இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google
 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
மே 2010  இதழ் 125  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!



தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
அரசியல்!

இனப்படுகொலை பற்றிய அறிக்கை - றேச்சல் ஜொய்ஸ்!

- சுரேன் சுரேந்திரன் -


சுரேன் சுரேந்திரன்'இனப்படுகொலை எனப்படுவது ஒரு சமூகத்தையோ, ஒரு இனத்தையோ, ஒரு மதத்தினரையோ, ஒரு தேசியத்தையோ முழுமையாகவோ அல்லது பகுதிபகுதியாகவோ, திட்டமிடப்பட்டு, வேண்டுமென்றே அழித்தலாகும். 1948 ஐ.நா கூட்டத்தில் இனப்படுகொலையெனும் குற்றத்தைத் தடுப்பதும் தண்டிப்பதும் என்ற தலைப்பில், இனப்படுகொலையின் சட்டபூர்வமான வரைவிலக்கணம் தரப்பட்டுள்ளது. அதில் 2வது சட்டத்தின்படி ஒரு சமூகத்தையோ, ஒரு இனத்தையோ, ஒரு மதத்தினரையோ, ஒரு தேசியத்தையோ முழுமையாகவோ அல்லது பகுதிபகுதியாகவோ அழிக்கும் நோக்கத்துடன் செய்யப்படும் கீழ்க்கண்ட செயல்கள் இனவழிப்பு என்றும் வரைவிலக்கணத்திற்குள் உள்ளடங்கும்.

ஒரு குழுவினரின் அங்கத்தவரைக் கொலைசெய்தல், ஆபத்து விளைவிக்கும் வகையில் காயப்படுத்தல், மனநோயை ஏற்படுத்தல், அந்தக்குழுவினரின் வாழ்க்கையை முழுதாகவோ, பகுதிபகுதியாகவோ அழிக்கும் வகையில் சூழ்நிலைகளை உருவாக்குதல், அந்தக் குழுவினரின் சந்ததி வளராது தடுக்கும் நோக்குடன் நடவடிக்கை எடுத்தல், ஒரு குழுவினரின் பிள்ளைகளை பலாத்காரமாக இன்னொரு குழுவினரிடம் ஒப்படைத்தல் ஆகியனவே அவையாகும்.

இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் இலங்கை அரசினால் தமிழ் மக்கள் மீது நடாத்தப்படும் கீழ்க்கண்ட செயல்களை நான் இனவழிப்பாகக் கொள்ளப்படவேண்டும் என்று நம்புகிறேன்:-

யாழ் நூலகத்தை எரிக்கப்பட்டது, வட்டுக்கோட்டை தீர்மானம் புறக்கணிக்கப்பட்டது, தமிழ் மக்களை தனிப்பட்ட முறையில் கடத்துவது காணமல் போகவைப்பது, தமிழை இலங்கையில் அரச மொழியாக ஏற்க மறுத்தது, 'பாதுகாப்பு வலயம்" எனக்கூறப்பட்ட பிரதேசங்களில் துப்பாக்கிச்சூடு, குண்டு வீச்சு நடத்தியது, தமிழ் மக்களை இடம்பெயர்த்து பாரம்பரிய தமிழ் பிரதேசங்களில் சிங்களவர்களைக் குடியேற்றியது, இடம்பெயர்ந்த மக்களை முள்வேலிக்குள் சிறைப்படுத்தியது ஆகியவையே. மேற்கூறிய நடவடிக்கைகளை சட்டபூர்வமாக இன அழிப்பு எனப்பிரகடனப்படுத்தி அவற்றைத் தீர்ப்பதற்கு ஐ.நா சபையின் கூட்டத்தைப் பாவிப்பதற்கு தமிழ் மக்களுடன் சேர்ந்து நானும் உழைப்பேன்'. - வைத்தியர். றேச்சல் ஜொய்ஸ் ( கறோ மேற்கு கொன்சவேட்டீவ் அபேட்சகர்)

அமெரிக்காவை அடித்தளமாக வைத்து இயங்கும் இனப்படுகொலையை எதிர்க்கும் தமிழர் (ரீ.ஏ.ஜி) எனும் அமைப்பின் பிரித்தானியப் பிரதிநிதியாகியவரும் 20009ம் ஆண்டு ஐரோப்பிய பாராளுமன்றத் தேர்தலில் சுயேட்சை அபேட்சகராக நின்று 50.000க்கு மேல் வாக்குகளைப் பெற்றவருமாகிய ஜனனி ஜனநாயகம் இது பற்றிக்கூறுகையில் 'எமது இனப்படுகொலைக்குச் சட்டமூலம் அங்கிகாரம் பெறும் பொருட்டு உழைத்து வரும் நாங்கள் வைத்தியர் றேச்சலின் நிகரில்லாத ஆதரவால் மகிழ்ச்சி அடைகிறோம். எல்லாத் தகவல்களையும் கவனமாக ஆராய்ந்த பின்னரே அவர் இத்தகைய முடிவுக்கு வந்துள்ளார் என நான் அறிவேன். இத்தகைய முடிவுக்கு வந்த அவர் சட்ட ரீதியல் இவ்விடயத்தை அணுகத்தைரியமாகவும் உறுதியாகவும் முயற்சி செய்வார் என்பதனையும் நான் அறிவேன். பிரித்தானிய அரசியற்கட்சிகள் ஒன்றும் இலங்கையின் இனப்படுகொலை பற்றி ஒரு தீர்க்கமான முடிவு எடுக்காத நிலையில், றேச்சல் ஜோய்ஸ் போன்றவர்கள் தனித்துவமாக இத்தகைய நிலைப்பாட்டை எடுப்பது எமக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. ஈழத்தமிழருக்கு நடக்கும் இனப்படுகொலையை இனங்கண்டு அதற்குத் தகுந்த பரிகாரம் தேடுவதற்குச் சர்வதேச அரசியல் ஒன்றுபாடும் அனுசரணையும் எவ்வளவு முக்கியம் எனக்கூறத்தேவையில்லை. 2009ல் சில பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் இலங்கையில் இனப்படுகொலை நடந்திருக்கலாம் என்று கூறியிருந்த பொழுதும் றேச்சல் ஜோய்ஸின் இந்தக்கூற்று ஒரு முக்கிய விடயமாகும். சிலருக்கு இப்படிப்பட்ட நிலைப்பாடு அவர்களின் தனிப்பட்ட அனுபவமாகும். உதாரணமாக ஒஸ்விட்ஸ் இல் இருந்து வந்த தனது மூதாதையர்களைக் கொண்ட லீஸ்கொட் இலங்கையில் நடப்பது இனப்படுகொலை என உறுதியுடன் நிற்கிறார்.

இல்லியோனிஸ் சட்டப்பேராசிரியரான 'பிரான்சிஸ் பொயில்" சுதந்திரம் முதல் இலங்கை அரசாங்கங்களின் இனப்படுகொலைக்கு தமிழர்கள் இரையாகுகிறார்கள். போஸ்னியாவில் 'றடோவன் கறட்சிக்" இனப்படுகொலைக்காக குற்ற விசாரணைக்கு உள்ளாக்கப் பட்டிருக்கிறார். இலங்கை அரசு சமீபத்தில் நடைபெற்ற வன்னிப்போரில் மாத்திரம் 50.000க்கும் மேல் கொன்றொழித்தது இனப்படுகொலையாகும். என்று அவர் கூறுகிறார்.

suren.surendiran@googlemail.com


 
aibanner

 © காப்புரிமை 2000-2010  Pathivukal.COM. Maintained By: Infowhiz Systems Inc.. Pathivukal is a member of the National Ethnic Press and Media Council Of Canada .
முகப்பு||
Disclaimer|வ.ந,கிரிதரன்