பதிவுகள் முகப்பு

தொடர் : தீவுக்கு ஒரு பயணம் (5) - கடல்புத்திரன் -

விவரங்கள்
- கடல்புத்திரன் -
நாவல்
16 டிசம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அத்தியாயம் ஐந்து - அடுத்த  நாள்

இதற்கு மேலே செல்கிறார்கள் . புளொமின்டன் " லுக் அவுட் " , என்கிற அதிகமான மலையின் உயரப் புள்ளி வருகிறது . அதிலிருந்து கீழ் நோக்கி அதிகளவு சரிவைப் பார்க்கலாம் . கண் கொள்ளாக் காட்சிகள்  கண்களை நிறைக்கின்றன . அதிலிருந்து பார்த்தால் கஸ்பி நிலங்களையும் பார்க்கலாம் என்றால் இன்னொரு புறத்தில் இவர்கள் இருக்கிற வீடும்  இருக்க வேண்டும் .  சற்று  செல்ல சிவப்பு மண் சுவருடன் பள்ளத்தில் இறங்கிற கடற்கரை . ஓரிரு மரங்களின் வேர்கள் சிறிது வெளியில் தெறிய  முக்கால்வாசி வேருடன் சுவர் மண்ணுடன் நிற்கிற மரங்கள் . மண்ணை அரித்தாலும் சரிந்து விழாது உறுதியாகக் கிடக்கிற மண்ணாகக் கிடக்க வேண்டும் . நம்மூரில் என்றால் மரம் சரிந்து விழுந்திருக்கும் . மண்ணும் தான் . அப்படி கரை தோறும் அங்காங்கே கடற்கரைகள்  இருக்கின்றன .

    அவ்விடத்தில் தான் அதிகபட்ச உயர் அலைகள் அடிப்பதாகவும்  கூறப்படுகிறது . அந்த தீவின் நில மட்ட உயரங்களைப் புரிந்து கொள்ள சிரமப் படுகிறான் . நில அளவையியல்  அறிவு அவசியம் தேவைப்படுகிறது . தில்லைக்கு  தட்டுத் தடுமாறிய ... நிலையிலே கிடக்கிறது .

      கடலுக்குள் நீட்டிக் கொண்டிருக்கிற  துண்டு நிலப்பரப்பில்  இருக்கிற  பசுமைக் காட்டினுள் ஐந்து கிலோ மீற்றர்  , பத்து  ...என அதிக தூரம் நடக்கிற சுற்றுக்கள் இருக்கின்றன .  நானும்  பிள்ளைகளும் நடந்திருக்கிறோம்  " என்கிறாள் பூமலர் .  " பூச்சிகள் ...மலை ஏறுவது போல நடக்க முடியாது " என ஜெயந்தி கூற அதை தவிர்த்து விடுகிறார்கள் . ஆனால்  , கடற்கரை அழகாகவேக் கிடக்கிறது .  " கல்லை அலை அடித்து குகையை ஏற்படுத்தி இருக்கிறது எல்லாம் மேலே செல்ல தான் வருகிறது . நீருக்கு நடுவே சிற்பி போல செதுக்கிய உருவங்களும் கிடக்கின்றன " என்று  விபரிக்கிறாள் பூமலர்  .    நீரும் லேசு பட்டதில்லை  .     

மேலும் படிக்க ...

அண்ணாமலை கனடா தமிழ் - நுண்கலை- யோகா ஆய்வரங்கம் மாதந்தோறும் நடத்தும் சங்க இலக்கியக் கருத்தரங்கத்தின் 13ஆவது கருத்தரங்கம் “பழந்தமிழ் இலக்கிங்களில் நாடகக் கூறுகள் - ஓர் ஆய்வு”

விவரங்கள்
- தகவல்: பேராசிரியர் இ.பாலசுந்தரம் -
நிகழ்வுகள்
15 டிசம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மேலும் படிக்க ...

இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் ஆண்டுப்பொதுக்கூட்டம் மெய்நிகரில் 18-12-2022 ஞாயிறு மாலை அவுஸ்திரேலியா நேரம் 3-00 மணி - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
நிகழ்வுகள்
15 டிசம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அவுஸ்திரேலியாவில் நீண்ட காலமாக இயங்கிவரும் தன்னார்வத் தொண்டு நிறுவனமான இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் ( 1988 – 2022 ) வருடாந்த பொதுக்கூட்டம்  இம்மாதம்  18 ஆம் திகதி (18-12-2022) ஞாயிற்றுக் கிழமை மாலை 3-00 மணியிலிருந்து மாலை 5-00 மணி வரையில் மெய்நிகரில்  ( Zoom Meeting) நடைபெறும்.   

மேலும் படிக்க ...

வாசிப்பு அனுபவம்: காட்சி மொழி - சினிமாவுக்கான இதழ்! - விதுஷா- பேராதனைப் பல்கலைக் கழகம் , கண்டி -

விவரங்கள்
- விதுஷா- பேராதனைப் பல்கலைக் கழகம் , கண்டி -
நூல் அறிமுகம்
15 டிசம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இலங்கையில் தமிழ் மொழியிலான சினிமா பற்றிய உரையாடல்களை ஏற்படுத்துவதற்கான தளங்கள் விரிவாக்கப்பட வேண்டிய தேவை அதிகமாக உணரப்படுகின்றது.

இச்சூழலில் காட்சி மொழி காலாண்டு இதழ் பேசப்படவேண்டிய ஒரு இதழாக வெளிவந்துள்ளது.  இலங்கையில் இருந்து உலக சினிமாவிற்காக வெளிவந்திருக்கும் காட்சிமொழி, சினிமா அரசியலையும் அதன் வடிவங்களையும்,  வரலாறுகளின் வளரச்சிப்  படிமங்களையும் உரையாடலுக்கான களமாக திறந்துவிட்டுள்ளது.

இந்திய -  இலங்கைச் சூழலில் இருந்து வெளிவரும் பெரும்பாலான கதாநாயக  வழிபாட்டை மையப்படுத்திய 'கமர்ஷியல்' சினிமாவின் போக்கும் அதன் பின்னணியில் உள்ள முதலாளித்துவப் பரப்புரைகளும், விளம்பரங்களும், பெண்ணுடல் பண்டமாக்கப்படுவதும்,  பாலியல் சுரண்டல்களும், கிசு கிசுத் தகவல்களுமே சினிமாவாக சித்திரிக்கப்பட்டு நமக்குப் பழக்கப்படுத்தப்படுகின்றது.

இது பெரும்பாலும் சினிமாவை ஒரு 'கமர்ஷியல்' பொழுதுபோக்கு சாதனமாக மட்டுமே நம்மிடம் நம்பவைக்க முயற்சிசெய்து கொண்டிருக்கின்றது.

அதற்கு அப்பால் சினிமாவினை கலைவடிவத்தோடு  இணைந்த உயிரோட்டமான வெகுசன சமூக ஊடகமாக வெளிப்படுத்தக் கூடிய வெளிகளை இந் நிலை மறைத்தும் வைத்துள்ளது.

காட்சிமொழி இதழ் அந்த கட்டமைப்புகளை உடைத்து ஒரு சமூக கலை இலக்கிய சினிமாவிற்கான உரையாடலை நிகழ்த்தக்கூடிய தளமாக உருப்பெற்றிருக்கின்றது.

நான்கு தமிழ் மொழியிலான கட்டுரைகளுடனும் மூன்று மொழிபெயர்ப்புக் கட்டுரைகளுடனும் வெளிவந்துள்ள இவ் இதழ் , சினிமாவில் வழக்கமாகப் பேசப்படுகின்ற விடயங்களில் இருந்து விலகிய  அல்லது அவற்றிற்கு முரணான வெளிப்படுத்தல்கள் எந்தளவு தூரம்  சினிமாவினை இன்றுவரை ஒரு காத்திரமான கலைப் படைப்பாகவும்  ஊடகமாகவும் கொள்வதற்கு வழிசமைத்துள்ளது என்பதை வெளிப்படுத்துகின்றன.

மேலும் படிக்க ...

நூல் அறிமுகம் : கே.எஸ்.சுதாகரின் 'பால் வண்ணம்' சிறுகதைத்தொகுப்பு பற்றிய குறிப்புகள்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
13 டிசம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எழுத்தாளர் கே.எஸ்.சுதாகரை நினைத்ததும் எனக்கு அமரர் காவலூர் எஸ்.ஜெகநாதன் நினைவுக்கு வருவார். பத்து சிறுகதைப்போட்டிகளில் முதற் பரிசு பெற்றவர். நான்கு சிறுகதைப்போட்டிகளில் தங்கப்பதக்கங்களைப் பெற்றவர். அகில இலங்கைரீதியில் நடத்தப்பட்ட பதினாறு சிறுகதைப்போட்டிகளில் பங்குபற்றிப் பரிசில்களைப் பெற்றதால் 'பரிசு எழுத்தாளர்' என்று அழைக்கப்பட்டவர். கே.எஸ்.சுதாகரும் பல சிறுகதைப்போட்டிகளில் பங்கு பற்றி பரிசுகள் பெற்ற  பரிசு எழுத்தாளர். ஞானம் சஞ்சிகை நடத்திய சிறுகதைப்போட்டிகளில் பத்துத்தடவைகளும், ஏனைய ஊடகங்களில் பதினெட்டுத் தடவைகளும் பரிசுகள் பெற்றவரென்று கே.எஸ்.சுதாகரின் 'பால் வண்ணம்' நூலுக்கு எழுதிய தனது முன்னுரையில் ஞானம் சஞ்சிகையின் பிரதம ஆசிரியரான தி.ஞானசேகரன் குறிப்பிடுகின்றார்.

யாழ் தெல்லிப்பளையில் பிறந்து தற்போது ஆஸ்திரேலியாவில் வசிக்கும் கே.எஸ்.சுதாகர் பேராதனைப் பல்கலைக்கழகப் பொறியியற் பட்டதாரி. அவரது 'பால்வண்ணம்' சிறுகதைத்தொகுப்பு பற்றிய எனது எண்ணங்களே இக்கட்டுரையாகும். ஏற்கனவே இவரது 'சென்றிடுவீர் எட்டுத்திக்கும்', 'எங்கே போகின்றோம்' ஆகிய சிறுகதைத்தொகுப்புகள் வெளிவந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க ...

கவிதை: முப்பிறப்பு ! - சி. ஜெயபாரதன், கனடா -

விவரங்கள்
- சி. ஜெயபாரதன், கனடா -
கவிதை
12 டிசம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மானுடப் பிறவிகளுக்கு
முப்பிறப்பு என்பது
புதிய கணிப்பு,  
புதிய ஞானம்,
புதிய பாடம் !

ஏழு பிறப்பு என்பது
வாழும்  மாந்தர்க்கு ஒவ்வாத
பழைய சுவடு !
முற்பிறப்பு, இப்பிறப்பு
பிற்பிறப்பு  
முடிவில்லா தொடர்ச்சி.
பிறப்பும்,  இறப்பும்
இடைபுகும் நிகழ்ச்சி.

முற்பிறப்பு இல்லை  எனின் 
இப்பிறப்பு இல்லை,
இருக்க முடியாது !
இறப்பு மூலம் ஊழ்விதி
பிற்பிறப்புக்கு
நாத்து நடுகிறது !  
இப்பிறப்பு நிகழ்வு கட்கு
முற்பிறப்பு தான்
காரணி !

மேலும் படிக்க ...

ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் நடத்தும் இணைய வழிக் கலந்துரையாடல்

விவரங்கள்
- தகவல்: பேராசிரியர் நா.சுப்பிரமணியன் -
நிகழ்வுகள்
12 டிசம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மேலும் படிக்க ...

கவிதை: கண்ணக்கோல்! - முனைவர் சி. இரகு , உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, இலொயோலா கல்லூரி, வேட்டவலம், திருவண்ணாமலை மாவட்டம். -

விவரங்கள்
- முனைவர் சி. இரகு , உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, இலொயோலா கல்லூரி, வேட்டவலம், திருவண்ணாமலை மாவட்டம். -
கவிதை
12 டிசம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

  
அவள்
எழுதுகிறாள்
எழுதிக்கொண்டே
இருக்கிறாள்
கண்ணில் நிரம்பிய
மையால்…!

உள்ளதில்
உள்ளதையே
எழுதுவாளோ…?
இல்லை
எழுதுவதுபோல்
நடிக்கின்றாளோ…?

என்னதான்
எழுதுகிறாள்
என்னென்னவோ
எழுதுகிறாள்.

மேலும் படிக்க ...

வாழ்க நீ எம்மான்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
11 டிசம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இன்று மகாகவி பாரதியாரின் பிறந்ததினம்.  என் பால்ய பருவத்தில் என்று என் தந்தையார் பாரதியாரின் முழுக்கவிதைகளும் அடங்கிய தொகுதியை வாங்கித் தந்தாரோ அன்று ஆரம்பித்த பிணைப்பு இன்றுவரை தொடர்கிறது. இவரது கவிதைத்தொகுப்பொன்று எப்பொழுதும் என் மேசையில் அருகில், கண்ணில் படும் தூரத்திலிருக்கும்.

சமுதாயம், அரசியல், தேசிய விடுதலை, வர்க்க விடுதலை, மானுட விடுதலை, இருப்பு பற்றிய தேடல்கள், காதல் போன்ற மானுட உணர்வுகள்,  இயற்கை , எழுத்து ,  பெண் உரிமை என்று அனைத்தைப் பற்றியும் இவர்  பாடியிருக்கின்றார். அவற்றிலுள்ள புலமை, எளிமை, அனுபவத்தெளிவு இவைதாம் என்னை இவர்பால் ஈர்த்ததற்குக் காரணம். இன்னுமொரு முக்கிய காரணம் - ஆரோக்கிய எண்ணங்களை  வெளிப்படும் வரிகள்.

மேலும் படிக்க ...

ஒரு கடிதம்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
11 டிசம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அண்மையில் தமிழகத்தில் அமெரிக்கன் கல்லூரியில் முனைவர் பட்ட ஆய்வாளராகவிருக்கும் க.ஆனந்தராஜன் அவர்கள்  எனது 'குடிவரவாளன்' நாவலைப்பற்றி 'நவீனத் தமிழாய்வு' என்னும் பன்னாட்டுக் காலாண்டு ஆய்விதழில் எழுதிய ஆய்வுக்கட்டுரை பற்றி எழுதியிருந்தேன். அது பற்றி அவர் எனக்கொரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அதிலவர் எனது 'அமெரிக்கா', 'குடிவரவாளன்' ஆகிய இரு நாவல்களை மையமாக வைத்துத் தான் முனைவர் பட்ட  ஆய்வு செய்வதாகவும்,  எனது அமெரிக்கா நாவல் அமெரிக்கன்  கல்லூரியின் பாடத்திட்டத்திலும் உள்ளதாகவும் எழுதியிருந்தார்.  மகிழ்ச்சி தந்த விடயமிது. அவரது முனைவர் பட்ட ஆய்வு வெற்றியடைய வாழ்த்துகள்.

மேலும் படிக்க ...

சிறுகதை : சீத்துவக்கேடு - எஸ் அகஸ்தியர் -     

விவரங்கள்
- எஸ் அகஸ்தியர் -
சிறுகதை
09 டிசம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 - எழுத்தாளர் அகஸ்தியர் நினைவு தினம் டிசம்பர் 8. -    

‘சீவன் போக முன்னம் பிள்ளையள் வந்து தாயின்ர கண்ணில் முழிக்குங்களென்டு நான் நம்பேல’
        இவள்பாவி என்ன,  எடுத்தாப்போல ‘சகுனி’ யாட்டம் சொல்கிறாள்.
    ‘அது பாவம் மனுசி பெத்ததுகளைக் கடைசியாப் பாத்திட்டுக் கண் மூடவெண்டு கொட்டுக்க சிவனை வைச்சுக்கொண்டு படுற பாட்டைக் கண் குடுத்துப் பாக்கக் கறுமமாக் கிடக்கு’
        கள்ளி,  மனிசியில உருகுமாப் போல சும்மா சாட்டுக்கு மாய வித்தை காட்டுறாள்.
    ‘அது சரி,  தந்தி எப்ப குடுத்ததாக்கும்?’
    ‘வேளையோட குடுத்திருப்பினம் தானே?’
     ‘அக்காள்,  வாய் புளிக்குது,  உந்த வெத்திலைத் தட்டத்தை இஞ்சாலையும் ஒருக்கா அரக்கிவிடு’
     ஓ, வருத்தம் பாக்கிற சாட்டா,  ‘தாக்கற’ இருந்து வெத்திலையும் சப்பிக்கொண்டு வியளம் பறைய வந்திருக்கிறாளுகள்.
    ‘தந்தி குடுத்து ரண்டு நாளாப்போச்சு,  இஞ்சால இன்னும் ஒரு மறுமொழியும் வரக்காணன்,  என்ன சங்கதி?’
     ‘வயிலசில பேசினாச் சுறுக்கில் கிடைக்குமல்லே’
     ‘தந்தி என்னெண்டு குடுத்துதுகளோ?’
     ‘ஆச்சிக்குக் கடுமை உடனே புறப்பட்டு வாருங்கோ’ண்டு தான் அடிச்சவையாம்’
     ‘ஒரு பிள்ளையளிட்டயிருந்தும் மறுமொழி வரேல்லயாமோ?’
     இதேன் இவளவே இதுகளைக் கிண்டிக் கதைச்சு விசேண்டியத்தை ஊட்டுறாளவையோ தெரியல்லே.
     ‘இல்ல பாவம்,  தேப்பன் மனுசன் தந்தி குடுத்துப்போட்டுப் பெஞ்சாதிக்குப் பக்கத்திலயிருந்து ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கு’
     வேண்டிப்போட்ட வெத்திலை பாக்குச் சமையப் போகுதாக்கும் தேப்பனைத் தின்னியளாட்டம் மனிசனிலையும் பரிவு காட்டிக் கரிசனையாய்ப் பறையிறாளவ.

மேலும் படிக்க ...

அன்புள்ள நண்பர் கிரிதரனுக்கு..! எழுத்தாளர் முருகபூபதியின் கடிதமொன்று. - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
09 டிசம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அன்புள்ள நண்பர் கிரிதரனுக்கு வணக்கம்.  என்னிடம் முகநூல் கணக்கு இல்லாதமையினால், உங்கள் முகநூல் குறிப்புகளை தங்கள் பதிவுகள்  இணையத்தளம் ஊடாகத்தான் படிக்கின்றேன். அண்மையில் தங்கள் தந்தையார் பற்றிய நினைவுப்பதிவும் படித்தேன். உடனே எனது தந்தையாரும்  நினைவுக்கு வந்தார். எமது குடும்பத்தில் என்னை ஒரு எழுத்தாளனாக முதல் முதலில் அங்கீகரித்து ஊக்கம் தந்தவர்தான் எனது தந்தையார். அதன்பிறகுதான் அம்மாவும் குடும்ப உறவுகளும் வருகிறார்கள். (  காரணம் எழுத்து சோறு போடாது என்பதுதான்  அவர்களின் பொதுவான சிந்தனை. ஆனால், எனக்கு எழுத்துதான் சோறு போட்டது )

ஒவ்வொரு ஆண்டிலும் டிசம்பர் மாதம் வரும்போது மட்டுமல்ல, ஒவ்வொரு மாதங்களிலும் நான்  உளமாற நேசித்த பல ஆக்க இலக்கிய ஆளுமைகள் நினைவுக்கு வந்துகொண்டேயிருக்கிறார்கள்.  அவர்களின் நினைவுகளில் நாம் வாழ்ந்துகொண்டிருப்பதே அதற்குக்  காரணம். கலை, இலக்கிய விமர்சகரான பேராசிரியர் க.கைலாசபதி, எழுத்தாளரும் ,விமர்சகரும், வெளியீட்டளாருமான செ.கணேசலிங்கன், எழுத்தாளர் எஸ்.அகஸ்தியர் ஆகியோரின் நினைவு தினங்களை  ( டிசம்பர் 6, டிசம்பர் 4 & டிசம்பர்   8. ) எமது எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்கும் நீங்கள்  நினைவூட்டியிருக்கிறீர்கள். மிக்க நன்றி நண்பரே.

மேலும் படிக்க ...

தொடர் நாவல் - நவீன விக்கிரமாதித்தன் (15) - கண்ணம்மா எழுதிய கவிதை! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
நாவல்
09 டிசம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அத்தியாயம் 15: கண்ணம்மா எழுதிய கவிதை!     

"கண்ணா, எனக்கொரு கேள்வி அவ்வப்போது நினைவில் வருவதுண்டு."

மனோரஞ்சிதம் இவ்விதம் ஒருமுறை திடீரென்று கூறவே அவளை வியப்புடன் பார்த்தேன்.

"கண்ணம்மா, அப்படியென்ன கேள்வி. அது எது பற்றிய கேள்வி?" என்றேன்.

"எல்லாம் எழுத்து பற்றியதுதான். "

"எழுத்து பற்றியதா? எந்த எழுத்து பற்றி நீ கூறுகிறாய் கண்ணம்மா?"

"கண்ணா, உன்னைப்போன்ற எழுத்தாளர்களின் எழுத்தைப் பற்றித்தான் கண்ணா? வேறென்ன எழுத்தைப்பற்றி நான் கேட்கப்போகின்றேன்?"

"அப்படியா கண்ணம்மா, சரி கேளடி என் கண்மணி."

"எழுத்துக்குக் கட்டாயம் ஒரு நோக்கம் இருக்க வேண்டுமா? அல்லது அது தேவையில்லையா? கண்ணா?"

"கண்ணம்மா, நீ என்ன கேட்க வருகிறாய் என்பது புரிகிறது., கலை மக்களுக்காகவா அல்லது கலை கலைக்காகவா என்பதைத்தான் நீ எளிமையாக இப்படிக் கேட்கிறாய். காலம் காலமாக கலை, இலக்கிய உலகில் கேட்கப்படும், தர்க்கிக்கப்படும் கேள்விதான். இது பற்றி எப்பொழுதும் கருத்துகள் ஒன்றாக இருப்பதில்லை."

"இவ்விடயத்தில் உன் கருத்தென்ன கண்ணா? அதைச்சொல்  முதலில். எனக்கு உன் கருத்துத்தான் முக்கியம் கண்ணா."

'கண்ணம்மா, எனக்கு இவ்வளவுக்கு முக்கியத்துவம் தருவது மகிழ்ச்சியைத் தருகிறது. என்னைப்பொறுத்தவரையில் எழுத்துக்கு நிச்சயம் ஒரு நோக்கமிருக்க வேண்டும். நோக்கமற்ற எழுத்து வாசிப்பதற்கு சுவையாகவிருக்கக்கூடும்.  ஆனால் சமுதாயப் பயனற்றுப் போய்விடும். ஆனால் அந்த நோக்கம் அந்த எழுத்தின் எழுத்தின் கலைத்துவத்தைச் சீர்குலைத்து விடக்கூடாது என்பதும் என்னைப்பொறுத்த வரையில் மிகவும் முக்கியம்."

"சரி கண்ணா, இன்னுமொரு கேள்வி. "

"என்ன கண்ணம்மா? என்ன புதுக்கேள்வி?"

"நோக்கம் ஒரு தீர்வினையும் கூற வேண்டுமா? அல்லது வாசகர்களே அதனை எழுத்திலிருந்து தீர்மானிக்கும் வகையில் அமைந்திருக்க வேண்டுமா கண்ணா?"

மேலும் படிக்க ...

கவிஞர் சுகாதாகுமாரி ஒரு சமூக, அரசியல் & சூழலியற் செயற்பாட்டாளர்! - சுப்ரபாரதிமணியன் -

விவரங்கள்
- சுப்ரபாரதிமணியன் -
சுப்ரபாரதிமணியன் பக்கம்
08 டிசம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- சுகாதாகுமாரி  (22 சனவரி 1934 – 23 திசம்பர் 2020)   கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்.  கவிஞர். சமூக, அரசியல் & சூழலிலற் செயற்பாட்டாளர். பெண்ணிய இயக்கம்,  அமைதி பள்ளத்தாக்கு பாதுகாப்பு இயக்கம், சூழலியல் போன்ற சமுக இயக்கங்களில் பணியாற்றியவர். இவர் கேரள மகளிர் ஆணையத்தின் முன்னாள் தலைவராகவிருந்தவர். -


கேரளா அமைதி பள்ளத்தாக்கு 2022  

கேரளா அமைதி பள்ளத்தாக்கு - கொரோனா காலத்திற்கு பின்னால் நவம்பர் இறுதியில் இந்த முறை போயிருந்தபோது .அந்த மக்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது அந்தப் பகுதியிலும் சூட்டின் தன்மை அதிகமாக வெப்பநிலை அதிகமாக மாறி இருப்பதைச் சொன்னார்கள். உலகம் முழுக்க வெப்பம் அதிகமாகிக் கொண்டிருப்பது. குளோபல் வார்மிங் என்பதற்கு அமைதி பள்ளத்தாக்கும். இலக்காயி இருக்கிறது அதன் காரணமாக ஒரு சதுர கிலோமீட்டரில் 2000க்கும் மேற்பட்ட நுண்ணுயிர்கள் வாழக்கூடிய அந்த பகுதியில் சில மாறுபாடுகள் தென்படுகின்றன.

கேரளா அமைதி பள்ளத்தாக்கு பகுதியை சுற்றி பார்க்க நபர் ஒன்றுக்கு ரூபாய் 750 ரூபாய் வசூலிக்கிறார்கள் இப்போது. 300 ஏக்கர் பரப்பிலான விரிந்த அடர்ந்த காட்டுப்பகுதி .அபூர்வமான மரங்கள் செடி கொடிகள் பறவைகள் மிருகங்கள் இவற்றைக் காண வாய்ப்பு கிட்டும் போது இந்த தொகை பெரிதல்ல தான் .ஆனால் கேரளாவைச் சார்ந்த நிறைய பேர் தென்பட்டார்கள்.  தமிழகத்தினரைக் காண முடிவதில்லை அதிகம் . தமிழகத்திலிருந்து அதிக தூரம் இல்லை. கோவை, ஆன்கட்டி, அட்டப்பாடி....  அவ்வளவுதான்

கேரளா அட்டப்பாடி பகுதிகளில் உலக கால்பந்தாட்டம் போட்டியை ஒட்டி கேரளா ரசிகர்கள் வெவ்வேறு அணிகளாக, விசிறிகளாக,  பிரிந்து தங்களுடைய ஆர்வத்தை காட்டியிருக்கும் பதாகைகள் . இதுபோல் தமிழகத்தில் சில சமயங்களில் காண முடிகிறது . ஆனால் உலக கோப்பை கிரிக்கெட்..உலக கோப்பை கால்பந்தாட்ட போட்டிகளின் போது கேரள ரசிகர்கள் காட்டும் ஆர்வம் அவர் அபரிமிதமாக இருக்கிறது. இதை அவர்களுடைய படைப்புகளில் கூட சாதாரணமாக காணலாம்.  உதாரணத்திற்கு சுடானி பிரம் நைஜீரியா போன்ற படங்கள் கூட அமைந்துள்ளன.  இது போன்ற நிறைய படங்கள் படைப்புகள்.
 
அமைதிப் பள்ளத்தாக்கில்  அணையொன்றை 197இல் நிறுவுவதற்கு எதிராகத் தோன்றிய மக்கள் இயக்கத்தின் தீவிர செயற்பாட்டாளராக இருந்தவர் கவிஞர் சுகாதாகுமாரி.

மேலும் படிக்க ...

ஸ்ரீரஞ்சனியின் 'ஒன்றே வேறே' சிறுகதைத் தொகுப்பு - ஒரு நோக்கு! - ரஞ்ஜனி சுப்ரமணியம் -

விவரங்கள்
- ரஞ்ஜனி சுப்ரமணியம் -
ரஞ்ஜனி சுப்ரமணியம்
08 டிசம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

சரளமான மொழிநடை என்பது ஒரு எழுத்தாளருக்கு வரமாக அமைவது. தனது எண்ணங்களை வெளிப்படுத்தும் ஊடகமாக எழுத்தைப் பயன்படுத்தும் வல்லமை பலரிடம் காணப்பட்டாலும், அகம் சார்ந்த  உணர்வுகளை  மென்மையுடனும், புறம் சார்ந்த  தோற்றங்களை  அழகியலுடனும், சமூகம் சார்ந்த அறங்களை  ஓர்மத்துடனும்  வெளிப்படுத்தும் திறன் சிலரிடம் அதீதமாகக் காணப்படும். அவர்களுள் ஒருவர் எழுத்தாளர் ஸ்ரீரஞ்சனி.

அண்மையில் வெளிவந்த 'ஒன்றே வேறே' சிறுகதைத் தொகுப்பு இதற்கு தெளிவான உதாரணமாக அமைகிறது. சிறுகதைத் தொகுப்பின் தலைப்புக்கு பொருத்தமானதும், ஊகங்களுக்கு வித்திடுவதுமான வித்தியாசமான அட்டைப்படம்.  வாசிப்பதற்கு ஆர்வத்தைத் தூண்டும் கைக்கடக்கமான அழகிய வடிவமைப்புடன் கூடிய  இத்தொகுப்பு மட்டக்களப்பு 'மகுடம்' பதிப்பகத்தின் வெளியீடாகும். பாராட்டுகள்.

'ஒன்றே வேறே' என்னும் தலைப்பும் பொருள் பொதிந்தது  . அட்டைப்படத்தில், குறியீட்டுப் பாணியில் வடிவமைக்கப்பட்ட ஆண் பெண் இருபாலார் போல, உலகீய வாழ்வில்  ஒருமித்தே வாழினும், நீட்டப்பட்ட தனிக்கரங்கள் போல தமக்கென சுயமும் தனித்தன்மையும் கொண்டவர்கள் எனப் பொருள் கொள்ளலாம். எழுத்தாளர்கள் சமூகத்தில் காணும் விடயம் ஒன்றேயாயினும்,  அவரவர் படைப்பு முறைமையினால் வாசகருக்கு உணர்த்தப்படும் விதம் வேறானது  எனவும், பிரச்சனைகள் எல்லோருக்கும் பொதுவானவையாக இருப்பினும், அதை அவரவர் எதிர் கொள்ளும் விதத்தில் வேறானவை எனவும் பொருள் கொள்ளலாம். ஆழமான தலைப்பு. சிறப்பு.

மேலும் படிக்க ...

எம்ஜிஆர் மீது ஜெயலலிதாவுக்குக் கடும் வெறுப்பா? சறுக்கிய சவுக்கு சங்கர்! - ஊர்க்குருவி -

விவரங்கள்
- ஊர்க்குருவி -
அரசியல்
08 டிசம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்


ஆதன் தொலைக்காட்சியில் இடம் பெற்ற நேர்காணலில் ஊடகவியலாளர் மாதேஸ் 'எம்ஜிஆர் மீது வெறுப்பாக இருந்தாரா ஜெயலலிதா?"  என்று சவுக்கு சங்கரிடம் கேள்வி கேட்கின்றார். அதற்குப் பதிலளித்த சவுக்கு சங்கர் 'கடும் வெறுப்பாக இருந்தார்'என்கின்றார். உண்மையிலேயே ஜெயலலிதா எம்ஜிஆர் மீது கடும் வெறுப்பில் இருந்தாரா? இந்தக் கேள்வியின் போது என் நினைவுக்கு முதலில் வருவது எம்ஜிஆரின் மரணத்தின்போது அவரது தலைமாட்டில் கவலை படிந்த முகத்துடன் சுமார் 15 மணி நேரத்துக்கும் அதிகமாக நின்ற ஜெயலலிதாவின் தோற்றம்தான். அதன் பின் அவர் ஊடகமொன்றுக்குக் கூறியதாக வெளியான  கூற்று நினைவுக்கு வருகின்றது. அதில் அவர் எம்ஜிஅர் மறைவுக்குப் பின் தான் தற்கொலை செய்யக்கூட எண்ணியதாகக் குறிப்பிட்டிருந்தார். உண்மையில் எம்ஜிஆர் மீது கடும் வெறுப்பில் உள்ள ஒருவர் இவ்விதம் செயற்பட  முடியுமா?

மேலும் படிக்க ...

’காவல் சுவடுகள்’ கல்லுக்குள் ஈரத்தை தொட்டுக் காட்டும் கவிதைகள்! கவிஞர் வசந்தனின் சமீபத்திய கவிதைத்தொகுப்பு குறித்து சொல்லத்தோன்றும் சில குறிப்புகள்! - லதா ராமகிருஷ்ணன் -

விவரங்கள்
- லதா ராமகிருஷ்ணன் -
லதா ராமகிருஷ்ணன் பக்கம்
07 டிசம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இன்று மனிதர்களின் மனநிலைகளும் வாழ்வுத்துயரங்களும்,, நெருக்கடிகளும், சிக்கல்களும் அவர்களின் அகவாழ்வும் அது சார்ந்தவையுங்கூட அவர்களின் வாழ்க்கைத் தொழில் முதலான வாழ்வாதாரங்களோடு கண்ணுக்குப் புலனாகாத அளவு இரண்டறக் கலந்திருக்கும் நிலையில் அகவயமான கவிதைகள், புறவயமான கவிதைகள் என்றெல்லாம் திட்டவட்டமான வரையறைகள் சாத்தியமா, அவை தேவையா என்ற கேள்விகள் தவிர்க்கமுடியாமல் எழுகின்றன. கவி என்பவர் எத்தனைக்கெத்தனை தனி மனிதரோ அத்தனைக்கத்தனை சமூக மனிதரும் கூட. இவ்வகையில் ஒரு கவி தன் கவிதையில் முன்வைக்கும் அகச்சூழலும் புறச்சூழலும் இரட்டிப்பு கவனம் கோருபவை.

கவிஞர் வசந்தனின் சமீபத்திய கவிதைத்தொகுப்பான காவல் சுவடுகளைப் படித்த போது மேற்காணும் எண்ணங்கள் மனதில் எழுந்தன. தான் பணியாற்றும் காவல் துறையைப் பின்புலமாகக் கொண்டு அவர் எழுதியுள்ள கவிதைகள் இடம்பெறும் தொகுப்பு இது. இத்தகைய கவிதைகள் வெறும் புலம்பலாகவும், பிரச்சார முழக்கங் களாகவும், சுய விளம்பரமாகவும் முடிந்துவிடக்கூடிய வாய்ப்புகள் அதிகம். அப்படி யாகவில்லை என்பதே ஒரு கவிஞராக தோழர் வசந்தனை சமகாலத் தமிழ்க்கவிதை வெளியில் நிறுவுகிறது எனலாம்.

காவல்துறையைச் சேர்ந்தவர்களைப் பற்றிய சமூகத்தின் பொதுப்புரிதல் அவர்கள் கடுமையானவர்கள், அதிகாரத்தை மக்கள் மீது தவறாகப் பிரயோகிப்பவர்கள் – இப்படியாகத்தான் இருக்கிறது. ஆனால், காவல்துறையைச் சேர்ந்தவர்களை ஆசாபாசங்கள் மிக்க, சமூகப்பிரக்ஞையும் மனிதநேயமும் நிறைந்த மனிதர்களாகத் தனது கவிதைகளில் எளிய, அதேசமயம் கவித்துவம் குறையாத மொழிநடையில் எடுத்துக்காட்டுகிறார் கவிஞர் வசந்தன்.

மேலும் படிக்க ...

நூல் அறிமுகம் - மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணரின் 'திரவிடத்தாய்'

விவரங்கள்
- ஊர்க்குருவி -
நூல் அறிமுகம்
06 டிசம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

தமிழம் -> திரவிடம் -> திராவிடம்!

மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர் எழுதிய நூல் 'திரவிடத்தாய்'. இதன் பதிப்பாசிரியர் புலவர் அ.நக்கீரன். திராவிடம் என்னும் சொல் தமிழம் என்னும் சொல்லிலிருந்து உருவான சொல் என்பது தேவநேயப் பாவாணரின் கருத்து,. இக்கருத்தினை நானும் ஏற்றுக்கொள்கின்றேன். இதனை வலியுறுத்தும் இந்நூல் முக்கியமானது.

நூலை வாசிக்க - திரவிடத்தாய்

மேலும் படிக்க ...

முற்போக்குத் தமிழ் இலக்கியத் தூண்களை நினைவு கூர்வோம்! - வ.ந.கி -

விவரங்கள்
- வ.ந.கி -
வ.ந.கிரிதரன் பக்கம்
06 டிசம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கலை, இலக்கிய விமர்சகரான பேராசிரியர் க.கைலாசபதி, எழுத்தாளரும் ,விமர்சகரும், வெளியீட்டளாருமான செ.கணேசலிங்கன், எழுத்தாளர் எஸ்.அகஸ்தியர் ஆகியோரின் நினைவு தினங்கள்  முறையே டிசம்பர் 6, டிசம்பர் 4 & டிசம்பர் 8.

 அகஸ்தியரைத் தவிர முதலிருவரையும் நான் சந்தித்திருக்கின்றேன். பேராசிரியர் க.கைலாசபதியை , மொறட்டுவைப் பல்கலைக்கழகத் தமிழ்ச்சங்க வருடாந்த இதழான 'நுட்பம்' இதழின் ஆசிரியராக நானிருந்தபோது அதற்காக ஆக்கம் வேண்டி யாழ் பல்கலைக்கழகத்தில் அவரது காரியாலயத்தில் சந்தித்திருக்கின்றேன். கட்டுரை தருவதாகக் கூறியவர் கூறிய நாளில் கட்டுரையைத் தந்தார். சஞ்சிகை வெளியானபோது அது பற்றிய சுருக்கமான விமர்சனக் கடிதத்தையும் அனுப்பி வைத்தார். மறக்க முடியாது. அக்கடிதத்தை இன்றுவரை பேணி வருகின்றேன்.

மேலும் படிக்க ...

அவுஸ்திரேலியா – இலங்கை நண்பர்கள் கழகம் இலங்கை ஜனாதிபதிக்கு கடிதம்! ஏனைய அரசியல் கைதிகளுக்கும் பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்க! இலங்கை ஜனாதிபதிக்கு அவுஸ்திரேலியா வாழ் மூவினத்தவரும் வேண்டுகோள்! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
05 டிசம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இலங்கையில் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் சிலரை மாண்பு மிகு  ஜனாதிபதி திரு. ரணில் விக்கிரமசிங்கா அவர்கள் விடுவித்திருப்பதற்கு நன்றியும், தெரிவித்து, ஏனைய தமிழ் அரசியல் கைதிகளையும் விடுவிப்பதற்கு அவர் ஆவனசெய்யவேண்டும் எனக்கோரும் கடிதம் ஒன்றை அவுஸ்திரேலியா வாழ் மூவீனத்தையும் சேர்ந்த இலங்கையர்கள்,  தங்கள் இலங்கை நண்பர்கள் கழகத்தின் ஊடாக  அனுப்பிவைத்துள்ளனர்.

இந்த வாரம் ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள இக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

இலங்கையில் நெருக்கடியான நேரத்தில்  ஜனாதிபதியாக தெரிவாகிய  தங்களுக்கு எமது வாழ்த்துக்களை தெரிவிக்கின்ற அதே சமயம்,  நீண்ட காலமாக  தடுத்துவைக்கப்பட்டிருந்த  சில அரசியல் கைதிகளை விடுவித்த தங்களது பெருந்தன்மையான நிலப்பாட்டை நம்நாட்டின் அமைதியை விரும்பும் அனைத்து குடிமக்களும் வரவேற்கிறோம்.  துரதிரஷ்டவசமாக, சட்டப்படி குற்றப் பத்திரிக்கை வழங்கப்படாமல் இன்னும் நூற்றுக்கணக்கானவர்கள் சிறையில் இருக்கிறார்கள். இவர்கள் குற்றவாளிகளா, குற்றம் சுமத்தப்பட்டவர்களா அல்லது இன்னும் குற்றம் சுமத்தப்படாதவர்களா என்பதைப் பொருட்படுத்தாமல்  பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து  வைக்கப்பட்டுள்ளார்கள்.  அவர்கள் பயங்கரவாத  தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு அவர்கள் மீதான எல்லா நடவடிக்கைகளும் சட்டப்படி எடுக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சட்டம் கடுமையானது – விரும்பத்தகாதது.  எனினும்  தவிர்க்க முடியாமல்  உருவாக்கப்பட்டது   என்பதை  இலங்கை  அரசு உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் ஏற்றுக்கொண்டது.  குறிப்பிட்ட இந்தச்  சட்டத்தை நீக்க  இலங்கை  அரசு பல முயற்சிகளை உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும்  மேற்கொண்டு,  ஏற்றுக் கொள்ளக்கூடிய உள்நாடு மற்றும் வெளிநாட்டுக் கோட்பாட்டிற்கு இணங்க புதிய சட்டம் ஒன்று இயற்றப்படவேண்டும். இலங்கை அரசு இன்னமும் இக்கடமையை நிறைவேற்ற தாமதிப்பதனால், , இந்தச்  சட்டம் தொடர்ந்தும் நிறைவேற்றுச் சட்டத்தொகுப்பில் இடம்பெறுகிறது.

மேலும் படிக்க ...

நூல் அறிமுகம்: பொருளியல் அறிஞர் அ.வரதராஜா பெருமாளின் 'எழுந்து முன்னேற முடியாமல் இறுகிப்போயிருக்கும் இலங்கையின் பொருளாதாரம்' நூல் பற்றிய கருத்துகள்! - ஜேம்ஸ் சிவா முருகுப்பிள்ளை (ஈஸ்வரமூர்த்தி) -

விவரங்கள்
- ஜேம்ஸ் சிவா முருகுப்பிள்ளை (ஈஸ்வரமூர்த்தி) -
நூல் அறிமுகம்
05 டிசம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

நூலின் பெயர் - 'எழுந்து முன்னேற முடியாமல் இறுகிப்போயிருக்கும் இலங்கையின் பொருளாதாரம்'
வெளியீடு - சமூகம் இயல் பதிப்பக, 317 பெரிந்தெரு வடக்கு, ஈஸ்ட்ஹோம், இலண்டன், ஐக்கிய இராச்சியம்
முதற்பதிப்பு - ஆகஸ்ட் 2022

- வரதராஜப் பெருமாள் புத்தக அறிமுக வெளியீடு: (கனடாவில் டிசம்பர் 04, 2022 மாலை நடைபெற்ற நிகழ்விற்கு தலைமைத் தொகுப்புரை ஆற்றிய சமூக, அரசியற் செயற்பாட்டாளர் ஜேம்ஸ் சிவா முருகுப்பிள்ளை  (ஈஸ்வரமூர்த்தி) ஆற்றிய உரையின் எழுத்து வடிவம்.  அவரது முகநூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.   சமூக, அரசியல் செயற்பாட்டாளர் அ.வரதராஜா பெருமாள் பொருளியல் துறை அறிஞர்களில் ஒருவர். இலங்கையின் பொருளாதாரம் பற்றிய அவரது கருத்துகளை அனைவரும் அறிவதும் அவசியம். இலங்கைப்பொருளாதாரம் பற்றிய நல்லதொரு புரிதலை இந்நூல் தருவதால் இது போன்ற நூல்களின் வருகை தற்போதுள்ள சமூக, அரசியல் மற்றும் பொருளாதாரச் சூழலில் அவசியம். - பதிவுகள்.காம் -


ஆதிப் பொதுவுடமை, ஆண்டான் அடிமை, நிலப்பிரவுத்துவம், முதலாளித்துவம், கம்யூனிசம் என்று மனித குல வரலாற்றை பொருளாதாரக் கட்டுமானங்களின் அடிப்படையில் பிரிந்து ஆராய்ந்து உருவாக்கிய நூலின் இறுதி வடிவமாக மூலதனம் என்று புத்தகத் திரட்டு பொருளாதாரம் பற்றி ஒரு முழுமையான ஆய்வை எமக்கு கொடுத்திருக்கின்றது. இதுவரை கால மானுட வர்க்கத்தின் சமுதாய அமைப்பின் பரிணாம வளர்ச்சிப் போக்கினை அவதானிப்போமாயின், ஆதி காலத்து மானுடர் அறியாமையில் வாழ்ந்த காலகட்டத்தில், அவரது மனம் பூரணமாகத் தொழிற்பட ஆரம்பிக்காதவொரு காலகட்டத்தில் நிலவிய தாய்வழி மரபினையொட்டிய பொதுவுடமைச் சமுதாய அமைப்பாக இருந்தது. பின்னர் அது உற்பத்திக் கருவிகளின் பரிணாம வளர்ச்சிப் போக்கிற்கேற்ப மாறுதலடைந்து வந்த ஆண்டான், அடிமை, அதாவது அடிமை - உடைமை சமுதாய அமைப்பாக மாற்றம் பெற்றது. பின்பு நிலப்பிரபு - பண்ணையடிமை அல்லது நிலப்பிரபுத்துவ சமுதாய அமைப்பு பெரும் நிலப'பரப்புகளை வழங்களை தமக்கானது என்று ஒரு சிறு பகுதியினர் ஆக்கிரமித்து வைத்திருந்து சமூக அமைப்பாக ஆட்சியதிகாரமாக மாற்றம் பெற்றது. இதன் வளர்ச்சியில் மூலதனத் திரட்சி ஓரிடத்தில் குவிந்ததாக உருவான முதலாளித்துவ சமுதாய அமைப்பு, நவீன முதலாளித்துவ சமுதாய அமைப்பு இதில் தான் பாட்டாளி வர்க்கம் என்ற உழைக்கும் வர்க்கமும் அவர்களின் உழைப்பைச் சுரண்டி பெரும் மூலதனத்திற்கு அதிபதியான முதலாளி வர்க்கமும் பகை வர்க்கங்களாக பரிணாமம் பெற்ற சமுதாய் அமைப்பு உருவானது. இப்படியான ஒரு காலகட்டத்தில் நாம் தற்போது வாழ்ந்து வருகின்றோம்.

இப்படியாகப் பரிணாம வளர்ச்சிப் போக்கினைக் கொண்டுள்ள சமுதாய வரலாற்றுப் போக்கில், அடுத்ததாக நிச்சயம் இன்னுமொரு மாற்றம் ஏற்பட்டே தீரும் என்ற சமூக விஞ்ஞானப் பார்வை ஆய்வாளர்களிடம் உள்ளது. இன்னுமொன்றையும் இச்சமுதாய அமைப்பின் வளர்ச்சிப் போக்கில் அவதானிக்கலாம். அதாவது, எண்ணற்ற வர்க்கங்களாகப் பிரிந்து கிடந்த மானுட வர்க்கத்தினை, இச்சமுதாய அமைப்பின் பரிணாம வளர்ச்சிப்போக்கு மேலும் மேலும் எளிய வர்க்கங்களாகப் பிரித்து, இறுதியில் முதலாளி, தொழிலாளி என்னுமிரு வர்க்கங்களை உள்ளடக்கியதொரு சமுதாய அமைப்பாக மட்டும் மாற்றி விட்டுள்ளது.

மேலும் படிக்க ...

மாறும் உலக ஒழுங்கும், தமிழ் கேள்வியும் - ஜோதிகுமார் -

விவரங்கள்
- ஜோதிகுமார் -
ஜோதிகுமார்
03 டிசம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

1
 
உக்ரைன் - ரஷ்ய போர்:

ஒக்டோபர் 8 இல், கிரைமியா பாலத்தை, தனது குண்டுவெடிப்பால் உக்ரைன் தகர்த்தெரிந்த முயற்சியுடன், ‘ரஷ்யா–உக்ரைன் போர்’  ஒரு புது பரிணமிப்பை எட்டிப்பிடித்தது எனலாம்.  இதே நாளில், ரஷ்யா, தனது போர் முனைக்கான, புதிய எளபதியையும் நியமித்தது–– Sergei Surovikin . Surovikin னின் நியமிப்புடன், ரஷ்யாவின் ‘யுத்த அணுகுமுறை’, புதிய மாற்றங்களை கண்டது. இதுவரை பாவித்திராத ஏவுகணைகளையும், ஆயுதங்களையும் ரஷ்யா பெருமளவில் பாவிக்க தொடங்கியது என்பது இரண்டாம் பட்சமே. முக்கியமானது, தன் யுத்த ‘அணுகுமுறையை’ ரஷ்யா மாற்றிக் கொண்டது என்பதே இங்கு குறிப்பிடத்தக்கது.

ஓர் ‘எல்லைக்குட்பட்ட, சிறப்பு போர் நடவடிக்கை’ என்ற எண்ணங்கள் அன்றுடன் காலாவதியாகி, இப்போது விரிய தொடங்குவது, இரு நாடுகளுக்குமிடையிலான திறந்த வெளி போர் என்ற எண்ணக்கருவை, ரஷ்யா சுவீகரித்துக்கொண்டது இத்தகர்ப்பு முயற்சியின் பின்னர்தான், என்று கூறினால் அது மிகையாகாது.

‘பெப்ரவரி நடவடிக்கை’, பேச்சுவார்த்தைக்கான ஒரு சூழலை ஏற்படுத்துவதை நோக்காக கொண்டு இயங்கியது. ஆனால் ‘இப்போதைய நடவடிக்கை’, முழு நிறைவான, உக்ரைனின், சரணடைவை, குறிக்கோளாக கொண்டு இயங்குகின்றது. இதுவே இரண்டுக்குமிடையிலான வித்தியாசமானது. இவ்வித்தியாசமானது, ரஷ்ய புதிய தளபதி Sergei  Surovikin தனது நியமிப்பை ஒட்டி வெளியிட்ட நேர்காணலிலும் வெளிபடவே செய்தது.

“உக்ரைன் போருக்கு ஒரு ‘சிரிய தீர்வு’ கிடையாது  (Syrian Answer) உக்ரைன் போருக்கு ஒரு ‘உக்ரைன் தீர்வே’ உண்டு, என்ற அடிப்படையில் மாத்திரமே, இப் பொறுப்பை நான் இன்று ஏற்றுள்ளேன்” என்பது அவரது கூற்றானது.

கர்ணல்  Douglas Macregor போனற இராணுவப் புலனாய்வாளர்கள், இக்கூற்றின் முழு அர்த்தத்தையும் ஆழ உணர தலைப்பட்டவர்களாகவே காணப்பட்டனர். இதன் பொருள்: ‘ஒரு சிரிய அரசு, ஓர் ஈரானிய நலன், ஓர் துர்க்கிய நலன், ஓர் அமெரிக்க நலன், ஓர் குர்தீஷிய, நலன் - இவை யாவற்றையும் கவனத்தில் கொள்ள கூடியதாகவே – ஓர் ‘சிரிய தீர்வு’ – அதாவது, ஒரு ‘ரஷ்ய ராணுவ முன்னெடுப்பு’ அமையும், என்பதே Surovikin  இன் ‘சிரிய தீர்வு’ என்ற இரு சொல்லில், அடங்கும் ஆழமான அர்த்தப்பாடாகும். ஆனால் இது போல அன்றி, ‘உக்ரைன் தீர்வு’ என்பது ஒரு ரஷ்ய நலனை தவிர்த்து, வேறு எந்த ஓர் நலனையும் கவனத்தில் கொள்ள சம்மதியாது, என்பதே Surovikin உள் கருத்தாக (வெளிப்படை அர்த்தமாக) அமைந்து போகின்றது.

மேலும் படிக்க ...

நூல் வெளியீடு - எல்.சாந்திகுமாரின் 'காலமும் மனிதர்களும்'

விவரங்கள்
- தகவல் - ஜோதிகுமார் -
நிகழ்வுகள்
03 டிசம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

நூல் அறிமுகம் - அ.வரதராஜா பெருமாளின் 'இலங்கையின் பொருளாதாரம்'

விவரங்கள்
- தகவல் - சிவா முருகுப்பிள்ளை -
நிகழ்வுகள்
03 டிசம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

தொடர் நாவல் - நவீன விக்கிரமாதித்தன் (14) - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
நாவல்
02 டிசம்பர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அத்தியாயம் 14   - யாதும் ஊரே! யாவரும் கேளிர்!

"கண்ணா என்ன மீண்டும் பலமான சிந்தனை?"

திரும்பிப்பார்க்கின்றேன். கேட்டவள் என் கண்ணம்மா, மனோரஞ்சிதம்.

"சங்ககாலப் புலவன் ஒருவனின் சிந்தனையைப்பற்றிச் சிந்தித்துக்கொண்டிருந்தேன் கண்ணம்மா. அவனது அனுபவத்தெளிவு மிகுந்த சிந்தனையின் வீச்சு என்னை எப்போதும் கவருமொன்று. அன்று அவன் சிந்தித்ததை இன்றுள்ள மனிதர்கள் உணர்ந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும், உலகம் எவ்விதம் ஒரு குடும்பம் போல் இன்பத்தில் மூழ்கி இனித்திருக்குமென்று எண்ணிகொண்டிருந்தேனடி. என் சிந்தனையை வழக்கம்போல் இடையில் வந்து குலைத்து விட்டாயடி என் செல்லமே."

"உன் சிந்தையில் எப்போதும் நானிருக்க வேண்டும் கண்ணா. எனக்குத் தெரியாமல் வேறு யாரும் இருக்கக் கூடாது கண்ணா."

"கண்ணம்மா, நீ எப்போதும் என் ஆழ்மனத்தில் குடியிருக்கின்றாய். அதிலிருந்து உன்னை நான் விடுவிக்கப் போவதேயில்லை. ஆனால் நான் சிந்திப்பது என் ஆழ்மனத்தாலல்லவே கண்ணம்மா."

"ஆழ்மனத்தில் நானிருக்கிறேன் என்கின்றாய். சிந்திப்பதோ அம்மனத்திலால் அல்ல என்கின்றாய். குழப்புகிறாயே கண்ணா."

"கண்ணம்மா, ஆழ்மனம் வேறு. சிந்திக்கும் புறமனம் , நனவு மனம் வேறு. புறமனத்தால் சிந்திக்கின்றேன்.ஆனால் ஆழ்மனத்தில் எப்போதும் போல் நீ நிறைந்திருக்கின்றாயடி"

'கண்ணா , உன் ஆழ்மனத்தில் மட்டுமல்ல, புறமனத்திலும் நான் தான் எப்போழுதும் நிறைந்திருக்க வேண்டும்." என்று செல்லமாகக் கட்டளையிட்டாள் என் கண்ணம்மா.

"கண்ணம்மா, அப்படி இருக்க எனக்கும் ஆசைதான். ஆனால் அப்படியிருந்தால் மனித வாழ்க்கை என்று ஒன்றிருக்கிறதே. அதையும் இழுத்துக்கொண்டோட வேண்டியிருக்கிறதே. பொருளுலகின் தேவை என்று ஒன்றிருக்கிறதே. என் கண்ணம்மாவைக் கண்ணை இமை காப்பதுபோல் காக்க வேண்டியிருக்கிறதே. அதற்காகவாவது புற மனத்தை நூறு வீதம் உனக்கு ஒதுக்குவது சாத்தியமில்லை. ஆனால் ஆழ்மனத்தில் இருக்கும் உன்னை அடிக்கடி நனவு மனத்துக்கு இழுத்து அசை போடுவதை மட்டும் , நனவு மனத்துக்குச் சிறிது ஓய்வு கிடைக்கும் சமயங்களில் செய்துகொள்வேன்."

இவ்விதம் நான் கூறவும் மனோரஞ்சிதம் சிறிது பொய்க்கோபத்துடன் "கண்ணா, எதையாவது செய்து தொலை." என்று  கூறிச் செல்லமாக கன்னத்தைக்கிள்ளினாள்.  அத்துடன் "அது சரி கண்ணா, சங்கப்புலவன் ஒருவனைப் பற்றிக்கூறினாயே. என்ன கூற வருகிறாய்?"

'கண்ணம்மா, இனம், மதம், மொழி, தேசம், வர்ணம், வர்க்கமென்று பிரிந்து கிடக்கும் நவகால மனிதர்கள் மோதாத நாளுண்டோ. விரிந்து செல்லும் இப்பிரபஞ்சத்தின் வாயுக் குமிழியாக விரையும் இக்கோளத்தினுள் வளைய வரும் நமக்கிடையில்தான் எத்தனை வகையான மோதல்கள்? இருப்பை நன்கு உணர்ந்திருந்தால், விளங்கியிருந்தால் இப்படியெல்லாம் ஆட்டம் போடுவோமா? இரத்தக்களரிகள், வறுமையின் கோரம் இவையெல்லாம் மானுடரின் நல் உணர்வுகளைச் சிதைத்து விட்டன. இல்லையா கண்ணம்மா. இந்த நிலையில்தான் அந்தச் சங்கத் தமிழ்க் கவிஞனின் அறைகூவல் முக்கியத்துவம் மிக்கதாகின்றதடி."

மேலும் படிக்க ...

மற்ற கட்டுரைகள் ...

  1. எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான எம். ரிஷான் ஷெரீப் உடனான நேர்காணல் - ஊடகவியலாளர் நஸார் இஜாஸ் -
  2. விமர்சி.காம் தளத்தில் 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு'
  3. கல்வி, மற்றும் ஆய்வுக்கான புதியதொரு சிங்கள இணையத்தளம் விமர்சி.காம்! - வ.ந.கிரிதரன் -
  4. இன்று என் தந்தை நினைவு நாள்! - வ.ந.கிரிதரன் -
  5. தொடர் நாவல் - நவீன விக்கிரமாதித்தன் (13) - நானொரு காலவெளிக்காட்டி வல்லுனன்! - வ.ந.கிரிதரன் -
  6. கவிதை: மனசுக்குள்ள மனசுக்குள்ள குடிசை கட்டி கதைகள் சொல்லும் கடலம்மா - தமயந்தி (தமயந்தி சைமன்) -
  7. தக்‌ஷிலா ஸ்வர்ணமாலியின் ‘பீடி’: (சிங்கள நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பு) சமகால இலங்கை நாவல்களில் முக்கியமான வரவு! -தேவகாந்தன் -
  8. சிறுகதை: சுவ்வே -- முனைவர் கோ.சுனில்ஜோகி, உதவிப்போசிரியர், தமிழ்த்துறை, குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி, கோவை. -
  9. ஆய்வு: இலக்கண அமைப்புமுறைக் கோட்பாட்டில் நன்னூல்- வினையியல் - முனைவர் ரா.பிரேம்குமார், உதவிப்பேராசிரியர், தமிழாய்வுத்துறை , ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருவானைக்கோவில்-5 -
  10. இரட்டை ஆத்துமாக்கள்! - அழகர்சாமி சக்திவேல் -
  11. பேரவையின் இலக்கியக்குழு வழங்கும் சிறுகதைக்கலை - அடிப்படைகளும் புரிதல்களும் - வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை (FeTNA) -
  12. ஆசிரியர் சோமசேகரசுந்தரம் மறைவு!
  13. தொடர் நாவல் - நவீன விக்கிரமாதித்தன் (12) - காலவெளிக் கூம்புக்குள் ஒரு கும்மாளம்! - வ.ந.கிரிதரன் -
  14. ஊமைகளின் உலகம்..! - குரு அரவிந்தன் -
பக்கம் 60 / 104
  • முதல்
  • முந்தைய
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60
  • 61
  • 62
  • 63
  • 64
  • அடுத்த
  • கடைசி