பதிவுகள் முகப்பு

ஆகஸ்ட் 23 தமிழறிஞர் த. துரைசிங்கம் நினைவுதினம்! – இளநிலா சுரேசானந்த் (பிரான்ஸ்) -

விவரங்கள்
– இளநிலா சுரேசானந்த் (பிரான்ஸ்) -
இலக்கியம்
23 ஆகஸ்ட் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

சிறுவர் இலக்கியச் சாதனையாளர் த. துரைசிங்கம்..! நடமாடும் கலைக் களஞ்சியமாக விளங்கிய தமிழறிஞர்..!! இலக்கிய வித்தகர், கலாபூசணம், ஓய்வுநிலைக் கல்விப் பணிப்பாளர் த. துரைசிங்கம் (84) காலமாகி ஒரு வருடமாகிறது. கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் (23 – 08 – 2021) அவர் கொழும்பில் சிந்திப்பதை நிறுத்திக்கொண்டார். ஈழத்து இலக்கியப் பரப்பிலும், கல்விப் புலத்திலும் நன்கு அறியப்பட்ட புலமையாளர் த. துரைசிங்கம் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். ஆறு தசாப்தங்களுக்கு மேலாக, எழுத்துத் துறையில் ஈடுபாடு கொண்டு அமைதியாகச் செயற்பட்டு வந்தவர். சிறந்த எழுத்தாளர். கவிஞர். நூற்றுக்கு மேற்பட்ட நூல்களின் ஆசிரியர்.

இளம் வயதிலேயே பத்திரிகைச் செய்தியாளராகப் பணியாற்றத் தொடங்கியவர். 1954 -ம் ஆண்டு கொழும்பு விவேகானந்த சபை அகில இலங்கை ரீதியாக நடத்திய ஆறுமுகநாவலர் நினைவுக் கட்டுரைப் போட்டியில் முதற்பரிசு பெற்றமையைத் தொடர்ந்து எழுத்துத் துறையில் ஈடுபடத் தொடங்கினார். கல்வித்துறை, எழுத்துத்துறை மட்டுமன்றி புங்குடுதீவின் வளர்ச்சிக்கும் சேவையாற்றியுள்ளார். புங்குடுதீவு அபிவிருத்திச் சபையின் செயலாளராக நீண்ட காலம் பணியாற்றியுள்ளார்.

ஈழத்துப் பல்வேறு பத்திரிகைகளுக்கும், தமிழகத்தின் 'மணிமொழி' இதழுக்கும் நிருபராகச் செயற்பட்டவர். தமிழ்நாடு அருள்நெறி மன்றத்தின் மாத சஞ்சிகையான'மணிமொழி' 1956 மார்கழி இதழில் இவர் குறித்துக் கட்டுரை பிரசுரித்துப் பாராட்டியுள்ளது. அருள்நெறி இயக்கத்தில் தொண்டாற்றியவர். திருப்பெருந்திரு குன்றக்குடி அடிகளாரின் அபிமானத்தைப் பெற்றவர். நல்லூர் ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் ஆசிரியப் பயிற்சி பெற்ற காலத்தில் (1957 – 1958) கலாசாலை வெளியீடான 'கலா விருட்சம்' சஞ்சிகையின் ஆசிரியராகவும் பணியாற்றினார். பேராதனைப் பல்கலைக்கழகக் கலைமாணிச் சிறப்புப் பட்டத்தையும், யாழ் பல்கலைக்கழகத்தில் கல்வி டிப்ளோமாச் சிறப்புச் சித்தியையும் பெற்றுக்கொண்டார். ஆசிரியராக, அதிபராக, கோட்டக்கல்விப் பணிப்பாளராக, மாவட்டக் கல்விப் பணிப்பாளராக 38 ஆண்டு காலம் கல்விப் புலத்தில் பணியாற்றியுள்ளார். யுத்தப் பிரதேசமாக விளங்கிய கிளிநொச்சி மாவட்டத்தின் கல்விப் பணிப்பாளராக (1995 – 1997) இவரது பணிகள் குறிப்பிடத்தக்கன.

கலைத்துறையிலும் ஆர்வங்கொண்ட இவர், 1953 -ம் ஆண்டில் புங்குடுதீவில் 'பாரதி கழகம்' என்ற அமைப்பினை நிறுவி பாரதி விழாக்களையும், கலை நிகழ்ச்சிகளையும் நடத்தியுள்ளார். இந்நிகழ்ச்சிகளில் அன்றைய காலகட்டத்தில் பிரபல பேச்சாளர்களாக விளங்கிய தோழர் வி. பொன்னம்பலம், அ. அமிர்தலிங்கம் நாவேந்தன், தேவன் - யாழ்ப்பாணம் ஆகியோருட்படப் பலர் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளனர்.

மேலும் படிக்க ...

உயிர்த்தெமும் உயிரினம்! - கிறிஸ்டி நல்லரெத்தினம் -

விவரங்கள்
- கிறிஸ்டி நல்லரெத்தினம் -
கிறிஸ்டி நல்லரெத்தினம்
22 ஆகஸ்ட் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- பேராசிரியர் அன்றூ பாஸ்க் (Prof. Andrew Pask). -

செப்டம்பர் 7, 1936ம் ஆண்டு; ஆஸ்திரேலியாவின் தஸ்மேனிய மாநிலத்தில் இருந்த ஹோபார்ட் பேமொறிஸ் மிருகக்காட்சிச்சாலை அன்றும் என்று போல் விடிந்தது. ஆனால் அன்று ஒரு சோகநாள்! அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த உலகின் கடைசி .தஸ்மேனியன் புலி (Tasmanian Tiger) இனி இல்லை. முதுமை காரணமாக தன் இறுதி மூச்சைவிட்டது. உலகு ஒரு உயரினத்தை நிரந்தரமாக இழந்தது நின்றது!

2000 ஆண்டுகளுக்கு முன்பே இவை ஆஸ்திரேலியாவின் ஏனய மாநிலங்களில் முற்றாக அழிக்கப்பட்டுவிட்டன. தஸ்மேனிய தீவில் மட்டுமே உயிர் வாழ்ந்த கடைசி மிருகமும் உயிர்நீத்தது!

தஸ்மேனியன் புலி என இவற்றிற்கு இங்கு குடியேறிய ஆங்கிலேயர் பெயரிட்டாலும் இவை பைம்மாவினம் (marsupials) எனும் பாலூட்டிகளின் ஒரு உட்பிரிவாகும். இவற்றுக்கு தைலசின்கள் (Thylacines) என்ற விஞ்ஞானப் பெயரும் உண்டு.

இவை ஆஸ்திரலேசியா, மற்றும் அமெரிக்காக்களிலும் காணப்படும் தனித்துவப் பண்பு கொண்ட உயிரினமாகும். இந்த வகை உயிரினங்களின் இளம் குட்டிகள் இவற்றின் வயிற்றுப்பகுதியில் உள்ள பை போன்ற அமைப்பில் பாதுகாக்கப்படுகிறது. இந்த வகை உயிரினங்களில் நன்கு அறியப்பட்ட விலங்குகள் கங்காரு, வாலபி, கோவாலா, போசம், ஒப்போசம், வாம்பட்டு, தஸ்மேனிய டெவில் ஆகியவை ஆகும். மேலே உள்ள உயிரினங்களில் இருந்து நமது நாயகன் சிறிது வேறுபடுகிறார். ஆம், ஆண் தஸ்மேனிய புலிக்கும் பெண் புலியைப் போல் வயிற்றில் பை இருக்கும். இதனால் தம் வாரிசுகளை பேணுவதில் இருவருக்கும் சமபங்குண்டு என எண்ணவேண்டாம். ஆணுறுப்புபை குளிரான காலநிலைகளில் இருந்து பாதுகாப்பதற்கும் சக மிருகங்களுடன் சமர்செய்யும்போது ஒரு பாதுகாப்பாக இருப்பதற்காகவே இந்த ஏற்பாடு.

மேலும் படிக்க ...

கிளிம் வாழ்வின் மூன்றாம் தொகுதி: -தமிழ் இலக்கிய உலகை, முன்னிறுத்தி (9) - ஜோதிகுமார் -

விவரங்கள்
- ஜோதிகுமார் -
ஜோதிகுமார்
22 ஆகஸ்ட் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

9

“நல்ல கலை ‘ இயற்கையின் பிரபஞ்ச பேரியக்கத்தின் வாசலுக்கே’ வாசகனை கொண்டு சேர்த்துவிடும் என்று போதிப்பார் அவர். (பக்கம்:100:நவீனத்துவத்தின் முகங்கள்) மேலும் கூறுவார்: “நல்ல படைப்பு நாம் அறியாத பல நூறு ஆழ்மன சக்திகள் திரண்டு உருவான வடிவம்” என. (அதே) அதாவது, அவரது பார்வையில் ஒரு புறம் படைப்பாளி. மறுபுறம் வாசகன். அதாவது, வாசகனை, “பிரபஞ்ச பேரியக்க வாசலுக்கு” இட்டுச் செல்லும் படைப்புகள் உண்டு. இவற்றை உருவாக்குவது படைப்பாளியின் “ஆழ்மனசக்தி”. மேலும், இப்படி ‘பிரபஞ்ச பேரியக்கத்தின் வாசலுக்கு’ இட்டுச் செல்லும் ஆற்றலை உருவாக்கும், ‘ஆழ்மனசக்திகளின்’ குணாம்சம் குறித்தும் ஜெயமோகன் விளக்கம் கூறத் தவறவில்லை.

“ஒரு எறும்புப் புற்று என்பது பல்லாயிரம் எறும்புகளின் தூல வடிவம். அவ்எறும்புகளின் ஊடாக, கோடானு கோடி வருடங்களாக இயற்கை உருவாக்கிய அமைப்பு அது. இலக்கியப் படைப்பும் அப்படித்தான்.” (அதே)

அதாவது, மேற்படி கூற்றின் பிரகாரம் பார்ப்போமானால், எறும்பு புற்று கட்டுவதும், குரங்கு மாம்பழம் சாப்பிடுவதும், புதுமைபித்தன் கபாடபுரம் எழுதுவதும் - கோடானு கோடி வருடங்களின் சமாச்சாரங்கள் - அதாவது ஆழ்மன விளையாட்டுகள் என்றாகிறது. வெறும், எறும்புகளுக்கே, கோடானு கோடி வருடங்கள் என்றால், கபாடபுரம் எழுதிய, புதுமைபித்தனின் ஆழ்மனம் கூட,அதாவது அதை விட,கோடானு கோடி வருடங்களில் இருந்தே, அதாவது குரங்கு மனிதனாய் ஆன காலத்தில் இருந்து தொடங்கியிருக்க வேண்டும். அதனாலோ என்னவோ,‘நம்மவர்களுக்கு, குரங்குகளில் முதல் குரங்கும் தமிழ் குரங்குதான் என்று கூறினாலே பிடிக்கும்’ என்று போகிற போக்கில் புதுமைபித்தன் குரங்குகளை இழுத்துக் கூறுவதும் இந்தக் குரங்கு சார்ந்த ‘ஆழ்மன’ விளையாட்டுகளின் கீற்றோ என்பதுவும் புரியவில்லை.

மொத்தத்தில், நாவலில் வரும் மரீனா – கிளிம் சார்ந்த ஆவி இறங்கல்களை எடுத்துக் கொண்டாலும் சரி, அல்லது எமது இலக்கியத்தில் வலுவாக முன்னெடுக்கப்படும் மரபுகள் - தொன்மங்கள் - ஆழ்மன சக்திகள் - நனவிலி மனம் - நனவிலி மொழி - இவற்றை எடுத்துக் கொண்டாலும் சரி - இவை ஆளாளுக்கு ஆங்காங்கே சற்று வித்தியாசப்பட்டிருந்தாலும் அடிப்படையில் ஒன்றாகவே ஒலிக்கின்றது – அதிலும் 1916 இலிருந்து யுங்கின் மூலமாக, தெளிவாக.

மேலும் படிக்க ...

முதல் சந்திப்பு : புஷ்பராணியின் 'அகாலம்' கூறும் செய்தி! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
21 ஆகஸ்ட் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இலங்கையில் தேசிய இனப்பிரச்சினை கூர்மையடையத் தொடங்கி ஐம்பது ஆண்டுகள் நிறைவடைந்துள்ள காலப்பகுதியில் ( 1972 – 2022 ) தமிழ் ஈழவிடுதலைக்காக முதல் முதலில் களமிறங்கிய பெண்ணைப்பற்றிய இந்தப்பதிவை எழுதுகின்றேன். இலங்கையில் ஏற்கனவே 1915 இல் கண்டி கலவரமும், 1958 இல் தென்னிலங்கையில் மற்றும் ஒரு இனக்கலவரமும் வந்திருந்தாலும், 1965 இல் ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்து தமிழரசும், தமிழ்க்காங்கிரஸும் அரசமைத்து தேன்நிலவு கொண்டாடினர். ஆனால், அந்த ஐக்கிய தேசியக்கட்சி 1970 இல் தோல்வி கண்டபோது, ஶ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் தலைமையில் சமசமாஜக்கட்சியும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து அரசை அமைத்தது. அதற்கு மக்கள் அரசாங்கம் என்று பெயரையும் சூட்டிக்கொண்டது.

உலகின் முதல் பெண் பிரதமர் என்ற பெயரையும் பெருமையையும் பெற்ற ஶ்ரீமாவின் காலத்தில்தான் தென்னிலங்கையிலும் வட இலங்கையிலும் விடுதலை வேட்கை நிரம்பிய பெண்கள் சித்திரவதைக்குள்ளாகத் தொடங்கினர். 1970 ஆம் ஆண்டு மேமாதம் நடந்த பொதுத்தேர்தலில், 90 தொகுதிகள் ஶ்ரீலசு. கட்சிக்கும், 19 தொகுதிகள் லங்கா சமசமாஜக்கட்சிக்கும், 6 தொகுதிகள் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் கிடைத்தன. டட்லி சேனநாயக்காவின் ஐ. தே. க. 17 தொகுதிகளில்தான் வென்றது. தமிழரசுக்கட்சிக்கு 13 ஆசனம், தமிழ்க்காங்கிரஸ் மூன்று ஆசனம். இக்கட்சிகளின் முக்கிய தலைவர்கள் அமிர்தலிங்கமும், ஜி. ஜி. பொன்னம்பலமும் தங்கள் தங்கள் கோட்டைகளிலேயே தோற்றனர். அவர்கள் அவ்வாறு தோற்றதன் பின்னணியில் இலங்கை அரசியலில் பெரிய திருப்புமுனையும் தோன்றியது. அந்த முனை தொடர்ந்தும் சங்கிலிப்பின்னலாக பல பரிமாணங்களை பெற்றிருக்கிறது. அந்த வரலாற்றை ஏற்கனவே வெளிவந்துள்ள அரசியல் ஆய்வேடுகளில் பார்க்கலாம்.

மேலும் படிக்க ...

ஆய்வு; விருந்து புறந்தருதல்! - முனைவர் சுப. வேல்முருகன், இளநிலை ஆராய்ச்சியாளர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், பெரும்பாக்கம், சென்னை – 100. -

விவரங்கள்
- முனைவர் சுப. வேல்முருகன், இளநிலை ஆராய்ச்சியாளர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், பெரும்பாக்கம், சென்னை – 100. -
ஆய்வு
21 ஆகஸ்ட் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

தொல்பழங்காலந்தொட்டு தமிழ்நிலத்தில் சிறந்த பண்பாட்டு நெறிகள் வளர்ந்தோங்கியுள்ளன. தூய தமிழ் மரபுகள், வாழ்க்கை நெறிகள் காலந்தோறும் தமிழ் இலக்கியத்தில் பதிவு செய்யப் பெற்றுள்ளன. ‘பண்புடையார்ப் பட்டுண்டுண்டு உலகம்’ என்பது திருக்குறள் விதித்த விதியாகும். உலகின் மூத்த நாகரிகங்களில் முதன்மையானது தமிழ் நாகரிகமாகும். தமிழ் மக்களின் பண்பாட்டியற் கூறுகளில் ஒன்றான விருந்தோம்பல் பண்பாடுப் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

பண்பாடு
இலக்கணச் செறிவும் இலக்கியச் செம்மையும் வாய்ந்த உயர்தனிச் செம்மொழி தமிழ்மொழி இத்தமிழ்மொழிப் பேசும் தமிழரின் பண்பாடு மிகவும் பழமை வாய்ந்தது, பண்பாடு உடையது. பண்பாடு உள்ளவர்களாலேதான் இப்பாரதம் வாழ்ந்து வருகிறதென பண்பாட்டின் பெருமைதனை,

பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அது இன்றேல்
மண்புக்கு மாய்வது மன் (திருக்குறள்: 996)

என வள்ளுவம் பேசுகிறது.

தொடர்பு கொள்ளும் ஒவ்வொருவரின் இயல்புணர்ந்து அதற்கியையப் பழகுதலே பண்பாடு எனப்படும். மனிதனை விலங்கினின்று வேறுபடுத்துவதும் நல்ல பண்பாடுதான். இப்பண்பாடு காலத்திற்குக் காலம்; நாட்டுக்கு நாடு; இனத்திற்கு இனம் வேறுபடும். கரடு முரடான நிலப்பகுதியை வேளாண்மைக்கு ஏற்ப, நிலமாக மாற்றுவது பயன்படுத்துதல் எனப்படும். இதைப் போன்று மனித உள்ளத்தையும் தீய எண்ணங்களில் இருந்து விலக்கி உயர்ந்த எண்ணங்களுக்கும் வாழ்க்கை முறைக்கும் ஏற்ப மனதைப் பயன்படுத்துதல் பண்பாடு என்பர். இதனையே கலித்தொகை,

பண்பெனப் படுவது பாடறிந்து தொழுகுதல் (கலி, பா.133:8) என்கிறது.

மேலும் படிக்க ...

வாசிப்பு அனுபவப்பகிர்வு எழுத்தாளர் நடேசனின் புதிய நாவல் 'பண்ணையில் ஒரு மிருகம்'!

விவரங்கள்
- தகவல்; முருகபூபதி -
நிகழ்வுகள்
21 ஆகஸ்ட் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மேலும் படிக்க ...

குரு அரவிந்தன் எழுதிய 'ஆறாம் நிலத்திணை' நூலுகுப் பரிசு! - குரு அரவிந்தன் வாசகர் வட்டம் -

விவரங்கள்
குரு அரவிந்தன் எழுதிய 'ஆறாம் நிலத்திணை' நூலுகுப் பரிசு! - குரு அரவிந்தன் வாசகர் வட்டம் -
நிகழ்வுகள்
18 ஆகஸ்ட் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இனிய நந்தவனம் பதிப்பகம் வெளியிட்டுள்ள கனடா எழுத்தாளர் குரு அரவிந்தன் எழுதிய 'அறாம் நிலத்திணை" கட்டுரை நூல் கம்பம் பாரதி தமிழ் இலக்கியப் பேரவையின் 43 ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட சிறந்த நூல்களுக்கான போட்டியில் மூன்றாம் பரிசு பெற்றுள்ளது. 14-08-2022 அன்று கம்பத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் பாரதி தமிழ் இலக்கியப் பேரவைத் தலைவர் பாரதன் தலைமையில் எழுத்தாளர் ஜீவபாரதி பரிசினை வழங்க எழுத்தாளர் குரு அரவிந்தன் சார்பாக பதிப்பாசிரியர் நந்தவனம் சந்திரசேகரன் பரிசினைப் பெற்றுக்கொண்டார்.

மேலும் படிக்க ...

கிறிஸ்டி நல்லரெத்தினத்தின் கேலிச்சித்திரங்கள் (2)

விவரங்கள்
கிறிஸ்டி நல்லரெத்தினம் -
அரசியல்
17 ஆகஸ்ட் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மேலும் படிக்க ...

சொப்கா பீல் குடும்பமன்றம் ஒன்றுகூடல் - 2022 - குரு அரவிந்தன் -

விவரங்கள்
- குரு அரவிந்தன் -
நிகழ்வுகள்
17 ஆகஸ்ட் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

பீல் பகுதியில் உள்ள சொப்கா குடும்ப மன்ற ஒன்று கூடல் சென்ற ஞாயிற்றுக் கிழமை 07-08-2022 மிசசாகா கொம்யூனிட்டி சென்ரர் பூங்காவில் இடம் பெற்றது. புலம் பெயர்ந்து வந்த இங்குள்ள இளம் தலைமுறையினரின் வளர்ச்சியில் அதிக அக்கறை கொண்டு இயங்கிவரும் இந்த சொப்கா மன்றம், ஒன்று கூடலின் போது மிசசாகா உணவு வங்கிக்காகவும் உணவுப் பொருட்களைச் சேகரித்தது குறிப்பிடத் தக்கது. அங்கத்தவர்கள் மனமுவர்ந்து உணவுப் பொருட்களை கொண்டு வந்து சேகரித்தனர். உணவு வங்கிக்கு உணவு சேகரித்துக் கொடுக்கும் இந்த வழக்கம் பல வருடங்களாகத் தொடர்ந்தும் சொப்கா மன்றத்தால் நடைமுறைப் படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க ...

தற்கால வாழ்வியலுக்கு வழிகாட்டும் சங்க இலக்கியங்கள்!

விவரங்கள்
- தகவல்: பேராசிரியர் இ.பாலசுந்தரம் -
நிகழ்வுகள்
17 ஆகஸ்ட் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இலங்கை அரச வன்முறையைக் கண்டித்து கண்டனப் பொதுக்கூட்டம்!

விவரங்கள்
- தகவல்: எல்லாளன் -
நிகழ்வுகள்
17 ஆகஸ்ட் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

காலம்: ஆகஸ்ட் 20, 2022 மாலை 5மணி- 9 மணி.
இடம்: 3600 Kingston Road, Scarborough Community Centre

பதிவுகள் இணைய இதழும் அதன் ஆரம்ப கால இலக்கியப் பங்களிப்பும்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
16 ஆகஸ்ட் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஆரம்ப காலத்திலிருந்து வெளியாகும் தமிழ் இணைய இதழ்களான திண்ணை , பதிவுகளின் ஆரோக்கியமான இலக்கியப் பங்களிப்பு பற்றி நான் நிச்சயம் பெருமைப்படுகின்றேன். திருப்திப்படுகின்றேன். பதிவுகள் இணைய இதழைத் தொடங்கியபோது முக்கியமான நோக்கங்களாக இருந்தவை: என் படைப்புகளை இணைய மூலம் வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும். அதே சமயம் இணையத்தில் தமிழ் எழுத்துகளை எழுதுவதற்குத் தூண்டுகோலாகவிருக்க வேண்டும். இவ்விதமான எண்ணங்களோடு பதிவுகள் இணைய இதழை ஆரம்பித்தேன். அப்போது வலைப்பதிவுகள் ஏதுமில்லை. இவ்விதமானதொரு சூழலில் முரசு அஞ்சல் எழுத்துரு எனக்குப் பெரிதும் கை கொடுத்தது. ஏனென்றால் எனக்குத் தமிழ்த் தட்டச்சு செய்வதில் பெரிதும் ஆற்றலில்லை. ஆனால் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்வது அதனுடன் ஒப்பிடும்போது இலகுவாகவிருந்தது. இவ்விதம் பதிவுகள் இணைய இதழை ஆரம்பித்து படைப்புகளைத் தமிழில் பிரசுரித்தபோது அது இணையத்தில் தமிழ் வாசகர்களைக் கவர ஆரம்பித்தது. பலர் தம் படைப்புகளை அனுப்ப ஆரம்பித்தார்கள். அப்பொழுது அவ்விதம் படைப்புகளை அனுப்புபவர்களுக்கு நான் கூறியது: பதிவுகளுக்கு படைப்புகள் அனுப்புபவர்கள் படைப்புகளை பதிவுகளுக்கு உரிய எழுத்துரு பாவித்துத் தட்டச்சு செய்து அனுப்ப வேண்டுமென்பதுதான். இதற்கு முக்கிய காரணங்கள்: ஒன்று மீண்டும் தட்டச்சு செய்யும் சிரமம் இல்லை. அடுத்தது தமிழில் தட்டச்சு செய்வதன் மூலம் எழுத்தாளர்களை இணையத்தமிழுக்கு அறிமுகப்படுத்துவது. இவ்விதம் தமிழில் தட்டச்சு செய்து அனுப்பப்படும் படைப்புகளையே பதிவுகள் ஏற்றுக்கொண்டு பிரசுரிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளது.

மேலும் படிக்க ...

கிறிஸ்டி நல்லரெத்தினத்தின் கேலிச்சித்திரங்கள் (1)

விவரங்கள்
- கிறிஸ்டி நல்லரெத்தினம் -
அரசியல்
16 ஆகஸ்ட் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மேலும் படிக்க ...

சிறுகதை : ஞானம் - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
15 ஆகஸ்ட் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 

- ஓவியம் : கிறிஸ்டி நல்லரெத்தினம் ( மெல்பன் ) -

குணவர்தனா, தபாலில் வந்த கடிதத்தை படித்துவிட்டு, வீட்டின் விட்டத்தைப் பார்த்துக்கொண்டிருந்தான். கொவிட் பெருந்தொற்று தொடங்கிய காலத்திலிருந்து அவனும் வீட்டிலிருந்தே வேலை செய்கிறான். மனைவி நிலாந்தி பாடசாலைக்குச் சென்ற மகனை அழைத்துவரச்சென்று திரும்பும்போது, வீட்டு தபால் பெட்டியிலிருந்து எடுத்து வந்த கடிதத்தை அறையை தட்டி தந்துவிட்டு, மகனை குளியலறைக்கு கூட்டிச்சென்றாள்.

“ குணே… உங்கட உபாலியிடமிருந்து கடிதம். திரும்பவும் பணம் கேட்டு எழுதியிருக்கலாம் “ என்று முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு சொல்லியவாறுதான் அகன்றாள் நிலாந்தி.

குணவர்தனாவின் நெருங்கிய நண்பன்தான் உபாலி. அம்பாந்தோட்டையில் ஒரே கிராமத்தில், பிறந்த வளர்ந்து படித்தவர்கள். வீட்டுக்கஷ்டத்தால், கிராமத்து விகாரையிலிருந்த தர்மரத்ன சாதுவின் தூண்டுதலால் தேசத்தை விடுதலை இயக்கத்திடமிருந்து காக்க இராணுவத்தில் சேர்ந்து, இறுதிப்போரில் வலது காலை இழந்து முடமாகத் திரும்பியவன்.

குணவர்தனாவின் குடும்பப் பின்னணி செழிப்பாக இருந்தமையால் படித்து பட்டதாரியாக முடிந்தது, அவுஸ்திரேலியாவில் தொழில்வாய்ப்பும் பெற்று வரக்கூடியதாக இருந்தது.

மேலும் படிக்க ...

எழுத்தாளர் சீர்காழி தாஜ் பற்றிய நினைவுகள்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
15 ஆகஸ்ட் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- எழுத்தாளர் சீர்காழி தாஜ் -

எழுத்தாளர் அமரர் சீர்காழி தாஜ் அவர்கள் என் வாழ்க்கையில் மறக்க முடியாத தமிழக எழுத்தாளர்களிலொருவர். அவரது படைப்புகள் பல பதிவுகள் இணைய இதழிலும் வெளியாகியுள்ளன. 'தமிழ்ப்பூக்கள்' என்னும் பெயரில் வலைப்பதிவினை நடத்தி வந்தவர். அவ்வலைப்பதிவு தற்போதும் இயங்குகின்றது.

எழுத்தாளர் தாஜ், கலை,இலக்கிய விமர்சகர் வெங்கட் சாமிநாதன், எழுத்தாளர் 'நடு' கோமகன், நுணாவிலூர் கா.விசயரத்தினம் (பதிவுகளில் சங்கத்தமிழ் இலக்கியங்கள் பற்றி ஆக்கங்கள் பல எழுதியவர்) போன்றவர்களின் மறைவுகள் யாரும் எதிர்பார்த்திராத நேரத்தில் நடந்தவை. அதனால் அவர்களின் மறைவுச் செய்திகள் வெளியானபோது அவற்றை உள்வாங்குவது சிரமமாகவிருந்தது.

எழுத்தாளர் தாஜுடனான தொடர்பு ஏற்பட்டது பற்றிச் சிறிது கூறவேண்டும். முதலில் அவர் என் படைப்புகளின் வாசகராகவே எனக்கு அறிமுகமானார். தமிழகத்தில் ஸ்நேகா பதிப்பக வெளியீடுகளாக வெளியான எனது 'அமெரிக்கா' (சிறுகதைத்தொகுதி), நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (ஆய்வு நூல்) ஆகியவற்றைத் தமிழக நூல் நிலையங்களிலிருந்து பெற்று வாசித்து எனக்கு அவை பற்றி நீண்ட கடிதங்களை எழுதினார். அக்கடிதங்களை இன்னும் பாதுகாப்பாக என் கைவசம் வைத்துள்ளேன்.

இவ்விதம் எனக்கு அறிமுகமான தாஜ் அவர்கள் வைக்கம் முகம்மது பசீரின் ' எங்கள் தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது' நாவலை நான் தேடிக்கொண்டிருந்தபோது 'டொரோண்டோ'விலுள்ள அவரது நண்பர் ஒருவரினூடு அனுப்பி வைத்தார். அதனை இன்னும் அவர் நினைவாக வைத்துள்ளேன்.

மேலும் படிக்க ...

ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் நடத்தும் இணைய வழிக் கலந்துரையாடல்: " நவீன தொலைநோக்கியும் தூரப்பார்வையும் (James Webb Space Telescope)" (அறிவியல் தொடர் - 8)

விவரங்கள்
- தகவல்: பேராசிரியர் நா.சுப்பிரமணியன் -
நிகழ்வுகள்
13 ஆகஸ்ட் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மேலும் படிக்க ...

ஆய்வு: முத்தொள்ளாயிரம் காட்டும் யானைமறம்! - முனைவர் ந.சுமதி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறைத் தலைவர், சுவாமி விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஒரத்தூர், விழுப்புரம். -

விவரங்கள்
- முனைவர் ந.சுமதி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறைத் தலைவர், சுவாமி விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஒரத்தூர், விழுப்புரம். -
ஆய்வு
13 ஆகஸ்ட் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

முன்னுரை
பழந்தமிழ் இலக்கியச் செல்வங்களுள் இன்று குறை நூலாய்க் கிடைத்துள்ளவற்றுள் முத்தொள்ளாயிரமும் ஒன்றாகும். புறத்திரட்டு நூலிலிருந்து தொகுக்கப்பட்ட நூற்றெட்டுப் பாடலோடு பழைய உரைகளிலிருந்து தொகுக்கப்பட்ட இருபத்திரண்டு பாடல்களும் சேர்ந்து தற்பொழுது வழக்கில் இருப்பது நூற்று முப்பது பாடல்களாகும். மூன்று, தொள்ளாயிரம் ஆகிய இரு சொற்களும் சேர்ந்து முத்தொள்ளாயிரம் எனப் பெயர் பெற்றது. இந்நூற்பாடல்கள் சேர, சோழ, பாண்டியர் ஆகிய மூவர் வரலாற்றையும் சுட்டுகின்றன. ஒவ்வொருவருக்கும் தொள்ளாயிரம் பாடல்கள் வீதம் இரண்டாயிரத்து எழுநூறு பாடல்களைக் கொண்ட இந்நூல் கனலாலும், புனலாலும், காற்றாலும், காழ்ப்பாலும் அழிந்தன போக எஞ்சிய நூற்று முப்பது பாடல்களைக் கொண்டுள்ளது.

இவற்றுள் ஒவ்வொரு பகுதியும் நாடு, நகர் பகைப்புலம் அழித்தல், திறை, எயில் கோடல், குதிரை மறம், யானை மறம், களம், வென்றி, புகழ், கைக்கிளை எனப் பல்வேறு குறிப்புகளைக் கொண்டுள்ளது. முத்தொள்ளாயிரம் மூவேந்தரின் வீரச் சிறப்பினையும், குதிரை, யானைப் படைகளின் தன்மையையும் இனிதே எடுத்துரைக்கின்றது. மூவேந்தரிடமும், யானைப் படைகள் சிறந்து விளங்கியது. அவ்யானைகள் பகைவரின் உயிரைக் குடிக்கும் கூற்றுவனைப் போல் விளங்கின. தம் நாட்டின் வெற்றிக்கு யானைப்படை முக்கியம் என்பதை உணர்ந்த மூவேந்தர்களும் யானைகளை நன்கு பராமரித்தனர். அவ்வாறு அவர்கள் பராமரித்த யானைகளின் மறம் (வீரம்) பற்றி விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

ஆய்வுச் சுருக்கம்
முடிவுடைய மூவேந்தர்களும் யானைப் படையை வைத்திருந்தனர். அப்படையில் உள்ள யானைகள் ஒவ்வொன்றும் போர்க்குணம் கொண்டவை. பகைவரைக் கண்டவுடன் கடிது சென்று அழிக்கும் திறன் கொண்டவை. பகைவரைக் கொன்று குவிக்கும் களக் காட்சியையும், யானையின் வீரத்தையும் முத்தொள்ளாயிரப் பாடல்கள் எடுத்துரைக் கின்றன. மேலும்,

 யானைமறம்
 சேரனின் யானைமறம்
 சோழனின் யானைமறம்
 பாண்டியனின் யானைமறம்

என்னும் தலைப்பில் முடிவுடை மூவேந்தர்களின் யானை படையின் இயல்பினைக் கூறுவதாக இவ்வாய்வுக் கட்டுரை அமைகின்றது.

மேலும் படிக்க ...

அஞ்சலி: 'ஆகாசவாணி செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயணசுவாமி!'

விவரங்கள்
- வானாநானாகீனா-
கலை
13 ஆகஸ்ட் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஆளுமைகள் சிலர் எங்களையறியாமல் எம் வாழ்க்கையில் பின்னிப் பிணைந்திருப்பார்கள். அவ்வித ஆளுமையாளர்களிலொருவர் 'ஆல் இந்தியா ரேடியோ'வில் செய்தி வாசிப்பாளராக எழுபதுகளில் விளங்கிய சரோஜ் நாராயணசுவாமி அவர்கள்.

உண்மையில் இவரது செய்திகளை அதிகம் நான் எதிர்பார்த்துக் கேட்டதில்லை. 'ஆல் இந்தியா ரேடியோ'வில் அவ்வயதில் நான் அதிகம் விரும்பிக் கேட்பது புதன் இரவு 10மணியிலிருந்து 11 மணிவரையிலான நேயர் விருப்பம் நிகழ்ச்சியைத்தான். பழைய பாடல்களை ஒலிபரப்புவார்கள். நிச்சயமாக 'தொட்டால் பூ மலரும்', 'கண்களிரண்டும்', 'பேசுவது கிளியா' பாடல்க:ள் அவற்றிலிருக்கும். இவ்விதமாகப் பழைய பாடல்களைக் கேட்பதற்காக மட்டும் 'ஆல் இந்தியா வானொலி'யைக் கேட்பதுண்டு. எம்ஜிஆர் திமுகவிலிருந்து பிரிந்த காலகட்டத்தில் மட்டும் இந்தியச் செய்திகளைக் கேட்பதற்காகவும் அதனைப் பயன்படுத்துவதுண்டு.

மேலும் படிக்க ...

கவிதை : குருமண்காட்டு நினைவுகள்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
12 ஆகஸ்ட் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

நான் பால்யப் பருவத்துக் குருமண்காட்டை
நனவிடை தோய்கின்றேன். ஏன்?
நனவிடை தோய மட்டுமே என்னால் முடியும்.
நனவிடை தோய்தலன்றோ சாத்தியமானதொன்று.
ஏன்?
காலம் செய்த கோலமது!
போர் பின் பொருள், மானுடர்தம்
பேரார்வம்.
இவற்றால் என் குருமண்காடு
இன்றில்லை. அங்கு
இன்றில்லை!

இயற்கையின் வனப்பில்
இலங்கிய குருமண்காட்டில்
நடை பயின்றேன்.
வனமும், வாவியும் நிறைந்த
வளமானபூமியென் குருமண்காடு.
அந்தக் காட்டை இன்று நான் காணவில்லை.
அந்த வனப்பை, அந்த வளத்தை,
என்றுமே நான் காணப்போவதில்லை.
அது இனி நினைவுகளில் நிற்குமோருலகம்!

மேலும் படிக்க ...

ஓவியர் மாயாவின் மாயாலோகம்!  - வானாநானாகீனா -

விவரங்கள்
- வானாநானாகீனா -
கலை
11 ஆகஸ்ட் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எங்கள் பால்ய, பதின்ம வயதுகளில் எம் வெகுசன வாசிப்பு வெறி மிகுந்திருந்த காலத்தில் எழுத்தாளர்களைப்போல் அவர்களின் கதைகளுக்கு ஓவியங்கள் வரைந்த ஓவியர்களும் எம்மை மிகவும் கவர்ந்திருந்தார்கள். வினு, கோபுலு, மாருதி, வர்ணம், லதா, ஜெயராஜ், மாயா, கல்பனா, விஜயா என்று ஓவியர்களின் பட்டாளமேயிருந்தது. அவர்களில் மாயாவின் ஓவியங்களும் முக்கியமானவை.

எழுபதுகளில் எழுத்தாளர் மணியன் விகடனின் நட்சத்திர எழுத்தாளராக விளங்கினார். அவரது தொடர்கதைகள் அக்காலகட்டத்தில் வாசகர்கள் மத்தியில் மிகுந்த ஆதரவைப்பெற்றிருந்தன. 'காதலித்தால் போதுமா' வில் தொடங்கி, நீரோடை, இதய வீணை, நெஞ்சோடு நெஞ்சம், தேன் சிந்தும் மலர், உன்னை ஒன்று கேட்பேன், உண்மை சொல்ல வேண்டும், என்னைப் பாடச்சொன்னால் என்று விகடனில் தொடர்கதைகள் பலவற்றை எழுதினார் மணியன்.

மேலும் படிக்க ...

ஆர்மேனியர்களும் இலங்கைத் தமிழர்களும். 'தலைமுறைதாண்டிய காயங்கள்' என்னும் சிறுகதையை முன்னிறுத்தி, எனது பார்வை. - ரஞ்ஜனி சுப்ரமணியம் -

விவரங்கள்
- ரஞ்ஜனி சுப்ரமணியம் -
ரஞ்ஜனி சுப்ரமணியம்
10 ஆகஸ்ட் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

புனைவிலக்கியம் என்பது வெறும் எண்ணங்களின் அழகியல் வடிவம் மட்டுமே சார்ந்ததல்ல. அதில் அறிவின் தேடுதலும் இணைந்தே அமைந்திருந்தால் வாசிப்பனுபவத்தின் பெறுமதியை நிச்சயம் மேலோங்கச் செய்யும். இவ்வகையான நியாயமான எண்ணங்கள் உள்மன ஓரத்தில் எட்டிப் பார்க்கும் போதெல்லாம், ஆசி கந்தராஜா அவர்களின் படைப்புகள் என் நினைவில் தோன்றும். அவரது கதைகளை நான் அதிகம் வாசித்திருக்கிறேன் என்பது ஒரு காரணமாக இருந்தாலும், அவ்வாறு வாசிக்கத் தூண்டும் ஆர்வத்தை அது நிச்சயம் கொண்டிருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. ஒரு வரலாறு ஆவணப்படுத்தலாக மட்டுமே முன்வைக்கப் படுவதை விட, புனைவின் சிறப்பும், சுவாரசியமும் சேரும் போது வாசகனின் உள்வாங்கல் அதிகரிக்கிறது, நினைவிலும் நிலைக்கிறது.

இவரது படைப்புகள், புனைவுகள் மட்டுமே அல்ல. வரலாற்றுத் தளம்கொண்ட உண்மைகள் மட்டுமேயும் அல்ல. இவற்றில் பெரும்பாலானவை தமது விரிவுரைகள் நிமித்தம் சென்ற பல்வேறு தேசங்களில் அவர் சந்தித்த மனிதர்களின் நிஜவடிவம் சார்ந்த புனைவுகளே என்பது படைப்பாளியுடனான உரையாடல்களின் மூலம் நான் அறிந்தது. ஒரு ஆத்மார்த்த வாசகனுக்குப் புரியும், படைப்பாளியி்ன் நிஜங்கள் எங்கெங்கே வெளிப்படுகின்றன என்பது. அவர் சென்று வந்த தேசங்களின் மனிதர்கள், சரித்திரம், கலாசாரம் என்பவற்றில் முக்கியமான அம்சங்கள் கதைகளில் பரந்திருக்கின்றன.

கதைக்களங்கள் வெறும் புறவய சித்தரிப்புகள்தானே என மேலோட்டமாகக் கடந்துவிட முடியாதபடி, அவற்றால் உருவாகும் தாக்கமே கேள்விகளின் திறவுகோலாக அமைவதால், குறையாக உறுத்துவதில்லை. மாறாக வாசகரின் சிந்தனையைத் தூண்டி அகத்தேடலுக்கும், புறத்தேடலுக்கும் களம் அமைக்கும் வழி காட்டியாகவே அமைகிறது. வாசிப்பின் முடிவில், வாசகர் தமது உணர்வு வெளிப்பாட்டை தானாகச் சென்றடைதலே ‘ஆசி’யின் எழுத்தின் சிறப்பம்சம் எனவும் உணரப்படும். அதுவே படைப்பாளியின் வெற்றி.

அவ்வாறான சிறப்புப் பெற்ற புனைவுகளில் உலகளாவிய ரீதியில் பல்வேறு ஒடுக்குமுறைகளையும், இனபேதத்தின் வடிவங்களையும், இனமதமொழி சார்ந்த மனிதப் படுகொலைகளையும் மூலச்சரடாகக் கொண்ட அவரது படைப்புகள் பலவற்றை இனம் காணலாம். தலைமுறை தாண்டிய காயங்கள், கையதுகொண்டு மெய்யது பொத்தி, விலாங்குமீன்கள், எதிரியுடன் படுத்தவள், தூதர்கள், அசைல், நரசிம்மம், கிழக்கும்மேற்கும், யாவரும் கேளிர், மைனாக்கள், சூக்குமம் ஆகியன சிறப்பாகக் குறிப்பிடத்தக்கன.

மேலும் படிக்க ...

கவிதை: புத்தரின் படுகொலை!   - எம்.ஏ.நுஃமான் -

விவரங்கள்
- எம்.ஏ.நுஃமான் -
கவிதை
10 ஆகஸ்ட் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 - யாழ் நூலக எரிப்பு பற்றிப் பேராசிரியர் எம்.ஏ.நுஃமான் எழுதிய கவிதை. இலங்கைத் தமிழ்க் கவிதைப்பரப்பில் முக்கியமானதொரு கவிதை. -

நேற்று என் கனவில்
புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.
சிவில் உடை அணிந்த
அரச காவலர் அவரைக் கொன்றனர்.
யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே
அவரது சடலம் குருதியில் கிடந்தது.
இரவில் இருளில்
அமைச்சர்கள் வந்தனர்.
‘எங்கள் பட்டியலில் இவர்பெயர் இல்லை
பின் ஏன் கொன்றீர்?’
என்று சினந்தனர்.

மேலும் படிக்க ...

இன்று ஓகஸ்ட் 10 - பேராசிரியர் நுஃமானுக்கு 78ஆவது பிறந்த தினம்! இலக்கிய உலகம் கொண்டாடும் இந்த ஆளுமையின் கவிதை காலிமுகத்திடலிலும் ஒலித்தது ! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
10 ஆகஸ்ட் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- இன்று தனது  78ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் பேராசிரியர் எம்.ஏ.நுஃமானுக்குப் 'பதிவுகள்' இணைய இதழும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது. -


நூறு நாட்களையும் கடந்து தொடர்ந்த காலிமுகத்திடல் போராட்டம் பல காட்சிகளை கண்டது. அதனை உள்நாட்டினர் மட்டுமல்ல சர்வதேச சமூகமே தினம் தினம் பார்த்தது. குறிப்பிட்ட காலிமுகத்திடல் பேராட்டத்தில் யாழ்ப்பாணத்தில் 1981 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் அன்றைய ஆட்சியாளர்களின் மெத்தனப்போக்கினால், அரச கூலிப்படைகளே பொது நூலகத்தை எரித்து சாம்பராக்கியது. 41 ஆண்டுகள் கடந்த பின்னரும் புத்தகப்பிரியர்கள் அனைவரது மனதிலும் அந்த நெருப்பு கனன்றுகொண்டுதானிருக்கிறது. யாழ். பொது நூலக எரிப்பின் பின்னணியில் எங்கள் தேசத்தின் முன்னணிக்கவிஞரும் படைப்பிலக்கிய ஆளுமையும் எனத் பேராசிரியருமான எம். ஏ. நுஃமான் அவர்கள் எழுதிய “ நேற்று என் கனவில் புத்தர் பெருமான்… “ எனத்தொடங்கும் கவிதை உலகப்பிரசித்தம். இக்கவிதை தமிழில் எழுதப்பட்டிருந்தாலும், பின்னர் ஆங்கிலம் – சிங்களம் மொழிகளிலும் பெயர்க்கப்பட்டதை அறிவீர்கள். காலிமுகத்திடல் போராட்டத்தில் யாழ். பொது நூலக எரிப்பும் நினைவுகூரப்பட்டபோது நுஃமானின் குறிப்பிட்ட கவிதையும் பேசுபொருளானது. அந்த அரங்கில் அக்கவிதை மும்மொழியிலும் மக்களால் சொல்லப்பட்டது. இக்காட்சியை அவுஸ்திரேலியாவிலிருந்து நானும் காணொளியூடாக பார்த்துக்கொண்டிருந்தேன். இன்றைய தினம் ஓகஸ்ட் 10 ஆம் திகதி தனது பிறந்த தினத்தை கண்டியில் அமைதியாக கொண்டாடிக்கொண்டிருக்கும் எமது நண்பர் நுஃமானும் அக்காணொளியை பார்த்திருப்பார்.

காலம் கடந்தும் பேசப்படும் அக்கவிதையை எழுதியவரை இன்றைய தினம் தொலைபேசி ஊடாக வாழ்த்திவிட்டு, அவரது ஆளுமைப்பண்புகளை விபரிக்கும் இந்த நனவிடை தோய்தற் குறிப்புகளை எழுதுகின்றேன். நுஃமான் கல்வித்துறையில் எவ்வாறு படிப்படியாக உயர்ந்து இன்று தகைமைசார் பேராசிரியராக விளங்குகிறாரோ அவ்வாறே தாம் சார்ந்த இலக்கியத்துறையிலும் படிப்படியாக உயர்ந்து முன்மாதிரியாகியிருப்பவர் கவிஞர், விமர்சகர், ஆய்வாளர், மொழியியல் அறிஞர், பேராசான், பதிப்பாளர் முதலான பன்முகம் கொண்டவர். இலக்கியப்பிரவேசத்தில் அவர் ஆரம்பத்தில் சிறுகதைகளும் எழுதியிருக்கிறார்.

மேலும் படிக்க ...

பயனுள்ள மீள்பிரசுரம்: ஒரு உலகத்தில் ஒரு வீட்டில் ஒரு மனிதன்! - விஷால் ராஜா -

விவரங்கள்
- விஷால் ராஜா -
இலக்கியம்
07 ஆகஸ்ட் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- அகழ் இணைய இதழின் ஜூலை/ஆகஸ்ட் 2022 பதிப்பில் வெளியான கட்டுரையிது. எழுத்தாளர் ஜெயகாந்தனின் மிகச்சிறந்த நாவலாகக் கருதப்படும் 'ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்' நாவல் பற்றிய விமர்சகர் விஷால் ராஜாவின் கட்டுரை. நன்றியுடன் மீள்பிரசுரம் செய்கின்றோம். - பதிவுகள்.காம் -


பள்ளி இறுதி வகுப்பை முடித்து கல்லூரிக்கு தயாராகிக் கொண்டிருந்த நண்பர்கள், மீசை முளைத்த, ஓட்டுப் போடும் வயது நெருங்கிய பரவசத்தில், வாழ்க்கை பற்றி அன்று பெரிய திட்டங்கள் வகுக்கத் தொடங்கினோம். ஒரு நண்பன் ஆவேசமாக சொன்னான். “சும்மா செங்கல்லை வைத்து ஒரு வீடு கட்டுவதற்காக மொத்த ஆயுளையும் வங்கியில் அடமானம் வைக்கும் சாதாரண வாழ்க்கையை நான் தேர்வு செய்யப் போவதில்லை”. உலகம் முழுக்க பயணம் செய்ய வேண்டும் என்பது அவன் கனவாக இருந்தது. மற்றவர்கள் கைத்தட்டி அவன் பேச்சை வரவேற்றோம். ஒரு தசாப்தம் கடந்து, இன்று திரும்பி பார்த்தால் சுற்றியுள்ள ஊர்களில் ஒவ்வொரு சதுர அடியும் என்ன விலை போகிறது என்கிற தகவலை அதே நண்பனிடம்தான் பலரும் கேட்டுத் தெரிந்து கொள்கிறார்கள். எந்த வீட்டை பார்த்தாலும் அதன் செலவு என்ன மதிப்பு என்ன என்பதை உடனடியாக கணக்கிட்டுவிடுகிறான். “கல்யாணம் முடிந்து கார் வாங்கியாகிற்று. அடுத்து வீடு வாங்கி செட்டில் ஆக வேண்டும் நண்பா” என்று அழுத்தமாக சொல்கிறான். தன் பழைய சூளுரையும் ஆக்ரோஷமும் இப்போது அவனுக்கே ஞாபகம் இருக்குமா என்று தெரியவில்லை. ஆனால் இது ஆச்சர்யமூட்டும் தனி நிகழ்வல்ல. இயல்பாக நம்மிடையே வந்து சேர்கிறது இம்மாற்றம். முதிரா இளமையில் வீட்டை விட்டு வெளியேற துடிக்கிறோம். உலகம் வீட்டுக்கு வெளியே இருப்பதாகத் தோன்றுகிறது. அப்புறம் சீக்கிரமே நமக்கென்று ஒரு வீடு கட்டி அமைந்துவிட விருப்பம் வருகிறது. அதன் பாதுகாப்பை நாடத் தொடங்குகிறோம்.

வீடு கட்டுவது இந்த உலகின் ஆசைகளோடு மனிதன் செய்து கொள்ளும் நிபந்தனையில்லாத உடன்படிக்கை. மனிதனுடைய உலகியல் நாட்டம், வாழும் இச்சை, உரிமைக் கோரல் இவை அனைத்தின் பரு வடிவமாகவும் இருக்கிறது வீடு. அதனால்தான் எந்த கனவையும் அது எளிதில் உட்கொண்டு செரித்துவிடுகிறது. செருப்பை வாசலில் கழற்றி போட்டு வீட்டிற்குள் நுழைந்துவிட்டால், அதற்கு பிறகு நாம் உலகைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. வெளியே இருக்கும் உலகம் மற்றமை ஆகிவிடுகிறது. உலகின் வன்முறை, சுரண்டல், ஆச்சர்யம் எல்லாமே தொலைக்காட்சி செய்திகள் மாத்திரமே. வீட்டுக் கூடத்தில் சௌகர்யமாக அமர்ந்து அவற்றை கண்டு களிக்கலாம். ஒருவன் தன் வீட்டினுள் இருக்கும்போது- அதன் சுவர்களின் அணைப்பிலேயே- முழுமையான தனி மனிதனாக உணர்கிறான். அங்கே அவனுக்கு சமூகப் பங்கில்லை. அல்லது சமூகப் பங்கை மறப்பதற்கான வாய்ப்பு கிடைக்கிறது. சாயுங்காலம் வீட்டுக்கு வந்து சட்டையை ஹேங்கரில் மாட்டிவிட்டு நாற்காலியில் சாய்வது சமூக பாத்திரத்திலிருந்து விடுபடுவதும்தான்.

மேலும் படிக்க ...

கிளிம் வாழ்வின் மூன்றாம் தொகுதி: -தமிழ் இலக்கிய உலகை, முன்னிறுத்தி (8) - ஜோதிகுமார் -

விவரங்கள்
-  ஜோதிகுமார் -  8
ஜோதிகுமார்
07 ஆகஸ்ட் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அத்தியாயம் எட்டு!

கிளிம்மின், மாகாணத்தை நோக்கிய நகர்வு, முன்னரே குறித்தவாறு, மரீனாவால் ஏற்படுகின்றது.

தத்துவ தேடல் - வெறுமை நிறைந்த மனம் - வெளிறத் தொடங்கும் உணர்வுகள் - இந்த பின்னணியில் - மரீனா – என்ற மூவெழுத்து, இவை அவனுள் ஒரு பிடிப்பை ஏற்படுத்துகின்றன. அவளது, அறிவும் - அழகும் - ஸ்பரிசமும் - ஒரு தேவதையின் பாற்பட்டது என்றளவில் முடிவெய்துகிறான் கிளிம். இருந்தும் மர்மங்கள்…?

அவள், அவனை ஊடுருவி, அவனை எளிதாக இனங்கண்டு, அப்படியான தன் அபிப்பிராயத்தை, பின்வருமாறு, அவனிடம் நேரடியாகவே கேட்கின்றாள். “ஜார் நடைமுறைப்படுத்தும் இந்த ஜனநாயக ஏற்பாடுகள் - டூமா (பாராளுமன்றம்) போன்றவை, ‘அதிகாரங்களை எந்த வழியிலாவது பெற்றுக்கொள்ள ஏங்கும், எமது புத்திஜீவிகளுக்கு பொருத்தமானது…’ ஆனால் உனக்கு…?”– புன்னகைத்தவாறே, கேட்பாள், அவள்.
மரீனாவின் தனிப்பட்ட வழக்குரைஞனாக, அடி எடுத்து வைக்கும் கிளிம், காலப்போக்கில் அவளுடன் மிக அந்நியோன்யமாக, நெருக்கமாகப் பழக நேரிடுகிறது.

கிட்டத்தட்ட, மூன்று வருடங்கள் முடியும் தருவாயில், கிளிம்மின், நெற்றியில், ஆதரவாய் முத்தமிட்டு, அவனை வழியனுப்பி வைக்கும் அளவிற்கு அவர்கள் உறவு மேம்படுகின்றது.

இக்காலப்பகுதியில், அவளது தயவினால், கிளிம்மின் பொருளாதார நிலை மாத்திரமல்ல, அவனது பரிதவித்த – பிளவுண்ட – மனநிலை கூட  ஒரு ஸ்தீரதன்மையை எட்டிப் பிடித்து விடுகின்றது.

அவள் தொடர்பில் உடல் ரீதியாகவும், உளரீதியாகவும் ஓரளவுக்கு ஈர்க்கப்படும் கிளிம்மிடம் மீளமீள பிறக்கும் கேள்வி: யார் இவள்? இவ்வளவு ஆளுமையுடனும் நிதானத்துடனும் உலக நடப்புகளை – அவை இலக்கியம், அரசியல், தத்துவம், மனிதர்கள் - என்று எவையானாலும் சரி – அவை தொடர்பான பிரச்சினைகளால் ஒரு சிறிதேனும் நிலைகுலைந்து விடாமல் - அனைத்தையுமே, ஓர் சிறு புன்னகையுடன் சாவதானமாய் - எதிர் கொள்ளும் இந்த பெண் உண்மையில் யார்? இவளை நிலைநிறுத்தும் அந்த சக்தி எது? எந்த ஆயுதத்தின் துணைக்கொண்டு, இவள் இப்படியாய் வலம் வருகிறாள்…?

மேலும் படிக்க ...

மற்ற கட்டுரைகள் ...

  1. சிறுகதை: சிலபேருக்கு தாங்கள் தமிழ் எண்டு சொல்ல வெட்கம்’ – கே.எஸ்.சுதாகர் -
  2. தேடியெடுத்த கட்டுரை: வில்லூன்றி மயானம்! - அ.ந.கந்தசாமி -
  3. சங்க இலக்கியத்தில் ‘மிளகு‘ - ஒரு பார்வை! - முனைவா் பெ.கி.கோவிந்தராஜ், உதவிப்பேராசிரியா், தமிழ்த் துறை, மஜ்ஹருல் உலூம் கல்லூரி, ஆம்பூா் 635 802, திருப்பத்தூா் மாவட்டம் -
  4. புறக்கணிக்கப்படலாகாத கவிஞர் ஆசு சுப்பிரமணியனின் முழுக்கவிதைத் தொகுப்பு 'ஆசு கவிதைகள்'! - லதா ராமகிருஷ்ணன் -
  5. காலத்தால் அழியாத கானம்: 'எங்கிருந்த போதும் உனை மறக்க முடியுமா?' - ஊர்க்குருவி -
  6. பாதிக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலிக்கும் படைப்பாளி கே ஆர் டேவிட் சிறுகதைகள் – வாசிப்பு அனுபவம்! - தாமரைச்செல்வி -
  7. காலச்சுவடு கண்ணனுக்குச் செவாலியர் விருது! - வ.ந.கி -
  8. இனவாதத்தைக் கையிலெடுக்கும் வீரவன்ச! - நந்திவர்மன் -
  9. இலங்கையின் புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கவின் வலை விரிப்பு!
  10. திரையில் எழுத்தாளர் மிக்கெயில் ஷொலோகோவின் 'டொன் நதி அமைதியாக ஓடிக்கொண்டிருக்கின்றது.' - வ.ந.கி -
  11. சிறுகதை: இரசவாதம்! தெலுங்கில் : பி.அஜய்பிரசாத் | தமிழில் : பொருநை க.மாரியப்பன்
  12. நினைவு கூர்வோம்: கறுப்பு ஜூலை 83! - வ.ந.கி -
  13. கலை, இலக்கிய விமர்சகர் வெங்கட் சாமிநாதனைக் கவர்ந்த 'கட்டோடு குழலாட ஆட' - வ.ந.கிரிதரன் -
  14. வெற்றிச் சிகரத்தை நோக்கி (3): உன்னை தெரிந்து கொள்! எண்ணம் மற்றும் எழுத்து! - கி. ஷங்கர் (பெங்களூர்) , Chartered Mechanical Engineer, MBA(Marketing)-
பக்கம் 68 / 104
  • முதல்
  • முந்தைய
  • 63
  • 64
  • 65
  • 66
  • 67
  • 68
  • 69
  • 70
  • 71
  • 72
  • அடுத்த
  • கடைசி