பதிவுகள் முகப்பு

எழுத்தாளர் தாமரைச்செல்வியின் 'தாகம்' நாவல் மற்றும் அவர் பற்றிய சிந்தனைகள் ! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
06 நவம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- ஜீவநதி சஞ்சிகையின் எழுத்தாளர் தாமரைச்செல்வி சிறப்பிதழில் வெளியான கட்டுரை. -

எழுத்தாளர் தாமரைச்செல்வியை அவர் எழுபதுகளில் எழுதத்தொடங்கிய காலத்திலிருந்து அறிந்திருக்கின்றேன். நானும் என் பால்ய, பதின்ம வயதுக்ளிலிருந்து எழுதிக்கொண்டுவருவதால் தமிழக, இலங்கைப் பத்திரிகைகள், சஞ்சிகைகளென்று மேய்ந்துகொண்டிருந்தேன். அவ்விதமானதொரு சூழலில் தாமரைச்செல்வியின் எழுத்துகள் அறிமுகமாகின. பின்னர் மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தமிழ்ச் சங்கத்தின் 1980/1981 கால இதழாசிரியர் குழுத்தலைவராகவிருந்த சமயம் வெளியான 'நுட்பம்' வருடாந்த இதழுக்கும் தாமரைச்செல்வி  அவர்கள் 'எதிர்பார்ப்புகள்' என்றொரு சிறுகதையினைத் தந்திருந்தார். அன்றிலிருந்து இன்றுவரை எழுதிக்கொண்டிருக்கின்றார் தாமரைச்செல்வி. சிறுகதை, நாவல், கட்டுரையென்று பன்முக இலக்கிய ஆளுமை மிக்க படைப்பாளிகளிலொருவரான தாமரைச்செல்வி ஓவியரும் கூட. ஊடகங்களில் வெளியான அவரது கதைகள் பலவற்றுக்கு அவரே ஓவியங்களும் வரைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. இது பற்றி அவருடனான முகநூல் உரையாடலொன்றின்போது குறிப்பிட்டிருக்கின்றார்.

தாமரைச்செல்வி அவர்களின் ஓவியங்கள் பற்றி நினைவு கூர்கையில் இன்னுமொரு நினைவும் தோன்றுகின்றது. சில வருடங்களுக்கு முன்னர் கனடாவில் மறைந்த என் அக்கா முறையிலான உறவுக்காரரான மீனா நகுலன் (அவரும் ஓர் ஓவியர்) தாமரைச்செல்வியைப்பற்றியும், அவரது சகோதரியைப்பற்றியும் கூறியது நினைவுக்கு வருவதுண்டு. தாமரைச்செல்வியின் சகோதரி அப்பொழுது யாழ் இந்து மகளிர் கல்லூரியில் விடுதியில் தங்கிப் படித்திருக்க வேண்டுமென்று நினைக்கின்றேன். அவரும் தாமரைச்செல்விபோல் ஓவியர். எழுத்தாளர் தாமரைச்செல்வியின் சகோதரியும் யாழ் இந்து மகளிர் கல்லூரியில் படிப்பதாகவும், அவர் சிறந்த ஓவியரென்றும் மீனா நகுலன் அவர்கள் கூறுவதுண்டு. மீனா நகுலன் தன் இறுதிக்காலத்தில் நகுலேஸ்வரி என்னும் பெயரில் வரைந்த ஓவியங்கள் சில பதிவுகள் இணைய இதழிலும் வெளியாகியுள்ளன.

இவ்விதம் எழுத்தாளர் தாமரைச்செல்வியின் பெயர் பல்வேறு  தருணங்களில் என் வாழ்வில் எதிர்பட்டுக்கொண்டிருந்தது. இன்னுமொரு விடயத்திலும் அவரது பெயர் என்னைக் கவர்ந்திருந்தது. எனக்குப் பிடித்த புனைபெயர்களிலொன்று. அதற்கான காரணத்தை அண்மையில் முகநூலில் அவரது  பதிவொன்றின் அல்லது எதிர்வினையொன்றின் மூலமே அறிந்துகொண்டேன்.  எழுத்தாளர் மீ.ப.சோமுவின் கல்கி சஞ்சிகயில் வெளியான நாவலான 'நந்தவனம்' நாவலில் வரும் நாயகி தாமரைச்செல்வியின் தாக்கத்தால் அவர் வைத்துக்கொண்ட  புனைபெயர் என்பதை  அப்போதே அறிந்துகொண்டேன். அது போல் மீ.பா.சோமுவின் இன்னுமொரு புகழ்பெற்ற் வரலாற்று நாவலான 'கடல் கொண்ட கனவு' நாவலின் நாயகி யாழ்நங்கையின் தாக்கமே எழுத்தாளர் அன்னலட்சுமி ராஜதுரை அவர்கள் தன் புனைபெயராக 'யாழ்நங்கை' என்னும் பெயரைத் தேர்ந்தெடுத்ததன் காரணம் என்பதையும் அண்மையில்தான் அறிந்தேன். அதுவும் எனக்குப் பிடித்த இன்னுமொரு புனைபெயர்.

மேலும் படிக்க ...

எழுத்தாளர் தேவகாந்தனின் இதழியற் பங்களிப்பு மற்றும் 'இலக்கு' சிற்றிதழ் பற்றிய சுருக்கமானதொரு குறிப்பு! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
05 நவம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- ஜீவநதி சஞ்சிகையின் சிற்றிதழ்கள் சிறப்பிதழ் 175இல் வெளியான கட்டுரை. -

எழுத்தாளர் தேவகாந்தனைச் சிறுகதையாசிரியராக, நாவலாசிரியராக நாமனைவரும் அறிவோம். ஆனால் அவரது இதழியற் பங்களிப்பு பற்றி அதிகமாக இலக்கியச்சூழலில் கதைப்பதில்லை. ஏன்? தெரியவில்லை. தமிழ் இலக்கியச் சூழலில் அவரது இதழியற் பங்களிப்பு முக்கியமானது. கனடாத் தமிழ் இலக்கியச் சூழலில் அவரது ஆண்டிதழான கூர் முக்கியமானது.அதேபோல் அவர் இந்தியாவில் இருந்தபோது தொண்ணூறுகளில் அவரை ஆசிரியராகக் கொண்டு வெளியான 'இலக்கு' சிற்றிதழும் முக்கியமானது. அதிக எண்ணிக்கையில் வெளிவந்திருக்காவிட்டாலும் , வெளிவந்த அனைத்து இதழ்களும் காத்திரமான இலக்கியச்சிறப்பு மிக்கவை. புதுமைப்பித்தன் மலர், பாரதியார் மலர், நா.பார்த்தசாரதி மலர், டானியல் மலர், பேராசிரியர் க.கைலாசபதி மலர்கள், ஆண்டு மலர், தி.ஜானகிராமன் மலர் என தரமான , இலக்கியச்சூழலில் நிலைத்து நிற்கக்கூடிய சிற்றிதழ் மலர்கள் அவை.

மேலும் படிக்க ...

'கலைச்செல்வி' சஞ்சிகையும் அதன் இலக்கியப் பங்களிப்பும்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
05 நவம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- ஜீவநதி சஞ்சிகையின் சிற்றிதழ்கள் சிறப்பிதழ் 175இல் வெளியான கட்டுரை. -

கலைச்செல்வி சஞ்சிகையின் ஆரம்பமும், நோக்கங்களும் பற்றி.....

இலங்கைத் தமிழ் இலக்கியத்தில் தடம் பதித்த முக்கியமான சஞ்சிகைகளிலொன்று 'கலைச்செல்வி'.   இச் சஞ்சிகை எழுத்தாளர் சிற்பி  (சிவசரவணபவன்) அவர்களை ஆசிரியராகக்கொண்டு ஆடி 1958இலிருந்து வெளியானது.  'புதிய சொல'  சஞ்சிகையின் , ஜனவரி-மார்ச் 2016 வெளியான,  முதலாவது இதழில்  எழுத்தாளர் அருண்மொழிவர்மன் எழுதிய 'கலைச்செல்வி' பற்றிய கட்டுரையில் முதலாவது கலைச்செல்வி இதழ் ஆகஸ்ட் 1958 வெளியானதாகக் குறிப்பிட்டிருந்தாலும், அதன் முதலாவது இதழ் ஆடி 1958 வெளியானது என்பதை 'நூலகம்' தளத்திலுள்ள ஆடி 1958 இதழிலிருந்து அறிய முடிகின்றது. 1966 வரை வெளியான சஞ்சிகை. அக்காலகட்டத்தில் அதன் 70 இதழ்கள் வெளிவந்துள்ளதாக எழுத்தாளர் அருண்மொழிவர்மன் கலைச்செல்வி பற்றிய 'புதிய சொல்' இதழில் வெளியான கட்டுரையில்  'ஈழத்தின் மிகமுக்கியமான இதழ்களில் ஒன்றாக கலைச்செல்வி 1958 முதல் 1966 வரையாக 8 ஆண்டு காலத்தில் கிட்டத்தட்ட 70 இதழ்கள் வரை வெளியானது' என்று குறிப்பிட்டிருப்பார்.  ஆனால் ஜூன் 2008 ஞானம் இதழில் வெளியான சிற்பியின் 'கலைச்செல்விக்காலம்'  கட்டுரையின் இறுதியில் கலைச்செல்வி  71 இதழ்கள் வெளியானதாகக் கட்டுரையாளர் சிற்பி கூறுவார்: "அவர் கையளித்த பிரதிகளுடன் என்னிடமிருந்த பிரதிகளையும் சேர்த்து, ஆண்டு - மாத வாரியாக ஒழுங்கு படுத்தினேன். அந்த எட்டு ஆண்டுகளில் 71 பிரதிகள் மட்டுமே வெளியாகியிருந்தன; அவற்றுள் இரண்டு பிரதிகள் தொலைந்தே விட்டன. " (ஞானம் ஜூன் 2009 பக்கம் 129)

இவற்றிலிருந்து கலைச்செல்வி சஞ்சிகையின் முதல் இதழ் ஆடி 1958இல் வெளியானதென்பதையும், மொத்தம் 71 இதழ்கள் வெளியானதென்பதையும் அத்துடன் சஞ்சிகை 1966 வரை வெளியானதென்பதையும் அறிய முடிகின்றது. எண்ணிம நூலகம் தளத்தில் கலைச்செல்வி சஞ்சிகையின் இறுதி இதழாக அக்டோபர் 1966 இதழ் பற்றிய விபரமேயுள்ளது. அதற்கான இணைப்பு வேலை செய்யவில்லை. இவ்விதழ் கலைச்செல்வியின் கடைசி இதழா என்பது தெரியவில்லை. ஏனென்றால் கலைச்செல்வி இதழானது தொடர்ச்சியாக மாதா மாதம் வெளிவந்திருக்கவில்லை. சில சமயங்களில் இரு மாதங்களுக்கு ஓர் இதழாகவும் வெளிவந்துள்ளதை நூலகம் தளத்திலுள்ள கலைச்செல்வி இதழ்களிலிருந்து அறிய முடிகின்றது. அருண்மொழிவர்மனின் கட்டுரையிலிருந்து சில மாதங்களில் அது வெளிவராமலுமிருந்திருக்கின்றது என்பதையும் அறிய முடிகின்றது.  டிசம்பர் 1966  வரை இதழ் வந்ததா அல்லது மேற்படி அக்டோபர் இதழே அதன் இறுதி இதழா என்பது நிர்ணயிக்கப்பட வேண்டியதொன்று. எது எபபடியிருந்தாலும் ஆடி 1958இல் வெளியாகத்தொடங்கிய கலைச்செல்வி 1966இன் இறுதிப்பகுதியில் தன் பயணத்தை நிறுத்துக்கொண்டது என்பது தீர்மானமாகத்தெரிகின்றது.

மேலும் படிக்க ...

தேவகாந்தனின் ‘காற்று மரங்களை அசைக்கின்றது’ தேடலைத் தூண்டும் ஒரு விமர்சன நூல்! (பகுதி ஒன்று) - ஈழக்கவி -

விவரங்கள்
- ஈழக்கவி -
ஆய்வு
05 நவம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

“படைப்பு மட்டுமல்ல, படைப்பாளியே இதில் விமர்சனமாவது விசேஷம். அவனது எழுத்தின் செல்நெறி மாற்றமும்,  பின்னால் உண்டாகும் பலமும் பலவீனங்களும்  இங்கே தெளிவாக முன்னெடுத்து வைக்கப்படுகின்றன. க.நா.சு.விலிருந்து ந.ரவீந்திரனூடாக பல விமர்சகர்களும்  இந்நிலையை எடுத்து விளங்கப்படுத்தியிருப்பினும்,  வாசகனை இணங்கச் செய்து தன்னுடன் அழைத்துச் செல்லும்  விந்தையை நூலாசிரியனின் இக்கட்டுரை செய்திருக்கிறது.”  காற்று மரங்களை அசைக்கின்றது; பக். 211

இணையவழி தேடலும் வாசித்தலும் ஒரு உயிர்ப்பான செயற்பாடாக அமைந்து விட்டது, எனக்கு. நிதானமான வாசிப்புக்கு இணையம் வழிசமைக்கின்றது; புதிது தேடலுக்கு வித்திடுகின்றது; அறிதலின் பரப்பை விஸ்தீரனமாக்குகின்றது. வானொலியில் எதிர்பாரத நேரத்தில் நம் மனசை தொடுகின்ற பாடல்களை கேட்க முடிவதைப்போல, இணையத்திலும் பல அரிய புதிய கருத்தியல்களை அறிய முடிகின்றது. அண்மையில் இணைய வழி உசாவலின் போது, 'யு டியூப்'பில் (www.youtube.com/watch?v=LHovj0cb_GY)   “ஆறு சிறுகதைகள் ஒரு பகுப்பாய்வு” என்ற என் புத்தகத்தின் தலைப்பினைக் கண்டேன். யாரோ இதே தலைப்பில் எழுதியிருக்கக்கூடும் என்ற நினைப்பில் அதனை பார்த்து கேட்டபோது வியப்பாக இருந்தது. என் நூலை பற்றிய உரை அது. உரையின்  ஆரம்பமே என் உணர்வுகளை உசுப்பிவிட்டது.

“சென்ற ஆண்டு இலங்கை சென்றிருந்தபோது ஜீவநதி அலுவலகத்தில் வாங்கிவந்திருந்த ஏ.எச்.எம்.நவாஷின் (ஈழக்கவி)  ‘ஆறு சிறுகதைகள்: ஒரு பகுப்பாய்வு’ என்கிற நூலை சமீபத்தில் வாசிக்க முடிந்திருந்தது. நூலையும் ஜீவநதியே வெளியிட்டிருக்கிறது. அதன் 54வது வெளியீடு அது. அடக்கமான அழகிய பதிப்பு.  ஆச்சரியமாக இருந்தது, இன்றைய காலகட்டத்து இலங்கைத் தமிழிலக்கியத்திற்குத் தேவையான விமர்சனக் கூறுகளையும் கண்ணோட்டத்தையும் நூல் தாங்கியிருந்தது காண. 2015இல் வெளிவந்த நூல் இன்றுவரை கவனம் ஆகியிருக்கவில்லையே என மனம் கனத்தது. ஜீவநதியைப் பாராட்டுகிற வேளையில் அதற்கான வருத்தத்தையும் கொஞ்சம் பட்டுக்கொள்ளவேண்டும்.

மேலும் படிக்க ...

14/40 கொண்டை ஊசி வளைவு - சுப்ரபாரதிமணியன் நாவல். மாயத்தைப் பின்வைத்து, .ஆசைகளை முன் வைத்து உள் மனநிலை வெளிப்பாட்டின் எண்ணத்தொகுப்பு! - மு.கவியரசன் , திருநெல்வேலி. -

விவரங்கள்
- மு.கவியரசன் , திருநெல்வேலி. -
நூல் அறிமுகம்
02 நவம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

நாவல்: 14/40 கொண்டை ஊசி வளைவு - சுப்ரபாரதிமணியன்
வெளியீடு - உயிர்மை பதிப்பகம்  |  விலை -ரூபா  135


மனிதன் என்பவன், என்னதான் அறிவாலும், ஆற்றலாலும், சிந்திக்கக்கூடிய செயல்திறன் படைத்தவனாக உயர்ந்து விளங்கினாலும், இவ்வுலகில் வாழும் மற்ற உயிர்களைப் போலத்தான் அவனும். இவற்றிற்குள் இருக்கக்கூடிய வேறுபாட்டை புரிந்துகொள்ளுதல் அவசியம். ஓர் உயிர் பிறக்கிறதென்றால் அதற்கென்று உரிய கடமைகள் இருக்கின்றது. முதலில் ஆரோக்கியமான வாழ்வு சூழலை ஏற்படுத்திக்கொண்டு, தன் இனத்தை, தலைமுறையை அடுத்தக்கட்ட நகர்விற்கு எடுத்துச்செல்ல வேண்டும். இதுதான் எல்லா உயிர்க்கும் பொதுவான, முக்கியமான கடமை. மனிதனும் இதற்கு விதிவிலக்கல்ல. இதன்பின் தான் மனிதனுக்கான அறிவு, நாகரீகம், மற்ற பிற எல்லாம். ஆனால் மனிதன் தன்னுடைய எண்ணவோட்டங்களுக்கு ஏற்ற, சூழ்நிலைக்கும் ஏற்றவாறு நிலையான மனநிலைப்பாட்டோடு இருப்பது கடினம். நடைமுறை வாழ்க்கைக்கும், இப்படித்தான் வாழவேண்டும் என்று யூகித்து எழுதிய வாழ்க்கைக்கும், நிலைத்தன்மை என்பது உறுதியானதாக இருப்பது அரிதானது. இதற்குள் எப்போதும் ஓர் அலை என்பது இருந்துகொண்டே இருக்கும். அவ்வலையைத்தான்  சுப்ரபாரதிமணியனின் 14/40 கொண்டை ஊசி வளைவு எனும் நாவலில் இடம்பெறும் பாத்திரங்களின் வழியாக விவரிக்கிறது.

மேலும் படிக்க ...

நீடித்த இயற்கை சூழல் என்பது கனவா? - சுப்ரபாரதிமணியன் -

விவரங்கள்
- சுப்ரபாரதிமணியன் -
சுப்ரபாரதிமணியன் பக்கம்
02 நவம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

நீடித்த இயற்கை சூழல் என்பது பூஜ்ஜியம் கழிவு மேலாண்மையில் மட்டுமே சாத்தியப்படும் .

திருப்பூர் பின்னலாடை துறை சார்ந்த இரண்டு நிறுவனங்கள் 2020 பிப்ரவரியில் ஒரு சாதனையை நிகழ்த்தி இருக்கிறார்கள். பின்னலாடை துறையில் வெளியேறும் சாயக்கழிவுகள் பற்றிய விமர்சனங்கள் எப்போதும் உண்டு .ஆனால் அவர்கள் அந்த கழிவுகளை சார்ந்து பல்வேறு ஆய்வுகளை தொடர்ந்து நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.  இப்போது நாம் பயன்படுத்திய பழைய போத்தல்களை பயன்படுத்தி சட்டை தயாரிக்கும் பணியில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். நாம் வீசி எறியும் தண்ணீர் போத்தல்கள் பேருந்து நிலையங்களில் குவிந்து கிடக்கும் அவற்றின் மலைத் தன்மை போன்றவை நம்மை எப்போதும் பயமுறுத்தும். அந்த தண்ணீர் போத்தல்களை எடுத்து அதிலிருந்து பைபர் நூலை பிரித்து பின்னலாடை துறையில் பயன்படுத்த இரண்டு நிறுவனங்கள் வெற்றி கண்டிருக்கிறார்கள் .ஒன்று சுலோச்சனா நிட் என்ற ஒரு நிறுவனம். இன்னொன்று சிண்டிகேட் இம்பெக்ஸ். இவர்கள் இருவரும் வெளிநாட்டு தொழில் நுட்பத்தை முன்வைத்து குஜராத்தில் நிகழ்த்தப்பட்ட ஆய்வுகளில் அடிப்படையில் தண்ணீர் போத்தல்களில் இருந்து பைபர் நூலை பிரித்தெடுக்கும் முயற்சியில் வெற்றி பெற்று பின்னர் ஆடைகளை உற்பத்தி செய்திருக்கிறார்கள் .அது ஆஸ்திரேலியாவின் உலக ஓபன் டென்னிஸ் போட்டிகளின் போது பயன்படுத்தப்பட உள்ளது .இந்தப் போட்டியின் போது பந்துகளை சேகரிக்கும் தரும் சிறு பையன்கள் பயன்படுத்துகிற பின்னலாடை  ஆகியுள்ளன.  இந்த தண்ணீர் போத்தல்கள் டீசர்ட்டுகளாக  மாறியுள்ளன .உலகத்தில் முதல் முயற்சி இது .அந்த டீ சர்டுக்களை அடிக்கடி துவைக்க வேண்டியது இல்லை .

மேலும் படிக்க ...

தொடர் : தீவுக்கு ஒரு பயணம் (2) - கடல்புத்திரன் -

விவரங்கள்
- கடல்புத்திரன் -
நாவல்
01 நவம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

"(கோல்) கால் " துறைமுகம்  ( யூனெஸ்கோவினால் அமெரிக்காவின்  ஏழு அதிசயங்கள் ஒன்று என பதியப்பட்டிருக்கிறது   )

 வீட்டை அடைந்த பிறகு , தில்லை  மறுபடியும் தேனீர் அருந்தினான் . ஜெயந்திக்கும்  , பூமலருக்கும்  ரிம் கொட்டனே   போதுமாகவிருந்தது .

      வீட்டிலே , பூமலர் செய்திருந்த ' கோழிக்கறி ' பழைய நினைவு ஒன்றைக் கிளறி விட்டது . ஜெயந்தியும் " நல்லாயிருக்கிறதே " என்று ரெசிபியைக் கேட்டாள் . தில்லை  " இப்படி உருளைக் கிழங்கு கறியையும் வைத்தால் ...தூக்கலாக இருக்கும் " என்றான் . "  இதுக்கு எப்பவும் சாப்பாட்டு நினைப்பு தான் " என்று ஜெயந்தி சொல்ல பூமலர் சிரித்தாள் . யாழ்ப்பாணத்து பிளவுஸ் , மொக்கங் கடைகளில் ரோஸ்ட் கறிகளில்  இந்த உப்பும் , உறைப்பும் அப்படியே இருந்தது . " முதல் நாள் மெரினேற் பண்ணி குளிர்ப்பெட்டியில் வைத்து காலையில் எடுத்து சமைக்க வேண்டும்  .  இங்கே என் சினேகிதி ஜீவி நல்லா சமைப்பார் . அவர் தான் சொல்லித் தந்தார் .  இப்படி  வைத்தால் சித்திராவும் , சுமியும் உடனேயே முடித்து விடுவார்கள் . திரேசாவின் பிள்ளைகளுக்கும் பிடிக்கும் " என்றாள் .

     சிறிது நேரம்  இளைப்பாறிய பிறகு ,  " களைப்பு இல்லை என்றால் பக்கத்தில் இருக்கிற ஒன்றை பார்த்து வரலாமே  ".   என்றாள்  பூமலர் . " இரண்டு மணி நேரம் ஓடி கலைத்திருப்பாய் , நான் ஓடுகிறேன் " என்று தில்லை கூற    (கார் ஓட்டம் ) பூமலர்  தில்லையிடம்  .   சாவியைக்  கொடுத்து கராஜ் கதவைத் திறந்து விட்டாள் . குறுக்கலான நிலைகளைத் தட்டிக் கொள்ளாமல்  , ஒரு கட்டத்தில்  பக்கக் கண்ணாடி ஒன்றை மடித்து விட்டே பிரயாசைப்பட்டு வெளியில் எடுத்தான் .  " இந்த கண்ணாடியை மடிக்கலாம் என்று எனக்கு தெரியாதே  " ....என்று வியக்கிறாள் . அரும்பொட்டு இடைவெளியில் கராஜ் கதவுகளை ஏன் அமைக்கிறார்கள்  .  பழைய கார்கள் தற்போதைய காரை விட அகலத்தில் குறந்தவையா இருக்க வேண்டும் . அப்ப இருந்த  கட்டட விதியை  ( பில்டிங் கோட்) மாற்றாமல் விட்டு விட்டார்கள் போல இருக்கிறது . இப்படியும் ஒரு ரோதனை . .  வழி காட்ட செலுத்துகிறான் .

மேலும் படிக்க ...

கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையம் - எழுத்தாளர் அரங்கம் 3

விவரங்கள்
- தகவல் - பேராசிரியர் இ.பாலசுந்தரம் -
நிகழ்வுகள்
01 நவம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இலக்கியப்பூக்கள் இதழ் 267 - முல்லைஅமுதன் -

விவரங்கள்
- முல்லைஅமுதன் -
நிகழ்வுகள்
31 அக்டோபர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

வணக்கம், இவ்வாரம் வெள்ளிக்கிழமை (04/11/2022) லண்டன் நேரம் இரவு 08.15இற்கு(இரவு 8.00 மணி பிரதான செய்திக்குப்பிறகு) அனைத்துலக உயிரோடைத்தமிழ் மக்கள்வானொலியில் (www.ilctamilradio.com) இலக்கியப்பூக்கள் இதழ் 267 ஒலிபரப்பாகும்.

நிகழ்வில்,

         கவிஞர்.பழ மோகன்(சிங்கப்பூர்) (கவிதை: பெருங்கடல் நட்பில் கலக்க...நன்றி:அய்யப்ப மாதவன்(தமிழகம்),
         எழுத்தாளர்/முனைவர்.முபீன் சாதிகா(குறுங்கதை:புத்தகம்),
         கவிஞர்.பிரேம பிரபா)சென்னை) (கவிதை:ஒற்றைப் புன்னகை),
         எழுத்தாளர்.ஜெயா சுந்தா (குறுங்கதை:தோல்வி..),
         எழுத்தாளர்.'பாடுமீன்'சிறீஸ்கந்தராஜா(அவுஸ்திரேலியா) (இலக்கியம்: குறளின்பம்),
         கவிஞர்.பழநி பாரதி (கவிதை:வீட்டுக்காரம்மாள் சாமிக்கு...),
         கவிஞர்.பா.திருச்செந்தாழை (கவிதை:ஒரு பாறையின்  மீது வெய்யில் விழுந்து...),
         கவிஞர்.இரா.மதிராஜ்(தமிழகம்) (கவிதை:அறச்சாலை..),
         கவிஞர்.அகமது பைசால் (இலங்கை) (கவிதை:புது இடம்..),
         கவிஞர்.காசி ஆனந்தன் (குறுங்கதை:இரவு...),

ஆகியோரின் படைப்புக்கள் இணைகப்பட்டுள்ளன.

மேலும் படிக்க ...

ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் நடத்தும் இணைய வழிக் கலந்துரையாடல்: நூல்களைப் பேசுவோம் தொடர்: “ஒல்லாந்த தளபதி சுவார்தகுரூனின் யாழ்ப்பாண நினைவுத்திரட்டு”

விவரங்கள்
ரொறன்ரோ தமிழ்ச் சங்கம்
நிகழ்வுகள்
31 அக்டோபர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மேலும் படிக்க ...

சிந்தனைக் களம்: நாட்டிய நாடக வடிவமைப்பு (Choreographic techniques of Dance Drama)

விவரங்கள்
- தகவல்: பேராசிரியர் நா.சுப்பிரமணியன் -
நிகழ்வுகள்
31 அக்டோபர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மேலும் படிக்க ...

படித்தோம் சொல்கின்றோம்: நாட்டியக் கலாநிதி கார்த்திகா கணேசரின் இந்து மதத்தின் பரிணாமச் சிந்தனைகள் - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
31 அக்டோபர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

நாட்டியக் கலாநிதி  கார்த்திகா கணேசர், நாட்டியம் மாத்திரம் ஆடவில்லை. அதற்கும் அப்பால் சென்று பல கலைஞர்களை உருவாக்கிய ஆளுமை.  கார்த்திகா   ஏனைய  நடன  நர்த்தகிகளிடமிருந்து  வேறுபட்டிருப்பதற்கு  அவரிடமிருக்கும்  ஆற்றலும்,  தேடலும் மாத்திரம்  காரணம்  அல்ல.   நாட்டியக்கலை தொடர்பாக  அவர் நீண்டகாலம் ஆய்வுசெய்து  நூல்களும் எழுதியிருக்கும் எழுத்தாளரும் ஆவார்.   நடன நர்த்தகியாக  மாத்திரமன்றி  தமது ஆய்வின்  வெளிப்பாடாக  நாட்டியக் கலாநிதியாகவும்  மிளிர்ந்தவர்.  இதுவரையில் தமிழர் வளர்த்த ஆடற்கலைகள், காலம் தோறும்  நாட்டியக்கலை,  இந்திய  நாட்டியத்தின்  திராவிட  மரபு, நாட்டியக்கடலில் புதிய  அலைகள் முதலான நூல்களை வரவாக்கியிருப்பவர.  இந்த ஆண்டு  தனது பவளவிழாக்காலத்தில் மற்றும் ஒரு நூலை அவர் வரவாக்கியிருக்கிறார்.  நூலின் பெயர் இந்து மதத்தின் பரிணாமச் சிந்தனைகள்.   

இந்த நூல் என்னிடம் வந்து சேர்ந்தபோது, இதனை எவ்வாறு உள்வாங்கப் போகின்றேன் என்ற தயக்கமும் முதலில் வந்தது. சமகாலத்தில் இந்த பொன்னியின் செல்வன் திரைக்கு  வந்து நடக்கின்ற அலைப்பறைகளுக்கு மத்தியில், இந்த நூல் எனது வசம் வந்து சேர்ந்தது. இந்தியா சுதந்திரமடைவதற்கு முன்னர், அங்கே சைவம், வைணவம், சமணம் ஆகிய மதங்கள்தான் இருந்தன.  இந்தியாவை பல வருடகாலம் தங்களது ஆளுகைக்குள் வைத்திருந்த ஆங்கிலேயர்கள், சுதந்திரத்தையும் தந்துவிட்டு, மூன்று மதங்களையும் ஒரே குடைக்குள் வைத்து இந்து மதம் என்ற பொதுப்பெயரை வைத்துவிட்டு,  மகாராணியின் மகுடத்தில் பதிப்பதற்காக கோகினூர் வைரத்தையும் எடுத்துச்சென்றுவிட்டார்கள்.  மகாராணி மறைந்தபின்னர்தான் அந்தக்கிரீடத்தில் இருப்பவை எங்கெங்கிருந்து சென்றன என்பதும் தெரியவந்துள்ளது. கார்த்திகா கணேசரின் இந்த நூல் பற்றி பேசுவதற்கு முன்னர் ஒரு குட்டிக்கதையை சொல்லிவிடுகின்றேன்.  கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கள். சொன்னபிறகும் கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கள். ஒரு குழந்தை தனது அம்மாவிடம் கேட்கிறது.    அம்மா,  நான் இந்த உலகத்திற்கு எப்படி வந்தேன்...? 

மேலும் படிக்க ...

விருதுகளும் , தமிழ் எழுத்தாளர்களும்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
30 அக்டோபர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

தமிழ் எழுத்தாளர்கள் பொதுவாக விருதுகளுக்கு அடிமையானவர்களாகத்தான் நடந்துகொள்கின்றார்கள். கன்னட எழுத்தாளரான எம்.எம். கல்பூர்கி அவரது சமய மூட நம்பிக்கைகள்  பற்றிய கருத்துகளுக்காகப் படுகொலை செய்யப்பட்டபோது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த எழுத்தாளர்கள் தாம் பெற்ற சாகித்திய விருதுகளைத் திருப்பிக் கொடுத்தார்கள். ஆனால் ஒரு தமிழ் எழுத்தாளர் கூடத் தனது விருதினைத் திருப்பிக் கொடுக்கவில்லை.  இலங்கையில் நீண்ட காலம் தமிழ் மக்கள் மீதான அடக்கு ஒடுக்கு முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்த போர்ச்சூழலில் கூட ஒருவர் கூட தாம் பெற்ற சாகித்திய விருதினைத் திருப்பிக் கொடுக்கவில்லை.  எழுத்தாளர் நெல்லை க.பேரனின் குடும்பமே இராணுவத்தின் எறிகணைத் தாக்குதலில் கொல்லப்பட்டது. அப்பொழுதும் யாரும் பெற்ற விருதினைத் திருப்பிக் கொடுக்க எண்ணவில்லை. புதியதை வாங்குவதை நிறுத்தவுமில்லை.  'மாமனிதர்'  சொக்கன் கூடத் தான் பெற்ற சாகித்திய விருதுகளைத் திருப்பிக் கொடுக்கவில்லை.  முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்த பேரழிவைத் தொடர்ந்த ஆண்டுகளில் கூட வழக்கம்போல் விருதினை வாங்கிக்கொண்டுதானிருந்தார்கள்.  தேசிய விடுதலைப்போருக்காகக் குரல் கொடுத்துக்கொண்டு, இலங்கை அதிபரிடமிருந்து விருதுகளை தொடர்ந்தும் வாங்கிக்கொண்டுதானிருந்தார்கள்.

பணமுடிப்புடன் கூடிய விருதுகள் அவற்றைப்  பெறும் எழுத்தாளர்களுக்கு பொருளியல்ரீதியில் உதவும் தன்மை மிக்கவை. விருதுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் படைப்புகளைப் பொறுத்தவரையில் அவை பின்வரும் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.

மேலும் படிக்க ...

கவிதை: வித்தைக்காரனின் பின்னால் இருப்பவன் - துவாரகன் (சு.குணேஸ்வரன் ) -

விவரங்கள்
- துவாரகன் (சு.குணேஸ்வரன் ) -
கலாநிதி சு.குணேஸ்வரன் பக்கம்
29 அக்டோபர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அவரவர் நிலைக்கு இறங்கி வருகிறாய்
மனிதநேயம் என்கிறார்கள்
அவர்களோடு தேநீர் அருந்துகிறாய்
நட்பானவர் என்கிறார்கள்
அவர்களின் நலத்தை விசாரிக்கிறாய்
நல்ல மனிதர் என்கிறார்கள்
அநீதிக்கு எதிர்க்குரல் தருகிறாய்
நியாயமானவர் என்கிறார்கள்
ஏற்றத்தாழ்வை அகற்றக் கேட்கிறாய்
நீதிமான் என்கிறார்கள்
சந்நிதானத்தில் கண்மூடிப் பாடுகிறாய்
பக்தியானவர் என்கிறார்கள்
மரபுகளைக் கட்டியிழுக்கிறாய்
பண்பாடானவர் என்கிறார்கள்
உலக விவகாரங்களை உரத்துப் பேசுகிறாய்
அறிவாளி என்கிறார்கள்

மேலும் படிக்க ...

புத்தக கண்காட்சி, நூல் வெளியீடுகள், உரைகள் …. முழு நாள் நிகழ்வு - தகவல்- எம்.பெளசர் -

விவரங்கள்
- எம்.பெளசர் -
நிகழ்வுகள்
29 அக்டோபர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மேலும் படிக்க ...

மலையகத் தலைவர்களை மறுபரிசீலனை செய்யத் தூண்டும் “மலையக அரசியல் தலைவர்களும் தளபதிகளும் எனும் சி.வி.வேலுப்பிள்ளையின் நூல். - சு.முரளிதரன் -

விவரங்கள்
- சு.முரளிதரன் -
இலக்கியம்
28 அக்டோபர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மிகப்பெரும் வியப்பையையும் விந்தையையும் ஏற்படுத்தும் விதமாகவும் மலையகத்தில் வேர் விட்டு வளரும் சிவியியலுக்கு (சி.வி. வேலுப்பிள்ளை) ஆழ்ந்த கனதியை ஏற்படுத்தம் விதமாகவும் 'மலையக அரசியல்: தலைவர்களும் தளபதிகளும்' எனும் சி.வி. வேலுப்பிள்ளையின் கட்டுரைகளை தாங்கிய நூல் சென்னை தாய் வெளியீடாக திரு மு. நித்தியானந்தன் மற்றும் திரு எச். எச். விக்கிரமசிங்க அவர்களின் பெரும் முயற்சியினால் வாசகர் கைகளுக்குக் கிட்டியுள்ளது.

பேராசிரியர் சோ. சந்திரசேகரனுக்குக் காணிக்கையாகச் செலுத்தப்பட்ட இந்த நூலுக்குள் நுழையும் மலையகம் குறித்ததேடல் முயற்சியில்  மலையக வரலாற்றின் விட்டுப்போன பக்கங்களை தேடுபவர்களும் அல்லது இதுவரைக் கிடைத்த ஆதாரங்களை வைத்து சிந்திப்பவர்களும் தமக்குள் தாமே சிலிர்த்துப் போகும் வண்ணம் மலையகம் சார்ந்த ஆளுமைகளைத் தனது சொல்லோவியங்களால்  தகவல்களாலும் முன் அனுமானங்களாலும் நாம் காணாத ஒரு மலையக வரலாற்றை சி.வி படைத்துள்ளார் எனலாம்.

மேலும் படிக்க ...

எழுத்தாளர் செ.சுதர்சனின் 'காலிமுகம் 22' கவிதைத்தொகுப்பு!

விவரங்கள்
- வ.ந.கி -
நிகழ்வுகள்
28 அக்டோபர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மேலும் படிக்க ...

மெல்பனில் இலக்கிய சந்திப்பு - கனடா ஶ்ரீரஞ்சனியின் 'ஒன்றே வேறே' புதிய கதைத்தொகுதி வெளியீடு! - தகவல் - முருகபூபதி -

விவரங்கள்
- தகவல் - முருகபூபதி -
நிகழ்வுகள்
28 அக்டோபர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மேலும் படிக்க ...

தொடர் நாவல் - நவீன விக்கிரமாதித்தன் (8) - காலக்கப்பற் பயணமும் 'எதிர்காலச்சித்தன் பாடல்' கவிதையும்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
நாவல்
26 அக்டோபர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அத்தியாயம் எட்டு -  காலக்கப்பற் பயணமும் 'எதிர்காலச்சித்தன் பாடல்'  கவிதையும்!

அந்த உலகம் எனக்குப் பலவிதங்களிலும் பிடித்த உலகம் என்பேன். என் மனத்தில் சஞ்சலங்கள் அலையடிக்கத்தொடங்குகையில், என் மனத்தில் சஞ்சலப்புயல்கள் வீசத்தொடங்குகையில், என் மனத்தின் அமைதி சீர்குலையத்தொடங்குகையில், நான் அந்த உலகை நோக்கிப் பயணமாகத் தொடங்குகின்றேன். அந்த உலகப்பயணம் தரும் திருப்தியை எனக்கு வேறெந்தப் பயணமும் தருவதில்லை. அந்த உலகில் நானும் காட்சிகள் அற்புதமானவை. பறவைகளைப் பற்றிய புரிதல்களை, அறிவியற் சாதனைகளை வெளிப்படுத்தும் அந்த உலகில் நான் எவ்வளவு நேரமானாலும் என்னை மறந்து பயணிப்பேன்.

அந்த உலகின் மிகச்சிறப்புகளிலொன்று காலக்கப்பல். அந்த உலகின் காலக்கப்பலைப்போல் இன்னுமொரு காலக்கப்பலை நான் வெறெங்கும் கண்டதில்லை. அந்தக் காலக்கப்பற் பயணத்துக்காகவே நான் அடிக்கடி அங்கு செல்வதுண்டு. அந்தக்கப்பலிலேறி ஆதியில் இங்கு ஆட்டம்போட்ட இராட்சதப்பறவைகள், மிருகங்களின் காலகட்டத்துக்கு என்னால் மிகவும் இலகுவாகச் சென்று விட முடிகின்றது. ஆனால் அக்காலக்கப்பல் என்னை அவற்றிடமிருந்து திறமையாக பாதுகாக்கவும் செய்கின்றது. என்னால் அம்மிருகங்கள்,பட்சிகளின் அபாயங்களைப்பற்றிய சிந்தனைகளை நீக்கி அங்கு அக்கப்பலில் பயணிக்க முடிகின்றது.என்னால் உலகின் மகா சர்வாதிகாரிகளின் ஆட்டங்களை , ஏற்படுத்திய பேரழிவுகளை அவர்களுக்கருகில் நின்று அவதானிக்க அக்கப்பல் சந்தர்ப்பங்களை ஏற்படுத்தித் தருகின்றது. கிளியோபட்ராவின் பேரழகில் எனை மறக்க முடிகின்றது. இராஜஇராஜ சோழனின் கப்பற் படையில் தென்கிழக்காசியாவை நோக்கி அல்லது இலங்கையை நோக்கிப் பயணிக்கவும் முடிகின்றது.

சர்வாதிகாரிகளும், கொடுங்கோலர்களும், அமைதியின் காவலர்களும்,  மகான்களும் அருகருகாக வாழும் அற்புத உலகம் அது. அவ்வுலகுக்கு அடிக்கடி பயணிக்கின்றேன். விரும்பினால் நீங்களும் என்னுடன் இணைந்துகொள்ளலாம். நான் பெற்ற இன்பத்தை நீங்களும் பெற்றுக்கொள்ளலாம். என்ன நீங்கள் பயணத்துக்குத் தயாரா நண்பர்களே! போர்களாலும், பேரழிவுகளாலும், வர்க்க, வர்ண வேறுபாடுகளாலும்
பற்றியெரியும் இவ்வுலகின் கனலிலிருந்து உங்களை என்னால் காப்பாற்ற முடியும் நீங்களும் என்னுடன் அவ்வுலகுக்குப் பயணிக்க முடிந்தால் நண்பர்களே! நண்பர்களே! ஒவ்வொரு நூலும் காலக்கப்பல்தான். நூல்களை உள்ளடக்கிய நூலகம் ஒவ்வொன்றும் காலக்கப்பல்களை உள்ளடக்கிய நிலையம்தான்.

மேலும் படிக்க ...

கவிஞர் விக்கிரமாதித்யன் பற்றியொரு குறிப்பு! - ஊர்க்குருவி -

விவரங்கள்
- ஊர்க்குருவி
இலக்கியம்
26 அக்டோபர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

முகநூற் பதிவொன்றில் திரு.கந்தசாமி ஆர் (Kandasamy R) அவர்கள் பின்வருமாறு எழுதியிருந்தார்:

"நீயா நானாவில் மன உளைச்சல் பற்றிப் பேசியதில் கவிஞர் விக்ரமாதித்யன் அவர்களின் மகன் சொன்ன விஷயங்கள் நெஞ்சை உறுத்தியது. 'எங்க அப்பா மாதிரி நான் ஆகிடக் கூடாது. அதனாலதான் இலக்கியத்தை மூட்டை கட்டி வைத்து விட்டு சராசரி மனிதனாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். காரணம் எங்கப்பா வாழ்க்கையில ஜெயிக்கல. உங்கப்பா மாதிரி நீ வந்துடக் கூடாதுன்னு எங்கம்மா சொல்லி சொல்லி என்னை வளர்த்தாங்க' என்று சொன்னபோது அளவிடமுடியாத அளவுக்கு வருத்தம் ஏற்பட்டது."

மேலும் படிக்க ...

நினைவு கூர்வோம்: கவிஞர் திருமாவளவன் & கலை, இலக்கிய விமர்சகர் வெங்கட் சாமிநாதன் - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
26 அக்டோபர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கவிஞர் திருமாவளவனைப் பற்றிய நினைவுகள் அவ்வப்போது எழுவதுண்டு. இன்றும் அவ்விதமே எழுந்தது. இப்பொழுதுதான் உணர்ந்தேன் அவரது நினைவுதினம் அக்டோபர் ஐந்து, 2021. எவ்வளவு இலகுவாக அவரை மறந்து விட்டிருக்கின்றோமென்று  தோன்றியது. கவிஞர் திருமாவளவனைப் பற்றி எண்ணியதுமே கூடவே கலை, இலக்கிய விமர்சகர் வெங்கட் சாமிநாதனின் நினைவும் எழுந்து விடுகின்றது. திருமாவளவனின் மீது மிகுந்த அன்பு வைத்திருந்தவர் வெங்கட் சாமிநாதன் அவர்கள். திருமாவளவன் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தகவலைப் பதிவுகள் இணைய இதழ் மூலம் அறிந்து மனம் வாடி மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். கவிஞர் திருமாவளவன் மறைந்து பத்து நாட்கள் கடந்த நிலையில் அக்டோபர் 15, 2015 அன்று அவரும் மறைந்து விட்டார்.

சந்திக்கும் நேரங்களில் எல்லாம் இலக்கியம் பற்றி  என்னுடன் கதைத்த, கதைக்கும்  கனடா எழுத்தாளர்கள் வெகு சிலர். பலரும் இலக்கியம் தவிர்ந்த வேறு  பல விடயங்களைத்தான் கதைப்பார்கள். இவ்விதம் இலக்கியம் பற்றிக் கதைத்த ஒரு சிலரில் கவிஞர் திருமாவளவன் ஒருவர். கவிஞராக அறியப்பட்டாலும் சிறந்த சிறுகதையாசிரியரும் கூட. இது போல் பதிவுகள் இணைய இதழ் மீது மிகுந்த மதிப்பும், என் மீது மிகுந்த அன்பும் வைத்திருந்தவர் கலை, இலக்கிய விமர்சகர் வெங்கட் சாமிநாதன். இறுதிவரை பதிவுகள் இணைய இதழுக்குப் படைப்புகள் அனுப்பிக்கொண்டிருந்தவர். அவ்வப்போது கனடா வந்திருந்தபோது என்னை நேரில் சந்திக்க முடியாமல் போனது பற்றி வருந்தி எழுதிக்கொண்டிருந்தார்.

அக்டோபரில் மறைந்த இவ்வீர் இலக்கிய ஆளுமைகளையும் காலம் கடந்தாவது இத்தருணத்தில் நினைவு கொள்கின்றேன். கூடவே கவிஞர் திருமாவளவன் பற்றி அவ்வப்போது எழுதிய  எனது குறிப்புகளிலிருந்து சில பகுதிகளையும் பகிர்ந்துகொள்கின்றேன். கூடவே வெங்கட் சாமிநாதன் திருமாவளவனின் உடல் நிலை குறித்து அனுப்பிய மின்னஞ்சலையும் பகிர்ந்துகொள்கின்றேன்.

மேலும் படிக்க ...

தொடர்கதை: நவீன விக்கிரமாதித்தன் (7) - அத்தியாயம் ஏழு - ஓரு பழைய புத்தகக்கடை அனுபவமும், எழுத்தாளர் முத்துசிவத்துடனான சந்திப்பும்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
நாவல்
24 அக்டோபர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அத்தியாயம் ஏழு - ஓரு பழைய புத்தகக்கடை அனுபவமும், எழுத்தாளர் முத்துசிவத்துடனான சந்திப்பும்!

எனக்குப் பிடித்த விடயங்களிலொன்று பழைய புத்தகக் கடைகளில் புத்தகங்கள் வாங்குவது. புதுக் கடைகளில் வாங்குவதை விடப் பழைய புத்தகக் கடைகளில்  வாங்குவதிலுள்ள இன்பமே தனி. பழைய புத்தகக் கடைகளில் கிடைப்பதைப்போல் எல்லாவகைப் புத்தகங்களும் புதுப்புத்தகக் கடைகளில் கிடைப்பதில்லை. உதாரணத்துக்கு ஒன்று கூறுவேன். உங்களால் பழைய  புத்தகக் கடைகளில் வாங்குவதைப்போல் புதுப்புத்தகக் கடைகளில் பால்ய பருவத்தில் பிடித்தமான இதழொன்றில் தொடராக வெளியான, ஓவியங்களுடன் கூடிய , அழகாக 'பைண்டு' செய்யப்பட்ட நூல்களை ஒருபோதுமே பெற முடியாது. அந்நூல்களைக் கைகளால் அளைகையிலுள்ள சுகம் இருக்கிறதே அதுவொரு பெரும் சுகமென்பேன். அவ்வகையான சுகத்தினை ஒருபோதுமே உங்களால் புதுப்புத்தகக் கடைகளில் பெற முடியாது. அவை மானுட இருப்பின் ஒரு காலத்தின் பதிவுகளை உள்ளடக்கியவை. நான் அவ்வகையாக 'பைண்டு' செய்யப்பட்ட புத்தகங்களைப்பற்றிக் கூறுகின்றேன். நான் இவ்விதம் கூறுவதால் என்னை நீங்கள் நான் புதுப்புத்தகக்கடைகளின் பிரதான எதிரி என்று மட்டும் தப்புக் கணக்குப் போட்டு விடாதீர்கள்.
ஆயினும் அவ்விதம் நீங்கள் கருதினால் அதை நான் தடுக்கப்போவதில்லை. ஏனெனில் அது உங்களின் சுதந்திரத்தில் நான் தலையிடுவதாக அமைந்து விடும். அதற்காக நான் வருந்தப்போவதுமில்லை.

அண்மையில் கூட வழியில் நானொரு பழைய புத்தகக் கடையினைக் கண்டபோது மனம் கேட்கவில்லை. உள்ளே எட்டிப்பார்த்தாலென்ன என்ற எண்ணமெழுந்தபோது வீடு முழுக்கக் குவிந்துள்ள புத்தகக் குவியல்களை ஒருமுறை எண்ணினேன். அண்மையில்தான் முடிவு செய்திருந்தேன் இனியும் புத்தகங்கள் வாங்குவதில்லையென்று. வாங்கிக்குவித்துள்ளவற்றைக் கொஞ்சம் கொஞ்சமாக வேண்டியவர்களுக்கு, புத்தகப்பிரியர்களுக்கு, நூலகங்களுக்குக் கொடுத்துவிடவேண்டுமென்று. இருந்தாலும் மனங் கேட்கவில்லை. இம்முறைமட்டும் கடைசித்தடவையாக இருந்துவிடட்டுமென்று எண்ணினேன். இவ்விதம் முடிவெடுத்தவுடன் அந்தப் பழையப் புத்தகக் கடைக்குள் நுழைவது எளிதாயிற்று.

மேலும் படிக்க ...

மாநிலத்தில் தீபாவளி வாய்த்திருக்கு எமக்கு ! - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர், மெல்பேண், அவுஸ்திரேலியா -

விவரங்கள்
- மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர், மெல்பேண், அவுஸ்திரேலியா -
கவிதை
24 அக்டோபர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மனமகிழ மனநிறைய கொண்டாடி நிற்க
தினமதனை முன்னோர்கள் வகுத்துமே நின்றார்
அறிவுடனும் தெளிவுடனும் அவரளித்த கொடையே
ஆனந்தம் பெருக்குகின்ற திருநாட்க ளாகும்

தீபமது வாழ்வினிலே சிறப்பளித்து நிற்கும்
தீபவொளி எல்லோர்க்கும் மங்கலமே ஆகும்
மாவிருளைப் போக்குதற்கு தீபவொளி தேவை
மனமகிழ  தீபாவளி வருகிறது வாழ்வில்

மேலும் படிக்க ...

தொடர்கதை: தீவுக்கு ஒரு பயணம்! (1) - கடல்புத்திரன் -

விவரங்கள்
- கடல்புத்திரன் -
நாவல்
24 அக்டோபர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கண்ணால் சிரித்து ,பேசி காவியம் பாடிய மகள் இறந்து போன பிறகு  , வெளியில் எங்கையாவது போய் வந்தால் நல்லது ' என தோன்றியது .  நோவாகோர்ஸியாவிலிருந்த  பூமலர்  , தில்லையையும் , ஜெயந்தியையும்  " எங்க வீட்டிற்கு வாருங்களன் .  துக்கத்திற்கு ஒரு மாற்றமாக இருக்கும்" என அழைத்திருந்தாள் .மகள் பிறந்ததிலிருந்து ஆஸ்பத்திரியும் , வீடும் , மருத்துவர்  ...என அதில்  ஓடிக் கொண்டிருந்தவர்களுக்கு .....இருபது வருசம் ஓடியதே தெரியவில்லை ." போவோம்  " என முடிவெடுக்க ...இந்த கொரோனா ... குறுக்கிட்டு  விட்டது .  நாம் ஒன்று நினைக்க வைரஸொன்று நினைக்கிறது .

         நடக்க முடியாத அதிசயமாக வர்த்தகம் , அரச நிர்வாகக் கதவுகள் எல்லாம் அடைப்பட்டன . 'ஒன் லைன்' என்கிற 'ஈ' வழித் தொடர்ப்புகளால் மட்டுமே தொடர்பு கொள்ள முடியும் .  மக்கள்  ,   அனைவரும் கட்டாயம் பழகத் தான் வேண்டும் " என்று தெரிவிக்கப்பட்டது  .  இந்த இறுக்கம் தளர் நிலைக்கு வந்த போது தெரிந்தவர்கள்  சிலரின் மரணங்கள்  ,  எம்  வீட்டுக் கதவையும் வந்து தட்டி விடலாம் என்ற பயபீதியை ஏற்றியது . புயல் கடக்கவில்லை . ஒருவாறாக கோவிட்டுக்கு வக்சீன் கண்டு பிடிக்கப்பட்டு விட்டது . ரஸ்யா தான்  ... முதலில் கண்டு பிடித்தது .   ரஸ்யாவுடன் சேர்ந்திருந்தால் வேளைக்கே எமக்கு வக்சீன்  கிடைத்திருக்கும் . பிறகு ,   ஒரு மாதிரியாக  மாற்றம் மெல்ல படர தொடங்கிது . ஒரு முறை...ஏற்றல் நடந்து . பிறகு இரண்டாவது முறை .  பதற்றத்தை வக்சீன் வெகுவாக குறைத்து விட்டது . இருந்த போதிலும்   மனிதர் பலியாகிக் கொண்டேயிருந்தனர் . ' பலி ' நிற்கவில்லை .

மேலும் படிக்க ...

ஆய்வு: ஆண்டாள் பாசுரங்களில் அழகியல்நடை - முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, தியாகராசர் கல்லூரி, மதுரை.

விவரங்கள்
Administrator
ஆய்வு
23 அக்டோபர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

முன்னுரை

 “வேதமனைத்துக்கும் வித்து“ என்று போற்றப்படுவது ஆண்டாள் அருளிச்செய்த திருப்பாவை.  இனிமையான பக்தி சுவை மிக்க பாசுரங்களைக்கொண்டது.  கண்ணன் மேல் ஆண்டாள் கொண்டிருந்த எல்லையற்ற அன்பினைப் பாசுரங்கள் வழி பாய்ந்தோடச் செய்வன. கண்ணனை அடையும் பொருட்டு ஆண்டாள் மேற்கொண்ட நோன்புதான் “பாவை நோன்பு“.பாவை நோன்பிற்காத் தனது தோழியர்களை அழைத்தல்,  விடியலை அறிவித்தல், இயற்கை வர்ணனை என்று ஆண்டாள் தனது உணர்வுகளை புலப்படுத்தும் விதமே அழகியல் தன்மையுடையது.   மனித மனத்தின் ஆழமும், பரப்பும் அறிய முடியா இயல்பும்  பொதுவாக கவிதைகளில் மிளிர்வதைக் காணலாம். அழகியல் என்பது படைப்புகளை ஆராய்ந்து ஒற்றை வரியில் இது அழகானது, இது அழகற்றது என்று சொல்லிவிடுவதல்ல.  ஒரு படைப்பின் முழுமையை அறிந்து, அப்படைப்பின் படைப்புத்தன்மையில் உள்ள கலைத்துவத்தை அப்படியே வெளிப்படுத்துவது.  இவ்வகையில் ஆண்டாள் பாசுரங்களில் காணப்படும் அழகியலை ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

உவமை நடை

    செய்யுளுக்கு அணி சேர்ப்பதே உவமை.  தெரியாத ஒன்றை தெரிந்த ஒன்றோடு ஒப்பிட்டு விளக்குவது.

    “உவமம் என்பது ஒரு பொருளோடு ஒரு பொருளினை ஒப்புமை கூறுதல்“  என்பது பேராசிரியர் தரும் விளக்கம்.        (தொல்.பொரு.ப.57)

    சிறுபெண்ணான ஆண்டாள் மழை எங்ஙனம் பொழிய வேண்டும் என்ற அறிவியல் கோட்பாட்டினை, ஆன்மீகத்தோடு ஒப்பிட்டு  அழகாக  நமக்குக் காட்சிப்படுத்துகிறார்.  கடல் நீரானது ஆவியாக மேலே சென்று மேகமாக மாறுகிறது. அங்கு குளிர்ந்த காற்றுப்பட்டவுடன்  அது மழையாகப் பொழிகின்றது.  இந்த அறிவியல் உண்மைக்கு அழகானதொரு அறிமுகத்தொடு விளக்கவுரை தருகிறார்.  அதாவது,

    ”ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி
      ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து
      பாழியந் தோளுடைய பற்பநா பன்கையில்
      ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
     தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
     வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
      மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்“            (திருப்.4)  

மேலும் படிக்க ...

மற்ற கட்டுரைகள் ...

  1. அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் வருடாந்த தமிழ் எழுத்தாளர் விழா! - முருகபூபதி -
  2. பேரரசும் பெருந்தத்துவமும்! - கலாநிதி க.கைலாசபதி -
  3. தெளிவத்தை ஜோசப் : தமிழ் இலக்கியப் பெருஞ் சுடர் அணைந்தது! - மு.நித்தியானந்தன் -
  4. அஞ்சலிக்குறிப்பு : மலையக இலக்கிய முன்னோடி தெளிவத்தை ஜோசப் நினைவுகள் - முருகபூபதி -
  5. அஞ்சலி: எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் - மலையகத்தமிழ் இலக்கியத்தின் குறியீடுகளில் ஒருவர்! - வ.ந.கிரிதரன் -
  6. தொடர் நாவல் - நவீன விக்கிரமாதித்தன் (6): ஒட்டகங்கள் - வ.ந.கிரிதரன் -
  7. நிட்டின் கோக்லே, கவிஞர் ஜெயபாலன் பேட்டி, கலாநிதி அகிலன் கதிர்காமரின் கூற்று, மற்றும் இலங்கையின் பொருளாதார நெருக்கடி பற்றி... ( 18 - 24) - ஜோதிகுமார் -
  8. தொடர் நாவல் - நவீன விக்கிரமாதித்தன் (5): ஆனை பார்த்த அந்தகர்கள்! - வ.ந.கிரிதரன் -
  9. படித்தோம் சொல்கின்றோம்: பத்திரிகையாளர் எஸ். எம். கார்மேகம் வாழ்வும் பணிகளும் ! இலங்கை மலையக மக்களின் குரலாக ஒலித்தவரின் சேவைகளைப் பேசும் நூல் !! - முருகபூபதி -
  10. சிறுகதை: அனாதை மரங்கள் - கிறிஸ்டி நல்லரெத்தினம் -
  11. ஜீவநதியின் சிற்றிதழ்கள் சிறப்பிதழ் 175: இலக்கு, கலைச்செல்வி பற்றிய கட்டுரைகள்! - வ.ந.கிரிதரன் -
  12. பிரமிப்பினைத் தரும் ஆவணச் சுரங்கம் ஜீவநதியின் சிற்றிதழ்கள் சிறப்பிதழ்! - வ.ந.கிரிதரன் -
  13. நிட்டின் கோக்லே, கவிஞர் ஜெயபாலன் பேட்டி, கலாநிதி அகிலன் கதிர்காமரின் கூற்று, மற்றும் இலங்கையின் பொருளாதார நெருக்கடி பற்றி... (13 -17) - ஜோதிகுமார் -
  14. அஞ்சலி - எழுத்தாளர் பொன் குலேந்திரன் மறைவு! - வ.ந.கிரிதரன் -
பக்கம் 63 / 104
  • முதல்
  • முந்தைய
  • 58
  • 59
  • 60
  • 61
  • 62
  • 63
  • 64
  • 65
  • 66
  • 67
  • அடுத்த
  • கடைசி