பதிவுகள் முகப்பு

உலகைத் திரும்பிப் பார்க்க வைத்த மூன்று முக்கிய நிகழ்வுகள்! - குரு அரவிந்தன் -

விவரங்கள்
- குரு அரவிந்தன் -
குரு அரவிந்தன்
29 ஆகஸ்ட் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அண்மையில்  பொது ஊடகங்களில் வெளிவந்த விளையாட்டுத்துறை சார்ந்த இரண்டு நிகழ்வுகளும், விண்வெளி சார்ந்ததொரு நிகழ்வும் பலரின் கவனத்தையும் பெற்றிருந்தது. ஒன்று இங்கிலாந்திற்கும் ஸ்பெயினுக்கும் நடந்த உலகக் கிண்ணத்திற்கான பெண்கள் உதைபந்தாட்ட இறுதிப் போட்டி, மற்றது பதினெட்டே வயதான பிரக்ஞானந்தாவின் உலகக் கிண்ணத்திற்கான சதுரங்க ஆட்டப் போட்டி, மூன்றாவது சந்திரனின் தென்துருவத்தில் தரையிறங்கும் போட்டி. இந்த மூன்று நிகழ்வுகளும் விளையாட்டுத்துறை மற்றும் விண்வெளித்துறையில் ஆர்வம் உள்ளவர்களை மட்டுமல்ல, ஏனைய பொதுமக்களின் கவனத்தையும் பெரிதாக ஈர்த்திருந்தன.

பெண்கள் உலகக் கிண்ணப் போட்டியில் ஸ்பெயின் அணியினர் வெற்றிக் கிண்ணத்தைப் பெற்றாலும், அவர்களின் இந்த வெற்றிக்குப் பின்னால் ஒரு சோகக்கதை இருந்தது. சிட்னியில் நடந்த இறுதிப் போட்டியில் இங்கிலாந்தும் ஸ்பெயினும் மோதிக் கொண்டன. ஸ்பெயின் அணியின் தலைவியான 23 வயதான ஒல்கா காரமோனா ஒரு கோலைப் போட்டு ஸ்பெயினுக்கு வெற்றியைத் தேடித்தந்திருந்தார். ஸ்பெயின் வெற்றியைக் கொண்டாடிய போது, இந்த வெற்றிக்குக் காரணமாக யார் அந்தக் கோலை அடித்து வெற்றியை ஸ்பெயின் நாட்டுக்குப் பெற்றுக் கொடுத்தாரோ, அவரிடம் ஒரு சோகச் செய்தி பகிரப்பட்டது, அது என்னவென்றால் அவரது தந்தையார் திடீர் மரணத்தைத் தழுவிக் கொண்டார் என்பதேயாகும்.

மேலும் படிக்க ...

காத்திருப்பேன்? - நிர்த்தியா ஜோதிராஜ் , ஹாலிஃபக்ஸ் -

விவரங்கள்
- நிர்த்தியா ஜோதிராஜ் , ஹாலிஃபக்ஸ் -
கவிதை
28 ஆகஸ்ட் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

உன்
பட்டு மேனியைத்
தொட்டுத்தொட்டு ரசித்தேன்.
நாளும் உன் அழகை ரசித்தேன்.
நீராடி நீ வந்தால்
நீர்த்திவலைகள் உன் மேனியிலே
முத்து முத்தாய்ப் படிந்திருந்து
நர்த்தனமாடும்
அழகை ரசித்தேன்.
அதிலே
காலைக் கதிரவனும் மையல் கொண்டு
கண்சிமிட்டும் போதினிலே
நாணிச்சிவந்திருக்கும் உன் மேனியழகில்
என்னை மறந்தேன்.

மேலும் படிக்க ...

காணாமல் போன மனித உரிமைச் சட்டத்தரணியும், சமூகச் செயற்பாட்டாளருமான கந்தையா கந்தசாமி!

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
அரசியல்
28 ஆகஸ்ட் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இவர் இலங்கையில் நிலவிய போர்ச்சூழலுக்குப் பலியாகியவர்களில் ஒருவர். ஆனால் இவரைப்பற்றித் தமிழ் மக்கள் பொதுவாக அதிகம் அறிந்திருக்கவில்லை. அதற்கு முக்கிய காரணம் இவர் தன்னை அதிகமாக மக்கள் மத்தியில்  வெளிப்படுத்தாம் இயங்கிக்கொண்டிருந்ததுதான். இவர் ஒரு சட்டத்தரணி. மனித உரிமைகளுக்காகப் போராடிய சட்டத்தரணி. இவர் நினைத்திருந்தால் மிகவும் இலகுவாக இலண்டனில் வாழ்ந்து செல்வச் செழிப்பில் மிதந்திருக்கலாம்.ஆனால் இவர் அப்படிச் செய்யவில்லை.

மேலும் படிக்க ...

பி.விக்னேஸ்வரனின் 'நினைவு நல்லது' நூல் அறிமுக விழா! - தகவல்: கணபதி சர்வானந்தா -

விவரங்கள்
- தகவல்: கணபதி சர்வானந்தா -
நிகழ்வுகள்
27 ஆகஸ்ட் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மேலும் படிக்க ...

சமூக, அரசியற் செயற்பாட்டாளர் சாந்தி சச்சிதானந்தம் நினைவாக.... - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
27 ஆகஸ்ட் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

சமூக,அரசியல், மனித உரிமை மற்றும் பெண்ணியச் செயற்பாட்டாளரான சாந்தி சச்சிதானந்தம் அவர்களின் நினைவு தினம் ஆகஸ்ட்  27. அவரது பிறந்த தினமும் ஆகஸ்ட் 14. மொறட்டுவைப் பல்கலைககழகத்தில் கட்டடக்கலைத் துறை பட்டதாரி.  விழுது என்னும் அரச சார்பற்ற நிறுவனத்தின் ஸ்தாபகர். 'இருக்கிறம்'  என்னும் மாதச்சஞ்சிகையை அந்நிறுவன்ம் மூலம் வெளியிட்டவர்.  ஆங்கிலம் , தமிழ் மொழிகளில் இவரது சமூக, அரசியல் மற்றும் பெண்ணியம் சார்ந்த கட்டுரைகள் பல வெளியாகியுள்ளன.  

'பெண்களின் சுவடுகளில்' (தமிழியல் வெளியீடு) ,  'வறுமையின் பிரபுக்கள்' (மன்று வெளியீடு) , 'தடைகளைத் தாண்டி' (விழுது வெளியீடு) மற்றும் 'சரிநிகர் சமானமாக' (விழுது வெளியீடு)  என்னும் நூல்களை எழுதியவர். இவரது தந்தையாரான வல்லிபுரம் சச்சிதானந்தம் வழக்கறிஞர். லங்கா சமசமாஜக் கட்சி சார்பில் 1970 இலங்கை நாடாளுமன்றத்  தேர்தலில் நல்லூரில் போட்டியிட்டவர்.  இவரது கணவரான அமரர் மனோரஞ்சன் ராஜசிங்கம் அவர்களும் ஒரு சமூக, அரசியற் செயற்பாட்டாளராக இயங்கியவரே.

மேலும் படிக்க ...

வித்துவான் வேந்தனார் குழந்தைப் பாடல்கள் பற்றிய சிறுகுறிப்பு! - வேந்தனார் இளஞ்சேய் -

விவரங்கள்
- வேந்தனார் இளஞ்சேய் -
வேந்தனார் இளஞ்சேய்
27 ஆகஸ்ட் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

வேந்தனார் குழந்தைப்பாடல்கள் 38 உம், மூன்று தனித்தனி நூல்களாக , குழந்தைகளின் வயதிற்கேற்றபடி மூன்று பாகங்களாக வெளியிடப்பட்டுள்ளன.இப் பாடல்கள் அனைத்தும் இசைவடிவிலும் கொடுக்கப் பட்டுள்ளன. இவை அனைத்தும் 'நூலகம் இணையத்தளத்தில்' உள்ளன.  (www.noolaham.org இல் aavanaham.org உள்ளன.)

இப்பாடல்களில் ஏழு எட்டு பாடல்கள் ,கடந்த 70 வருடங்களாக இலங்கைத் தமிழ் சிறுவர் பாடசாலை பாடப் புத்தகங்களில் வெளிவந்து கொண்டுள்ளன. ( அம்மா, பாட்டி , எங்கள் வீட்டுப்பூனை , புள்ளிக்கோழி , மயில்,கூண்டிற்கிளி, அணில் , உதவி , ஒழுக்கம் மற்றும் சில பாடல்கள்...) வேந்தனாரின் குழந்தைப் பாடல்கள் 38 உம் , குழந்தைகள் தாமாகவே சிந்தித்து , உணர்வுடன் பாடுவதாக அமைந்துள்ளன. தூய, இனிய, எளிய தமிழில் , குழந்தைகளின் உள்ளத்தில் அன்பு , கருணை , பாசம் , பற்றுப் போன்ற உணர்வுகளை விதைக்கக் கூடியதாக இப் பாடல்கள் அமைந்துள்ளன.

அம்மா , பாட்டி , ஆசைமாமா, நண்பி போன்ற உறவுகளை பூனை , மயில்,கோழி , குயில்,அணில் , மான், கிளி போன்ற உயிரினங்களை பந்தடிப்போம், ஊஞ்சல் ஆடுவோம், இளநீர் குடிப்போம் , கரும்பு தின்போம் போன்ற செயற்திறன்கொண்ட பாடல்களை நிலா , மல்லிகைப் பூந்தோட்டம் , வாழை , கீரிமலை, பண்ணைப்பாலம் போன்றவற்றை உதவி , தொண்டு , கால் இழந்த ஏழை, கண்பார்வையற்ற ஏழை போன்ற , குழந்தைகள் உள்ளத்தில் கருணையை ஊட்டும் பாடல்களை நாவலர், பொன்.இராமநாதன் போன்ற பெரியார் பற்றிய பாடல்களை நாட்டில் அன்பு வேண்டும் , இளமைப்பருவம் போன்ற நாட்டுணர்வுமிக்க பாடல்களைக் கொண்டதாக , பல துறைகளையும் சார்ந்த 38 குழந்தைப் பாடல்கள் , குழந்தை மொழியாக, குழந்தைகளுக்கு வழங்கப் பட்டுள்ளன.

மேலும் படிக்க ...

‘விம்பம்’ லண்டனில் விமர்சன அரங்கு! - நவஜோதி ஜோகரட்னம் , லண்டன் -

விவரங்கள்
- நவஜோதி ஜோகரட்னம் , லண்டன் -
நவஜோதி ஜோகரட்னம்
27 ஆகஸ்ட் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

லண்டனில் ‘விம்பம்’ கலை இலக்கிய அமைப்பினூடாக குறும்பட விழாக்கள், ஓவியப் போட்டிகள், மலையக இலக்கியம், சமகால நாவல், சிறுகதை, கவிதை இலக்கியங்கள் குறித்த விமர்சன நிகழ்ச்சிகள் என நீண்டகாலமாக பயணித்து வருகின்றமை மிச்சிறப்பான விடயமாகும்.

விம்பத்தின் முக்கிய அமைப்பாளரான ஓவியர் கே.கே.கிருஷ்ணராஜா அவர்கள் தனது தாராள மனத்துடனும், மனித நேயத்துடனும் முன்னெடுத்துச் செல்லும் இத்தகைய பணி பெரிதும் பாராட்டுக்குரியன.

அந்த வகையில் கடந்த பத்தொன்;பதாம் திகதி லண்டன் ஈஸ்ற்ஹாம் பகுதியில் அமைந்த ரிறினிற்ரி மண்டபத்தில் ஒன்பது பெண் படைப்பாளிகளின் நூல்களின் விமர்சன அரங்கை ‘விம்பம்’ ஏற்பாடு செய்திருந்தது. முழுநாள் நிகழ்வாக இடம்பெற்ற இந்த நூல்களின் அறிமுகம், விமர்சன நிகழ்வு சமகால இலக்கியங்களை அறிந்து கொள்ளவும், அவற்றைப் புரிந்து கொள்ளவும், புரிந்தவற்றை பகிர்ந்து கொள்ளும் களமாக அமைந்திருந்தது.

மேலும் படிக்க ...

பயணியின் பார்வையில் (2): உலகத்தில் 'சுத்தமான' தலைவர் அமிர்! ஊடகப் பயணத்தில் நிகழ்ந்த சுவாரசியமான சம்பவம்! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
27 ஆகஸ்ட் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இலங்கையில் அமிர்தலிங்கம் அவர்கள் எதிர்க்கட்சித்தலைவராக இருந்த காலப்பகுதியில், அவரது உரைகளுக்கு ஊடகங்கள் முக்கியத்துவம் வழங்கின. இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக அப்போது ஒரு தமிழர் எதிர்க் கட்சித்தலைவராக தெரிவாகியிருந்தார். அவரது நாடாளுமன்ற உரைகளை சபாநாயகர் ஆனந்த திஸ்ஸ டீ அல்விஸின் துணைவியாரும் பார்வையாளர் கலரியில் அமர்ந்திருந்து செவிமடுத்து , அமிர் அவர்களுக்கு பாராட்டு கடிதங்களும் எழுதியிருக்கிறார்.

ஒரு தடவை வெளிவிவகார அமைச்சர் ஏ. ஸி. எஸ். ஹமீது தொடர்பாக ஏரிக்கரை இல்லம் ( Lake House ) வெளியிட்ட ஒரு செய்தி பாரதூரமான சர்ச்சைகளை உருவாக்கிவிட்டது. நாடாளுமன்றிலும் விவாதிக்கப்பட்டது. குறிப்பிட்ட பத்திரிகையின் ஆசிரியர் சிங்கள இனத்தைச் சேர்ந்தவர். அவரை நாடாளுமன்றம் அழைத்து பகிரங்கமாக மன்னிப்பு கோர வைத்தது. அதனைக் கண்டித்து, அந்தச் சிங்கள சிரேஷ்ட ஊடகவியலாளருக்காக குரல் கொடுத்தவர் அமிர்தலிங்கம். அவர் மூவினத்தையும் சேர்ந்த ஊடகவியலாளர்களிடம் நன்மதிப்பினைப் பெற்றிருந்தவர்.

மேலும் படிக்க ...

முல்லைஅமுதன் கவிதைகள் இரண்டு!

விவரங்கள்
முல்லைஅமுதன்
கவிதை
25 ஆகஸ்ட் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

1.

கதை சொல்லும்போது  உம்  உம் கொட்ட வேண்டும்.
சுவாரஸ்யம் அவருக்கு இருக்காது.
சிறு குறும்புகளெனினும் கைத்தடி
என் முதுகைப் பதம் பார்க்கும்
அக்கா வலிக்கு ஒத்தடம் கொடுப்பாள்.
அம்மா உள்ளுக்குள் அழுவாள்.
அப்பா தன் கண்டிப்பை விடுவதாயில்லை.
அக்காவுக்குத் திருமணம் ஆயிற்று.
கதை சொல்ல முடியவில்லை.
பேரன் கிடைத்தான்.
அவனும் சாதுர்யமாக உம் கொட்டிக் கொண்டே  தூங்குவான்.
அப்பாவுக்கும் உள்ளூர மகிழவே...
ஒருநாள் பேரனிடமிருந்து உம் வரவில்லை.
அவனின் முதுகைப் பதம் பார்த்துவிட்டது கைத்தடி.
அக்கா கோபத்தில் வெளியேறிவிடடாள்.
அம்மா உள்ளுக்குள் அழுது தீர்த்தாள்.
கதைச்செல்ல அப்பாவுக்கு ஆள் கிடைக்கவில்லை.
சுவருடன்,மரங்களுடன்,
பூக்களுடன்
பேசி இறந்துபோனார்.

மேலும் படிக்க ...

ஸ்டெம் கல்வி (Stem-Kalvi)தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் “ஆயிரம் தமிழ் வாசிப்புப் புத்தகங்கள்" செயற்றிட்டம். - கலா ஸ்ரீரஞ்சன் -

விவரங்கள்
- கலா ஸ்ரீரஞ்சன் -
சிறுவர் இலக்கியம்
24 ஆகஸ்ட் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

Website: Stem-Kalvi  | Email: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


இச்செயற்றிட்டத்தின் ஆரம்ப கட்ட நடவடிக்கைகளைப் பற்றி இக்கட்டுரை பேசுகிறது.  ஆரம்ப பாடசாலைகளில் மாணவர்களின் வாசிப்பும், வாசிப்புத்திறனும் குறைந்திருப்பதாக அண்மையில் இலங்கையில் யூனிசேப் (UNICEF) நிறுவனம் செய்த ஆய்வொன்று தெரிவித்திருந்தது. இதையடுத்து ஸ்டெம் கல்வி தன்னார்வத் தொண்டு நிறுவனம் இதன் அடிப்படையில் புதிதாக இளம் மாணவர்களுக்காக ஒரு வாசிப்புத் திட்டம் ஒன்றை ஆரம்பித்திருக்கிறது.

 இது குறித்து ஸ்டெ ம் கல்வி தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் இயக்குனர் கலாநிதி குமாரவேலு கணேசன் பின்வருமாறு குறிப்பிட்டார்.

"அண்மையில் யூனிசேப் நிறுவனத்தால் இலங்கையில் நடாத்தப்பட்ட 3ஆம் வகுப்பு மாணவர்களின் வாசிப்புத்திறன் பற்றிய ஒரு ஆய்வில் தமிழ் பிரதேசங்கள், முக்கியமாக வடமாகாணம், மிகவும் பி ன்தங்கி ய நிலையில் இருந்ததை நாம் எல்லோரும் அவதானித்தோம். வடமாகாணத்தில் 16% ஆன 3ம் வகுப்பு மாணவர்களும், கிழக்கு மாகாணத்தில் 25% ஆன 3ம் வகுப்பு மாணவர்களுமே அவர்களின் வயதுக்கேற்ற வாசிப்புத்திறனைக் கொண்டுள்ளதாக இவ்வறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. 3ம் வகுப்பு தமிழ் மாணவர்களின் வயதிற்கேற்ற வாசிப்புத்திறன் வடக்கு கிழக்குக்கு வெளியே தமிழர்கள் அதிகம் வாழும் மத்திய மாகாணத்தில் 11% ஆகவும், தென் மாகாணத்தில் 5% ஆகவும், ஊவா மாகாணத்தில் 12%ஆகவும், சப்பிரகமுவா மாகாணத்தில் 19% ஆகவும் காணப்படுகின்றது. மேல் மாகாணத்தில் கூட சிங்கள மாணவர்களின் வாசிப்புத்திறன் 52% ஆகக்காணப்படும்போது தமிழ் மாணவர்களின் வாசிப்புத்திறன் 30% ஆகவே காணப்படுகின்றது. இக்குறைபாட்டை கூடிய விரைவில்  நிவர்த்தி செய்யாவிடில் எமது இளம் சமுதாயம்  திறமையாக  வாசிக்க  முடியாத ஒரு  எதிர்கால சந்ததியை  உருவாக்கி விடும்.

மேலும் படிக்க ...

Stem-Kalvi நிறுவனத்தின் "சிறுவர்களுக்கான 1000 புத்தகங்களை உருவாக்கும் திட்டம்'. - தகவல்: ஶ்ரீரஞ்சனி -

விவரங்கள்
- தகவல்: ஶ்ரீரஞ்சனி -
நிகழ்வுகள்
24 ஆகஸ்ட் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

நூலை வாசிக்க

சிறுவர்களுக்கான 1000 புத்தகங்களை உருவாக்கும் இலக்குடன்  Stem-Kalvi செயற்பட்டு வருகிறது. நீங்களும் இந்தத் திட்டத்தில் இணைந்துகொள்ளலாம். தொடர்புகொள்வதற்கு: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். இந்தப் புத்தகங்கள் இலவசமானவை, இவற்றை stemkalvi.org/books என்ற வலைத்தளத்தில் பார்வையிடலாம்.  உங்களுக்குத் தெரிந்த சிறுவர்களுடன் சேர்ந்து வாசிக்கலாம். பின்னூட்டமிடலாம்."

மேலும் படிக்க ...

சந்திராயன் 3 இன் வெற்றி மானுட குலத்தின் வெற்றி! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
அறிவியல்
23 ஆகஸ்ட் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

சந்திரயான் - 3 வெற்றிகரமாகச் சந்திரனின் தென் துருவத்தில்  இறங்கியதன் மூலம் அப்பகுதியில் இறங்கிய முதலாவது நாடு என்னும் பெருமையினை இந்தியா பெற்றுள்ளது. இது இந்தியாவின்  இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான 'இசுரோ'வுக்குக் கிடைத்த வெற்றி மட்டுமல்ல. இந்தியாவுக்குக் கிடைத்த வெற்றி மட்டுமல்ல. மானுட குலத்துக்கே கிடைத்த வெற்றி. வாழ்த்துகள்.

மேலும் படிக்க ...

ஜெயிலர் திரைப்படமும் , நியாயப்படுத்த முடியாத வன்முறையும்!

விவரங்கள்
- ஊர்க்குருவி -
கலை
22 ஆகஸ்ட் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்
ஜெயிலர் திரைப்படத்தின் வசூல் கண்டு எல்லோரும் பிரமித்துக்கிடக்கின்றார்கள். தமிழகத்து மக்கள் எல்லோரும் 'தலைவர்' படமென்று குடும்பம் குடும்பமாகச் செல்கின்றார்களாம்.எனக்கு இம்மக்களின் உளவியலைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை.
 
ஜெயிலர் படத்தில் தேவையற்ற விதத்தில் வன்முறைக் காட்சிகள் அமைந்துள்ளன. உதாரணத்துக்கு ஒன்று. திரைப்படத்தின் ஆரம்பத்தில் ரஜனிகாந் தன் மகனைக்கொன்று விட்டதாகக் கருதி மூவரை கொலை செய்து விடுகின்றார். ஒருவரைக் கொன்று சாக்கில் தூக்கி வந்து யோகிபாபுவுடன் சேர்ந்து பாலமொன்றிலிருந்து தூக்கி எறிந்து விட்டு இயல்பாக, ஏதோ வெற்றிகரமான காரியத்தைச் செய்து விட்டதைப்போல் செல்கின்றார்கள்.
 
பின்னர் இறுதியில் அதே ரஜனிகாந்த் உயிரோடிருக்கும் தன் மகனை அவனது குற்றங்களுக்காகப் பொலிசில் சரண்டையச் சொல்கின்றார். அவன் மறுக்கின்றான். அவருக்கெதிராகத் திரும்புகின்றான். விளைவு அவனையும் போட்டுத் தள்ளுகின்றார்.  ஏற்கனவே அவன் இறந்து விட்டதாகக் கருதி மூவரைப் போட்டுத்தள்ளிய கொலைக்குற்றவாளி, தன் உயிரைக் காப்பதற்காகத் தன் மகனையே போட்டுத்தள்ளுகின்றார். தலைவரின் இரசிகர்கள் சொல்கின்றார்கள் 'படத்தின் முடிவு சுப்பர். எதிர்பார்க்கவே முடியாது. சூப்பர்' இது எப்படி இருக்கு?
மேலும் படிக்க ...

சு.சமுத்திரத்தின் நெருப்புத் தடயங்கள் புதினம் காட்டும் சமுதாயமும் அதன் பின்புலமும் - முனைவர் கோ.வெங்கடகிருஷ்ணன், உதவிப்பேராசிரியர். தமிழ்த்துறை, இசுலாமியாக் கல்லூரி (தன்னாட்சி), வாணியம்பாடி -635 752 -

விவரங்கள்
- முனைவர் கோ.வெங்கடகிருஷ்ணன், உதவிப்பேராசிரியர். தமிழ்த்துறை, இசுலாமியாக் கல்லூரி (தன்னாட்சி), வாணியம்பாடி -635 752 -
ஆய்வு
22 ஆகஸ்ட் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

முன்னுரை

புதினமோ, கதையோ, சிறுகதையோ எதுவாயினும் அது, தான் தோன்றிய காலத்தில் வாழ்ந்த சமுதாயத்தைப் பற்றியதாக இருக்கும். ‘நெருப்புத் தடயங்கள்’ என்றும் புதினங் காட்டுஞ் சமுதாயம் யாது என்பதையும் அதன் பின்புலம் யாது என்பதையும் ஆராய்வதே இவ்வியலின் நோக்கம்.

இலக்கியமும் சமுதாயமும்

இலக்கியங்கள் யாவும் சமுதாயத்தில் நடந்த அல்லது நடக்கின்ற நிகழ்ச்சிகளைச் சுவைபடக் கூறுவனவாகும். சமுதாயத்தின் ஒரு கால கட்டத்தில் நிகழ்ந்த அல்லது நிகழுகின்ற நிகழ்ச்சிகளைக் காட்டும் ஒரு சமுதாயப் படங்காட்டும் கருவி என்று கூடச் சொல்லலாம்.

“மனிதர்கள் வாழ்க்கையில் கண்டவை, அவர்கள் கண்டு அனுபவித்தவை, உடனே கவர்ச்சி ஊட்டுபவை, நிலையாக நின்று கவர்ச்சி ஊட்டுபவை எவையோ, அவைகளைப் பற்றிச் சிந்தித்தவை, சிந்தி;த்து உணர்ந்தவை இவைகளைப் பற்றி அறிவிப்பதே இலக்கியமாகும்”1 என்னும் ஹட்சனின் கூற்று ஈண்டு நினைக்கத்தக்கது.

மனிதன் சமுதாயத்தில் கண்டதையும், அனுபவித்ததையும் வைத்துக் கொண்டே இலக்கியங்கள் படைக்கிறான். ஆகவே, மனிதனையும், சமுதாயத்தையும் அறிய இலக்கியம் நமக்கு உதவுகின்றது. காலத்திற்கேற்றவாறு சமுதாயமும் இலக்கியமும் மாறுகின்றன. சமுதாயமும் இலக்கியத்துள் பொதிந்து வைக்கப்பட்டிருக்கும். எனவே, “இலக்கியம் ஒரு சமுதாய நிலையம்”2 என்பார் கூற்று சாலப் பொருந்துவதேயாகும்.

மேலும் படிக்க ...

eKuruvi Steps 2023!

விவரங்கள்
- ekuruvi -
நிகழ்வுகள்
20 ஆகஸ்ட் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- அறிவித்தலைத் தெளிவாகப் பார்க்க படத்தை ஒரு தடவை அழுத்தவும். -

மேலும் படிக்க ...

வேந்தனார் இளஞ்சேய் கவிதைகள் மூன்று!

விவரங்கள்
- வேந்தனார் இளஞ்சேய் -
வேந்தனார் இளஞ்சேய்
20 ஆகஸ்ட் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஓடியே ஒளிவதைத் தவிர்ப்போமே

தவறைச் சுட்டிக் காட்டிட வேண்டுமே.
தப்பைத் தட்டிக் கேட்டிட வேண்டுமே.
இவற்றை செய்யாது இருப்போரே
இவ்வுலகில் அதிகம் பேராவார்.

அறம் பிழைக்குது நாளுமிங்கே.
அதை தடுத்திட வருவாரில்லை.
மறம் கொண்டே இயங்கிடும்
மனிதர் இன்றெம்மிடை இல்லையே.

வீட்டினுள் வீரம்பேசிடுவர் பலர்.
வெளியில் அநீதி கண்டு ஒதுங்கிடுவர்.
நாட்டினில் இவர்போல் பலர் உளதால்
நாளும்பல தப்புகள் நடக்குதுவிங்கு.

அடுத்தவர்க்கு நடக்கும் அநீதி
அதைக் கண்டும்காணாது செல்வர்.
அடுத்தது தமக்கும் நடக்கு மெனவிவர்
அறியாது இருப்பதே கொடுமையடா.

வருமுன் காப்பது முறமையன்றோ.
வந்தபின்அழுதுதானென்ன பயன்?
ஒருமுறை சிந்தித்துப் பார்ப்போமே.
ஓடியே ஒளிவதைத் தவிர்ப்போமே.

மேலும் படிக்க ...

மலையகத் தமிழ் மக்கள் இந்திய வம்சாவழித் தமிழர் என்ற அடையாளத்தை மறுப்பதற்கான காரணிகள்! - சடகோபன் ராமையா -

விவரங்கள்
- சடகோபன் ராமையா -
அரசியல்
19 ஆகஸ்ட் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மலையக தமிழ் மக்கள் தம்மை இந்தியர்கள் என்று அழைத்துக் கொண்டதால்......

(   அ )   1948ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி  அரசாங்கம் பிரஜா உரிமை பறிப்பு சட்டம் ஒன்றை கொண்டுவந்து பிரஜா உரிமையையும் வாக்கு உரிமையையும் பறித்து அவர்களை நாடற்றவர் ஆக்கி அவர்கள் அனைவரும் இந்தியாவுக்கே போய்விடவேண்டும் என்று கோஷமிட்டார்கள். இந்திய வம்சாவழி மக்கள் இடதுசாரிகளுடன் சேர்ந்து இந்த நாட்டின் அரசாட்சியை கைப்பற்றி விட கூடும் என்று அச்சம் அப்போது எழுந்தது.

   (  ஆ  )  1964ஆம் ஆண்டு சிறிமா சாஸ்திரி ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தி இந்த மக்களின் பத்து பேரில் 7 பேர் இந்தியாவுக்கு  போய்விடவேண்டும் என்று ஒப்பந்தம் செய்து ஏழு இலட்சம் பேரை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்தார்கள்.

     (  இ  )    1945ஆம் ஆண்டு இரண்டாம் உலக மகா யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த தருணத்தில் கொழும்பு துறைமுகத்தின் மீது குண்டு வீசப்பட்ட போது கொழும்பு புறக்கோட்டை தமிழ் வர்த்தகர்கள் அனைவரும் தமது கடைகளை மூடிவிட்டு பாதுகாப்புக்காக இந்தியா சென்றுவிட்டனர் . இதனால் நாட்டில் உணவுப் பஞ்சம் ஏற்பட்டது.  " இவர்கள் இவ்விதம் நெருக்கடியான நேரத்தில் நாட்டை விட்டு ஓடியவர்கள் , நாட்டுப் பற்று அற்றவர்கள் என்றும், அவர்களை இந்தியாவுக்கு அனுப்பி விடவேண்டும் என்றும் " அன்றைய காலகட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினரும் நிதி அமைச்சராக இருந்தவருமான ஜே. ஆர். ஜெயவர்த்தன பாராளுமன்றில் உரையாற்றியமை பாராளுமன்ற பதிவு புத்தகத்தில் பதிவாகியுள்ளது.

மேலும் படிக்க ...

கடல் நீலம் - கன்பரா யோகன் -

விவரங்கள்
- கன்பரா யோகன் -
சிறுகதை
19 ஆகஸ்ட் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

                   - ஓவியம் - செயற்கை அறிவு (AI) -

அன்று காலையில் புறப்படும்போது சூரியன் வரவில்லை. என்றாலும் மழை வரும் என்று காலநிலை அறிக்கையில் இருக்கவில்லை. ஆனாலும் வழமையான அதி எச்சரிக்கையுடன் குடையைக் கொண்டு போங்கள் என்று மனைவி தனது மடிக்கக் கூடிய கடல் நீல நிறக் குடையைத் தந்து விட்டாள். நான் மறுத்தும்  கேட்கவில்லை. இப்போதே நீங்கள் ஊகித்திருப்பீர்கள் நான் குடையை மறந்து விட்டு வரப்போகிறேன் என்று.  உண்மைதான். எனவே புதிய திருப்பங்களிலாத  இந்தக் கதையை இப்போதே மூடி வைத்து விட்டாலும் உங்களுக்கு  நேரம் மிச்சம்தான். இலகுவாக மறந்து விட்டு விடக்கூடிய அல்லது  தொலைத்து விடக்கூடிய பொருட்கள்  என்று அகில உலகத்துக்கும் ஒரு கருத்துக்  கணிப்பு நடத்தினால் அதில் முதல் இடத்தில் இருக்கக்கூடியது குடைதான் என்று நினைக்கத் தோன்றுகிறது.  மேகம் மூடிக் கொண்டிருக்க மழை என்று கொண்டு போவோம். பிறகு சூரியன் சிரித்துக் கொண்டே வரும். அன்றைக்கு பஸ் தரிப்பிடத்திற்கு  நடந்த அந்த பதினைந்து நிமிடங்களில் ஒரு துளிதானும் மேலிருந்து விழவில்லை. பிறகு வெய்யில் வந்தாலும் அதுக்கு கொண்டு போன குடையைப் பிடிக்கவும் முடியாது. அதுவும் இந்தக்  குளிர் தேசத்தில் வெயிலை ஆனந்தமாகத் தோலில் அள்ளிக் கொள்ள நினைக்கும் எவரும் வெயிலுக்கு குடை பிடிக்கும் யாரையும் பைத்தியங்கள் என்று எண்ணி விடலாமல்லவா?     

அன்று மாலை வேலை முடிந்து நகரத்தில் பஸ் ஏறியபோது கிட்டத்தட்ட ஆசனங்கள் எல்லாம் நிரம்பியிருந்தன. கொண்டு போயிருந்த நாவலொன்றை காலையிலேயே பஸ்ஸில் யன்னல் வழி வந்த நல்ல காலைச் சூரிய வெளிச்சத்தில் சர சரவென்று பல பக்கங்களை வாசித்து விட்டிருந்தேன்.  இப்போது மிகுதியை இந்த மங்கலான சாயங்கால வெளிச்சத்தில் வாசிப்பது அவ்வளவு நல்லதாகப் படவில்லை. கண் பார்வையிலும் சில நாட்களாகப் பிரச்சினை ஒன்று ஏற்பட்டு சிறிய சிகிச்சையும் செய்திருந்ததுதான் காரணம்.   

மேலும் படிக்க ...

சிறுகதை: மம்மியுடன் சில சொற்கள் - எட்கர் ஆலன்போ | தமிழில் : முனைவர் இர.மணிமேகலை, இணைப்பேராசிரியர்& தமிழ்த்துறைத்தலைவர், பூசாகோஅர கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி., பீளமேடு, கோயம்புத்தூர், தமிழகம், இந்தியா. -

விவரங்கள்
- எட்கர் ஆலன்போ | தமிழில் : முனைவர் இர.மணிமேகலை, இணைப்பேராசிரியர்& தமிழ்த்துறைத்தலைவர், பூசாகோஅர கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி., பீளமேடு, கோயம்புத்தூர், தமிழகம், இந்தியா. -
சிறுகதை
19 ஆகஸ்ட் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

    எட்கர் ஆலன்போ (செயற்கை அறிவு, AI, உருவாக்கிய ஓவியம்) -

முந்தைய நாள் மாலையில் மாநாட்டுக்காகச் செய்த ஏற்பாடுகள் என் நரம்புகளுக்குச் சற்று அதிகம்தான். எனக்கு மிக மோசமாகத் தலையை வலித்தது, தூங்க வேண்டும் போல இருந்தது, மாலையில் வெளியே செல்லலாம் என்று நான் நினைத்திருந்தேன். ஆனால் முடிவை மாற்றி விட்டேன். அதற்குப் பதிலாக லேசாக இரவு உணவைச் சாப்பிட்டு விட்டுத் தூங்கப் போகலாம் என்று நினைக்கிறேன். என்னைப்போல் எளிய இரவு உணவு சாப்பிடும் எண்ணம் இல்லை என்று என் மனைவி ஒரு வேளை உங்களிடம் கூறலாம். நான் மூன்று அல்லது நான்கு ‘சீஸ் பை’ சாப்பிட்டு இருக்கலாம். அத்துடன் நிறைய மது அருந்தி இருந்தேன், ஐந்து குப்பிகள். நான் ஏற்றுக் கொள்கிறேன் அது குறைந்த அளவில்லை.

நான் இரவு உணவை உண்டு விட்டு மறுநாள் காலையில் சற்று நேரம் வரை தூங்கலாம் என்ற நம்பிக்கையுடன் உறங்கச் சென்றேன். உடனடியாகத் தூங்கி விட்டேன். ஆனால் நான் நினைத்ததைப்போல் இரவில் நன்றாகத் தூங்க முடியவில் லை. நான் தூங்கி அரை மணி நேரம் ஆகி இருக்காது, முன் கதவிலிருந்து அழைப்பு மணி சத்தமாக ஒலித்தது. யாரோ பொறுமை இல்லாமல் கதவைத் தட்டினார்கள் ஒரு நிமிடம் கழிந்திருக்கும் நான் கண்களைத் தேய்த்துக் கொண்டிருந்தேன். என் மனைவி மூக்கிற்கு நேராகக் குறிப்புச் சீட்டு ஒன்றை நீட்டினாள். மிகவும் நெருங்கிய மருத்துவ நண்பரான பானனரிடமிருந்து அந்தச் சீட்டு வந்திருந்தது. “நண்பரே என்னை சாந்தியுங்கள்’ என்று அந்தக் குறிப்பு சொன்னது. “எங்களுக்கு உதவுங்கள், எங்களுடைய அதிர்ஷ்டம் அருங்காட்சியகத்தின் இயக்குனர் இறுதியில் பதப்படுத்தப்பட்ட மம்மியைச் சோதித்தறிய எங்களை அனுமதித்திருக்கிறார். நான் சொல்வது உங்களுக்குப் புரியும் என்று நினைக்கிறேன். அதைப் பிரிக்க எனக்கு அனுமதி இருக்கிறது. சில நண்பர்கள் மட்டுமே உடனிருப்பார்கள். நீங்களும் தான், நீங்களும் சேர்க்கப்பட்டு இருக்கிறீர்கள்” என்றிருந்தது. மம்மி இப்பொழுது என் வீட்டில் இருக்கிறது. இன்று இரவு 11 மணிக்கு நாம் அதைத் திறக்கலாம் என்றும் இருந்தது.

மேலும் படிக்க ...

பாடகி ஜிக்கி நினைவாக.. - ஊர்க்குருவி -

விவரங்கள்
- ஊர்க்குருவி -
கலை
18 ஆகஸ்ட் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்
பாடகி ஜிக்கியின் நினைவு தினம் ஆகஸ்ட் 16. அவரது நினைவாக எனக்கு மிகவும் பிடித்த அவரது பாடல். 'கல்யாணப் பரிசு' திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள இப்பாடலை எழுதியவர் மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். இசை ஜிக்கியின் கணவர் ஏ.எம்.ராஜா. நடிப்பு விஜயகுமாரி.  https://www.youtube.com/watch?v=bCmYKKuPJsk

மீளுகை! - முனைவர் இர. மணிமேகலை, பூசாகோஅர கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி, கோயம்புத்தூர்- 641004 தமிழகம், இந்தியா. -

விவரங்கள்
- முனைவர் இர. மணிமேகலை, பூசாகோஅர கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி, கோயம்புத்தூர்- 641004 தமிழகம், இந்தியா. -
கவிதை
17 ஆகஸ்ட் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அப்பா உலகைப் பிரிந்த நாளதிலிருந்து
எழுதுகோல் தாளுடன் உறவாடவில்லை.
சூரியக்கதிர்கள் வெளியை மஞ்சளாக்க
நிலவின் கதிர்கள் நீலம் காட்ட
காலங்கள் கடந்தன.
குறுந்தாடிச் சகோதரனவன்
நிலவது வட்டம் தோற்கும் அழகின் முகம்
பெண் மொழி பேசுவான்.
பெண் மொழியச் சொல்வான்.
மலர் நிறை தடாகத்தில் துள்ளும் மீன்களது நீச்சலென
மொழி புனையும் பெண்ணெழுத்தைக் காதல்கொள்பவன்.

மேலும் படிக்க ...

ம.ஆச்சின் (தமிழ்நாடு) கவிதைகள் நான்கு!

விவரங்கள்
- ம.ஆச்சின் (தமிழ்நாடு) -
கவிதை
17 ஆகஸ்ட் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 

1.

சமூக நீதிக்  காவலர் கலைஞர்!

திருக்குவளையில் பிறந்தவரே,
திருக்குறளை மீட்டவரே!
பதினான்கு வயதில்  அரசியலில்
புகுந்தவரே. செயற்
பட்டவரே!
திராவிடத்தின் அணையா  விளக்கே!
தமிழரின்  கலங்கரை விளக்கே!
கலைஞருக்குப் பிடித்த கலைஞர்!
காளையரைக், கன்னியரைக்
குழந்தைகளைக் கவர்ந்த கலைஞர்!
கலைஞரின் பேனா,
காகிதத்தில் அலைபாடும்
தானா!

மேலும் படிக்க ...

பயணியின் பார்வையில் – 01 கௌதம புத்தர் எங்கும் இருப்பார் - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
16 ஆகஸ்ட் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

பாசமலர், பாவமன்னிப்பு, பாலும் பழமும், பார்த்தால் பசி தீரும், பாதுகாப்பு முதலான திரைப்படங்களை இயக்கிய பிரபல இந்திய நெறியாளர் ஏ. பிம்சிங் அவர்கட்கு புத்தர் மீது பேரபிமானம். அதனால், தனது திரைப்படங்களில் புத்தர் சிலையை அடிக்கடி காண்பிப்பார். எம்.ஜி. ஆர் . இரட்டை வேடத்தில் நடித்த குடியிருந்தகோயில்  ( 1968 ) இலங்கையில் வெளியானது. இத்திரைப்படத்திலும்  புத்தர் சிலை வருகிறது.  ஒரு எம்.ஜி.ஆர். படுகாயங்களுடன் ஒரு வீட்டினுள்ளே நுழைந்து பெருங்குரல் எடுத்து ஒரு ஷோகேஸில் ஓங்கித் தட்டுவார். அப்போது அதிலிருந்த சிறிய புத்தர் சிலை ஆட்டம் காணும். அக்காலப்பகுதியில் அந்தக்காட்சியை நீக்கவேண்டும் என்று இலங்கை திரைப்பட தணிக்கை அதிகாரிகள் சொன்னதாக ஒரு தகவலும் இருக்கிறது. சமகாலத்தில் புத்தர் இலங்கையில் பேசுபொருளாகிவிட்டார்.  

மேலும் படிக்க ...

வ.ந. கிரிதரனின் 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' ரசனைக் குறிப்பு! - ரஞ்ஜனி சுப்ரமணியம் -

விவரங்கள்
- ரஞ்ஜனி சுப்ரமணியம் -
ரஞ்ஜனி சுப்ரமணியம்
15 ஆகஸ்ட் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இயற்கையின் பேரழகில் தன்னை இழக்கும் ஒரு கலைஞன் சமகாலத்தில் அறிவுஜீவியாக பேரண்ட இரகசியங்களோடு சார்பியல் பற்றியும் கவி படைக்கையில் நிஜமாகவே ஆச்சரியத்தில் உறையுமொரு வாசகியின் வியப்பு மிகுந்த ரசனைக் குறிப்பிது. நவீன இயற்பியலின் தந்தையான விஞ்ஞானி ஐன்ஸ்டீனின் நனவுலக மாணவனாக காலவெளி, மானுட இருப்பு, காலம் ,நேரம், பரிமாணம் என அறிவுணர்வின் தேடலுடன் அலையும் இக்கவி, காணும் இடமெங்கும் கண்ணம்மாவுடன் கதை பேசும் மகாகவியின் கனவுலக ரசிகருமாவார்.

 இக் கவிஞரை, 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' என்னும் கவிதைத் தொகுதியூடாக முறையாக இனம் கண்ட வாசகர் எந்த விதத்திலும் வியப்படையத் தேவையில்லை. வ.ந.கிரிதரன் அவர்களின் இத்தேடல் உணர்வையும், ஏக்கத்தையும் பிரபஞ்சத்தின் மேல் கொண்ட பிரியத்தையும் அவரது படைப்புகளில் அடிக்கடி காணக் கூடியதாக இருக்கும்.

இக்கவிதைத் தொகுப்பினை வாசிப்பதற்கு முன் இயற்கை பற்றியும் நவீன இயற்பியல், சார்பியல், அண்டம், குவாண்டம், ஒளியாண்டு பற்றிய எளிய அறிதலையேனும் பெற்றுக் கொண்டால் இப்படைப்பினை வியந்து நோக்கலாம். பிரமிப்பை அடையலாம். இல்லாவிடில் 'நகரத்து மனிதனின் புலம்பலாகவே ' அமைய நேரிடலாம்.

மேலும் படிக்க ...

வடிவேலுவின் மற்றும் ஒரு பரிமாணம் மாமன்னன் ! பயணத்தின் வழியே ஒரு பார்வை! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
15 ஆகஸ்ட் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

தமிழ்த்திரையுலகில் நகைச்சுவை நடிகராகவும், சமூக வலைத்தளங்களில் மீம்ஸ் நாயகனாகவும் அதிக கவனத்திற்குள்ளான வடிவேலு நடித்த மாமன்னன் படத்தை எனது தொடர் வெளிநாட்டு பயணங்களுக்கிடையே பார்த்தேன்.

கடந்த ஜூன் மாதம் ரெட்ஜெயன்ட் மூவிஸின் தயாரிப்பில், மாரி செல்வராஜின் இயக்கத்தில் ஏ. ஆர். ரகுமானின் இசையில் வடிவேலு ( மாமன்னன் ) பகத்பாஸில் ( ரத்தினவேல் ) உதயநிதி ஸ்டாலின் ( அதிவீரன் ) கீர்த்தி சுரேஷ் ( லீலா ) ஆகியோரின் நடிப்பில் வெளியாகியிருக்கும் இத்திரைப்படம், தமிழ் சமூகத்தில் சமகாலத்தில் பரவலாகப்பேசப்படுகிறது. இத்திரைப்படத்தை தடைசெய்யவேண்டும் என்ற குரலும் எழுந்திருக்கிறது. எனினும் வசூலில் சாதனையை நிகழ்த்தி வருகிறது. இதன் கதை சமகாலத்திலும் பேசுபொருளாக இருப்பதுதான் இதற்கெல்லாம் காரணம்.

ஏற்கனவே பரியேறும் பெருமாள், கர்ணன் முதலான திரைப்படங்களையும் சாதிப்பிரச்சினையை மையப்படுத்தி எடுத்திருக்கும் மாரி செல்வராஜ், மாமன்னன் திரைப்படம் மூலம் வடிவேலுவின் மற்றும் ஒரு வித்தியாசமான பரிமாணத்தை காண்பித்துள்ளார்.

மேலும் படிக்க ...

மற்ற கட்டுரைகள் ...

  1. அருட்செல்வர் நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு விருது!
  2. ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் நடத்தும் இணையவழிக் கலந்துரையாடல்: “தென்கிழக்காசியாவின் தமிழ்த் தொல்லியற் சான்றுகள்”
  3. அகிம்சையால் பாரதத் தாய் அடைந்திட்டாள் சுதந்திரத்தை ! - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா , மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர், மெல்பேண் , அவுஸ்திரேலியா -
  4. வாசிப்பு அனுபவம்: 'முருகபூபதியின் சினிமா -பார்த்ததும் கேட்டதும்'! 'தகவல்கள் நிறைந்த ஆவணம்'! - ஞா.டிலோசினி -
  5. அஞ்சலி: பன்முகத்திறமை மிக்க கலைஞர் ரேலங்கி செல்வராஜா! - ஊர்க்குருவி -
  6. பேராசிரியர் இரா முரளியின் 'சோக்கிரடீஸ் ஸ்டுடியோ' 'யு டியூப்' காணொளிகள்! - வ.ந.கி -
  7. எகிப்தின் கற்சாசனம்! - நோயல் நடேசன் -
  8. நூல் வெளியீட்டு விழா: "குவலயம் ஆளும் குடிசார் பொறியியல் " - தகவல்: அகணி சுரேஷ் -
  9. தினகரன் ஆசிரியர் கலாசூரி இ.சிவகுருநாதன் நினைவாக..... - வ.ந.கிரிதரன் -
  10. குறு நாவல் : கிராம விஜயம் - கடல்புத்திரன் -
  11. நோர்வே பயணத்தொடர் (6) : சமாதானம் மற்றும் நல்லிணக்கத்துக்காகப் பிரயாசைப்படும் நோர்வே - ஶ்ரீரஞ்சனி -
  12. மலையகத்தின் சதுரங்க ஆட்டத்தில் ஒரு புதிய திருப்பு முனை (பகுதி இரண்டு) ! - ஜோதிகுமார் -
  13. செல்வச்சந்நிதியும் சித்தர்களும் - ஒர் ஆரம்ப உசாவல் - கலாநிதி சு. குணேஸ்வரன் -
  14. கம்பராமாயணத்தில் கிரகணம் குறித்த பதிவுகள் - முனைவர். க.மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை , அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி, - (சுழல் - II), மீனம்பாக்கம், சென்னை. -
பக்கம் 42 / 104
  • முதல்
  • முந்தைய
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • அடுத்த
  • கடைசி