பதிவுகள் முகப்பு

குரு அரவிந்தன் எழுதிய 'ஆறாம் நிலத்திணை' நூலுகுப் பரிசு! - குரு அரவிந்தன் வாசகர் வட்டம் -

விவரங்கள்
குரு அரவிந்தன் எழுதிய 'ஆறாம் நிலத்திணை' நூலுகுப் பரிசு! - குரு அரவிந்தன் வாசகர் வட்டம் -
நிகழ்வுகள்
18 ஆகஸ்ட் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இனிய நந்தவனம் பதிப்பகம் வெளியிட்டுள்ள கனடா எழுத்தாளர் குரு அரவிந்தன் எழுதிய 'அறாம் நிலத்திணை" கட்டுரை நூல் கம்பம் பாரதி தமிழ் இலக்கியப் பேரவையின் 43 ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட சிறந்த நூல்களுக்கான போட்டியில் மூன்றாம் பரிசு பெற்றுள்ளது. 14-08-2022 அன்று கம்பத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் பாரதி தமிழ் இலக்கியப் பேரவைத் தலைவர் பாரதன் தலைமையில் எழுத்தாளர் ஜீவபாரதி பரிசினை வழங்க எழுத்தாளர் குரு அரவிந்தன் சார்பாக பதிப்பாசிரியர் நந்தவனம் சந்திரசேகரன் பரிசினைப் பெற்றுக்கொண்டார்.

மேலும் படிக்க ...

கிறிஸ்டி நல்லரெத்தினத்தின் கேலிச்சித்திரங்கள் (2)

விவரங்கள்
கிறிஸ்டி நல்லரெத்தினம் -
அரசியல்
17 ஆகஸ்ட் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மேலும் படிக்க ...

சொப்கா பீல் குடும்பமன்றம் ஒன்றுகூடல் - 2022 - குரு அரவிந்தன் -

விவரங்கள்
- குரு அரவிந்தன் -
நிகழ்வுகள்
17 ஆகஸ்ட் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

பீல் பகுதியில் உள்ள சொப்கா குடும்ப மன்ற ஒன்று கூடல் சென்ற ஞாயிற்றுக் கிழமை 07-08-2022 மிசசாகா கொம்யூனிட்டி சென்ரர் பூங்காவில் இடம் பெற்றது. புலம் பெயர்ந்து வந்த இங்குள்ள இளம் தலைமுறையினரின் வளர்ச்சியில் அதிக அக்கறை கொண்டு இயங்கிவரும் இந்த சொப்கா மன்றம், ஒன்று கூடலின் போது மிசசாகா உணவு வங்கிக்காகவும் உணவுப் பொருட்களைச் சேகரித்தது குறிப்பிடத் தக்கது. அங்கத்தவர்கள் மனமுவர்ந்து உணவுப் பொருட்களை கொண்டு வந்து சேகரித்தனர். உணவு வங்கிக்கு உணவு சேகரித்துக் கொடுக்கும் இந்த வழக்கம் பல வருடங்களாகத் தொடர்ந்தும் சொப்கா மன்றத்தால் நடைமுறைப் படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க ...

தற்கால வாழ்வியலுக்கு வழிகாட்டும் சங்க இலக்கியங்கள்!

விவரங்கள்
- தகவல்: பேராசிரியர் இ.பாலசுந்தரம் -
நிகழ்வுகள்
17 ஆகஸ்ட் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இலங்கை அரச வன்முறையைக் கண்டித்து கண்டனப் பொதுக்கூட்டம்!

விவரங்கள்
- தகவல்: எல்லாளன் -
நிகழ்வுகள்
17 ஆகஸ்ட் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

காலம்: ஆகஸ்ட் 20, 2022 மாலை 5மணி- 9 மணி.
இடம்: 3600 Kingston Road, Scarborough Community Centre

பதிவுகள் இணைய இதழும் அதன் ஆரம்ப கால இலக்கியப் பங்களிப்பும்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
16 ஆகஸ்ட் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஆரம்ப காலத்திலிருந்து வெளியாகும் தமிழ் இணைய இதழ்களான திண்ணை , பதிவுகளின் ஆரோக்கியமான இலக்கியப் பங்களிப்பு பற்றி நான் நிச்சயம் பெருமைப்படுகின்றேன். திருப்திப்படுகின்றேன். பதிவுகள் இணைய இதழைத் தொடங்கியபோது முக்கியமான நோக்கங்களாக இருந்தவை: என் படைப்புகளை இணைய மூலம் வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும். அதே சமயம் இணையத்தில் தமிழ் எழுத்துகளை எழுதுவதற்குத் தூண்டுகோலாகவிருக்க வேண்டும். இவ்விதமான எண்ணங்களோடு பதிவுகள் இணைய இதழை ஆரம்பித்தேன். அப்போது வலைப்பதிவுகள் ஏதுமில்லை. இவ்விதமானதொரு சூழலில் முரசு அஞ்சல் எழுத்துரு எனக்குப் பெரிதும் கை கொடுத்தது. ஏனென்றால் எனக்குத் தமிழ்த் தட்டச்சு செய்வதில் பெரிதும் ஆற்றலில்லை. ஆனால் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்வது அதனுடன் ஒப்பிடும்போது இலகுவாகவிருந்தது. இவ்விதம் பதிவுகள் இணைய இதழை ஆரம்பித்து படைப்புகளைத் தமிழில் பிரசுரித்தபோது அது இணையத்தில் தமிழ் வாசகர்களைக் கவர ஆரம்பித்தது. பலர் தம் படைப்புகளை அனுப்ப ஆரம்பித்தார்கள். அப்பொழுது அவ்விதம் படைப்புகளை அனுப்புபவர்களுக்கு நான் கூறியது: பதிவுகளுக்கு படைப்புகள் அனுப்புபவர்கள் படைப்புகளை பதிவுகளுக்கு உரிய எழுத்துரு பாவித்துத் தட்டச்சு செய்து அனுப்ப வேண்டுமென்பதுதான். இதற்கு முக்கிய காரணங்கள்: ஒன்று மீண்டும் தட்டச்சு செய்யும் சிரமம் இல்லை. அடுத்தது தமிழில் தட்டச்சு செய்வதன் மூலம் எழுத்தாளர்களை இணையத்தமிழுக்கு அறிமுகப்படுத்துவது. இவ்விதம் தமிழில் தட்டச்சு செய்து அனுப்பப்படும் படைப்புகளையே பதிவுகள் ஏற்றுக்கொண்டு பிரசுரிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளது.

மேலும் படிக்க ...

கிறிஸ்டி நல்லரெத்தினத்தின் கேலிச்சித்திரங்கள் (1)

விவரங்கள்
- கிறிஸ்டி நல்லரெத்தினம் -
அரசியல்
16 ஆகஸ்ட் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மேலும் படிக்க ...

சிறுகதை : ஞானம் - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
15 ஆகஸ்ட் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 

- ஓவியம் : கிறிஸ்டி நல்லரெத்தினம் ( மெல்பன் ) -

குணவர்தனா, தபாலில் வந்த கடிதத்தை படித்துவிட்டு, வீட்டின் விட்டத்தைப் பார்த்துக்கொண்டிருந்தான். கொவிட் பெருந்தொற்று தொடங்கிய காலத்திலிருந்து அவனும் வீட்டிலிருந்தே வேலை செய்கிறான். மனைவி நிலாந்தி பாடசாலைக்குச் சென்ற மகனை அழைத்துவரச்சென்று திரும்பும்போது, வீட்டு தபால் பெட்டியிலிருந்து எடுத்து வந்த கடிதத்தை அறையை தட்டி தந்துவிட்டு, மகனை குளியலறைக்கு கூட்டிச்சென்றாள்.

“ குணே… உங்கட உபாலியிடமிருந்து கடிதம். திரும்பவும் பணம் கேட்டு எழுதியிருக்கலாம் “ என்று முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு சொல்லியவாறுதான் அகன்றாள் நிலாந்தி.

குணவர்தனாவின் நெருங்கிய நண்பன்தான் உபாலி. அம்பாந்தோட்டையில் ஒரே கிராமத்தில், பிறந்த வளர்ந்து படித்தவர்கள். வீட்டுக்கஷ்டத்தால், கிராமத்து விகாரையிலிருந்த தர்மரத்ன சாதுவின் தூண்டுதலால் தேசத்தை விடுதலை இயக்கத்திடமிருந்து காக்க இராணுவத்தில் சேர்ந்து, இறுதிப்போரில் வலது காலை இழந்து முடமாகத் திரும்பியவன்.

குணவர்தனாவின் குடும்பப் பின்னணி செழிப்பாக இருந்தமையால் படித்து பட்டதாரியாக முடிந்தது, அவுஸ்திரேலியாவில் தொழில்வாய்ப்பும் பெற்று வரக்கூடியதாக இருந்தது.

மேலும் படிக்க ...

எழுத்தாளர் சீர்காழி தாஜ் பற்றிய நினைவுகள்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
15 ஆகஸ்ட் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- எழுத்தாளர் சீர்காழி தாஜ் -

எழுத்தாளர் அமரர் சீர்காழி தாஜ் அவர்கள் என் வாழ்க்கையில் மறக்க முடியாத தமிழக எழுத்தாளர்களிலொருவர். அவரது படைப்புகள் பல பதிவுகள் இணைய இதழிலும் வெளியாகியுள்ளன. 'தமிழ்ப்பூக்கள்' என்னும் பெயரில் வலைப்பதிவினை நடத்தி வந்தவர். அவ்வலைப்பதிவு தற்போதும் இயங்குகின்றது.

எழுத்தாளர் தாஜ், கலை,இலக்கிய விமர்சகர் வெங்கட் சாமிநாதன், எழுத்தாளர் 'நடு' கோமகன், நுணாவிலூர் கா.விசயரத்தினம் (பதிவுகளில் சங்கத்தமிழ் இலக்கியங்கள் பற்றி ஆக்கங்கள் பல எழுதியவர்) போன்றவர்களின் மறைவுகள் யாரும் எதிர்பார்த்திராத நேரத்தில் நடந்தவை. அதனால் அவர்களின் மறைவுச் செய்திகள் வெளியானபோது அவற்றை உள்வாங்குவது சிரமமாகவிருந்தது.

எழுத்தாளர் தாஜுடனான தொடர்பு ஏற்பட்டது பற்றிச் சிறிது கூறவேண்டும். முதலில் அவர் என் படைப்புகளின் வாசகராகவே எனக்கு அறிமுகமானார். தமிழகத்தில் ஸ்நேகா பதிப்பக வெளியீடுகளாக வெளியான எனது 'அமெரிக்கா' (சிறுகதைத்தொகுதி), நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (ஆய்வு நூல்) ஆகியவற்றைத் தமிழக நூல் நிலையங்களிலிருந்து பெற்று வாசித்து எனக்கு அவை பற்றி நீண்ட கடிதங்களை எழுதினார். அக்கடிதங்களை இன்னும் பாதுகாப்பாக என் கைவசம் வைத்துள்ளேன்.

இவ்விதம் எனக்கு அறிமுகமான தாஜ் அவர்கள் வைக்கம் முகம்மது பசீரின் ' எங்கள் தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது' நாவலை நான் தேடிக்கொண்டிருந்தபோது 'டொரோண்டோ'விலுள்ள அவரது நண்பர் ஒருவரினூடு அனுப்பி வைத்தார். அதனை இன்னும் அவர் நினைவாக வைத்துள்ளேன்.

மேலும் படிக்க ...

ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் நடத்தும் இணைய வழிக் கலந்துரையாடல்: " நவீன தொலைநோக்கியும் தூரப்பார்வையும் (James Webb Space Telescope)" (அறிவியல் தொடர் - 8)

விவரங்கள்
- தகவல்: பேராசிரியர் நா.சுப்பிரமணியன் -
நிகழ்வுகள்
13 ஆகஸ்ட் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மேலும் படிக்க ...

ஆய்வு: முத்தொள்ளாயிரம் காட்டும் யானைமறம்! - முனைவர் ந.சுமதி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறைத் தலைவர், சுவாமி விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஒரத்தூர், விழுப்புரம். -

விவரங்கள்
- முனைவர் ந.சுமதி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறைத் தலைவர், சுவாமி விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஒரத்தூர், விழுப்புரம். -
ஆய்வு
13 ஆகஸ்ட் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

முன்னுரை
பழந்தமிழ் இலக்கியச் செல்வங்களுள் இன்று குறை நூலாய்க் கிடைத்துள்ளவற்றுள் முத்தொள்ளாயிரமும் ஒன்றாகும். புறத்திரட்டு நூலிலிருந்து தொகுக்கப்பட்ட நூற்றெட்டுப் பாடலோடு பழைய உரைகளிலிருந்து தொகுக்கப்பட்ட இருபத்திரண்டு பாடல்களும் சேர்ந்து தற்பொழுது வழக்கில் இருப்பது நூற்று முப்பது பாடல்களாகும். மூன்று, தொள்ளாயிரம் ஆகிய இரு சொற்களும் சேர்ந்து முத்தொள்ளாயிரம் எனப் பெயர் பெற்றது. இந்நூற்பாடல்கள் சேர, சோழ, பாண்டியர் ஆகிய மூவர் வரலாற்றையும் சுட்டுகின்றன. ஒவ்வொருவருக்கும் தொள்ளாயிரம் பாடல்கள் வீதம் இரண்டாயிரத்து எழுநூறு பாடல்களைக் கொண்ட இந்நூல் கனலாலும், புனலாலும், காற்றாலும், காழ்ப்பாலும் அழிந்தன போக எஞ்சிய நூற்று முப்பது பாடல்களைக் கொண்டுள்ளது.

இவற்றுள் ஒவ்வொரு பகுதியும் நாடு, நகர் பகைப்புலம் அழித்தல், திறை, எயில் கோடல், குதிரை மறம், யானை மறம், களம், வென்றி, புகழ், கைக்கிளை எனப் பல்வேறு குறிப்புகளைக் கொண்டுள்ளது. முத்தொள்ளாயிரம் மூவேந்தரின் வீரச் சிறப்பினையும், குதிரை, யானைப் படைகளின் தன்மையையும் இனிதே எடுத்துரைக்கின்றது. மூவேந்தரிடமும், யானைப் படைகள் சிறந்து விளங்கியது. அவ்யானைகள் பகைவரின் உயிரைக் குடிக்கும் கூற்றுவனைப் போல் விளங்கின. தம் நாட்டின் வெற்றிக்கு யானைப்படை முக்கியம் என்பதை உணர்ந்த மூவேந்தர்களும் யானைகளை நன்கு பராமரித்தனர். அவ்வாறு அவர்கள் பராமரித்த யானைகளின் மறம் (வீரம்) பற்றி விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

ஆய்வுச் சுருக்கம்
முடிவுடைய மூவேந்தர்களும் யானைப் படையை வைத்திருந்தனர். அப்படையில் உள்ள யானைகள் ஒவ்வொன்றும் போர்க்குணம் கொண்டவை. பகைவரைக் கண்டவுடன் கடிது சென்று அழிக்கும் திறன் கொண்டவை. பகைவரைக் கொன்று குவிக்கும் களக் காட்சியையும், யானையின் வீரத்தையும் முத்தொள்ளாயிரப் பாடல்கள் எடுத்துரைக் கின்றன. மேலும்,

 யானைமறம்
 சேரனின் யானைமறம்
 சோழனின் யானைமறம்
 பாண்டியனின் யானைமறம்

என்னும் தலைப்பில் முடிவுடை மூவேந்தர்களின் யானை படையின் இயல்பினைக் கூறுவதாக இவ்வாய்வுக் கட்டுரை அமைகின்றது.

மேலும் படிக்க ...

அஞ்சலி: 'ஆகாசவாணி செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயணசுவாமி!'

விவரங்கள்
- வானாநானாகீனா-
கலை
13 ஆகஸ்ட் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஆளுமைகள் சிலர் எங்களையறியாமல் எம் வாழ்க்கையில் பின்னிப் பிணைந்திருப்பார்கள். அவ்வித ஆளுமையாளர்களிலொருவர் 'ஆல் இந்தியா ரேடியோ'வில் செய்தி வாசிப்பாளராக எழுபதுகளில் விளங்கிய சரோஜ் நாராயணசுவாமி அவர்கள்.

உண்மையில் இவரது செய்திகளை அதிகம் நான் எதிர்பார்த்துக் கேட்டதில்லை. 'ஆல் இந்தியா ரேடியோ'வில் அவ்வயதில் நான் அதிகம் விரும்பிக் கேட்பது புதன் இரவு 10மணியிலிருந்து 11 மணிவரையிலான நேயர் விருப்பம் நிகழ்ச்சியைத்தான். பழைய பாடல்களை ஒலிபரப்புவார்கள். நிச்சயமாக 'தொட்டால் பூ மலரும்', 'கண்களிரண்டும்', 'பேசுவது கிளியா' பாடல்க:ள் அவற்றிலிருக்கும். இவ்விதமாகப் பழைய பாடல்களைக் கேட்பதற்காக மட்டும் 'ஆல் இந்தியா வானொலி'யைக் கேட்பதுண்டு. எம்ஜிஆர் திமுகவிலிருந்து பிரிந்த காலகட்டத்தில் மட்டும் இந்தியச் செய்திகளைக் கேட்பதற்காகவும் அதனைப் பயன்படுத்துவதுண்டு.

மேலும் படிக்க ...

கவிதை : குருமண்காட்டு நினைவுகள்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
12 ஆகஸ்ட் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

நான் பால்யப் பருவத்துக் குருமண்காட்டை
நனவிடை தோய்கின்றேன். ஏன்?
நனவிடை தோய மட்டுமே என்னால் முடியும்.
நனவிடை தோய்தலன்றோ சாத்தியமானதொன்று.
ஏன்?
காலம் செய்த கோலமது!
போர் பின் பொருள், மானுடர்தம்
பேரார்வம்.
இவற்றால் என் குருமண்காடு
இன்றில்லை. அங்கு
இன்றில்லை!

இயற்கையின் வனப்பில்
இலங்கிய குருமண்காட்டில்
நடை பயின்றேன்.
வனமும், வாவியும் நிறைந்த
வளமானபூமியென் குருமண்காடு.
அந்தக் காட்டை இன்று நான் காணவில்லை.
அந்த வனப்பை, அந்த வளத்தை,
என்றுமே நான் காணப்போவதில்லை.
அது இனி நினைவுகளில் நிற்குமோருலகம்!

மேலும் படிக்க ...

ஓவியர் மாயாவின் மாயாலோகம்!  - வானாநானாகீனா -

விவரங்கள்
- வானாநானாகீனா -
கலை
11 ஆகஸ்ட் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எங்கள் பால்ய, பதின்ம வயதுகளில் எம் வெகுசன வாசிப்பு வெறி மிகுந்திருந்த காலத்தில் எழுத்தாளர்களைப்போல் அவர்களின் கதைகளுக்கு ஓவியங்கள் வரைந்த ஓவியர்களும் எம்மை மிகவும் கவர்ந்திருந்தார்கள். வினு, கோபுலு, மாருதி, வர்ணம், லதா, ஜெயராஜ், மாயா, கல்பனா, விஜயா என்று ஓவியர்களின் பட்டாளமேயிருந்தது. அவர்களில் மாயாவின் ஓவியங்களும் முக்கியமானவை.

எழுபதுகளில் எழுத்தாளர் மணியன் விகடனின் நட்சத்திர எழுத்தாளராக விளங்கினார். அவரது தொடர்கதைகள் அக்காலகட்டத்தில் வாசகர்கள் மத்தியில் மிகுந்த ஆதரவைப்பெற்றிருந்தன. 'காதலித்தால் போதுமா' வில் தொடங்கி, நீரோடை, இதய வீணை, நெஞ்சோடு நெஞ்சம், தேன் சிந்தும் மலர், உன்னை ஒன்று கேட்பேன், உண்மை சொல்ல வேண்டும், என்னைப் பாடச்சொன்னால் என்று விகடனில் தொடர்கதைகள் பலவற்றை எழுதினார் மணியன்.

மேலும் படிக்க ...

ஆர்மேனியர்களும் இலங்கைத் தமிழர்களும். 'தலைமுறைதாண்டிய காயங்கள்' என்னும் சிறுகதையை முன்னிறுத்தி, எனது பார்வை. - ரஞ்ஜனி சுப்ரமணியம் -

விவரங்கள்
- ரஞ்ஜனி சுப்ரமணியம் -
ரஞ்ஜனி சுப்ரமணியம்
10 ஆகஸ்ட் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

புனைவிலக்கியம் என்பது வெறும் எண்ணங்களின் அழகியல் வடிவம் மட்டுமே சார்ந்ததல்ல. அதில் அறிவின் தேடுதலும் இணைந்தே அமைந்திருந்தால் வாசிப்பனுபவத்தின் பெறுமதியை நிச்சயம் மேலோங்கச் செய்யும். இவ்வகையான நியாயமான எண்ணங்கள் உள்மன ஓரத்தில் எட்டிப் பார்க்கும் போதெல்லாம், ஆசி கந்தராஜா அவர்களின் படைப்புகள் என் நினைவில் தோன்றும். அவரது கதைகளை நான் அதிகம் வாசித்திருக்கிறேன் என்பது ஒரு காரணமாக இருந்தாலும், அவ்வாறு வாசிக்கத் தூண்டும் ஆர்வத்தை அது நிச்சயம் கொண்டிருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. ஒரு வரலாறு ஆவணப்படுத்தலாக மட்டுமே முன்வைக்கப் படுவதை விட, புனைவின் சிறப்பும், சுவாரசியமும் சேரும் போது வாசகனின் உள்வாங்கல் அதிகரிக்கிறது, நினைவிலும் நிலைக்கிறது.

இவரது படைப்புகள், புனைவுகள் மட்டுமே அல்ல. வரலாற்றுத் தளம்கொண்ட உண்மைகள் மட்டுமேயும் அல்ல. இவற்றில் பெரும்பாலானவை தமது விரிவுரைகள் நிமித்தம் சென்ற பல்வேறு தேசங்களில் அவர் சந்தித்த மனிதர்களின் நிஜவடிவம் சார்ந்த புனைவுகளே என்பது படைப்பாளியுடனான உரையாடல்களின் மூலம் நான் அறிந்தது. ஒரு ஆத்மார்த்த வாசகனுக்குப் புரியும், படைப்பாளியி்ன் நிஜங்கள் எங்கெங்கே வெளிப்படுகின்றன என்பது. அவர் சென்று வந்த தேசங்களின் மனிதர்கள், சரித்திரம், கலாசாரம் என்பவற்றில் முக்கியமான அம்சங்கள் கதைகளில் பரந்திருக்கின்றன.

கதைக்களங்கள் வெறும் புறவய சித்தரிப்புகள்தானே என மேலோட்டமாகக் கடந்துவிட முடியாதபடி, அவற்றால் உருவாகும் தாக்கமே கேள்விகளின் திறவுகோலாக அமைவதால், குறையாக உறுத்துவதில்லை. மாறாக வாசகரின் சிந்தனையைத் தூண்டி அகத்தேடலுக்கும், புறத்தேடலுக்கும் களம் அமைக்கும் வழி காட்டியாகவே அமைகிறது. வாசிப்பின் முடிவில், வாசகர் தமது உணர்வு வெளிப்பாட்டை தானாகச் சென்றடைதலே ‘ஆசி’யின் எழுத்தின் சிறப்பம்சம் எனவும் உணரப்படும். அதுவே படைப்பாளியின் வெற்றி.

அவ்வாறான சிறப்புப் பெற்ற புனைவுகளில் உலகளாவிய ரீதியில் பல்வேறு ஒடுக்குமுறைகளையும், இனபேதத்தின் வடிவங்களையும், இனமதமொழி சார்ந்த மனிதப் படுகொலைகளையும் மூலச்சரடாகக் கொண்ட அவரது படைப்புகள் பலவற்றை இனம் காணலாம். தலைமுறை தாண்டிய காயங்கள், கையதுகொண்டு மெய்யது பொத்தி, விலாங்குமீன்கள், எதிரியுடன் படுத்தவள், தூதர்கள், அசைல், நரசிம்மம், கிழக்கும்மேற்கும், யாவரும் கேளிர், மைனாக்கள், சூக்குமம் ஆகியன சிறப்பாகக் குறிப்பிடத்தக்கன.

மேலும் படிக்க ...

கவிதை: புத்தரின் படுகொலை!   - எம்.ஏ.நுஃமான் -

விவரங்கள்
- எம்.ஏ.நுஃமான் -
கவிதை
10 ஆகஸ்ட் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 - யாழ் நூலக எரிப்பு பற்றிப் பேராசிரியர் எம்.ஏ.நுஃமான் எழுதிய கவிதை. இலங்கைத் தமிழ்க் கவிதைப்பரப்பில் முக்கியமானதொரு கவிதை. -

நேற்று என் கனவில்
புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.
சிவில் உடை அணிந்த
அரச காவலர் அவரைக் கொன்றனர்.
யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே
அவரது சடலம் குருதியில் கிடந்தது.
இரவில் இருளில்
அமைச்சர்கள் வந்தனர்.
‘எங்கள் பட்டியலில் இவர்பெயர் இல்லை
பின் ஏன் கொன்றீர்?’
என்று சினந்தனர்.

மேலும் படிக்க ...

இன்று ஓகஸ்ட் 10 - பேராசிரியர் நுஃமானுக்கு 78ஆவது பிறந்த தினம்! இலக்கிய உலகம் கொண்டாடும் இந்த ஆளுமையின் கவிதை காலிமுகத்திடலிலும் ஒலித்தது ! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
10 ஆகஸ்ட் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- இன்று தனது  78ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் பேராசிரியர் எம்.ஏ.நுஃமானுக்குப் 'பதிவுகள்' இணைய இதழும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது. -


நூறு நாட்களையும் கடந்து தொடர்ந்த காலிமுகத்திடல் போராட்டம் பல காட்சிகளை கண்டது. அதனை உள்நாட்டினர் மட்டுமல்ல சர்வதேச சமூகமே தினம் தினம் பார்த்தது. குறிப்பிட்ட காலிமுகத்திடல் பேராட்டத்தில் யாழ்ப்பாணத்தில் 1981 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் அன்றைய ஆட்சியாளர்களின் மெத்தனப்போக்கினால், அரச கூலிப்படைகளே பொது நூலகத்தை எரித்து சாம்பராக்கியது. 41 ஆண்டுகள் கடந்த பின்னரும் புத்தகப்பிரியர்கள் அனைவரது மனதிலும் அந்த நெருப்பு கனன்றுகொண்டுதானிருக்கிறது. யாழ். பொது நூலக எரிப்பின் பின்னணியில் எங்கள் தேசத்தின் முன்னணிக்கவிஞரும் படைப்பிலக்கிய ஆளுமையும் எனத் பேராசிரியருமான எம். ஏ. நுஃமான் அவர்கள் எழுதிய “ நேற்று என் கனவில் புத்தர் பெருமான்… “ எனத்தொடங்கும் கவிதை உலகப்பிரசித்தம். இக்கவிதை தமிழில் எழுதப்பட்டிருந்தாலும், பின்னர் ஆங்கிலம் – சிங்களம் மொழிகளிலும் பெயர்க்கப்பட்டதை அறிவீர்கள். காலிமுகத்திடல் போராட்டத்தில் யாழ். பொது நூலக எரிப்பும் நினைவுகூரப்பட்டபோது நுஃமானின் குறிப்பிட்ட கவிதையும் பேசுபொருளானது. அந்த அரங்கில் அக்கவிதை மும்மொழியிலும் மக்களால் சொல்லப்பட்டது. இக்காட்சியை அவுஸ்திரேலியாவிலிருந்து நானும் காணொளியூடாக பார்த்துக்கொண்டிருந்தேன். இன்றைய தினம் ஓகஸ்ட் 10 ஆம் திகதி தனது பிறந்த தினத்தை கண்டியில் அமைதியாக கொண்டாடிக்கொண்டிருக்கும் எமது நண்பர் நுஃமானும் அக்காணொளியை பார்த்திருப்பார்.

காலம் கடந்தும் பேசப்படும் அக்கவிதையை எழுதியவரை இன்றைய தினம் தொலைபேசி ஊடாக வாழ்த்திவிட்டு, அவரது ஆளுமைப்பண்புகளை விபரிக்கும் இந்த நனவிடை தோய்தற் குறிப்புகளை எழுதுகின்றேன். நுஃமான் கல்வித்துறையில் எவ்வாறு படிப்படியாக உயர்ந்து இன்று தகைமைசார் பேராசிரியராக விளங்குகிறாரோ அவ்வாறே தாம் சார்ந்த இலக்கியத்துறையிலும் படிப்படியாக உயர்ந்து முன்மாதிரியாகியிருப்பவர் கவிஞர், விமர்சகர், ஆய்வாளர், மொழியியல் அறிஞர், பேராசான், பதிப்பாளர் முதலான பன்முகம் கொண்டவர். இலக்கியப்பிரவேசத்தில் அவர் ஆரம்பத்தில் சிறுகதைகளும் எழுதியிருக்கிறார்.

மேலும் படிக்க ...

பயனுள்ள மீள்பிரசுரம்: ஒரு உலகத்தில் ஒரு வீட்டில் ஒரு மனிதன்! - விஷால் ராஜா -

விவரங்கள்
- விஷால் ராஜா -
இலக்கியம்
07 ஆகஸ்ட் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- அகழ் இணைய இதழின் ஜூலை/ஆகஸ்ட் 2022 பதிப்பில் வெளியான கட்டுரையிது. எழுத்தாளர் ஜெயகாந்தனின் மிகச்சிறந்த நாவலாகக் கருதப்படும் 'ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்' நாவல் பற்றிய விமர்சகர் விஷால் ராஜாவின் கட்டுரை. நன்றியுடன் மீள்பிரசுரம் செய்கின்றோம். - பதிவுகள்.காம் -


பள்ளி இறுதி வகுப்பை முடித்து கல்லூரிக்கு தயாராகிக் கொண்டிருந்த நண்பர்கள், மீசை முளைத்த, ஓட்டுப் போடும் வயது நெருங்கிய பரவசத்தில், வாழ்க்கை பற்றி அன்று பெரிய திட்டங்கள் வகுக்கத் தொடங்கினோம். ஒரு நண்பன் ஆவேசமாக சொன்னான். “சும்மா செங்கல்லை வைத்து ஒரு வீடு கட்டுவதற்காக மொத்த ஆயுளையும் வங்கியில் அடமானம் வைக்கும் சாதாரண வாழ்க்கையை நான் தேர்வு செய்யப் போவதில்லை”. உலகம் முழுக்க பயணம் செய்ய வேண்டும் என்பது அவன் கனவாக இருந்தது. மற்றவர்கள் கைத்தட்டி அவன் பேச்சை வரவேற்றோம். ஒரு தசாப்தம் கடந்து, இன்று திரும்பி பார்த்தால் சுற்றியுள்ள ஊர்களில் ஒவ்வொரு சதுர அடியும் என்ன விலை போகிறது என்கிற தகவலை அதே நண்பனிடம்தான் பலரும் கேட்டுத் தெரிந்து கொள்கிறார்கள். எந்த வீட்டை பார்த்தாலும் அதன் செலவு என்ன மதிப்பு என்ன என்பதை உடனடியாக கணக்கிட்டுவிடுகிறான். “கல்யாணம் முடிந்து கார் வாங்கியாகிற்று. அடுத்து வீடு வாங்கி செட்டில் ஆக வேண்டும் நண்பா” என்று அழுத்தமாக சொல்கிறான். தன் பழைய சூளுரையும் ஆக்ரோஷமும் இப்போது அவனுக்கே ஞாபகம் இருக்குமா என்று தெரியவில்லை. ஆனால் இது ஆச்சர்யமூட்டும் தனி நிகழ்வல்ல. இயல்பாக நம்மிடையே வந்து சேர்கிறது இம்மாற்றம். முதிரா இளமையில் வீட்டை விட்டு வெளியேற துடிக்கிறோம். உலகம் வீட்டுக்கு வெளியே இருப்பதாகத் தோன்றுகிறது. அப்புறம் சீக்கிரமே நமக்கென்று ஒரு வீடு கட்டி அமைந்துவிட விருப்பம் வருகிறது. அதன் பாதுகாப்பை நாடத் தொடங்குகிறோம்.

வீடு கட்டுவது இந்த உலகின் ஆசைகளோடு மனிதன் செய்து கொள்ளும் நிபந்தனையில்லாத உடன்படிக்கை. மனிதனுடைய உலகியல் நாட்டம், வாழும் இச்சை, உரிமைக் கோரல் இவை அனைத்தின் பரு வடிவமாகவும் இருக்கிறது வீடு. அதனால்தான் எந்த கனவையும் அது எளிதில் உட்கொண்டு செரித்துவிடுகிறது. செருப்பை வாசலில் கழற்றி போட்டு வீட்டிற்குள் நுழைந்துவிட்டால், அதற்கு பிறகு நாம் உலகைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. வெளியே இருக்கும் உலகம் மற்றமை ஆகிவிடுகிறது. உலகின் வன்முறை, சுரண்டல், ஆச்சர்யம் எல்லாமே தொலைக்காட்சி செய்திகள் மாத்திரமே. வீட்டுக் கூடத்தில் சௌகர்யமாக அமர்ந்து அவற்றை கண்டு களிக்கலாம். ஒருவன் தன் வீட்டினுள் இருக்கும்போது- அதன் சுவர்களின் அணைப்பிலேயே- முழுமையான தனி மனிதனாக உணர்கிறான். அங்கே அவனுக்கு சமூகப் பங்கில்லை. அல்லது சமூகப் பங்கை மறப்பதற்கான வாய்ப்பு கிடைக்கிறது. சாயுங்காலம் வீட்டுக்கு வந்து சட்டையை ஹேங்கரில் மாட்டிவிட்டு நாற்காலியில் சாய்வது சமூக பாத்திரத்திலிருந்து விடுபடுவதும்தான்.

மேலும் படிக்க ...

கிளிம் வாழ்வின் மூன்றாம் தொகுதி: -தமிழ் இலக்கிய உலகை, முன்னிறுத்தி (8) - ஜோதிகுமார் -

விவரங்கள்
-  ஜோதிகுமார் -  8
ஜோதிகுமார்
07 ஆகஸ்ட் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அத்தியாயம் எட்டு!

கிளிம்மின், மாகாணத்தை நோக்கிய நகர்வு, முன்னரே குறித்தவாறு, மரீனாவால் ஏற்படுகின்றது.

தத்துவ தேடல் - வெறுமை நிறைந்த மனம் - வெளிறத் தொடங்கும் உணர்வுகள் - இந்த பின்னணியில் - மரீனா – என்ற மூவெழுத்து, இவை அவனுள் ஒரு பிடிப்பை ஏற்படுத்துகின்றன. அவளது, அறிவும் - அழகும் - ஸ்பரிசமும் - ஒரு தேவதையின் பாற்பட்டது என்றளவில் முடிவெய்துகிறான் கிளிம். இருந்தும் மர்மங்கள்…?

அவள், அவனை ஊடுருவி, அவனை எளிதாக இனங்கண்டு, அப்படியான தன் அபிப்பிராயத்தை, பின்வருமாறு, அவனிடம் நேரடியாகவே கேட்கின்றாள். “ஜார் நடைமுறைப்படுத்தும் இந்த ஜனநாயக ஏற்பாடுகள் - டூமா (பாராளுமன்றம்) போன்றவை, ‘அதிகாரங்களை எந்த வழியிலாவது பெற்றுக்கொள்ள ஏங்கும், எமது புத்திஜீவிகளுக்கு பொருத்தமானது…’ ஆனால் உனக்கு…?”– புன்னகைத்தவாறே, கேட்பாள், அவள்.
மரீனாவின் தனிப்பட்ட வழக்குரைஞனாக, அடி எடுத்து வைக்கும் கிளிம், காலப்போக்கில் அவளுடன் மிக அந்நியோன்யமாக, நெருக்கமாகப் பழக நேரிடுகிறது.

கிட்டத்தட்ட, மூன்று வருடங்கள் முடியும் தருவாயில், கிளிம்மின், நெற்றியில், ஆதரவாய் முத்தமிட்டு, அவனை வழியனுப்பி வைக்கும் அளவிற்கு அவர்கள் உறவு மேம்படுகின்றது.

இக்காலப்பகுதியில், அவளது தயவினால், கிளிம்மின் பொருளாதார நிலை மாத்திரமல்ல, அவனது பரிதவித்த – பிளவுண்ட – மனநிலை கூட  ஒரு ஸ்தீரதன்மையை எட்டிப் பிடித்து விடுகின்றது.

அவள் தொடர்பில் உடல் ரீதியாகவும், உளரீதியாகவும் ஓரளவுக்கு ஈர்க்கப்படும் கிளிம்மிடம் மீளமீள பிறக்கும் கேள்வி: யார் இவள்? இவ்வளவு ஆளுமையுடனும் நிதானத்துடனும் உலக நடப்புகளை – அவை இலக்கியம், அரசியல், தத்துவம், மனிதர்கள் - என்று எவையானாலும் சரி – அவை தொடர்பான பிரச்சினைகளால் ஒரு சிறிதேனும் நிலைகுலைந்து விடாமல் - அனைத்தையுமே, ஓர் சிறு புன்னகையுடன் சாவதானமாய் - எதிர் கொள்ளும் இந்த பெண் உண்மையில் யார்? இவளை நிலைநிறுத்தும் அந்த சக்தி எது? எந்த ஆயுதத்தின் துணைக்கொண்டு, இவள் இப்படியாய் வலம் வருகிறாள்…?

மேலும் படிக்க ...

சிறுகதை: சிலபேருக்கு தாங்கள் தமிழ் எண்டு சொல்ல வெட்கம்’ – கே.எஸ்.சுதாகர் -

விவரங்கள்
– கே.எஸ்.சுதாகர் -
சிறுகதை
07 ஆகஸ்ட் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இந்தக்கிழமை முழுவதும் இரவு வேலை செய்யவேண்டும். இரவு நேரங்களில் வைத்தியசாலையின் அவசரபிரிவிற்கு வருபவர்களில் கொஞ்சம் வித்தியாசமானவர்களும் இருப்பார்கள். வெறி முற்றியவர்கள், போதைவஸ்துக்கள் பாவித்து கிலி முற்றியவர்கள் என பல ரகம். சாதி மத இன பால் பாகுபாடுகளின்றி எல்லாநாட்டு மனிதர்களும் இதற்குள் அடக்கம். அவர்களை ஒரு கொன்ரோலுக்குள் கொண்டுவருவது மிகவும் கடினம். நான் ஒரு பெண் தாதி என்பதையும் மறந்து, என் கை கால்களையும் பிடித்துவிடுவார்கள்.

தமிழ்மக்கள் இப்படி வரும்போது நான் ஒடுங்கிப் போவேன். அவர்களுக்கு நான் ஒரு தமிழச்சி எனக் காட்டிக் கொள்ள விரும்புவதில்லை. அவர்கள் அதை அனுகூலமாக்கிக் கொண்டுவிடுவார்கள். இரவு பத்துமணி இருக்கும். ஒருவர் தலைவிரி கோலத்தில் வந்தார். வயது ஐம்பதிற்கு மேல் இருக்கலாம். அம்புலன்சில் வந்திருந்தார். எலும்புக்கூடு போன்ற உருவம். உடம்பில் ஆடைகள் இல்லை. ஆடைகள் இல்லையென்றா சொன்னேன்! இடுப்பில் ஒரு சாரம் சுருள் சுருளென்று சுருண்டு ஒரு கயிறு போல் ஆகியிருந்தது. உள்ளே எந்தவிதமான மறைப்பு ஆடைகளும் இல்லை. தலைகீழாகக் கவிண்டு கிடந்தார். தலை `அப்சைட் டவுணாகக்’ கிடந்தபோதும், அவரின் பார்வை என்மேல் தான் நிலைகுத்தியிருந்தது. ஊசிப்போன வாழைப்பழமொண்றும் நாறல்பாக்குகள் இரண்டும் கவனிப்பாரற்றுக் கிடந்தன.

மேலும் படிக்க ...

தேடியெடுத்த கட்டுரை: வில்லூன்றி மயானம்! - அ.ந.கந்தசாமி -

விவரங்கள்
- அ.ந.கந்தசாமி -
அறிஞர் அ.ந.கந்தசாமி பக்கம்
05 ஆகஸ்ட் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

-  'மல்லிகை' சஞ்சிகையின் 15.10.67 இதழில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் 'வில்லூன்றி மயானம்' என்னும் இக் கட்டுரை வெளியாகியுள்ளது. அ.ந.க மறைந்தது 14.02.1968இல். ஆனால் இக்கட்டுரை அதற்குச் சில மாதங்களுக்கு முன்னர் அவர் எழுதிய கட்டுரை. அந்த வகையில் அவரது கடைசிக்காலத்தில் எழுதப்பட்ட படைப்புகளிலொன்றாக இதனைக் கருதலாம்.  1944இல் சாதியின் பெயரால் நடாத்தப்பட்ட 'வில்லூன்றி மயானப்படுகொலை' பற்றி 1944 நவம்பர் 9ந் தேதி 'தினகரன்' தினசரியில் அ.ந.க வில்லூன்றி மயானம் என்றொரு கவிதையை எழுதியிருக்கின்றார். அப்பொழுது அ.ந.க.வுக்கு வயது இருபது. அதன் பின்னர் மல்லிகையில் இக்கட்டுரையை எழுதும்போது அவருக்கு வயது 43. அ.ந.க.வின் இக்கட்டுரை அவரது அந்திமக் காலத்தில் வெளியான அவரது படைப்புகளில் ஒன்று என்ற வகையிலும் முக்கியத்துவம் மிக்கது. - பதிவுகள்.காம் -


 வில்லூன்றி மயானம்! - அ.ந.கந்தசாமி -

யாழ்ப்பாணத்தில் மீண்டும் சாதிப்பேயின் கோரதாணடவம். கொடிகாமத்தில், அச்சுவேலியில் , சங்கானையில் இரத்த களரி - இவற்றை எல்லாம் கேட்கும்போது நாம் வாழ்வது இருபதாம் நூற்றாண்டா என்று கேட்கத் தோன்றுகிறதல்லவா? மனிதனை மனிதனாக மதிக்காத சமுதாயத்தின் அநியாயச் சட்டங்களை அடியோடு தகர்த்தெறிய வேண்டும் என்று துடி துடிக்காத முற்போக்குவாதி யார்? 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்று வாயளவில் பேசிக்கொண்டு தீண்டாமைப்பேயை இரகசியமாகவும், பகிரங்கமாகவும் இன்னும் வாலாயம் செய்து வரும் சாதி வெறியர்களை என்னவென்பது? சாதிப்பேயின் வெறியாட்டம் சங்கானையில் ஐம்பது வயதுக்கார்த்திகேசுவின் உயிரைக் குடித்துள்ளது. யாழ்ப்பாணக் குடாநாட்டின் சாதி ஒழிப்புப் போரில் இந்தக் கார்த்திகேசு இரண்டாவது நரபலி. முதலாவது நரபலி 1944ம் ஆண்டு செப்டம்பர் 26ந் தேதியன்று வில்லூன்றிச் சுடலையில் மாலை ஆறு, எழ்ழு மணியளவில் முகிலுக்குப் பின்னே மறைந்தும் வெளிவந்தும் கொண்டிருந்த சந்திரன் சாட்சியாக அளிக்கப்பட்டது. 'டுமீல்' என்று ஒரு துப்பாக்கி வேட்டு. இலங்கை முழுவதும் அதனால் அதிர்ச்சி! யாழ்ப்பாணம் ஆரியகுளத்து முதலி சின்னத்தம்பி தியாகியானான்.

மேலும் படிக்க ...

சங்க இலக்கியத்தில் ‘மிளகு‘ - ஒரு பார்வை! - முனைவா் பெ.கி.கோவிந்தராஜ், உதவிப்பேராசிரியா், தமிழ்த் துறை, மஜ்ஹருல் உலூம் கல்லூரி, ஆம்பூா் 635 802, திருப்பத்தூா் மாவட்டம் -

விவரங்கள்
- முனைவா் பெ.கி.கோவிந்தராஜ், உதவிப்பேராசிரியா், தமிழ்த் துறை, மஜ்ஹருல் உலூம் கல்லூரி, ஆம்பூா் 635 802, திருப்பத்தூா் மாவட்டம் -
ஆய்வு
04 ஆகஸ்ட் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

முன்னுரை

நோயில்லா நெறியை உணர்த்துவது உணவு நெறியாகும். உடலுக்கு ஒவ்வாத உணவு என்னும் வகை உணவை நீக்கி விட்டு, உடலுக்கு மனத்துக்கும் ஏற்ற உணவை உட்கொண்டால் உடலுக்கு மட்டுமல்ல உயிருக்கும் குற்றம் உண்டாகாது என்பர். உணவே உயிர் வாழ்வதற்குத் தேவையாகவும், உணவே உடல் நோய்க்கு மருந்தாகவும், அவ்வுணவே பல சமயங்களில் உடல் நோயைக் கொடுக்கும் மருந்தாகவும் அமைவதுண்டு. நாம் அன்றாட சமையலுக்கு பயன்படுத்தும் மிளகு கருப்பு தங்கம் என்று அழைக்கப்படுகிறது. அதனால் பல நூறு ஆண்டுகளுக்கு மேலாக மிளகை வணிகத்திற்கு பயன்படுத்தி வந்துள்ளனா். ஐரோப்பாவில் அந்த காலத்தில் பெண்ணிற்கு திருமணம் செய்து வைத்து சீதனமாக மிளகை தான் கொடுத்து வந்துள்ளனர். அந்த அளவிற்கு மிளகு மிகவும் விலை உயா்ந்த பொருளாக இருந்துள்ளது. இப்பொழுது ஒரு கிலோ தங்கத்தின் விலையை விட மிளகின் விலை அதிகமாக இருந்துள்ளது. மிளகுக்கு எப்பொழுதுமே உணவில் மிக முக்கிய இடம் உண்டு. உணவில் நஞ்சிருந்தாலும் அதனை முறிக்கும் திறன் மிளகுக்கு உண்டு. அதனால் தான் எதிரி வீட்டில் சாப்பிடுவிட்டு வந்து நாலு மிளகைச் சாப்பிட்டால் போதுமென இன்றும் கிராம பகுதியில் கூறுவார்கள்.

மேலும் படிக்க ...

புறக்கணிக்கப்படலாகாத கவிஞர் ஆசு சுப்பிரமணியனின் முழுக்கவிதைத் தொகுப்பு 'ஆசு கவிதைகள்'! - லதா ராமகிருஷ்ணன் -

விவரங்கள்
- லதா ராமகிருஷ்ணன் -
நூல் அறிமுகம்
03 ஆகஸ்ட் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

UNSUNG HEROES என்று ஆங்கிலத்தில் குறிக்கப்படுபவர்கள் எல்லாத் துறைகளிலும் உண்டு. ஒரு துறையில் அவர்கள் ஆற்றிய சீரிய பணியும் பங்களிப்பும் அங்கீகரிக்கப்படாத நிலையில் இருப்பவர்கள். இந்த அங்கீகாரம் என்பதில் உள்ள ’அரசியல்’ காரணமாக ஓரங்கட்டப்படுபவர்கள் தமிழ் இலக்கியத் துறையில், குறிப்பாக கவிதைப் பிரிவில் நிறையவே உண்டு. காத்திரமாக தொடர்ந்து கவிதைவெளியில் இயங்கிவந்தாலும் இலக்கியத் திறனாய்வாளர்கள் என்ற அடைமொழியோடு அவ்வப்போது பட்டியலிட்டுக் கொண்டிருப்பவர்களுடைய கருணைவிழிகள் இவர்கள் பக்கம் திரும்புவதேயில்லை! அரசியல்துறையில் உள்ள, திரைப்படத்துறையில் உள்ள பிரபலங்களோடு தான் தோளோடு தோள்சேர்த்து நிற்கும் படங்களைத் திரும்பத்திரும்ப வெளியிட்டுக் கொள்ளாததனால் இருக்கலாம், கவிதைகள் எழுதுவதோடு நில்லாமல் தன் கவிதைகளைப் பற்றிப் பெரிதாகப் பேசிக்கொள்ளத் தெரியாததால் இருக்கலாம். சமூக சீர்திருத்தக் கண்ணோட்டங்களைக் கொண்டு வாழ்ந்துவருபவராயிருப்பினும் அதை வெளிச்சம்போட்டுக் காட்டத்தெரியாததாயிருக்கலாம்; சமூகத்தை உய்விப்பதே தன் கவிதைகளின் முழுமுதற்கடன் என்று உரத்து முழக்கமிடத் தெரியாததாயிருக்கலாம்.

ஊர் அபிமானத்தில், அன்னபிற அபிமானங்களில் சில கவிஞர்கள் ஒருவரையொருவர் திறனாய்வு செய்துகொள்வதும் நடக்கிறது. இதில் தவறேதும் இல்லை. ஆனால், இப்படிச் செய்வதன் மூலம் சில கவிஞர்களே திரும்பத்திரும்ப முன்னிலைப்படுத்தப் படுவதும், நவீன தமிழ்க்கவிதையின் ‘அறங்காவலர்களாக’ பாவிக்கப்படுவதும்’ தொடர்ந்த ரீதியில் நடக்கும்போது அது குறித்து பேசவேண்டிய தேவையேற்படுகிறது.

மேலும் படிக்க ...

காலத்தால் அழியாத கானம்: 'எங்கிருந்த போதும் உனை மறக்க முடியுமா?' - ஊர்க்குருவி -

விவரங்கள்
- ஊர்க்குருவி -
கலை
01 ஆகஸ்ட் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

பி.சுசீலாவின் சிறந்த திரைப்படப் பாடலிது. திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவனின் இசையில் ஒலிக்கும் சிறந்த பாடல்களில் இதுவுமொன்று. இப்பாடல் வரிகளைக் கேட்டதும் எல்லோரும் கவிஞர் கண்ணதாசனின் வரிகளாக நினைத்துக்கொள்வர். ஆனால் உண்மையில் இப்பாடலை எழுதியவர் கவிஞர் அ.மருதகாசி. 'நீங்காத நினைவு' திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள இப்பாடல் எம் பதின்ம வயதுகளில் எம்மையெல்லாம் ஆட்டி வைத்த பாடல்களிலொன்று. இலங்கை , இந்திய வானொலிகளில் நேயர் நெஞ்சங்களைக் கவர்ந்த பாடல்களிலொன்றாக அடிக்கடி ஒலித்த பாடல்களிலொன்று. இன்றும் அவ்விதமே ஒலிக்குமென்று நினைக்கின்றேன்.

மேலும் படிக்க ...

பாதிக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலிக்கும் படைப்பாளி கே ஆர் டேவிட் சிறுகதைகள் – வாசிப்பு அனுபவம்! - தாமரைச்செல்வி -

விவரங்கள்
- தாமரைச்செல்வி -
நூல் அறிமுகம்
31 ஜூலை 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

( அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தினால் நடத்தப்பட்ட போட்டியில் ஐம்பதினாயிரம் ரூபா பரிசுபெற்ற கே. ஆர். டேவிட் சிறுகதைகள் தொடர்பாக இச்சங்கம் நடத்திய வாசிப்பு அனுபவப்பகிர்வு நிகழ்ச்சியில் சமர்ப்பிக்கப்பட்ட உரை )


இலக்கிய உலகில் தன் எழுத்துக்களால் தனக்கென ஒரு இடத்தைத் தக்க வைத்திருப்பவர் கே ஆர் டேவிட். . சிறுகதை, குறுநாவல், நாவல் எனும் தளங்களில் அறுபது வருடங்களுக்கு மேலாக பயணித்து வருபவர். தன்னுடைய எழுத்துக்களுக்காக பல விருதுகளையும் கௌரவங்களையும் பெற்றிருப்பவர். இலங்கையில் வசிக்கும் எழுத்தாளர்களுக்காக அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் நடத்திய போட்டியில் சிறுகதைகளுக்கான விருதை கே ஆர் டேவிட் சிறுகதைகள் எனும் தொகுதி பெற்றிருக்கின்றது. இப்படி ஒரு போட்டியை நடத்திய அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தினருக்கு பாராட்டுகளையும் சொல்லிக் கொள்கின்றேன். பரிசு பெற்ற இந்நூலின் ஆசிரியருக்கும் என் வாழ்த்துக்கள்.

இத்தொகுப்புக்கு முன்னுரை எழுதிய இராஜேஸ் கண்ணன், தோழமையுரை வழங்கிய ராதேயன் மற்றும் கருத்துரைகளை வழங்கிய இலக்கிய உலகின் முக்கிய ஆளுமைகள் ஆறுபேர் என எட்டுப் பேர் கே.ஆர். டேவிட் பற்றியும் அவரது கதைகள் பற்றியும் இதில் பதிவு செய்திருக்கிறார்கள். ஒரு படைப்பாளி இச்சமூகத்தை எப்படிப் பார்க்கிறான்… எப்படி அந்த மக்களின் வாழ்வியலை உள்வாங்குகின்றான்… அதை எந்த விதத்தில் எழுத்தாக மக்களிடம் கொண்டு சேர்க்கிறான்… என்பது பற்றி பல பார்வைகள் விமர்சனங்கள் எழுவதுண்டு. அதற்காக ஒரு படைப்பாளி எந்த விதமாக செயல்படுகிறான் என்பதும் கவனிக்கத்தக்க ஒன்றாகவே இருந்து வருகிறது. அந்த விதத்தால் தனது எழுத்தால் கவனம் பெற்ற ஒருவராகவே எம்மால் கே. ஆர், டேவிட் அவர்களைப் பார்க்க முடிகிறது. இவரது சிறுகதைகள் நமக்கு பல்வேறு அனுபவங்களைத் தருகின்றன. அந்த அனுபவங்கள் எமக்குள் அதிர்வுகளையும் ஏற்படுத்துகின்றன என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. கால நகர்வு இவரது எழுத்துக்களுக்கு வலு சேர்த்துக் கோண்டே வந்திருக்கிறது என்பதையும் சுட்டிக் காட்ட வேண்டியிருக்கிறது. சக மனிதர்களை நோக்கும் இவரது பார்வை கூர்மை மிக்கது. தன்னைச் சுற்றியுள்ளவர்களின் வாழ்வை பதிவு செய்வதே எழுத்தாளராகிய தனது கடமை என்ற நோக்கில் தனது பயணத்தை மேற்கொண்டு வந்திருப்பவராகவே இவரைப் பார்க்க முடிகிறது.

மேலும் படிக்க ...

மற்ற கட்டுரைகள் ...

  1. காலச்சுவடு கண்ணனுக்குச் செவாலியர் விருது! - வ.ந.கி -
  2. இனவாதத்தைக் கையிலெடுக்கும் வீரவன்ச! - நந்திவர்மன் -
  3. இலங்கையின் புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கவின் வலை விரிப்பு!
  4. திரையில் எழுத்தாளர் மிக்கெயில் ஷொலோகோவின் 'டொன் நதி அமைதியாக ஓடிக்கொண்டிருக்கின்றது.' - வ.ந.கி -
  5. சிறுகதை: இரசவாதம்! தெலுங்கில் : பி.அஜய்பிரசாத் | தமிழில் : பொருநை க.மாரியப்பன்
  6. நினைவு கூர்வோம்: கறுப்பு ஜூலை 83! - வ.ந.கி -
  7. கலை, இலக்கிய விமர்சகர் வெங்கட் சாமிநாதனைக் கவர்ந்த 'கட்டோடு குழலாட ஆட' - வ.ந.கிரிதரன் -
  8. வெற்றிச் சிகரத்தை நோக்கி (3): உன்னை தெரிந்து கொள்! எண்ணம் மற்றும் எழுத்து! - கி. ஷங்கர் (பெங்களூர்) , Chartered Mechanical Engineer, MBA(Marketing)-
  9. மன அழுத்த மேலாண்மை – 3 : உடல்-மன தொடர்பும், நோய் எதிர்ப்பு சக்தியும்!   - டாக்டர். B. செல்வராஜ் Ph.D. (முதுநிலை உளவியல் விரிவுரையாளர், அரசு கலைக்கல்லூரி,கோவை) -
  10. கிளிம் வாழ்வின் மூன்றாம் தொகுதி: -தமிழ் இலக்கிய உலகை, முன்னிறுத்தி (7) - ஜோதிகுமார் -
  11. சுவாமி விபுலானந்தர்: இல்லறத்தைத் துறந்தார் இன்பத்தமிழ் இணைத்தார்! ஜூலை 19 சுவாமி விபுலானந்தரின் நினைவு தினம்! - - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர், மெல்பேண், அவுஸ்திரேலியா -
  12. கவிதை: வைத்தியம்! - தம்பா (நோர்வே) -
  13. கு.சின்னப்பபாரதியின் புனைவெழுத்துகள்- இணைய வழி கலந்துரையாடல்! - தகவல்: அகில் -
  14. ஆய்வு: நாட்டுப்புறத்தெய்வங்களின் வழிபாடுகளும் திருவிழாக்களும் ஓா் பார்வை! - ச. சுகுமாரன், முனைவா் பட்ட ஆய்வாளா், தமிழ்த்துறை, திருவேங்கடவன் பல்கலைக்கழகம், திருப்பதி, ஆந்திரா மாநிலம் -
பக்கம் 68 / 104
  • முதல்
  • முந்தைய
  • 63
  • 64
  • 65
  • 66
  • 67
  • 68
  • 69
  • 70
  • 71
  • 72
  • அடுத்த
  • கடைசி