கனடாவில் சமீபத்தில் வெளிவந்த தமிழ் நூல்கள் - குரு அரவிந்தன் -

கனடாவில் கோடைகாலம் வந்தால் நூல் வெளியீட்டு விழாக்கள் தொடர்ந்து நடைபெறுவதுண்டு. அணிந்துரை அல்லது வாழ்த்துரை எழுதவோ அல்லது வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றவோ சில எழுத்தாளர்கள் தங்கள் புத்தகங்களைக் கொண்டு வந்து தருவதுண்டு. அப்படி என்னிடம் சமீபத்தில் கிடைத்த அந்த நூல்களை எப்படியாவது ஆவணப் படுத்திவிட வேண்டும் என்ற எண்ணம் எனக்குத் தோன்றியது. எனக்குக் கிடைத்த நூல்களை மட்டும், சர்வதேச ஆர்வலர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதாலும், மற்றும் அடுத்த தலைமுறையினருக்குப் பயன்படும் என்பதாலும் இங்கு ஆவணப்படுத்துகின்றேன்.
எழுத்தாளர் அகில் சாம்பசிவம் தொகுத்து வெளியிட்ட ‘இலக்கியவெளி’ சிறப்புமலர் 3-12-2023 ஆம் ஆண்டு ஸ்காபரோவில் வெளியிடப்பெற்றது. எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் ‘ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்’ (கவிதைத்தொகுப்பு), ‘நவீன விக்கிரமாதித்தன்’ (நாவல்), வ.ந. கிரிதரன் கட்டுரைகள் ஆகியன 19-11-2023 ஆம் ஆண்டு ஸ்காபரோவில் வெளியிடப்பெற்றது. இதே தினத்தில் கலாநிதி சண்முகம் வெற்றிவேல் எழுதிய ‘இலக்கியத்தில் உளவியல்’ ‘தமிழர் பண்பாட்டு அடையாளச் சிக்கல்கள்’ ஆகிய நூல்கள் ஸ்காபரோவில் வெளியிடப்பெற்றன.
திருமதி ஆதிலட்சுமி சிவகுமார் அவர்களின் ‘ஒற்றை வானமும் ஒரு பறவையும்’ (கவிதைத் தொகுப்பு ) ‘பொன்வண்டு’ (சிறுகதைத் தொகுப்பு) ஆகியன கனடியத் தமிழ் வானொலியால் 12-11-2023 ஆம் ஆண்டு ஸ்காபரோவில் வெளியிடப்பெற்றது. கனடா தமிழ் கவிஞர் கழகத்தின் கவிச்சரம் இதழ் 5-11-2023 ஆம் ஆண்டு ஸ்காபரோவில் வெளியிட்டு வைக்கப்பட்டது. ஒலி,ஒளி ஊடகர் பி. விக்னேஸ்வரனின் ‘நினைவு நல்லது’ நூல் அறிமுகவிழா 4-11-2023 ஆம் ஆண்டு ஸ்காபரோவில் நடைபெற்றது. எழுத்தாளர் சம்பந்தனின் ‘விழியும் துளியும்’ என்ற சிறுகதைத் தொகுப்பு 14-10-2023 ஆம் ஆண்டு ஸ்காபரோவில் வெளியிடப்பெற்றது. உரையாளர் பொன்னையா விவேகானந்தனின் ‘தமிழ்மொழிக் கல்வி,’ ‘தமிழ்ப்பண்பாடு,’ ‘நாடகங்கள்,’ ‘பெயர்வுத் தமிழ்ச்சமூகம் - இருப்பும் இடர்களும்’ ஆகிய நூல்கள் 8-10-2023 ஆம் ஆண்டு ஸ்காபரோவில் வெளியிட்டு வைக்கப்பெற்றது.

கொழும்பில் என்னை ஓர் இளைஞர் தேடி வந்தார். “கலாநிதி சபா" ஜெயராசா உங்களிடம் அனுப்பினார். இலக்கிய முன்னோடி அ.ந. கந்தசாமியைப் பற்றிய குறிப்புகளைத் தந்துதவ வேண்டும், அ.ந. கந்தசாமியைப் பற்றிய பல்கலைக்கழக ஆய்வுக்கு குறிப்புகள் தேவை என்றார். அந்தப் பல்கலைக் கழக மாணவருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தினகரன் வார மஞ்சரியில் சில வாரங்கள் தொடராக எழுதிய அறிஞர் அ.ந. கந்தசாமியைப் பற்றிய 'சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன்' என்ற கட்டுரையையும், மற்றும் அ.ந.க.வை பற்றி எழுதிய மற்றும் குறிப்புகளையும் கொடுத்து அனுப்பினேன்.
என்னை மிகவும் கவர்ந்த, பாதித்த இலக்கியவாதியென்றால் முதலில் நான் கருதுவது மகாகவி பாரதியாரைத்தான். முரண்பாடுகளற்ற மனிதர்கள் யாருளர். பாரதியிடமும் முரண்பாடுகளுள்ளனதாம். ஆனால் அவை அவரது அறிவுத் தாகமெடுத்த உள்ளத்தின் கேள்விகளின் பரிணாம வரலாற்றின் விளைவுகள். குறுகிய கால வாழ்வினுள் அவர் மானுட வாழ்வின் அனைத்து விடயங்களைப்பற்றியும் சிந்தித்தார். கேள்விகளையெழுப்பினார். அவற்றுக்குரிய விடைகளைத் தன் ஞானத்துக்கேற்ப அறிய முயற்சி செய்தார். இவற்றைத்தாம் அவரது எழுத்துகள் எமக்கு உணர்த்தி நிற்கின்றன.
நான்கு நாட்களுக்கு முன் அதிரடியாக ஒரு செய்தி மின்னஞ்சல் பெட்டிக்குள் விழுந்திருந்தது. வாசிப்பதற்கு முன்னரே படங்கள் உள்ளடக்கத்தின் பெரும்பாகத்தை வெளிப்படுத்தி விட்டன. தலைப்பு அசத்தலாக இருந்தாலும் தலைக் கதிரையில் இருந்தவரைக் கண்டதும் சப்பென்று போய்விட்டது. ஆனாலும் முயற்சிகளின் நோக்கம் நல்லதாயின் அவை ஆராயப்பட வேண்டும் என்பதில் சம்மதம் உண்டென்ற படியால் உள்ளே சென்றேன்.
பத்து மாதம் சுமந்தேன் - உன்;
தமிழ்நாடு தஞ்சாவூர் பல்கலைக் கழகத்தின் அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித்துறையில் , சிங்கப்பூர் முஸ்தபா அறக்கட்டளை நிறுவியுள்ள தமிழவேள் கோ. சாரங்கபாணி இருக்கை வாயிலாக வழங்கப்படும் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் நாடுகளைச்சேர்ந்த இலக்கியப்படைப்பாளிகளுக்கான கரிகாற்சோழன் விருதுகள் வழங்கும் விழா கடந்த 05 ஆம் திகதி நடைபெற்றது.

நான் இலக்கியம் வாசிப்பது குறைவு. கிரிதரனின் புத்தக வெளியீட்டில் வாங்கிய புத்தகங்களின் பகுதிகளை சென்ற இரவுதான் வாசிக்க முடிந்தது. எனது மனதில் எழுந்ததைப் பகிர்ந்து கொள்கிறேன்.
யோகரட்னம் அவர்களுக்கு நன்றி. - பதிவுகள்.காம் -


கருணை யோகன் என அழைக்கப்படும் பேராசிரியர் செ.யோகராஜா இன்று மதியம் காலமானார். கேன்சர் நோய் என அறிய ப்பட்டு அவர் மகரம ஆஸ்பத் திரியில் அனுமதிக்கப் பட்டார். சென்ற மாதம் நான் மட்டக் களப்பு சென்றபோது வீடு தேடி வந்து பல மணி நேரம் உரையாடிச் சென்றார். நோயாளியைப் போல தோற்றமளித்த. அவரைப் பார்த்து 'உடனடியாக வைத்தியரிடம் செல்லுங்கள்" என்று கூறினேன்.

Statement by the Prime Minister on the National Day of Remembrance and Action on Violence Against Women


சிவ ஆரூரன் சிறைக்குள்ளிருந்து இலக்கியம் படைத்தவர். தனது சிறைக்காலத்தை வாசிப்பு எழுத்து என மாற்றி நம்பிக்கையை விதைத்தவர். கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை என பல்துறைகளிலும் ஈடுபட்டு வருபவர். சமூக இயங்கியலை வெளிப்படுத்தும் பல நாவல்களைத் தந்தவர். சிறந்த நாவலுக்கான விருதுகளை மாகாண மட்டத்திலும் தேசிய மட்டத்திலும் பெற்றவர். ஜீவநதி வெளியீடாக 2022 இல் வெளிவந்த ‘ஊமை மோகம்’ என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டதாக இக்கட்டுரை அமைந்துள்ளது.


கடந்த ஜூலை மாதம் நடுப்பகுதியில் நான் இலங்கையில் நின்றபோது, கொழும்பில் பேராசிரியை சித்திரலேகா மௌனகுரு அவர்களைச் சந்தித்தேன்.
