பதிவுகள் முகப்பு

காலத்தால் அழியாத கானம்: 'எங்கிருந்த போதும் உனை மறக்க முடியுமா?' - ஊர்க்குருவி -

விவரங்கள்
- ஊர்க்குருவி -
கலை
01 ஆகஸ்ட் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

பி.சுசீலாவின் சிறந்த திரைப்படப் பாடலிது. திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவனின் இசையில் ஒலிக்கும் சிறந்த பாடல்களில் இதுவுமொன்று. இப்பாடல் வரிகளைக் கேட்டதும் எல்லோரும் கவிஞர் கண்ணதாசனின் வரிகளாக நினைத்துக்கொள்வர். ஆனால் உண்மையில் இப்பாடலை எழுதியவர் கவிஞர் அ.மருதகாசி. 'நீங்காத நினைவு' திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள இப்பாடல் எம் பதின்ம வயதுகளில் எம்மையெல்லாம் ஆட்டி வைத்த பாடல்களிலொன்று. இலங்கை , இந்திய வானொலிகளில் நேயர் நெஞ்சங்களைக் கவர்ந்த பாடல்களிலொன்றாக அடிக்கடி ஒலித்த பாடல்களிலொன்று. இன்றும் அவ்விதமே ஒலிக்குமென்று நினைக்கின்றேன்.

மேலும் படிக்க ...

பாதிக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலிக்கும் படைப்பாளி கே ஆர் டேவிட் சிறுகதைகள் – வாசிப்பு அனுபவம்! - தாமரைச்செல்வி -

விவரங்கள்
- தாமரைச்செல்வி -
நூல் அறிமுகம்
31 ஜூலை 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

( அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தினால் நடத்தப்பட்ட போட்டியில் ஐம்பதினாயிரம் ரூபா பரிசுபெற்ற கே. ஆர். டேவிட் சிறுகதைகள் தொடர்பாக இச்சங்கம் நடத்திய வாசிப்பு அனுபவப்பகிர்வு நிகழ்ச்சியில் சமர்ப்பிக்கப்பட்ட உரை )


இலக்கிய உலகில் தன் எழுத்துக்களால் தனக்கென ஒரு இடத்தைத் தக்க வைத்திருப்பவர் கே ஆர் டேவிட். . சிறுகதை, குறுநாவல், நாவல் எனும் தளங்களில் அறுபது வருடங்களுக்கு மேலாக பயணித்து வருபவர். தன்னுடைய எழுத்துக்களுக்காக பல விருதுகளையும் கௌரவங்களையும் பெற்றிருப்பவர். இலங்கையில் வசிக்கும் எழுத்தாளர்களுக்காக அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் நடத்திய போட்டியில் சிறுகதைகளுக்கான விருதை கே ஆர் டேவிட் சிறுகதைகள் எனும் தொகுதி பெற்றிருக்கின்றது. இப்படி ஒரு போட்டியை நடத்திய அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தினருக்கு பாராட்டுகளையும் சொல்லிக் கொள்கின்றேன். பரிசு பெற்ற இந்நூலின் ஆசிரியருக்கும் என் வாழ்த்துக்கள்.

இத்தொகுப்புக்கு முன்னுரை எழுதிய இராஜேஸ் கண்ணன், தோழமையுரை வழங்கிய ராதேயன் மற்றும் கருத்துரைகளை வழங்கிய இலக்கிய உலகின் முக்கிய ஆளுமைகள் ஆறுபேர் என எட்டுப் பேர் கே.ஆர். டேவிட் பற்றியும் அவரது கதைகள் பற்றியும் இதில் பதிவு செய்திருக்கிறார்கள். ஒரு படைப்பாளி இச்சமூகத்தை எப்படிப் பார்க்கிறான்… எப்படி அந்த மக்களின் வாழ்வியலை உள்வாங்குகின்றான்… அதை எந்த விதத்தில் எழுத்தாக மக்களிடம் கொண்டு சேர்க்கிறான்… என்பது பற்றி பல பார்வைகள் விமர்சனங்கள் எழுவதுண்டு. அதற்காக ஒரு படைப்பாளி எந்த விதமாக செயல்படுகிறான் என்பதும் கவனிக்கத்தக்க ஒன்றாகவே இருந்து வருகிறது. அந்த விதத்தால் தனது எழுத்தால் கவனம் பெற்ற ஒருவராகவே எம்மால் கே. ஆர், டேவிட் அவர்களைப் பார்க்க முடிகிறது. இவரது சிறுகதைகள் நமக்கு பல்வேறு அனுபவங்களைத் தருகின்றன. அந்த அனுபவங்கள் எமக்குள் அதிர்வுகளையும் ஏற்படுத்துகின்றன என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. கால நகர்வு இவரது எழுத்துக்களுக்கு வலு சேர்த்துக் கோண்டே வந்திருக்கிறது என்பதையும் சுட்டிக் காட்ட வேண்டியிருக்கிறது. சக மனிதர்களை நோக்கும் இவரது பார்வை கூர்மை மிக்கது. தன்னைச் சுற்றியுள்ளவர்களின் வாழ்வை பதிவு செய்வதே எழுத்தாளராகிய தனது கடமை என்ற நோக்கில் தனது பயணத்தை மேற்கொண்டு வந்திருப்பவராகவே இவரைப் பார்க்க முடிகிறது.

மேலும் படிக்க ...

காலச்சுவடு கண்ணனுக்குச் செவாலியர் விருது! - வ.ந.கி -

விவரங்கள்
- வ.ந.கி -
இலக்கியம்
28 ஜூலை 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

'காலச்சுவடு' கண்ணனுக்குச் செவாலியர் விருது கிடைத்துள்ளதாக முகநூல் கூறுகின்றது. வாழ்த்துகள். இன்று பெரும்பாலும் விருதுகள் என்பது தொடர்புகளின் அடிப்படையில் வழங்கப்படும் ஒன்றாக மாறிவிட்டது. அவ்வப்போது விருதுகள் சர்ச்சைகளை உருவாக்கி விடுவதுமுண்டு. காலச்சுவடு கண்ணனுக்குச் செவாலியர் விருது என்றதும் எனக்கு இவ்விருதினைப்பெற்ற நடிகர் திலகம் நினைவுக்கு வந்தார். நடிகர் கமலகாசன் நினைவுக்கு வந்தார். அவர்கள் தமிழ்த்திரையுலகின் சாதனையாளர்கள்.

அவர்களுடன் 'காலச்சுவடு' கண்ணனை ஒப்பிட்டுப் பார்த்தேன். இவர் சிறந்த பதிப்பாளர்களில் ஒருவர். எழுத்துத்துறையில் மிகவும் சாதித்தவரென்று கூற முடியாது. ஆனால் தமிழ்ப் பதிப்புத்துறையில் சிறப்பாக வர்த்தக நோக்கில் இயங்கி வரும் ஒருவராக இவரை அடையாளம் காண்கின்றேன். சிறந்த உலக இலக்கியப் படைப்புகளைத் தமிழுக்குக் கொண்டு வந்திருக்கின்றார். தமிழின் சிறந்த படைப்புகளை ஆங்கில மொழிக்குக் கொண்டு சென்றிருக்கின்றார். அதற்காக இவருக்கு இவ்விருது கிடைத்திருக்க வேண்டுமென்று நினைக்கின்றேன்.

இச்சமயத்தில் எழுத்தாளர் சுந்தர ராமசாமியை நினைவு கூர்கின்றேன். தமிழின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் அவர். சிறுகதை, நாவல், கவிதை, மொழிபெயர்ப்பு, பதிப்புத்துறை என்று அவரது இலக்கியப் பங்களிப்பு பரந்து பட்டது. தற்போது வெற்றிகரமாக இயங்கும் 'காலச்சுவடு' பதிப்பகம் அவர் உருவாக்கியதுதான். 'காலச்சுவடு'; சஞ்சிகையும் அவர் உருவாக்கியதுதான். தன் வாழ்நாள் முழுவதையும் தமிழ் இலக்கியத்துக்காக அர்ப்பணித்து வாழ்ந்தவர் அவர். அவரை இந்திய மத்திய அரசு கண்டுகொள்ளவேயில்லை. அவரது படைப்புகளுக்குச் சாகித்தியப் பரிசு எதனையும் கொடுக்கத்தவறிவிட்டது இந்திய மத்திய அரசு. அவருக்கு அவரது வாழ்நாள் இலக்கியப் பங்களிப்புக்காக செவாலியர் விருது போன்ற விருதுகள் கிடைக்கவில்லை. எழுத்தாளர் அ.முத்துலிங்கம் உருவாக்கிய தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 'இயல் விருது' மட்டுமே கிடைத்திருந்தது. மேலுமிரு தமிழக அமைப்புகளின் விருதுகள் கிடைத்திருக்கின்றன.

மேலும் படிக்க ...

இனவாதத்தைக் கையிலெடுக்கும் வீரவன்ச! - நந்திவர்மன் -

விவரங்கள்
- நந்திவர்மன் -
அரசியல்
28 ஜூலை 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஐபிசி தமிழில் ஒரு செய்தி வந்திருந்தது. அது இதுதான்: "சிறிலங்காவில் அரச கட்டமைப்பை வீழ்ச்சியடையச் செய்து, வடக்கு கிழக்கை பிரிப்பதே காலி முகத்திடல் போராட்டத்தின் பின்னணி என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவசன்ச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அவசரகால சட்டம் மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய அவர், அரசை வீழ்த்தும் திட்டத்தின் பின்னணியில் அமெரிக்கவே உள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார்."

ஏற்கனவே ராஜபக்சாக்கள் நாட்டின் சில பகுதிகளைப் பிரித்துச் சீனாவிடம் தாரை வார்த்து விட்டார்கள் என்பதை விமல் வீரவன்ச மறந்து விட்டது ஆச்சரியம்தான். அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை ராஜபக்சாக்களும், ரணிலும் 99 வருடக் குத்தகைக்குக் கொடுத்து விட்டதை நாடே அறியும். கொழும்புத் துறைமுகத்தில் உருவாக்கப்பட்ட நிலப்பரப்பு சீனாவுக்குத் தாரை வார்க்கப்பட்டதும் அனைவரும் அறிந்ததொன்று. இவற்றையெல்லாம் மறந்து விட்டு வடகிழக்கைப் போராட்டக்காரர்கள் பிரித்து விடுவார்கள் என்பதன் மூலம் இனவாதத்தை விமல் வீரவன்ச கையிலெடுத்துள்ளார்.

மேலும் படிக்க ...

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கவின் வலை விரிப்பு!

விவரங்கள்
- கிறிஸ்டி நல்லரத்தினம் -
அரசியல்
27 ஜூலை 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மேலும் படிக்க ...

திரையில் எழுத்தாளர் மிக்கெயில் ஷொலோகோவின் 'டொன் நதி அமைதியாக ஓடிக்கொண்டிருக்கின்றது.' - வ.ந.கி -

விவரங்கள்
- வ.ந.கி -
கலை
26 ஜூலை 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்
 
ருஷ்ய எழுத்தாளர் மிக்கெயில் ஷொலோகோவ் அவரது முக்கிய நாவலான 'டொன் நதி அமைதியாக ஓடிக்கொண்டிருக்கின்றது' (And Quiet Flows The Don) என்னும் நாவலுக்காக 1965ஆம் ஆண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசினைப் பெற்றவர். இந்நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பு அ.லெ.நடராஜன் அவர்களால் செய்யப்பட்டு, நியு செஞ்சுரி புக்ஸ் ஹவுஸ் பதிப்பக வெளியீடாக 'டான் நதி அமைதியாக ஓடிக்கொண்டிருக்கின்றது' என்னும் தலைப்பில் வெளிவந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது, ஆனால் இத்தமிழ் மொழிபெயர்ப்பு முழுமையானது அல்ல. நான்கு பாகங்களில் அமைந்துள்ள நாவலின் முதற் பகுதி  மட்டுமே. தமிழ் மொழிபெயர்ப்பு நூலில் மூல நூல் பற்றிய விரிவான தகவல்கள் இல்லை. மொழிபெயர்ப்பு ஆங்கிலத்திலிருந்தா அல்லது ருஷ்ய மொழியிலிருந்தா மொழிபெயர்க்கப்பட்டது போன்ற விபரங்கள் இல்லை. இதனால் இதனை வாசிப்பவர் இதனை மூல நாவலின் முழுமையான மொழிபெயர்ப்பாகக் கருதும் நிலை ஏற்படும்.
 
நான்கு பாகங்களில் அமைந்துள்ள இந்நாவல் டொன் நதிப்படுக்கையில் வசிக்கும் கொசாக்கியரின் வாழ்வு எவ்விதம் முதலாம் உலக யுத்த காலகட்டம், ருஷ்யப் புரட்சிக்காலகட்டம் மற்றும் ருஷ்ய சமூக யுத்தக் காலகட்டம் ஆகிய காலகட்டங்களில் பாதிப்புக்குள்ளாகின்றது என்பதை மையமாகக்கொண்டு பின்னப்பட்ட விரிந்த நாவல்.
மேலும் படிக்க ...

சிறுகதை: இரசவாதம்! தெலுங்கில் : பி.அஜய்பிரசாத் | தமிழில் : பொருநை க.மாரியப்பன்

விவரங்கள்
தெலுங்கில் : பி.அஜய்பிரசாத் | தமிழில் : பொருநை க.மாரியப்பன்
சிறுகதை
25 ஜூலை 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

                            - தெலுங்கு மூல ஆசிரியர் : பி.அஜய் ப்ரசாத் -

தெலுங்கு மூல ஆசிரியர் : பி.அஜய் ப்ரசாத் -  பி.அஜய் ப்ரசாத் (முழுப் பெயர் - பாதர்ல பிரசன்ன அஜய் ப்ரசாத்) ஆந்திரமாநிலம், குண்டூர் மாவட்டம், நகரிகல்லு கிராமத்தில் ஜூன் 9, 1972இல் பிறந்தவர். 2005ஆம் ஆண்டு முதல் தெலுங்கில் சிறுகதைகளை எழுதி வருகிறார். இவரின் கதைத் தொகுதி 2018ஆம் ஆண்டு “லோயா மரிகொன்னு கதலு” என்ற பெயரில் வெளிவந்திருக்கிறது. இவரின் இரண்டாவது கதைத் தொகுதி “காலி பொரலு” ஆகும். இவரின் கதைகள் ஆங்கிலம், இந்தி, பெங்காளி மற்றும் தமிழ் மொழிகளில் வெளிவந்துள்ளன.

மொழிபெயர்ப்பாளர்: க.மாரியப்பன் - பொருநை க.மாரியப்பன், திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சியில் ஏப்ரல் 4, 1976இல் பிறந்தவர். ஆந்திரமாநிலம், திராவிடப் பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழி மற்றும் மொழிபெயர்ப்பியல் துறையில் உதவிப்பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். இலக்கியத் திறனாய்வாளர், மொழிபெயர்ப்பாளர், ஒப்பியலாளர். சமீபத்தில் ஏப்ரல் 23, 2022இல் இவரின் தெலுங்குச் சிறுகதைத் தொகுப்பு மொழிபெயர்ப்பு நூல் ‘மஹாவித்துவான்’ வெளிவந்தது.


அன்று மதியம் பழைய புத்தகக் கொட்டகையில் இருந்தேன். மே மாதம் என்பதால் உள்ளே ஒரே வெக்கை. காற்றில்லாத புழுக்கத்தில் மர அலமாரிகளின் நடுவில், பழைய புத்தகங்களின் வாசனையில் என்னோடு சேர்ந்து, உள்ளே வேறு இரு வாடிக்கையாளர்கள் தேடிக் கொண்டிருந்தார்கள்.

சாலையோரம் இருக்கும் இந்தப் புத்தகக் கொட்டகையின் பின்னால் கிருஷ்ணா வாய்க்கால். கொட்டகை முன்பும் சாலை மீதும் பெரிய ஆரவாரம் இருக்காது. இந்தக் கொட்டகைகள் எல்லாம் பதினைந்து வருடங்களாக, அதாவது என் கல்லூரி நாட்களில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன். பத்துவருடங்கள் கழித்துக் கல்லூரிப் படிப்பை முடித்த பின்பு எங்கள் ஊர் அத்தங்கியை விட்டுவிட்டு இந்த விஜயவாடாவிற்கு வந்து சேர்ந்தேன். பல ஆண்டுகளாக இந்தக் கொட்டகை அப்படியே இருக்கிறது. முதல்முறை பார்த்தபொழுது அவருக்கு நீண்ட தாடி இருந்தது. அவர் புத்தகங்களைப் படிக்காவிட்டாலும் எந்தெந்தப் புத்தகங்கள் யார் வாங்குகிறார்கள் என்று சொல்லிவிடுவார். வாங்குபவர்களின் அவசரத்திற்குத் தகுந்தவாறு அப்போதைக்கு அப்போதே விலை நிர்ணயத்துவிடுவார். அவரிடம் ஆரம்பத்தில் ஒன்றே கால் காசு விலையுள்ள ஒரு பழைய புத்தகத்தை இருநூற்றைம்பது ரூபாய் கொடுத்து வாங்கினேன். புத்தகங்கள் விற்பதில் அவர் பேராசைப்படுபவர் என்று நானும், புத்தகம் வாங்குவதில் நான் பரமகஞ்சன் என்று அவரும் வாதிடுவோம். எங்கள் இருவரின் அறிமுகம் அவ்வளவுதான். அதற்குமிஞ்சி வளரவில்லை.

அவர் பலரிடம் வாதிடுவதைப் பல சமயம் பார்த்திருக்கிறேன். விலை சொல்வதில் எள்ளளவும் தயவு தாட்சண்யம் பார்ப்பதில்லை. ஆத்திரத்தில் பொங்கியெழுந்து என்ன பேசுவாரோ தெரியாது. பேசும்பொழுது எழுந்து கத்திக்கொண்டு கடைக்குள்ளேயே அடியெடுத்துவைத்து அங்கும் இங்கும் நடப்பார். அவரின் குரல் கனத்த குரல். பேசும்பொழுது இரண்டு வீதிகளுக்கு அப்பாலும் அவரின் குரல் கேட்கும். அப்படிப் பேசும் பொழுது ஒரு சிலசமயம் யாரும் தடுக்காமல் இருந்தால் பேச்சு தானாகவே அரசியலை நோக்கிப் போகும். ஆவேசம் மேலும் அதிகமாகும். சாதாரணமாக எப்பொழுது பார்த்தாலும் கொட்டகை முன்பு பாயை விரித்துப் பழைய புத்தகங்களுக்கு அட்டைப் போட்டுக்கொண்டும், கிழிந்துப்போன காகிதங்களை ஒட்டிக்கொண்டும் இருப்பார்.

மேலும் படிக்க ...

நினைவு கூர்வோம்: கறுப்பு ஜூலை 83! - வ.ந.கி -

விவரங்கள்
- வ.ந.கி -
அரசியல்
24 ஜூலை 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எம் தலைமுறையைப் பொறுத்தவரை 1983 முக்கியமானதோர் ஆண்டு. குறிப்பாக ஜூலையில் நடைபெற்ற தமிழர்களுக்கெதிரான கொடிய இனக் கலவரம் இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஒரு அழிக்க முடியாத களங்கம். இக்கலவரம் தமிழர்களை உலகின் நானா பக்கங்களுக்கும் அகதிகளாக ஓட வைத்தது. இக்கலவரம் தமிழர்களின் ஆயுதரீதியிலான விடுதலைப் போராட்டத்தைத் தீவிரப்படுத்தியது. இக்கலவரம் ஆயிரக்கணக்கான தமிழர்களின் உயிர்களைக் குடித்தது. இக்கலவரம் தமிழர்களின் உடமைகளைச் சூறையாடியது. பல்வகை வன்முறைகளையும் தமிழர்கள் மேல் ஏவிவிட்டது.

இக்கலவரம் ஊதிப்பெருப்பிக்கப்பட்டதுக்கு முக்கிய காரணம் அன்று ஆட்சியிலிருந்த அரசியலில் குள்ளநரி என வர்ணிக்கப்படும் ஜே.ஆரின் அணுகுமுறை. முன்பு பண்டா& செல்வா ஒப்பந்தத்தைக் கிழிப்பதற்காகக் கண்டிக்குப் பாத யாத்திரை சென்றவர் சகல நிறைவேற்று அதிகாரங்களையும் கொண்ட 'த(ர்)ம்மிஷ்ட்ட' ஜனாதிபதியாகியிருந்தார். அவரது அமைச்சர்களான சிறில் மத்தியூ, காமினி திசாநாயக்க போன்றவர்கள் அவரது ஆட்சிக்காலத்தில் தமிழர்கள் மீதான இனவாதச் செயற்பாடுகளை ஊக்குவித்தனர்.

யாழ் நூலகம் எரிக்கப்பட்டது ஜே.ஆரின் ஆட்சியில்தான். பயங்கரவாதத்தடைச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு தமிழர்கள் மேல் பயங்கர வன்முறை ஏவிவிடப்பட்டது ஜே.ஆரின் ஆட்சியில்தான். 77, 81, 83 என்று தமிழர்கள் மீது இனக்கலவரங்கள் ஏவிவிடப்பட்டதும் ஜே.ஆரின் ஆட்சியில்தான். இவ்விதமான இனக்கலவரங்கள் ஏற்பட்டபோதெல்லாம் அவற்றை அடக்குவதற்குப் பதில் 'போரென்றால் போர். சமாதானமென்றால் சமாதானம்' என்று அவற்றை ஊதிப்பெரிதாக்கியவரும் ஜே.ஆர்.தான்.

தமிழர்கள் மேல் மட்டுமல்லாமல் தென்னிலங்கையிலும் தன் அரசியல் எதிரிகள் மீதும் தனது அடக்குமுறைகளை ஏவிவிட்டவர் ஜே.ஆர். சிறிமா அம்மையாரின் குடியுரிமையைப் பறித்தார். ஜே.வி.பி போன்ற இடதுசாரிக்கட்சிகளை 83 இனக்கலவரத்துக்குக் காரணமென்று பொய்க்காரணத்தை முன்வைத்துத் தடை செய்தார். ஜே.ஆரின் அணுகுமுறைதான் இந்தியாவையும் இலங்கை விவகாரத்தில் தலையிட வைத்து, உள்நாட்டுப் பிரச்சினையை உபகண்டப் பிரச்சினையாக, சர்வதேசப் பிரச்சினையாக உருவெடுக்க வைத்தது. இனக்கலவரக் காலத்தில் சிறைச்சாலையினுள் தமிழ் அரசியற் கைதிகளைக் கொன்று குவித்ததும் ஜே.ஆரின் அரசின் காலகட்டத்தில்தான். இன்று இலங்கை எதிர்கொண்டுள்ள நிலைமைக்கெல்லாம் அடிப்படை அன்று ஜே.ஆர் விதைத்த இனவாத விதைதான். அதுதான் வளர்ந்து , கிளைவிட்டு, நாட்டை வங்குறோத்தாக்கியுள்ளது.

மேலும் படிக்க ...

கலை, இலக்கிய விமர்சகர் வெங்கட் சாமிநாதனைக் கவர்ந்த 'கட்டோடு குழலாட ஆட' - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
23 ஜூலை 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

'பெரிய இடத்துப் பெண்' ஆர்.ஆர்.பிக்சர்ஸின் வெற்றிப்படங்களிலொன்று. ஆர்.ஆர்.பிக்சர்ஸ் டி.ஆர்.ராஜகுமாரி தனது சகோதரர் ராமண்ணாவுடன் இணைந்து ஆரம்பித்த திரைப்படத் தயாரிப்பு நிறுவனம். குலேபகாவலி, பாசம் , பறக்கும் பாவை போன்ற திரைப்படங்களைத் தயாரித்த நிறுவனம். இப்படத்தில் எம்ஜிஆருக்கு இரட்டை வேடம். கிராமத்தவனாக வரும் எம்ஜிஆருக்கு மச்சாள்மாருடன் இணைந்து பாடும் சுவையானதொரு பாடல் 'கட்டோடு குழலோடு ஆட' பாடல். எனக்குப் பிடித்த பாடல்களிலொன்று. பாடல் வரிகள், இசை, நடிப்பு, ஒலிப்பதிவு எல்லாமே பிடித்திருக்கும் பாடல்களிலொன்று இப்பாடல். மச்சாள்மார்களாக மணிமாலா, ஜோதிலட்சுமி இருவரும் நடித்திருப்பார்கள். நடிகை ஜோதிலட்சுமியின் நடிப்பில் வெளியான முதற் திரைப்படம் 'பெரிய இடத்துப் பெண்' என்பதும் குறிப்பிடத்தக்கது. ஜோதிலட்சுமி, மணிமாலா இருவரும் இப்பாடற் காட்சியில் மிகவும் சிறப்பாக ஆடி, நடித்திருப்பார்கள். இசை மெல்லிசை மன்னர்கள். பாடல் வரிகள் கவிஞர் கண்ணதாசன். பாடியவர்கள்: டி.எம்.எஸ், பி.சுசீலா & எல்.ஆர்.ஈஸ்வரி. 'மாட்டுக்கார வேலன்', 'சகலகலா வல்லவன்' போன்ற பின்னாளில் வெளியான இரட்டை வேடப் படங்கள் பலவற்றுக்கும் தூண்டுகோலாகவிருந்த படம் 'பெரிய இடத்துப் பெண்'.

இப்பாடல் எனக்குப் பிடித்துப் போனதற்கு இன்னுமொரு காரணமும் உண்டு. ஒரு முறை முகநூலில் இப்பாடலைக் கேட்டு இரசித்துக்கொண்டிருந்தேன். என் முகநூல் நண்பர்களிலொருவரான கலை, இலக்கிய விமர்சகர் வெங்கட் சாமிநாதன் அவர்கள் நான் பதிவு செய்திருந்த இப்பாடலைக் கேட்டு இரசித்த பின்னர் முதன் முறையாக இப்பாடல் பற்றிய தனது கருத்துகளை அறியத்தந்திருந்தார். நான் ஆச்சரியமடைந்தேன். அன்று முதல் எப்பொழுது இப்பாடலைக் கேட்டாலும் எனக்கு அமரர் வெங்கட் சாமிநாதன் நினைவில் தோன்றுவார். அவர் இப்பாடல் பற்றிய கருத்துகள் நினைவுக்கு வரும். வெங்கட் சாமிநாதன் அவர்கள் 'பதிவுகள்' இணைய இதழ் மேல் பற்றும் , மதிப்பும் வைத்திருந்தார். இறுதிவரை 'பதிவுகள்' இணைய இதழுக்குத் தனது படைப்புகளை அனுப்பிக்கொண்டிருந்தார்.

மேலும் படிக்க ...

வெற்றிச் சிகரத்தை நோக்கி (3): உன்னை தெரிந்து கொள்! எண்ணம் மற்றும் எழுத்து! - கி. ஷங்கர் (பெங்களூர்) , Chartered Mechanical Engineer, MBA(Marketing)-

விவரங்கள்
- கி. ஷங்கர் (பெங்களூர்) , Chartered Mechanical Engineer, MBA(Marketing)-
'பதிவுகளில்' அன்று
23 ஜூலை 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 - பதிவுகளி'ன் ஆரம்ப கால இதழ்களில்  வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும்.  - ஆசிரியர் -


ஆளுமை வளர்ச்சிக்கு மனோபாவம் எந்தளவிற்கு உதவும் என்பதையும், நல்ல மனோபாவத்தை பெற என்னென்ன வழிகள் உண்டு என்றும் சில வழிகளை உங்களுக்கு சொன்னேன். இந்த இதழில், மனிதன் வெற்றி பெற முக்கியமான ஒரு ஆற்றல் பற்றி உங்களுக்கு எடுத்துரைக்கப் போகிறேன்.

பொதுவாக யாரிடமாவது ஒருவரை பற்றிக் கேட்டால், அவர் உடனே அவரைப் பற்றி தனக்குத் தெரிந்தது, தெரியாதது என்று பலவற்றை பற்றி கூற ஆரம்பித்து விடுவார். இதை நான் தவறாக கூறவில்லை. அது மனித சுபாவம். சிலர் தெரியாது என்றும் சொல்லுவார்கள். அதனால்தான் நான் பொதுவாக கூறினேன். ஆனால் நான் இனிமேல் சொல்லப்போவதுதான் ரொம்ப முக்கியம். ஒருவரிடம் உங்களை பற்றி சொல்லுங்களேன் என்று கேட்டால் “ ஹி ஹி என்னை பற்றி என்ன சொல்வது?” என்பார். ஒன்று, அவருக்கு தன்னை பற்றி எதுவுமே தெரியாதாக இருக்கலாம் அல்லது கூச்சப்படுபவராக இருக்கலாம். பெரும்பாலான நேரங்களில் உண்மை என்னவென்றால், பொதுவாக மனிதர்கள் தங்களை பற்றி அதிகம் தெரிந்து வைத்திருக்க மாட்டார்கள்.

வேலை நேர்காணல்களில் (job interviews) நடப்பது இதுதான். உங்களை பற்றி கொஞ்சம் சொல்லுங்கள் என்பார்கள். எதை எதையோ படித்து வந்திருப்பார்கள். ஆனால் தன்னைப் பற்றி அழகாக எடுத்து சொல்ல அவர்களுக்குத் தெரியாது. நாம் பேசும் போது பேசும் நடையையும், மொழியையும், பேசும் சொற்களையும், வேகத்தையும், உடல் அசைவுகளையும், முகபாவங்களையும் வைத்து நேர்காணல் காண்பவர் நம்மை அழகாக படம் பிடித்து விடுவார். தன்னை முழுவதும் தெரிந்து வைத்திருப்பவனே ஞானி என்று சொல்வார்கள். அந்த காலத்திலேயே கவிஞர் கண்ணதாசன் எழுதினார், “ உன்னை அறிந்தால், நீ உன்னை அறிந்தால், உலகத்தில் போராடலாம்” என்று. தன்னை முழுமையாக அறிந்து கொள்வது என்பது அவ்வளவு சுலபமான வேலையில்லை. ஆனால் கொஞ்சம் முதிர்ச்சி பெற்றவுடன் தான் யார், தன்னுடைய பலம் என்ன, பலவீனம் என்ன, தன் விருப்பு, வெறுப்புகள் என்ன, தான் எந்த படிப்பை, தொழிலை எடுத்துக் கொண்டால் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும் என்று ஒரளவிற்கு தெரிந்து கொள்ள முற்பட்டால்தான் முன்னேற முடியும். இதுதான் தன்னை தெரிந்து கொள்ளும் ஆற்றல்.

மேலும் படிக்க ...

மன அழுத்த மேலாண்மை – 3 : உடல்-மன தொடர்பும், நோய் எதிர்ப்பு சக்தியும்!   - டாக்டர். B. செல்வராஜ் Ph.D. (முதுநிலை உளவியல் விரிவுரையாளர், அரசு கலைக்கல்லூரி,கோவை) -

விவரங்கள்
- டாக்டர். B. செல்வராஜ் Ph.D. (முதுநிலை உளவியல் விரிவுரையாளர், அரசு கலைக்கல்லூரி,கோவை) -
'பதிவுகளில்' அன்று
22 ஜூலை 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 - பதிவுகளி'ன் ஆரம்ப கால இதழ்களில்  வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும்.  - ஆசிரியர்  


நமது உடலின் செயற்பாடுகள் எல்லாவற்றையும் நரம்பு மண்டலமே கட்டுப்படுத்தி உடலின் சீரான செயற்பாட்டிற்குக் காரணமாக விளங்குகிறது. நரம்பு மண்டலம் பல பிரிவுகளாக பிரிந்து உடலின் செயல்பாடுகளை கவனித்துக் கொள்கிறது. தானியங்கி நரம்பு மண்டலம் என்பது நரம்பு மண்டலத்தின் ஒரு முக்கிய பிரிவாகும். இந்த தானியங்கி நரம்பு மண்டலம் 'சிம்பதடிக்' நரம்பு மண்டலம் மற்றும் 'பாரா – சிம்பதடிக்' நரம்பு மண்டலம் என இரண்டு பிரிவாக பிரிந்து செயல்படுகிறது. நமக்கு ஏற்படும் உடல் பிரச்சனைகள் எல்லாமே உடலியல் கோளாறுகளால் ஏற்பட்டவை என்று கூற முடியாது. நமக்கு ஏற்படும் மனப்பிரச்சனைகளும் நம் உடலில் நோய்களை தோற்றுவிக்கலாம். ஏனெனில் நம் உடலின் செயல்பாடுகளுக்கும் நம் மனதுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. நாம் ஆழ்மனதில் அடக்கி வைத்திருக்கும் நிறைவேறாத ஆசைகளும் எண்ணங்களும், மனத்திற்கு வலியை ஏற்படுத்தும் விஷயங்களும், இன்னபிற மன அழுத்தத்தை உண்டாக்கும் நிகழ்வுகளும் நம் உடல் செயற்பாடுகளின் மீது பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இவ்வாறு உடலுக்கும் மனதுக்கும் உள்ள தொடர்பு அறிய வருவதற்கு முற்பட்ட தொடக்க காலத்தில் சில வித்தியாசமான நோயாளிகளை சந்திக்க வேண்டி வந்தது. உதாரணமாக, ஒரு பெண் தனக்கு பூக்களைக் கண்டாலே உடலில் அரிப்பு ஏற்படுவதாக கூறிக் கொண்டு உளவியல் மருத்துவரை சந்தித்தார். அப்பெண் அதற்கு முன்பு வேறு பல தோல் நோய் நிபுனர்களிடம் சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தார். ஆனால் அவர்களால் அப்பெண்ணின் உடலில் பூக்களைக் கண்டால் அரிப்பு ஏற்படுவதற்கான உடலியல் அடிப்படையை கண்டறிய முடியவில்லை. நோய் குணமாகாத இந்த சமயத்தில் தான் அப்பெண் உளவியல் மருத்துவரை அணுகியிருக்கிறார்.

அப்பெண்ணிடம் பேசி பல விவரங்களைத் தெரிந்து கொண்ட உளவியல் மருத்துவர் அவரை ஒருவாரம் கழித்து மீண்டும் வரச் சொன்னார். இம்முறை உளவியல் மருத்துவர் அப்பெண்ணிடம் பேசிக்கொண்டு இருக்கும் போது எதேச்சயாக ஒரு கொத்து பூக்களை எடுத்துத் தன் மேசையின் ஒரு ஓரத்தில் வைத்து விட்டு பேச்சை தொடர்ந்தார். அதுவரை இயல்பாகப் பேசிக் கொண்டு இருந்த அப்பெண் பூங்கொத்தை ஓரக்கண்ணால் கவனித்துக் கொண்டே பேச ஆரம்பித்தார். சிறிது நேரத்தில் அவருக்கு மெதுவாக உடல் அரிப்பு ஏற்பட்டு சொரிய ஆரம்பித்தார்.

மேலும் படிக்க ...

கிளிம் வாழ்வின் மூன்றாம் தொகுதி: -தமிழ் இலக்கிய உலகை, முன்னிறுத்தி (7) - ஜோதிகுமார் -

விவரங்கள்
- ஜோதிகுமார் -
ஜோதிகுமார்
21 ஜூலை 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

7

தமிழ் இலக்கிய உலகில் இது எமது ஆ.மாதவனையும் சிங்காரத்தையும் நினைவுபடுத்தவே செய்யும்.

ஜெயமோகன் எழுதுவார்: “பொதுப்புத்தியாலும், புறவயமான தர்க்கத்தாலும் (REASON) அடையப்பெறும் உண்மைகளுக்கு இலக்கியத்தில் பெரிய இடம் ஏதுமில்லை…” (பக்கம் 105: மேலது)

மேலும் கூறுவார்: “மனித மனதின் ‘இயல்பை’வெளிப்படுத்துதல் என்றால் நவீனத்துவத்தை பொறுத்தவரை இருளையும் தீமையையும் வெளிப்படுத்துதல் தான்” (பக்கம்:89)

இப்பின்னணியோடு ஆ.மாதவனின் படைப்புலகை அணுகும் அவர், மாதவன் பொறுத்து கூறுவது: “மாதவன் சித்தரிப்பது தீமையை மட்டுமே… இதுதான் அப்பட்டமான வாழ்க்கை என்று அப்படியே காட்டும் பாவனை…” (கரிப்பும் சிரிப்பும்). மாதவனின் மேற்படி எழுத்துக்களின் உச்சநிலைகளை (கிளைமெக்ஸ்) ஜெயமோகன் வாயிலாகவே கேட்பது, எமது தரிசனங்களை இலகுவாக்குவதாக அமையும், (ரன்வேயில் ஓடத் தொடங்கலாம்): “‘மோகபல்லவி’ போல நேரடியான விமர்சனமே இல்லாத காமவேட்கையின் சித்தரிப்புகள்…”

“காமினி மூலம்’,‘சினிமா’ போல் விதவிதமான குற்ற சித்தரிப்புகள்…”

மேலும் கூறுவார்:

“அக்குற்றங்களுடன், நம் வாசக மனம், சுவாரஸ்யமாக (?) இணைந்து கொள்வதை, நாமே காணும் துணுக்குறுதல்தான், இவற்றின் அனுபவம்”. (பக்கம்:52: கரிப்பும் சிரிப்பும்)

இவ்விவரிப்பில் ஏற்படும் ‘அனுபவங்களை’ தனியாக விவரிக்கவும் அவர் தயங்குவதில்லை:

“‘சினிமா’…(என்ற) சிறுகதையில்… சாப்பிடும் போது வந்து ;மியாவ்’ கொட்டும் பூனையை வாலை எட்டிப் பிடித்து வாசற்கதவில் நச்சென்று மோதி எறிகிறான்” (பக்கம்:56: மேலது)

மேலும் படிக்க ...

சுவாமி விபுலானந்தர்: இல்லறத்தைத் துறந்தார் இன்பத்தமிழ் இணைத்தார்! ஜூலை 19 சுவாமி விபுலானந்தரின் நினைவு தினம்! - - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர், மெல்பேண், அவுஸ்திரேலியா -

விவரங்கள்
- மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர், மெல்பேண், அவுஸ்திரேலியா -
இலக்கியம்
21 ஜூலை 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஈழத்தின் கிழக்கில் தோன்றிய முத்து - தமிழைச் சுமந்தபடி தரணியெங்கும் ஒளிவீசி நின்றது.அந்த முத்தின் வாழ்க்கை இரு நிலைகளில் அமைந்தது. படித்துப் பட்டம் பெற்று - பண்டிதராய், கல்லூரி ஆசிரியராய், அதிபராய், தந்தை தாய் வைத்த மயில்வாகனன் என்னும் பெயரோடு சமூகத்தில் பயணித்த காலம்.மயில் வாகனன் என்னும் பெயரைக் கடந்து -

"ஊரும் சதமல்ல உற்றார் சதமல்ல உற்றுப் பெற்ற
பேருஞ் சதமல்ல பெண்டீர் சதமல்ல "

என்னும் மனப்பாங்கினைப் பெற்று - ' என்கடன் பணி செய்து கிடப் பதே ' என்னும் விசாலித்த நோக்குடன் ; இராமகிருஷ்ண மடத்துடன் ஐக்கியமாகி, துறவியாகி - விபுலானந்தர் என்னும் அடையாளத்தைத் தனதாக்கி இவ்வுலகைவிட்டு ஏகும்வரை பயணித்த காலம் எனலாம். முத்தமிழ் வித்தகராய் முழுப் பேராளுமையாய் விளங்கிய எங்கள் விபுலாநந்தத் துறவியை இப்படியும் பார்க்கலாம் என்பதை மனமிரு த்துவது அவசியம் என்று எண்ணத் தோன்றுகிறது.

காரைதீவு மண்ணில் பிறந்தவர் யாவர் மனத்திலும் இன்றும் , என்றும் வாழ்ந்து கொண்டே இருக்கிறார் என்றால் - அதற்கு திருப்பு முனையான காலமாய் அமைந்தது முத்தமிழ் மாமுனிவரின் துறவற த்தின் பின்னான காலம் என்றே சொல்லலாம்.1924 ஆம் வருடம் மயில்வாகனனை மாநிலம் அறிந்திட மலரச்செய்த காலம் எனலாம். மயில்வாகனன் இலண்டன் பல்கலைக்கழகத்தின் அறிவியல் பட்ட தாரியாய் , மேல்நாட்டு உடையுடன் மிடுக்குடன் இருந்த கோலம் மாறி -உடையாலும் , உள்ளத்தாலும். தாமரை இலைமேல் நீர் போன்ற நிலைக்குள் வந்து - துறவியாய் பிறப்பெடுத்த நாள் எனலாம்.

மேலும் படிக்க ...

கவிதை: வைத்தியம்! - தம்பா (நோர்வே) -

விவரங்கள்
- தம்பா (நோர்வே) -
கவிதை
20 ஜூலை 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மூடிய கல்லறையினுள்
மூச்சு முட்டும் மூலவர்கள்.
`கடவுளை காக்க
மதத்தை காக்கவேண்டும்
மதத்தை காக்க
இனத்தை காக்க வேண்டும்
இனத்தை காக்க
நலிந்தவன் நரம்புகள் அறுத்து
வலிந்தவன் வானெழ வேண்டும்´
சிதையின் சிகரம் ஏறி
சீறி சினந்து சூளுரைத்தவன்
வானவில்லை மறைத்து தலைவனானான்.

மேலும் படிக்க ...

கு.சின்னப்பபாரதியின் புனைவெழுத்துகள்- இணைய வழி கலந்துரையாடல்! - தகவல்: அகில் -

விவரங்கள்
- தகவல்: அகில் -
நிகழ்வுகள்
20 ஜூலை 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஆய்வு: நாட்டுப்புறத்தெய்வங்களின் வழிபாடுகளும் திருவிழாக்களும் ஓா் பார்வை! - ச. சுகுமாரன், முனைவா் பட்ட ஆய்வாளா், தமிழ்த்துறை, திருவேங்கடவன் பல்கலைக்கழகம், திருப்பதி, ஆந்திரா மாநிலம் -

விவரங்கள்
- ச. சுகுமாரன், முனைவா் பட்ட ஆய்வாளா், தமிழ்த்துறை, திருவேங்கடவன் பல்கலைக்கழகம், திருப்பதி, ஆந்திரா மாநிலம் -
ஆய்வு
20 ஜூலை 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

முன்னுரை

மனிதனின் சக்திக்கு அப்பாற்பட்ட ஆற்றல் வாய்ந்த சக்தி ஒன்று இருப்பதாக மக்கள் கருதுகின்றனா். அச்சக்தியே தெய்வத்தின் சக்தி என்று இறை நம்பிக்கை உள்ளவா்னால் நம்பப்படுகின்றது. இயல்பாக நடக்கும் செயல்கள் இனிதாக இருந்தால் அது தெய்வத்தின் அருளால் நடைபெறுவதாக மக்கள் கருதுகின்றனா். மனிதனின் துயா் களையப்படும்பொழுது மனிதமனம் இறைவனை நன்றி உணா்வோடு நினைக்கிறது. தன்னுடைய மகிழ்ச்சிக்குக் காரணமாக விளங்கும் இறைவனை மகிழ்விக்க விரும்புவது மனித இயல்பே. தெய்வத்தின் சினத்தைத் தணிக்கவும், நன்மை தரும் தெய்வத்திற்கு நன்றி செலுத்தவும் விழா எடுக்கப்படுகிறது. இதையே ”ஆலயம் தொழுவது சாலவும் நன்று” என்று கூறுகின்றனா். கோயில் வழிபாட்டைவிட கூட்டுவழிபாடே நன்மை பயக்கும் என்று மக்கள் நம்புகின்றனா். எனவே, மக்கள் அனைவரும் ஒன்று கூடி வழிபாடு செய்கின்றனா். இதுவே மனித ஒருமைப்பாட்டிற்கு வழிவகுக்கிறது.

வழிபாடு – விளக்கம்

இறைவழிபாடு என்பது மனிதன் தனது நன்றியைச் செலுத்தும் முறையே ஆகும்.
வழி - இறைபோற்றுவதற்குரியவழி
பாடு - அடைவதற்குரிய செயல்முறைகள்

”இறைவனை போற்றுவதற்குரிய வழியை அடைவதற்கு மனிதன் மேற்கொள்ளும் செயல்முறைளே வழிபாடு ஆகும் என்று தமிழ் அகராதி கூறுகிறது. (சிங்காரவேலன் க்ரியாதமிழ் அகராதி ப.308) வழி – படுதல் என்னும் இரண்டு சொற்கள் ஒன்று சோ்ந்து வழிபாடு உருவாயிற்று என்றும் கூறலாம். வழிபாடு என்னும் வினைவடிவச் சொல்லின் அருமையான தொழிற் பெயா்ச்சொல் வழிபாடு எனப்படும். செல்லும் நெறியை முதற்கண் குறித்துத் தோன்றிய “வழி” எனும் சொல் காரணம் (யாழ், அகராதி) அம்புடை (உபயம்), பின்வழி மரபினா் மரபு (பிங்கலம்) பழமை (வின்சிலோ அகராதி போன்ற பல பொருள்களில் வளா்ச்சி அடைந்துள்ளது.(Tamil lexicon P. 3453) வழி எனும் தனிச்சொல் ஓா் அரிய சொல்லாகும். தமிழ்ச் சொற்கள் ஒரு சிலவற்றிற்கே உரிய சிறந்த பொருள் வளா்ச்சியை இச்சொல்லிலே காணலாம். முன்னா் பலா் சென்ற நெறியாகவே அது ஆகிறது. இறப்பு, எதிர்வு ஆகிய இரண்டும் காலங்களுக்கும் வழி பொருந்தும் என்றும் சொல்லலாம்.

மேலும் படிக்க ...

ஐனநாயகச் சர்வாதிகாரம்! - சக்தி சக்திதாசன், லண்டன் -

விவரங்கள்
- சக்தி சக்திதாசன், லண்டன் -
அரசியல்
20 ஜூலை 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஐனநாயகம் என்பார்கள் இல்லை சர்வாதிகாரம் என்பார்கள். என்ன சக்திதாசன் ஐனநாயகச் சர்வாதிகாரம் என்கிறானே ! இவனுக்குப் புத்தி பேதலித்து விட்டதோ ? என்று நீங்கள் எண்ணத் தலைப்படுவது புரிகிறது. எனக்குத் தெரிந்த வரையில் புத்தி பேதலிக்கவில்லை என்றுதான் எண்ணுகிறேன். என்ன ! தற்போதைய உலக அரசியல் அரங்கில் நடைபெறும் காட்சிகள் அனைத்தையும் ஒருமுறை புரட்டிப் போட்டுச் சிந்திக்க வைக்கிறது. நான் வாழும், என்னை வாழவைத்துக் கொண்டிருக்கும் ஐக்கிய இராச்சியத்தில் கடந்த சில மாதங்களாக இடம்பெற்ற அரசியல் அரங்கக் காட்சிகள் ஒருபுறம், நான் பிறந்த மண்ணான சிறீலங்காவில் அரங்கேறிக் கொண்டிருக்கும் அரசியல் அல்லகல்லோலங்கள் ஒருபுறம் , உலக அளவிலே உக்கிரைன் நாட்டில்ஈடம்பெற்றுக் கொண்டிருக்கும் போரும் அதன் அவலங்களும் ஒருபுறம் என அனைத்து உலகிலும் அவசரம் அவசரமாக அரசியல் அரங்கங்களில் நாடகங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இலங்கையிலே தற்போது நடந்தேறியிருக்கும் விடயங்கள் மக்களின் வாழ்வின் அடிப்படை ஆதரங்களையே பாதித்திருக்கின்றன. வசதியுள்ளோரும், வசதியற்றோரும் ஏதேவொரு வகையில் பாதிப்படைந்திருக்கிறார்கள். அம்மக்களில் ஒருவனாக வாழாமல் அம்மக்களைப் பாதிக்கும் விடயங்களைப் பற்றிய கருத்தைப் புலம்பெயர் தேசத்தில் இருந்து தெரிவிப்பது அம்மக்களுக்கு எந்தவிதத்திலும் நியாயமாக இருக்காது என்பது என் கருத்தாகையால் அதைப்பற்றிய அலசலைத் தவிர்த்துக் கொள்கிறேன். சரி இனி ஐக்கிய இராச்சியத்தின் அரசியல் சதுரங்கப் பலகையைப் பார்ப்போம். எனது வாழ்வினை நேரடியாகப் பாதிக்கும் எனும் வகையில் இதைப் பற்றிய அலசலுக்குள் கொஞ்சம் புகுந்து கொள்கிறேன்.

எமது பிரதமர் பொரிஸ் ஜான்சன் பதவிக்கு வரும்போதே அவர் சராசரியான ஒரு அரசியல்வாதியைப் போல நடந்து கொள்ள மாட்டார் எனும் கருத்து அனைவரும் அறிந்த ஒன்றே. அவரது அசாதாரணமான பண்புகள், பழக்க வழக்கங்களை அவர் லண்டன் நகர மேயராக 8 வருட காலம் பதவி வகித்தபோதே மக்கள் தெரிந்து கொண்டிருந்தார்கள். மக்களின் மனங்களை ஈர்க்கும் ஏதோ ஒரு சக்தியை அவர் கொண்டிருந்தார் என்பதுவே உண்மை. அவரது 2019 அறுதிப் பெரும்பன்மை வெற்றி மக்களுக்கு அவர் மீதிருந்த ஈர்ப்பு என்று வாதிடும் பல அரசியல் அவதானிகள் உண்டு. அதே நேரம் ப்றெக்ஸிட் எனும் ஐரோப்பிய ஒன்றியத்தினிலிருந்து விலகுவது எனும் நிகழ்வு கிளப்பி விட்ட புரிந்துணர்வுக்கு அப்பாற்பட்ட ஒரு பிரிந்துணர்வினை ஊட்டும் வகையில் அவர் நடந்து கொண்டமையே அவரது வெற்றிக்குக் காரணம் எனும் வாதமும் பலமாக எழுந்ததுண்டு. எது எவ்வகை இருப்பினும் அமெரிக்கா ட்ரம்ப் அலையினால் தாக்கப்பட்ட சிறிது காலத்திலேயே இங்கிலாந்து பொரிஸ் அலையினால் தாக்கப்பட்டது என்பதுவே உண்மை. அப்போதைய அமேரிக்க ஐனாதிபதி ட்ரெம்ப் அவர்கள் பொரிஸ் ஜான்சனை ஆதரித்த தலைவர்களுள் முக்கியமானவர் என்பதும் குறிப்பிடப் பட வேண்டிய ஒன்றாகும். சிரிக்கச் சிரிக்கப் பேசி தனது காரியத்தை சாதித்துக் கொள்ளும் திறமை பொரிஸ் ஜான்சனிடம் இருந்தது. கேட்கப்படும் கேள்விகள் எத்தனை கடினமானதாக இருந்தாலும் சுற்றி வளைத்துப் பதிலளித்துத் தப்பித்துக் கொள்ளும் திறமை அவரிடம் இருந்தது. அவரிடமிருந்த ஏதேவொரு வசீகரம் அவரின் மீது ஆத்திரம் கொள்வதற்குப் பதிலாக அனுதாபம் கொள்ளத் தூண்டியது எனலாம்.

மேலும் படிக்க ...

ஆய்வு: நாட்டுப்புற இலக்கியங்களில் பெண்ணியச் சிந்தனைகள்! - பா. தாரா, முனைவர்பட்ட ஆய்வாளர், அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விழுப்புரம் -

விவரங்கள்
- பா. தாரா, முனைவர்பட்ட ஆய்வாளர், அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விழுப்புரம் -
ஆய்வு
18 ஜூலை 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

முன்னுரை

நாட்டுப்புறப் பாடல்கள் பழமைக்கும் பழமை வாய்ந்தவை. பின்னைப் புதுமைக்கும் புதுமையாகவும் விளங்குபவை. இப்பாடல்கள் இனியவை, எளியவை, எழுதப்படாதவை. வாயில் பிறந்து செவிகளில் நிறைந்து உள்ளத்தில் பதிவு பெறுபவை. மண்ணின் மணத்தைப் பரப்புபவை:

நாட்டுப்புற இலக்கியத்தின் வேர்கள் மனித சமுதாயத்தில் மிக ஆழமாகப் பதிந்துள்ளன. நாட்டுப்புற இலக்கியமானது மனித சமுதாயம் எதை அனுபவித்ததோ, எதைக் கற்றதோ அதைக் குவித்து வைத்திருக்கும் சேமிப்பு அறையாகும் என்கிறார் முனைவர் சு. சக்திவேல். (நாட்டுப்புற இயல் ஆய்வு, ப.22) எனவே, நாட்டுப்புற இலக்கியம் மண்ணின் மணத்தைப் பரப்பும் சிறப்பினைக் கொண்டது எனலாம். அந்தவகையில் நாட்டூப்புறப் பாடல்களில் விரவிக்கிடக்கும் பெண்ணிய சிந்தனையை மட்டும் எடுத்துரைப்பதாக அமைகின்றது இக்கட்டுரை.

நாட்டுப்புற ப்பாடல் வகைப்பாடு

நாட்டுப்புறப் பாடல்கள் அவை பாடப்படும் சூழல் நிகழ்வுகளின் தன்மை இவற்றை அடிப்படையாகக் கொண்டு வகைப்படுத்தப்படுகின்றன. நாட்டுப்புறப் பாடல்களில் இடம்பெற்றிருக்கும் பெண்ணிய சிந்தனைகளை முனைவர் சு.சக்திவேல், கீழ்வருமாறு பகுத்துக் கூறுகிறார்.

ஆணாதிக்க வெளிப்பாடு
கற்புக் கோட்பாடு
விருப்பமின்றி நடத்தப்படும் திருமணங்கள்
கருவின் கருவளம்
பாலின சமமின்மை
சக பாலின முரண்
விதவைப் பெண்ணின் மன உணர்வு
வேலைச்சுமை
கூலி வேலை செய்வும் பெண் நிலை
வன்புணர்வு
பெண் தன் பலத்தைப் பிரகடனம் செய்தல்.

மேற்கண்ட பட்டியலுக்குள் அடங்கியிருக்கும் பெண் உணர்வுகளையும், அடக்குமுறை களையும், அடிமைநிலையையும் நாட்டுப்புறப் பாடல்களின் துணைகொண்டு கீழ்வருமாறு காணலாம்.

மேலும் படிக்க ...

ஆடிப்பிறப்பு! - குரு அரவிந்தன் -

விவரங்கள்
- குரு அரவிந்தன் -
குரு அரவிந்தன்
18 ஜூலை 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

தமிழர்களின் திருநாட்களில் ஆடிப்பிறப்பு கொண்டாட்டமும் முக்கியமானதாகும். தமிழ் நாட்காட்டியின்படி நான்காவது மாதமான ஆடி மாதம் முதலாம் திகதியை (இந்த வருடம் 17-7-2022) ஆடிப்பிறப்பு என்று சொல்வார்கள். தமிழ் நாட்டில் இதை ஆடிப்பெருக்கு என்று அழைப்பார்கள். ஆடிப்பிறப்பன்று சிறுவர், சிறுமிகளுக்குப் பிடித்தமான கொழுக்கட்டையும், இனிப்பான ஆடிக்கூழும் விசேடமான உணவான இருக்கும். ஒரு காலத்தில் அதாவது 1950 களில் யாழ்பாண பாடசாலைகளில் ஆடிப்பிறப்பன்று விடுமுறை விட்டார்களாம். சில தனிப்பட்ட காரணங்களால், குழந்தைகள் மகிழ்ச்சியோடு கொண்டாடிய இத்திருநாளைக் கொண்டாடுவதை இந்தத் தலைமுறையினர் பல இடங்களில் நிறுத்திவிட்டார்கள்.

மேலும் படிக்க ...

எழுத்தாளர் அகணி சுரேஷ் எழுதிய மூன்று நூல்களின் நூல் வெளியீட்டு விழா!

விவரங்கள்
- தகவல்: அகணி சுரேஷ் -
நிகழ்வுகள்
18 ஜூலை 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மேலும் படிக்க ...

நடு 50 இதழ் பற்றிய எண்ணங்கள்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
17 ஜூலை 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- ஸ்கார்பரோவில் நேற்று நடைபெற்ற எழுத்தாளரும், நடு இணைய இதழ் ஆசிரியருமான கோமகன் அவர்களை நிஒனைவு கூர்தல் மற்றும் நடு 50 இதழின் வெளியீடு ஆகியவற்றை உள்ளடக்கிய நிகழ்வில் நான் ஆற்றிய உரையின் விரிவான வடிவமிது. - வ.ந.கி -


இன்று இங்கு கூடியிருக்கும் பேச்சாளர்கள், கலை, இலக்கிய ஆர்வலர்கள். சமூக அரசியற் செயற்பாட்டாளர்கள் அனைவருக்கும் முதலில் வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கின்றேன். இன்று நாம் இதழாசிரியரும் , எழுத்தாளருமான நண்பர் கோமகனின் எழுத்து மற்றும் இதழியற் பங்களிப்பை உள்ளடக்கிய இலக்கியப் பங்களிப்பு பற்றிப் பேசுவதற்கும், அவரை நினைவு கூர்வதற்கும், அவரது இலட்சியக் கனவான நடு இணைய இதழின் அச்சு வடிவினை அறிமுகப்படுத்துவதற்காகவும் கூடியிருகின்றோம். அதற்காக இங்கு எழுத்துலக ஆளுமைகள் பலர் கலந்துகொண்டிருக்கின்றார்கள். அவர்கள் தம் கண்ணோட்டத்தில் கோமகனை நமக்கு அறிமுகப்படுத்தவிருக்கின்றார்கள்.

கோமகனை நான் ஒரு போதும் நேரில் சந்தித்ததில்லை. அவருடன் உரையாடியதுமில்லை. ஆயினும் அவரும் நானும் முகநூல் மெசஞ்சர் மூலம் தொடர்பிலிருந்தோம். அத்தொழில்நுட்பத்தினூடு உரையாடிக்கொண்டிருந்தோம். அவர் படைப்புகளை வேண்டி நிற்கும்போது என் படைப்புகளை வழங்கியிருக்கின்றேன். இணைய இதழ் தொழில்நுட்பம் பற்றிக் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டிருந்தோம். அவருடனான எனது தொடர்பிலிருந்து அவரைப்பற்றியதொரு பிம்பம் என்னுள்ளத்திலிருந்தது. இதழாசிரியராக, எழுத்தாளராக விளங்கிய அவர் சுயமாகத் தகவற் தொழில் நுட்பத்தை இணையம் மூலம் கற்பதில் வெற்றியடைந்தார். அதனால் அவரால் நடு இணைய இதழைத் தனியாக வடிவமைக்க முடிந்தது. இவ்விதம் இணைய இதழொன்றினைச் சுயமாக வடிவமைத்து, ஆக்கங்களைப் பெற்று , அவற்றைப் பதிவேற்றுவதென்பது மிகவும் நேரத்தை எடுக்குமொரு செயல் என்பதைப் பதிவுகள் இணைய இதழை உருவாக்கிப் பராமரிப்பவன் என்னும் என் சொந்த அனுபவத்தின் அடிப்படையில் அறிவேன். ஆர்வமும், மிகுந்த அர்ப்பணிப்பும் இருந்தாலன்றி இவ்விதமான இணைய இதழொன்றினைத் தொடர்ச்சியாக வெளியிட முடியாது. இதனால்தான் பலர் இவ்வித இணைய இதழ்களை அல்லது வலைப்பூக்களை உருவாக்கிவிட்டு, ஆரம்பத்தில் சிறிது காலம் உற்சாகமாக இருந்துவிட்டு பின்னர் ஓய்ந்து விடுவார்கள். இதனால் எப்பொழுதும் எனக்குக் கோமகன் மீது தனிப்பட்ட மதிப்பும், அன்புமுண்டு.

மேலும் படிக்க ...

கனடாவில் நடைபெற்ற எழுத்தாளர் கோமகன் நினைவு கூரலும், நடு 50 இதழின் வெளியீட்டு நிகழ்வும்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
நிகழ்வுகள்
17 ஜூலை 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இன்று 3600 கிங்ஸ்டன் 'றோட்'டில் அமைந்துள்ள ஸ்கார்பரொ சமூக நிலையத்தில் நடு இணைய இதழாசிரியரும், எழுத்தாளருமான கோமகனின் நினைவு கூரல் நிகழ்வும், நடு 50 இணைய இதழ் வெளியீடும் நடைபெற்றது. நேரிலும் ZOOM செயலி மூலமும் எழுத்தாளர்கள், கலை, இலக்கிய ஆர்வலர்கள் கலந்துகொண்டனர். எழுத்தாளரும் , பதிவுகள் இணைய இதழ் ஆசிரியருமான வ.ந.கிரிதரனின் நெறிப்படுத்தலில் நடைபெற்ற நிகழ்வு அமரர் கோமகனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் ஆரம்பமானது.

முதலில் வ.ந.கிரிதரன் கோமகனுடனான தனது அனுபவங்களையும், அவரது பன்முகப்பட்ட ஆளுமைகளைப்பற்றியும் , அவரது இலட்சியக் கனவான நடு இதழ் .அதன் எதிர்காலம் பற்றிய அவரது எண்ணங்களையும் குறிப்பிட்டு, நடு 50 இதழ் படைப்புகள் பற்றிய தனது கருத்துகளையும் பகிர்ந்துகொண்டார். நடு 50 இதழானது சிறந்த வடிவமைப்பில் மானுடரின் சமூக, அரசியற் சீர்கேடுகள், போர், சீதனப்பிரச்சினை, பொருந்தா மணம், சட்டரீதியாகத்திருமணம் என்னும் பெயரில் நடைபெறும் பாலியல் வன்முறை, இயற்கைச் சீரழிவு, காமம் அதன் விளைவுகள், பணியிடத்தில் பெண்கள் எதிர்நோக்கும் பாலியற் பிரச்சினைகள், போர்ச்சூழல் ஏற்படுத்திய அழிவுகள், அது பெண்கள் மேல் ஏவிவிட்ட பாலியல் வன்முறை, இளைஞர்கள் மேல் ஏற்படுத்திய வன்முறை எனப் பலவற்றைப் பேசுமொரு காத்திரமான இதழாக வெளிவந்துள்ளது என்று கூறியதுடன் , நடு இதழில் வெளியான படைப்புகள் சிலவற்றைப்பற்றிய தனது கருத்துகளையும் எடுத்துரைத்தார்.

அடுத்துப் பேசிய 'காலம்' இதழின் ஆசிரியரும், சிறந்த புனைகதை ஆசிரியருமான செல்வம் அவர்கள் பாரிசில் தான் சந்தித்த கோமகனுடான நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார். அத்துடன் புலம்பெயர் இலக்கியமென்பது அக்காலகட்டத்து மக்களின் வாழ்வைப் பதிவுசெய்கின்றது. அவ்விலக்கியத்தில் கோமகனின் பங்களிப்பு முக்கியம் மிக்கது என்னும் கருத்துப்பட தன் கருத்துகளை முன்வைத்தார். அத்துடன் நடு இணைய இதழ் மூலம் பல்வேறு கருத்துகளைக்கொண்ட படைப்பாளிகளையெல்லாம் அரவணைத்துச் சென்றார். புதிய படைப்பாளிகள் பலரை (ஓவியர்கள் உட்பட) அறிமுகப்படுத்தியது அது முக்கியமானது என்பதையும் சுட்டிக்காட்டினார்.

மேலும் படிக்க ...

கோமகன் நினைவும் , 'நடு' ஐம்பதாவது இதழ் வெளியீடும்!

விவரங்கள்
- தகவல்: யோக வளவன்-
நிகழ்வுகள்
14 ஜூலை 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

Join Zoom Meeting

Meeting ID: 810 8733 4304
Passcode: 521902

நடு இணைய இலக்கிய சஞ்சிகையின் பிரதம ஆசிரியரும், நடு பதிப்பக வெளியீட்டாளருமாகிய திரு. கோமகன் அவர்களை நினைவு கூரும் முகமாகவும், நடு சஞ்சிகையின் அச்சு பிரதியான 50 வது இதழை கனடாவில் வெளியிடும் முகமாகவும், எதிர்வரும் ஜூலை 16 ம் திகதி சனிக்கிழமை ஸ்காபுரோவில் கூட்டம் ஒன்று கோமகனின் நண்பர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ரொறன்டோ நேரம் :- மாலை 5.30 மணி
லண்டன் நேரம் :- இரவு 10.30 மணி
ஐரோப்பிய நேரம் :- இரவு. 11.30 மணி
இலங்கை நேரம்:- காலை 3.00 மணி ( ஞாயிற்று கிழமை )
அவுஸ்ரேலிய நேரம். காலை 7.30 மணி ( ஞாயிற்று கிழமை )

அக்கூட்டத்தினை 'பதிவுகள்' இணைய இதழ் ஆசிரியரும், எழுத்தாளருமாகிய வ. ந. கிரிதரன் தலைமையேற்று நெறிப்படுத்த உள்ளார்…
மேற்படி கூட்டத்தில் கோமகனின் நண்பர்களும் எழுத்தாளர்களுமாகிய

1) ஶ்ரீரஞ்சனி
2) செல்வம் ( காலம் சஞ்சிகை )
3) ஜயகரன்
4) கோமகனின் பால்ய கால நண்பர்கள்

என பலரும் உரையாற்ற உள்ளனர்.

மேலும் படிக்க ...

துயர் பகிர்வோம்: இனிய நண்பர் வே. நந்தீஸ்வரர்! - குரு அரவிந்தன் -

விவரங்கள்
- குரு அரவிந்தன் -
குரு அரவிந்தன்
14 ஜூலை 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இனிய நண்பர் நந்தீஸ்வரர் அவர்கள் 27- 6 -2022 ஆண்டு கனடாவில் எம்மைவிட்டுப் பிரிந்துவிட்டார். பிறப்பு என்று ஒன்றிருந்தால் இறப்பு என்பதும் நிச்சயமே என்பதற்கிணங்க அவரது பிரிவையிட்டு அவரது குடும்பத்துடன் துயர் பகிர்ந்து கொள்வோம்.

பன்னாலையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் மகாஜனக் கல்லூரியின் பழைய மாணவராவார். இவர் தனது காலத்தில் தமிழ் சமூகத்தின் முன்னேற்றத்திற்காகப் புலம்பெயர்ந்த கனடிய மண்ணில் சமூகசேவகராக முன்னின்று உழைத்ததை யாரும் மறுக்க முடியாது. புலம்பெயர்ந்த பலர் தான் உண்டு, தன்குடும்பம் உண்டு என்று சுயநலமாக வாழமுற்பட்டபோது, ஒரு சிலர்தான் முன்வந்து பொதுநல சேவைகளில் ஈடுபடத் தொடங்கினர். அந்த வகையில் நண்பர் நந்தீஸ்வரனை மகாஜனக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்திலும், கனடா இந்து மா மன்றத்திலும் முனைப்போடு செயற்பட்ட ஒருவராக நான் சந்தித்தேன். அவரது சிந்தனை எல்லாம் தமிழ் மணவர்களது முன்னேற்றம் கருதியதாகவே இருந்தது. தனது நேரத்தையும் அதற்காகச் செலவிட்டார்.

பேராதனை பல்கலைக்கழகப் பொறியியல் பட்டதாரியான இவர் கணிதத்தில் சிறந்து விளங்கியதால் கனடாவில் சுற்றாடலில் உள்ள அடுத்த தலைமுறையைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு இலவசமாகக் கணிதபாடம் கற்பிக்கத் தொடங்கினார். அதில் திருப்திப்படாத இவர் மகாஜனக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தினுடாக கணிதம், பொதுஅறிவு, தமிழ் போன்ற பாடங்களில் பரீட்சை வைத்து மாணவர்களை ஊக்குவிக்கத் தொடங்கினார். இதற்காகப் பல பயிற்சிப் பட்டறைகளையும் பழைய மாணவர் சங்கத்தின் ஊடாக நடத்திவைத்தார். தொடக்க காலத்தில் வருடாவருடம் சுமார் 1000 மேற்பட்ட தமிழ் மாணவர்கள் ரொறன்ரோ, மொன்றியல் போன்ற இடங்களில் இருந்து இந்தப் பரீட்சைக்குத் தோன்றினார்கள். சிறப்பாக இந்தப் பரீட்சைகள் நடைபெற்றதால், வடஅமெரிக்கா, இலங்கை போன்ற இடங்களில் இருந்தும் மாணவர்கள் பரீட்சைக்குத் தோன்றினார்கள். இன்று கனடிய தமிழ் சமூகத்தில் எழுச்சி பெற்று நல்ல நிலையில் இருக்கும் பலர் இந்தப் பரீட்சையில் தோன்றிக் கல்வியில் தங்கள் நிலை என்ன என்பதை இதன் மூலம் உறுதிப் படுத்தியவர்களேயாகும்.

மேலும் படிக்க ...

வன்னியியல் ஆய்வரங்கம் - 14 எழுத்தாளர் குரு சதாசிவம் அவர்களின் சிறுகதைகள் நூலாய்வும் அறிமுகமும்!

விவரங்கள்
- தகவல்: த.சிவபாலு -
நிகழ்வுகள்
14 ஜூலை 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மேலும் படிக்க ...

மற்ற கட்டுரைகள் ...

  1. மணற்கேணி இரு,மாத இதழ் பற்றி... - 'மணற்கேணி' ரவிக்குமார் -
  2. ஆங்கிலத்தில் வெளியாகும் முருகபூபதி எழுதிய நடந்தாய் வாழி களனி கங்கை ( Mystique of Kelani River) - மணிமாறன் -
  3. 'அன்னா கரினினா'வின் தமிழ்த்திரை வடிவம் 'பணக்காரி'
  4. கிளிம் வாழ்வின் மூன்றாம் தொகுதி: -தமிழ் இலக்கிய உலகை, முன்னிறுத்தி (6) - ஜோதிகுமார் -
  5. ஊருக்குள் இரண்டு காளி! - எஸ்.வைத்தீஸ்வரன் -
  6. குறுநாவல்: புகையில் தெரிந்த முகம்! - அ.செ.முருகானந்தன் -
  7. மாயவாத சித்திரிப்பில் எழுதப்பட்டுள்ள நடேசனின் பண்ணையில் ஒரு மிருகம்! - ஜொஸப்பின் பாபா ( துணைப் பேராசிரியர், புனித சேவியர் கல்லூரி பாளையங்கோட்டை )
  8. தமிழுக்குப் புதிய சொல் `சதிவிரதன்’ – குரு அரவிந்தனின் சிறுகதைத்தொகுதிய முன் வைத்து - கே.எஸ்.சுதாகர் -
  9. ஈழத்து இலக்கியப் பரப்பில் ஐந்து தசாப்த காலமாகச் சுடர்விட்டுப் பிரகாசித்தவர் நாவேந்தன்..! - பத்மபாரதி -
  10. நற்றிணைக் காட்டும் பெண்பாற் புலவரின் மனவுணா்வு - முனைவர். கு.செல்வஈஸ்வரி, உதவிப்பேராசிரியர், எஸ்.எஃப்.ஆர். மகளிர் கல்லூரி , சிவகாசி.
  11. படைப்புச் சுதந்திரமும் படைப்பாளிகள் நுண்ணுணர்வோடும் பொறுப்புணர்வோடும் இயங்கவேண்டிய அவசியமும். கவிஞர் லீனா மணிமேகலைக்குத் துணைநிற்போம்! - லதா ராமகிருஷ்ணன் -
  12. நிகழ்வு; தமிழ் இணையம் 100 (Tamil internet 100) - முனைவர் துரை மணிகண்டன் -
  13. வாசிப்பும் யோசிப்பும் (378): தத்யயேவ்ஸ்கி நூல்களுக்குப் புறக்கணிப்பா?..... - வ.ந.கிரிதரன் -
  14. ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் நடத்தும் இணைய வழிக் கலந்துரையாடல்: "நவீன தமிழிலக்கியத்தின் அழகியல் - புனைகதை மற்றும் நவீன கவிதை தொடர்பான சிந்தனைகள்”
பக்கம் 69 / 104
  • முதல்
  • முந்தைய
  • 64
  • 65
  • 66
  • 67
  • 68
  • 69
  • 70
  • 71
  • 72
  • 73
  • அடுத்த
  • கடைசி