பதிவுகள் முகப்பு

மூத்த எழுத்தாளர், பாரதி இயல் ஆய்வாளர் தொ. மு. சி. ரகுநாதன் நூற்றாண்டையொட்டி ஒரு நினைவுப்பதிவு! டிசம்பர் 31 நினைவுதினம்! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
30 டிசம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 

பெரும்பாலான எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்களை எனது எழுத்துலக பிரவேசத்தின் பின்னர்தான் நேருக்கு நேர் சந்தித்திருக்கின்றேன். இந்த சந்திப்புகளுக்கு தற்போது அரைநூற்றாண்டு காலமாகிறது. மேலதிக தகவல் நான் 1972 இல்தான் எழுத்து துறைக்குள் வந்தேன். அதற்கு முன்னர் இரண்டு தமிழக  பிரபல எழுத்தாளர்களை முதல் முதலில் எனது ஐந்து வயதிலும்,  பத்துவயதிலும்தான் பார்த்திருக்கின்றேன். அவர்கள்தான் இலக்கிய சகோதரர்கள் தொ.மு. பாஸ்கரத் தொண்டமான். தொ.மு. சிதம்பர ரகுநாதன். மூத்தவர் தமிழ்நாடு பாளையங்கோட்டையில் மாவட்ட ஆட்சித் தலைவராகவிருந்த ஐ. ஏ. எஸ். அதிகாரி. கல்கி கிருஷ்ணமூர்த்தி, மற்றும் இரசிகமணி டி. கே. சி. ஆகியோரின் நெருங்கிய நண்பர். இவரது பெயரில் திருநெல்வேலியில் ஒரு வீதியும் இருக்கிறது.  இந்த வீதியில் எமது உறவினர்கள் வசிக்கிறார்கள். அத்துடன் ஆனந்தவிகடன், கல்கி முதலான இதழ்களில் இந்திய திருத்தலங்கள் பற்றிய தொடர்களை எழுதியவர்.

இவர் இலங்கை வந்த சமயத்தில் காரைநகர் சிவன்கோயிலுக்கு ஈழத்து சிதம்பரம் என்ற பெயரையும் சூட்டினார். காங்கிரஸ் கட்சியிலிருந்த காந்தீயவாதி. இவரது தம்பிதான்  தொ.மு. சிதம்பர ரகுநாதன். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் அழைப்பில் 1956 ஆம் ஆண்டு நாடெங்கும் நடந்த பாரதி விழாக்களில் கலந்துகொண்ட எழுத்தாளர், பேச்சாளர்.  முதலில் காங்கிரஸ் தொண்டராகவிருந்தவர். பின்னர் இடதுசாரிச் சிந்தனையாளராக மாறியதுடன், சோவியத் இலக்கிய மேதை மாக்ஸிம் கோர்க்கியின் தாய் நாவலையும் தமிழுக்கு மொழிபெயர்த்தார். இதனை பெரும்பாலான முற்போக்கு எழுத்தாளர்கள் படித்துவிட்டே தங்கள் இலக்கியப் பயணத்தை தொடர்ந்திருப்பார்கள்.

மேலும் படிக்க ...

தமிழில் முதன் முதலில் மருத்துவம் போதித்த மேதையின் 200ஆவது ஆண்டு நினைவு (1822 – 2022) - நவஜோதி ஜோகரரட்னம், லண்டன். -

விவரங்கள்
- நவஜோதி ஜோகரரட்னம், லண்டன். -
நவஜோதி ஜோகரட்னம்
30 டிசம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

  

மனித சமுதாயத்திற்குத் தொண்டுசெய்யும் குணசீலர்கள் அந்த லட்சியத்துடனேயே வாழ்ந்து விடுகின்றார்கள். அவர்கள் காலத்தால் அழிந்து போவதில்லை. காலத்தின் கோரத்தால் ஏலம் போகாது என்றென்றும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். அந்த வகையில் வைத்தியர் சமுல்.பி. கிறீன் அவர்கள் மக்கள் மனதில் இன்றும் வாழ்ந்துகொண்டிருப்பவர் ஆவார்.

   அமெரிக்காவில் ‘கிறின் ஹில்’ என்னும் இடத்தில் 1822ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் பத்தாம் திகதி உவில்லியம் ஈ.கிறின் தம்பதிகளுக்குப் புத்திரனாக சமுல் பிறந்தார். தனது பதினொராவது வயதில் தாயை இழந்தார். பத்துச் சகோதரர்களுடன் பிறந்த இவர் பலவித இன்னல்களையும் சமாளித்து உடலுழைப்பால் சம்பாதிக்கப் பழகிக் கொண்டார். விடாமுயற்சியும் சிக்கன முறைகளும் அவரது அன்றாட வாழ்வில் அவரது அருமையான அனுபவங்களாகின. பதின்ம வயதில் குமுறி வரும் உணர்ச்சிகளுக்கு அணைபோட்டு ஆக்க வேலைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் வைத்தியர் கிறீன்.

   தனது பத்தொன்பதாவது வயதில் நியூயோர்க்கிலிருந்த வண. டாக்டர்; வர்கீஸ் அவர்களிடம் கடமை ஆற்றத் தொடங்கினார். சாதாரண எழுது வினைஞராகவே பணியாற்றத் தொடங்கிய சமுல் கிறீன் அவர்கள் தனது ஓய்வு நேரங்களைப் படிப்பதிலும்,  வாசிப்பதிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டேயிருந்தவர். வைத்தியத் துறையில் ஆர்வம் அதிகமாக அவரிடத்தில் மேலோங்கியிருந்தமையினால் வைத்தியக் கல்வியை மேற்கொண்டு சிறந்த வைத்தியராகத் தேர்ச்சி பெற்றுத் திகழ்ந்தார்.  

மேலும் படிக்க ...

காலத்தால் அழியாத கானம் - 'நதியே நீராழி அதையே சேர்தல் நாம் சேர்ந்தோம்' - ஊர்க்குருவி -

விவரங்கள்
- ஊர்க்குருவி -
கலை
30 டிசம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எம்ஜிஆரின் திரையுலக வெற்றிக்கு ஆரம்பத்தில் அவரும் , வி.என்.ஜானகியும் நடித்த திரைப்படங்கள் உதவின. 'மோகினி', நாம்' , 'மருத நாட்டு இளவரசி' (!950)  போன்ற படங்களில் இருவரும் இணைந்து நடித்தனர். உண்மையில் எம்ஜிஆருடன் இணைந்து தொடர்ந்து நடித்த கதாநாயகிகளில் முதற் கதாநாயகி வி.என்.ஜானகி. திரையில் இணைந்தவர்கள் பின்னர் வாழ்விலும் இணைந்தார்கள்.  

வி.என்.ஜானகியே தமிழகத்தின்  முதற் பெண் முதல்வர். கூடவே முதல்வரான முதலாவது நடிகையும் கூட. அவ்வை  சண்முகம் சாலையிருந்த  தனது வீட்டை அ.தி.மு.க.வுக்குக் கொடுத்தார். அதுவே இன்று அ.தி.மு.க.வின் தலைமை அலுவலகமாகவுள்ளது. தனது சொத்துகள் பலவற்றை கல்விக்காக வழங்கியவர் இவரென்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க ...

திருப்பூர் சக்தி விருது 2023

விவரங்கள்
- தகவல் - சுப்ரபாரதிமணியன் -
நிகழ்வுகள்
30 டிசம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

'இயற்கையை வணங்கி வாழ்ந்த சமத்துவ தமிழ்த் தொன்மை'! - இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்-லண்டன். -

விவரங்கள்
- இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்-லண்டன். -
சுற்றுச் சூழல்
29 டிசம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

'இன்றைய சுற்று சூழல் அழிவுகளுக்குக் காரணம்,இயற்கையைத் தனது சுயநல மேம்பாட்டுக்காகத் துவம்சம் செய்தழிக்கும் மனித இனத்தின் செயற்பாடுகளே' என்று பல ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.அதில் முக்கியமானவர் பிரித்தானியாவைச் சேர்ந்த திரு.டேவிட் அட்டம்பரோ. இயற்கைசார் ஆய்வாளர். இவர் உலகம் தெரிந்த பிரபலமான  சுற்றாடல் சூழ்நிலைஅறிஞராகும். இவர் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக,மனித வாழ்வக்கு இன்றியமையாத இயற்கையின சக்திகள் பற்றி பல தரப்பட்ட ஆய்வுகளைச் செய்திருக்கிறார்.

இக்கட்டுரையில் இன்றைய இயற்கை மாசுபடுதலையும், அன்றைய தமிழரின் இயற்கையை மதித்து வாழ்ந்த வாழ்வியலையும் சுருக்கமாகச் சொல்ல முற்பட்டிருக்கிறேன். இதை எழுத என்னைத் தூண்டிய பேராசியர் மா.சிதம்பரம் அவர்களுக்கும்,தமிழரின் சங்க கால இலக்கியப் பொக்கிசங்கள் பற்றிய தகவல்களைத் தந்துதவிய நண்பர்.பத்மநாப ஐயர் அவர்களுக்கும் எனது மிகவும் பணிவான நன்றி.

'இயற்கையை அழித்தால் மனித இனம் துயர்படும்'என்ற தத்துவக் கோட்பாட்டை எங்கள் தமிழர் மூவாயிரம் வருடங்களுக்கு முன்னரே தெரிந்து வைத்திருந்தனர் என்பதற்குப் பல ஆவணங்கள் உள்ளன.பிரபஞ்சத்தையும்,அதன் செயற்பாடுகளையும் மனித இன மேம்பாடு குறித்த அறிவியற் கருத்துக்களுடன் தமிழ்த் தகமை தொல்காப்பியர் மூவாயிரம் வருடங்களுக்கு முன் இயற்கையும் மனித இனமும் பற்றிய அற்புத கருத்துக்களை எங்களுக்கு எழுதிவைத்திருக்கிறார்.

,'நிலம், தீ,  நீர், ஆகாயம். வளி' போன்ற ஐம்பெரும் சக்திகளும் இந்தப் பிரபஞ்சத்தை இயக்குகின்றன எனபதை 'நிலம் தீ நீர் வளி விசும்பெரு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம்'(பொருள்635) என்பதைப் படித்தாற் புரிந்து கொள்ளலாம். இந்த மாபெரு சக்திகளில்; ஒன்று மாசுபட்டாலும் மிகுதியாகவிருக்கும் அனைத்தும் செயலிழக்கும் என்பது யதார்த்தம். அதுதான் சூழ்நிலை மாசுபடுதலின் அடிப்படைக் கருத்து

சுற்றாடல் சூழ்நிலையின் பாதிப்பு என்னெவென்று மனித இனத்தையே அழித்தொழிக்கும் என்பதைத் தற்போது நடந்துகொண்டிருக்கும் கோவிட்-19 கொடுமையின் தாக்கம் சொல்கிறது. மனிதன் இயற்கையின் ஒரு படைப்பே அவன் தன்னைச் சுற்றியிருக்கும்~'சூழலையழித்தால்' என்ன பேராழிவுகள் வரும் என்பதை இன்று எங்கள் கண்களுக்கு முன்னால் தொடரும், பேரழிவுகளிகளான,பெருவெள்ளம், சூறாவளி. பூமியதிர்ச்சி, நிலச்சரிவு, கொரணா கொடிய வியாதி என்று பல அழிவுகளைப் புரிதலால் தெளிவாக உணரலாம்.  இயற்கைசார்ந்து வாழ்ந்த தமிழர்கள்,இந்தியாவின் நாகரீக வளர்ச்சியில் முன்னணியிலிருந்தவர்கள். இயற்கையின் மாபெரு சக்திகளையுணர்ந்து இயற்கையுடன் வாழப் பழகியவர்கள். தங்கள் வணக்க முறை தொடங்கி, வாழ்வியலின் அங்கங்களான கலை. தொழில்,பொருளாதாரம் அத்தனையையும் இயற்கையுடன் பிணைத்தவர்கள்.  தாங்கள் வாழ்ந்த பூமியை ஐந்திணையாகப் பிரித்து அதனுள் மனித அகத்தையும் புறத்தையும் கண்டவர்கள். குறிஞ்சி (மலைப்பகுதி,பாதுகாப்பு,), முல்லை(காடு,தேடல், மிருகங்களுடான உறவுகள்), மருதம் (ஆற்றுப் படுக்கைகள், வயல்வெளி, குடியிருப்பு, மொழி, கலை வளர்ச்சி, நாகரிக வளர்ச்சி) நெய்தல் (கடற்கரை சார்ந்த வாழ்வு நிலை, கடல் கடந்த வணிகம்), பாலை (மக்களற்ற வரண்ட பிரதேசம்) எனப் பிரித்து இந்த அகண்ட உலகத்தின் பல பரிமாணங்களைக் காட்டியவர்கள்.

தொழிற் நுட்ப விருத்தியற்ற கால கட்டமான 1850ம் ஆண்டில் உலக வெப்பநிலை பூச்சியமாக இருந்தது.  2020ல் ஒரு பாகை சென்டிகிறேட்டைத் தொடடிருக்கிறது.வெப்பநிலை காரணமாகக் கடல மட்டம் உயர்கிறது.இது தொடர்வதால் எதிர்காலத்தில் தமிழ்நாட்டின் கடற்பகுதி சார்ந்த குடியிருப்புகளைக் கடல் கொண்டு விடும்.உதாரணமாக வேளைச்சேரி மணிப்பாக்கம் போன்ற பகுதிகளின் நிலை மிக ஆபத்தாகவிருக்கும்.அத்துடன் தமிழ் நாட்டில் மழைவீழ்ச்சி 10 மடங்கு அதிகரிக்கும் அந்த மழை இன்றைய நிலையைவிட 60 விகிதம் கூடிய மழைநீரால் வெள்ளப் பெருக்குகள் வரும்.கிட்டத் தட்ட 38 தமிழ் மானிலங்கள் பாதிக்கப்படும்.

மேலும் படிக்க ...

நெடுங்கதை: ஓக்காடு --- முனைவர் கோ.சுனில்ஜோகி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி, கோவை. - -

விவரங்கள்
- முனைவர் கோ.சுனில்ஜோகி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி, கோவை. -
சிறுகதை
28 டிசம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

1 

அன்றும் அவ்வாறே நடந்தது. மிச்சிக்கு இது பழகிப்போயிருந்தது. “அவ்வே.. அவ்வே.. அய்யோ… அய்யோ…” என்று ‘மேல்கேரியில்’ எழுந்த பேரிறைச்சல் இன்று சற்று மிகுந்திருந்தது. அது அப்படித்தான். முதலில் மிகுந்திருப்பதாகத் தோன்றி, போக போக அதன் வீரியம் குறைந்துகொண்டே போகும். பெண்பூமிக்கு ஊற்றிய நீரைப்போல.

கார்த்திகை மாதத்துக் குளிர் இறங்கிக் கொண்டிருந்தது. முகத்தை இறுக்கி மூடியிருந்த ஆங்காங்கே ஒட்டுப்போட்ட கம்பளியைக் கழுத்துவரை இறக்கினாள் அவள். மெல்ல மெல்ல மங்கிப்போயிருந்த அந்த இறைச்சலைக் காதுகொடுத்து ஓர்ந்தாள்.


    “ஏய்… வெளியே வாடா… பொட்டெப் பயலே…
கொறெ பிரசவத்தலே பொறந்தவனே… ஆம்புளெயா இருந்தா வெளியேவாடா பாக்கலாம்…
    பொட்டெ மாதிரி வீட்டுக்குள்ளே புகுந்து கதவ சாத்திருக்கே…
    டேய் மைரா… வெளியே வாடா…
    நீ இப்போ வரலே…”

    “அய்யோ… அய்யோ.. ஏய் கெல்லண்ணா அவர புடிங்க…
    மாதண்ணா, உனக்கு வேறெ பொலப்பே இல்லையா?
    உங்கக் குடும்பத் தகராற காலையிலே வச்சிக்கோங்க…
    இந்த நடு இராத்திரியிலே… அதுவு அமாவாசே நாள்ளே…
    உங்களுக்கெல்லா மனசாட்சியே இல்லையா…
    கொழந்தங்க தூங்கறாங்க… தூக்கத்திலே அஞ்சி ஏங்குறாங்க வேறே…
    கையிலே இவ்ளோ பெரிய கல்ல எடுத்துகிட்டு.. ஆ.. ஆ..
    தப்பித்தவறி எங்கமேலே பட்டா என்ன ஆகுறது…
    ஏய் மாதண்ணா.. இங்கே பாரு…
    மொதல இங்கிருந்து கௌம்பு…
    அம்மாவாசே ஆனாலே உங்க பஜனெய தாங்க முடியலே…”

வழக்கம்போல தொண்டைத்தண்ணிர் காய கத்தினாள் குனிக்கி.

மேலும் படிக்க ...

சிறுகதை: ஆலகாலம் – கே.எஸ்.சுதாகர் -

விவரங்கள்
– கே.எஸ்.சுதாகர் -
சிறுகதை
28 டிசம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

1.

அதிகாலை கொஞ்சம் புகாரும் குளிரும் இருந்தது. சூரியகுமார் அவசர அவசரமாக ஆடைகளை அணிந்துகொண்டான். பிக்கறிங்ஸ் வீதியை நோக்கி விரைந்த அவன், இடது புறம் திரும்பிக் கொண்டான். தூரத்தே சாப்பாட்டுக் கடைக்கு முன்னால் நாலைந்துபேர்கள் நிற்பது தெரிகின்றது. ஏழைகளுக்கான பெட்டிக்கடை தான். பெட்டிக்கடைக்குள் ஒரு நீட்டு மேசையும், தோதாக அதன் இருபுறங்களிலும் வாங்குகளும் இருக்கின்றன. ஒரு ஓரமாக அமர்ந்து கொண்டான். வழமையான தேங்காய்ப்பூ போட்ட வட்ட வடிவ ரொட்டி. விரலளவு தடிப்பத்தில் உள்ளங்கையால் மூடக்கூடிய அளவு. தொட்டுக்க ஆவி பறக்கும் கடலைக்கறி.

கடைக்குள்ளிருந்து வந்த ஒருவன், சூரியகுமாரின் காதிற்குக் கிட்டக் குனிந்து “பாபத் கறி” வேண்டுமா என்று சிங்களத்தில் கேட்டான். சூரியகுமார் தலையை இடமும் வலதுமாக வெறுப்பாக ஆட்டிவிட்டு, “ஒரு பிளேன் ரீ போதும்,” என்றான். குடல் கறி என்றவுடன் அவனது வயிறு குமட்டிக்கொண்டு வந்தது. இது காலை உணவு.

மீண்டும் பத்து நிமிட நடையில், துறைமுகம் வந்து விடும். கப்பல் கட்டுமானப் பணியிடத்தில் பொறியியலாளராக வேலை. வெண்ணிற ஆடைக்குள் புகுந்து கொள்வான். உப்புக் கரிக்கும் காற்றின் சுவையை நுகர்ந்தவாறே வேலைக்குள் மூழ்கிவிடுவான். சிறிய திருத்து வேலைகளுக்காகவும், வர்ணம் அடிப்பதற்காகவும் `டெக்’கிற்குள் பெரிதும் சிறிதுமாக சில கப்பல்கள் நிக்கின்றன. புதிதாகக் கட்டி முடிக்கப்பட்ட கப்பலொன்று வெள்ளோட்டத்திற்காகக் காத்து நிற்கின்றது. அதன் இறுதிக்கட்ட சோதனை முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. மதியம் வேலையிடத்தில் இலவச உணவு. தினமும் ஒரே வகைச் சாப்பாடு. இரண்டு சைவக் கறிகளுடன் மீன் அல்லது முட்டையுடன் சோறு. எப்போதாவது இறைச்சித்துண்டும் இருக்கும்.

மேலும் படிக்க ...

தொடர் நாவல் - நவீன விக்கிரமாதித்தன் (17) நடுக்காட்டில் வழிதப்பிய நாயகன்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
நாவல்
25 டிசம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அத்தியாயம்  (17) நடுக்காட்டில் வழிதப்பிய நாயகன்!

"கண்ணம்மா, எதற்காக இங்கு வந்து பிறந்தோம்?"   திடீரென  நான் கேட்கவே   மனோரஞ்சிதம் சிறிது திடுக்கிட்டுப் போனாள்.

"என்ன கண்ணா? உனக்கு என்ன நடந்தது? ஏனிந்தக் கேள்வி? அதுவும் இந்தச் சமயத்தில்" என்று கேட்கவும் செய்தாள்.  அத்துடன் என் தோள்களைப் பிடித்துக் குலுக்கினாள்.

"கண்ணம்மா, எனக்கு அடிக்கடி வரும் கேள்விதான். இதிலொன்றும் ஆச்சரியப்படுவதிற்கில்லையே. நீ இவ்விதம் திடுக்கிடுவதுதான் வியப்பைத் தருகிறதடீ"

"கண்ணா, சில விடயங்களில் கேள்வி கேட்கக் கூடாது. இருப்பின் இரகசியமும் அவற்றிலொன்று"

'கண்ணம்மா, எனக்கு அதில் உடன்பாடில்லை. கேள்வி கேட்பது பகுத்தறிவு படைத்த மனிதரின் பிரத்தியேக உரிமை. எப்பொழுதும் பாவிக்க வேண்டிய உரிமை. இருப்பிலொரு தெளிவினை அடைதற்கு இவ்விதமான கேள்விகள் அவசியமில்லையா கண்ணம்மா?"

"கண்ணா, என்னைப்பொறுத்தவரையில் அவசியமில்லை. ஏன் இவ்விதம் நம் இருப்பு இருக்கிறது? எதற்காக வந்து பிறந்தோம்? இருப்பில் அர்த்தமுண்டா? இவை  போன்றா கேள்விகளுக்கு ஒருபோதும் சரியான விடைகள் கிடைக்கப்போவதில்லை. ஏனென்றால் நாம் படைக்கப்பட்டுள்ள , உருவான விதம் அப்படியிருக்கிறது கண்ணா?  எப்படி எறும்பொன்றால் எம்மைப் புரிந்துகொள்ள முடியாதோ அதுபோல்தான் எம் நிலையும்.எமக்கு மேலான நிலையிலுள்ள பலவற்றைப் புரிந்துகொள்ளும்  நிலையில் நாமில்லை. கிடைத்ததை ஏற்றுக்கொண்டு, இன்று புதிதாய்ப் பிறந்தோமென்று எண்ணி, நடந்ததைப்பற்றிச் சிந்தனையை நீக்கி , இருப்பை எதிர்கொள்வதுதான் நல்லதென்பேன்  கண்ணா."

மேலும் படிக்க ...

சமூக, அரசியல் செயற்பாட்டாளர் மகாதேவன் ஜெயக்குமரனுடனோர் உரையாடல்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- மகாதேவன் ஜெயக்குமரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
25 டிசம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அண்மையில் மறைந்த சமூக, அரசியல் செயற்பாட்டாளரும் , நண்பருமான எழுத்தாளர் மகாதேவன் ஜெயக்குமரனுடன் (ஜெயன் தேவா) ஆகஸ்ட் இறுதியிலும், செப்டெம்பர் ஆரம்பத்திலும் முகநூல் மெசஞ்சர் மூலம் உரையாடினேன். அதிலவர் தெரிவித்திருந்த கருத்துகள் தற்போதுள்ள சூழலில் முக்கியமானவையாகப் படுவதால் அவற்றை இங்கு பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன். எனக்குக் கிடைத்த தகவல்களின்படி மறைவதற்குப் பத்து நாட்கள் வரையில் சிறுநீரகச் சுத்திரிப்புக்குச் செல்லவில்லையென்றும், அவர் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதால் மரண விசாரணைகள் முடிவடைந்த நிலையில் உடல் உறவினர்களிடம் கையளிக்கப்படுமென்றும் அறிகின்றேன். அதன்பின்பே அவரது இறுதிச் சடங்குகள் பற்றிய விபரங்கள் அறிவிக்கப்படுமென்று  தெரிய வருகிறது.

அவருக்கும் எனக்குமிடையில் நடந்த அந்த முகநூல் மெசஞ்சர் உரையாடல் வருமாறு:

Aug 5, 2022, 7:29 PM
ஜெயன் என்ன நடந்தது?

Aug 6, 2022, 3:50 AM

Jeyan Deva
உங்களுக்கு தெரியும் தானே கிரி?  எனது சிறுநீரகப் பிரச்சனை கடுமையாகி விட்டது. 10 அடி தூரம் கூட நடக்க முடியவில்லை.

Aug 6, 2022, 3:42 PM

ஜெயன், நீங்கள் டயலிசிஸ் செய்கிறீர்களா? அங்கு மாற்றுச் சிறுநீரகத்துக்கான திட்டமேதுமில்லையா? இங்கு அதற்காக விண்ணப்பித்து வைப்பார்கள். கிடைத்ததும் பெற்றுக்கொள்வார்கள். உள்ளத்தை உறுதியாக வைத்திருங்கள். இங்கு எழுத்தாளர் குலேந்திரன் டயலிசிஸ் எடுப்பதுடன்  பல்வேறு வேலைகளையும் செய்து வருகின்றார்.  https://www.youtube.com/watch?v=oV0qPOydAts  (ஏழுத்தாளர் குலேந்திரனும் அண்மையில் மறைந்து விட்டார்)

மேலும் படிக்க ...

மக்கள் திலகம் எம்ஜிஆர் நினைவாக... - ஊர்க்குருவி -

விவரங்கள்
- ஊர்க்குருவி -
அரசியல்
24 டிசம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அமரர் எம்ஜிஆரின் நினைவு தினம் டிசம்பர் 24. அவரை நினைத்தால் முதலில் எனக்கு நினைவு வருவது 'நான்  ஆணையிட்டால் அது நடந்து விட்டால் இங்கு ஏழைகள் வேதனை பட மாட்டார்' என்னும் பாடல்தான். காரணம்? 'எங்க வீட்டுப்பிள்ளை'தான் நான் ஓரளவு அறியும் பால்ய பருவத்தில் முதன் முதலில் பார்த்து இரசித்த முதலாவது திரைப்படம்.  வவுனியா 'நியூ இந்திரா டாக்கீஸ்'  திரையரங்கில் பார்த்த திரைப்படம். முதற்  படத்திலேயே இந்தப் பாடலும், இவரின் வசீகர ஆளுமையும் பிடித்து விட்டன.

இருந்தவரை கலையுலகிலும், அரசியல் உலகிலும் மக்கள்  திலகமாக ஒளிர்ந்தார். வாழ்ந்திருந்த காலத்தில் எவ்விதம் மக்கள் மத்தியில் விளங்கினாரோ , இன்றும் , அமரராகி 35 ஆண்டுகளாகிவிட்ட நிலையிலும் விளங்குகின்றார் என்பதை ஊடகங்களில்,  சமூக ஊடகங்களில், குறிப்பாக யு டியூப் சானல்களில் இவரைப்பற்றி வெளியாகும் காணொளிகள் வெளிப்படுத்துகின்றன. இவரால் பயனடைந்த பலர் அவ்விதம் அடைந்த பயன்களைப்பற்றி நன்றியுடன் நினைவு கூர்கின்றார்கள்.

மேலும் படிக்க ...

அண்மையில் பார்த்த யு டியூப் காணொளிகள் இரண்டு! - ஊர்க்குருவி -

விவரங்கள்
- ஊர்க்குருவி -
கலை
24 டிசம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஒளிப்பதிவாளர் ரவிவர்மனுடனொரு நேர்காணல்!  காண்பவர் இயக்குநர் மனோபாலா!  

இயக்குநர் மனோபாலாவின் 'Manobala's Waste Paper யு டியூப் சானலில் அண்மையில் வெளியாகியிருந்த இந்திய சினிமாவின் சிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான ரவிவர்மனுடான நேர்காணல் என்னை மிகவும் கவர்ந்தது.

எவ்வித ஒளிவு மறைவின்றி தான் இன்றுள்ள நிலைக்கு வந்துள்ளார் என்பதை ரவிவர்மன் இந்நேர்காணலில் விபரிக்கின்றார். ஆரம்பத்தில் சென்னையிலுள்ள புகையிரத நிலையங்களில் மாறி மாறித் தூங்கிய அனுபவங்களை, டிக்கற் இல்லாமல் புகைவண்டியில் பயணித்துச் சிறை சென்ற அனுபவங்களை, சினிமாத்துறையில் சிறு சிறு வேலைகள் செய்து பெற்ற அனுபவங்களையெல்லாம் விபரிக்கின்றார் ரவிவர்மன்.
சுயமாகக் கற்று ஒளிப்பதிவுத் துறையில் இன்றுள்ள சிகரத்தினைத் தொட்டுள்ளார் ரவிவர்மன். இப்பயனுள்ள காணொளி வாழ்க்கையில் முன்னேற விரும்பும் எவருக்கும் வழிகாட்டுமொரு நேர்மறையான கருத்துகளை உள்ளங்களில் விதைக்குமொரு காணொளி.

மேலும் படிக்க ...

கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் இயல் விருதுகள் – 2022 - தகவல்: முருகபூபதி -

விவரங்கள்
Administrator
இலக்கியம்
24 டிசம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

'தமிழ் இலக்கியத்தோட்ட'த்தின் 2022ஆம் ஆண்டுக்கான இயல்விருதுகள் எழுத்தாளர் பாவண்ணனுக்கும், எழுத்தாளர் லெ.முருகபூபதிக்கும் வழங்கப்படுகின்றன. இத்தகவலைப் பதிவுகளுடன் பகிர்ந்துகொண்டவர் எழுத்தாளர் முருகபூபதி. விருதுகள்  பெரும் இருவரையும் பதிவுகள் வாழ்த்துகின்றது. - பதிவுகள்.காம் -


வழக்கமாக வருடாவருடம் வழங்கப்படும் இயல்விருது  கொவிட் நோய்த் தொற்று காரணமாக 2020 ஆம் வருடம் வழங்கப்படவில்லை. ஆகவே 2022 இல் இரண்டு இயல் விருதுகள் வழங்கப்படுகின்றன. அவை 2023 யூன் மாதம்  கனடா ரொறொன்ரோவில் வழங்கப்படும்.

லெட்சுமணன் முருகபூபதி

தமிழ் இலக்கியத் தோட்டம், 2022 ஆம் ஆண்டுக்கான வாழ்நாள் இலக்கிய சாதனையாளர் இயல் விருதை, கடந்த 50 ஆண்டுகளாக தமிழ் இலக்கிய உலகில் தொடர்ந்து இயங்கிவரும் இலங்கையில் பிறந்த படைப்பிலக்கியவாதியும், ஊடகவியலாளருமான லெ. முருகபூபதி அவர்களுக்கு வழங்குகிறது. 1972 இல் எழுத்தாளராக அறிமுகமான இவரின் முதலாவது சிறுகதைத் தொகுதிக்கு இலங்கை சாகித்திய மண்டல விருது கிடைத்தது. வீரகேசரி பத்திரிகை  ஆசிரிய பீடத்தில்  இவர்  பணியாற்றியபோது சோவியத் ஒன்றியத்தின் அழைப்பில் உலக இளைஞர் – மாணவர்  விழாவில் கலந்து கொண்டார்.

1987 இல் அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்த இவர்,    தொடர்ந்து சிறுகதை, கட்டுரை, பேட்டி, பயண இலக்கியம் என எழுதி வெளியிட்டு வருகிறார்.  அவுஸ்திரேலியாவில் தமிழ் எழுத்தாளர் விழாக்களை நடத்துவதில் முன்னின்று உழைத்துவரும் இவர்,  2011 இல் கொழும்பில் நடைபெற்ற சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டின் பிரதம அமைப்பாளராக செயல்பட்டார்.

அவுஸ்திரேலியாவில் 1988 ஆம் ஆண்டு முதல் இயங்கிவரும் இலங்கை மாணவர் கல்வி நிதியம், 2004 ஆம் ஆண்டு முதல் இயங்கிவரும் தமிழ் இலக்கிய கலைச் சங்கம் ஆகியனவற்றின் ஆரம்ப உறுப்பினருமாவார்.  இலங்கையில் வடமேல் மாகாணத்தில் நீர்கொழும்பில் 13 யூலை 1951 இல் பிறந்த முருகபூபதி , விவேகானந்த வித்தியாலயத்தில் ( தற்போது விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி ) தமது ஆரம்ப கல்வியை தொடங்கி பின்னர்,  யாழ்ப்பாணம் ஸ்ரான்லி கல்லூரியிலும், ( தற்போது கனகரத்தினம்  மத்திய கல்லூரி  )  நீர்கொழும்பு  அல்கிலால் மகா வித்தியாலயத்திலும் கல்வி கற்றார்.

மேலும் படிக்க ...

கிராமப்புற மருத்துவம் - முனைவர்.அ.ஸ்ரீதேவி , உதவிப்பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர், தமிழ்த்துறை, நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர்.105 -

விவரங்கள்
- முனைவர்.அ.ஸ்ரீதேவி , உதவிப்பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர், தமிழ்த்துறை, நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர்.105 -
ஆய்வு
23 டிசம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- பதிவுகள் இணைய இதழுக்கு ஆய்வுக் கட்டுரைகளை அனுப்புபவர்கள் ஓருங்குறி எழுத்துருவில் அனுப்ப வேண்டும். பாவித்த நூல்கள் பற்றிய விபரங்கள் (நூல் பெயர், வெளியான ஆண்டு, பதிப்பகத்தின் பெயர்) உசாத்துணைப்பட்டியலில் குறிப்பிடப்பட வேண்டும். - பதிவுகள்.காம் -


முன்னுரை

    கிராமப்புற மருத்துவ முறை கிராம மக்களின் வாழ்வியலோடும், பண்பாட்டோடும், சமூக அமைப்போடும் பிரிக்க இயலாதபடி இரண்டற கலந்து விட்ட ஒன்றாகும். இம்முறை மருத்துவம் பலவகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன. எவ்வித பக்க விளைவுகளும் இல்லாத இந்த மருத்துவத்தால் பயன் பெற்றவர்கள் உள்ளனரே தவிர பக்க விளைவால் பாதிக்கப்பட்டவர்களை காண்பது அரிது. இதனைப் பற்றி இக்கட்டுரையில் முழுமையாகக் காண்போம்.

நாட்டுப்புற மருத்துவத்தின் பல்வேறு பெயர்கள்

   நாட்டுப்புற மருத்துவமானது பாட்டி வைத்தியம் வீட்டு வைத்தியம்,  கை வைத்தியம், நாட்டு மருத்துவம், பரம்பரை வைத்தியம், பச்சிலை வைத்தியம், மூலிகை வைத்தியம், இராஜ வைத்தியம், இரகசிய மருந்து வைத்தியம் என மக்களால் பல்வேறு பெயர்களில் வழங்கப்பட்டு வருகிறது. இப்பெயர்கள் மருத்துவப் பொருள்களின் அடிப்படையில் மாறுபடுகின்றன.

நாட்டுப்புற மருத்துவம் உருவான வரலாறு

    இயற்கையோடு தொடர்பு கொண்டிருந்த மனிதன் தன்னைச் சுற்றி வளர்ந்துள்ள மரம், கிளை, இலை, வேர், செடி, கொடி, பூ, காய், கனி, விதை ஆகியவற்றையும் கூர்ந்து நோக்கினான். இதனால் அவற்றின் மருத்துவக் குணங்களும் அவனுக்குப் புலனாகத் தொடங்கின.  ஆங்காங்குக் கிடைக்கக்கூடிய தாவர வகைகளின் மருத்துவக் குணங்களை அறிந்து அவற்றை மனிதர்களிடம் சோதனைக்கு உட்படுத்தி வெற்றி கண்டபோது நாட்டு வைத்தியத்தின் மீதும் வைத்தியர்கள் மீதும் மனிதர்களுக்கு நம்பகத் தன்மை உண்டானது. நோயுற்ற மனிதன் மருத்துவனை நம்புவதும், மருத்துவன் மருந்தை நம்புவதும் காலத்தின் தேவையாகியது.  இந்நிலையில்,  நாட்டு வைத்தியர்கள் பெரிதும் மதிக்கப்பட்டனர்.  இம்மதிப்பைக் காத்துக்கொள்ள அவர்கள் தமக்குத் தெரிந்த மருத்துவத்தில் மேலும் விளக்கம் தேட முற்பட்டனர். இத்தேடல் முயற்சி அவர்களுக்கு இத்துறையில் அனுபவ முதிர்ச்சியைத் தந்தது.  இப்பெரியோர்களின் அனுபவக் கொடையே நாட்டு மருத்துவமாகும். (முனைவர் ந. சந்திரன் ‘நாட்டு மருத்துவம்’ (2002) பக். 14-16).   

மேலும் படிக்க ...

கவிதை: பயணங்கள் முடிவதில்லை! - ஷர்மிலா கவிநிலா (மன்னார்) -

விவரங்கள்
- ஷர்மிலா கவிநிலா (மன்னார்) -
கவிதை
23 டிசம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- பதிவுகளுக்குப் படைப்புகளை இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். என்னும் முகவரிக்கு ஒருங்குறியில் அனுப்புங்கள். - பதிவுகள்.காம் -


தொடுவானமாய் தொடரும் பயணம்.
தொலை தூரமாய் தொடர்ந்து நடக்கும் வாழ்க்கைப் பயணம்.
இளமையில் தனிமை மட்டும் துணை நிற்க
ஈன்ற மக்கள் சுமைகளை
சுகங்களாகச் சுமந்து பயணிக்கும் பயணம்.
சுகமான தேடல் கொண்ட வாழ்க்கைப் பயணம்.

வாழ்விலே மழலைப் பருவம் தொட்டு,
அந்தி சாயும் பொழுதை எட்டும் வயது வரை
ஆயிரமாயிரம் போராட்டங்கள்
திட்டட்டங்கள் கண்டு,
மனதில் வேட்கை கொண்டு,
வைரம் போல்,  பூட்கை போல்
வாழ்வில் வரும் சவால்களை
சருகுகளாக மனத் திண்மம் கொண்டு,
பல தடைகளை உடைத்து
பயணத்தின் அடிகளை
ஏணி படிகளாக மாற்றி,
வாழ்க்கையில் இலட்சிய வெறி கொண்டு,
வீறு கொண்டு எழுந்து
வீர நடை கொண்டு,
சாதனை படைக்கும் சரித்திர நாயகியாக,
காவியம் கூறும் காரிகை இவளெனும்
காவியத் தலைவியாக,
புவி ஆளும் புரட்சிப் பெண்ணாக,
பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக,
வாழ்க்கை என்ற போர்களத்தில் வீர தாயாக,
பார் போற்றும் சிங்கப் பெண்ணாக,
இவள் வாழ்வில் பல துன்பக் களங்களை கண்டு
சற்றும் துவண்டு போய் விடாது
தூரத்தில் தெரியும்
நம்பிக்கை என்ற வைகறை விடியலை நோக்கி
இவள் பயணம் தொடர்கிறது.

மேலும் படிக்க ...

வாழ்த்துகிறேன்: இளஞ்சிற்பி தனஞ்சன் குமார்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
கலை
23 டிசம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எழுத்தாளர் அ.யேசுராசா மூலமே  தனஞ்சன் குமார் பற்றி அறிந்துகொண்டேன். யாழ் பல்கலைகழகத்தின் இராமநாதன் நுண்கலை பீடத்தில்) சித்திரமும் வடிவமைப்பு துறையில்  பட்டம் பெற்றவர்.  சிற்ப விரிவுரையாளர் மா.மனோகரிடம் சிற்பக்கலை கற்ற இவர் தற்போது யாழ் பல்கலைக்கழகத்தில் தற்காலிக விரிவுரையாளராகப் பணிபுரிகின்றார். பல்கலைக்கழகத்தில் கண்காட்சி நடத்தியிருக்கின்றார்.  சிற்பங்களின் அழகியல் ஈர்ப்பு காரணமாக பல்கலைக்கழகம் சென்ற பிறகே சிற்பத்துறையில் ஈடுபட்டதாகக் கூறும் இவர் சிற்பங்கள் செய்வதற்காகக் காத்திருப்பதாகக் கூறுகின்றார். கலைத்துறையில் ஈடுபாடுள்ள வர்த்தக நிறுவனங்கள், தனியார் இவரது கலைத்திறமையினைப் பயன்படுத்திக்கொள்ளலாம். இவருடன் தொடர்பு கொள்ளப் பாவிக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி - இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். தொலைபேசி இலக்கம் - +94 77 803 3317  இவரது முகநூல் அடையாளம் - Thananshan Kumar

மேலும் படிக்க ...

கடுப்பூட்டும் கட்டுரைகள் - அருண்மொழிவர்மனின் 'தாயகக்கனவுகள்' நூல் குறித்த ஒரு பார்வையும் சில குறிப்புக்களும் - வாசன் -

விவரங்கள்
- வாசன்
நூல் அறிமுகம்
23 டிசம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அருண்மொழி வர்மனின் ‘தாயகக் கனவுகள்’ நூல் பார்வையிடக் கிடைத்தது. ‘பிரதிகளை முன் வைத்து ஓர்  உரையாடல்’  என்ற தலைப்புடன்   தனது வாசிப்பனுபவங்களையும் வாழ்பனுவங்களையும் திரட்டி அவர் எழுதிய 15 கட்டுரைகளின் தொகுப்பாக  நூல் வெளிவந்திருக்கின்றது. ஆழமானதும் விசாலமானதுமான அவரது வாசிப்பும், அந்த  எல்லைகளின் விஸ்தீரணமும்  வியக்க வைக்கின்றது. தமிழிலும் ஆங்கிலத்திலுமான அவரது வாசிப்புப் பயணமானது    மிலன் குந்த்ரோவின் ‘மாயமீட்சி’ இல் இருந்து தமிழினி, ஷோபா சக்தி, அகரமுதல்வன் போன்றவர்களின் படைப்பிலக்கியங்கள் ஊடாக பயணித்து ,  கோர்டன் வைஸ் இன் ‘The Cage’ வரை விரிவடைகின்றது. பல்வேறு அமைப்புக்களுடன் சேர்ந்தியங்கும் ஒரு செயற்பாட்டாளராகவும், பல்வேறு இதழ்களிலும் ஆசிரியர் குழுக்களிலும்  , உதவி ஆசிரியராகவும் தொழிற்படும்  இவர் தனது இந்த வாசிப்பனுபவங்களை வெறும் விமர்சன  ரீதியாக மட்டும் அணுகாமல், எமது சமூகத்தின் கடந்த காலப் போக்குகள், நிகழ்வுகள் , தவறுகள் என்பவற்றை ஆய்வுரீதியாக  நோக்குவதுடன்  எதிர்காலத்தில்   ‘இனி என்ன செய்ய வேண்டும்’ என்ற சிந்திப்புடன் கூடிய எதிர்வு கூறல்களுடன் அணுகுகின்றார்,

டி.டி.கோசாம்பி அவர்கள் தனது ‘இயங்கியல் முறையில் சில பயிற்சிக் கட்டுரைகள்’ நூலிற்கு உப தலைப்பிடும் போது, ‘கடுப்பூட்டும் கட்டுரைகள்’ என்ற பெயரினை இட்டார். அதாவது உழைக்கும் மக்களிற்கும் தொழிலாளி வர்க்கத்திற்கும் ஆதரவாக இருக்கும் எனது கட்டுரைகள் முதலாளிகள், பாசிஸ்டுகள், மக்கள் விரோத அறிவு ஜீவிகளுக்கு கடுப்பூட்டும் கட்டுரைகளாக இருக்கும் என்றார். இந்நூலினை மொழிபெயர்த்த தோழர் சிங்கராயர் "இவை மக்கள் விரோத அறிவு ஜீவிகளுக்கு கடுப்பூட்டுபவையாக இருக்கின்ற போதிலும்  எம் போன்றவர்களுக்கு ‘களிப்பூட்டும் கட்டுரைகள்’ ஆக இருக்கின்றன" என்றார். அருண்மொழி வர்மனின் இந்தக் கட்டுரைகளும் யாருக்கு கடுப்பூட்டுகின்றன, யாருக்கு களிப்பூட்டுகின்றன என்று ஆராய்வதே எனது  இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.

மேலும் படிக்க ...

அஞ்சலிக் குறிப்பு: அமைதியான சமூக செயற்பாட்டாளன் மகாதேவன் ஜெயக்குமரன் மறைந்தார்! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
22 டிசம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 

 

 

 

 

 

 

 

கலை, இலக்கிய , சமூக செயற்பாட்டாளரான மகாதேவன் ஜெயக்குமரன் லண்டனில் மறைந்துவிட்டார் என்ற துயரமான செய்தியை கனடாவில் வதியும் எழுத்தாளர் – பதிவுகள் இணைய இதழ் ஆசிரியர் நண்பர் வ.ந.கிரிதரனின் குறிப்பிலிருந்து தெரிந்துகொண்டேன். மிகவும் குறைந்தவயதில் சிறுநீரக உபாதையினால் இவர் மறைந்திருக்கிறார்.  ஜெயக்குமரனை முதல் முதலில் 2008 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் லண்டனில் சந்தித்தேன்.

அக்காலப்பகுதியில்,  கனடா, கியூபா சென்றுவிட்டு திரும்பும் வழியில் லண்டனுக்கு வந்தபோது நண்பர் நூலகர் என். செல்வராஜா,  என்னுடன் பயணித்த  இலக்கிய நண்பர் நடேசனுக்கும் சேர்த்து லண்டனில் வரவேற்பு தேநீர் விருந்துபசார நிகழ்ச்சியை  ஒரு உணவு விடுதியில் நடத்தியிருந்தார். இந்நிகழ்விற்கு  மு. நித்தியானந்தன், பத்மநாப ஐயர், தாஸீசியஸ், அனஸ் இளைய அப்துல்லா, பாலேந்திர – ஆனந்தராணி தம்பதியர், பாலசுகுமார், ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், தேசம் ஜெயபாலன், நடா. மோகன், நவஜோதி யோகரட்ணம் ஆகியோருடன் ஜெயக்குமரனும் வருகை தந்திருந்தார். இயல்பிலேயே அமைதியான சுபாவம் கொண்டவர் என்பதை அன்றே தெரிந்துகொள்ள முடிந்தது.  அதிர்ந்து பேசாமல்,  மற்றவர்கள் பேசுவதை கூர்ந்து கவனிப்பவர்.  அச்சந்திப்பின் பின்னர் மீண்டும் அவரை அவுஸ்திரேலியா சிட்னியில் 2008 ஆம் ஆண்டு நாம் நடத்திய எட்டாவது தமிழ் எழுத்தாளர் விழாவில்தான் சந்திக்க முடிந்தது.  

மேலும் படிக்க ...

சமூக, அரசியற் செயற்பாட்டாளர் ஜெயன் மஹாதேவன் (ஜெயன் தேவா) மறைவு! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
21 டிசம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

நண்பரும், எழுத்தாளரும்,  முகநூலில் ஜெயன் தேவா , Jeyan Deva , என்னும் பெயரில் அறியப்பட்டவருமான மகாதேவன் ஜெயக்குமரன் (விடுதலைப்புலிகள் அமைப்பின் மகளிர் அமைப்பின் போராளியாகவும், அரசியல் பிரிவுத் தலைவியாகப் பணியாற்றியவருமான மறைந்த தமிழினி ஜெயக்குமரனின் கணவர்) மறைந்த செய்தியினை அறிந்தேன். அண்மைக்காலமாகச் சிறுநீரக நோய்ப்பிரச்னையால் பாதிக்கப்பட்டிருந்த ஜெயன் தேவா அதற்காகச் சிறுநீரகச் சுத்திகரிப்புச் சிகிச்சை எடுத்து வந்து கொண்டிருந்தார்.  தனிமையில் வாழ்ந்து வந்த ஜெயன் தேவாவின் மறைவு துயர் தருவது.

தமிழினி ஜெயக்குமரனின் 'ஒரு கூர்வாளின் நிழலில்' (சுயசரிதை) 'மழைக்கால இரவுகள்' (கவிதைத்தொகுப்பு) ஆகிய நூல்களை தமிழினி ஜெயக்குமரனின் மறைவையடுத்து வெளியிட்டார். இவரது முக்கிய சமூகப் பங்களிப்பாக இதனை நான் கருதுவேன்.

இவரது கட்டுரையொன்று 'பதிவுகள்' இணைய இதழில் ' மற்றொரு செப்ரெம்பர் 11ம் ஒரு விடிவெள்ளியின் நூறு ஆண்டுகளும். சல்வடோர் அயெண்டே (1908-2008)' என்னும் தலைப்பில் , ஜெயன் மஹாதேவன் என்னும் பெயரில் வெளியாகியுள்ளது.

யாழ் பல்கலைக்கழகப் பட்டதாரியான ஜெயன் தேவாவின் மறைவால் துயரில் ஆழ்ந்திருக்கும் அனைவர்தம் துயரை நானும் பகிர்ந்துகொள்கின்றேன்.

மேலும் படிக்க ...

மாறும் உலக ஒழுங்கும், தமிழ் கேள்வியும் (2 ,3 & 4) : - ஜோதிகுமார் -

விவரங்கள்
- ஜோதிகுமார் -
ஜோதிகுமார்
20 டிசம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

பகுதி ஒன்று (சென்ற இதழ் தொடர்ச்சி)

தனது எல்லையிலிருந்து, கிட்டத்தட்ட 500கி.மீ தொலைவிலுள்ள, ரஷ்ய விமான தளமான, ஏங்கெல்ஸ்-2ஐ, உக்ரைன் 04.12.2022 இல், தனது ட்ரோன்கள் மூலம் தாக்கியதற்கூடாக, ரஷ்ய-உக்ரைன் போரை இன்னுமொரு புதிய தளத்திற்கு, உக்ரைன் கொண்டுசென்று  சேர்த்தது என கூறலாம்.  அதாவது கிரைமியாவின் பால-தாக்குதல், பின் ரஷ்யாவின் கடலுக்கடியிலான, எரிவாயு குழாய் தாக்குதல், இவற்றுக்கு பின்னதாக நடைபெற்றுள்ள ரஷ்யாவின் இவ்விரு விமான தளங்களின் மீதான தாக்குதல்கள் உலக அவதானிப்பை பரந்த அளவில் பெற்றுள்ளது.  ரைசன் விமானதள தாக்குதலை விட ஏங்கெல்ஸ் விமான தள தாக்குதல் நிர்ணயகரமானதாக கருதப்படுகின்றது.  காரணம், இவ்விரு தளங்களிலும், இத்தளமே, ரஷ்யாவின் அணு ஆயுதங்களை உள்ளடக்கியதாய் இருந்தது. இத்தாக்குதல் தொடர்பில், இதுவரை, இரண்டு பொருட்கோடல்கள் செய்யப்பட்டுள்ளன.  ஒன்று, கார்டியன் போன்ற மேற்குலக ஊடகங்களின் கூற்று. மற்றது, மெக்ரோகர் போன்ற யுத்த வல்லுனர்களின் கூற்று.

கார்டியனின் கூற்றுப்படி, இதுவரை பாவிக்கப்பட்டிராத, மிக நுணுக்கமாய் வடிவமைக்கப்பட்ட, முன்னேறிய, 'ட்ரோன்'களை கொண்டு உக்ரைன் தாக்கியது, என்பது ஒரு வகை. அதாவது, புதிய வகை 'ட்ரோன்'களின் புதுவரவு.  இப்புது வரவே, இவ்விரு விமான தளங்களின், தாக்குதல்களை சாத்தியப்படுத்தி இருந்தன. உக்ரேனிய எல்லையில் இருந்து, கிட்டத்தட்ட 500கி.மீற்றருக்கு உள்ளே, ரஷ்யாவில் ஆழ அமைந்து கிடக்கும் –அதுவும் ரய்சான் தளம் மாஸ்கோவில் இருந்து கிட்டத்தட்ட, 150கி.மீற்றர் தொலைவிலேயே உள்ளது என்ற சூழ்நிலையில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மறுபுறத்தில், மெக்ரோகரின் பொருள்கோடல்: இத்தாக்குதல்கள், உக்ரைனில் இருந்து புறப்பட்ட புதிய வகை 'ட்ரோன்'களால் நடத்தப்பட்டவை ‘அல்ல’. மாறாக, ரஷ்யாவின் உள்ளேயே இருந்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களே இதுவாகும் என்பதே அவரது பொருள் கோடலின் உள்ளடக்கமாகும்.

முன்னர் குறிப்பிட்ட, கார்டியனின், முன்னேறிய 'ட்ரோன்'கள் பொறுத்த கூற்று, ரஷ்யாவின் 'ட்ரோன்'  விடயங்களை திசை திருப்பவும், ரஷ்யாவை தொடர்ந்தும் இருட்டில் ஆழ்த்தவும் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டதாக இருக்கலாம். ஆனால் மெக்ரோகரின் பார்வையில், ரஷ்யா ஒரு பிரமாண்டமான எல்லைகளை கொண்ட ஒரு நாடாக இருக்கின்றது. இப்படி விரிந்து கிடக்கும் ஒரு நாட்டின், எல்லைகளுக்கூடாக, ‘ஆழ ஊடுருவுவது’ என்பது மிக எளிதான ஒரு விடயம்தான் என்பது அவரது கருத்தாகின்றது.

மேலும் படிக்க ...

முகநூற் குறிப்புகள் : நானும் எழுத வந்தேன்.. - எஸ்.எல்.எம்.ஹனிபா -

விவரங்கள்
- எஸ்.எல்.எம்.ஹனிபா -
முகநூல் குறிப்புகள்
20 டிசம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- முகநூற் பக்கங்களில் வெளியாகும் பயனுள்ள குறிப்புகள் அவற்றின் பயன் கருதிப் பதிவுகளின் இப்பக்கத்தில் வெளியாகும். -  பதிவுகள்.காம் -


எழுத்தாளர் எஸ்.எல்.எம்.ஹனிபாவின் முகநூற் குறிப்பொன்று! - வ.ந.கிரிதரன் -

எழுத்தாளர் எஸ்.எல்.எம்.ஹனிபாவின் முகநூற் பதிவொன்று என் மனத்தைக்  கவர்ந்தது. 'நானும் எழுத வந்தேன்' என்பது தலைப்பு.  எழுத்தாளர் திக்குவல்லை கமால் வில்லிதேவசிகாமணி விருது  பற்றி ஹனிபாவுக்குக் குறிப்பிட்டு அவரது 'மக்கத்துச் சால்வை' நூலை அவ்விருதுக்காக அனுப்பும்படி கூறுகின்றார்.

விண்ணப்பிப்பதற்குரிய காலம் குறுகியதாகவிருந்தது. ஹனிபா அவர்கள் 'மக்கத்துச் சால்வை'யின் ஐந்து பிரதிகளை எடுத்துக்கொண்டு தபால் நிலையம் செல்கின்றார். அனுப்பச் செலவு ரூபா 350 என்கின்றார்கள்.  அது அன்றுள்ள வாழ்க்கைச் செலவில் அதிகமான தொகை.  அவரிடமிருந்ததோ ரூபா 200. விருதும் வேண்டாம். எதுவும் வேண்டாம் என்னும் மனநிலையில் ஹனிபா அவர்கள் திரும்ப முற்படுகையில் 'போஸ்ட் மாஸ்டர்'  கே.எல்.எம். புகாரி  அவர்கள் மீதிப்பணத்தைத் தாமே போட்டு புத்தகங்களை அனுப்பி வைக்கின்றார். அந்நூலுக்கு விருதும் கிடைக்கின்றது.

அவ்விருது அனுபவத்தையும் ஹனிபா அவர்கள் மேற்படி முகநூற் பதிவில் விபரிக்கின்றார். அவ்விருதில் பேசிய  நடுவர்களில் ஒருவரான எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் அவர்கள் உரையாற்றுகையில் குறிப்பிட்டதையும் ஹனிபா அவர்கள் பதிவு செய்திருக்கின்றார்:

"இலங்கையிலிருந்து வந்த மக்கத்துச் சால்வை சிறுகதைத் தொகுதியிலுள்ள கதைகள், அதன் தமிழ் எங்களுக்குப் புரியவில்லை என்று என்னுடைய சக நடுவர் நண்பர்கள் சொன்னார்கள், நான் சொன்னேன்: இலங்கை வாசகர்கள் சென்னைத் தமிழைப் படிக்கிறார்கள், கோவில்பட்டித்தமிழை,கோயம்புத்தூர் தமிழைப் படிக்கிறார்கள்… என்று பல பெயர்களைச் சொல்லி இந்தத் தமிழையெல்லாம் அவர்கள் உள்வாங்கி இரசிக்கிறார்கள். அப்படியென்றால் நீங்கள் ஏன் ஹனிபாவின் தமிழ் உங்களுக்குப் பிடிக்கவில்லை என்று சொல்கிறீர்கள். அந்தக் கதை உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், உங்களுக்கு எழுத்தும்இலக்கியமும் புரியவில்லைஎன்றுதான் அர்த்தம் என்று'"

ராஜம் கிருஷ்ணன் அற்புதமான மனுஷி. எழுத்தாளர்.  இலங்கைத் தமிழ் எழுத்து பற்றி அன்று அவ்வப்போது இளக்காரமாகக்  கருத்துகள் தெரிவித்த தமிழக எழுத்தாளர்களுக்கு அவர் கொடுத்த அற்புதமான சாட்டையடியாக அமைந்திருக்கும் கூற்று அது.

மேலும் படிக்க ...

எழுத்தாளர் இந்துமதியுடனான இயக்குநர் சித்ரா லட்சுமணனின் உரையாடல்! - வ.ந.கி -

விவரங்கள்
- வ.ந.கி -
வ.ந.கிரிதரன் பக்கம்
19 டிசம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இயக்குநரும், தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணனின்  ' CHAI WITH CHITHRA -SOCIAL TALK' புகழ்பெற்ற யு டியூப் சானல். அதில் பல்வேறு கலை, இலக்கிய ஆளுமைகளுடன் சித்ரா லட்சுமணன் நடத்தும்  நேர்காணல்கள் இடம் பெறும். அண்மையில் அவ்விதமான உரையாடல்களில் என்னைக் கவர்ந்த உரையாடல் எழுத்தாளர் இந்துமதியுடன் அவர் நடாத்திய நேர்காணல்.

எழுத்தாளர் இந்துமதி எனக்கு அறிமுகமானது என் பால்ய பருவத்து வாசிப்பின்போது. ஆனந்த விகடனில் எழுத்தாலார் சிவசங்கரி அறிமுகமானது அவரது 'எதற்காக?" என்னும் சிறு நாவல் மூலம். ஓவியர் ஜெயராஜின் ஓவியங்களுடன் , இளந்  தம்பதியின் காதல் மிகுந்த உரையாடல்களுடன் நடைபோட்ட நாவலின் முடிவு எதிர்பாராதது. நாயகி குளியலறையில் குளிக்கும்போது மின்சாரம் தாக்கி இறந்து போகின்றார். இதெல்லாம் எதற்காக என்று நாவல் முடிந்திருக்கும். இவைதாம் என் நினைவில் அந்நாவல் பற்றி நிற்கும் நினைவுகள்.

மேலும் படிக்க ...

படித்தோம் சொல்கின்றோம்: அ. யேசுராசாவின் 'அங்குமிங்குமாய் ' நூல் கூறும் பலதரப்பட்ட இலக்கிய புதினங்கள் ! -- முருகபூபதி --

விவரங்கள்
-- முருகபூபதி --
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
19 டிசம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இலக்கிய வடிவங்களுக்கு இலக்கணம் வகுப்பது கடினம். ஏனென்றால், எல்லாப் படைப்புகளும் படைப்பின் எல்லா அம்சங்களும் இந்த வரையறைக்குள் அடங்கிவிடும் என்பதில்லை. ஆற்றல் வாய்ந்த கலைஞர்கள் இத்தகைய வரைவிலக்கணங்களை மீறியபடியே, புதுவிதமான அம்சங்களைக் கொண்ட சிறந்த படைப்புகளை அவ்வப்போது உருவாக்கி வருகின்றனர். வரைவிலக்கணங்களெல்லாம் பொருந்தி இருந்துவிடுவதனால் மட்டும், ஓர் இலக்கியப்படைப்பு சிறந்ததாக இருக்குமென்றுமில்லை. இலக்கணங்களெல்லாம் பொருந்தியிருந்தும் அதில்   உயிர் இல்லையாயின் - வாசகரின் மனதைப்பிணிக்கும் கலைத்தன்மை இல்லையாயின் – அதிற் பயனேதுமில்லை. இதனூடாக, இலக்கிய வடிவங்களிற்குத் திட்டவட்டமான வரையறைகளைக் கொடுக்கமுடியாதென்பதையும்,  அவற்றின் முக்கிய அம்சங்கள் சிலவற்றை புரிந்துகொள்ளலாம் என்பதையுமே, நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். இங்கு நாம் எடுத்துக்கொண்டிருக்கும் சிறுகதை  என்ற இலக்கியத்துக்கும் இது பொருந்தும்.   

இவ்வாறு தனது அங்குமிங்குமாய்… நூலில் எழுத்தாளர் அ. யேசுராசா மறைந்துவிட்ட எழுத்தாளர் அ.செ. முருகானந்தனின் மனித மாடு சிறுகதைத் தொகுப்பினை முன்வைத்து எழுதியிருக்கும் விமர்சனக்குறிப்பின் தொடக்கத்தில் பதிவுசெய்துள்ளார்.

அண்மையில் கனடா ரொறன்றோ தமிழ்ச்சங்கம் இணையவழியில் நடத்திய கலந்துரையாடலில், அங்கே வதியும் இலக்கிய திறனாய்வாளர் பேராசிரியர் நா. சுப்பிரமணியன் அவர்கள்   அழகியல் நோக்கில் தமிழிலக்கியம் என்ற தலைப்பில் நீண்டதோர் உரையை நிகழ்த்தியபோது, யேசுராசாவின் அங்குமிங்குமாய் … நூல்தான் நினைவுக்கும் வந்தது. யேசுராசாவும்  இந்த நூலில் ஆங்காங்கே எம்மவர் படைப்புகள் குறித்து எழுதும்போது இந்த அழகியல் விடயத்தையும் தூவிச்சென்றுள்ளார். மொத்தம் 75 பதிவுகளைக்கொண்ட இந்த நூல், ஈழத்து இலக்கிய வளர்ச்சியின் போக்குகளையும் இனம் காண்பித்தவாறு, மொழிபெயர்ப்பு, ஓவியம், இசை, திரைப்படம், பயணங்கள், அவதானிப்புகள், நூல் விமர்சனங்கள் மற்றும் யேசுராசாவுக்கு மிகவும் பிடித்தமான கலை, இலக்கிய ஆளுமைகள் குறித்தெல்லாம் பேசுகின்றது. அத்துடன்  அரை நூற்றாண்டுக்கும் மேற்பட்ட கால கட்டத்தின்  ஈழத்து இலக்கிய வரலாற்றினையும்  யேசுராசா தனது பாணியில்  நினைவூட்டியிருக்கின்றமையால்,  அதனை வாசிக்கும்போது கடந்த காலங்கள் எனக்கு நினைவுக்கு வந்தன.

யேசுராசா, சிறுகதைப்படைப்பாளி, விமர்சகர், தொகுப்பாளர், பதிப்பாளர், இதழாசிரியராக இயங்கிய அனுபவம் மிக்கவர். அத்துடன் கலா ரசிகர்.  கடந்த அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக எழுதிவருபவர்.  அலை, கவிதை, தெரிதல் முதலான இதழ்களை வெளியிட்டவர். யாழ்ப்பாணத்திலிருந்து முன்னர் வெளியான திசை வார இதழின் துணை ஆசிரியராகவும் இயங்கியிருப்பவர். எனவே,  யேசுராசா கலை, இலக்கிய உலகில் கற்றதும் பெற்றதும் அநேகம்.  

1946 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 30 ஆம் திகதி யாழ். குருநகரில் பிறந்திருக்கும் இவர்,  இம்மாதம் தனது 76 ஆவது பிறந்த தினத்தை நெருங்குகிறார்.

கலை, இலக்கிய உலகில் அறம்சார்ந்த நிலைப்பாடு அவசியம் என்பதில் உறுதியானவர்.  

சிலசமயங்களில் அவரது பதிவுகளில் அறச்சீற்றத்தையும் காணமுடியும்.  அங்குமிங்குமாய்… நூலில் அவரது ஐந்து பக்கங்களுக்கு விரியும் என்னுரையிலும் யேசுராசாவின் அறச்சீற்றத்தை காணமுடிகிறது. ஒரு காலத்தில்  இவருடன் நல்ல நண்பர்களாக திகழ்ந்த சிலரும்,   இந்த அறச்சீற்றத்தை சகிக்க முடியாமல்  இவரிடமிருந்து ஒதுங்கிச்சென்றுவிட்ட  துயரத்தையும் என்னால் பார்க்க முடிந்தது. முன்னர் இலங்கையிலிருந்த காலப்பகுதியில் அவதானித்தேன். பின்னர் புகலிட தேசத்திலிருந்தும் ( அவுஸ்திரேலியா ) பார்க்கின்றேன். ஆனால், யேசுராசா அதற்கெல்லாம் மனதளவில் அலட்டிக்கொள்ளாமல், தொடர்ந்தும் கலை, இலக்கியத் தேடலுடன் இயங்கிக்கொண்டேயிருப்பவர்.

கருத்துப்பகைமை தனிப்பட்ட பகைமையாகிவிடுவது மிகுந்த கவலையை  எனக்குத்தந்திருக்கிறது என்பதையும் வலியுடன் சொல்லிக்கொள்கின்றேன்.

மேலும் படிக்க ...

இந்து மதமும் ராஜராஜனும் - காவடி மு. சுந்தரராஜன், கோவை -

விவரங்கள்
- காவடி மு. சுந்தரராஜன், கோவை -
ஆய்வு
17 டிசம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

சமீப காலத்தில் பொன்னியின் செல்வன் திரைப் படம் குறித்தும், அதனைத் தொடர்ந்து மாமன்னர் ராஜராஜன் குறித்தும் பலராலும், பலவகைகளிலும் கருத்துகள் வெளியிடப் படுகின்றன. நானும் சில வார்த்தைகள் சொன்னால் குறைந்தா விடப் போகிறது?

நான்கு விஷயங்கள் குறித்துத் தான் விவாதங்கள் அதிகம் நடந்தன. 

    1. பொன்னியின் செல்வன் படம் 
    2. ராஜராஜன் தன் தமையன் ஆதித்த கரிகாலனைக் கொன்றவர்கள் விஷயத்தில் மனு தர்மத்தைக் கடைப் பிடித்தார். 
    3. ராஜராஜன் காலத்தில் இந்து மதம் என்ற பெயர் இருந்ததா? இல்லையா?
    4. திரு கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் ராஜராஜனின் கொலையாளிகள் பிராமணர்கள் என்பதை மறைத்தாரா ?

  பொன்னியின் செல்வன் திரைப்படம் படத்தையும், கதையையும் ஒப்பிடுவது தவிர்க்க முடியாதது என்ற போதிலும்  தேவையற்ற ஒன்று. அந்தக் கதையில் மூழ்கிப் பாத்திரங்களோடும், ஓவியங்களோடும் ஒன்றி விட்டவர்களால் நிச்சயமாக அப்படி ஒப்பிடுவதே “ நினைத்துப் பார்க்கக் கூடாத ஒன்று “ என்ற மன நிலையில்தான் இருக்க முடியும். படம்  திரைப் படம் என்ற அளவில் மிக அருமையாக இருந்தது. அதனைக் கதையுடன் ஒப்பிட்டுக் குறை, நிறை கூறுவதை, அதிலும் குறை கூறுவதை  ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

மேலும் படிக்க ...

வழக்கிழந்த நீதிகள் முதுமொழிக்காஞ்சியை முன் வைத்து…. - முனைவா் நா.கவிதா, தமிழ்த்துறை உதவிப்பேராசிரியா், தி ஸ்டாண்டா்டு ஃபயா் ஒா்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி,(தன்னாட்சி), சிவகாசி. -

விவரங்கள்
- முனைவா் நா.கவிதா, தமிழ்த்துறை உதவிப்பேராசிரியா், தி ஸ்டாண்டா்டு ஃபயா் ஒா்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி,(தன்னாட்சி), சிவகாசி. -
ஆய்வு
16 டிசம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

முன்னுரை

அறம் என்ற ஒற்றைச் சொல்லால், மனித வாழ்க்கையின் எல்லா நிகழ்வுகளையும் செயல்படுத்திய, பண்டைத் தமிழரின் அறவோர் வாழ்க்கை நெறி இன்று தனது பழம் வடிவத்தை இழந்து நிற்கிறது. கொடை, நீதி, இன்பம், தலைமை, பொது நலம் என்ற சொற்கள் இன்றைய சமூகத்தில் இளைய தலைமுறைகளால் புதிய வடிவாக்கம் பெறுகின்றன. கொடை என்பது இன்று புகழ் தரக்கூடிய விளம்பரச்சூழ்ச்சி;  நீதி என்பது தனது மனதின் எண்ணத்திற்கு ஏற்ப வளைத்துக்கொள்ளும் தலையாட்டி பொம்மை; இன்பம் என்ற பெயரில் தீய அறிவின் வழியே புலன்களை மயக்கம் காட்டிச் செல்வது அழியா இன்பம்; தலைமை என்பது தனக்கென மட்டுமே வாழும் கொள்கை; பொதுநலம் தனது அகராதியின் பொருள் இழந்து காட்சி அளிக்கின்றது. அவ்வகையில் வழக்கிழந்த நீதிகளின் நிலைமைகளை  முதுமொழிக் காஞ்சியின் வழி எடுத்துரைப்பதோடு,  சமூகத்தில் அறம் தகவு பெற்று, புத்துயிர் பெற வழி காட்டுவதே இவ் ஆய்வுக் கட்டுரையின் நோக்கமாகும்.

முதுமொழிக்காஞ்சி வரலாறு

         முதுமொழிக்காஞ்சி என்பது காஞ்சித்திணையின் துறைகளில் ஒன்று. காஞ்சித்திணை குறி்த்து தொல்காப்பியா்,

“காஞ்சி தானே பெருந்திணைப் புறனே
பாங்கருஞ் சிறப்பிற் பின்னெறியானும்
நில்லா உலகம் புல்லிய நெறித்தே ”
                                                  (தொல்காப்பியம் - புறத்திணையியல்,18)   

என்று வரையறுக்கிறார். இதில், ‘வீடு, பேறு  அடைவதற்குத்  தடைகளாகத் திகழும் பல்வேறு நிலையாமைக் கருத்துக்களைச் சான்றோர் எடுத்துரைப்பதே காஞ்சி’ என்ற இலக்கணம் புலப்படுகிறது. அறக்கருத்துக்களை எடுத்துரைக்கும் முதுமொழிக்காஞ்சி என்ற நூலின்  ஆசிரியா் மதுரைக் கூடலூர் கிழார். இவரை புலத்துறை முற்றிய கூடலூா் கிழார்  என்றும் அழைப்பா்.  ‘மூத்தோர் சொற்கள் பலவற்றை தொகுத்துரைக்கும் நூலே முதுமொழிக்காஞ்சி’ என்றும், அறவுரைக்கோவை, ஆத்திச்சூடியின் முன்னோடி என்றும் வழங்குவா். இந்நூல் தோன்றிய காலம் சங்கம் மருவிய காலமான ஐந்தாம் நூற்றாண்டு ஆகும். பத்துப்பாடல்களைக் கொண்ட பதிகம் பத்து கொண்டு இந்நூலில் 100 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இன்றைய நவீன அறிவியல் உலகில் மாந்தா் துன்பமின்றி வாழ, மனித வாழ்வியலுக்கு தேவையான அறக்கருத்துக்கள் இந்நூலில் நிறைந்துள்ளன.. ஆனால் காலத்தின் காரணமாக வழக்கு இழந்த நீதிகளை முதுமொழிக்காஞ்சி என்ற நூலினை முன் வைத்து பின் வரும் பகுதியில் ஆராயப்பட்டுள்ளன.

மேலும் படிக்க ...

தொடர் நாவல் - நவீன விக்கிரமாதித்தன் (16) - நவீன விக்கிரமாதித்தனின் குறிப்பேட்டுப் பக்கங்கள் சில. - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
நாவல்
16 டிசம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அத்தியாயம்  (16) நவீன விக்கிரமாதித்தனின் குறிப்பேட்டுப் பக்கங்கள்..

மனோரஞ்சிதம் எதனையெடுத்து வாசித்துக்கொண்டிருந்தாள். அவ்வாசிப்பில் தன்னை முழுமையாக  மூழ்கடிக்க வைத்து வாசித்துக்கொண்டிருந்தாள். அப்படியெதைத்தான் அவள் இவ்விதம் வாசித்துக்கொண்டிருக்கின்றாள் என்பதை அறியும் ஆவல் மேலிட்டது. மேலிட்ட ஆவலுடன் அவளை நெருங்கி அவள் வாசித்துக்கொண்டிருந்த நூலைப் பார்த்தேன். உண்மையில் அது நூலல்ல. ஒரு குறிப்பேடு. அது என் குறிப்பேடுகளிலொன்று.  அவ்வப்போது என் எண்ணங்களை எழுத்துகளாக  அக்குறிப்பேட்டில் பதிவு செய்வது என் பொழுது போக்குகளிலொன்று. கவிதைகளாக, கட்டுரைகளாக எனப் பல் வடிவங்களில் அவை இருக்கும். அக்குறிப்பேடுகளிலொன்றினைத்தான் அவளெடுத்து வாசித்துக்கொண்டிருந்தாள்.

"கண்ணம்மா, ஒருத்தரின் குறிப்பேட்டை அவரது அனுமதியின்றி இன்னொருவர் வாசிப்பது தவறில்லையா?"

"கண்ணா, என் கண்ணனின்  குறிப்பேட்டை நான் வாசிக்காமல் வேறு யார் வாசிப்பது? உன் கண்ணம்மா வாசிப்பதில் தவறேதுமில்லை. பேசாமல் மனத்தைக் குழப்பிக்கொள்ளாதே கண்ணா."

சிறிது நேரம் வாசித்துவிட்டுக் கூறினாள்:

"கண்ணா இவையெல்லாம் உன் 'டீன் ஏஜ்' பருவத்தில் எழுதியவை. ஒவ்வொரு கவிதைக்கும், கட்டுரைக்கும் மேல் எழுதின திகதி, மாதம், ஆண்டைக் குறிப்பிட்டிருக்கிறாய்."

"உண்மைதான் கண்ணம்மா. அவ்வப்போது என் சிந்தையிலேற்பட்ட உணர்வுகளை வடிப்பதற்காக எழுதியவை இவை. உண்மையில் என் எண்ணங்களின் வடிகால்கள் இவை. இவ்வடிகால்கள் இல்லாவிட்டால் அவை என் நெஞ்சைப் போட்டு வாட்டு வதக்கியெடுத்திருக்கும்."

"கண்ணா, உன் குறிப்புகளை வாசிக்கையில் உண்மையில் எனக்கு ஆச்சரியமாகத்தானிருக்கறது."

மேலும் படிக்க ...

மற்ற கட்டுரைகள் ...

  1. தொடர் : தீவுக்கு ஒரு பயணம் (5) - கடல்புத்திரன் -
  2. அண்ணாமலை கனடா தமிழ் - நுண்கலை- யோகா ஆய்வரங்கம் மாதந்தோறும் நடத்தும் சங்க இலக்கியக் கருத்தரங்கத்தின் 13ஆவது கருத்தரங்கம் “பழந்தமிழ் இலக்கிங்களில் நாடகக் கூறுகள் - ஓர் ஆய்வு”
  3. இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் ஆண்டுப்பொதுக்கூட்டம் மெய்நிகரில் 18-12-2022 ஞாயிறு மாலை அவுஸ்திரேலியா நேரம் 3-00 மணி - முருகபூபதி -
  4. வாசிப்பு அனுபவம்: காட்சி மொழி - சினிமாவுக்கான இதழ்! - விதுஷா- பேராதனைப் பல்கலைக் கழகம் , கண்டி -
  5. நூல் அறிமுகம் : கே.எஸ்.சுதாகரின் 'பால் வண்ணம்' சிறுகதைத்தொகுப்பு பற்றிய குறிப்புகள்! - வ.ந.கிரிதரன் -
  6. கவிதை: முப்பிறப்பு ! - சி. ஜெயபாரதன், கனடா -
  7. ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் நடத்தும் இணைய வழிக் கலந்துரையாடல்
  8. கவிதை: கண்ணக்கோல்! - முனைவர் சி. இரகு , உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, இலொயோலா கல்லூரி, வேட்டவலம், திருவண்ணாமலை மாவட்டம். -
  9. வாழ்க நீ எம்மான்! - வ.ந.கிரிதரன் -
  10. ஒரு கடிதம்! - வ.ந.கிரிதரன் -
  11. சிறுகதை : சீத்துவக்கேடு - எஸ் அகஸ்தியர் -     
  12. அன்புள்ள நண்பர் கிரிதரனுக்கு..! எழுத்தாளர் முருகபூபதியின் கடிதமொன்று. - முருகபூபதி -
  13. தொடர் நாவல் - நவீன விக்கிரமாதித்தன் (15) - கண்ணம்மா எழுதிய கவிதை! - வ.ந.கிரிதரன் -
  14. கவிஞர் சுகாதாகுமாரி ஒரு சமூக, அரசியல் & சூழலியற் செயற்பாட்டாளர்! - சுப்ரபாரதிமணியன் -
பக்கம் 59 / 104
  • முதல்
  • முந்தைய
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60
  • 61
  • 62
  • 63
  • அடுத்த
  • கடைசி