இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
ஏப்ரில் 2007 இதழ் 88 -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

கடன் தருவோம்!


நீங்கள் கனடாவில் வசிப்பவரா? உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்! விபரங்களுக்கு இங்கே அழுத்துங்கள்

மணமக்கள்!



தமிழர் சரித்திரம்

Amazon.Caசுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்|

In Association with Amazon.ca
தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
Download Tamil Font
இலக்கியம்!

கவிஞர் மாலதி' - ஓர் அஞ்சலி!
- தாஜ் -

கவிஞர் மாலதிகவிஞர் மாலதி, சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு / தொடர்ச்சியான மருத்துவம் பலனளிக்காமல் 27.03.2007 அன்று மாலை இயற்கையெய்தினார். மறு நாள் அவருடைய பெங்களூர் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு பெங்களூர் இலக்கிய நண்பர்களும், அலுவலக நண்பர்களும் அஞ்சலி செலுத்தினர். அன்று நண்பகல் அவருடைய உடல் எரியூட்டப்பட்டது. கவிஞர் மாலதியின் மரணசெய்தி அறிந்து மிகுந்த மனவலி! March 29, 2007 திண்ணையில் பாவாண்ணன், அவர்கள் 'மாலதி மறைவு' குறித்து எழுதியிருந்ததை முதலில் வாசிக்காது தவற விட்டேன். பின்னர் அபிதீன் செய்த தகவல் செய்தார். கஷ்டமாக இருந்தது. மனவலி! நிஜத்தை எதிர் கொள்ள முடியவில்லை!

கவிஞர் மாலதியை நான் சந்தித்தது இல்லை. அவரது இறப்பு குறித்த திண்ணைத் தகவலில், மாலதியின் புகைப்படத்தை பாவா ண்ணன் பிரசுரித்திருந்தார். முதன் முதலில் அவரை அடையாளம் கண்டுகொண்ட நேரம் அதுதான்! ஆனால், அவர் இல்லை! காலமும்,
யதார்த்தமும் நம்மிடையே ஜாலம் காட்டுவதை விடவேவிடாது.

கவிஞர் மாலதியின் கவிதைகளும், கட்டுரைகளும் எனக்குப் பிடிக்கும். என்னுடைய எழுத்துகளும், கவிதைகளும் அவருக்கும் பிடிக்கும். என் மெயில் முகவரியில் அவர் பரிமாறிக்கொண்ட சில கடிதங்கள் அதை மட்டுமே பேசுபவை அல்ல. இலக்கியம் குறித்த உரத்த சிந்தனைகள் அவரது கடிதத்தின் ஆக்ரமிப்பாக இருக்கும்!

நம் கவிஞர்களில், எனக்கு பிரம்மராஜனை பிடிக்கும் அதே அளவுகோலில் கவிஞர் மாலதிக்கும் அவரைப் பிடிக்கும்! ஆபிதீ னின் எழுத்தில் நான் ஈர்ப்பு கொண்டவன் என்றால் அவரும் அப்படிதான்! சரியாகச்சொன்னால், அது இன்னும் கூடுதல். ஜெய மோகனின் இலக்கிய அரசியல் எனக்கும் ஆகாதது மாதிரியே அவருக்கும் ஆகாது.

நான் மதித்த என் சமகாலக் கவிதைக் கலைஞர்களில் அவரும் ஒருவர். பெண் கவிஞர்கள் வரிசையில் மாலதியை தவிர்க்கவே
முடியாது. நட்சத்திர ஆளுமைக் கொண்டவர். அவரது கலைநுட்ப விஸ்தீரணம் மலைப்பை நிகழ்த்துவதாகவும் இருக்கும்!

விடுதலை எப்பவுமே கவிஞர்களுக்கு இஷ்டமான ஒன்று. இன்னும், கடல், மலை, வனம், வானம், நாடுவிட்டு நாடு, கண்டம் விட்டு
கண்டம் என்று தேடி திரிவதில் ஆர்வமும் கொண்டவர்கள். இயற்கையின் ஊடே பயணிப்பதில் அவர்களுக்கு அப்படி யொரு விடுதலைக் கொள்ளும் ஆர்வம்! அந்த வேகத்தில் அவர்கள் இல்லாத உலகத்தைக்கூட விட்டு வைக்கமாட்டார்கள்! கவிஞர் மாலதி புறப்பட்டுவிட்டார்! இன்றைக்கு அப்படியொரு பயணமாக!!

****

கவிஞர் மாலதியின் நினைவைப் போற்றுமுகமாகவும், அவருக்கு அஞ்சலி செய்யும் விதமாகவும் கீழே அவரது கவிதை ஒன்றை
பிரசுரித்திருக்கிறேன். நிலைக்கட்டும் அவரது கலை நுட்பமும். எழுத்தும்.

வலி!
- மாலதி -

யோசனைகளே முடிந்துபோன
வேலையில்லா அவஸ்தையில்
கடமைகளின் சிடுக்குகளில்
சக்களத்தி அறையின்
கிளுகிளுப்புகளில்
தூரங்களில் விலகிப்போன
ஈரங்களில் சமூக சோகங்களில்
போலி வேஷங்களில்
உடல் நலிவு அதிர்வுகளில்
காற்றுக்காய் நீருக்காய்
தேட்டைகளில்
பணவேட்டைகளில்
நல்லவரும் மிதித்து விட்ட
விபத்துகளில்
சுகம் நீ
வலிக்கூற்றின் அணுஅணுவே
நீ சுகம்
எலும்புக்குள் மஞ்ஞைக்குள்
சில்லிட்டு அறிவுத் திப்பிகளில்
புரையோடவிட்டு
வரும் வலியே நீ சுகம்.

satajdeen@gmail.com
www.tamilpukkal.blogspot.com

© காப்புரிமை 2000-2007 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner