பதிவுகள் முகப்பு

அஞ்சலிக்குறிப்பு: விடைபெற்ற தோழர் தா. பாண்டியன் ( 1932 – 2021 )! ஈழத்தமிழருக்கு ஆதரவாகவும் - அடக்குமுறைக்கு எதிராகவும் ஒலித்த குரல் ஓய்ந்தது ! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
27 பிப்ரவரி 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அமரர் தா.பாண்டியன்சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் நேற்று 26 ஆம் திகதி உடல்நலக்குறைவால் மறைந்துவிட்ட தோழர் தா. பாண்டியன் அவர்கள், முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் – அதாவது 1991 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் திகதியே இறந்திருக்கவேண்டியவர் ! இதனை  வாசிக்கும் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறதா..? அந்தத் திகதியை எவரும், ஏன் முழு உலகமுமே மறந்திருக்காது. அந்தநாள் எத்தகையது என்பதை தா. பாண்டியனின் வாக்குமூலத்திலிருந்தே இங்கே தருகின்றேன். அந்த வாக்குமூலத்தை அவர் தமது 69 வயதில்தான் பதிவுசெய்துள்ளார்.

“ பிறந்த நாளைப் பலர் மறக்காமல் கொண்டாடிவருகிறார்கள். நான் என் பிறந்த நாளை, நான் கடந்துவிட்ட 69 ஆண்டுகளில் ஒரே ஒரு முறைதான் கொண்டாட நேரிட்டது. பிறந்தநாளையே நினைக்காதிருந்த எனக்கு அதை 1992 இல்  கொண்டாடவேண்டிய ஒரு நிர்ப்பந்தம் என் மனைவி , குழந்தைகளிடமிருந்து வந்தது. 1991 மே, 21 ம் நாளன்று சென்னையை அடுத்துள்ள திருப்பெரும்புதூரில், தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்காக வந்த ரஜீவ்காந்தி மனித வெடிகுண்டு மூலம் கொல்லப்பட்டார். அன்று அந்த இடத்தில் அவர் அருகில் இருந்தவன் நான். மூன்றடி தூரத்திற்குள்  நின்று இருந்த நானும், குண்டுகள் பட்டுக் காயமடைந்தேன். வெடித்த வேகத்தில் தூக்கி எறியப்பட்டேன். இறந்துபோனதாகவே அறிவிக்கப்பட்டேன். சில பத்திரிகைகளில் இறந்தோர் பட்டியலில் என் பெயரும் இருந்தது. அன்று இரவு முழுவதும் என் குடும்பத்தார்க்கும் நான் கொல்லப்பட்ட ஒருவன்தான். ஏனெனில் அதுதான் அவர்களுக்கு தரப்பட்ட செய்தி.
இருந்தும் உயிர்தப்பி வாழ்கிறேன்… எப்படித் தப்பினேன்..? என்பதை இன்றும் என்னால் தெளிவாகக் கூற முடியவில்லை. ஏனெனில், எனக்கு வலதுபுறம் இருந்தவரும் கொல்லப்பட்டார்… இடதுபுறம் நின்றவரும் வீழ்ந்தார். எனக்குப்பின்னிருந்த  ஏழெட்டுப்பேர் ரத்த வெள்ளத்தில் துண்டிக்கப்பட்டுக்கிடந்ததையும் கண்டேன். என்னைச்சுற்றிலும் குண்டு விபத்துக்குப்பலியாகி மடிந்தவர்கள் பதினெட்டுப்பேர். ராஜீவ்காந்தியுடன் பத்தொன்பது பேர். ஒரு நொடியில், ஒரே இடத்தில் களப்பலியாயினர். இவர்கள் மத்தியில் நின்ற நான், அதுவும் ராஜீவ்காந்தியின் அருகில் நின்று மொழிபெயர்த்துக்கொண்டிருந்த நான் குண்டின் குறிக்கு எப்படித் தப்பினேன் ?.... இன்றும் புரியாத புதிராகவே இருக்கிறது. ஆனால், பதிந்த குண்டுகள், இரும்புத் துகள்கள், ஆணிகள் என் உடம்பில் இன்றும் இருந்து அந்த நாளை நினவுபடுத்திக்கொண்டே இருக்கின்றன. வலதுகை விரல்கள் சிகிச்சைக்குப்பிறகும் சரியாகவில்லை. அதனால் உணவருந்தும்போதும், எழுதும்போதும், தலைவாரும்போதும், வலது கையை பார்க்குந்தோறும், அந்தச் சோக நிகழ்ச்சியை நினைவுபடுத்திக்கொண்டே இருக்கின்றன. எனவே, அதை நான் மறுபிறவி எடுத்த நாளாக என் குடும்பத்தினர் கருதியதில் வியப்பில்லை. எனவேதான், 1992 மே 18 ம் நாள் மட்டும் 60 வது பிறந்தநாளை யாருக்கும் தெரிவிக்காமல் எங்கள் ஊரிலுள்ள தோட்டத்தில் இருக்கப்போனோம். பிறந்த நாள் மே 18. – மறுபிறவிகொண்ட நாள் மே 21. இப்போது மே 21- தான் நினைவில் நிற்கிறது. “

மேலும் படிக்க ...

அவுஸ்திரேலியாவில் மறைந்த கலை – இலக்கிய ஆளுமைகள் நினைவரங்கு - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
27 பிப்ரவரி 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அவுஸ்திரேலியாவில் மறைந்த கலை – இலக்கிய ஆளுமைகள் நினைவரங்கு  - முருகபூபதி -

கலையும் இலக்கியமும் இனத்தின் கண்கள் – அறிந்ததை பகிர்தல் - அறியாததை அறிந்துகொள்ள ஆவனசெய்தல் முதலான சிந்தனைகளின் அடிப்படையில் 2001 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் விக்ரோரியா மாநிலத்தில் தொடங்கப்பட்ட தமிழ் எழுத்தாளர் விழா இயக்கம், அடுத்தடுத்து ஏனைய மாநிலங்களிலும் முன்னெடுக்கப்பட்டது. 2001 ஆம் ஆண்டு மெல்பனில் முதலாவது தமிழ் எழுத்தாளர் விழாவை நடத்திய இவ்வியக்கம், பின்னர் சிட்னி, கன்பரா முதலான மாநிலத்தலைநகரங்களிலும் எழுத்தாளர் ஒன்றுகூடல் விழாக்களை நடத்தியது. அத்துடன், காலத்துக்குக்காலம் கலை – இலக்கிய சந்திப்புகளையும் மேற்கொண்டுவந்தது.

மேலும் படிக்க ...

சிறுகதை : அவரும் நானும் ஒரு படகுப் பயணிகள்! - கடல்புத்திரன் -

விவரங்கள்
- கடல்புத்திரன் -
சிறுகதை
27 பிப்ரவரி 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கொஞ்ச நாளாய் தான் அந்த இயற்கை எழில் சூழ்ந்த ,அதாவது பச்சை மரங்கள் செடிகள் கொண்ட நடைபயிலுகிற பூங்கா என்று சொல்ல முடியாத, காடு என்றும் சொல்ல முடியாத  பச்சை வளையப்பகுதியிலே நடக்கிறான். எல்லாம் கொரானாவின் கதவடைப்பால் வந்த உபயம். இதற்கு முந்தியும் பறவைகள் கீச்சிடும் அந்த பகுதி இருந்தது தான்.இறங்கி இருக்கவில்லை.வீட்டிலேயே கனநாள் கிடைக்கையில் ஏற்பட்ட உடல் மூட்டுகளில் வலியோடு ஏற்பட்ட கீரீச் கிரீச் என்ற சத்தங்களிற்குப் பிறகு,நடப்போம் என இறங்கி இருக்கிறான்.இந்த நாட்டில் எல்லாப் பகுதியிலும் பாம்பு போல போற இந்த பச்சை வழிப்பாதைகள் கிடக்கின்றன. எவ்வளவு பேர்களுக்குத் தெரியுமோ?, நாம் குளிக்கிற , பாத்திரம் கழுவுற தண்ணீர் , சலவை செய்கிற நீர், மழை, பனி நீர் எல்லாம் வீதிகளில் வலையமைப்பில்  ஓடுற குழாய்க்கால்களில் ஓடி ,அடைப்புகள் ஏற்பட்டால்  கிடக்கிற மனிதர் இறங்கி வேலை செய்கிற துளைகள் போன்ற கட்டமைப்புகளுடன் சேர்கின்றன.பிறகு இவை ஓடி வந்து பெரிய ஏரிகளை அடைகின்றன. இந்தக் கட்டமைப்பில் தொழிற்சாலைப் பகுதியிலிருந்து வெளியேறுகிற நீரை வடிகட்டி இரசாயன கலப்பில்லாது விட வேண்டும் என்ற விதிகளை சிலர் மீறி விடுகிறார்கள். பிறகென்ன நாம் குடிக்கிற நீரில் நஞ்சு கலந்து விடுகிறது. ஏரி நீரைத் தான் நாம் எல்லோருமே குடிக்கிறோம். சில பகுதிகள் பாதிக்கப் பட்டுக் கிடக்கின்றன. அவை பெரும்பாலும் முதல்குடி மக்களின் பகுதிகளாக கிடப்பது தான் பரிதாபம். தொழிற்சாலைகளுக்கும் வடிகட்டும் விசேச நிலையங்கள் இருக்க வேண்டும். அவற்றை அரசாங்கள் செய்யாது அவர்களே செய்ய வேண்டும் என தட்டிக் கழித்து விட்டதாலேயே தவறுகளும் கணிசமாகி விட்டிருக்கின்றன. மனிதக்கழிவு நீர்களுக்கு வடிகட்டும் விசேச நிலையங்கள் இருக்கின்றன. அதில் வடிகட்டி உர உப்புகள் கூடத் தயாரிக்கப்படுகின்றன. வடிகட்டிய நீரும் இதே வாய்க்காலிலே விடப்படுகின்றன. இலங்கை. இந்தியா போன்ற நாடுகளில் குடிமனைகளில் பரவி சேதம் ஏற்படுத்துபவை இங்கே ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றன . இந்த வாய்க்கால்கள் சில நதிகள் என்றும் கூட அழைக்கப்படுகின்றன. நீளம் கூடியதால் அழைக்கிறார்களோ? மழைக்காலத்தில் பெருமளவு நீர் பெருக்கெடுத்து ஓடுறதும் ஏற்படுகின்றது.

மேலும் படிக்க ...

தர்க்கம் செய்வோம் வாருங்கள்: தனித்தமிழ் பற்றி முகநூலில் ஒரு தர்க்கம்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
26 பிப்ரவரி 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

தர்க்கம் செய்வோம் வாருங்கள்!- அண்மையில் முகநூலில் நானிட்ட தனித்தமிழ் பற்றியதொரு பதிவும், அதற்கான எதிர்வினைகளும் இங்கு பதிவு செய்யப்படுகின்றன. தர்க்கம் ஆக்கபூர்வமாக இருந்ததால் இந்த முடிவு. -


எனது முகநூற் பதிவு: தனித்தமிழ் பற்றி..

தனித்தமிழ் என்பதில் எனக்குப் பூரண உடன்பாடில்லை. பல் திசைகளிலிருந்தும் வரும் மொழிகளிலிருந்து புதிய சொற்களை உள்வாங்குதலென்பது மொழியொன்றின் தவிர்க்க முடியாத அம்சங்களிலொன்று. அனைத்து மொழிகளுக்கும் இது பொருந்தும். இவ்விதம் ஏனைய மொழிச் சொற்களை உள்வாங்குவதால் மொழியானது வளமடைகின்றது என்பதை நம்புவன் நான். எவ்விதம் பிறநாட்டுத் தொழில்நுட்பங்களை, அறிவியலை எல்லாம் உள்வாங்குகின்றோமோ , எவ்விதம் அவ்விதம் உள்வாங்குவதால் நாம் பெரும்பயன் அடைகின்றோமோ அவ்விதமே மொழி விடயத்திலும் பரந்த மனப்பான்மையுடன் இருக்க வேண்டுமென்று நினைப்பவன் நான். இதனையுணர்ந்ததால்தான் நம் முன்னோர்கள் தமிழ் இலக்கணத்தில் திசைச்சொற்கள் என்னும் பிரிவையே ஏற்படுத்தி வைத்தார்கள்.

மேலும் படிக்க ...

‘பிரித்தானியாவில் புலம்பெயர் படைப்பிலக்கியங்கள்’ - நவஜோதி ஜோகரட்னம், லண்டன் பற்றி.. முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
வாசகர் கடிதங்கள்
26 பிப்ரவரி 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

வாசகர் கடிதங்கள்

அன்புள்ள நவஜோதி வணக்கம்.

வாழ்த்துக்கள். அன்புள்ள நவஜோதி, வணக்கம்.   உங்களது பிரித்தானிய எழுத்தாளர்களின் படைப்புகள் குறித்த பார்வை - கனடா பதிவுகளில்  படித்து உண்மையிலேயே களைத்துப்போனேன்.  படித்த எனக்கே அப்படி என்றால், இத்தனை ஆர்வத்துடன் -  தேடுதலுடன் இந்த அறிமுகக்குறிப்பிற்காகவும் - திறனாய்விற்காகவும் பல நாட்கள்  உழைத்த உங்களுக்கு எப்படி இருந்திருக்கும். தமிழ்நாட்டவர் இதனைக்கேட்டு திகைத்திருப்பார்கள். பிரித்தானியாவில் இத்தனை எழுத்தாளர்களா...?   அனைவரும் அவரவர் துறைகளில்  தம்மால் முடிந்ததை செய்திருக்கிறார்கள்.  உங்கள் ஆக்கம் ஆவணமாகத் திகழுகிறது.   வாழ்த்துக்கள். உங்கள் கடின உழைப்புக்கு தலைவணங்குகின்றேன்.

மேலும் படிக்க ...

MEDIA ADVISORY: Citizenship ceremony to mark Black History Month

விவரங்கள்
Immigration, Refugees and Citizenship Canada
நிகழ்வுகள்
25 பிப்ரவரி 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

February 25, 2021— To mark Black History Month, the Honourable Marco E. L. Mendicino, P.C., M.P., Minister of Immigration, Refugees and Citizenship, and the Institute for Canadian Citizenship, along with distinguished guests, will welcome 20 candidates into the Canadian family at a special virtual citizenship ceremony.

மேலும் படிக்க ...

‘பிரித்தானியாவில் புலம்பெயர் படைப்பிலக்கியங்கள்’ - நவஜோதி ஜோகரட்னம், லண்டன் -

விவரங்கள்
- நவஜோதி ஜோகரட்னம், லண்டன் -
நவஜோதி ஜோகரட்னம்
25 பிப்ரவரி 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

நவஜோதி யோகரட்னம் - அரசு கலைக் கல்லூரி குளித்தலை தமிழாய்வுத்துறை நடாத்திய இணையவழி மூன்றுநாள் பன்னாட்டுக் கருத்தரங்கில் ‘பிரித்தானியாவில் புலம்பெயர் படைப்பிலக்கியங்கள்’ ஆற்றிய உரை. -


அரசு கலைக் கல்லூரி குளித்தலை தமிழாய்வுத்துறை நடாத்திய இணையவழி மூன்றுநாள் பன்னாட்டுக் கருத்தரங்கில் ‘பிரித்தானியாவில்; புலம் பெயர் படைப்பிலக்கியங்கள்’ குறித்து பேசுவதற்கு என்னை அழைத்த முனைவர் சௌ.பா. சாலாவாணிஸ்ரீ, தலைவர் முனைவர் பொ. ரமேஷ், முதல்வர் முனைவர் கி.மாரியம்மாள், முனைவர் மா. கர்ணன், மற்றும் மாணவச் செல்வங்கள், பார்வையாளர்கள் அனைவருக்;கும் எனது அன்பு கலந்த வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

   ஈழத்தமிழர்களுக்குக் குறிப்பாக யாழ்ப்பாணத்தமிழர்களுக்கு  லண்டன் ஒரு கனவுத் தேசமாகவே இருந்திருக்கிறது. ஆங்கிலேய ஆட்சியின் கீழ் இலங்கை இருந்தது மட்டுமல்ல யாழ்ப்பாணத்தில் தீவிரமாக இயங்கிய மிஷநெறிகளின் உயர்கல்வி செயற்பாடுகளாலும், லண்டன் கனவு நிரந்தரமாகவே அவர்களின் நெஞ்சில் பதிந்திருக்கிறது. ஆரம்பகாலங்களில் உயர் கல்வி கற்பதற்காகவும் உயர் தொழில்களை நாடியும் ஈழத்தமிழர்கள் லண்டன் நோக்கிப் புலம்பெயர்ந்திருந்தனர். மருத்துவர்களாகவும், கணக்காளர்களாகவும், உயர்கல்வி சார்ந்தும் இலண்டன் நோக்கிய புலப்பெயர்வுகள் இடம்பெற்றது.

   1982ஆம் ஆண்டு இனக்கலவரத்தின்பின் அகதிகளாக ஈழத்தமிழர்கள் லட்சக்கணக்கில் குடிபெயர்ந்தனர். இந்நிலையில் லண்டனில் தமிழ் பத்திரிகைகளின் தோற்றமும், எழுத்தாளர்களின் பிரவேசமும், புனைகதை ஆக்கங்களும், விமர்சனக் கூட்டங்களும், நூல் வெளியீடுகளும், கலை நிகழ்ச்சிகளும் வாரத்திற்கு இரண்டு முறை என்ற வகையிலாயினும் தொடர்ந்து இடம்பெற்றவண்ணமே உள்ளன. இப்பின்னணியிலேயே லண்டனில் புலம்பெயர் படைப்பிலக்கியங்கள்; பற்றி நான் பேச இருக்கிறேன்.

   நாவல்; - சிறுகதை – கவிதை - கட்டுரை போன்றவற்றை பிரித்துக் கூறுவது மிகப்பொருத்தாக இருக்கும் என நம்புகிறேன். நாவல் இலக்கியத்தைப் படைத்தவர்கள் மற்றைய இலக்கிய வடிவங்களையும் படைத்திருப்தையும் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அத்தோடு நேரத்தை மனிதிற்கொண்டு முழுப் பட்டியலையும் இங்கு சொல்வதும் சாத்தியமில்லை. முடிந்தவரை தேர்ந்தெடுத்திருக்கிறேன். சில நூல்கள் தவறவிட்டிருக்கலாம் என்று கூறி...

மேலும் படிக்க ...

நீண்டதொரு மதிப்பீட்டுக்கான தொடக்க அறிவித்தல்! மீள்வாசிப்புகளும் பதிவுகளும் ... - பெளசர் -

விவரங்கள்
- பெளசர் -
நிகழ்வுகள்
23 பிப்ரவரி 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மேலும் படிக்க ...

சமூக, அரசியற் செயற்பாட்டாளர் அமரர் சண்முகலிங்கம் நினைவாக..! - வ.ந.கி -

விவரங்கள்
- வ.ந.கி -
அரசியல்
23 பிப்ரவரி 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இலங்கை சீனசார்பு கொம்யூனிஸ்ட் கட்சி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், காந்தீயம், தேடகம் போன்ற அமைப்புகளின் முன்னாள் உறுப்பினராகவிருந்தவர் அமரர் சண்முகலிங்கம் அவர்கள். பெப்ருவரி 22 அவரது நினைவு நாள்.

எப்பொழுது கண்டாலும் சிரித்த முகத்துடன் , வாயூற  உரையாடும் இவரது தோற்றம் நினைவுக்கு வருகின்றது. தான் நம்பிய கொள்கைகளுக்காகத் தன் இருப்பில் உறுதியாகத் தடம்  பதித்தவர். இவர் காந்திய அமைப்பில் செயற்பட்டுக்கொண்டிருந்தபோது அச்செயற்பாடுகளுக்காக இலங்கை அரசால் கைது செய்யப்பட்டு சிறையினில் வாடியவர். இவரை நான் சந்திக்கும் சந்தர்ப்பம் ஏற்படும்போதெல்லாம் நான் அவரது சிறை அனுபவங்கள் பதிவு செய்யப்பட வேண்டியவை; ஆவணப்படுத்தப்பட வேண்டியவை. அவற்றைப் பற்றி எழுதுங்கள். 'பதிவுகள்' இணைய இதழுக்கும் எழுதுங்கள் என்று வலியுறுத்துவதுண்டு. எழுதுவதாக உறுதியளிப்பார்.

மேலும் படிக்க ...

மண்ணின் மகள்! - வ.ந.கி -

விவரங்கள்
- வ.ந.கி -
அரசியல்
23 பிப்ரவரி 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

படித்தவர்கள் பலர் பிற நாடுகளில் வாழ்ந்து , தம் பொருள் வளம் பெருக்குவதையே நோக்காகக்கொண்டு வாழ்கையில், இவர் தான் கற்றதை, அறிந்ததைத் தன் மண்ணுக்கு வழங்குவதற்காக வந்தார். தன் மண்ணின் அனர்த்தங்களை எதிர்கொண்டு , சமூக, அரசியல் ரீதியிலும் அவற்றைக் களையத் தன் பங்களிப்பினைச் செய்தார். அதற்கு இவருக்கு எம் மண்  கொடுத்த பரிசு? தூக்கிப் போற்றிப் பாதுகாத்திருக்க வேண்டிய மண் புழுதியிலே போட்டு மிதித்துச் சீரழித்தது. எம் மண்ணின் வரலாற்றின் அவமானம் இம்மண்ணின் மகளின் மடிவு! முடிவு! தானிழைத்த வரலாற்றுத் தவறினை, இவரை நினைவில் வைப்பதன் மூலம் ஓரளவு தீர்த்துக்கொள்கிறது. எந்தக் கல்வி நிலையத்துக்காக இவர் தன் வாழ்வையே அர்ப்பணித்தாரோ அந்தக் கல்வி நிலையம் இதுவரை இவரை நினைவு கூர்ந்திட என்ன செய்தது? ஒரு சிலை கூட வைத்ததா? நினைவு  கூர்ந்ததா? மிகவும் வெட்கக்கேடான விடயமென்னவென்றால் .. இவரிடம் கல்வி கற்றவர்களில் சிலரே இவரின் முடிவுக்கும் காரணமாக இருந்தார்களென்ற தகவல்கள்தாம்.

என் வாழ்க்கையில் ஒரு முறையாவது இவரை நான் சந்திக்கும் சந்தர்ப்பம் வாய்த்தது.  அதனை  நினைவினில் பாதுகாத்து வைத்திருக்கின்றேன். அப்பொழுது நான் நினைக்கவில்லை அதுவே இவரைச் சந்திக்கும் இறுதிச் சந்தர்ப்பமாக இருக்கப்போகுதென்பதை.  இப்பொழுதும் என் நினைவில் அச்சந்தர்ப்பம் நேற்றுத்தான் நடந்ததுபோல் நினைவிலுள்ளது.

எண்பத்திரண்டு என்று நினைக்கின்றேன். நண்பருடன் கைதடியில்  இயங்கிக்கொண்டிருந்த யாழ் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரிக்கு மொறட்டுவைத் தமிழ்ச்சங்க வெளியீடான 'நுட்பம்' சஞ்சிகையுடன் சென்றபோது மாணவர்களுடன் உடலொன்றை அறுத்துக்கூறுபோட்டவாறு பாடம் நடத்திக்கொண்டிருந்த இவரைச் சந்தித்தேன். நுட்பத்தை அறிமுகப்படுத்தி மாணவர்களுக்கு வழங்க இன்முகத்துடன் வரவேற்ற இவரது தோற்றம் இன்னும் நினைவில் பசுமையாக நிற்கிறது.

மேலும் படிக்க ...

கே.எஸ். சிவகுமாரன்: ஈழத்து இலக்கியத்தின் தனிப்பெரும் விருட்சம் - மு. நித்தியானந்தன் -

விவரங்கள்
மு. நித்தியானந்தன்
இலக்கியம்
23 பிப்ரவரி 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஈழத்து இலக்கியத்தோப்பில்  வைரம்பாய்ந்த தனி விருட்சமாக, ஆழ வேரோடி, பரந்தகன்ற கிளை விரித்து, குளிர்நிழல் பரப்பிநிற்கும் தனித்த ஆளுமைதான் கே.எஸ். சிவகுமாரன். இந்த பெரும் இலக்கிய வியக்திக்கு இணைசொல்ல இங்கே யாருமில்லை. நூறு கவிஞர்களைக் காட்ட முடியும்; நூறு நாவலாசிரியர்களைக் காட்ட முடியும்; நூறு கட்டுரையாளர்களைக் காட்ட முடியும். கே.எஸ். சிவகுமாரனுக்கு நிகரான பல்துறைசார்ந்த ஓர் எழுத்தாளனை ஈழத்து இலக்கியப்பரப்பின் கடந்த அறுபது ஆண்டுகால எல்லையில் காண்பதற்கில்லை. இந்த அறுபதாண்டுகாலத்தில் தொடர்ந்த வாசிப்பே அவரது சுவாசமாக இருந்திருக்கிறது. அந்த வாசிப்பின் வியாபகம் அசலானது. அயராத எழுத்துப்பணியே அவரின் மூச்சாக இருந்திருக்கிறது. இவரின் எழுத்துக்கள் 5,000 பக்கங்களில், முப்பத்தேழு நூல்களாக மலர்ந்திருக்கின்றன. ஆங்கிலத்திலும் தமிழிலுமாக இன்னும் நூல் வடிவம் பெறாத இவரின் எழுத்துக்கள், இன்னும் ஓர் ஆயிரம் பக்கங்களை மிக எளிதாகத் தாண்டிவிடும். இந்தளவு பல்துறை சார்ந்து, ஆங்கிலத்திலும் தமிழிலுமாக எழுத்தை ஓர் இயக்கமாக எண்ணிச் செயற்பட்ட வேறு ஒருவரை என்னால் சொல்ல முடியவில்லை.

'ஆராய்ச்சிக் கட்டுரைகள்' எழுதுவது, பல்கலைக்கழகம் சார்ந்த ஆய்வாளர்களுக்கு அது தொழில். பதவி உயர்வுக்குப் புள்ளிகள் தேடித்தரும் பொறி. 1980இல் வெளிவந்த நூலுக்கு 30 ஆண்டுகள் கழித்து வெளியான இரண்டாம் பதிப்புக்கு 'மறுவாசிப்பு' செய்கிறேன் என்று சொல்லி ஒரு பல்கலைக்கழகப் 'புலமையாளர்', அடிக்குறிப்பு சகிதம் அச்சியந்திரம் உருவானதில் ஆரம்பித்து, மேனாட்டார் வருகை, மிஷனரிகளின் செயற்பாடு என்று ஆரத்தி எடுத்து, கூடவே காவடியும் எடுத்து, ஆய்வுப்பரப்பிற்குள் நுழையவே பாதிக்கட்டுரை முடிந்து விடுகிறது. இன்னுமொரு பேராசிரியர் தவில் கலைஞனின் வாழ்க்கையை எழுதப்போனவர், தவில் எப்படி இருக்கும் என்று சொல்லி, தவில் வளர்ந்த கதை சொல்லி, தவில் வாசித்தவன் கதை சொல்ல வருவதற்கிடையில் விடிந்துவிடுகிறது. கொழும்புப் பல்கலைக்கழகத்தில் தமிழில் சிறப்புநெறி பயிலும் மாணவர்களுக்கான பாட போதனையில் பேராசிரியர் க. கைலாசபதியின்  'புனைகதை' பற்றிய சிறப்பு விரிவுரைகளை நான் முழுதும் கேட்டிருக்கிறேன். George Lukacsஇன் The Historical Novel நூலை விரித்துவைத்து, அந்நூலினை வாசித்து, கல்கியின் நாவலை விமர்சிக்கும் பேராசிரியர் கைலாசபதி அவர்களின் இலக்கியப் புலமையின் தரம் வேறு. கே.எஸ். சிவகுமாரன் தனது விமர்சனக் கட்டுரை ஒன்றில் Ralph Cohen எழுதிய New Directions in Literary History என்ற நூலில் Robert Weismann என்ற மார்க்சிய அறிஞர் எழுதிய Past Significance and Present Meaning in Literary History  என்ற கட்டுரையின் சாரத்தைத் தருகிறார். எத்தகைய வாசிப்பு இது.Walter Sutton and Richard Foster என்போர் இணைந்து எழுதிய  Modern Criticism: Theory and Practice என்ற பாரிய நூலைப் பற்றிய தகவல்களைத் தருகிறார் கே.எஸ். சிவகுமாரன். Ceylon Daily News பத்திரிகையில் 1973இல் ஆறு இதழ்களில் எஸ்ரா பவுண்ட் பற்றி மேர்வின் த சில்வா, ரெஜி சிறிவர்தன ஆகிய இரு ஆங்கில விமர்சகர்களுக்கிடையே நடந்த இலக்கிய விவாதத்தைச் சுருக்கமாகத் தமிழ் வாசகர்களின் முன் வைத்த ஆர்வத்தை எப்படிப் பாராட்டுவது? தொடர்ச்சியான அந்த இலக்கிய விவாதத்தைக் கருத்தூன்றிக்  கிரகித்து, தமிழ் வாசகர்களை மிரட்டாமல் சுருக்கமாக - எளிமையாக அப்பெரும் இலக்கிய சர்ச்சையை, சாதாரண தமிழ் வாசகனுக்கு எடுத்துச்செல்லும் பணி எத்தகைய பணி! ஆழ்ந்த வாசிப்போடு, அதனை எளிமையாக - சுருக்கமாக தமிழில் வழங்குவதற்கு எத்தகைய ஆளுமை வேண்டும்!

மேலும் படிக்க ...

காலத்தால் அழியாத கானங்கள்: "தங்கத்தில் முகமெடுத்து சந்தனத்தில் உடலெடுத்து மங்கை என்று வந்திருக்கும் மலரோ" - ஊர்க்குருவி -

விவரங்கள்
- ஊர்க்குருவி -
கலை
23 பிப்ரவரி 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கவிஞர் முத்துலிங்கத்தின் சிந்தையை வசியம் செய்யும் வரிகள், மெல்லிசை மன்னரின் இசை, கே.ஜே.ஜேசுதாஸ் & வாணி ஜெயராமின் குரல், எம்ஜிஆர் & லதாவின் சிறப்பான நடிப்பு , என்.பாலகிருஷ்ணனின் ஒளிப்பதிவு எல்லாமே நன்கிணைந்து எனைக் கவர்ந்த கானமிது. கவிஞர் முத்துலிங்கத்தின் வரிகளை ஒவ்வொன்றாக இரசித்தவாறே, அவற்றைப் பாடும் பாடகர்களின் குரல்களையும், அபிமான நடிகர்களின் நடிப்பையும் இரசித்துப்பாருங்கள் நிச்சயம் நீங்கள் உங்களையே மறந்து விடுவீர்கள். இப்பாடலின் பொருளை விளங்கி அமைக்கப்பட்டுள்ள இசை, அதையுணர்ந்து அனுபவித்துப் பாடும்  பாடகர்களின் குரலினிமை , விளங்கி நடிக்கும் நடிகர்களின் நடிப்பு எல்லாமே என்னை ஈர்த்தனவென்பேன்.

இப்பாடலின் முக்கிய சிறப்புகளிலொன்று பாடலில் வெளிப்பட்டுள்ள லதாவின் நடனத்திறமை. லதா சிறந்த நர்த்தகி. லதாவின் நடனத்திறமையினை வெளிப்படுத்துவதற்காகவே அமைக்கப்பட்டுள்ள பாடலோ என்னும் வகையில் பாடல் முழுவதும் லதாவின் நடனத்தை வெளிப்படுத்தும் வகையில் பாடற் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. எம்ஜிஆரும் நிதானமாக அதனை இரசித்துக்கொண்டிருப்பதன்  மூலம், லதாவின் நடனத்துக்கு இடையூறேதும் செய்யாமல் பார்த்துக்கொண்டிருக்கின்றார்.

"வண்ண ரதம் போலவே
தென்றல் நடை காட்டவா
புள்ளி மான் போலவே
துள்ளி நான் ஓடவா"

என்னும் வரிகளுக்கு லதா வெளிப்படுத்தும் நடனத்திறமை என்னை  மிகவும் கவர்ந்தது. இப்பாடலில் பின்வரும் வரிகளும் என்னை மிகவும் கவர்ந்தவை:

மேலும் படிக்க ...

சர்வதேச புத்தகக் கண்காட்சியில் இலங்கை எழுத்தாளரின் நூல்கள்!

விவரங்கள்
- எம்.ரிஷான் ஷெரீப் -
நிகழ்வுகள்
23 பிப்ரவரி 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

சர்வதேச புத்தகக் கண்காட்சியில் இலங்கை எழுத்தாளரின் நூல்கள்!

2021 ஆம் ஆண்டிற்கான 44 ஆவது சர்வதேச புத்தகக் கண்காட்சியானது, இந்தியா, சென்னை YMCA நந்தனம் வளாகத்தில் பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி தொடக்கம் மார்ச் மாதம் 09 ஆம் திகதி வரை நடைபெறவிருக்கிறது. உலகம் முழுவதிலுமிருந்தும் பல்லாயிரக்கணக்கான வாசகர்கள் கலந்து கொள்ளும் இந்த நிகழ்வில் இலங்கை எழுத்தாளரான எம்.ரிஷான் ஷெரீபின் மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்புகள் மூன்று, நாவல்கள் இரண்டு என புதிய ஐந்து நூல்கள் வெளியாகவிருக்கின்றன.

மேலும் படிக்க ...

வாசிப்பும், யோசிப்பும் 369: ஷோபாசக்தியின் பொக்ஸ்: 'நிலவே நீ சாட்சி!' - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
22 பிப்ரவரி 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எழுத்தாளர் ஷோபசக்திதற்போதுள்ள தமிழ் எழுத்தாளர்களில் ஷோபா சக்தியின் எழுத்து மிகவும் வலிமையானது. ஷோபாசக்தி சிறந்த கதைசொல்லி என்றாலும், அவரது படைப்புகளில் பாவிக்கப்படும் மொழியே அக்கதை சொல்லலில் பிரதான பங்கினை வகிக்கின்றது. அந்த வலிமையான மொழியே அப்படைப்புகளில் வரும் பாத்திரங்களை முதல் வாசிப்பிலேயே நீண்ட காலத்துக்கு மறக்க முடியாதபடி செய்து விடுகின்றது. தனிப்பட்டரீதியில் நான் இவ்வகை மொழியின் உபாசகனல்லன். எனக்குத் தெளிந்த நீரோடை போன்ற , சிக்கலான விடயங்களையும் சிந்திக்க வைக்கின்ற எழுத்து நடையே விருப்பத்துக்குரியது. டால்ஸ்டாய், ஃபியதோர் தத்யயேவ்ஸ்கி போன்றோரின் படைப்புகளில் பாவிக்கப்பட்டுள்ள மொழி எனக்கு விருப்புக்குரியது. ஷோபா சக்தியின் மொழி எனக்கு யூதரான ஜேர்ஸி கொஸின்ஸ்கியின் 'நிறமூட்டப்பட்ட பறவைகள்', வால்டேயரின் 'கண்டிட்', ஜெயமோகனின் 'ஏழாவது உலகம்' போன்ற நாவல்களில் பாவிக்கப்பட்டுள்ள மொழியினை நினைவு படுத்தும்.

இவர்களது படைப்புகளிலெல்லாம் பாத்திரங்கள் அடையும் அனுபவங்கள் நெஞ்சை உறைய வைக்கும் வகையில் விபரிக்கப்பட்டிருக்கும், பாத்திரங்கள் அடையும் வேதனை , வலி வாசிக்கும் வாசகர்களையும் நீண்ட நாட்கள் ஆட்கொண்டிருக்கும், அந்த வேதனை, வலியை நான் விரும்புவனல்லன். அதனால்தான் இவ்விதமான வலியினைத் தரும் படைப்புகள் சிறந்த படைப்புகளாகவிருந்தபோதும் நான் அவற்றின் உபாசகன் அல்லன். என் அபிமான எழுத்தாளர்களின் படைப்புகளை மீண்டும் மீண்டும் வாசிப்பது போல் என்னால் இவ்வகையான , வலியினைத்தரும் படைப்புகளை வாசிக்க முடிவதில்லை. மீண்டும் வாசித்தால் ஏற்படும் வலி நீங்க மேலும் பல நாட்கள் எடுக்கும் என்னும் அச்சமே அதற்கு முக்கிய காரணம். அண்மையில் ஷோபா சக்தியின் 'BOX கதைப்புத்தகம் வாசித்தபோது இதனை மீண்டுமுணர்ந்தேன். இதில் பாவிக்கப்பட்டுள்ள மொழி வலி தருவது. ஆனால் அந்த மொழியே ஷோபாசக்தி என்னும் கதைசொல்லியின் பலம்.

மேலும் படிக்க ...

ஓவியர் கருணா இயூஜின் வின்சென்ற் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவும் பகிர்வும் - 'தாய்வீடு' திலீப்குமார் -

விவரங்கள்
'தாய்வீடு' திலீப்குமார் -
நிகழ்வுகள்
21 பிப்ரவரி 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஓவியர் கருணா இயூஜின் வின்சென்ற் அவர்களின்  இரண்டாம் ஆண்டு நினைவும் பகிர்வும்  - 'தாய்வீடு' திலீப்குமார் -

மேலும் படிக்க ...

சிறுகதை: ஆப்பு - மு தனஞ்செழியன்

விவரங்கள்
மு தனஞ்செழியன்
சிறுகதை
21 பிப்ரவரி 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

சிறுகதைஅமுதா போட்டிருந்த செருப்பை ரோட்டில் தேய்த்து கொண்டே அவள் ஓட்டி வந்த ஸ்கூட்டியை நிறுத்த முயன்றாள். கைகளில் பிடித்து நிறுத்தும் பிரேக் இருந்தும் அமுதாவிற்கு கால்களால் நிறுத்துவதே பரிச்சியமான ஒன்று.

வண்டியை வீட்டு வாசலில் நிறுத்திவிட்டு வீட்டிற்குள் வேகமாக நடந்தாள் “நானே அவசரத்துல வேகமாக போய்கிட்டு இருக்கேன் ! நீயாவது ஞாபகப்படுத்த மாட்டியா? எத்தனை தடவை உனக்கு சொல்றது.” என்று தன் அம்மாவிடம் பேசிக் கொண்டே அவள் மறந்து வைத்துவிட்டுப் போன மதிய உணவை எடுத்து பையில் வைத்துக் கொண்டால். “சரி, சரி போயிட்டு வரேன்” என்று அவசரத்தில் அவள் அம்மாவின் முகத்தை கூட பார்க்காமல் சுவரைப் பார்த்து கூறிவிட்டு வெளியில் நடந்தாள்.

அமுதா ஒரு பிரபலமான கால் சென்டரில் வேலை செய்கிறாள். அந்த வீட்டில் இவர்கள் இருவர் மட்டுமே இருப்பார்கள். அது ஒரு பழைய காலத்து ஓட்டு வீடு சென்னையில் இதுபோன்ற ஒரு வீட்டை பார்ப்பது மிகவும் அரிது. அமுதா கடைக்குட்டி என்பதால் அவள் அம்மா அவள் எது செய்தாலும் மௌனமாய் மட்டுமே இருப்பாள் அவ்வப்போது மகிழ்ந்தும் கொள்வாள். சுந்தரி ஏதும் பேசாமல் மகளை வழி அனுப்பி வைத்தாள்.

சுந்தரி மீண்டும் வீட்டிற்குள் வந்து அவளுக்கான அடுப்படி பணிகளை மேற்கொண்டாள் இது தினமும் சுந்தரியின் வீட்டில் நடக்கும் படலம் தான்.

வீட்டின் சுவற்றில் மாட்டப்பட்டிருந்த தனது கணவரின் புகைப்படத்தை துடைத்து அதற்கு பூவும், பொட்டும் வைத்து விடுவாள். அந்த புகைப்படத்தை துடைக்கும் போதெல்லாம் ஏதோ சொல்ல வேண்டும் என்று நினைப்பாள் ஆனால் அவைகளை தொண்டைக் குழியில் போட்டு புதைத்து விடுவாள்.

மேலும் படிக்க ...

தொடர் நாவல்: கலிங்கு (2006 - 6) - தேவகாந்தன் -

விவரங்கள்
- தேவகாந்தன் -
தேவகாந்தன் பக்கம்
20 பிப்ரவரி 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மழையிருள் இறுக்கிய வானத்தில் அவ்வப்போது எங்கோ வெட்டிய மின்னலின் ஒளிக்கீறுகள்  ஓடி மறைந்து கொண்டிருந்ததைக் கண்டபடி, தோளில் துவாயைக் போர்த்தி குளிரை மறைத்துக்கொண்டு ஜன்னலோரத்தில் வெளிபார்த்து நின்றிருந்தாள் குசுமவதி. தேசத்தின் நிலைபோல, காலநிலையும் நன்னிமித்தம் ஏதுமற்று இருண்டு விறைத்த குளிருக்குள் கிடப்பதாய்ப்பட்டது அவளுக்கு. நான்கு நாட்களாக மழை பெய்துகொண்டிருந்தது. கூதல் காற்று தகரக் கூரையைப் பிய்த்தெறியும் மூர்த்தண்யத்துடன் ஓங்காரமாய் அலைந்தடித்தது.

அங்கிருந்து பார்த்தால் வவுனியா-கொழும்பு பிரதான வீதிக்கப்பால் புத்த வளாகத்தின் முன்பகுதியில் நிமிர்ந்து பிரமாண்டமாய் நின்ற புத்தர் சிலை தெரியும். பின்னால் சுற்று மதிலினுள்ளே  மூன்று புற விறாந்தையுள்ள சின்ன விகாரம். அதன் முற்றத்தில் செழிப்பாய் நெடிதுயர்ந்து  வளர்ந்துகொண்டிருந்த அரசமரம் நின்றிருந்தது. பின்னாலுள்ள மரக்கூடலுள் இருந்தது பன்சால எனப்படுகிற புத்த துறவிகளின் வாசஸ்தலம்.

மேலும் படிக்க ...

பதிவுகள் தளத்தில் சில மாற்றங்கள்

விவரங்கள்
- பதிவுகள் தள நிர்வாகி -
பதிவுகள்.காம் மின்னூற் தொகுப்புகள் , பதிவுகள் & பட
19 பிப்ரவரி 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

பதிவுகள் தளம் பார்வைக்குப் பழைய தளத்தைப்போலவே இருந்தாலும், உண்மையில் உட்கட்டமைப்பில் மிகப்பெரிய அளவில் மாற்றங்களைக்கொண்ட புதிய கட்டமைப்புடன் கூடிய தளமாக மாற்றப்பட்டுள்ளது. ஆக்கங்களை மிக இலகுவாகக் காணும்  வகையிலும், அலைபேசியில் வாசிக்கும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் மேலும் பல வாசிப்பினை இலகுவாக்கும் பயன்மிக்க மாற்றங்களைக் கொண்டு வருவோம்.

பதிவுகள் இதழுக்குப் படைப்புகள் அனுப்ப..

பதிவுகள் இதழுக்குப் படைப்புகள் அனுப்ப விரும்புவோர் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். , இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். அல்லது இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். என்னும் மின்னஞ்சல் முகவரிகளிலொன்றுக்கு அனுப்பி வையுங்கள். ஏற்கனவே வெளியான படைப்புகளை எழுதியவர்கள் பதிவுகளுக்கு அனுப்பினால் அவை பதிவுகளுக்கு அனுப்பிய படைப்புகளாக மட்டுமே கருதப்படும். முன்னர் அவற்றை வெளியிட்ட ஊடகங்களின்  பெயர்களைக் குறிப்பிட மாட்டோம். மேலும் ஏனையவர்கள் உங்களுக்கு அனுப்பிய படைப்புகளைப் பதிவுகளுக்கு அனுப்பினால் அவை ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. மேலும் ஏனையவர்கள் எழுதிய படைப்புகளையும் அனுப்பாதீர்கள். எழுதியவர்களே அவற்றைப் பதிவுகளுக்கு அனுப்ப வேண்டும்.

மேலும் படிக்க ...

கவிதை: எமக்கும் கீழே தட்டையர் கோடி! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
19 பிப்ரவரி 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

தட்டையர்கள் உலகுக்கு விஜயம் செய்வதென்றால்
எனக்கு மிகவும் பிடித்த
பொழுதுபோக்கு.
பரிமாண வித்தியாசங்கள் எங்களுக்கிடையில்
ஏற்படுத்திய வித்தியாசங்கள்
எங்களுக்கு மிகவும் சாதகமாகவிருக்கின்றன.
அதனால் தட்டையர்கள் உலகு எப்பொழுதும்
எனக்கு உவப்பானதாகவே இருக்கின்றது.
தட்டையர்கள் உலகில் நான் எப்போதுமே உவகையுறுவதற்கு
முக்கிய காரணங்களிலொன்று
என்னவென்று நினைக்கின்றீர்கள்?
மானுடப் படைப்பிலுள்ள பலவீனங்களிலொன்றுதான்.
ஏனெனில் அங்கு நான் அவர்களைவிட
எல்லாவகையிலும் உயர்ந்தவன்.
என்னை மீறி அங்கு எவையுமேயில்லை.

மேலும் படிக்க ...

பத்திரிக்கைச் செய்தி: திருப்பூரில் புத்தகக் கண்காட்சி - சுப்ரபாரதிமணியன் -

விவரங்கள்
Administrator
சுப்ரபாரதிமணியன் பக்கம்
19 பிப்ரவரி 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

திருப்பூரில் புத்தகக் கண்காட்சி ஜனவரி 27 முதல் நடைபெற்று வருகிறது. நியூ சென்சுரி புக் ஹவுஸ், இந்திய அரசின் நேசனல் புக் டிரஸ்ட்  ., காலச்சுவடு, கண்ணதாசன் பதிப்பகம்., நக்கீரன்,  விஜயா பதிப்பகம் உட்பட 25 பதிப்பகங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த வாரம் விற்பனைக்கு  வந்துள்ள  புதிய  நூல் : பால் பேத வன்முறையும்,  பங்களாதேஷ் அனுபவங்களும் . ரூ65   - நியூ சென்சுரி புக் ஹவுஸ்,   ஆசிரியர் : திருப்பூர் சுப்ரபாரதிமணியன்


நூலின் முன்னுரை -  ஆ. அலோசியஸ், ” சேவ் “, திருப்பூர் -

நண்பர் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் வங்கதேசத்திற்கு 2020 ஜனவரி மாதம் சென்று கலந்துகொண்ட பாலின வேறுபாடு சார்ந்த வன்முறைகள் ( Gender Based violence )பற்றிய கருத்தரங்கு நிகழ்ச்சி அவரை பாதித்ததை ஒட்டி படைப்பிலக்கியத்தில் அவற்றை வெளிக்கொணரும்  முயற்சியில் அவற்றை கவிதைகள், சிறுகதைகள் கட்டுரைகள் என்ற வகையில் வடிவமைத்து இந்த நூலை உருவாக்கியிருக்கிறார், அவருக்கு என்னுடைய பாராட்டை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் படிக்க ...

ஆய்வு: நீலகிரி படகர்களும் வெள்ளியும் ஒரு குறியீட்டியல் நோக்கு “பெள்ளிய கம்புக ஒரெயலி” - முனைவர் கோ.சுனில்ஜோகி -

விவரங்கள்
- முனைவர் கோ.சுனில்ஜோகி, உதவிப்பேராசிரியர், குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி, கோயமுத்தூர். -
ஆய்வு
15 பிப்ரவரி 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மனிதகுலத்தின் பண்பாட்டு வளர்ச்சியின் இன்றியமையான படிநிலையாக உலோகங்களின் கண்டுபிடிப்பு விளங்குகின்றது. மானுடப் படிமலர்ச்சியில் இது ‘உலோகக்காலம்’ என்றே வரையறுக்கப்படுகின்றது. தங்கமும் அதற்கு அடுத்த நிலையில் வெள்ளியும் மதிப்புமிகுந்த உலோகங்களாகப் பண்டுதொட்டு வழங்கப்பட்டு வருகின்றன. உலோகங்களின் பயன்பாடும் பண்பாடும் குறியீட்டு நிலையிலிருந்தே பரிணமித்தவை எனலாம். இன்று அழகியலுக்கான நோக்கோடு ஆபரணங்களாக பயன்பாட்டிலுள்ள இந்த அணிகளின் குறியீட்டு தன்மை அதன் மாரபினை, பண்பாட்டினைத் தக்கவைத்துள்ளன. ஆனால் இன்றும் குறியீட்டு நிலையிலேயே தொடரும் நீலகிரிவாழ் படகர் இனமக்களின் வெள்ளி ஆபரணங்களைக் குறியீட்டு நிலையில் இந்தக் கட்டுரை ஆய்கிறது.

மேலும் படிக்க ...

கருத்துக்கள் சங்கமித்த மல்லிகை ஜீவா நினைவேந்தல்! முரண்அறுத்து முன்னோக்கிச்செல்லும் இயக்கம்!

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
15 பிப்ரவரி 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அண்மையில் மறைந்த ஈழத்தின் மூத்த எழுத்தாளரும், மல்லிகை ஆசிரியரும், மூவினத்தையும் சேர்ந்த கலை, இலக்கியவாதிகளாலும் , கலை இலக்கியப் பேராசிரியர்களாலும் ஆழ்ந்து நேசிக்கபட்ட, அடிநிலை மக்களின் எழுச்சிக்குரலாக திகழ்ந்த டொமினிக்ஜீவா அவர்களின் நினைவுகளை பகிர்ந்துகொள்ளும் அஞ்சலி நிகழ்வுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மேலும் படிக்க ...

பதிப்பாய்வுகள் - பேசுபவர்: பேராசிரியர் முனைவர் இ. சுந்தரமூர்த்தி அவர்கள்

விவரங்கள்
- தகவல்: 'ரொறன்ரோ' தமிழ்ச் சங்கம் -
நிகழ்வுகள்
14 பிப்ரவரி 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் இணையவழி நினைவரங்கு

விவரங்கள்
- முருகபூபதி -
நிகழ்வுகள்
14 பிப்ரவரி 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மேலும் படிக்க ...

(நூல் அறிமுகம்) தொன்மத்தின் மீதான காமம் : தேவகாந்தனின் “மேகலை கதா” வை முன்வைத்து சில குறிப்புகள்! - இராகவன் -

விவரங்கள்
- இராகவன் -
நூல் அறிமுகம்
14 பிப்ரவரி 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

தொன்மத்தின் மீது தேவகாந்தனுக்கு இருப்பது தீராக் காதலல்ல தீராக்காமம். தொன்மத்தை மையப்படுத்திய தேவகாந்தனின் புனைகதைகளில் இரு விடயங்கள் அடிப்படையாக இருப்பதனை எடுத்துக் காட்டலாம். முதலில் ஏற்கனவே உள்ள நமக்கும் தெரிந்திருக்கும் தொன்மத்தை முன்வைத்தல். அடுத்தது அந்தத் தொன்மத்துக்கு சமாந்தரமாக இன்னொரு தொன்மத்தை உருவாக்கி இடைபுகுத்துதல். இதைத்தான் “பிறந்தவர் உறுவது பெருகிய துன்பம்” என்ற கருத்தியல் வழியாகச் சமூகத்தில் ‘ஊடு நிகழ்த்துகை’அவரால் மேற்கொள்ளப்படுகிறது. அந்த ஊடு நிகழ்த்துகையோடு இணைந்த மீள் வாசிப்பின் கலைப புனைவாக நாவல் நீண்டு செல்கிறது. ‘கதை சொல்லல்’ ‘கதை இணக்குதல்’ ஆகிய இருவகை நுட்பங்களிலும் நுண்ணாற்றல் மற்றும் நுண் அனுபவம் கொண்ட தேவகாந்தனின் கதை விசையூட்டற் செயற்பாடு வாசிப்பை நேர்பட நடத்திச் செல்கின்றது… “ என பேராசிரியர் சபா .ஜெயராசா குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க ...

மற்ற கட்டுரைகள் ...

  1. ஆய்வு: புறநானூற்றில் வானவியல் செய்திகள்
  2. சிறுகதை: அம்மாவின் எண்பதாவது பிறந்ததின உரை - கே.எஸ்.சுதாகர் -
  3. கவிதை: நூலகம் நோக்கி!
  4. திரு டொமினிக் ஜீவா அவர்களுடனான எனது இலக்கியத் தொடர்பு!
  5. யாழ் இந்துக்கல்லூரி முன்னாள் மாணவர்களின் ஓராயம் அமைப்பு - - மட்டக்களப்பு மேற்குக் கல்வி வலயச் செயற்பாடுகளுக்கான திட்டம்!
  6. ஒரு பொழுதும் இப்பொழுதும்
  7. ஈழத்து நாடக மரபும் அதன் தொடர்ச்சியும்
  8. முருகபூபதியின் 25 ஆவது நூல் 'நடந்தாய் வாழி களனி கங்கை'
  9. கவிதை: பழைய புத்தகக்கடை அனுபவமொன்று! - வ.ந.கிரிதரன் -
  10. ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets)- மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர் | தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
  11. சிறுகதை : தோழர் - கடல்புத்திரன் -
  12. ஆய்வு: மழையும் தமிழர் சிந்தனை மாற்றப் போக்குகளும் - முனைவர் ம இராமச்சந்திரன் -
  13. மல்லிகை ஜீவாவுக்கு இலங்கை அரசு நினைவு முத்திரை வெளியிடவேண்டும்! யாழ்ப்பாணத்தில் நினைவு மண்டபமும் அமைக்கப்படல் வேண்டும்! நேற்றைய நினைவேந்தல் நிகழ்ச்சியில் பலரும் பங்கேற்பு! - முருகபூபதி -
  14. டொமினிக் ஜீவா!: இலக்கிய ஆலமரம்! தோப்பாகிய தனிமரம்! - வ.ந.கிரிதரன் -
பக்கம் 103 / 104
  • முதல்
  • முந்தைய
  • 95
  • 96
  • 97
  • 98
  • 99
  • 100
  • 101
  • 102
  • 103
  • 104
  • அடுத்த
  • கடைசி