மணிவரை வைக்கப்பட்டிருக்கும். காலை 11.00 மணி முதல் பி.பகல் 2.30 மணிவரை கலாரசிகரனதும், கலைஞர்களினதும், பொது மக்களினதும் அஞ்சலிக்காக கொழும்பு கலா பவனத்தில் வைக்கப்பட்டு பி.பகல் 3.30. மணிக்கு பொரல்லை கனத்தை மயானத்தில் தகனம்
செய்யப்படும்.  
அன்பன்- மேமன்கவி  memonkavi@gmail.com


http://www.virakesari.lk!
ஈழத்துக் கலையுலகுக்கு ஸ்ரீதர் பிச்சையப்பாவின் மறைவு பேரிழப்பு!

ஸ்ரீதர் பிச்சையப்பாஈழத்து இலக்கியத்திறக்கு அடித்தளமிட்டுக் கொடுத்த கலை இலக்கியவாதிகளில் பெரும் மதிப்பிற்குரிய ஒரு தார்மீகக் கலைஞர் ஸ்ரீதர் பிச்சையப்பா. இலங்கையின் சிறந்த நாடகக் கலைஞரான இவர் பல்கலைத்தென்றல் எனவும் வர்ணிக்கப்பட்டவர். ஸ்ரீதர் பிச்சசையப்பா தனக்கென்று ஒரு துறையில் தடம் பதிக்காமல் முழு கலையுலகையுமே தனது ஆளுமையின் கீழ் வைத்திருந்த, இலங்கையின் புகழ்மிக்க மாபெரும் கலைஞராகத் திகழ்ந்தவர். திரையுலகின் பின்னணிப் பாடகர், பாடலாசிரியர், இயக்குனர், எழுத்தாளர், மிமிக்ரி, மற்றும் ஓவியம் என பல்கலைத்துறைகளிலும் புகழ் பெற்றிருந்த ஸ்ரீதர் பிச்சையப்பா, தனது தனிப்பட்ட வாழ்க்கையில் மிகவும் வேதனையான பல கால கட்டங்களுக்குள் வாழ்ந்த ஒருவராவார். பல நாடகங்களில் ரசிகர்களைச் சிரிக்க வைத்த இவர், தனது வாழ்வில் சிரித்து மகிழ்ந்த காலம் குறுகியதாகவே இருந்தது. படிப்பதில் ஆர்வம் காட்ட வேண்டும் என்று பெற்றோர்கள் எவ்வளவோ முயற்சி செய்தும், தன்னைச் சுற்றி கல்வி சிறிது காலங்களிலேயே கரைகாணும் வகையில், அவர் தனது தந்தையாருடன் நாடக பதிவுக்குச் செல்வதில் ஆர்வம் காட்டி வந்தார். அந்த நாட்களே முற்றிலுமான அவரது வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சிறுவர் மலர் நிகழ்ச்சியைத் தொகுத்து வந்த 'ஆரூரன் மாமா' தான் ஸ்ரீதரின் கலையுலக வாழ்வுக்கு வழி சமைத்துக் கொடுத்தவராவார். தனியே நாடகத்துறை என்றில்லாமல் ஆயகலை 64 ஐயும் தனக்குள்ளே புதைத்து வைத்துத் திறம்பட செயற்பட வேண்டும் என்பதில் மிகுந்த ஆவல் கொண்டிருந்த ஒருவர். தனது 9 வயதிலிருந்தே அனைத்துக் கலைகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார் ஸ்ரீதர்.

"மெல்லத் தமிழ் இனிச் சாகும் " என்ற பாரதியின் கூற்றுக்கு ஒரு முறை எதிர்ப்புத் தெரிவித்துப் பேசிய இவர், "மெல்லத் தமிழ் இனிச் சாகாது; ஆனால் பாதிப்பு வரும். அதனையும் தன்னால் மாற்றியமைக்க முடியும்" எனக் கூறிச் செயற்பட்ட தமிழ் கலைஞராவார்.

சிங்கள தொலைக்காட்சி நாடகங்களைக் கூட ஒரு காலத்தில் தமிழில் மொழிபெயர்த்து வழங்கியவர் ஸ்ரீதர். இலங்கையின் ஈழத்தவர் கலையம்சத்தை தென்னிந்திய கலைத்துறையுடன் ஒப்பிட்டுக் கூறும் அளவுக்கு தொண்ணூறுகளில் தென்னிந்திய திரையுலகின் பின்னணியில் ஈழத்துப் பாடல்கள் பலவற்றைப் பாடியுள்ளார்.

தமிழுக்காகவும் தனக்காகவும் எதிர்காலத்தில் ஒரு கவிதைத் தொகுப்பு, ஒரு இறுவெட்டு, ஒரு தொலைக்காட்சி நாடகம் ஆகிய மூன்றையும் தனது பெயரில் வெளியிட வேண்டும் என்பதே இவரது இறுதி ஆசையாக இருந்தது.

எது, எப்படியோ ஸ்ரீதர் பிச்சையப்பா என்ற மாபெரும் கலைஞரின் மறைவு ஈழத்துக் கலையுலகுக்குப் பேரிழப்பு என்பது நிதர்சனமானது என்றால் கூட அது மிகையல்ல.

அனைவரையும் நகைச்சுவையால் மகிழ்வித்த அன்னாரின் ஆன்மா, இறைவன் பாதத்தில் நிரந்தர சாந்தி அடையப் பிரார்த்திப்போம்.

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=20773

 
aibanner

 © காப்புரிமை 2000-2010  Pathivukal.COM. Maintained By: Infowhiz Systems Inc.. Pathivukal is a member of the National Ethnic Press and Media Council Of Canada .
முகப்பு||
Disclaimer|வ.ந,கிரிதரன்